வெள்ளி, 22 நவம்பர், 2019

கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் நினைவு தினம் நவம்பர் 22.


கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் நினைவு தினம் நவம்பர் 22.

*06/07/1930 — 22/11/2016*

 பாலமுரளி கிருஷ்ணா சில குறிப்புகள் .

தந்தை பட்டாபிராமைய்யா - இசை கலைஞர், இசை ஆசான்

தாய் சூர்யகாந்தம் - வீணை இசை கலைஞர்

இசை ஆசான் - பாருபள்ளி ராமக்ரிஷ்ணய்யா பந்துலு

இசை அரங்கேற்றம் - எட்டு வயதில்

வாசிக்கத் தெரிந்த வாத்தியங்கள் - வயோலா, வயலின், மிருதங்கம், கஞ்சிரா

வயலின் கலைஞராக அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்யநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், ஜி என் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு பக்க வாத்தியம் வாசித்துள்ளார்.

வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றிய அனுபவம் உடையவர்

திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்

இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர்

பின்னணி பாடகருக்கான தேசிய விருதையும் பெற்றவர்

72 மேளகர்த்தா ராகங்களிலும்  கிருதிகளை உருவாக்கி உள்ளார்

பண்டிட் பீம்சென் ஜோஷி உள்ளிட்ட பிரபல ஹிந்துஸ்தானி கலைஞர்களுடன் இணைந்து ஜுகல் பந்தி

பிரபல நடிகர் கமல்ஹாசன், பாடகர் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு இசை கற்றுத்  தந்த ஆசான்

பிரபலமான தமிழ் பாடல்கள்

தங்க ரதம் வந்தது வீதியிலே-கலைக்கோவில் திரைப்படத்தில்

ஒரு நாள் போதுமா -திருவிளையாடல்

புத்தம் புது மேனி - சுப தினம்

சின்னக் கண்ணன் அழைக்கிறான்- கவிக்குயில்

ஆயிரம் கோடி காலங்களாக- கவிக்குயில்

மௌனத்தில் விளையாடும் -நூல் வெளி

தாயே மூகாம்பிகேயே - தாய் மூகாம்பிகை (எம் எஸ் வி, சீர்காழி உடன் திரைப்படத்தில் தோன்றி  பாடியது )

அருட்ஜோதி தெய்வம் -திசை மாறிய பறவைகள்

பாஞ்சாலி கதறுகிறாள் - சிகரம்

ரகுவரா நின்னு - இசை பாடும் தென்றல்

வித்தியாசமான பாடல் -புரட்சித் தலைவருக்காக குன்னக்குடி இசையில் நவரத்தினம் திரைப்படத்தில்  குருவிக்கார எனத் தொடங்கும் பாடல்

இறுதி வரை சுருதி விலகாத சாரீரத்தை கொண்டிருந்தவர்

சுமுகம், மஹதி ஆகிய நான்கு ஸ்வரங்களை கொண்ட ராகங்கள், சர்வ ஸ்ரீ , ஓம் காரி ஆகிய மூன்று ஸ்வரங்களை கொண்ட ராகங்கள், பிரதி மத்யமாவதி உள்ளிட்ட ராகங்கள் இவர் உருவாக்கியவை.

இறை அருளால் இசை தந்த மகான். திருவிளையாடல் படத்தில் கவியரசர் இவர் பாடுவதாக எழுதிய வரிகள்- கானடா....இசை தெய்வம் நானடா ...மிகையில்லைகர்நாடக இசைக் கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா
. பாரம்பரிய
இசைக்கு தனிப் பரிமாணம்
கொடுத்தவர்
பாலமுரளிகிருஷ்ணா. மகிழ்வின்
பாவனைகளைப் பதிவிடுவதில் அவர்
தனித்திறமை கொண்டவர். துயரும்
அவருடைய குரலில் குழைவைக்
கொண்டிருந்தது....'நீ தய
ராதா...'  'சின்ன கண்ணன் அழைக்கிறான் ....'அவருடைய குரலில் சிறப்புப்
பெற்றது....

   இவருக்கு வயது 86. பத்ம விபூஷன், செவாலியே விருது பெற்றுள்ளார்.2 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் கர்நாடக சங்கீதத்தில் ஏராளமான கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். திரைப்படபாடல்களும் பாடியுள்ளார்.இளையராஜாவின் இசையில் சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலையும் பாடியுள்ளார். பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

புதன், 6 நவம்பர், 2019

நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 07.


நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 07.

இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’ என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவராவர். நான்கு முறை தேசிய விருதும், பதினெட்டு முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்ற கமல்ஹாசன் அவர்களைப் பற்றியறிய மேலும் தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: நவம்பர் 7, 1954

பிறந்த இடம்: பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா

தொழில்: நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர், தயாரிப்பாளர்

நாட்டுரிமை: இந்தியா

 ஆரம்ப கால வாழ்க்கை

கமல்ஹாசன் அவர்கள், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தார். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார். சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி ரகு இவருடைய உடன் பிறந்தவர்கள். கமல் அவர்களின் தந்தை, கட்டுப்பாடு மிகுந்தவராக இருந்ததால், தனது மகன்களை நன்குப் படிக்க வைக்க எண்ணினார். அவரின் எண்ணத்திற்கேற்ப, கமலின் மூத்த சகோதரர்கள் இருவரும் தனது தந்தையை உதாரணமாகக் கொண்டு, சட்டம் பயின்றனர்.

இல்லற வாழ்க்கை

1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர். பின்னர், சிம்ரனுடனான தொடர்பின் காரணமாக, சரிகா அவர்கள், கமலிடம் விவாஹரத்துக் கோரினார். 2002ல் சரிகாவுடனான உறவிலிருந்து விடுதலைப் பெற்ற பின், 2005லிருந்து கௌதமியுடன் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலக வாழ்க்கை

தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் அவர்கள், தீவிர நாடகக் கலைஞராகவும் இருந்து வருகிறார். 1960ல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் முதன்முதலில் அறிமுகமான போது, அவருக்கு வயது ஆறு. அத்திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். குழந்தை நட்சத்திரமாகப் பல திரைப்படங்களில் நடித்த இவர், ஒரு இளைஞனாக, 1970ல் வெளியான ‘மாணவன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் மற்றும் தோன்றினார். 1973ல், வெளியான கே.பாலச்சந்தர் அவர்களின் ‘அரங்கேற்றம்’ என்ற திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. துணைக் கதாப்பாத்திரமாக பல கதைகளில் நடித்தாலும், அவர் எதிர்மறையான கதாப்பாத்திரங்களில் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறன்’, ‘குமாஸ்தாவின் மகள்’ போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. 1974ல் வெளிவந்த, ‘நான் அவன் இல்லை’ திரைப்படமே அவர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த கடைசித் திரைப்படமாகும்.

1974ல் வெளியான ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளப் படம் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்தார். இந்தப் படம் அவருக்கு அம்மொழிக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தமிழ்த் திரையுலகில் நாயகனாக அவர் அறிமுகமாகிய முதல் படம், கே.பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய ‘அபூர்வ ராகங்கள்’. இப்படத்திற்காக, அவருக்கு ‘ஃபிலிம்ஃபேர் விருதும்’, ‘தேசிய விருதும்’ கிடைத்தது. 1970களில், ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். ’16 வயதினிலே’, ‘மூன்று முடிச்சு’, ‘அவர்கள்’, ‘இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ போன்ற திரைப்படங்கள் அவ்விருவரின் கூட்டணிக்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர், தொடர்ந்து வெற்றிப் படங்களான ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘வருமையின் நிறம் சிகப்பு’, ‘நீயா’, ‘கல்யாண ராமன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராஜப்பார்வை’, ‘மூன்றாம் பிறை’ ஆகிய படங்கள் இவருக்குப் பல விருதுகளைத் தேடித்தந்தது.

அதே சமயத்தில், அவர் ஹிந்தித் திரையுலகிலும் கவனம் செலுத்தினார். ‘ஏக் துஜே கே லியே’, ‘சாகர்’, ‘ராஜ் திலக்’, கிரஃப்தார்’ ஆகிய திரைப்படங்கள் அவர் நடித்த ஹிந்தி திரைப்படங்களில் சில. 1990களில் வெளியான ‘அபூர்வ சகோதர்கள்’, ‘குணா’, ‘தேவர் மகன்’, ‘மகாநதி’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’, ‘அவ்வை ஷண்முகி’ போன்ற படங்கள், வெற்றிகரமான பாக்ஸ் ஆஃபிஸ் திரைப்படங்களாக உருவெடுத்தன. 1990ல், அவரின் அற்புதமான நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கியது. அன்று முதல், இவர் ‘பத்மஸ்ரீ கமல்ஹாசன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இரண்டு ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப்பின் வெளியான திரைப்படம், ‘ஹே ராம்’. இது அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘ராஜ்கமல் பட நிறுவனத்தின்’ படைப்பாகும். அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்த படத்திற்குத் தடை விதித்தாலும், இப்படம் பெருமளவு வெற்றியை அடைந்தது. பின்னர், ‘தெனாலி’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘வசூல் ராஜா MBBS’ போன்ற திரைப்படங்கள் அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகப் பெரிதும் பேசப்பட்டவை. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ உலகளவில் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. அண்மையில் அவர் நடித்து, இயக்கி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான ‘விஸ்வரூபம்’ பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்று வெளிவந்த சில நாட்களிலேயே 120 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.

நடிப்பைத் தவிர, அவர் பல படங்களுக்கு, பாடல்களும் எழுதியிருக்கிறார். மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் ஆங்கிலத்தில் எழுபதுக்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடியும் உள்ளார். திறமைசாளியான கமல்ஹாசன் அவர்கள், பரதநாட்டிய கலைஞர் என்பதால், பல படங்களுக்கு நடனக்கலைஞராகவும் இருந்துள்ளார்.

இலக்கிய படைப்புகள்

தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தாலும், எழுத்துத் திறனாலும் ‘மையம்’ என்ற பத்திரிக்கையை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்விதழைக் ‘கமல்ஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கி வருகிறது. தனது ரசிகர் சங்கம் மூலமாக, சினிமா, குழந்தை வசவு, காஷ்மீர் மோதல், போதை மருந்துப் போன்ற சமுதாயப் பிரச்சனைகளை, தனது புத்தகமான ‘தேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் சேகரித்து வெளியிட்டார்.

பொதுநலப் பணிகள்

‘கமல் நற்பணி இலக்கியம்’ என்ற அமைப்பின் கீழ் பல சமுதாயப் பொது நல அமைப்புகள் அமைத்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள், அவரது ரசிகர்கள். ஏழை எளியோருக்கு உதவுவது, பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகம், கணினிப் போன்றவற்றை வழங்குவது போன்ற நற்பணிகளும் செய்கிறார்கள். ஹ்ருதயராகம் 2010 என்ற திட்டத்தின் தூதராக இருந்த அவர், எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதன் பொருட்டாக ஒரு அனாதை இல்லத்தை அமைத்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண நிதித் திரட்டி, சென்னை போரூரிலிருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 2010ஆம் ஆண்டு வழங்கினார்.

விருதுகள்

சிறந்த நடிப்பிற்காக மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் போன்ற படங்களுக்காக இந்திய அரசின் தேசிய விருதுகளைப் பெற்றார்.
சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்காக ‘இந்திய தேசிய விருது’ அவரது முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மாவிற்காக’ வழங்கப்பட்டது.
18 முறை  ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமை, கமல்ஹாசன் அவர்களையே சேரும்.
1990ல், ‘பத்மசிறீ விருது’ பெற்றார்.
2005ல், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
முக்கியமான திரைப்படங்கள்

கமல்ஹாசன் அவர்களின், திரையுலக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டத் திரைப்படங்களுள் சில…

களத்தூர் கண்ணம்மா
16 வயதினிலே
மூன்றாம் பிறை
நாயகன்
அபூர்வ சகோதரர்கள்
மைக்கேல் மதன காமராஜன்
குணா
மகாநதி
தேவர் மகன்
இந்தியன்
அவ்வை சண்முகி
ஆளவந்தான்
தெனாலி
தசாவதாரம்


சுவாரஸ்ய தகவல்கள்
1981 ஆம் ஆண்டு வெளியான ராஜபார்வை கமல்ஹாசனின் 100 வது திரைப்படம். இத்திரைப்படம் மூலம் திரைப்பட தயாரிப்பிலும் அறிமுகமானார். பார்வையற்றோர் குழுவின் வயலின் வாசிப்பு அவருக்கு பிலிம்பேர் விருது பெற்றுதந்தது.

இவர் ஒரு நாத்திகர் ஆவார்.

2018 பிப்ரவரியில் தனது கட்சி மற்றும் அதன் வழிகாட்டு கொள்கைகளை அறிவித்த கமல், தன்னுடைய அரசியல் அபிலாஷைகளை உண்மையாக்க இனி நடிக்கபோவதில்லை என அறிவித்தார்.

தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகியவற்றை "பவர் ப்ரோக்கர்கள்" என விமர்சித்த கமல், அவர்களுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார். தனது அரசியல் கட்சி மூலம் ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதாக அவர் உறுதியளித்தார்.இது அவரது கட்சிக்கு வலுவான அடித்தளமாக இருக்கும் என பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அரசியல் காலவரிசை
2018
பிப்ரவரி 2018 ல், கமல் ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
முந்தைய வரலாறு
1972
கல்விக்காக திரைப்படத்துறையில் ஒன்பது ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பிய கமல்ஹாசன், அடுத்த நான்கு தசாப்தங்களாக பல திரைப்படங்களில் நடித்து, நமது காலக்கட்டத்தில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார்.
1960
கமல்ஹாசன் தனது 4 வயதில் களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தின் மூலம் திரைவாழ்வை துவங்கினார். ஆரம்ப வெற்றியைத் தொடர்ந்து, குழந்தை நட்சத்திரமாக மேலும் ஐந்து திரைப்படங்களில் நடித்தார் .