செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சரண்யா பொன்வண்ணன் பிறந்த‌ நாள் ஏப்ரல் 26,




சரண்யா பொன்வண்ணன் பிறப்பு: ஏப்ரல் 26, 1970) பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார்[. ராம்,(2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது; சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைபட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.
சரண்யா சக நடிகரான பொன் வண்ணனைத் திருமணம் புரிந்துள்ளார்.
விருதுகள்
தேசியத் திரைப்பட விருதுகள்
2011 - சிறந்த நடிகை, தென்மேற்குப் பருவக்காற்று
பிலிம்பேர் விருதுகள்
2005 - சிறந்த துணை நடிகை (தமிழ்), தவமாய் தவமிருந்து
2006 - சிறந்த துணை நடிகை (தமிழ்), எம் மகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக