வியாழன், 30 ஆகஸ்ட், 2018

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா #Yuvan Shankar Raja ; பிறந்த நாள் ஆகஸ்டு 31, 1979.


இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா Yuvan Shankar Raja ; பிறந்த நாள் ஆகஸ்டு 31, 1979. 

யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja ; பிறப்பு: ஆகத்து 31, 1979) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.  இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார். பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது திரைப்படமாகும். இவர் இந்து மதத்திலிருந்து இசுலாம் மதத்திற்கு மாறினார்.
திருமண வாழ்க்கை
2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
2007 ஆம் ஆண்டு சுஜன்யாவிடமிருந்து விவாகரத்து செய்தார்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி திருப்பதியில் ஷில்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
ஷில்பாவை விவாகரத்து செய்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்று அன்று ஜபருன்னிசாவைத் திருமணம் செய்தார்.


இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்
தமிழில்

அரவிந்தன் (1997) (அறிமுகம்)
வேலை (1998)
கல்யாண கலாட்டா (1998)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
தி பிளாஸ்ட் (திரைப்பட இசையல்லாத இசைக்கோப்பு)
உனக்காக எல்லாம் உனக்காக (1999)
ரிஷி (2000)
தீனா (2000)
துள்ளுவதோ இளமை (பாடல்கள் மாத்திரம்) (2001)
மனதை திருடி விட்டாய் (2001)
நந்தா (2001)
ஜூனியர் சீனியர் (2002)
காதல் சாம்ராஜ்ஜியம் (2002)
ஏப்ரல் மாதத்தில் (2002)
பாலா (2002)
மௌனம் பேசியதே (2002)
புன்னகைப் பூவே (2002)
பாப் கார்ன் (2002)
வின்னர் (2003)
காதல் கொண்டேன் (2003)
புதிய கீதை (பாடல்கள் மாத்திரம்) (2003)
தென்னவன் (2003)
குறும்பு (2003)
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2003)
உள்ளம் (2004)
எதிரி (2004)
பேரழகன் (2004)
7 ஜி ரெயின்போ காலனி (2004)
மன்மதன் (2004)
போஸ் (2004)
அது (பின்னணி இசை மாத்திரம்) (2004)
ராம் (2005)
அறிந்தும் அறியாமலும் (2005)
தாஸ் (2005)
ஒரு கல்லூரியின் கதை (2005)
கண்ட நாள் முதல் (2005)
சண்டக்கோழி (2005)
கள்வனின் காதலி (2005)
அகரம் (2005)
புதுப்பேட்டை (2005)
பட்டியல் (2006)
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)
கேடி (2006)
வல்லவன் (2006)
திமிரு (2006)
பருத்திவீரன் (2006)
தாமிரபரணி (2006)
தீபாவளி (2007)
சென்னை 600028 (பாடல்கள் மாத்திரம்) (2007)
சத்தம் போடாதே (2007)
தொட்டால் பூ மலரும் (2007)
கண்ணாமூச்சி ஏனடா (2007)
கற்றது தமிழ் (2007)
வேல் (2007)
மச்சக்காரன் (2007)
பில்லா 2007 (2007)
வாழ்த்துகள் (2008)
சரோஜா (2008)
யாரடி நீ மோகினி (2008)
ஏகன் (2008)
சிலம்பாட்டம் (2008)
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009)
சிவா மனசுல சக்தி (2009)
சர்வம் (2009)
வாமணன் (2009)
முத்திரை (2009)
யோகி (2009)
பையா (2009)
தீராத விளையாட்டு பிள்ளை (2009)
கோவா (2010)
பாணா காத்தாடி (2010)
காதல் சொல்ல வந்தேன் (2010)
தில்லாலங்கடி (2010)
நான் மகான் அல்ல (2010)
பாஸ் (எ) பாஸ்கரன் (2010)
பதினாறு (2010)
வானம் (2011)
அவன் இவன் (2011)
ஆரண்ய காண்டம் (பின்னணி இசை மாத்திரம்) (2011)
மங்காத்தா (2011)
ராஜபாட்டை (2011)
வேட்டை (2012)
கழுகு (2012)
பில்லா 2 (2012)
சமர் (பாடல்கள் மாத்திரம்) (2013)
அமீரின் ஆதிபகவன் (2013)
மூன்று பேர் மூன்று காதல் (2013)
கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013)
தில்லு முல்லு (2013) (ம. சு. விசுவநாதனுடன் இணைந்து)
தங்க மீன்கள் (2013)
ஆதலால் காதல் செய்வீர் (2013)
ஆரம்பம் (2013)
பிரியாணி (2013)
வானவராயன் வல்லவராயன் (2014)
இவர் இசையமைத்து வெளிவரவுள்ள திரைப்படங்கள்
பேசு (2013)
காதல் 2 கல்யாணம் (2013)
வேட்டை மன்னன் (2014)
வை ராஜா வை (2014)
சிப்பாய் (2014)
வடக்கறி (2014)
தரமணி (2014)


விருதுகள்
சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (2006)
சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - 7 ஜி ரெயின்போ காலனி (2004)
விருப்பமான பாடலுக்கான விஜய் விருது - "என் காதல் சொல்ல" - பையா (2010)

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

நடிகர் எம். கே. ராதா நினைவு தினம் ஆகஸ்டு 29


நடிகர் எம். கே. ராதா நினைவு தினம் ஆகஸ்டு 29 ,

எம். கே. ராதா (20 நவம்பர் 1910 - 29 ஆகஸ்டு 1985), இந்தியத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகர். ஜெமினி நிறுவனத்தில் நிரந்தர நடிகராகப் பணியாற்றியவர். இவர், அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து முத்திரை பதித்தார். மொத்தம் 50 திரைப்படங்களில் நடித்தார்.
இளமைக் காலம்
எம். கே. ராதா சென்னை, மைலாப்பூரில் எம். கந்தசாமி முதலியார் என்பவருக்குப் பிறந்தார்.
நாடகம்
தன் தந்தை கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் சேர்ந்து, எம். ஜி. ஆருடன் எம்.கே.ராதா நடித்து வந்தார்.
திரைப்படம்
1936இல் எஸ். எஸ். வாசன் எழுதிய சதிலீலாவதி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படத்தில் எம். ஜி. ஆர். ஒரு சிறு வேடத்தில் நடித்தார். பின்னர் மாயா மச்சேந்திரா, துளசிதாஸ் ஆகிய படங்களில் ராதா நடித்தார். அதை அடுத்து "இலங்கைக்குயில்" தவமணிதேவியுடன் வனமோகினி திரைப்படத்தில் நடித்தார்.
ஜெமினியின் தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி முதலான படங்களில் ராதா நடித்தார்.
1948இல் ஜெமினியின் சந்திரலேகா படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் இந்தியில் தயாரிக்கப்பட்ட சந்திரலேகாவிலும் கதாநாயகனாக நடித்தார்.
ஜெமினியின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் எம். கே. ராதா கதாநாயகனாக, பானுமதியுடன் இணைந்து இரட்டை வேடத்தில் நடித்தார்.
பின்னர் ஜெமினியின் சம்சாரம் படத்தில் புஷ்பவல்லியுடன் இணைந்து நடித்தார். ஜெமினியின் அவ்வையார் திரைப்படத்தில் பாரி மன்னனாக நடித்தார். பின்னர் நல்லகாலம், போர்ட்டர் கந்தன், கற்புக்கரசி, வணங்காமுடி, பாசவலை, கண்ணின் மணிகள் முதலிய படங்களில் நடித்தார்.
பிற திரைப்படங்கள்
சந்திர மோகனா அல்லது சமுகத்தொண்டு 1936
அனாதைப் பெண் 1938
சதி முரளி 1940
தாசி அபரஞ்சி 1944
ஞானசௌந்தரி (1948 திரைப்படம்) 1948
சௌதாமணி 1951
மூன்று பிள்ளைகள் 1952
நல்லகாலம் 1954
கிரகலெட்சுமி 1955
புதையல் 1957
நீலமலைத்திருடன் 1957
உத்தம புத்திரன் 1958
விருதுகளும் சிறப்புகளும்
1973இல் தமிழக அரசின் கலைமாமணி பட்டம்
2004இல் இந்திய அஞ்சல் துறை எம். கே. ராதா நினைவாக அவரது உருவப் படத்துடன் சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டது.
எம். கே. ராதாவின் நினைவைப் போற்றும் விதமாக தமிழ்நாடு அரசு, சென்னை, தேனாம்பேட்டை அருகில் உள்ள பகுதிக்கு எம். கே. ராதா நகர் என்று பெயரிட்டது.
குடும்பம் & மறைவு
எம்.கே.ராதாவுக்கு ஞானாம்பாள், ரத்தினம் என்ற 2 மனைவிகள். 6 மகன்கள், 2 மகள்கள். 29 ஆகஸ்டு 1985 அன்று மாரடைப்பால் காலமானார்.


//
சர்ச்சைக்கு நடுவே அறிமுகமான சாகச நடிகர்: எம்.கே. ராதா.
வரிசையாக மூன்று படங்கள் ஓடிவிட்டால் போதும். ஐந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கதாநாயகன் 5 கோடி சம்பளம் கேட்கும் காலம் இது. 1950களில் நிலைமையே வேறு. தியாஜராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் என்று பெரிய நடிகர்கள் கோலோச்சிய கால கட்டத்தில், இவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் பெற்ற முன்னணி நாயகன். அதுவும் ஒரு ஆண்டோ இரு ஆண்டோ அல்ல; 1941-ல் தொடங்கி 1954 வரை சுமார் 13 ஆண்டுகள்.
அவர் ஜெமினி நிறுவனத்தின் கம்பெனி நடிகராக இருந்து பல புகழ்பெற்ற படங்களில் நடித்த ‘பத்மஸ்ரீ’ எம்.கே. ராதா. தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்டப் படமாகிய ‘சந்திரலேகா’விலும், ரசிகர்களை வாய்பிளக்க வைத்த இரட்டை வேடப் படமாகிய ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்திலும் நடித்தார். திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் என தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சினிமாவுக்குள் வந்து பெயர் பெற்றவர்களே அதிகம். ஆனால் தன் அழகிய தோற்றத்துக்காக ‘சுந்தர புருஷன்’ என்று அழைக்கப்பட்ட எம்.கே. ராதா சென்னையில் பிறந்து வளர்ந்து சினிமாவில் நுழைந்து தலைநிமிர்ந்து நின்றவர். அவர் பெயரின் முன்னெழுத்தில் உள்ள எம், மெட்ராஸைக் குறிக்கிறது.
கலைக் குடும்பம்
புகழ்பெற்ற நாடகாசிரியராக இருந்தவர் எம். கந்தசாமி முதலியார். அவரது மகன்தான் எம்.கே. ராதா. 1909-ம் ஆண்டு பிறந்த ராதாவுக்கு அப்பாவின் நாடகக் கம்பெனி பெரும் தாக்கத்தை உருவாக்கியது. வீட்டில் நடக்கும் நாடக ஒத்திகைகள் அவருக்குள் மனப்பாடம் ஆகின. இன்றைய வடசென்னையின் ஒரு பகுதியாகிவிட்ட தங்கசாலையில் இருந்த ‘ஹிந்து பயலாஜிக்கல் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்தார். ஆனால் படிப்பில் ஆர்வம் செல்லாமல் நாடகத்தில் மேலோங்கிய மகனின் ஈடுபாட்டைக் கண்டு 9 வயதில் லோகிதாசன் வேடம் கொடுத்தார் அப்பா. வளர வளர வயதுக்கேற்ற வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் ராதா. கந்தசாமி முதலியாரின் நாடகக் கம்பெனியில் பிரகாசித்த பல நடிகர்கள் பின்னாளில் சினிமா உலகில் நுழைந்து புகழ்பெற்றார்கள். எனவே எம்.கே. ராதாவும் திரையில் நுழைய விரும்பியதில் ஆச்சரியமில்லை.
பரபரப்பான அறிமுகம்
மகன் சினிமாவில் நடிக்க விரும்புவதை அறிந்ததும் சினிமாவுக்கு ஏற்ற கதையைத் தேடினார் கந்தசாமி முதலியார். அப்போது கே.பி. கேசவன் நடித்து வந்த கிருஷ்ணசாமிப் பாவலரின் ‘பதி பக்தி’ என்ற நாடகம் புகழ்பெற்று விளங்கியது. அந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்றுப் படவேலைகளைத் தொடங்கினார். ஆனால் திடீரென்று உரிமையை ரத்து செய்தார் கே.பி. கேசவன். தன் நடிப்பில் அந்த நாடகத்தை சினிமாவாகத் தயாரிக்க கேசவன் விரும்பியதுதான் காரணம்.
கந்தசாமி அசரவில்லை. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான எஸ்.எஸ்.வாசன், தனது ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் எழுதிவந்த ‘சதிலீலாவதி’ என்ற தொடர்கதை கவர்ந்தது. கந்தசாமி அதைப் படமாக்க விரும்பினார். கோயம்புத்தூர் மருதாசமல் செட்டியார் தயாரிக்க முன்வந்தார். கந்தசாமி வசனம் எழுதினார். பின்னாளில் ஜெமினி பிக்ஸர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி சாதனைகள் படைத்த வாசனுக்கு இதுவே முதல் படம். எம்.கே.ராதா முதல் படத்திலேயே கதாநாயகனாக நடிக்க, 19 வயது எம்.ஜி.ஆர். ‘ரங்கையா நாயுடு’ என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அறிமுகமானார். என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்கள். இயக்குநர் எல்லீஸ். ஆர். டங்கனுக்கும் அதிகாரபூர்வமான முதல் படமும் இதுவே.
படம் ரிலீஸுக்குத் தயாரானபோது கேசவன் தங்களது ‘பதி பக்தி’ கதையை திருடி ‘சதி லீலாவதி’ படத்தை எடுத்துவிட்டதாக வழக்குத் தொடுத்து படத்தின் வெளியீட்டைத் தடுத்தார். ஆனால் கதாசிரியர் வாசன் நீதிமன்றத்தில் “சதி லீலாவதி படத்தின் கதை ஹென்றி வுட் என்ற ஆங்கிலப் பெண் எழுத்தாளர் எழுதிய ‘டேன்ஸ்பரி அவுஸ்’ என்ற (Henry Wood's Danesbury House) நாவலின் தாக்கத்தில் எழுதப்பட்டது” என்று தெளிவுபடுத்தினார். பிரச்சினை தீர்ந்தது. தமிழ் சினிமாவில் கதையால் ஏற்பட்ட முதல் சர்ச்சையும் இதுவே.
இத்தனை பரபரப்புக்கு நடுவே 28.3.1936 ல் வெளியான ‘சதி லீலாவதி வெற்றி பெற்றது. படத்தின் நாயகி எம்.எஸ். ஞானாம்பாளையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் எம்.கே. ராதா.
பிரம்மாண்ட நாயகன்
சதி லீலாவதியின் வெற்றிக்குப் பிறகு அடுத்து வந்த இரு வருடங்களில் ‘மாயா மச்சீந்திரா’, ‘சந்திரமோகனா’ ‘துளசிதாஸ்’, ’ சதிமுரளி’ ஆகிய படங்களில் நடித்தார் . எல்லாம் சுமாரான வெற்றியைப் பெற்றன. அப்போது ‘இலங்கைக் குயில்’ என்று அழைக்கப்பட்ட சிங்களத் தாரகை தவமணிதேவியுடன் இணைந்து ‘ வனமோகினி’ என்ற படத்தில் நடித்தார். ஹாலிவுட்டில் அப்போது பிரபலமாக இருந்த டார்ஜான் வகைப் படமாக முழுக்க முழுக்கக் காட்டிலேயே படமாக்கப்பட்ட அந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றது.
இந்தச் சமயத்தில் ஜெமினி ஸ்டூடியோவைத் தொடங்கிய வாசன் தனது கம்பெனியின் நிரந்தர நடிகராக எம்.கே. ராதாவை ஒப்பந்தம் செய்துகொண்டார். தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்டத் தயாரிப்பாக ஜெமினி தயாரித்த ‘சந்திரலேகா’ படத்தின் நாயகனாக ராதா நடித்தார். ‘சந்திரலேகா’ வரலாறு காணாத வெற்றிபெற்றது. ராதாவுக்குப் பெரும்புகழையும் கொண்டுவந்து சேர்த்தது. ராதாவும், வில்லனாக நடித்த ரஞ்சனும் மோதும் கத்திச் சண்டைக் காட்சியைப் பார்த்து மிரண்ட ரசிகர்கள் திரும்பத் திரும்ப திரையரங்கு நோக்கிக் குவிந்தனர். தமிழ் சினிமாவின் முதல் சாகச நாயகன் (ஆக்ஷன் ஹீரோ) என்றும் எம்.கே. ராதாவைப் பேச வைத்தது இந்தப் படம்.
‘சந்திரலேகா’வை இந்தியிலும் தயாரித்த வாசன் அதிலும் ராதா - டி.ஆர். ராஜகுமாரி ஜோடியை நடிக்கவைத்து பாலிவுட்டிலும் பெரிய வெற்றியை ஈட்டினார். அதன் பின்னர் மீண்டும் ஒரு பிரமாண்டமாக ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தைக் குறுகிய காலத்தில் எடுத்து முடித்தார் வாசன். ராதா, விஜயன் - விக்ரமன் என்ற இரட்டையர்கள் வேடம் ஏற்றார். பானுமதி கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில் ஆர். நாகேந்திர ராவ் என்ற கன்னட நடிகர் வில்லனாக அறிமுகமானார்.
1940-ல் பி.யு. சின்னப்பா நடிப்பில் வெளியான ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் ‘ மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற ஆங்கிலப் படத்தைத் தழுவி தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேடப் படமாக வெளிவந்தது. ஆனால் ஆங்கிலப் படத்தில் பயன்படுத்தப்பட்ட கேமரா தந்திரங்களைத் தமிழில் துல்லியமாகக் கையாள முடியவில்லை. ஆனால் ‘அபூர்வ சகோதரர்கள்’ அந்தக் குறையைப் போக்கியது. ரசிகர்கள் இரட்டை வேடக் காட்சிகளை கண்டு வியந்தனர். விஜயனாகவும் விக்ரமனாகவும் வேறுபாடு காட்டிய ராதாவின் நடிப்பு உயர் தரமாக இருந்தது.
சமூக நடிப்பிலும் சாதனை
சந்திரலேகாவுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்த அபூர்வ சகோதரர்கள் படத்துக்குப் பிறகு பல சமூகக் கதைகளிலும் நடித்து சாதனை படைத்தார் ராதா. கம்பீரமான ராஜா வேஷங்களில் அசத்திய இவர் ‘சம்சாரம்’ என்ற படத்தில் சாமானிய மனிதனாக, நாடக பாணி நடிப்பின் தாக்கம் இல்லாமால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார்.
ராஜேந்திர ராவ் இயக்கிய ‘அன்பே தெய்வம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்த ராதாவுக்கு இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவின் தயாரான சந்தியா ஜோடியாக நடித்தார். 50 படங்களில் நடித்திருக்கும் இவர் மீது அளப்பரிய பாசமும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை விழா ஒன்றில் எம்.கே. ராதாவின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற்றார். மத்திய அஞ்சல் துறை ராதாவின் உருவப் படத்தை அஞ்சல் உறையில் வெளியிட்டு கவுரவம் செய்தது.
அபூர்வ தகவல்கள் - எம்.கே.ராதா
எம்.கே.ராதா நாயகனாக நடித்த முதல் படம் சதிலீலாவதி (1936), இதே படம்தான் எம்.ஜி.ஆருக்கும் முதல்படம். இப்படத்தில் எம்.ஜி.ஆர். துணை வேடத்தில் அறிமுகமானார். அதேபோல் நடிகர் டி.எஸ். பாலையாவுக்கும் இதுதான் முதல்படம். அத்துடன், இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனுக்கும் இது முதல் பட வாய்ப்பாக அமைந்தது.


 
பி.ஒய்.அல்டேகர் இயக்கத்தில் கே.பி.கேசவன் நடித்த பதிபக்தி (1936) என்ற படமும், சதிலீலாவதி படமும் ஒரே கதையைக் கொண்ட படங்களாக இருந்தன. இது சம்மந்தமாக இப்படத் தயாரிப்பாளர்களுக்குள் கோர்ட்டில் வியாஜ்ஜியம் (வழக்கு) நடந்தது. சினிமா கதை சம்மந்தமாக நடைபெற்ற முதல் வழக்கு இது.
 
எம்.கே.ராதாவுடன் சதிலீலாவதி, மாயா மச்சீந்திரா ஆகிய இரு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
 
சிவாஜி நடித்த அம்பிகாபதி படத்தில் சிவாஜியின் தந்தை கம்பராக எம்.கே.ராதா நடித்தார். சிவாஜி இரு வேடங்களில் நடித்து பெரு வெற்றி பெற்ற "உத்தம புத்திரன்' படத்திலும் சிவாஜியின் தந்தையாக எம்.கே.ராதா நடித்திருந்தார். இவை தவிர, சிவாஜி நடித்த வணங்காமுடி, புதையல் ஆகிய படங்களிலும் எம்.கே.ராதா சிவாஜியுடன் நடித்துள்ளார்.
 
மற்றும் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், என்.எஸ்.கிருஷ்ணன், ஏ. நாகேஸ்வரராவ், ரஞ்சன், ஜெமினி கணேசன், டி.ஆர்.ராஜகுமாரி, பி.பானுமதி, அஞ்சலிதேவி ஆகிய பிரபல நடிகர் நடிகைகளுடன் நடித்துள்ளார் எம்.கே.ராதா.
 
அரசு ஊழியர்களே மாத ஊதியமாக ரூ.100 பெற்று வந்த காலத்தில், ராதாவுக்கு மாத ஊதியமாக ரூ.300 வழங்கிய ஜெமினி ஸ்தாபனம் அவரைத் தங்கள் நிறுவனத்தின் நிரந்தர நடிகராக வைத்திருந்தது.
 
எம்.கே. ராதா நடித்த 30 படங்களில், தாஸி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி, ஞானசெüந்தரி, சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், மூன்று பிள்ளைகள், ஒüவையார் ஆகிய 8 படங்கள் ஜெமினி நிறுவனம் தயாரித்த படங்களாகும். சந்திரலேகா, அபூர்வ சகோதரர்கள், சம்சாரம், ஒüவையார் ஆகிய 4 படங்களும் ஜெமினி நிறுவனத்தின் வெற்றிப் படங்களாகி வசூலைக் குவித்தன.
 
1948 ஆம் ஆண்டிலேயே 30 லட்சம் ரூபாய்கள் செலவில், 1500 நடிகர்களை நடிக்க வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படம் சந்திரலேகா. டிக்கட் கெüண்டரில் சர்க்கஸ் செய்தாவது இப்படத்தின் சர்க்கஸ் காட்சியைக் கண்டு களித்தார்கள் ரசிகர்கள். ட்ரம் டான்ஸ் காட்சியில் ட்ரம்மிலிருந்து வந்த வீரர்கள், விரோதிகளை மட்டுமா தாக்கினார்கள், ரசிகர்களையும் அல்லவா தாக்கிவிட்டுச் சென்றார்கள். ராதாவும் ரஞ்சனும் செய்யும் கத்தி சண்டையானது, பிரிஸினர் ஆஃப் ஜெண்டா என்ற ஆங்கிலப் படத்தில் ரெனால்ட் கோல்மென் செய்யும் சண்டைக்கு நிகராக இருந்ததாக அப்போது விமர்சிக்கப்பட்டது.
 
நல்ல காலம் என்ற படம் வெளியானபோது, ராதாவின் பெயருடன் "அகில உலகப் புகழ்' என்ற அடை மொழி இணைந்து வந்துள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சந்திரலேகா படம் கண்ட வெற்றியின் விளைவாக வந்த பரிசுதான் இந்த அடைமொழி.
 
எம்.கே. ராதா நடித்த 16 படங்கள் சமூகக் கதையமைப்பினைக் கொண்ட படங்களாகவும், 14 படங்கள் சரித்திர கதையமைப்பினைக் கொண்ட படங்களாகவும் அமைந்துள்ளன.
 
23 படங்களில் நாயகனாகவும், 7 படங்களில் துணை வேடங்களிலும் நடித்துள்ளார் எம்.கே.ராதா. இவர் இரு வேடங்களில் நடித்தது அபூர்வ சகோதரர்கள் படம் மட்டுமே.
 
நாடகமேடைத் தாக்கம் இன்றி இயல்பாக நடிக்கக் கூடிய இவரின் அழகு, சினிமாவின் சுந்தர புருஷன் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்தது. திரைத் துறையில் இவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார். இவருடன் நடிக்கும் மூத்த கலைஞர்கள் ஸ்டுடியோவிற்குள் வரும் பொழுது, இவர் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் சொல்வார்.
 
எம்.கே.ராதாவின் தந்தையார் கந்தசாமி முதலியார் நடத்திய நாடகக் கம்பெனியில் எம்.ஜி.ஆர். நடித்து வந்தார். குருவின் மைந்தர் ராதாவை எம்.ஜி.ஆர்., "அண்ணன்' என்று மரியாதையாகவே அழைப்பார். அந்த மரியாதையின் வெளிப்பாடாக, விழா ஒன்றில் ராதாவின் தாள்தொட்டு வணங்கினார் எம்.ஜி.ஆர்.
 
சதி லீலாவதி படத்தில் நாயகியாக நடித்த எம்.ஆர்.ஞானாம்பாளையே மணந்து கொண்டார் ராதா. முதல் மனைவி ஞானாம்பாளுக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி ரத்தினத்திற்கு 6 புதல்வர்களும் 2 புதல்விகளும் உள்ளனர். மனோகரன், ராஜா, கமலாசரன், விஜயன் ஆகிய நான்கு புதல்வர்கள் பொறியாளர்கள். ரவீந்திரன் என்ற புதல்வர் ஒளிப்பதிவாளராகவும், சுகுமார் என்ற புதல்வர் மருத்துவராகவும் உள்ளனர். கமலாம்பாள் என்ற ராதாவின் புதல்வி, நடிகை எம்.ஆர்.சந்தானலக்ஷ்மியின் மருமகளாவார். இந்திரா என்ற ராதாவின் புதல்வி, நடிகையும் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவின் துணைவியுமான ஈ.வி.சரோஜாவின் உறவினராவார்.
 
மாடர்ன் தியேட்டர்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய கே.ஆர்.சுந்தரேசன் என்பவர் தயாரித்து இயக்கிய ரேவதி (அல்லது) தியாக உள்ளம் (1960) படத்தில் எம்.கே. ராதா, பி.எஸ்.சரோஜா, ஜமுனா ஆகியோர் நடித்தனர். தியாக உள்ளம் என்ற இப்படத்தின் தலைப்பு நான்கு முறை தியாகத்திற்கு உள்ளானது. சந்திப்பு என்ற பெயரில் இப்படம் தொடங்கப்பட்டது. தியாக இதயம் என்ற பெயரில் தணிக்கையானது. பின்பு தியாக உள்ளம் என்ற பெயரில் மலேசியாவில் திரையிடப்பட்டது. ரேவதி என்ற பெயரில் மறு தணிக்கைக்குள்ளாகி மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படியெல்லாம் நடந்தும் இப்படம் சென்னையில் திரையிடப்படவில்லை.
 
பாரதியாரின் கவிதையை நினைவூட்டும் தலைப்பில் அமைந்த கண்ணம்மா என் காதலி படத்திற்கு வசனம் பாடல்கள் எழுதி இயக்கியவர் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. உலகப்போர் பின்னணி கதையமைப்பினைக் கொண்ட இப்படத்தில் ராதாவின் ஜோடியாக நடித்தவர், கொத்தமங்கலம் சுப்புவின் மனைவி எம்.எஸ்.சுந்தரிபாய்.
 
சதி லீலாவதி, பதி பக்தி படப்போட்டியில் இரு படங்களுமே வெற்றி இலக்கையடைந்தன. ஆனால், சிட்டாடல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஆர்.மகாலிங்கமும் எம்.வி.ராஜம்மாவும் நடித்து 21.05.1948 இல் திரைக்கு வந்த ஞானசெüந்தரி படத்துக்கு போட்டியாக, ஜெமினி தயாரிப்பில் எம்.கே.ராதாவும் வி.என்.சுசிலாவும் நடித்து 18.06.1948 இல் திரைக்கு வந்த ஞானசெüந்தரி படு தோல்வியடைந்தது. இரண்டும் ஒரே கதை. வரலாற்றுக் கதைகளுக்கு வழக்கும் தொடுக்க இயலாது. ராதாவுக்கு வேறொருவரின் கட்டைக் குரல் டப்பிங், கிறிஸ்துவ வரலாற்றுக் கதையில் அம்மதத்திற்கு சம்மந்தமே இல்லாத மாற்று கலாசார வசனம், போன்ற காரணங்களால் படம் தோல்வியடைந்தது. படத்தில் அளவுக்கதிகமாக ஒலித்த பாடல்களினால், இப்படத்தை கானசெüந்தரி என்று விமர்சித்தனர். தோல்வியைத் தாங்காத எஸ்.எஸ்.வாசன், படத்தின் அனைத்து தடயங்களையும் அப்பொழுதே அழித்து விட்டார்.
 
தரிசனம் படத்தின் ஏ.வி.எம்.ராஜன் போன்று, குடும்பச் சுமை தாளாமல் குடும்பத்தை விட்டு "சம்சாரம்' பட நாயகன் ஓடிப் போனது, சம்ஸ்காரமாய் விமர்சிக்கப்பட்டாலும், படம் சம்சாரங்களால் விரும்பப்பட்டு, ஜெமினிக்கு வசூலை வாரித் தந்தது. ஜெமினிக்கு வசூலைத் தந்தது போலவே, பிச்சைக்காரர்களுக்கும் வசூலைப் பெருக்க ஒரு வாய்ப்பளித்தது இப்படம். அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே என்ற இப்படப்பாடலை ரயில்களில் பாடியபடி பல ஆண்டுகளுக்கு தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டார்கள் பிச்சைக்காரர்கள்.
 
சினிமா உலகில் சுந்தர புருஷனாக இருந்த இவர், போர்ட்டர் கந்தன் படத்தில் சிரமப்படும் கூலி ஆளாக பொலிவற்ற தோற்றத்துடன் நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை. படம் தோல்வியில் அமைந்தது.
 
ஒüவையார் படத்தில் பாரி வள்ளல், தாஸி அபரஞ்சி படத்தில் விக்கிரமாதித்தன், பக்த துளஸிதாஸ் படத்தில் துளஸிதாஸர், ஞானசெüந்தரி படத்தில் பிலேந்திரன், அம்பிகாபதி படத்தில் கம்பர் போன்ற வேடங்களில் நடித்த ராதா, இவ்வேடங்கட்கு நேர் மாறான வேடங்களான குடிகாரன், திருடன், பொறுப்பில்லாதவன் போன்ற வேடங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையினை நன்கு வெளிப்படுத்தினார்.
 
கலைஞர் மு. கருணாநிதி வசனம் எழுதிய புதையல் படத்தில் நடித்துள்ளார் எம்.கே.ராதா., சந்திரலேகா படத்தில் நாடோடிப் பெண்ணாக நடித்துள்ளார் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி., சதிலீலாவதி, மாயா மச்சீந்திரா ஆகிய இரு படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார் எம்.ஜி.ஆர்., ஆக, மூன்று தமிழக முதலமைச்சர்களுடன் கலைத் தொடர்பு கொண்டுள்ளார் எம்.கே.ராதா.
எம்.கே. ராதா நடித்த படங்கள்
சதிலீலாவதி (1936) சந்திரமோகனா (அல்லது) சமூகத் தொண்டு (1936) பக்த துளஸிதாஸ் (1937) அனாதைப் பெண் (1938) மாயா மச்சீந்திரா (1939) சதி முரளி (1940) வனமோகினி (1941) பிரேமபந்தன் (1941) 9. தாஸி அபரஞ்சி (1944) 10. கண்ணம்மா என் காதலி (1945) ஞானசெüந்தரி (1948) சந்திரலேகா (1948) அபூர்வ சகோதரர்கள் (1949) செüதாமினி (1951) சம்சாரம் (1951) மூன்று பிள்ளைகள் (1952) ஒüவையார் (1953) நல்ல காலம் (1954) போர்ட்டர் கந்தன் (1955) கிருஹலட்சுமி (1955) கண்ணின் மணிகள் (1956) பாசவலை (1956) நீலமலைத் திருடன் (1957) அன்பே தெய்வம் (1957) அம்பிகாபதி (1957) புதையல் (1957) கற்புக்கரசி (1957) வணங்காமுடி (1957) உத்தம புத்திரன் (1958) ரேவதி (அல்லது) தியாக உள்ளம் (1960).
சென்னை மயிலாப்பூரில் 1910 ஆம் ஆண்டில், நாடக ஆசான் கந்தசாமி முதலியாரின் மைந்தராக பிறந்தார், மெட்ராஸ் கந்தசாமி ராதாகிருஷ்ணன் என்ற எம்.கே.ராதா. சென்னை தங்கசாலையிலுள்ள இந்து பயாலஜிகல் போர்டு ஹை ஸ்கூலில் படித்தார். 9 வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் துவங்கினார். இவரது தந்தை நாடக ஆசானாக இருந்த மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, மற்றும் பாலமோகன ரஞ்சன சபா, டி.கே.எஸ். நாடக சபா ஆகிய நாடக கம்பெனியில் நடித்தார் ராதா.
ராதா தமது 75 ஆம் அகவையில் 29.08.1985 இல் மாரடைப்பினால் காலமானார். அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், அவர் துணைவியார் வி.என்.ஜானகியும் மற்றும் அரசியல் கலையுலக பிரமுகர்களும் ராதாவிற்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்கள்.
1960 இல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்தது. 1971 இல் இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்தது. இவரை கெüரவிக்கும் விதமாக, சென்னை சங்கரதாஸ் சுவாமிகள் மன்றம் இவரது பெயரில் "எம்.கே.ராதா விருது' வழங்கி கலைஞர்களை கௌரவித்து வருகிறது.
நன்றி -விக்கிபீடியா ,தி இந்து தமிழ்,சினிமா எஸ்பிரஸ்

நடிகர் நாகார்ஜூனா பிறந்த தினம் ஆகஸ்டு 29 .


நடிகர் நாகார்ஜூனா பிறந்த தினம் ஆகஸ்டு 29 .

அக்கினேனி நாகார்ஜூனா தெலுங்கு : ఆక్కినేని నాగార్జున ஓர் இந்தியத் திரைப்படநடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் முதன்மையாக பணிபுரிகிறார், ஒரு சில பாலிவுட் மற்றும் தமிழ் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் குடும்பம்
நாகார்ஜூனா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தெலுங்கு  நடிகர் அக்கினேனி நாகேசுவர ராவ் மற்றும் அன்னபூர்ணா அக்கினேனியின் மகனாவார். அவர்களின் ஐந்து குழந்தைகளில் நாகார்ஜூனா கடைசியாவார். பின்னர் அவரது குடும்பம் ஐதராபாதத்திற்கு குடிபெயர்ந்தது அங்கு தனது ஆரம்பக் கால கல்வியை ஐதராபாத் பொதுப்பள்ளியிலும் பின்னர் பள்ளி இடைநிலைக் கல்வியை லிட்டில் பிளவர் இளநிலைக்கல்லூரியிலும் கற்றார்.
நாகார்ஜூனா இருமுறை திருமணம் செய்துள்ளார். அவரது முதல் மனைவி, லஷ்மி ராமா நாயுடுவை 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி மணந்தார். அவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் மகளும் தெலுங்கு திரை நட்சத்திரம் வெங்கடேசின் சகோதரியுமாவார். நாகார்ஜூனா லஷ்மியினரின் மகன் நாக சைத்தன்யா (1986 ஆம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்த இடம் -
ஹைதராபாத் ) ஜோஷ் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் துவங்கினார், அது 2009 ஆம் ஆண்டில் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளிவந்தது.
பின்னர் நாகார்ஜூனா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை அமலாவை மணந்தார். அமலா இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், ஐரிஷ் தாய் மற்றும் பெங்காலி தந்தை ஆகியோருக்கு பிறந்தார். அவரது இயற்பெயர் அமலா முகர்ஜியாகும். நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் இந்தியாவின் முன்னணி விலங்குகள் நல ஆர்வலராக உள்ளார். இருவரும் 1992 ஆம் ஆண்டில் ஜூன் 11ம் தேதி திருமணம் செய்தனர். மேலும், அவர்கட்கு அகில் எனும் பெயர் கொண்ட ஒரு மகன் உள்ளான் (1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி - பிறந்த இடம் சான் ஜோஸ் , அமெரிக்க ஒன்றியம்). அகில், சிசிந்திரி எனும் படத்தில் தவழும் குழந்தையாக நடித்தார்.
டோலிவுட் திரைப்படம்
1986-2004
நாகார்ஜூவின் முதல் படம் விக்ரம் 1986 ஆம் வருடம் மே மாதம் வெளிவந்தது. அது
ஹிந்தி திரைப்படமான ஹீரோ வின் மறுதயாரிப்பாகும். படத்தின் மீது சாதகமற்ற விமர்சனங்கள் இருப்பினும் படம் வெற்றிபெற்றது. அதன் பின் நான்கு தோல்விப் படங்களுக்குப் பிறகு, அவர் வெற்றிப் படமான மஜ்னூவில் துன்பியல் கதாநாயகனாக நடித்தார். அது போன்ற பாத்திரங்கள் அவரது தந்தையின் தனித் திறனுடைய நடிப்புகளால் அறியப்பட்டவையாகும். இத்திரைபடம் அவரது தந்தையின் நீண்ட கால இயக்குநர்
தாசிரி நாராயண ராவினால் தயாரிக்கப்பட்டது, அது அவரை ஒரு சிறந்த நடிகராக நிறுவியது. அவர் பின்னர் அவரது தந்தையுடன் வெற்றிப் படமான
கலெக்டர் காரி அப்பாயியில் சேர்ந்து நடித்தார். அவரது அடுத்த வெற்றிப்படமாக
ஸ்ரீதேவியுடன்' இணைந்து நடித்த ஆக்கரி போராட்டம் அமைந்தது. இது கே. ராகவேந்திர ராவினால் இயக்கப்பட்டது. அவரது திரைப்படங்களான விக்கிதாதா, கிரைதாதா, முரளி கிருஷ்ணடு, ஜானகி ராமுடு, அக்னி புத்ருடு ஆகியவற்றில் நடித்தார். அவரது திரைவாழ்க்கையில் பெறும் மாற்றம் ஒரு ஆண்டுக்கு பின் நிகழந்தது. பிரபல தென்னிந்திய இயக்குநர் மணிரத்தினத்தால் இயக்கப்பட்ட காதல் கதையான கீதாஞ்சலி வணிக மற்றும் வியாபார ரீதியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் தமிழ் மொழிமாற்றமும் இதற்கு இணையான வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டில், நாகார்ஜூனா வெற்றிப்பட இயக்குநரான
ராம் கோபால் வர்மாவினால் இயக்கப்பட்ட ஒரு அதிரடிப் படமான ஷிவாவில் நடித்தார். அது தெலுங்கு திரைப்படத் துறையில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது. பின்னர் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் அவருடைய முதல் திரைப்பபடமாக அதே பெயரில் (ஷிவா)வின் ஹிந்தி மறு தயாரிப்பை உருவாக்கினார். அது அனைத்திந்தியாவிலும் பெரும் வெற்றிப்படமாக மாறியது. பாலிவுட் இயக்குநரான ராம் கோபால் வர்மாவின் வாழ்க்கையினைத் தொடங்க மிகப்பெரிய அளவில் உதவியது. ஷிவாவிற்குப்
பிறகு , அவரது அடுத்த திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்புக்கள் மிக அதிகமாக இருந்தன. அத்தகைய காலகட்டத்தில் சில வேறுபட்ட பாத்திரங்களை கில்லர், நிர்ணயம் போன்ற திரைப்படங்களில் செய்தார்.
நாகார்ஜூனா தொடர்ச்சியான வணிக ரீதியான தோல்விகளையும் பின்னடைவுகளையும் 1993 ஆம் ஆண்டு வெளியீடான" பிரசிடெண்ட் காரி பெல்லம் , முன்பு பெற்றார். அவர் அதன் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களான வரசுடு , கரானா புல்லோடு மற்றும் அல்லாரி அல்லுடு , கிரிமினல் மற்றும் சிசிந்திரி போன்ற பெயர் சொல்லக் கூடியவற்றோடு செய்ய முடிந்தது. 1994 ஆம் ஆண்டில், அவர் நகைச்சுவையை முதல் முறையாக
ஹல்லோ பிரதரில் முயற்சித்தார் . ஹல்லோ பிரதர் போன்றதொரு தடையுடைப்பு வெற்றிப்படம் பின்னர் சல்மான் கானை நட்சத்திரமாகக் கொண்டு ஹிந்திப் படமாக
ஜூட்வா என மறு தயாரிப்புச் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டில், நாகார்ஜூனா நடித்து தயாரித்த நின்னே பெல்லதூதா, கிருஷ்ண வம்சியால் இயக்கப்பட்டது. மேலும் தேசிய விருது பெற்ற ஹிந்தி நடிகையும் தெலுங்கில் உயர்ந்த சம்பளம் பெற்றவருமான டபுவை இணை நட்சத்திரமாகக் கொண்டதாகும் .
நாகார்ஜூனா கிருஷ்ண வம்சியை பத்தே நிமிடங்கள் சந்தித்தும், அதுவரை வெளிவராத வம்சியின் துவக்கப்படமான
குலாபியை பார்க்காமலும் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக வதந்திகள் கூறின .
அது அவ்வருடத்தைய பெரும் வெற்றியாக மாறியது, அதே போல இசையமைப்பாளர்
சந்தீப் சோட்டாவின் வாழ்க்கைத் தொழிலை துவக்கியும் இருந்தது. பின்னர் நாகார்ஜூனா சவாலான பாத்திரத் தோற்றமான அன்னமாச்சார்யாவை , 15 ஆம் நூற்றாண்டு தெலுங்கு பாடகர் மற்றும் கவிஞரை அன்னமய்யாவில் ஏற்றார் . ஷிவா ,
மற்றும் கீதாஞ்சலி போல அன்னமய்யாவும் ஆனது. அந்தப் படத்தில் அவரது பாத்திரத்திற்காக நாகார்ஜூனா இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருது பெறச் சென்றார். 1999 ஆம் ஆண்டில் அவர் அவிட மா அவிடே வைச் செய்தார். நாகார்ஜூனா ஒவ்வொருவராலும் நீண்ட காலம் மறக்கப்பட்ட (திரைப்பட) வகையை மீண்டும் தெலுங்கு திரைக்கு கொண்டு வந்ததற்கு பாராட்டப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் சீதாராம்ராஜூவின் வெற்றிப் படமான, நாகார்ஜூனா நடித்த நுவ்வு வாஸ்தாவாணிதடையுடைப்பு படமாக மாறியது . அவரது அவ்வருடத்திய தொடர்ச்சியான திரைப்படங்கள் , நின்னே பிரேமிஸ்தா மற்றும் ஆஸாத்தும் கூட வணிக ரீதியிலான வெற்றியைப் பெற்றன . பின்னர், அவர் காதல் நகைச்சுவை படங்களான , சந்தோஷம் மற்றும் மன்மதூதூ ,
இரண்டும் வருவாயில் பெரிய வெற்றியைப் பெற்றவையாகும் .
ஷிவமணி நாகார்ஜூனாவிற்கு ஆறு தொடர்ச்சியான பொன்னான வெற்றிகளை, வணிகத்தில் ஒரு சில இணைகளேயுடைய சாதனையை கைப்பற்றித் தந்தார் . அப்போதைய காலத்தில், அவர் தடையுடைப்புப் படமான
சத்யத்தை , அவரது மருமகன் சுமந்த்தின் நடிப்பு வாழ்க்கைத் தொழிலுக்காக உதவத் தயாரித்தார் .
2004ம் ஆண்டிலிருந்து தற்போது வரை
2004 ஆம் ஆண்டில், நாகார்ஜூனா இரண்டு வெளியீடுகளை நென்னேநானு மற்றும்
மாஸ் ஆகியவற்றைக் கொண்டார். முன்னது, விமர்சகர்களின் கடுமையையும் தாண்டி வருவாயில் வென்றது. மாஸ் , நாகார்ஜூனா தானே தயாரித்து புதிய இயக்குநரும் முன்னணி நடன இயக்குநருமான
லாரன்ஸ்சால் இயக்கப்பட்டது அவரது வாழ்க்கைத் தொழிலில் உயர்ந்த வருவாயை பெற்றுத் தந்ததாக ஆனது. [1] மீண்டும் ஒருமுறை, நாகார்ஜூனா புதிய திறன்களைத் கண்டறியும் நல்லப் பார்வையினைக் கொண்டிருப்பதை நிரூபித்தார். 2005 ஆம் ஆண்டில், நாகார்ஜூனா சூப்பர் ரை நடித்து தயாரித்தார், எதிர்பார்த்தப்படி அது அடையவில்லை சராசரி வெற்றியையேப் பெற்றது. பின்னர் 2006 ஆம் ஆண்டில், நாகார்ஜூனா அன்னமய்யா இயக்குநர் கே. ராகவேந்திர ராவ்வுடன் மறுபடியும் இனைந்தார், ஸ்ரீ ராமதாஸு திரைப்படத்தில் நடித்தார், அது அவரது இரண்டாவது வரலாற்றுச் சித்திரம், 18 ஆம் நூற்றாண்டில் அதே பெயரினைக் கொண்ட தெலுங்கு துறவி பாடகரை அடிப்படையாகக் கொண்டதாகும். நாகார்ஜூனா நந்தி விருதினை சிறந்த நடிகருக்காகப் பெற்றார். ஸ்ரீ ராமதாஸு அவரது முந்தைய அன்னமய்யா போன்று நாகார்ஜூனாவிற்கு விமர்சன மற்றும் வணிக வெற்றியையும் பெற்றுத் தந்தது. அவரது சமீப திரைப்படங்கள், "டான்" மற்றும் "கிங்" சிறந்த விமர்சனங்களை குறைவாகப் பெற்றும் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றவையாகும்.
எதிர்காலப் படங்கள்
நாகார்ஜூனா தற்போது இரு படங்களில் நடித்து வருகிறார் கேடி (அதில் அவர் சீட்டு விளையாடுவதில் நிபுணரான பாத்திரத்தில் நடிக்கிறார்) மற்றும் பயணம் (அதில் அவரது முந்தைய படங்களின் போதான ரயில் தொடர்பான நிகழ்வுகளை மறு நினைவு கூர்கிறார்).
நாகார்ஜூனா இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் இரு மொழிப்படமான "கேடி"யில் நடிக்கிறார்.

பாலிவுட் திரைப்படங்கள்
நாகார்ஜூனா பல பாலிவுட் திரைப்படங்களான ஷிவா, துரோஹி (1992), குதா ஹவா (1992), கிரிமினல் (1995), திரு. பேச்சேரா (1996), ஸாகிம் (1998), அங்காரே (1998), எல் ஓ சி கார்கில் (2003) முதலியவற்றில் நடித்துள்ளார். ஷிவா அது தயாரிக்கப்பட்ட பெரும்பாலான மொழிகளில் பெரும் வெற்றியினைப் பெற்றது. குதா ஹவா, கிரிமினல், ஸாகிம் ஆகியவையும் வருவாயில் வெற்றிப் பெற்றன. அவர் அவரது தெலுங்கு மொழி திரைப்படங்களை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்தார். அவர் பல ஹிந்தி படங்களில் கௌரவத் தோற்றங்களில் தேன்றியுள்ளார். நாகார்ஜூனா தமிழின் வெற்றிப்படமான ரக்ஷகன் தெலுங்கில் ரக்ஷடுவாக தயாரிக்கப்பட்டப் போது நடித்தார். தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட அவரது இதர திரைப்படங்களில் ஷிவா "உதயம்" எனும் பெயரில் வெளிவந்தது, ஒரு தடையுடைப்பு படமாகும். அவரது தெலுங்கின் வசூல் படமான கீதாஞ்சலியும் கூட தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது, பிற வெற்றிகரமான படங்களான அன்னமய்யா, சிசிந்திரி & ஹல்லோ பிரதர் ஆகியவையும் ஹிந்தியிலும் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டன. அவர் தென்னிந்தியாவில் வெற்றிகரமான கதாநாயகனாவார்.
கூடுதல் தகவல்
நாகார்ஜூனா திரைப்படங்களுக்கு வெளியே வணிக ரீதியிலான முயற்சிகளை குறிப்பாக வீடு-மனைத் தொழிலில் வைத்துள்ளார். 2003 ஆம் ஆண்டில், தாழ்வார மதுபானக் கடையான 'டச்' சை ஏற்படுத்தினார். அவர் பின்னர் சில வருடங்கள் கழித்து அதை விற்றார் மேலும் ஒரு சிறு சிற்றுண்டிக் கடை உரிமையாளராகும் துணிச்சலான முயற்சியில் இறங்கினார். அவர் தற்போது ஹைதராபாத்தில் மதுபான- சிற்றுண்டிக் கடையான 'N' ன்னில் இணையுரிமைப் பெற்றுள்ளார். அவர் மிகப் பிரபலமான தெலுங்கு செயற்கைக்கோள் தொலைக்காட்சியான 'மா' தொலைக்காட்சியை மேம்படுத்தும் இருவரில் ஒருவராக முந்தைய ஆண்டுகளின் தொழில் சகாவும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
விருதுகள்
தேசிய சினிமா விருதுகள்
வெற்றி பெற்றது
1998 - தேசிய திரைப்பட விருது சிறப்பு நடுவர் அன்னமய்யா
நந்தி விருது
வெற்றி பெற்றது
1997 - சிறந்த நடிகர் அன்னமய்யா
1999 - கம்ஸ்யா (வெண்கலம்) நந்தி விருது
பிரேம் கதா தயாரிப்பு
2002 - சிறந்த நடிகர் சந்தோஷம்
2002 - சுவர்ணா (தங்கம்) நந்தி விருது மன்மதூதூ தயாரிப்பு
2006 - சிறந்த நடிகர் ஸ்ரீ ராமதாஸு
பிலிம்பேர் விருதுகள்
1990 - பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது
(தெலுங்கு) சிவா
1997 - பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது )தெலுங்கு அன்னமய்யா
திரைப்பட விவரங்கள்
நடிகராக
ஆண்டு திரைப்படம் பாத்தி
1986
விக்ரம் விக்ரம்
காப்டன் நாகார்ஜூனா நாகார்ஜூ
1987
அரயான்கண்டா
மஜ்னூ
சங்கீர்த்தனா
கலெக்டர் காரி அப்பாயி
அக்னி புத்ருடு
கிரை தாதா
1988
ஆக்ரி போராட்டம் விஹரி
சின்ன பாபு
முரளி கிருஷ்ணடு முரளி கிருஷ்ண
ஜானகி ராமுடு ராமு
1989
சிவன் சிவன்
அக்னி
கீதாஞ்சலி பிரகாஷ்
விக்கி தாதா விக்ரம்
விஜய் விஜய்
1990
சிவன் சிவன்
நேட்டி சித்தார்தா சித்தார்தா
இத்தரு இதாரே
பிரேம் யுத்தம்
1991
ஜயத்ரயாத்ரா விஜய்
சாந்தி கிராந்தி கிராந்தி
சைதன்யா சைதன்யா
நிர்ணயம் வம்சி கிருஷ்ண
1992
பிரெசிடெண்ட் கார் பெல்லம் ராஜா
துரோஹி ராகவ்/சேக
அந்தம் ராகவ்
குடா கவா இன்ஸ்பெக் ராஜா மிர்
கில்லர் ஈஷ்வர்
1993
அல்லாரி அல்லுடு கல்யாண்
வரசுடு வினய்
ரக்ஷனா போஸ்
1994
கிரிமினல் டாக்டர். அஜ குமார்
ஹலோ பிரதர் தேவா/ரவ வர்மா
கோவிந்தா கோவிந்தா சீனு
1995
சிசிந்திரி ராஜா
கிரிமினல் டாக்டர்.அஜ குமார்
காரன புல்லுடு ராஜூ
1996
நின்னெ பெல்லதூதா சீனு
வஜ்ரம் சக்ரி
ராமுடோச்சடு ராம்
1997 ரட்சகன் அஜய்
அன்னமய்யா அன்னமய்ய
1998
ஸாகிம் ராமன் தேச
சந்தரலேகா சீதா ராமா
அங்காரே ராஜா
ஆட்டோ டிரைவர் ஜகன்
ஆவிட மா ஆவிடே விக்ரந்த்
1999 ரவோயி சந்தமாமா சஷி
சீதாராமராஜூ ராமராஜூ
2000
ஆசாத் ஆசாத்
நின்னே பிரேமிஸ்தா ஸ்ரீநிவாஸ்
நுவ்வு வாஸ்தாவானி
சின்னி கிருஷ்ண
2001
ஸ்நேஹமந்தே இதேரா அரவிந்த்
ஆகாச வீதிலோ சாந்து
பாவா நாச்சடு அஜய்
எடுருலேனி மனிஷி
சூர்யா மூர்த்தி, ச மூர்த்தி
2002
மன்மதூதூ அபிராம்
அக்னி வர்ஷா யாவ்க்ரி
சந்தோஷம் கார்த்திக்
2003 எல் ஒ சி கார்கில் மேஜ்.பத்மப ஆச்சார்யா
சிவமணி 9848022338 ஷிவமணி
2004 மாஸ் மாஸ், கண
நென்னேநானு வேணு
2005 சூப்பர் அகில்
2006
ஸ்டைல் மாஸ்
ஸ்ரீ ராமதாஸு கோபண்ண ஸ்ரீ ராமதா
பாஸ் - ஐ லவ் யூ கோபால் கிருஷ்ண
2007 டான் டான், சூரி
2008
கிருஷ்ணார்ஜூனா கிருஷ்ண காட்)
கிங்
பொட்டு சீ என்ற கிங் எ சரத்
2010 கேடி
2011 மங்காத்தா: உள்ளே வெளியே
தயாரிப்பாளராக
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1979 கல்யாணி
1980 பில்ல ஸமீந்தாரு
1980 புச்சிபாபு
1981 பிரேம கனுகா
1981 பிரேமாபிஷேகம்
1982 யுவராஜூ
1983 ஸ்ரீ ரங்கநீதலு
1995 சிசிந்த்ரி
1996 நின்னே பெல்லதாதா
1998 ஆஹா
1998
ஸ்ரீ சீதாராம கல்யானம் சூடாமுராரண்டி
1998 சந்திரலேகா
1999 பிரேம கதா
1999 சீதாராமராஜூ
2000 யுவகுடு
2002 மன்மதூதூ
2003 சத்யம்
2004 மாஸ்
2005 சூப்பர்

நடிகர் விஷால் பிறந்த நாள் ஆகஸ்ட் 29 ,


நடிகர் விஷால் பிறந்த நாள் ஆகஸ்ட் 29 , 

விஷால் கிருஷ்ணா ரெட்டி (பிறப்பு - ஆகஸ்ட் 29 , சென்னை ) தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர்
அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
தொழில்
கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம் வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.
திருட்டு விசிடிகளுக்கு எதிராக ஆதாரப் பூர்வமாகக் குற்றச்சாட்டுகள் வைத்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று செய்தியாளர்களின் மத்தியில் பேட்டி அளித்தார். விஷாலின் அடுத்த கவனம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஒரு தயாரிப்பாளராக அவர் அங்கும் உறுப்பினர் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு என்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது. அனல் பறக்க புரட்சியாய் சுற்றித்திரியும் புரட்சித் தளபதிக்கு இந்த நன்னாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம் .

வாழ்க்கை
விஷால் 1977 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். இவரது தந்தை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறைகளில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கினார். இவரது குடும்பம் சென்னையில் வசிக்கிறது. இவர் தொன் போசுகோ பள்ளியிலும் இலயோலா கல்லூரியிலும் பயின்றார்.இவரது பேராசிரியர் ச. ராஜநாயகம் அளித்த ஊக்கத்தினால் நடிக்க வந்துள்ளார் .

திரைப்பட வரலாறு
எண் ஆண்டு திரைப்படம் கதாபாத்
1 2004 செல்லமே ரகுனாத
2 2005 சண்டக்கோழி பாலு
3 திமிரு கணேஷ்
4 2006 சிவப்பதிகாரம் சத்திய மூ
5 2007 தாமிரபரணி பரணிபுத்
6 மலைக்கோட்டை அன்பு
7 2008 சத்தியம் சத்தியம்
8 2009 தோரணை முருகன்
9 2010
தீராத விளையாட்டுப் பிள்ளை
கார்த்திக்
10 2011 அவன் இவன் வால்ட்டர் வணங்காம
11 வெடி பிரபாகர
12 2013 பாண்டிய நாடு
13
2014
நான் சிகப்பு மனிதன்
14
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
15 பூஜை வாசு
16
2015
ஆம்பள சரவணன்
17 மதகஜ ராஜா

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

நடிகை ராதிகா பிறந்த நாள் ஆகஸ்ட் 21, 1963.


நடிகை ராதிகா பிறந்த நாள் ஆகஸ்ட் 21, 1963.

இராதிகா , (பிறப்பு: ஆகத்து 21, 1963) தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் , அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா , திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.
ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான
சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு.


இராதிகா நடித்துள்ள சில திரைப்படங்கள்

கிழக்கே போகும் ரெயில்
நிறம் மாறாத பூக்கள்
இன்று போய் நாளை வா
போக்கிரி ராஜா
மூன்று முகம்
ரெட்டை வால் குருவி
பூந்தோட்ட காவல்காரன்
தைப் பொங்கல்
ஊர்க்காவலன்
கிழக்குச் சீமையிலே
வீரபாண்டியன்
தெற்கத்தி கள்ளன்
சிப்பிக்குள் முத்து
நல்லவனுக்கு நல்லவன்
தாவணி கனவுகள்
பசும் பொன்
நானே ராஜா நானே மந்திரி
தூங்காதே தம்பி தூங்காதே
கேளடி கண்மணி
நினைவுச் சின்னம்
பவித்ரா
ராசைய்யா
வீரத்தாலாட்டு
சூர்ய வம்சம்
ஜீன்ஸ்
தாஜ்மகால்
அமர்க்களம்
பூமகள் ஊர்வலம்
ரோஜா கூட்டம்
கண்ணா மூச்சி ஏனடா
பந்தயம்
சகுனி (தமிழ்த் திரைப்படம்)
இரண்டாம் உலகம் (திரைப்படம்)
அமர்க்களம்
இராதிகா நடித்துள்ள சில தொலைக்காட்சி தொடர்கள்
சித்தி
அண்ணாமலை
செல்வி
அரசி
செல்லமே
வாணி ராணி

புதன், 15 ஆகஸ்ட், 2018

நடிகை சுஹாசினி பிறந்த நாள் : ஆகஸ்ட் 15, 1961.



நடிகை சுஹாசினி பிறந்த நாள் : ஆகஸ்ட் 15, 1961.

சுஹாசினி (பிறப்பு: ஆகத்து 15, 1961) ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை , தயாரிப்பாளர், இயக்குனர் ஆவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளும் ஆவார். தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். சுஹாசினி நடித்த என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு ,
பாலைவனச்சோலை , சிந்து பைரவி ஆகிய திரைப்படங்கள் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன. இவர்
தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்திரா திரைப்படத்தை இயக்கி உள்ளார். இவர் 1988-ல் இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு நந்தன் என்னும் ஒரு மகன் உள்ளார்.
வசனகர்த்தா
இயக்குநர் மணிரத்தினத்தின் ராவணன் படத்தில் வசனம் எழுதினார்.
நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்
நெஞ்சத்தை கிள்ளாதே
பாலைவனச்சோலை
ஆகாய கங்கை
உருவங்கள் மாறலாம்
தாய் வீடு
சிந்து பைரவி
சிராவண் சந்தியா
மனதில் உறுதி வேண்டும்
தர்மத்தின் தலைவன்
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
என் புருஷன் எனக்கு மட்டுந்தான்
வசீகரா
ஷாக்
சத்தம் போடாதே
ஏகன்
பலம்
ராக்கி
அசல்
ராவணா
சீடன்
தில்லாலங்கடி
ஸ்ரவந்தி
இயக்கியுள்ள படம்
இந்திரா
தேசிய விருது
சிந்து பைரவி திரைப்படத்தில் நடித்தமைக்கு 1986ல் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

நடிகர் அர்ஜூன் பிறந்த நாள் - ஆகஸ்ட் 15 , 1962.


நடிகர் அர்ஜூன் பிறந்த நாள் - ஆகஸ்ட் 15 , 1962.

அர்ஜூன் (பிறப்பு - ஆகஸ்டு 15 , 1962 ) புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ் , தெலுங்கு ,
கன்னடம் , மலையாளம் , மற்றும் இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார்.


இவர் நடித்துள்ள படங்கள் சில
முதல்வன்
ரிதம்
குருதிப்புனல்
ஜென்டில்மேன்
ஜெய்ஹிந்த்
நன்றி
சேவகன்
வாத்தியார்
மருதமலை
ஏழுமலை
மனைவி ஒரு மாணிக்கம்
யார்
சுயம்வரம்
வேதம்
கொண்டாட்டம்
கோகுலம்
மங்காத்தா
கர்ணா
தாயின் மணிக்கொடி
ஒற்றன்
கடல்
மூன்று பேர் மூன்று காதல்
பிரசாந்த் (கன்னடத் திரைப்படம்)
விருதுகள்
கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது. (பிரசாந்த் என்ற கன்னடத் திரைப்படத்திற்காக)

புதன், 8 ஆகஸ்ட், 2018

நடிகை ஹன்சிகா மோட்வானி பிறந்த நாள் ஆகஸ்ட் 9 , 1991.


நடிகை ஹன்சிகா மோட்வானி பிறந்த நாள் ஆகஸ்ட் 9 , 1991.

ஹன்சிகா மோட்வானி (ஆங்கிலம் : Hansika Motwani , பிறப்பு: ஆகத்து 9 , 1991 ) ஒரு இந்திய நடிகையும் முன்னாள் குழந்தை நடிகையும் ஆவார். முதன்மையாக தமிழ் ,
தெலுங்கு திரைப்படங்களில் தோன்றும் இவர் சில இந்தி , கன்னடத் திரைப்படங்களிலும் தோன்றுகிறார்.
சொந்த வாழ்க்கை
இவர் இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர்.

ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு ,
மராத்தி , பெங்காலி , ஆங்கிலம் , இந்தி,
துளு , தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார்.
தொழில் வாழ்க்கை
ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இது சஞ்சு என்ற பையனைப் பற்றியும் அவனது மந்திரப் பென்சிலைப் பற்றியதுமான கதையாகும்). அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார். கோய் மில் கயா திரைப்படத்தில் வரும் குழந்தைகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.
ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின்
தெலுங்குத் திரைப்படம்
தேசமுதுரு வில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார். இது குற்றப் பத்திரிகை நிருபர் ஒருவர் ஒரு
சன்யாசியின் மேல் காதல் கொள்வதைப் பற்றியத் திரைப்படமாகும். இதில் சன்யாசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.


பாலிவுட்டில் ஒரு முக்கிய நடிகையாக
ஆப் கா சரூர் - த ரியல் லவ் ஸ்டோரி யில் இமேஷ் ரெஷிமியாவுடன் ஹன்சிகா அவரது முதல் தொடக்கத்தைத் தந்தார். இதில் இமேஷ் ரெஷிமியாவின் காதலி ரியாவாக பாத்திரம் ஏற்றிருந்தார். 29 ஜூன் 2007 அன்று இத்திரைப்படம் வெளியானது, இத்திரைப்படம் இடைப்பட்ட வெற்றியைக் கொடுத்தது. இதன் பின்னர்
ஹீ: த ஒன்லி ஒன் எனத் தலைப்பிடப்பட்ட
இந்தித் திரைப்படத்தில் அவரது குடும்பத்திற்காகப் பழிவாங்கும் தயக்கமற்ற ஒரு கொலைகாரி பாத்திரத்தில் நடிக்க கையொப்பமிட்டிருந்தார், [3] இப்படம் இடைநடுவில் கைவிடப்பட்டது.
புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 15 பிப்ரவரி 2008 அன்று வெளியானது, இது ஹன்சிகா இதுவரை நடித்த ஒரேயொரு கன்னடத் திரைப்படமாக இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் வெளியான காண்ட்ரி திரைப்படத்தில் அவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் மிதமான வெற்றியைப் பெற்றது. மேலும் மஸ்கா எனும் தெலுங்குத் திரைப்படத்தில் ராமுடன் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.
நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் எங்கேயும் காதல் , வேலாயுதம் , ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.


திரைப்பட விவரங்கள்
திரைப்படம்
ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் கன்சா இந்தி குழந்தை நட்சத்திரம்
2003 ஹவா சஞ்சனாவின் மகள் இந்தி குழந்தை நட்சத்திரம்
2003 கோயி...மில் கயா பிரியா சிக்ஸ் இந்தி குழந்தை நட்சத்திரம்
2003 ஆப்ரா கா டாப்ரா பிங்கி இந்தி குழந்தை நட்சத்திரம்
2004 ஜாகோ சுருதி இந்தி குழந்தை நட்சத்திரம்
2004 ஹம் கோன் ஹே சாரா வில்லியம்ஸ் இந்தி குழந்தை நட்சத்திரம்
2007 தேசமுதுரு வைசாலி தெலுங்கு வெற்றியாளர் , ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நாயகி (தெற்கு)
2007 ஆப் கா சரூர் ரியா இந்தி பரிந்துரைக்கப்பட்டார், ஃபிலிம்பேரின் சிறந்த அறிமுக நாயகி விருது
2008 பிந்தாஸ் பிரீத்தி கன்னடம்
2008 கந்திரி வரலக்ஷ்மி தெலுங்கு
2008 மனி ஹே தோ ஹனி ஹே ஆஷிமா கபூர் இந்தி
2009 மஸ்கா மீனு தெலுங்கு
2009 பில்லா பிரியா தெலுங்கு கௌரவத் தோற்றம்
2009 ஜெயீபவா அஞ்சலி நரசிம்கா தெலுங்கு
2010 சீதாராமுல கல்யாணம் நந்தினி தெலுங்கு
2011 வேலாயுதம் வைதேகி தமிழ்
2011 மாப்பிள்ளை காயத்ரி தமிழ்
2011 எங்கேயும் காதல் வைதேகி தமிழ்
2011 ஓ மை பிரண்ட் ரிடு தெலுங்கு
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி மீரா தமிழ்
2012 தேனிகைனா ரெடி ஷர்மிலா தெலுங்கு
2013 சேட்டை மதுமிதா தமிழ்
2013 வேட்டை மன்னன் தமிழ் படப்பிடிப்பில்
2013 சிங்கம் 2 சத்யா தமிழ்
2013 பிரியாணி பிரியங்கா தமிழ்
2013 தீயா வேலை செய்யணும் குமாரு சஞ்சனா தமிழ்
2014 மான் கராத்தே யாழினி தமிழ்
2014 அரண்மனை செல்வி தமிழ்
2015 ஆம்பள மாயா தமிழ்
2015 ரோமியோ ஜூலியட் ஐஸ்வர்யா தமிழ்
2015 வாலு பிரியா மகாலட்சுமி தமிழ்
2015 அரண்மனை 2 மாயா தமிழ்
2015 புலி மந்தாகினி தமிழ்
2015 இஞ்சி இடுப்பழகி அவரே தமிழ்
2015 சைஸ் சீரோ அவரே தெலுங்கு
2016 போக்கிரி ராஜா சுனிதா தமிழ்
2016 உயிரே உயிரே பிரியா தமிழ்
2016 மனிதன் பிரியா தமிழ்
2016 போகன் மகாலட்சுமி தமிழ்
தொலைக்காட்சி
ஆண்டு தலைப்பு பாத்திரம் மொழி குறிப்புகள்
2003 கியான்கி சாஸ் பி கபி பாகு தி பாவ்ரி விரானி இந்தி
2003 தேஸ் மெய்ன் நிக்கிலா ஹோகா சந்த் டினா இந்தி
2003 கரிஷ்மா கா கரிஷ்மா இந்தி
2003 ஷாகலகா பூம் பூம் கருணா இந்தி
2004 ஹம் 2 ஹெயின் நா கரீனா / கோல் இந்தி
2004 சிராஸ் ஹனி இந்தி