வெள்ளி, 27 ஜூலை, 2018

பாடகி சித்ரா பிறந்த நாள் ஜூலை 27 , 1963.


பாடகி சித்ரா பிறந்த நாள் ஜூலை 27 , 1963.

சித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா (Krishnan Nair Shantakumari Chithra , பிறப்பு: 27 சூலை 1963), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம் , கன்னடம் , தமிழ் ,
தெலுங்கு , ஒரியா , இந்தி , அசாமிய ,
வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும் , ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியர்களிடையே சின்னக்குயில் சித்ரா எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.

குடும்பம்

திருவனந்தபுரத்தில் 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் சித்ரா பிறந்தார்.
வானொலியில் பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், வீணை வித்தகி சாந்தகுமாரிக்கும் இளையமகள் ஆவார். இவரின் சகோதரியான பீனா, இனிமையான குரலைக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் நாயருடைய மனைவி ஒரு பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். அபூர்வ குரலினிமையைப் பெற்றிருந்த பீனாவிற்கு சிறு வயது முதல் கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது. சித்ராவின் இளவயதிலேயே பாடல்களை நினைவில் கொண்டு பாடினார். அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே அகில இந்திய வானொலி ஒளிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.
இசைப் பயிற்சி
சித்ரா (2015)
பள்ளியில் பயின்ற நாட்களிலே அவர் தந்தையார் தம் மகள் சார்பாக தேசிய அளவில் திறமை வாய்ந்தோருக்கான உதவித்தொகைக்கு பதிவு செய்தார். நேர்முகத் தேர்வுக்கு சென்றபொழுது இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும், பதிமூன்று வயது சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை நிரவல் செய்து தம் தகுதியை நிரூபித்து ஏழு வருட உதவித்தொகையைப் பெற்றார். பின்னர், இசை பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
இவர் பேராசிரியர் ஓமண்ணக்குட்டியிடம் இசை பயின்று வந்தார். அவருடைய சகோதரர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் திரைத்துறையில் புது குரல்வளம் கொண்டவர்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருந்தார். ஓமண்ணக்குட்டி, சுட்டிப்பெண் சித்ராவின் பெயரை முன்மொழிய திரைப்பட பின்னணிப் பாடகியாகப் பிரவேசித்தார்.
திரைப்பட அறிமுகம்
தனக்கு முழு நேரப் பின்னணி பாடகியாகும் எண்ணம் முன்பே இருக்கவில்லை என்று நினைத்திருந்தார். பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது, கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து யேசுதாசுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், 'தரங்கிணி' பதிப்புகளிலும் சித்ராவிற்கு பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புதுக் குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடிபெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று இசையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.
சென்னை வருகை
முகமறியாத இடத்திற்கு வர முதலில் சித்ராவிற்கு விருப்பமில்லை. ஒரு முறை 'குஷி ஔர் குஷி' என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் எழுதிய ஒரு பாடலை பி.பி.சீனிவாசுடன் இணைந்து பாடுவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை.
இளையராஜாவுடனான அறிமுகம்
ஒரு முறை இயக்குனர் பாசில் தம்முடைய நோக்காத தூரத்து கண்ணும் நட்டு என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த இளையராஜா சித்ராவிற்கு அழைப்பு விடுத்தார். இளையராஜாவின் இசையமைப்பில் ' நீ தானா அந்தக் குயில்' என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது', 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன. 1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் (' கீதாஞ்சலி ' திரைப்படத்தில் 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயிலிசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது ' ஆகிய பாடல்கள் சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட ' சின்னக்குயில் சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து', 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். சித்ராவின் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் இளையராஜாவின் பங்கும் அடங்கியிருக்கிறது.
அடுத்து 1985-1986ஆம் ஆண்டில், இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் வெற்றியடைந்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன்படுத்தினர். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய கங்கை அமரன் , மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், சங்கர் - கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா
மற்ற இசையமைப்பாளர்கள்
எண்பதுகளின் பிற்பகுதியில் சந்திரபோசின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய இசையமைப்பில் சித்ராவிற்கு 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
மேலும் வி.குமாரின் இசையமைப்பில் எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம் ' பாடிய சித்ரா அவர்கள் குன்னக்குடி வைத்யநாதனின் 'உலா வந்த நிலா' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், டி.ராஜேந்திரனின் இசையில் சில பாடல்களையும் பாடினார்.
சில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். ஆர்.டி.பர்மன் (நதியே நதியே நைல் நதியே), லட்சுமிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில்), பப்பி லஹரி (தக்கதிமிதானா), வி.எஸ். நரசிம்மன் (விழிகளில் கோடி அபிநயம்), எல்.வைத்யநாதன் (என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா), தேவேந்திரன் (கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம்புது ஓலை வரும்), ஹம்சலேகா (ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம், சேலை கட்டும் பெண்ணுக்கொரு), எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில்), மனோஜ் - க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே) , பாக்கியராஜ் (அம்மாடி இது தான் காதலா), எஸ்.பி.பி (உன்னைக் கண்ட பின்பு தான், இதோ என் பல்லவி), எஸ். ஏ. ராஜ்குமார் (ஆயிரம் திருநாள்) , தேவா (சந்திரலேகா, வேண்டும் வேண்டும்), போன்றவர்களின் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு கட்டியம் கூறும் முகமாக அமைந்துள்ளன.
அடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் இசையரங்கில் ஏ. ஆர். ரகுமான் , மரகதமணி,
வித்யாசாகர் , சிற்பி, பரத்வாஜ் போன்றவர்களின் பிரவேசத்தினால் இசையின் பரிமாணத்தில் பல அற்புதமான மாற்றங்கள் காணத் துவங்கின. இத்துறையில் முதன்மையாக நின்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சித்ராவின் குரலில் 'புத்தம்புது பூமி வேண்டும்' , 'என் மேல் விழுந்த மழைத்துளியே' , 'தென் கிழக்குச் சீமையிலே', 'கண்ணாளனே' , ’ஊ லலலா’, ’எங்கே எனது கவிதை’ போன்ற பல வெற்றிப்பாடல்களை வழங்கினார்
சித்ராவின் இசைப்பயணத்தில் இசையமைப்பாளர் மரகதமணியும் ஒரு மைல் கல்லாக நிற்கிறார். 'அழகன் ' படத்தில் தாம் 'தத்தித்தோம் ' என்ற பாடலை பாடினார். அவர் இயக்கத்தில் 'நாடோடி மன்னர்களே' , 'நீ ஆண்டவனா?' , ' கம்பங்காடே' (வானமே எல்லை) போன்ற பாடல்களையும் பாடினார். 'உயிரே உயிரே' என்ற பாடலும், 'தேவராகம்' என்ற இரு மொழிப்படத்துப் பாடல்களும் அவருக்கென்றே இசையமைக்கப்பட்டவை.
பாலபாரதி (உன்னைத் தொட்ட தென்றல்), ஆதித்யன் (ஒயிலா பாடும் பாட்டிலே, வெள்ளி கொலுசு ஜதி போடுதே), மஹேஷ் (பூங்குயில் பாடினால்), சிற்பி (கன்னத்துல வை, ஐ லவ் யூ ஐ லவ் யூ, தென்றல் தென்றல் தென்றல் வந்து) , ரஞ்சித் பாரோடு (மின்னல் ஒரு கோடி), ஆகோஷ் (தொலைவினிலே, முந்தானை சேலை), வித்யாசாகர் (பாடு பாடு பாரத பண்பாடு, அடி ஆத்தி, அன்பே அன்பே நீ என் பிள்ளை, நீ காற்று நான் மரம்), பரத்வாஜ் (ஒரு பூ வரையும் கவிதை , வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே , உன்னோடு வாழாத , ஒவ்வொரு பூக்களுமே), ரமேஷ் வினாயகம் (காதலை வளர்த்தாய்), எஸ்.ஏ.ராஜகுமார் (தொடு தொடு எனவே, இன்னிசை பாடி வரும்) போன்ற பல வேறு இசையமைப்பாளர்களின் இசையில் சித்ரா பாடிய பாடல்களில் சில.
இருபது ஆண்டுகளுக்கு மேல் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி,
பி. லீலாவிற்குப் பிறகு கேரளாவிலிருந்து வந்து, தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் நான்கிலும் பாடியிருக்கிறார். ஹரிஹரன் ,
உன்னிகிருஷ்ணன் , எஸ். பி. பி, மனோ, ஜெயச்சந்திரன் என்று பலருடனும் இணைந்து பாடி வாலி , வைரமுத்து ,
பழனி பாரதி, பா.விஜய் போன்றவர்களின் வரிகளை தம் குரலால் உயிர்ப்பித்திருக்கிறார்.
தெலுங்கில் சித்ராவை 'பிரளயம்' திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய திரு.கே.வி.மஹாதேவன் 'ஸ்வாதி கிரணம்' என்ற திரைப்படத்தில் 'பிரணதி பிரணதி' என்ற பாடலை திரு.எஸ். பி. பியுடனும், திருமதி.வாணி ஜெயராமுடனும் பாடும் அரிய வாய்ப்பைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி.பி,, இளையராஜா, கீரவாணி (மரகதமணி) போன்றவர்கள் அவரை தெலுங்கில் பல அற்புதமான பாடல்களைப் பாட வைத்தார்கள். முதலில் மொழி அறியாது அவர் சற்று சிரமப்பட்டாலும் எஸ்.பி.பி அவர்கள் மொழியை பொருளோடு புரியவைத்து உச்சரிக்கும் முறை சுட்டிக் காட்டியபொழுது கற்றுக் கொண்டார். திருமதி.பாலசரஸ்வதியும், பிறரும் பாரட்டும் வண்ணம் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் போன்றே அம்மொழிப் பாடல்களை மிகச் சிறப்பாக பாடினார்.
இந்திப் பாடல்கள்
பாலிவுட்டில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஆனந்த் மிலிந்த் 'ப்ரேம' என்ற தெலுங்கு படத்தை 'லவ்' என்ற பெயரில் தயாரித்த பொழுது, இளையராஜாவின் பாடல்களைப் பின்பற்றி இசை அமைத்து சித்ராவையும், எஸ்.பி.பியுடன் இணைந்து பாட வைத்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் அநேக ஹிந்தி மொழிப்படங்களில் அவரைப் பாட வைத்தார். ராஜேஷ் ரோஷன், நாதீம் ஷ்ரவண், அனு மாலிக், நிகில் வினய், இஸ்மாயில் தர்பார் போன்ற இசையமைப்பாளர்கள் அந்த காலகட்டத்தின் மிகச் சிறந்த பாடகி என்று திருமதி.சித்ராவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். லதா மங்கேஷ்கர் எழுபத்தைந்தாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது அந்தேரியில் நடந்த பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் லதா கேட்டுக் கொண்டதற்கேற்ப சித்ரா அவர்கள் 'ரசிகா பல்மா' பாடலைப் பாடி விழாவைத் துவக்கி வைத்தார்.
சித்ரா அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் முன்னணிக் கலைஞராக பல வருடங்கள் இருந்ததோடு வங்காள, ஒரிய, பஞ்சாபி மொழியிலும் அநேக பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடி வெளிவந்த திரையசை அல்லாத ஆல்பங்களும் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவர் சலீம் சுலைமானுடன் இணைந்து 'ராக ராகா' என்ற இண்டிபாப் தொகுப்பும், சாரங்கி வித்வான் உஸ்தான் சுல்தானுடன் இணைந்து வெளியிட்ட 'பியா பசந்தி' என்ற தொகுப்பும் விற்பனையில் சாதனை படைத்ததுடன் எம் டி.வி விருதையும் பெற்றுத் தந்தன. 'சன்செட் பாயின்ட்' எனற தொகுப்பில் குல்சார் கதை சொல்லி வருகையில் இடையிடையில் பூபேந்திர சிங்கும், சித்ராவும் பாடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மலையாள பக்திப்பாடல்கள்
அவர் தன் தாய் மொழியான மலையாளத்தில் பல பக்திப்பாடல் தொகுப்புகளில் பாடியுள்ளார். அவை கேரளக் கோவில்களில் திருவிழாக் காலங்களில் ஒலி பரப்பப்படுகின்றன. 'சலீல் சௌத்ரி' யின் இசையமைப்பில் உண்ணி மேனனும், சித்ராவும் 'ஸ்வர்ணரேக' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அன்னை மூகாம்பிகையே' என்ற தொகுப்பும், சுவாதித் திருநாளின் பதங்களின் தொகுப்பான 'என்சாண்டிங் மெலடீஸ்' என்ற பாடலும்ம், ' ' கிருஷ்ணபிரியா'வும் அவருடைய மற்ற தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. எம். சுப்புலட்சுமியின் நினைவிற்கு ஒரு அஞ்சலியாக 'மை டிரிபியூட்' என்னும் தொகுப்பில் எம்.எஸ் பாடி அமரத்துவம் பெற்ற 'குறை ஒன்றும் இல்லை' , 'பாவயாமி ரகுராமம்' , 'காற்றினிலே வரும் கீதம்' போன்ற பாடல்களைப் பாடியதோடு, ' சுனாமி ' வெள்ள நிவாரண நிதிக்காக உஷா உதுப்பின் 'வி பிலீவ் இன் நவ்' என்ற தொகுப்பிலும் பாடியுள்ளார்.
இருப்பிடம்
'ஸ்ருதி' என்று பெயரில்
சாலிகிராமத்தில் தன் கணவர் விஜய ஷங்கருடன் வசிக்கிறார். அவர் பொறியியல் வல்லுனர்.சித்ராவின் சகோதரரும், சகோதரியும் பெற்றோரின் மறைவிற்குப் பிறகு வெளிநாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வாழ்கிறார்கள்.
விருதுகள்
சித்ரா பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் நாடு , கர்நாடகா, கேரளா , ஆந்திரா என்ற நான்கு மாநில விருதுகளையும் பெற்றுள்ள ஒரே பின்னணிப்பாடகி. 1985ஆம் ஆண்டில் துவங்கி பதினைந்து முறை (எஸ். ஜானகி அவர்கள் 12 முறை) கேரள மாநில விருதைப் பெற்றுள்ளார். அவர் ஆறு முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும் , இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும், நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. அவருக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்தி படத்தில் ’பாயாலேன் சுன்முன் சுன்முன்' பாடலின் மூலம் சித்ரா தென்னிந்தியப் பின்னணியில் இருந்து இந்தி மொழியில் பாடி, தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பைப் பெற்றார்.
தேசிய விருது பெற்ற இவரது 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 12000 பாடல்களுக்கு மேல் பாடிய சித்ரா, எஸ். பி. சரண், விஜய் யேசுதாஸ் முதலிய அடுத்த தலைமுறை பாடகர்களுடனும் பாடுகிறார்.
அவர் சாதனைகளின் சிகரமாக 2005ஆம் ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து ' பத்ம ஸ்ரீ ' விருது பெற்றதைச் சொல்லலாம். புகைப்படக்காரர்களும், பத்திரிகைக்காரர்களும் அவருடைய ஒரு நிமிடப் பேட்டிக்காக வரிசையில் காத்து நின்ற பொழுது தன் சகோதரியின் குழந்தைகளுக்காக நடிகர் ஷாரூக்கானின் கையெழுத்தைப் பெறும் முயற்சியில் இருந்தார்.
"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம்" என்று கூறுகிறார்.
மகள்
இவருக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா எனும் பெண் பிறந்தார். 14 ஏப்ரல் 2011 அன்று துபாயில் உள்ள ஒரு செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நந்தனா உயிரிழந்தார்

புதன், 25 ஜூலை, 2018

நடிகை அபிராமி பிறந்த நாள் ஜூலை 26 . 1983.


நடிகை அபிராமி பிறந்த நாள் ஜூலை 26 . 1983.

அபிராமி ( pronunciation ) (திவ்யா கோபிகுமார், பிறப்பு: 26 ஜூலை 1983) இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர், புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான
ராகுல் பவனன் என்பவரை, 2009 திசம்பர் 27 அன்று திருமணம் செய்து கொண்டார்.


 இவர்களது திருமணத்திற்கு திரைப்படத்துறையில் இருந்து யாரும் அழைக்கப்படாமல் மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் , பதினைந்து ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்களிப்புகள்
வானவில், மிடில் கிளாஸ் மாதவன்,
தோஸ்த் , சமுத்திரம் , சார்லி சாப்ளின் ,
கார்மேகம் , சமஸ்தானம், விருமாண்டி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பன்னிரண்டு இதர மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் எனும் தொடரின் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.


நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2001 வானவில் பிரியா
மிடில் கிளாஸ் மாதவன் அபிராமி
தோஸ்த் அனாமிகா
சமுத்திரம் இலட்சுமி
சார்லி சாப்ளின் மைதிலி ராமகிருஷ்ணன்
2002 கார்மேகம் அபிராமி
சமஸ்தானம் ஆயிசா
2004 விருமாண்டி அண்ணலட்சுமி
2015 36 வயதினிலே சுசன்

இயக்குநர் மகேந்திரன் பிறந்த நாள்: ஜூலை 25, 1939.


இயக்குநர் மகேந்திரன் பிறந்த நாள்: ஜூலை 25, 1939.

மகேந்திரன் (பிறப்பு: சூலை 25, 1939) புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர் . மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.
மகேந்திரன், புதுமைப்பித்தனின்
சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு,
உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது. [2]
திரைப் படைப்புகள்
1. 1978 : முள்ளும் மலரும்
2. 1979 : உதிரிப்பூக்கள்
3. 1980 : பூட்டாத பூட்டுகள்
4. 1980: ஜானி
5. 1980: நெஞ்சத்தை கிள்ளாதே
6. 1981 : நண்டு
7. 1982 : மெட்டி
8. 1982: அழகிய கண்ணே
9. 1984 : கை கொடுக்கும் கை
10. 1986 : கண்ணுக்கு மை எழுது
11. 1992 : ஊர்ப் பஞ்சாயத்து
12. 2006 : சாசனம்
இதர படைப்புகள்
1. அர்த்தம் (தொலைக்காட்சி நாடகம்)
2. காட்டுப்பூக்கள் (தொலைக்காட்சி நாடகம்
கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்
1. தங்கப்பதக்கம் - கதைவசனம்
2. நாம் மூவர் - கதை
3. சபாஷ் தம்பி - கதை
4. பணக்காரப் பிள்ளை - கதை
5. நிறைகுடம் - கதை
6. திருடி - கதை
7. மோகம் முப்பது வருஷம் - திரைக்கதை வசனம்
8. ஆடு புலி ஆட்டம் - கதை வசனம்
9. வாழ்ந்து காட்டுகிறேன் - கதை வசனம்
10. வாழ்வு என் பக்கம் - கதை வசனம்
11. ரிஷிமூலம் - கதை வசனம்
12. தையல்காரன் - கதை வசனம்
13. காளி - கதை வசனம்
14. பருவமழை -வசனம்
15. பகலில் ஒரு இரவு -வசனம்
16. அவளுக்கு ஆயிரம் கண்கள் - கதை வசனம்
17. கள்ளழகர் -வசனம்
18. சக்கரவர்த்தி - கதை வசனம்
19. கங்கா - கதை
20. ஹிட்லர் உமாநாத் - கதை
21. நாங்கள் - திரைக்கதை வசனம்
22. challenge ramudu (தெலுங்கு) - கதை
23. தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு ) -கதை
24. சொந்தமடி நீ எனக்கு -கதை வசனம்
25. அழகிய பூவே - திரைக்கதை வசனம்
26. நம்பிக்கை நட்சத்திரம் -கதை வசனம்
சுவையான தகவல்கள்
திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார்.
இனமுழக்கம் , துக்ளக் போன்ற இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
மகேந்திரன் சினிமாவும் நானும் என்னும் நூலினை எழுதியுள்ளார். இது 2004ஆம் ஆண்டு வெளியானது.
திரையுலகில் ஒரு இடம் பெற முயற்சித்துக் கொண்டிருந்த நாட்களில்,
எம்.ஜி.ஆர் . தமக்கு மாதச் சம்பளம் அளித்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு திரைக்கதை எழுதுமாறு பணித்ததாகவும், அதைத் தாம் பூர்த்தி செய்யவில்லை எனினும், எம்.ஜி.ஆர். அதைப் பற்றி ஏதும் கேட்காமலேயே தொடர்ந்து பண உதவி செய்து வந்ததாகவும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும், எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திற்கும் இவர் வசனமோ திரைக்கதையோ எழுதியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிவாஜி கணேசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இவரது படங்களில் அதிகம் நடித்த நட்சத்திரம் அவரே.
மகேந்திரனின் முதல் படம் துவங்கி, அநேகமாக அவரது பல படங்களில்
சரத்பாபு இடம் பெற்றார்.
கன்னட நடிகை அஸ்வினியை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் மகேந்திரன். படம்: உதிரிப் பூக்கள். பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.


கமலஹாசனின் தமையன்

சாருஹாசனை திரைக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர் மகேந்திரன். மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய சாருஹாசன், பின்னர் ஒரு கன்னடப் படத்திற்காக மிகச் சிறந்த நடிகருக்கான அனைத்திந்திய விருதினைப் பெற்றார்.
விஜயனை அறிமுகம் செய்தது இயக்குனர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
மகேந்திரனின் மிகச் சிறப்பான அறிமுகம் சுஹாசினி. நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலுக்காக எதிர்பார்க்கப்பட்ட தேசிய விருதை சுஹாசினி இழந்தார். (பின்னர் சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிந்து பைரவி திரைப்படத்திற்காக இவ்விருதினை அவர் பெற்றார்.)
தாம் முதலில் இயக்கிய முள்ளும் மலரும் திரைப்படத்தில் தாம் நடிக்கவில்லை என்றாலும், அதில் ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா பணி புரிய மிகவும் உதவியவர்
கமலஹாசன் என்றும் மகேந்திரன் குறிப்பிட்டதுண்டு. ஆயினும், மகேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை.
இவர் சமீபத்தில் தெறி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.


மகத்தான படங்களை இயக்கிய மகேந்திரன்!

இயக்குநர் மகேந்திரனைப் பற்றிப் பேசாமல் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய எவ்வோர் உரையாடலோ கட்டுரைத் தொடரோ முழுமை பெற்றுவிடாது. தம் படங்களின் வழியாக வாழ்வின் மன நடுக்கோட்டைப் பிடித்துச் சென்றவர் மகேந்திரன். அவருடைய படங்கள் வெளியான காலகட்டத்தில் அவற்றின் பொருண்மை குறித்து தமிழ்ச் சமூகத்தில் போதுமான உரையாடல்கள் நிகழ்ந்தனவா என்பது நமக்குத் தெரியவில்லை. இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால், அவர் முனைந்து செயல்பட்ட காலத்திற்குப் பிறகு அவருடைய படங்களின் மதிப்பு மேன்மேலும் உயர்ந்துகொண்டே செல்கிறது.
ஏன் மகேந்திரன் இன்றியமையாத ஓர் இயக்குநராக அறியப்படுகிறார் ? அவரைவிடவும் சிறப்பாக இயக்கியவர்கள் பலர் இருக்கின்றார்களே. ஆம், மகேந்திரனை விடவும் சிறப்பான இயக்குநர்கள் இருக்கிறார்கள்தாம். ஆனால், இங்கே மகேந்திரன் முன்னிற்கவில்லை. மகேந்திரன் இயக்கிய படங்கள் முன்னிற்கின்றன. கதை மாந்தர்களின் ஆழ்மனத்தைக் காட்சிப்படுத்தி, அதையே கலையாக்கி அவர் தம் படங்களில் வைத்துச் சென்றுள்ளார். கதை மாந்தர்களின் மனங்களை நமக்கு அடையாளம் காணத் தெரிந்துவிட்டது.
எழுதத் தெரிந்தவர் இயக்குநராய் வடிவெடுப்பதில் பலப்பல அருமைகள் வாய்க்கும் என்பதற்கு மகேந்திரன் நல்ல எடுத்துக்காட்டு. ஒரு கதைக்கு என்ன நியாயம் செய்ய வேண்டும் என்பதுதான் இயக்குநரின் வேலையே. தொடக்கத்தில் பல்வேறு படங்களுக்குக் கதையும் உரையாடலும் எழுதித் தந்தவர் மகேந்திரன். சிவாஜி கணேசனின் உரக்கப் பேசும் உரையாடல்களுக்குப் பெயர் பெற்ற தங்கப்பதக்கம் படத்திற்கு எழுதியவர். அவ்வரிசையில் ரிஷிமூலம், ஆடுபுலி ஆட்டம், காளி, பகலில் ஒரு இரவு என எண்ணற்ற படங்கள். 'முள்ளும் மலரும்' மூலம் இயக்குநர் ஆனார். முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நண்டு, மெட்டி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் அவருடைய இயக்கத்தில் வரிசையாக வந்தன. ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் தரத்திலானவை. தற்காலத்தினர் இப்படங்களைத் தவறவிடாமல் பார்க்க வேண்டும்.
ஓர் எழுத்தாளராக மகேந்திரன் தம் படங்களை இயல்பு குலையாமல் எடுப்பதற்குத்தான் தீர்மானம் செய்திருப்பார். கதை மாந்தர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளவாறே உரைத்தல் என்பதே அவருடைய இயக்கம். வாழ்க்கைச் சுழலில் சிக்கிக் கிடக்கும் பாத்திரங்களின் எளிய தோற்றங்களையும், நினைப்புக்கும் வாழ்க்கைக்குமுள்ள இடைவெளியையும், துயரத்தின் கனத்த அமைதியையும், கையறு நிலையில் வெறுமனே பார்த்து நிற்றலையும் அவர் காட்சிப்படுத்துவதன் வழியாகவே பார்வையாளர்களுக்குள் ஒரு கலையுணர்ச்சியை வருவிக்கிறார். அவற்றையே அவர் தம் திரைமொழியாக ஆக்கிக்கொண்ட பிறகு மேலும் இரண்டு வித்தகங்கள் அவர் படங்களுக்குத் தோள்கொடுக்கின்றன. ஒளிப்பதிவும் இசையமைப்பும்தாம் அவ்விரண்டு.
மகேந்திரனின் படங்களை இளையராஜாவின் இசை கலைச்செப்பம் செய்து தந்தது. முள்ளும் மலரும் பின்னணி இசையில் இளையராஜா விட்டுச் சென்ற மௌனப் பொழுதுகள்தாம் பார்வையாளர்களைத் திரையை நோக்கி உற்றுப் பார்க்க வைத்தன. அந்த உற்று நோக்கலே உணர்வுகளைக் கட்டிவிட்டது. உதிரிப் பூக்களின் கருவிசை (தீம் மியூசிக்) இளையராஜாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திலும் இசைக்கே முதலிடம். மகேந்திரன் படங்களில் இளையராஜா செய்து காட்டிய வித்தகங்கள் என்றே தனிப்பொருளில் எழுதிச் செல்லலாம். பின்னணி இசையோடு நிறுத்திக்கொண்டோம், பாடல் வளங்களை நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாம். 'சங்கம் காணாதது தமிழும் அல்ல... தனை அறியாதவள் தாயும் அல்ல...' என்பதுதான் தாய்மைக்கே இலக்கணம்.
மகேந்திரன் படங்களுக்கு வாய்த்த இன்னொரு வித்தகம் ஒளிப்பதிவு. முள்ளும் மலரும் பாலுமகேந்திராவின் கலைவண்ணம். கிட்டத்தட்ட அப்படத்தைத் தம் படம்போன்ற மொழியில் பாலுமகேந்திரா கையாண்டிருப்பதைக் காணலாம். உதிரிப் பூக்களில் அசோக்குமார். தமிழ்த் திரையுலகின் புகழ் பாடப்படாத நாயகர்களின் பட்டியலில் அசோக்குமாரைச் சேர்க்கலாம். மகேந்திரன் எடுக்க நினைத்தது அசோக்குமாரின் கோணத்தில் அருமையான சுடுவுகளாக அமைந்தன. இன்றைக்கும் உதிரிப் பூக்கள் படமாக்கப்பட்ட மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுத் திக்கம் நான் அடிக்கடி செல்வதுண்டு. அந்தப் பகுதியே உதிரிப்பூக்கள் நிகழ்ந்த களமாகத்தான் எனக்குத் தென்படுகிறது. பெருவெள்ளம் சுழித்தோடும் பவானி ஆற்றங்கரையில் தாய்தந்தையற்ற இரண்டு மழலைச் செல்வங்கள் நடந்து செல்வதைப்போன்ற காட்சிப்பிழை அங்கே ஏற்படுவதுண்டு.
அருமையாய் எடுக்கப்பட்ட எண்ணற்ற தமிழ்ப்படங்கள் வெற்றி பெறாமல் தோற்றுப் போயிருக்கின்றன. அதற்கு எதைக் காரணம் காட்டுவது ? கடவுளின் இருப்பு இல்லாமையைப் போன்றே விடை தெரியாத ஒன்று அது. அப்படித் தோற்றுப் போன படங்களில் தலையாயது என்று மகேந்திரனின் 'பூட்டாத பூட்டுகள்' படத்தைத்தான் சொல்வேன். மகேந்திரன் எடுத்த எந்தப் படத்தையும் விட்டுக்கொடுப்பேன். பூட்டாத பூட்டுகளை என்னால் விட்டுக்கொடுக்கவே இயலாது. அது எழுத்தாளர் பொன்னீலனின் கதை. திருமணமான பெண்ணொருத்தியின் மனத்தை அவ்வூர்க்கு வரும் ஓர் இளைஞன் கவர்ந்துவிடுவான். பிறகு ஊரைவிட்டு வெளியேறுவான் அவ்விளைஞன். தானுற்ற உணர்வுகளை உண்மையென்று நம்பும் அப்பெண் தன் வீட்டைத் துறந்து அவ்விளைஞனின் வீட்டுக்கே சென்று நிற்பாள். அங்கே அவளுக்கு வரவேற்பிருக்காது. இளைஞனும் புறக்கணிப்பான். "இங்கே எதுக்கு வந்தே ?" என்றுதான் கேட்பான். "நம்மப் பத்தி ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு. இனிமே உங்களோட வாழ்றதைத்தவிர வேற வழியே இல்லை" என்பாள் அவள். "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்த முடியுமா ? பழகினோம் கொண்டோம்னா அது வேற விசயம். முதல்ல ஊர் போய்ச் சேரு... உன்னோட நிக்கறத மத்தவங்க பார்த்தாங்கன்னா என் பேரு கெட்டுப்போயிடும்..." என்பான் அவன். உயிரைத் துறக்கும் வலிவற்ற அப்பெண் தன் கணவனிடமே திரும்பிவிடுவாள். ஓரளவுக்கு நினைவிலிருந்து எழுதியுள்ளேன், இந்தக் கதையை மகேந்திரனின் இயக்கத்தில் ராஜாவின் பின்னணியிசையில் எண்ணிப் பாருங்கள்.
மகேந்திரன் எழுத்தாளர்களின் ஆக்கங்களிலிருந்து ஓரிழையை எடுத்துக்கொண்டு திரைக்கதை எழுதுபவர். கடைசியாக அவர் எடுத்த சாசனம் திரைப்படத்திற்கும் கந்தர்வனின் சாசனம் கதைக்கும் ஏதொரு தொடர்பையும் காண முடியவில்லை. அவர் ஒரு கதையில் தோன்றும் பாத்திரங்களால் கவரப்படுகிறார். அவர்களைக்கொண்டு தமக்கான திரைக்கதையை வடித்தெடுக்கிறார். நண்டு என்னும் படம் மட்டும் சிவசங்கரியின் எழுத்தை ஓரளவு ஒட்டியதாக அமைந்திருக்கக்கூடும். நம் கதைக் களஞ்சியங்களில் அவ்வளவு மனிதர்கள் நகமும் தசையுமாக நடமாடுகிறார்கள். அவற்றில் பட்டு நூலெடுத்து வித்தை செய்யும் மாபெரும் கலைஞராக மகேந்திரன் ஒருவரே தென்படுகிறார்.

திங்கள், 23 ஜூலை, 2018

பாடகர் திருச்சி லோகநாதன் பிறந்த தினம் ஜூலை 24, 1924.


பாடகர் திருச்சி லோகநாதன் பிறந்த தினம் ஜூலை 24, 1924.

திருச்சி லோகநாதன் (சூலை 24, 1924 - நவம்பர் 17, 1989) தமிழ்த் திரைப்பட முதல்
பின்னணிப் பாடகர் . பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
திருச்சி மலைக் கோட்டை மாநகரில்
நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும்.
நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.
திரைப்படங்களில்
இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்:
வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல்,
எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.
இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948 ) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல்.
திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்
கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார் )
ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும் )
அடிக்கிற கைதான் அணைக்கும் ( வண்ணக்கிளி )
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ( கப்பலோட்டிய தமிழன் )
உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி )
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே ( பானை பிடித்தவள் பாக்கியசாலி )
வில்லேந்தும் வீரரெல்லாம் ( குலேபகாவலி )
பொன்னான வாழ்வு ( டவுன்பஸ் )
பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்
1. பட்டினத்தார் (1962 திரைப்படம்)
குடும்பம்
லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார். இவர்களுக்கு டி. எல். மகராஜன் , தீபன் சக்ரவர்த்தி ('பூங்கதவே தாள் திறவாய்' என
நிழல்கள் படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
குறிப்பிட தகுந்த இரண்டு நிகழ்வுகள்
நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பரிசளித்தார்.
சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த
தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல
மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர் டி. எம். செளந்தரராஜன் .

ஞாயிறு, 22 ஜூலை, 2018

நடிகை மஞ்சுளா விஜயகுமார் நினைவு தினம் ஜூலை 23, 2013


நடிகை மஞ்சுளா விஜயகுமார் நினைவு தினம்   ஜூலை 23, 2013.

மஞ்சுளா விஜயகுமார் (செப்டம்பர் 9, 1953 - சூலை 23, 2013) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் , தெலுங்கு,
கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா , சிறீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

நடிப்பு

மஞ்சுளா முதன் முதலில் 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தார். 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆருடன் இணைந்து
ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1970களில் பல படங்களில் சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் , என். டி. ராமராவ் , கமல்ஹாசன் ,
விஸ்ணுவர்தன் , ரஜனிகாந்த் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
1980களின் இறுதியில் இருந்து துணை நடிகையாகப் பல படங்களில் நடித்தார். 2013 சூலை 23 இல் இவர் தனது வீட்டில் கட்டிலில் இருந்து கீழே வீழ்ந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார்.


தூக்கம் கலைத்த மஞ்சுளா தூங்கிப்போனார்!


எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி என இரண்டு தலைமுறை ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த மஞ்சுளா, கடந்த வாரம் திடீர் மரணம் அடைந்தார். அவரின் நெருங்கிய தோழியான நடிகை லதா, மஞ்சுளா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்...

‘‘பொதுவாக இரண்டு ஹீரோயின்கள் சேர்ந்து நடிக்கும்போது மனசுக்குள் ஈகோ எட்டிப் பார்க்கும். ஆனால் நானும் மஞ்சுளாவும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘நேற்று இன்று நாளை’ என மூன்று படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தபோதும் ஒரு நாள்கூட போட்டி, பொறாமைகளுக்கு இடம் கொடுத்ததில்லை. எங்களுக்குள் நல்ல நட்புறவு இருந்தது. தொடர்ந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மஞ்சுளா துறுதுறுவென பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு எதிர்ப்பதமாக நான் ரொம்ப அமைதி. எதையும் வெளிப்படையாகப் பேசுவார். நன்றாக பரதம் ஆடக்கூடியவர். நானும் அவரும் தண்டாயுதபாணி பிள்ளை மாஸ்டரிடம் நடனம் கற்றுக்கொண்டோம். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் ‘கொள்ளை இட்டவன் நீதான்...’ என்ற போட்டிப் பாடலில் நானும் மஞ்சுளாவும் ஆடினோம். அதைப் பார்த்து, ‘ரெண்டு பேருமே பிரமாதமா ஆடுனீங்க’ என்று எம்.ஜி.ஆரே பாராட்டினார்.

1971ல் தொடங்கி, 1975 வரை ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘இதயவீணை’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘நேற்று இன்று நாளை’ என அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். அதே காலகட்டத்தில் நானும் எம்.ஜி.ஆர் ஜோடியாக ஆறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். இதில்கூட எங்களிடையே ஒற்றுமை இருக்கிறது. 

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்றிருந்தபோது இருவரும் ஒரே அறையில்தான் தங்கினோம். ஒருநாள் காலை 6 மணிக்கெல்லாம் மேக்கப் போட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று முதல் நாள் இரவே தகவல் சொல்லியிருந்தார்கள். நல்ல தூக்கத்தில் இருந்தபோது மஞ்சுளா என்னைத் தட்டி எழுப்பினார். ‘மேக்கப் போட லேட் ஆகிடுச்சு... இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க. சீக்கிரமா எழுந்து ரெடியாகு’ என்று அவர் சொல்ல, அரக்கப் பரக்க குளித்து முடித்து மணியைப் பார்த்தால், அப்போதுதான் நள்ளிரவு 12.30 ஆகுது. 



‘என்ன மஞ்சு இப்படி பண்ணிட்டீங்களே’ என்று கேட்டால், ‘தூக்கத்தில் மணி பாக்கலை’ என்று கூலாகச் சொன்னார். மொத்த ஹோட்டலுக்கே கேட்கும்படி நாங்கள் சத்தமாகச் சிரித்தோம். அன்று என்னை எழுப்பிய மஞ்சுளா, இப்போ நிரந்தரமா தூங்கப் போயிட்டதை நினைச்சா மனசு பாரமா இருக்கு!’’ நன்றி விக்கிப்பீடியா. குங்குமம்.

பாடகி பவதாரிணி பிறந்த நாள் ஜூலை 23, 1976.


பாடகி பவதாரிணி பிறந்த நாள் ஜூலை 23, 1976.

பவதாரிணி (Bhavatharini ) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார்.இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார். இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக்கு இராசா ,
யுவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.
இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்று தந்தது.
பவதாரிணி
இயற்பெயர் பவதாரிணி இளையராசா
பிற பெயர்கள் பவதாரணி, பவதாரிணி, பவதா
பிறப்பு சூலை 23, 1976 (அகவை 41)
பிறப்பிடம் தமிழ் நாடு , இந்தியா
இசை வடிவங்கள் பின்னணிப் பாடகர்
தொழில்(கள்) பின்னணிப் பாடகர் , இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்) Vocals
இசைத்துறையில் 1995–இன்று வரை


பாடல்கள்

பாடல் திரைப்படம் இசையமைப்பாளர் இணைந்து பாடியவர்கள்
என் வீட்டுச் சன்னல் இராமன் அத்துல்லா இளையராசா அருண்மொழி
தாலியே தேவை இல்லை நீ தான் தாமிரபரணி உவன் சங்கர் இராசா அரிகரன்
மயில் போல பாரதி இளையராசா
மேர்க்குரிப் பூவே புதிய கீதை உவன் சங்கர் இராசா நிதீசு கோபாலன், போனி சக்கரபோர்த்தி

நடிகர் சூர்யா பிறந்த நாள் ஜூலை 23 , 1975


நடிகர் சூர்யா பிறந்த நாள்  ஜூலை 23 , 1975

சூர்யா (பிறப்பு - சூலை 23 , 1975 ), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.  இவர் நடிகர்
சிவகுமாரின் மகனும் " பருத்திவீரன் " புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார்.  மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.  நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11 , 2006 அன்று மணந்துக் கொண்டார். இவர்களுக்கு ஏப்ரல் 10, 2007 அன்று பெண்குழந்தை பிறந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர்
கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.

திரைப்பட வாழ்க்கை

இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் நந்தா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ளார்.
பொது வாழ்க்கை
பொதுச்சேவை மற்றும் தொண்டு
அகரம் ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் உடன் நடித்தவர்கள் இயக்குனர் பாத்திரத்தின் பெயர்
2018 தானா சேர்ந்த கூட்டம் கீர்த்தி சுரேஷ் விக்னேஷ் சிவன்
2017 சிங்கம் 3(சி3) அனுஷ்கா செட்டி ,
ஸ்ருதி ஹாசன் ஹரி துரைசிங்கம்
2016 24 சமந்தா ருத் பிரபு விக்ரம் குமார் மணி, ஆத்ரயா, சேதுராமன்
2015 மாசு என்கிற மாசிலாமணி நயன்தாரா ,
பிரணிதா சுபாஷ் வெங்கட் பிரபு மாசிலாமணி, சக்தி
2014 அஞ்சான் சமந்தா லிங்குசாமி ராஜு பாய்,கிருஷ்ணா
2013 சிங்கம் 2 அனுஷ்கா செட்டி ,
ஹன்சிகா மோட்வானி ஹரி துரைசிங்கம்
2012 மாற்றான் காஜல் அகர்வால் கே. வி. ஆனந்த் விமலன், அகிலன்
2011 ஏழாம் அறிவு சுருதி ஹாசன் ஏ. ஆர். முருகதாஸ் போதிதர்மர் , அரவிந்த்
2010 ரத்த சரித்திரம் பிரியாமணி ராம் கோபால் வர்மா சூரி
2010 சிங்கம் அனுசுகா செட்டி ஹரி துரைசிங்கம்
2009 ஆதவன் நயன்தாரா கே. எஸ். ரவிக்குமார் மாதவன்/ஆதவன்
அயன் தமன்னா கே. வி. ஆனந்த் தேவா
2008 வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி ,
சிம்ரன் , திவ்யா கௌதம் மேனன் சூர்யா, கிருஷ்ணன்
2007 வேல் அசின் ஹரி வெற்றிவேல், வாசு
2006 சில்லுனு ஒரு காதல் ஜோதிகா ,
பூமிகா சாவ்லா என். கிருஷ்ணா கௌதம்
ஜூன் ஆர் ஜோதிகா ரேவதி எஸ். வர்மா ராஜா
2005 ஆறு திரிஷா ஹரி ஆறு
கஜினி அசின் ஏ. ஆர். முருகதாஸ் சஞ்சய் ராமசாமி
மாயாவி ஜோதிகா சிங்கம்புலி பாலையா
2004 ஆய்த எழுத்து ஈஷா தியோல் மணிரத்னம் மைக்கேல்
பேரழகன் ஜோதிகா சசி சங்கர் சின்னா, கார்த்திக்
2003 பிதாமகன் லைலா பாலா சக்தி
காக்க காக்க ஜோதிகா கௌதம் மேனன் அன்புச்செல்வன்
2002 மௌனம் பேசியதே திரிஷா ,
லைலா அமீர் கௌதம்
ஸ்ரீ ஸ்ருதி நரசிம்மன் ஸ்ரீ
உன்னை நினைத்து சினேகா,
லைலா விக்ரமன் சூர்யா
2001 நந்தா லைலா பாலா நந்தா
பிரெண்ட்ஸ் விஜயலட்சுமி சித்திக் சந்த்ரு
2000 உயிரிலே கலந்தது ஜோதிகா கே.ஆர். ஜெயா சூர்யா
1999 பூவெல்லாம் கேட்டுப்பார் ஜோதிகா வசந்த் கிருஷ்ணா
பெரியண்ணா மானசா எஸ். ஏ. சந்திரசேகர் சூர்யா
சந்திப்போமா பிரீதா விஜயகுமார் ரமேஷ்குமார் சந்துரு
1998 காதலே நிம்மதி கவிதா இந்திரன் சந்த்ரு
1997 நேருக்கு நேர் சிம்ரன் வசந்த் சூர்யா

தயாரித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குனர்
2015 36 வயதினிலே தமிழ் ரோசன் ஆன்ட்ரீவ்
பசங்க 2 தமிழ் பாண்டியராஜ்
2016 24 தமிழ் விக்ரம் குமார்
2017 மகளிர் மட்டும் தமிழ் பிரம்மா

சனி, 21 ஜூலை, 2018

இயக்குநர் ஸ்ரீதர் பிறந்த நாள் ஜூலை 22 , 1933.


இயக்குநர் ஸ்ரீதர் பிறந்த நாள் ஜூலை 22 , 1933.

ஸ்ரீதர் (சூலை 22 , 1933 - அக்டோபர் 20 , 2008 ) புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர்.
வாழ்க்கைச் சுருக்கம்
ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஸ்ரீதர். அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த இளங்கோவனின் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடியவர் ஸ்ரீதர். தொடக்கத்தில் அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், சரோஜாதேவி கதாநாயகியாக முதலில் அறிமுகமான படம் என்பதும், அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.
1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை".
ஸ்ரீதர் படங்களின் சில சிறப்பம்சங்கள்
தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், காமிரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கியதாகக் கூறப்படும் கே.பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் பெருமளவில் பாராட்டியுள்ளனர். ஸ்ரீதரின் ஆரம்பப்படங்கள் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் வின்செண்ட் என்னும் ஒளிப்பதிவாளர். நெஞ்சில் ஓர் ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்துராமன் மற்றும் தேவிகாவின் நடிப்பில் "சொன்னது நீதானா" என்னும் பாடல் படமாக்கப்பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன.
புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது மட்டும் அன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன. சரோஜாதேவி (கல்யாணப்பரிசு), ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை), நிர்மலா, மூர்த்தி (வெண்ணிற ஆடை - இப்படமே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாகவும் இருந்து வருகிறது) ஆகியோர் ஸ்ரீதரால் அறிமுகமான நட்சத்திரங்கள்.
பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான கல்யாணப்பரிசு நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் , வைஜயந்தி மாலா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் (ராஜேந்திர கபூர், ராஜ்குமார், மீனாகுமாரி நடித்த தில் ஏக் மந்திர்), காதலிக்க நேரமில்லை (சஷிகபூர், கிஷோர் குமார் நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.
1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான கல்யாணப் பரிசு, விடி வெள்ளி போன்றவை தவிர, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம் போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.
ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான கல்யாணப்பரிசு தொடங்கி
இளையராஜா வுடன் அவர் இணைந்த இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.
இயக்கிய திரைப்படங்கள் சில
1957 கல்யாணப் பரிசு
1960 விடிவெள்ளி , மீண்ட சொர்க்கம்
1961 தேன் நிலவு
1962 நெஞ்சில் ஓர் ஆலயம் , போலீஸ்காரன் மகள்
1963 நெஞ்சம் மறப்பதில்லை
1964 காதலிக்க நேரமில்லை
1965 சுமை தாங்கி , வெண்ணிற ஆடை
1967 ஊட்டி வரை உறவு
1968 கலாட்டா கல்யாணம்
1969 சிவந்த மண்
1971 உத்தரவின்றி உள்ளே வா
1972 அவளுக்கென்று ஒரு மனம்
1974 உரிமைக்குரல்
1978 இளமை ஊஞ்சலாடுகிறது
1979 அழகே உன்னை ஆராதிக்கிறேன்
1980 சௌந்தர்யமே வருக வருக
1981 நினைவெல்லாம் நித்யா
மறைவு
சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கியிருந்தார். 2008, அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.

நடிகர் சிவாஜி கணேசன்.. நினைவு தினம் ஜூலை 21, 2001.


நடிகர் சிவாஜி கணேசன்.. நினைவு  தினம் ஜூலை 21, 2001.

சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1918 - சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், இராம்குமார் பிரபு மற்றும்; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.

திரைப்பட வாழ்க்கை

முதன்மைக் கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார் , அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.
நடிகர் திலகம் , நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த மனோகரா , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.
இராஜராஜ சோழன் , கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர் , வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்
கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர்
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் " பாசமலர் ", " பாவ மன்னிப்பு", " பார்த்தால் பசி தீரும்", " வீரபாண்டியக் கட்டபொம்மன் " போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன்
மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல்
காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
புகழ்
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசனின் சிலை
ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் ( கெய்ரோ ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
கலைமாமணி விருது (1962 - 1963)
பத்ம ஸ்ரீ விருது, 1966
பத்ம பூஷன் விருது, 1984
செவாலியர் விருது, 1995
தாதாசாகெப் பால்கே விருது, 1996
1962இல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் 'ஒரு நாள் நகரத்தந்தையாகக்' கௌரவிக்கப்பட்டார்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது.


நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்
முதன்மைக் கட்டுரை: சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்
1950–1959
வரிசை எண் வெளியான நாள் திரைப்படம் கதாபாத்திரம் தயாரிப்பு குறிப்புகள்
1 17. அக்டோபர் 1952 பராசக்தி குணசேகரன் நேஷனல் பிக்சர்ஸ் முதல் திரைப்படம்
2 27. திசம்பர் 1952 பணம் மதராஸ் பிக்சர்ஸ் இப்படம் பற்றி சிவாஜி :'எனக்கு பணம் கிடைத்தது' 'என் எஸ் கே:எனக்கு பணம் போனது' '
3 14. சனவரி 1953 பரதேசி அஞ்சலி பிக்சர்ஸ் வி சி கணேசன் நடிக்க முதல் முதலாக ஒப்பந்தம் ஆன படம். |
4 7. பெப்ரவரி 1953 பூங்கோதை ஆனந்த் அஞ்சலி பிக்சர்ஸ்
5 10. சூலை 1953 திரும்பிப் பார் பரந்தாமன் மாடர்ன் தியேட்டர்ஸ் வில்லனாக நடித்தார்
6 24. சூலை 1953 அன்பு செல்வம் நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்
7 5. நவம்பர் 1953 கண்கள் மோஷன் பிக்சர்ஸ்
8 13. நவம்பர் 1953 பெம்புடு கொடுகு பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கு
9 4. திசம்பர் 1953 மனிதனும் மிருகமும் ரேவதி புரொடக்ஷன்ஸ்
10 3. மார்ச் 1954 மனோகரா மனோகரன் மனோகர் பிக்சர்ஸ்
11 9. ஏப்ரல் 1954 இல்லற ஜோதி மனோகர் மாடர்ன் தியேட்டர்ஸ்
12 13. ஏப்ரல் 1954 அந்த நாள் ராஜன் ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் பாடல்கள் இல்லாத முதல் இந்திய திரைப்படம். 'எதிர்மறை கதாநாயகன் (Anti Hero) பாத்திரம்.
13 13. ஏப்ரல் 1954 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி அம்பலவாணன்/அம்பலம் பத்மினி பிக்சர்ஸ்
14 3. சூன் 1954 மனோகரா மனோகர் பிக்சர்ஸ் தெலுங்கு
15 3. சூன் 1954 மனோகர் மனோகர் பிக்சர்ஸ் இந்தி
16 3. சூலை 1954 துளி விஷம் சூரியகாந்தன் நரசு ஸ்டூடியோஸ் வில்லன்
17 26. ஆகத்து 1954 கூண்டுக்கிளி ஜீவா (எதிர்மறை கதாபாத்திரம்) ஆர். ஆர். பிக்சர்ஸ் எம். ஜி. ஆருடன் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம்
18 26. ஆகத்து 1954 தூக்குத் தூக்கி சுந்தராங்கதன்
(தூக்குத் தூக்கி) அருணா ஃபிலிம்ஸ்
19 9. திசம்பர் 1954 எதிர்பாராதது சுந்தர் சரவணபவா யூனிடி பிக்சர்ஸ்
20 13. சனவரி 1955 காவேரி கிருஷ்ணா பிக்சர்ஸ்
21 12. மார்ச் 1955 முதல் தேதி பத்மினி பிக்சர்ஸ் ப. நீலகண்டன் இயக்கம்
22 14. ஏப்ரல் 1955 உலகம் பலவிதம் நேஷனல் புரொடக்ஷன்ஸ்
23 26. ஆகத்து 1955 மங்கையர் திலகம் வைத்யா ஃபிலிம்ஸ்
24 13.11.1955 கோடீஸ்வரன் டாக்டர் சந்தர் ஸ்ரீ கணேஸ் மூவிடோன்
25 13. நவம்பர் 1955 கள்வனின் காதலி ரேவதி புரொடக்சன்ஸ் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவல்
26 14. சனவரி 1956 நான் பெற்ற செல்வம் சேகர் பாரகன் பிக்சர்ஸ்
27 14. சனவரி 1956 நல்ல வீடு ஜெய்சக்தி பிக்சர்ஸ்
28 25. சனவரி 1956 நானே ராஜா கல்பனா கலா மந்திர் எதிர்மறை பாத்திரம்
29 3. பெப்ரவரி 1956 தெனாலி ராமன் ராமகிருஷ்ணன் விக்ரம் புரொடக்ஷன்ஸ் என் டி ஆர் உடன்
30 17. பெப்ரவரி 1956 பெண்ணின் பெருமை ரகு ராகினி ஃபிலிம்ஸ் ஜெமினி கணேசனுடன் சேர்ந்து நடித்த முதல் திரைப்படம்
31 25. பெப்ரவரி 1956 ராஜா ராணி ராஜா நேஷனல் புரொடக்ஷன்ஸ்
32 20. சூன் 1956 அமரதீபம் அசோக் வீனஸ் பிக்சர்ஸ் சாவித்திரி முதல் முறையாக இணைந்து நடித்தார்
33 21. செப்டம்பர் 1956 வாழ்விலே ஒரு நாள் மெர்க்குரி ஃபிலிம்ஸ்
34 1. நவம்பர் 1956 ரங்கோன் ராதா தர்மலிங்க முதலியார் மேகலா பிக்சர்ஸ் சி. என். அண்ணாதுரை கதை] [எதிர்மறை கதாபாத்திரம்]
35 11. சனவரி 1957 பராசக்தி குணசேகரன் தெலுங்கு
36 27. பெப்ரவரி 1957 மக்களைப்பெற்ற மகராசி செங்கோடன் ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ்
37 12. ஏப்ரல் 1957 வணங்காமுடி சித்திரசேனன் சரவணபவா யூனிடி பிக்சர்ஸ்
38 10. மே 1957 புதையல் கமால் பிரதர்ஸ்
39 17. மே 1957 மணமகன் தேவை பரணி பிக்சர்ஸ்
40 29. சூன் 1957 தங்கமலை ரகசியம் விக்கிரமன் பத்மினி பிக்சர்ஸ்
41 21. செப்டம்பர் 1957 ராணி லலிதாங்கி டி. என். ஆர். புரொடக்ஷன்ஸ்
42 22. அக்டோபர் 1957 அம்பிகாபதி அம்பிகாபதி ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் எம் கே ராதா தந்தை கம்பராக நடித்தார்
43 27. திசம்பர் 1957 பாக்கியவதி சோமு
44 11. சனவரி 1958 பொம்மல பெல்லி அருணா ஃபிலிம்ஸ் தெலுங்கு
45 7. பெப்ரவரி 1958 உத்தம புத்திரன் பார்த்திபன், விக்கிரமன் (இரு வேடங்கள் வீனஸ் பிக்சர்ஸ் முதல் இரட்டை வேட நடிப்பு
46 14. மார்ச் 1958 பதிபக்தி பாண்டியன் புத்தா பிக்சர்ஸ்
47 14. ஏப்ரல் 1958 சம்பூர்ண ராமாயணம் பரதன் எம். ஏ. வி. பிக்சர்ஸ் [என் டி ஆர் பத்மினி ராமர் சீதாவாக நடித்தனர்]
48 3. மே 1958 பொம்மை கல்யாணம் கண்ணன் அருணா ஃபிலிம்ஸ்
49 4. சூலை 1958 அன்னையின் ஆணை சங்கர்/கணேஷ் பாரகன் பிக்சர்ஸ் முதலில் தந்தை சங்கராகவும், பின்னர் மகன் கணேஷ் ஆகவும்
50 15. ஆகத்து 1958 சாரங்கதாரா சாரங்கதாரா மினர்வா பிக்சர்ஸ் [1941ல் அசோக்குமார் படத்தின் உல்டா]
51 3. அக்டோபர் 1958 சபாஷ் மீனா மோகன் பத்மினி பிக்சர்ஸ்
52 7. நவம்பர் 1958 காத்தவராயன் காத்தவராயன் ஆர். ஆர். பிக்சர்ஸ்
53 10. சனவரி 1959 தங்கப்பதுமை மணிவண்ணன் ஜுபிடர் பிக்சர்ஸ் [நடிப்பில் புதிய பரிமாணத்தை பிரதிபலித்தார்]
54 7. மார்ச் 1959 நான் சொல்லும் ரகசியம் கருணாகரன் கஸ்தூரி ஃபிலிம்ஸ்
55 16.-5.1959 வீரபாண்டிய கட்டபொம்மன் வீரபாண்டிய கட்டபொம்மன் பத்மினி பிக்சர்ஸ் * கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆபிரிக்க திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது.
* சர்வதேச விருது பெற்ற முதல் இந்திய நடிகர்.
56 21. ஆகத்து 1959 மரகதம் வரேந்திரன் பட்சிராஜா ஸ்டூடியோஸ்
57 30. அக்டோபர் 1959 அவள் யார் சதாசிவம் சுதர்சனம் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் அவசர கதியில் வெளியிட்டு:தோல்வி. படத்தின் இறுதியில் சிவாஜி 20 நிமிட நடிப்பு அற்புதம்]
58 31. அக்டோபர் 1959 பாகப்பிரிவினை கன்னையா சரவணா ஃபிலிம்ஸ் முதல் தயாரிப்பு
1960–1969
தொடர்
வரிசை
எண் வெளியான நாள் திரைப்படம் கதாபாத்திரம் தயாரிப்பு குறிப்புகள்
59 14. சனவரி 1960 இரும்புத்திரை மாணிக்கம் ஜெமினி ஃபிலிம்ஸ் வசுந்தரா தேவி, வைஜெயந்தி மாலா தாய், மகளாகவே இப்படத்தில் நடித்தனர்
60 4. மார்ச் 1960 குறவஞ்சி கதிரவன் மேகலா பிக்சர்ஸ் [முதலில் எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி நடிப்பதாக விளம்பரம் வெளியானது]
61 13. ஏப்ரல் 1960 தெய்வப்பிறவி மாதவன் கமால் பிரதர்ஸ்
62 27. மே 1960 ராஜபக்தி தளபதி விக்ராங்கதன் பி. ராஜமாணிக்கம்
63 25. சூன் 1960 படிக்காத மேதை ரெங்கன் பாலா பிக்சர்ஸ்
64 19. அக்டோபர் 1960 பாவை விளக்கு தணிகாசலம் ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ் அகிலன் எழுதிய பாவை விளக்கு நாவல்
65 19. அக்டோபர் 1960 பெற்ற மனம் நேஷனல் பிக்சர்ஸ் முனைவர் மு. வரதராசன் எழுதிய புதினம்
66 31. திசம்பர் 1960 விடிவெள்ளி சந்துரு பிரபுராம் பிக்சர்ஸ்
67 16. மார்ச் 1961 பாவ மன்னிப்பு ரஹீம் புத்தா பிக்சர்ஸ்/ஏ. வி. எம்
68 21. ஏப்ரல் 1961 புனர் ஜென்மம் சங்கர் விஜயா ஃபிலிம்ஸ்
69 27. மே 1961 பாசமலர் ராஜசேகரன் ராஜாமணி பிக்சர்ஸ்
70 1. சூலை 1961 எல்லாம் உனக்காக ஆனந்தன் சரவணபவா & யூனிட்டி பிக்சர்ஸ்
71 1. சூலை 1961 ஸ்ரீ வள்ளி முருகக் கடவுள் நரசு ஸ்டூடியோஸ் டி ஆர் மகாலிங்கம் நாரதர் வேடம்
72 24. ஆகத்து 1961 மருதநாட்டு வீரன் ஸ்ரீ கணேஷ் பிரசாத் மூவிஸ்
73 9. செப்டம்பர் 1961 பாலும் பழமும் ரவி சரவணா ஃபிலிம்ஸ்
74 7. நவம்பர் 1961 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை பத்மினி பிக்சர்ஸ் சிறந்த படம், சிறந்த நடிகர் தேர்வு இருந்தும் தோல்வி
75 14. சனவரி 1962 பார்த்தால் பசி தீரும் பாலு சிறுவன் கமல் இருவேடம்.
76 9. பெப்ரவரி 1962 நிச்சய தாம்பூலம் விக்ரம் புரொடக்ஷன்ஸ்
77 30. மார்ச் 1962 வளர் பிறை கனகு பத்மா ஃபிலிம்ஸ்
78 14. ஏப்ரல் 1962 படித்தால் மட்டும் போதுமா கோபால் ரங்கநாதன் பிக்சர்ஸ்
79 26. மே 1962 பலே பாண்டியா பாண்டியன் / மருது / சங்கர் பத்மினி பிக்சர்ஸ் மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம். அமெரிக்க அரசின் விருந்தினராக அழைப்பு. மிக குறுகியகால தயாரிப்பு. பெரிய வெற்றி.
80 7. சூலை 1962 வடிவுக்கு வளைகாப்பு ஸ்ரீ லக்ஷ்மி பிக்சர்ஸ்
81 14. செப்டம்பர் 1962 செந்தாமரை மதறாஸ் பிக்சர்ஸ்
82 27. அக்டோபர் 1962 பந்த பாசம் சரவணன் சாந்தி ஃபிலிம்ஸ்
83 23. நவம்பர் 1962 ஆலயமணி தியாகராஜன் பி. எஸ். வி. பிக்சர்ஸ் எஸ் எஸ் ஆர் சரோஜாதேவி முக்கோண காதல்
84 9. பெப்ரவரி 1963 சித்தூர் ராணி பத்மினி உமா பிக்சர்ஸ்
85 1. மார்ச் 1963 அறிவாளி ஆளவந்தான் ஏ. டி. கே. புரொடக்சன்ஸ் காமெடி படம்
86 29. மார்ச் 1963 இருவர் உள்ளம் பிரசாத் மூவீஸ் கலைஞர் வசனம் கண்ணதாசன் பாடல்கள் சிறப்பு
87 12. ஏப்ரல் 1963 நான் வணங்கும் தெய்வம் சத்ய நாராயணா பிக்சர்ஸ் டி ஆர் ராமச்சந்திரன் டைட்டில் ரோல்
88 7. சூன் 1963 குலமகள் ராதை ஸ்பைடர் ஃபிலிம்ஸ் அகிலன் நாவல்
89 12. சூலை 1963 பார் மகளே பார் ஜமீன்தார் சிவலிங்கம் கஸ்தூரி ஃபிலிம்ஸ்
90 12. ஆகத்து 1963 குங்குமம் சுந்தரம் / காளமேகம் ராஜாமணி பிக்சர்ஸ்
91 14. செப்டம்பர் 1963 இரத்தத் திலகம் நேஷனல் மூவீஸ் கண்ணதாசன் தயாரிப்பு. 1962 சீன எல்லைப் போர் மையப்படுத்தி எடுக்கப்பட்டது
92 20. செப்டம்பர் 1963 கல்யாணியின் கணவன் கதிரேசன் பட்சிராஜா ஸ்டூடியோஸ்
93 15. நவம்பர் 1963 அன்னை இல்லம் கமலா பிக்சர்ஸ்
94 14. சனவரி 1964 கர்ணன் கர்ணன் பத்மினி பிக்சர்ஸ்
95 3. ஏப்ரல் 1964 பச்சை விளக்கு வேல் பிக்சர்ஸ்
96 12. சூன் 1964 ஆண்டவன் கட்டளை பேராசிரியர் கிருஷ்ணன் பி. எஸ். வி. பிக்சர்ஸ் பின்னாளில் வந்த சுந்தர காண்டம், சார் ஐ லவ் யூ போன்ற படங்களுக்கு முன்னோடி
97 18. சூலை 1964 கை கொடுத்த தெய்வம் ரகு ஸ்ரீ பொன்னி புரொடக்சன்ஸ்
98 12. செப்டம்பர் 1964 புதிய பறவை கோபால் சிவாஜி ஃபிலிம்ஸ்
99 3. நவம்பர் 1964 முரடன் முத்து முத்து பத்மினி பிக்சர்ஸ்
100 3. நவம்பர் 1964 நவராத்திரி 9 வேடங்கள் ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் 100 ஆவது திரைப்படம்
101 14. சனவரி 1965 பழநி பாரதமாதா பிக்சர்ஸ்
102 19. பெப்ரவரி 1965 அன்புக்கரங்கள் சாந்தி ஃபிலிம்ஸ்
103 22. ஏப்ரல் 1965 சாந்தி ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ்
104 31. சூலை 1965 திருவிளையாடல் சிவபெருமான் பல்வேறு வேடங்களில் ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்
105 10. திசம்பர் 1965 நீலவானம் பட்டு ஃபிலிம்ஸ் கதை வசனம் பாலசந்தர்.
106 26. சனவரி 1966 மோட்டார் சுந்தரம் பிள்ளை சுந்தரம் பிள்ளை ஜெமினி ஸ்டூடியோஸ்
107 19. ஆகத்து 1966 மகாகவி காளிதாஸ் காளிதாசர் கல்பனா கலா மந்திர்
108 3. செப்டம்பர் 1966 சரஸ்வதி சபதம் நாரத முனி / வித்யாதிபதி ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்
109 11. நவம்பர் 1966 செல்வம் செல்வம் வி. கே. ஆர். பிக்சர்ஸ்
110 14. சனவரி 1967 கந்தன் கருணை வீரபாகு ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ்
111 2. மார்ச் 1967 நெஞ்சிருக்கும் வரை சித்ராலயா
112 14. ஏப்ரல் 1967 பேசும் தெய்வம் ரவி புரொடக்சன்ஸ்
113 19. மே 1967 தங்கை சுஜாதா சினி ஆர்ட்ஸ் பாலாஜி தயாரிப்பில் முதல் படம்
114 16. சூன் 1967 பாலாடை கமலா பிக்சர்ஸ்
115 28. சூலை 1967 திருவருட்செல்வர் ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்
116 1. நவம்பர் 1967 இரு மலர்கள் சுந்தர் மணிஜி சினி புரொடக்சன்ஸ்
117 1. நவம்பர் 1967 ஊட்டி வரை உறவு ரவி கேசீ ஃபிலிம்ஸ்
118 16. பெப்ரவரி 1968 திருமால் பெருமை பெரியாழ்வார் ,
தொண்டரடிப்பொடி ஆழ்வார் ,
திருமங்கை ஆழ்வார் திருவேங்கடேசா மூவீஸ்
119 11. ஏப்ரல் 1968 ஹரிச்சந்திரா அரிச்சந்திரன் பிரமோதா ஃபிலிம்ஸ்
120 12. ஏப்ரல் 1968 கலாட்டா கல்யாணம் மதன் ராம்குமார் ஃபிலிம்ஸ்
121 7. சூன் 1968 என் தம்பி சுஜாதா சினி ஆர்ட்ஸ்
122 27. சூலை 1968 தில்லானா மோகனாம்பாள் சிக்கல் சண்முகசுந்தரம் ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ்
123 21. அக்டோபர் 1968 எங்க ஊர் ராஜா அருண் பிரசாத் மூவீஸ்
124 15. நவம்பர் 1968 லட்சுமி கல்யாணம் கிருஷ்ணாலயா
125 29. நவம்பர் 1968 உயர்ந்த மனிதன் ராஜலிங்கம் ஏவி. எம். புரொடக்சன்ஸ் 125 ஆவது திரைப்படம்
126 1. சனவரி 1969 அன்பளிப்பு கமலா மூவீஸ்
127 28. மார்ச் 1969 தங்கச் சுரங்கம் ஈ. வி. ஆர். பிக்சர்ஸ்
128 1. மே 1969 காவல் தெய்வம் சாமுண்டி அம்பாள் புரொடக்சன்ஸ் ஜெயகாந்தனின் கைவிலங்கு நாவல்
129 14. சூன் 1969 குருதட்சணை ஸ்ரீ கஜலட்சுமி ஃபிலிம்ஸ்
130 27. சூன் 1969 அஞ்சல் பெட்டி 520 பாரத் மூவீஸ்
131 8. செப்டம்பர் 1969 நிறைகுடம் பிரபாகர்/பாபு முக்தா ஃபிலிம்ஸ்
132 5. செப்டம்பர் 1969 தெய்வமகன் சங்கர்
கண்ணன்
விஜே சாந்தி ஃபிலிம்ஸ் *ஆஸ்கருக்கு நியமிக்கப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் *சிறந்த நடிகருக்கான தமிழ் நாடு அரசு திரைப்பட விருது *இரண்டாவது தடவை மூன்று வேடங்களில்
133 10. அக்டோபர் 1969 திருடன் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
134 10. நவம்பர் 1969 சிவந்த மண் பரத் சித்ராலயா
1970–1979
தொடர்
வரிசை
எண் வெளியான நாள் திரைப்படம் கதாபாத்திரம் தயாரிப்பு குறிப்புகள்
135 14. சனவரி 1970 எங்க மாமா ஜேயார் மூவீஸ்
136 6. பெப்ரவரி 1970 தார்தி சித்ராலயா சிவந்த மண் திரைப்படத்தின் இந்தி பதிப்பு
137 20. பெப்ரவரி 1970 விளையாட்டுப் பிள்ளை ஜெமினி ஸ்டூடியோஸ்
138 11. ஏப்ரல் 1970 வியட்நாம் வீடு சிவாஜி ஃபிலிம்ஸ்
139 27. சூன் 1970 எதிரொலி நவரத்ன மூவீஸ் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்த ஒரே திரைப்படம்
140 15. ஆகத்து 1970 ராமன் எத்தனை ராமனடி ராமன் அருண் பிரசாத் மூவீஸ்
141 29. அக்டோபர் 1970 எங்கிருந்தோ வந்தாள் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
142 29. அக்டோபர் 1970 சொர்க்கம் ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ்
143 27. நவம்பர் 1970 பாதுகாப்பு சன் பீம்ஸ்
144 14. சனவரி 1971 இரு துருவம் ரங்கன் பி. எஸ். வி. பிக்சர்ஸ்
145 6. பெப்ரவரி 1971 தங்கைக்காக ஜுபிடர் ஆர்ட்ஸ் மூவீஸ்
146 5. மார்ச் 1971 அருணோதயம் முக்தா ஃபிலிம்ஸ்
147 26. மார்ச் 1971 குலமா குணமா ஆசம் ஆர்ட்ஸ்
148 14. ஏப்ரல் 1971 பிராப்தம் ஸ்ரீ சாவித்திரி புரொடக்சன்ஸ்
149 14. ஏப்ரல் 1971 சுமதி என் சுந்தரி மாது ராம் குமார் ஃபிலிம்ஸ்
150 3. சூலை 1971 சவாலே சமாளி மல்லியம் புரொடக்சன்ஸ் 150 ஆவது திரைப்படம்
151 22. சூலை 1971 தேனும் பாலும் கஸ்தூரி ஃபிலிம்ஸ்
152 14. ஆகத்து 1971 மூன்று தெய்வங்கள் ஸ்ரீ புவனேஸ்வரி மூவீஸ்
153 18. அக்டோபர் 1971 பாபு சினி பாரத்
154 26. சனவரி 1972 ராஜா சுஜாதா சினி ஆர்ட்ஸ்
155 11. மார்ச் 1972 ஞான ஒளி அந்தோனி ஜேயார் மூவீஸ் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது
156 6. மே 1972 பட்டிக்காடா பட்டணமா அருண் பிரசாத் மூவீஸ்
157 15. சூலை 1972 தர்மம் எங்கே சாந்தி ஃபிலிம்ஸ்
158 26. ஆகத்து 1972 தவப்புதல்வன் முக்தா ஃபிலிம்ஸ்
159 29. அக்டோபர் 1972 வசந்த மாளிகை விஜயா & சுரேஸ் கம்பைன்ஸ்
160 7. திசம்பர் 1972 நீதி சுஜாதா சினி ஆர்ட்ஸ்
161 24. மார்ச் 1973 பாரத விலாஸ் கோபால் சினி பாரத்
162 31. மார்ச் 1973 ராஜ ராஜ சோழன் ராஜ ராஜ சோழன் ஆனந்த் மூவீஸ்
163 15. சூன் 1973 பொன்னூஞ்சல் கோமதி சங்கர் பிக்சர்ஸ்
164 15. சூலை 1973 எங்கள் தங்க ராஜா ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ்
165 25. அக்டோபர் 1973 கௌரவம் வியட்நாம் மூவீஸ் சிறந்த தமிழ் நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது
166 7. திசம்பர் 1973 மனிதரில் மாணிக்கம் வசந்த் மூவீஸ்
167 22. திசம்பர் 1973 ராஜபார்ட் ரங்கதுரை ரங்கதுரை சித்திரமாலா கம்பைன்ஸ்
168 26. சனவரி 1974 சிவகாமியின் செல்வன் ஜெயந்தி ஃபிலிம்ஸ்
169 7. மார்ச் 1974 தாய் பாபு மூவீஸ்
170 14. ஏப்ரல் 1974 வாணி ராணி விஜயா புரொடக்சன்ஸ்
171 1. சூன் 1974 தங்கப்பதக்கம் எஸ். பி. சௌத்ரி சிவாஜி புரொடக்சன்ஸ்
172 21. ஆகத்து 1974 என் மகன் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
173 13. நவம்பர் 1974 அன்பைத்தேடி முக்தா ஃபிலிம்ஸ்
174 11. சனவரி 1975 மனிதனும் தெய்வமாகலாம் விஜயவேல் ஃபிலிம்ஸ்
175 11. ஏப்ரல் 1975 அவன்தான் மனிதன் ராசி எண்டர்பிரைசஸ் 175 ஆவது திரைப்படம்
176 2. ஆகத்து 1975 மன்னவன் வந்தானடி ஜேயார் மூவீஸ்
177 29. சூலை 1975 அன்பே ஆருயிரே அமுதம் பிக்சர்ஸ்
178 2. நவம்பர் 1975 டாக்டர் சிவா சினி பாரத்
179 2. நவம்பர் 1975 வைர நெஞ்சம் சித்ராலயா
180 6. திசம்பர் 1975 பாட்டும் பரதமும் அருண் பிரசாத் மூவீஸ்
181 26. சனவரி 1976 உனக்காக நான் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
182 10. ஏப்ரல் 1976 கிரஹபிரவேசம் ப்ராஸ்பரிட்டி பிக்சர்ஸ்
183 6. மே 1976 சத்யம் ஸ்ரீ சண்முகமணி ஃபிலிம்ஸ்
184 25. சூன் 1976 உத்தமன் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ்
185 22. அக்டோபர் 1976 சித்ரா பௌர்ணமி ஸ்ரீ புவனேஸ்வரி மூவீஸ்
186 15. திசம்பர் 1976 ரோஜாவின் ராஜா என். வி. ஆர். பிக்சர்ஸ்
187 14. சனவரி 1977 அவன் ஒரு சரித்திரம் கோமதி சங்கர் பிக்சர்ஸ்
188 26. சனவரி 1977 தீபம் சுரேஸ் ஆர்ட்ஸ்
189 28. மே 1977 இளைய தலைமுறை யோகசித்ரா
190 7. அக்டோபர் 1977 நாம் பிறந்த மண் விஜயா ஆர்ட்ஸ் ஜெமினி கணேசனோடு சேர்ந்து நடித்த கடைசிப் படம்
191 10. நவம்பர் 1977 அண்ணன் ஒரு கோயில் சிவாஜி புரொடக்சன்ஸ்
192 26. சனவரி 1978 அந்தமான் காதலி முக்தா ஃபிலிம்ஸ்
193 4. மார்ச் 1978 தியாகம் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
194 19. மார்ச் 1978 என்னைப்போல் ஒருவன் ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ்
195 12. மே 1978 புண்ணிய பூமி என். வி. ஆர். பிக்சர்ஸ்
196 16. சூன் 1978 ஜெனரல் சக்ரவர்த்தி விஜயவேல் ஃபிலிம்ஸ்
197 27. அக்டோபர் 1978 தச்சோலி அம்பு நவோதயா ஸ்டூடியோ மலையாளம்
198 30. அக்டோபர் 1978 பைலட் பிரேம்நாத் சினி இந்தியா புரொடக்சன்ஸ்
199 16. திசம்பர் 1978 ஜஸ்டிஸ் கோபிநாத் வள்ளி மணாளன் பிக்சர்ஸ்
200 27. சனவரி 1979 திரிசூலம் ராஜசேகர்
சங்கர்
குரு சிவாஜி புரொடக்சன்ஸ் 200 ஆவது திரைப்படம்
3 வேடங்களில் நடித்த மூன்றாவதும் கடைசியுமான திரைப்படம்
201 6. ஏப்ரல் 1979 கவரிமான் ராஜண்ணா எண்டர்பிரைசஸ்
202 3. மே 1979 நல்லதொரு குடும்பம் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
203 21. சூலை 1979 இமயம் முக்தா ஃபிலிம்ஸ்
204 10. ஆகத்து 1979 நான் வாழவைப்பேன் ரவி வள்ளிநாயகி ஃபிலிம்ஸ்
205 19. அக்டோபர் 1979 பட்டாகத்தி பைரவன் ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ்
206 8. திசம்பர் 1979 வெற்றிக்கு ஒருவன் விஜயபாஸ்கர் ஃபிலிம்ஸ்
1980–1989
தொடர்
வரிசை
எண் வெளியான நாள் திரைப்படம் கதாபாத்திரம் தயாரிப்பு குறிப்புகள்
207 26. சனவரி 1980 ரிஷிமூலம் சந்தோஷ் எஸ். எஸ். கே. ஃபிலிம்ஸ்
208 26. ஏப்ரல் 1980 தர்மராஜா விஜயவேல் ஃபிலிம்ஸ் [எம் ஏ திருமுகம் இயக்கிய ஒரே சிவாஜி படம்] 209 16. மே 1980 எமனுக்கு எமன் லட்சுமி நரசிம்மா பிக்சர்ஸ் இரட்டை வேடம்
211 6. நவம்பர் 1980 விஸ்வரூபம் பத்மாலயா இரட்டை வேடம்
212 14. சனவரி 1981 மோகனப் புன்னகை சாரதி மோஷன் பிக்சர்ஸ்
213 21. பெப்ரவரி 1981 சத்ய சுந்தரம் ஸ்ரீ பாலகிருஷ்ணா புரொடக்சன்ஸ்
214 24. ஏப்ரல் 1981 அமரகாவியம் விஸ்வநாதன் கம்பைன்ஸ்
215 1. மே 1981 கல்தூண் எஸ். எஸ். கே. ஃபிலிம்ஸ் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில்
216 3. சூலை 1981 லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ராஜா மகாலட்சுமி ஆர்ட்ஸ் [டிரைவர் ராமுடு தெலுங்கு ரீமேக்]]
217 22. ஆகத்து 1981 மாடி வீட்டு ஏழை பூம்புகார் புரொடக்சன்ஸ் திரைக்கதை வசனம் கருணாநிதி
218 26. அக்டோபர் 1981 கீழ்வானம் சிவக்கும் வித்யா மூவீஸ் தமிழக அரசின் சிறந்த பட விருது பெற்றது
219 26. சனவரி 1982 ஹிட்லர் உமாநாத் பி. வி. டி. புரொடக்சன்ஸ்
220 5. பெப்ரவரி 1982 ஊருக்கு ஒரு பிள்ளை ஸ்ரீ கோமதி சங்கர் ஃபிலிம்ஸ்
221 6. பெப்ரவரி 1982 வா கண்ணா வா சிவாஜி புரொடக்சன்ஸ்
222 25. பெப்ரவரி 1982 கருடா சௌக்கியமா ரேவதி கம்பைன்ஸ்
223 14. ஏப்ரல் 1982 சங்கிலி அருண் சுஜாதா கம்பைன்ஸ் பிரபு அறிமுகம். வில்லன் வேடத்தில்
224 7. மே 1982 வசந்தத்தில் ஒரு நாள் வீனஸ் ஆர்ட்ஸ்
225 21. மே 1982 தீர்ப்பு சுஜாதா சினி ஆர்ட்ஸ் 225 ஆவது திரைப்படம்
226 24. சூன் 1982 நிவுரு கப்பின நிப்பு ஜெமினி மூவீஸ் தெலுங்கு
227 3. செப்டம்பர் 1982 தியாகி பத்மாலயா
228 1. அக்டோபர் 1982 துணை பிரகாஷ் பிக்சர்ஸ்
229 14. நவம்பர் 1982 பரீட்சைக்கு நேரமாச்சு வித்யா மூவீஸ் ஒய் ஜி பியின் மேடை நாடகம்,
230 14. நவம்பர் 1982 ஊரும் உறவும் ராஜா மகாலட்சுமி ஆர்ட்ஸ்
231 10. திசம்பர் 1982 நெஞ்சங்கள் வனிதா ஃபிலிம் புரொடக்சன்ஸ் நடிகர் விஜயகுமார் தயாரிப்பு
232 14. சனவரி 1983 பெஜவாட பெபுலி ஸ்ரீ விஜயராம பிக்சர்ஸ் தெலுங்கு
233 26. சனவரி 1983 நீதிபதி சுரேஸ் ஆர்ட்ஸ்
234 12. ஏப்ரல் 1983 இமைகள் விவேகானந்த பிக்சர்ஸ் சர்க்யூட்
235 16. சூன் 1983 சந்திப்பு சிவாஜி புரொடக்சன்ஸ்
236 12. ஆகத்து 1983 சுமங்கலி அலங்கார் ஃபிலிம்ஸ்
237 24. செப்டம்பர் 1983 மிருதங்க சக்கரவர்த்தி பைரவி ஃபிலிம்ஸ்
238 4. நவம்பர் 1983 வெள்ளை ரோஜா (திரைப்படம்) ஃபிலிம்கோ ஸ்ரீ ராஜேஸ்வரி க்ரியேசன்ஸ் சிவாஜி கடைசியாக நடித்த இரட்டை வேடத்தில் நடித்த படம்
239 14. சனவரி 1984 திருப்பம் கே. ஆர். ஜி. ஃபிலிம் சர்க்யூட்
240 17. பெப்ரவரி 1984 சிரஞ்சீவி குருராம் மூவீஸ்
241 16. மார்ச் 1984 தராசு ராஜகணபதி ஃபிலிம்ஸ்
242 14. ஏப்ரல் 1984 வாழ்க்கை காயத்ரி ஃபிலிம்ஸ்
243 26. மே 1984 சரித்திர நாயகன் இராமகிருஷ்ண சினி ஸ்டூடியோஸ்
244 30. சூன் 1984 சிம்ம சொப்பனம் எஸ். எஸ். கே. ஃபிலிம்ஸ்
245 15. ஆகத்து 1984 எழுதாத சட்டங்கள் சிவசங்கர் கிரியேசன்ஸ்
246 14. செப்டம்பர் 1984 இருமேதைகள் முக்தா மூவீஸ்
247 14. செப்டம்பர் 1984 தாவணிக் கனவுகள் பிரவீணா ஃபிலிம் சர்க்யூட் கே. பாக்யராஜ் இயக்கத்தில்..
248 23. அக்டோபர் 1984 வம்ச விளக்கு ரத்னா மூவீஸ்
249 26. சனவரி 1985 பந்தம் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
250 8. மார்ச் 1985 நாம் இருவர் ஏவி. எம். புரொடக்சன்ஸ் 250 ஆவது திரைப்படம்
251 23. மார்ச் 1985 படிக்காத பண்ணையார் கற்பகலட்சுமி பிக்சர்ஸ் கண் கண்ட தெய்வம் 1967ல் கே எஸ் ஜி இயக்குனர் மீண்டும் அதே கதை அதே இயக்குனர். நடிகர்கள் மட்டும் வேறு
252 13. ஏப்ரல் 1985 நீதியின் நிழல் சிவாஜி புரொடக்சன்ஸ்
253 3. மே 1985 நேர்மை கே. ஆர். ஜி. ஃபிலிம் சர்க்யூட்
254 15. ஆகத்து 1985 முதல் மரியாதை மலைச்சாமி மனோஜ் கிரியேசன்ஸ் சிறந்த தமிழ் நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது°°பாரதிராஜா இயக்கத்தில் முதல் முறையாக]]
255 20. செப்டம்பர் 1985 ராஜரிஷி விஸ்வாமித்திர முனிவர் பைரவி ஃபிலிம்ஸ் ஒரு கோடி பட்ஜெட்
256 11. நவம்பர் 1985 படிக்காதவன் ஸ்ரீ ஈஸ்வரி புரொடக்சன்ஸ் நடிகர் ரஜினிகாந்த் உடன் மூன்றாவது படம்
257 10. சனவரி 1986 சாதனை பிரகாஷ் புரொடக்சன்ஸ்
258 26. சனவரி 1986 மருமகள் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
259 7. மார்ச் 1986 ஆனந்தக் கண்ணீர் சிவாஜி புரொடக்சன்ஸ்
260 11. ஏப்ரல் 1986 விடுதலை இன்ஸ்பெக்டர் ராஜசிங்கம் சுஜாதாஸ்
261 16. சூலை 1986 தாய்க்கு ஒரு தாலாட்டு கே. ஆர். ஜி. ஃபிலிம் சர்க்யூட் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாட்டிய பேரொளி மீண்டும் ஜோடி
262 1. நவம்பர் 1986 லட்சுமி வந்தாச்சு ஏரீஸ் சினி ஆர்ட்ஸ்
263 12. திசம்பர் 1986 மண்ணுக்குள் வைரம் மதர்லேண்ட் பிக்சர்ஸ்
264 14. சனவரி 1987 ராஜ மரியாதை கைசர் கிரியேசன்ஸ் கார்த்திக் இணைந்து நடிக்கும் முதல் கடைசி படம்
265 26. சனவரி 1987 குடும்பம் ஒரு கோவில் சுஜாதா சினி ஆர்ட்ஸ்
266 6. மார்ச் 1987 முத்துக்கள் மூன்று ஸ்ரீ பத்மம் புரொடக்சன்ஸ் [சத்யராஜ் ஹீரோவாக சிவாஜி உடன்]]
267 14. ஏப்ரல் 1987 வீரபாண்டியன் பிரகாஷ் பிக்சர்ஸ் விஜயகாந்த் சிவாஜி உடன் முதல் கடைசி படம்
268 16. மே 1987 அன்புள்ள அப்பா ஏவி. எம். புரொடக்சன்ஸ்
269 ??.05.1987 விஸ்வநாத நாயக்குடு பத்மாலயா & அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தெலுங்கு
270 14. ஆகத்து 1987 அக்னி புத்ருடு அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தெலுங்கு
271 28. ஆகத்து 1987 கிருஷ்ணன் வந்தான் எஸ். எல். எஸ். புரொடக்சன்ஸ் தேங்காய் சீனிவாசன் தயாரிப்பு, கே ஆர் விஜயா இணைந்து நடித்த கடைசிப் படம்]]
272 28. ஆகத்து 1987 ஜல்லிக்கட்டு ராம் பிரகாஷ் சீதாலட்சுமி ஆர்ட் ஃபிலிம்ஸ் சத்யராஜ் மீண்டும் மணிவண்ணன் இயக்குனர்]]
273 20. நவம்பர் 1987 தாம்பத்யம் கல்யாணி சினி ஆர்ட்ஸ் அம்பிகா ராதா ஜோடி
274 2. செப்டம்பர் 1988 என் தமிழ் என் மக்கள் சிவாஜி ஃபிலிம்ஸ் அரசியல் கட்சி தொடங்கிய வெளியானது
275 10. திசம்பர் 1988 புதிய வானம் டி. ஐ. ஜி. பாண்டித்துரை சத்யா மூவீஸ் 275 ஆவது திரைப்படம்
1990–1999
தொடர்
வரிசை
எண் வெளியான நாள் திரைப்படம் கதாபாத்திரம் தயாரிப்பு குறிப்புகள்
276 11. சனவரி 1991 ஞானப் பறவை சிவாஜி யாகவா புரொடக்சன்ஸ் சென்னையில் யாகவா முனிவர் என்பவர், உண்மை கதை
277 13. மார்ச் 1992 நாங்கள் சதுர்வேதி அரிஃபா புரொடக்சன்ஸ்
278 23. மே 1992 சின்னமருமகள் கே. ஆர். எண்டர்பிரைசஸ்
279 14. ஆகத்து 1992 முதல் குரல் விக்டரி மூவீஸ் ஆக்சன் கிங் அர்ஜூன் இணைந்து
280 25. அக்டோபர் 1992 தேவர் மகன் பெரிய தேவர் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் தேசிய திரைப்பட விருது
281 13. நவம்பர் 1993 பாரம்பரியம் திலகம் ஃபிலிம்ஸ் பி. சரோஜாதேவி
282 14. ஏப்ரல் 1995 பசும்பொன் துரைராசு தேவர் ஆனந்தி ஃபிலிம்ஸ்
283 4. சூலை 1997 ஒன்ஸ்மோர் செல்வம் ஸ்ரீ கணேஷ் விஷன் பி. சரோஜாதேவி கடைசியாக இணைந்து நடித்த படம்
284 13. செப்டம்பர் 1997 ஒரு யாத்ராமொழி அனுக்கிரகா சினி ஆர்ட்ஸ் மலையாளம் மோகன்லால் உடன், சிவாஜி தமிழ் பேசியே நடித்திருப்பார்
285 28. ஆகத்து 1998 என் ஆசை ராசாவே பிரமிட் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் ராதிகா ஜோடி, முரளி
286 15. சனவரி 1999 மன்னவரு சின்னவரு கலைப்புலி எஸ். தாணு [[அர்ஜுன் 100வது படம்
287 10. ஏப்ரல் 1999 படையப்பா படையப்பாவின் தந்தை அருணாச்சலா சினி கிரியேசன்ஸ் ரஜினி ஐந்தாவது முறையாக இணைந்து நடித்த படம்
288 17. செப்டம்பர் 1999 பூப்பறிக்க வருகிறோம் ஐஸ்வர்யா ஃபிலிம் மேக்கர்ஸ்
நடிகர் அஜய்-மாளவிகா அறிமுகம்.
கௌரவ நடிகராக நடித்த திரைப்படங்கள்
வரிசை எண் வெளியான நாள் திரைப்படம் தயாரிப்பு மொழி
01 3. ஆகத்து 1956 மர்ம வீரன் மெஹ்பூப் ஸ்டூடியோ தமிழ்
02 31. சனவரி 1958 எங்கள் குடும்பம் பெரிசு பத்மினி பிக்சர்ஸ் தமிழ்
03 14. ஏப்ரல் 1959 தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ் தமிழ்
04 1. சூலை 1960 பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்யம் பத்மினி பிக்சர்ஸ் தெலுங்கு
05 26. சூலை 1960 மக்கள ராஜ்ய பத்மினி பிக்சர்ஸ் கன்னடம்
06 29. சூலை 1960 குழந்தைகள் கண்ட குடியரசு பத்மினி பிக்சர்ஸ் தமிழ்
08 1. பெப்ரவரி 1964 ராமதாசு வி. என். ஃபிலிம்ஸ் தெலுங்கு
09 3. ஏப்ரல் 1964 ஸ்கூல் மாஸ்டர் பத்மினி பிக்சர்ஸ் மலையாளம்
10 26. ஆகத்து 1966 தாயே உனக்காக ஸ்ரீ கமலாலயம் தமிழ்
11 25. மார்ச் 1973 பங்காரு பாபு ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் தெலுங்கு
12 5. சூலை 1973 பக்த துக்காராம் சாரதி ஸ்டூடியோஸ் தெலுங்கு
13 31. சனவரி 1975 சினிமா பைத்தியம் ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ் தமிழ்
14 12. ஆகத்து 1977 ஜீவன தீரளு மாருதி கம்பைன்ஸ் தெலுங்கு
15 25. ஆகத்து 1977 சாணக்ய சந்திரகுப்த ராமகிருஷ்ணா சினி ஸ்டூடியோஸ் தெலுங்கு
16 14. ஏப்ரல் 1978 வாழ்க்கை அலைகள் [3][4]
[5] பாரத் பிக்சர்ஸ் தமிழ்
17 12. ஏப்ரல் 1980 நட்சத்திரம் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தமிழ்
18 14. சனவரி 1983 உருவங்கள் மாறலாம் 3-ஆர்ஸ் கம்பைன்ஸ் தமிழ்
19 00.00.1996 ஸ்வர்ணசாமரம் வி. பி. கே. ஃபிலிம்ஸ் மலையாளம். வெளியிடப்படவில்லை

தெலுங்கு திரைப்படங்கள்

பெம்புடு கொடுக்கு (1953) .... மோகன் வேடம்
தால வன்சானி வீருடு (1957)
பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (1960)
பவித்ர பிரேமா (1962)
ராமதாசு (1964)
பங்காரு பாபு (1972)
பக்த துகாரம் (1973) .... சிவாஜி
சானக்ய சந்திரகுப்தா (1977)
விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
மலையாளத் திரைப்படங்கள்
ஒரு யாத்ர மொழி (1997)


நமநமத்து கிடந்த தமிழ் திரையுலகத்தை கர்ஜித்து ஓட வைத்த சிவாஜி கணேசன்.. நினைவு நாள் இன்று!

 காவிரி பெற்றெடுத்த பிறவிக் கலைஞர்களில் ஒருவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று. இன்றைய நாளில் அவரை நினைவுகூர்வதில் ஒன்இந்தியா பெருமை கொள்கிறது. சிவாஜி கணேசனுக்கு சின்ன வயதில் படிப்பில் நாட்டமே இல்லை. ஆனால் பிறவியிலேயே அசாத்தியமான இரண்டு திறமைகள் இருந்தன.
Read more about: sivajiganesan memorial day fans tribute சிவாஜிகணேசன்
நினைவு தினம் ரசிகர்கள் அஞ்சலி நமநமத்து கிடந்த தமிழ் திரையுலகத்தை கர்ஜித்து ஓட வைத்த சிவாஜி கணேசன்.. நினைவு நாள் இன்று!
நமநமத்து கிடந்த தமிழ் திரையுலகத்தை கர்ஜித்து ஓட வைத்த சிவாஜி கணேசன்.. நினைவு நாள் இன்று!..

எத்தனை பக்க வசனங்கள் இருந்தாலும், எத்தகைய தமிழாக இருந்தாலும், அவற்றை சிறிதும் பிசிறில்லாமல், நூற்றுக்கு நூறு சதம் முழுமையாக ஒப்புவிக்கும் பேராற்றல்தான் அவரது முன்னேற்றத்தின் முதல் பலமே. சுருக்கமாக சொன்னால், இப்போது கல்வி அமைப்பில் உள்ள உருப்போடும் திறன். வருடம் முழுவதும் படித்ததை உருபோட்டு அதை தேர்வில் மொத்தமாக தருவதில்தான் இன்றைய மாணவனின் எதிர்காலமே தீர்மானிக்கப்படுகிறது. சிவாஜி கணேசன் மட்டும் தனது உருப்போடும் திறனை கல்வியில் செலுத்தியிருந்தால் மிகச்சிறந்த கல்விமானாக திகழ்ந்திருப்பார்.
இரண்டாவது, சிறந்த நடிப்பாற்றல்!
நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக - உயிர் மூச்சாக - ஏற்றுக் கொண்டு மதித்து போற்றியவர் சிவாஜி கணேசன். கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பானது, அவரது எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றியது. சிவாஜி கணேசனை திரையுலகில் அறிமுகம் செய்ததிலும், கதாநாயகனாக உயர்த்தியதிலும் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு. 'பராசக்தி' படத்திற்கு பிறகு ஒரு புல்லைபோல் பிரவேசிக்க தொடங்கினார் சிவாஜி கணேசன். இதன்பிறகு புதுவெள்ளம் ஒன்று தமிழகம் முழுவதும் ஊடுருவி பாய தொடங்கியது. நமநமத்துக் கிடந்த தமிழ்த்திரையுலகம் சிவாஜியின் வருகைக்கு பின்னர் கர்ஜித்து எழுந்து ஓடத் தொடங்கியது.
மனதில் படிந்த சிவாஜி
சிவாஜியின் உடை, ஒப்பனை போன்றவைற்றை வைத்தே படத்தின் பெயர்களை எளிதாக கூறிவிடலாம், அந்த படத்தின் கதாபாத்திரத்தை விரைவாக இனம் கண்டுவிடலாம். ராணுவ வீரனா, அது பதிபக்தி, தொழிலதிபரா அது 'பாசமலர்', இஸ்லாமிய இளைஞனா, அது 'பாவமன்னிப்பு', பணச்செருக்கு தந்தையா அது 'பார் மகளே பார்', பாதிரியார் உடையா, அது 'வெள்ளைரோஜா'.. இப்படித்தான் சிவாஜி கணேசன் ரசிகர்களின் மனதில் பிரிக்க முடியாத அளவிற்கு படிந்துவிட்டார்.
சிவபெருமான் எப்படி இருப்பார்?
கட்டபொம்மனையோ, கர்ணனையோ, சிவபெருமானையோ நாம் நேரில் பார்த்ததில்லை. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்றுகூட நமக்கு தெரியாது? அதற்கு எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை. அதற்கு இனி ஒருகாலும் வாய்ப்பும் இல்லை. ஆனால் நமக்கு சிவாஜி கணேசனை தெரியும். அவர்கள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.
இமேஜ் பற்றி கவலையே இல்லை
சிவாஜிக்கு இமேஜ் பற்றியெல்லாம் கவலையெல்லாம் கிடையாது. இப்போதுள்ள ஹீரோக்களை போல, ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கவும், வீரதீர சாகசங்கள் செய்துஒரு ஹீரோவாகவே அவர்கள் கண்கள் முன்னால் உலா வரவேண்டும், இப்படியெல்லாம் யோசித்ததும் கிடையாது, அப்படி கதாபாத்திரங்கள்தான் வேண்டும் என்று அடம்பிடித்ததும் கிடையாது. நல்லவனோ, கெட்டவனோ, கூனோ, குருடோ, நொண்டியோ, முடமோ, காவல்துறை அதிகாரியோ, திருடனோ, எதுவானாலும் என்ன தயங்காமல் ஏற்று நிறைவாக நடித்து தந்தவர்.
எல்லாமே நவரத்தினங்கள்தான்
இதற்கு காரணம் சுய இமேஜைவிட நடிப்பின்மீது அவருக்கு இருந்த தீவிரமான ஈடுபாடுதான். ஒரு நடிகன் எந்த வேடமாக இருந்தாலும் அதை தயங்காமல் ஏற்று செய்வதே நிஜமான கலைஞன் என்பதில் அவர் பிடிவாதமாகவும் உறுதியாகவும் இருந்தார். சிவாஜி கணேசனின் நடிப்புக்கு எந்த படத்தை சொல்ல, எதை விட? எல்லாமே முத்துக்கள்தான்.. எல்லாமே வைரங்கள்தான்.. எல்லாமே மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட நவரத்தினங்கள்தான்... இந்த படத்தில்தான் அவர் நன்றாக நடித்திருப்பார் என்று பெயர்சொல்லி பட்டியலிட நான் விரும்பவில்லை.
அவயங்கள்கூட பேசும்
சிவாஜி ஒரு பிறவிக்கலைஞர். தலைமுடி முதல் கால் விரல்நுனி வரை அனைத்துமே நமக்கு கதை சொல்லும். அவர் வாய்திறந்து பேசவே தேவையில்லை... கணைக்கும் சிம்மக்குரலும், துடிக்கும் உதடுகளும், உயர்நோக்கும் புருவங்களும், விம்மும் கன்னங்களும் என ஒவ்வொரு அவயமும் நடிப்பை கொண்டு வந்து நம் கைகளில் அள்ள அள்ள கொடுத்துவிட்டு இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? என கேட்டுவிட்டு போகும். இவ்வளவு கூட வேணாம்.. அவரது நடை ஒன்று போதுமே.. 'பார்த்தால் பசிதீரும்' படத்தில் தாங்கி தாங்கி நடப்பதாகட்டும் திருவிளையாடலில் மீனவ வேடமாகட்டும்.. 'திருவருட்செல்வர்' படத்தில் பழுத்த சிவனடியாராகட்டும்.. ஒவ்வொரு நடையிலும் அவரத தன்னம்பிக்கைதான் வெளிப்படுகிறது.
வேறு யாரால் முடியும்?
தன்னுடைய இறுதிகால கட்ட படங்களில் அவரது பழுத்த அனுபவம் பளிச்சென்றே தெரியும். முதல்மரியாதை, தேவர்மகன், பசும்பொன் ஆகியவை. குறிப்பாக, முதல்மரியாதை படம். ஆயிரமாயிரம் ஆசைகளை உள்ளத்தில் தேக்கி வைத்து, பரிதவித்து, அதேநேரத்தில் ஆபாசமாக, விரசமாக இல்லாமல் கண்ணியத்துடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிவாஜிகணேசனை தவிர யாரால் முடியும்?
தமிழன்னை பெற்ற தவப்புதல்வன்
கலையுலகிற்காக தமிழன்னை பெற்றுத்தந்த தவப்புதல்வன்தான் சிவாஜிகணேசன். உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புதக் கலைஞன்தான் சிவாஜிகணேசன். அனைத்துவித உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித்திரையில் கொட்டி வண்ணக் கோலம் படைத்தவர்தான் சிவாஜி கணேசன். இந்த திரையுலகம் பூமிப்பந்தில் வாழும்வரை, சிவாஜிகணேசனின் புகழ் என்றும் கலைவானில் ஜொலித்துக் கொண்டே இருக்கும்.

புதன், 18 ஜூலை, 2018

நடிகை மாளவிகா பிறந்த நாள் ஜூலை 19, 1979.


நடிகை மாளவிகா பிறந்த நாள் ஜூலை 19, 1979.

ஸ்வேதா கோனுர் (பிறப்பு: சூலை 19, 1979) என்ற இயற்பெயரைக் கொண்ட
மாளவிகா எண்ட் லவலீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட
நடிகையானார் . இவர் தமிழ் , இந்தி ,
தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால்
தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார்.


2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த
பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில்
கமலுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டில்
சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார். இவர் ரோஜா வனம் , வெற்றிக் கொடி கட்டு ,
சந்திரமுகி , வியாபாரி , திருட்டு பயலே ஆகிய படங்களில் நடத்துள்ளார்.


மாளவிகா
இயற் பெயர் சுவேதா கோனுர்
பிறப்பு சூலை 19, 1979 (அகவை 39)
பெங்களூர் , இந்தியா
நடிப்புக் காலம் 1999 - தற்போதுவரை

செவ்வாய், 17 ஜூலை, 2018

கவிஞர் வாலி நினைவு தினம் ஜூலை 18 . 2013.


கவிஞர் வாலி நினைவு தினம் ஜூலை 18 . 2013.

கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய
பாண்டவர் பூமி , கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.
ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம் ,
பார்த்தாலே பரவசம் , பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின்
பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பிறப்பும் வளர்ப்பும்
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட[1] வாலி திருச்சி மாவட்டம்
திருப்பராய்துறையில் பிறந்து,
திருவரங்கத்தில் வளர்ந்தார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான். [2] தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி . அன்று
திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால்
வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது. [3][4]
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா [5][6]
வாலி இறப்பு
மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார். [7][8]
வாலி பெயர்க்காரணம்
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த
மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார். [9][10]
எழுதிய நூல்கள்
சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் [1] .அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில்
கமல்ஹாசன் , இயக்குநர் ஷங்கர் , சூர்யா , பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். [11]
இவற்றையும் பார்க்கவும்
1967ல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள்.
சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில் கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறையில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள். [12]
தளபதி என்ற பெயருக்கும் வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி
ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!.
குறிப்பிடத்தக்க பாடல்களில் சில
பாடல் படம் வருடம்
" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " ஆயிரத்தில் ஒருவன் 1968
" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " தீர்க்க சுமங்கலி 1974
" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " இரு மலர்கள் 1967
நான் ஆணையிட்டால் எங்க வீட்டுப் பிள்ளை (1965)
காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் (1965)
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- சந்திரோதயம் (1966)
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - எதிர்நீச்சல் (1968)
இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (1968)
அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968)
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- இருகோடுகள் (1969)
ஆண்டுக்கு ஆண்டு சுபதினம் (1969)
மதுரையில் பறந்த மீன்கொடியை- பூவா தலையா (1969)
விருதுகள்
பத்மஸ்ரீ விருது-2007
1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.
வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர் [13] .
1970 – எங்கள் தங்கம்
1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்
1989 – வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள்
1990 – கேளடி கண்மணி
2008 – தசாவதாரம்
எழுதிய திரைப்பாடல்கள்
கீழே காண்பது வாலி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இது முழுமையான பட்டியல் அல்ல.
ஆண்டு திரைப்படம் பாடல்(கள்) பிற குறிப்புகள்
2014 காவியத் தலைவன் "அல்லி அர்ச்சுனா" கடைசி திரைப்படம்
திருடன் போலீஸ் "மூடு பனிக்குள்"
யான் "ஏ லம்பா லம்பா"
ராமானுஜன் "நாராயணா"
நான் தான் பாலா "திரு வாய்"
கோச்சடையான் "மெதுவாகத்தான்"
பண்ணையாரும் பத்மினியும் "எனக்காக பிறந்தாயோ"
"பேசுறேன் பேசுறேன்"
"உனக்காக பிறந்தேனோ"
2013 என்றென்றும் புன்னகை "கடல் நான்தான்"
பிரியாணி "நானா நானா"
"மிஸ்சிப்பி"
மரியான் "சொனாபரியா"
"நேற்று அவள்"
தில்லு முல்லு 2014 "கை பேசி"
எதிர்நீச்சல் "எதிர்நீச்சல்"
"வெளிச்சப் பூவே"
உதயம் தே நெ 4 " இன்றோடு தடைகள்"
அலெக்ஸ் பாண்டியன் "ஒன்னாம் கிளாஸ்"
கண்ணா லட்டு தின்ன ஆசையா "ஏ உன்னைத்தான்"
"பர்த் டே"
"டூயட் சாங்"
2012 போடா போடி "அப்பன் மவனே வாடா"
மிரட்டல்
தடையறத் தாக்க
ஆதலால் காதல் செய்வீர் "தப்புத் தண்டா"
2011 ஒஸ்தி "கலாசலா"
"ஒஸ்தி மாமே"
மங்காத்தா "மச்சி ஓப்பன் தி பாட்டில்"
"நண்பனே"
வெடி "காதலிக்க பெண் ஒருத்தி", "இச்சு இச்சு இச்சுக்கொடு"
சட்டப்படி குற்றம்
ஆடு புலி
உயர்திரு 420
அய்யன் "விடுதலைக் குயில் நான்"
மாவீரன் "பொன்னான கோழிப் பொண்ணு"
"வண்டினத்தைச் சும்மா சும்மா"
"ஆசை ஆசை"
கண்டேன் "யாவருக்கும் தலைவன்"
எங்கேயும் காதல் "தீ இல்லை"
"நங்கை நீதானே செங்கை"
பொன்னர் சங்கர்
2010 பாணா காத்தாடி "தாக்குதே கண் தாக்குதே"
நினைவில் நின்றவள் அனைத்து பாடல்களும்
சுறா "வெற்றிக்கொடி ஏத்து"
தீராத விளையாட்டுப் பிள்ளை "தீராத விளையாட்டுப் பிள்ளை"
அகராதி
வாலிபன் சுற்றும் உலகம்
லீலை
தொட்டுப்பார்
கோவா "ஊரு நல்ல ஊரு"
"அடிடா நையாண்டிய"
"கோவா"
"இடை விழி"
குரு சிஷ்யன் (2010)
திரைப்படப் பட்டியல்
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
1950களில்
1. 1958- அழகர் மலைக் கள்ளன் (முதல் திரைப்படம்)
ஆண்டு முதல் திரைப்படம் பாடல் பாடியவர் இசையமைப்பாளர் குறிப்புகள்
1958 அழகர் மலைக் கள்ளன் நிலவும் தாரையும் நீயம்மா-இந்த உலகம் ஒருநாள் உனதம்மா பி சுசிலா கோபாலம் முதல் பாடல்
1960களில்
1. 1961- " சந்தரகாந்த்"
2. 1961- " நல்லவன் வாழ்வான்"
3. 1963- " இதயத்தில் நீ"
4. 1963- " கற்பகம் "
5. 1963- " எதையும் தாங்கும் இதயம் "
6. 1964- " தாயின் மடியில்"
7. 1964- " தெய்வத்தாய்"
8. 1964- " படகோட்டி "
9. 1965- " பஞ்சவர்ணக்கிளி "
10. 1965- " வெண்ணிற ஆடை"
11. 1965- " பணம் படைத்தவன் "
12. 1965- " தாழம்பூ "
13. 1965- " அன்புக்கரங்கள் "
14. 1965- " கலங்கரை விளக்கம் "
15. 1965- " ஆயிரத்தில் ஒருவன் "
16. 1965- " ஆசை முகம் "
17. 1965- " நீ"
18. 1965- " எங்கள் வீட்டு பிள்ளை "
19. 1965- " காக்கும் கரங்கள் "
20. 1965- " குழந்தையும் தெய்வமும் "
21. 1966- " சின்னஞ்சிறு உலகம் "
22. 1966- " மோட்டார் சுந்தரம் பிள்ளை "
23. 1966- " நாடோடி"
24. 1966- " அன்பே வா "
25. 1966- " சந்தரோதயம் "
26. 1966- " மேஜர் சந்தரகாந்த்"
27. 1966- " தாலி பாக்கியம் "
28. 1966- " நான் ஆணையிட்டால் "
29. 1966- " பெற்றால்தான் பிள்ளையா "
30. 1967- " பேசும் தெய்வம் "
31. 1967- " அவள் "
32. 1967- " செல்வமகள்"
33. 1967- " அதே கண்கள் "
34. 1967- " அரச கட்டளை "
35. 1967- " காவல்காரன் "
36. 1967- " நெஞ்சிருக்கும் வரை "
37. 1967- " இருமலர்கள் "
38. 1968- " உயர்ந்த மனிதன் "
39. 1968- " ஒளி விளக்கு "
40. 1968- " எதிர்நீச்சல் "
41. 1968- " ஜீவனாம்சம் "
42. 1968- " கல்லும் கனியாகும் "
43. 1968- " கண்ணன் என் காதலன் "
44. 1968- " கலாட்டா கல்யாணம் "
45. 1968- " குடியிருந்த கோயில் "
46. 1969- " நம் நாடு (1969 திரைப்படம்) "
47. 1969- " மன்னிப்பு"
48. 1969- " நில் கவனி காதலி"
49. 1969- " சுபதினம் "
50. 1969- " இருகோடுகள் "
51. 1969- " அடிமைப்பெண்"
52. 1969- " கன்னிப்பெண்"
53. 1969- " பூவா தலையா "
1970-1974
1. 1970- " மாணவன் "
2. 1970- " தலைவன் "
3. 1970- " என் அண்ணன் "
4. 1970- " தேடிவந்த மாப்பிள்ளை "
5. 1970- " மாட்டுக்கார வேலன் "
6. 1970- " எங்கள் தங்கம் "
7. 1971- " நூற்றுக்கு நூறு "
8. 1971- " தேனும் பாலும் "
9. 1971- " குமரிக்கோட்டம்"
10. 1971- " ஒரு தாய் மக்கள்"
11. 1971- " ரிக்ஷாக்காரன் "
12. 1971- " நீரும் நெருப்பும் "
13. 1971- " முகமது பின் துக்ளக் "
14. 1971- " பாபு"
15. 1972- " ராமன் தேடிய சீதை "
16. 1972- " வெள்ளி விழா "
17. 1972- " இதய வீணை "
18. 1972- " நான் ஏன் பிறந்தேன் "
19. 1972- " அன்னமிட்ட கை "
20. 1972- " பிள்ளையோ பிள்ளை "
21. 1973- " சொல்லத்தான் நினைக்கிறேன் "
22. 1973- " சூரியகாந்தி"
23. 1973- " உலகம் சுற்றும் வாலிபன் "
24. 1973- " அரங்கேற்றம்"
25. 1973- " பாரத விலாஸ் "
26. 1974- " தீர்க்க சுமங்கலி"
27. 1974- " சிரித்து வாழ வேண்டும்"
28. 1974- " உரிமைக்குரல் "
29. 1974- " நேற்று இன்று நாளை "
30. 1974- " சிவகாமியின் செல்வன்"
31. 1974- " அத்தையா மாமியா "
32. 1974- கலியுகக் கண்ணன்
1975-1979
1. 1975- " புதுவெள்ளம்"
2. 1975- " அவளும் பெண்தானே"
3. 1975- " பட்டிக்காட்டு ராஜா "
4. 1975- " அன்பே ஆருயிரே "
5. 1975- " அபூர்வ ராகங்கள் "
6. 1975- " இதயக்கனி "
7. 1975- " டாக்டர் சிவா"
8. 1975- " நினைத்ததை முடிப்பவன் "
9. 1975- " தேன்சிந்துதே வானம் "
10. 1976- " ஒரு கொடியில் இரு மலர்கள் "
11. 1976- " ஊருக்கு உழைப்பவன்"
12. 1976- " நீதிக்கு தலைவணங்கு "
13. 1976- " நாளை நமதே "
14. 1976- " பத்ரகாளி "
15. 1977- " பெண் ஜென்மம்
16. 1977- " இன்று போல் என்றும் வாழ்க "
17. 1977- " நவரத்தினம் "
18. 1977- " மீனவ நண்பன் "
19. 1977- " ஆறு புஷ்பங்கள் "
20. 1978- " மாங்குடி மைனர் "
21. 1978- " வணக்கத்திற்குரிய காதலியே "
22. 1978- " பைலட் பிரமநாத் "
23. 1978- " சிகப்பு ரோஜாக்கள் "
24. 1978- " அச்சாணி"
25. 1978- " அவள் ஒரு அதிசயம்
26. 1978- " ஜஸ்டிஸ் கோபிநாத்"
27. 1978- " சதுரங்கம் "
28. 1978- " இளமை ஊஞ்சலாடுகிறது "
29. 1978- " சிட்டுக்குருவி "
30. 1978- மச்சானை பாத்தீங்களா
31. 1978- " வண்டிக்காரன் மகன் "
32. 1978- " அன்னப்பூரணி "
33. 1979- " லட்சுமி
34. 1979- " அன்னை ஒரு ஆலயம் "
35. 1979- " நான் வாழவைப்பேன் "
36. 1979- " அன்பே சங்கீதா "
37. 1979- " தர்மயுத்தம் "
38. 1979- " கடவுள் அமைத்த மேடை "
39. 1979- " அலாவுதீனும் அற்புதவிளக்கும் "
40. 1979- " நீயா "
41. 1979- " பட்டாகத்தி பைரவன் "
42. 1979- " இவர்கள் வித்தியாசமானவர்கள் "
43. 1979- " அழகே உன்னை ஆராதிக்கிறேன் "
1980-1984
1. 1980- " கண்ணில் தெரியும் கதைகள் "
2. 1980- " நிழல்கள் "
3. 1980- " ஒத்தையடி பாதையிலே "
4. 1980- " நட்சத்திரம்"
5. 1981- " மௌன கீதங்கள் "
6. 1981- " குடும்பம் ஒரு கதம்பம்"
7. 1981- " ஆணிவேர் "
8. 1981- " அக்னி சாட்சி "
9. 1981- " மணல்கயிறு "
10. 1982- " சிம்லா ஸ்பெஷல் "
11. 1982- " மூன்று முகம் "
12. 1982- " தூறல் நின்னு போச்சு "
13. 1982- " தனிக்காட்டு ராஜா "
14. 1982- " வாழ்வே மாயம் "
15. 1982- " பட்டணத்து ராஜாக்கள் "
16. 1982- " வா கண்ணா வா "
17. 1982- " தாய் முகாம்பிகை "
18. 1982- " சகலகலா வல்லவன் "
19. 1982- " துணை "
20. 1982- " கண்ணே ராதா"
21. 1982- " பரிட்சைக்கு நேரமாச்சு "
22. 1982- " நெஞ்சங்கள் "
23. 1982- " எங்கேயோ கேட்ட குரல்"
24. 1982- " கோபுரங்கள் சாய்வதில்லை "
25. 1982- " ரங்கா"
26. 1982- " தீர்ப்பு "
27. 1982- " வடமாலை "
28. 1983- " அந்த சில நாட்கள் "
29. 1983- " வெள்ளை ரோஜா "
30. 1983- " அடுத்த வாரிசு "
31. 1983- " சிவப்பு சூரியன் "
32. 1983- " தங்கமகன் "
33. 1983- " சந்திப்பு"
34. 1983- " சூரக்கோட்டை சிங்கக்குட்டி "
35. 1983- " நீதிபதி "
36. 1983- " சரணாலயம்"
37. 1983- " கோழி கூவுது "
38. 1983- " பாயும் புலி "
39. 1983- " தாய்வீடு"
40. 1983- " சுமங்கலி"
41. 1983- " தூங்காதே தம்பி தூங்காதே "
42. 1983- " மிருதங்க சக்கரவர்த்தி "
43. 1983- " சட்டம் "
44. 1984- " அன்பே ஓடி வா "
45. 1984- " வம்சா விளக்கு "
46. 1984- " மதுரை சூரன் "
47. 1984- " தாவணிக் கனவுகள் "
48. 1984- " தீர்ப்பு என் கையில் "
49. 1984- " கை கொடுக்கும் கை "
50. 1984- " வெள்ளை புறா ஒன்று "
51. 1984- " வீட்டுக்கொரு கண்ணகி "
52. 1984- " சத்தியம் நீயே "
53. 1984- " வைதேகி காத்திருந்தாள் "
54. 1984- " ஓசை "
55. 1984- " இரு மேதைகள்"
56. 1984- " விதி "
57. 1984- " சிம்ம சொப்பனம் "
58. 1984- " மெட்ராஸ் வாத்தியார்"
59. 1984- " அன்புள்ள ரஜினிகாந்த் "
60. 1984- " குழந்தை யேசு "
61. 1984- " நல்லவனுக்கு நல்லவன் "
62. 1984- " நல்ல நாள் "
63. 1984- " நாளை உனது நாள் "
64. 1984- " இது எங்க பூமி "
65. 1984- " குடும்பம்"
1985-1989
1. 1985- " ஆண்பாவம்"
2. 1985- " தென்றலே என்னை தொடு "
3. 1985- " ஸ்ரீ ராகவேந்திரா "
4. 1985- " ஒரு நல்லவன் ஒரு வல்லவன் "
5. 1985- " மனக்கணக்கு"
6. 1985- " குங்குமச்சிமிழ் "
7. 1985- "கீதாஞ்சலி"
8. 1985- " மங்கம்மா சபதம்"
9. 1985- " ஜப்பானில் கல்யாண ராமன் "
10. 1985- " படிக்காதவன் "
11. 1985- " கன்னிராசி"
12. 1985- " நீதியின் நிழல் "
13. 1985- " ராஜ ரிஷி"
14. 1985- " கெட்டி மேளம் "
15. 1985- " நான் சிவப்பு மனிதன் "
16. 1985- " பந்தம் "
17. 1985- " வேஷம்
18. 1985- " படிக்காத பண்ணையார் "
19. 1985- " நல்ல தம்பி "
20. 1985- " உயர்ந்த உள்ளம் "
21. 1985- " உதயகீதம் "
22. 1985- " இதய கோவில் "
23. 1985- " நாம் இருவர் "
24. 1985- " காக்கிசட்டை"
25. 1985- " கரையை தொடாத அலை௧ள் "
26. 1986- " மீண்டும் பல்லவி "
27. 1986- " கண்மணியே பேசு "
28. 1986- "கரிமேடு கருவாயன்
29. 1986- " நான் அடிமை இல்லை "
30. 1986- " எனக்கு நானே நீதிபதி "
31. 1986- " விடுதலை "
32. 1986- " அன்னை என் தெய்வம் "
33. 1986- " ஒரு இனிய உதயம் "
34. 1986- " சாதனை "
35. 1986- " மௌன ராகம் "
36. 1986- " மௌனம் கலைகிறது "
37. 1986- " ஆனந்த கண்ணீர்"
38. 1986- " நம்பினோர் கெடுவதில்லை "
39. 1986- " வசந்தராகம் "
40. 1986- " தர்மதேவதை "
41. 1986- " தர்ம பத்தினி "
42. 1986- " லட்சுமி வந்தாச்சு "
43. 1986- " உயிரே உனக்காக "
44. 1986- " சம்சாரம் அது மின்சாரம்"
45. 1986- " மருமகள்"
46. 1986- " மெல்லத் திறந்தது கதவு "
47. 1986- " நானும் ஒரு தொழிலாளி "
48. 1987- " முப்பெருந் தேவியர் "
49. 1987- " எங்க சின்ன ராசா "
50. 1987- " பாடு நிலாவே "
51. 1987- " பூமழை பொழியுது "
52. 1987- " குடும்பம் ஒரு கோயில் "
53. 1987- " ஊர்க்காவலன்"
54. 1987- நல்ல பாம்பு
55. 1987- " காவலன் அவன் கோவலன்"
56. 1987- " சிறைப்பறவை "
57. 1987- " அஞ்சாத சிங்கம்"
58. 1987- " வீர பாண்டியன் "
59. 1987- " இனிய உறவு பூத்தது "
60. 1988- " பூவுக்குள் பூகம்பம் "
61. 1988- " பெண்மணி அவள் கண்மணி"
62. 1988- " என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு "
63. 1988- " அண்ணா நகர் முதல் தெரு "
64. 1988- " குரு சிஷ்யன் "
65. 1988- " பொறுத்தது போதும் "
66. 1988- " இது நம்ம ஆளு "
67. 1988- " சத்யா"
68. 1988- " கலியுகம்"
69. 1988- " சொல்ல துடிக்குது மனசு"
70. 1988- " தர்மத்தின் தலைவன் "
71. 1988- " என் தமிழ் என் மக்கள் "
72. 1988- " தம்பி தங்க கம்பி "
73. 1988- " மணமகளே "
74. 1988- " சகாதேவன் மகாதேவன் "
75. 1988- " அக்னி நட்சத்திரம்"
76. 1988- " தாய்ப்பாசம் "
77. 1989- " புதுப்புது அர்த்தங்கள்"
78. 1989- " ஆராரோ ஆரிரரோ"
79. 1989- " ராஜநடை "
80. 1989- " ராஜாதி ராஜா "
81. 1989- " என்ன பெத்த ராசா"
82. 1989- " தர்மம் வெல்லும் "
83. 1989- " வருஷம் 16 "
84. 1989- " அபூர்வ சகோதரர்கள் "
85. 1989- " சிவா"
86. 1989- " வெற்றி விழா "
87. 1989- " பொன்மன செல்வன்"
88. 1989- " சோலை குயில்"
89. 1989- " ஒரே ஒரு கிராமத்திலே"
90. 1989- " வாத்தியார் வீட்டுப்பிள்ளை "
91. 1989- " எம்புருஷந்தான் எனக்கு மட்டுந்தான் "
1990-1994
1. 1990- " கேளடி கண்மணி "
2. 1990- " புது வசந்தம் "
3. 1990- " துர்கா "
4. 1990- " ஆரத்தி எடுங்கடி "
5. 1990- " தாலாட்டுப் பாடவா "
6. 1990- " அதிசயப் பிறவி "
7. 1990- " மைக்கேல் மதன காமராஜன்"
8. 1990- " புரியாத புதிர் "
9. 1990- " வாழ்க்கைச் சக்கரம்"
10. 1990- " புதுப்பாட்டு "
11. 1990- " நடிகன்"
12. 1990- " வேலை கிடச்சுடுச்சு "
13. 1990- " உன்னை சொல்லி குற்றமில்லை "
14. 1990- " சிறையில் பூத்த சின்ன மலர் "
15. 1990- " மை டியர் மார்த்தாண்டன்"
16. 1990-" மனைவி ஒரு மாணிக்கம்
17. 1990- " எதிர்காற்று"
18. 1990- " அஞ்சலி "
19. 1990- " ராஜா கைய வச்சா "
20. 1990- " சந்தன காற்று "
21. 1990- " கிழக்கு வாசல் "
22. 1990- " சத்ரியன்"
23. 1990- " அரங்கேற்ற வேளை "
24. 1990- " தைமாசம் பூவாசம் "
25. 1991- " வாசலில் ஒரு வெண்ணிலா "
26. 1991- " ஞான பறவை "
27. 1991- " தைப்பூசம்"
28. 1991- " ருத்ரா "
29. 1991- " பிரம்மா"
30. 1991- " ஈரமான ரோஜாவே "
31. 1991- " இதயம் "
32. 1991- " ஆயுள் கைதி"
33. 1991- " சின்ன தம்பி "
34. 1991- " கோபுர வாசலிலே "
35. 1991- " நீ பாதி நான் பாதி "
36. 1991- " தாலாட்டு கேக்குதம்மா "
37. 1991- " கிழக்குக்கரை "
38. 1991- "மரிக்கொழுந்து"
39. 1991- " மாநகரக்காவல் "
40. 1991- "தையல்காரன்"
41. 1991- " தளபதி "
42. 1991- " குணா "
43. 1991- " வசந்தகால பறவை "
44. 1992- " திருமதி பழனிச்சாமி "
45. 1992- " உன்னை வாழ்த்தி பாடுகிறேன் "
46. 1992- " அம்மா வந்தாச்சு "
47. 1992- " வில்லுப்பாட்டுக்காரன் "
48. 1992- " செம்பருத்தி "
49. 1992- " பாண்டியன் "
50. 1992- " தேவர் வீட்டுப் பொண்ணு "
51. 1992- " மீரா "
52. 1992- " மன்னன் "
53. 1992- " உன்ன நினச்ச பாட்டு படிச்சு "
54. 1992- " செந்தமிழ் பாட்டு "
55. 1992- " தெய்வவாக்கு "
56. 1992- " சின்ன மருமகள் "
57. 1992- " நாடோடி பாட்டுக்காரன் "
58. 1992- " ஊர்பஞ்சாயத்து "
59. 1992- " சிங்கார வேலன் "
60. 1992- " சூரியன் "
61. 1992- " நாங்கள் "
62. 1992- " தேவர்மகன் "
63. 1992- " தாலிகட்டிய ராசா "
64. 1992- " வண்ண வண்ண பூக்கள் "
65. 1993- " ஐ லவ் இந்தியா "
66. 1993- " சின்ன ஜமீன்"
67. 1993- " வள்ளி "
68. 1993- " வால்டர் வெற்றிவேல்"
69. 1993- " உள்ளே வெளியே "
70. 1993- " மணிசித்திரத்தழு " (மலையாளம்)
71. 1993- " தர்மசீலன்"
72. 1993- " சின்ன கண்ணம்மா "
73. 1993- " உழைப்பாளி "
74. 1993- " உழவன்"
75. 1993- " எஜமான் "
76. 1993- " சின்ன மாப்பிள்ளை "
77. 1993- " மகாராசன் "
78. 1993- " கலைஞன் "
79. 1993- " காத்திருக்க நேரமில்லை "
80. 1993- " கற்பகம் வந்தாச்சு "
81. 1993- " ஜென்டுல்மேன்"
82. 1993- " செந்தூரப் பாண்டி "
83. 1994- " சீமான் "
84. 1994- " இந்து"
85. 1994- " என் ஆசை மச்சான்"
86. 1994- " வீட்ல விசேஷங்க "
87. 1994- " வாட்ச்மேன் வடிவேல் "
88. 1994- " ரசிகன்"
89. 1994- " மோகமுள்"
90. 1994- " காதலன் "
91. 1994- " செந்தமிழ் செல்வன்"
92. 1994- " ராசாமகன் "
93. 1994- " கண்மணி"
94. 1994- " மகாநதி"
95. 1994- " வீரா "
96. 1994- " நம்ம அண்ணாச்சி "
97. 1994- " பிரியங்கா "
98. 1994- " மிஸ்டர் ரோமியோ "
99. 1994- " அமைதிப்படை
1995-1999
1. 1995- " ராசய்யா "
2. 1995- " நான் பெத்த மகனே
3. 1995- " கட்டுமரக்காரன் "
4. 1995- " சின்ன வாத்தியார் "
5. 1995- " தொட்டா சிணுங்கி "
6. 1995- " தேவா"
7. 1995- " பாட்டு பாட வா "
8. 1995- " பெரிய குடும்பம் "
9. 1995- " முத்துக்காளை "
10. 1995- " ஆணழகன்"
11. 1995- " ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி "
12. 1995- " ஆசை "
13. 1995- " மிஸ்டர் மெட்ராஸ் "
14. 1995- " ராஜாவின் பார்வையிலே "
15. 1995- " ரகசிய போலீஸ் (1995) "
16. 1995- " திருமூர்த்தி"
17. 1995- " ஆயுத பூஜை "
18. 1996- " இந்தியன் "
19. 1996- " அவதார புருஷன் "
20. 1996- " அவ்வை சண்முகி
21. 1996- " வான்மதி "
22. 1996- " நேதாஜி"
23. 1996- " காதல் தேசம் "
24. 1996- " பூவே உனக்காக "
25. 1996- " பூவரசன் "
26. 1996- " இரட்டை ரோஜா "
27. 1996- " கல்லூரி வாசல் "
28. 1996- " டாடா பிர்லா "
29. 1996- " கோயமுத்தூர் மாப்ளே "
30. 1997- " தம்பிதுரை"
31. 1997- " வாய்மையே வெல்லும் "
32. 1997- " பாரதி கண்ணம்மா "
33. 1997- " பெரிய மனுஷன் "
34. 1997- " பொங்கலோ பொங்கல் "
35. 1997- " பாசமுள்ள பாண்டியரே "
36. 1997- " மன்னவா"
37. 1997-" ரட்சகன்
38. 1998- " கலர் கனவுகள்
39. 1998- " காதலா காதலா "
40. 1998- " மறுமலர்ச்சி"
41. 1998- " நினைத்தேன் வந்தாய் "
42. 1999- " காதலர் தினம்"
43. 1999- " மன்னவரு சின்னவரு "
44. 1999- " மனம் விரும்புதே உன்னை "
45. 1999- " விரலுக்கேத்த வீக்கம் "
46. 1999- " பூவாசம் "
2000-2004
1. 2000- " வண்ண தமிழ் பாட்டு "
2. 2000- " ஹேராம்"
3. 2000- " கண்ணுக்கு கண்ணாக "
4. 2000- " பாளையத்து அம்மன் "
5. 2000- " பிரியமானவளே"
6. 2000- " சிம்மாசனம்"
7. 2000- "நாகலிங்கம்"
8. 2000- " பெண்ணின் மனதை தொட்டு "
9. 2001- " டும் டும் டும் "
10. 2001- " மிடில் கிளாஸ் மாதவன் "
11. 2001- " மின்னலே "
12. 2001- " பார்த்தாலே பரவசம் "
13. 2001- " தீனா "
14. 2001- " லூட்டி"
15. 2001- " சாக்லெட் "
16. 2001- " தோஸ்த் "
17. 2001- " நரசிம்மா "
18. 2002- " யூத்"
19. 2002- " பகவதி"
20. 2002- " தென்காசி பட்டணம் "
21. 2002- " புன்னகை தேசம் "
22. 2002- " ஸ்ரீ "
23. 2002- " காதல் வைரஸ் "
24. 2002- " மௌனம் பேசியதே "
25. 2002- " இவன்"
26. 2002- " பாபா "
27. 2003- " புதிய கீதை "
28. 2003- " லேசா லேசா "
29. 2003- " சிம்ஹகிரி" (தெலுங்கு)
30. 2003- " பாய்ஸ் "
31. 2004- " மன்மதன்"
32. 2004- " குத்து"
33. 2004- " நியூ"
2005-2009
1. 2005- " மண்ணின் மைந்தன் "
2. 2005- " கஜினி "
3. 2005- " சந்திரமுகி "
4. 2005- " மும்பை எக்ஸ்பிரஸ் "
5. 2005- " ஒருநாள் ஒருகனவு "
6. 2005- " அன்பே ஆருயிரே "
7. 2005- " சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி "
8. 2006- " கள்வனின் காதலி"
9. 2006- " சில்லுனு ஒரு காதல் "
10. 2006- " தலைமகன் "
11. 2006- " வல்லவன் "
12. 2007- " இனிமே நாங்கதான் "
13. 2007- " சிவாஜி "
14. 2007- " சென்னை 600028 "
15. 2007- " ஆழ்வார்"
16. 2007- " என் உயிரினும் மேலான "
17. 2007- " பில்லா "
18. 2007- " தொட்டால் பூமலரும் "
19. 2007- " உன்னாலே உன்னாலே "
20. 2007- " அழகிய தமிழ் மகன் "
21. 2008- " சரோஜா "
22. 2008- " ஜெயம் கொண்டான் "
23. 2008- " பீமா "
24. 2008- " தசாவதாரம் "
25. 2008- " சரோஜா " (தெலுங்கு)
26. 2008- " சக்கரகட்டி "
27. 2008- " தனம் "
28. 2008- " குசேலன் "
29. 2008- " பொம்மலாட்டம் "
30. 2008- " சிங்ககுட்டி "
31. 2008- " சிலம்பாட்டம்"
32. 2008- "உளியின் ஓசை"
33. 2009- " பஞ்சாமிர்தம் "
34. 2009- " அருந்ததி"
35. 2009- " மலை மலை "
36. 2009- " நாடோடிகள் "
37. 2009- " மத்திய சென்னை "
38. 2009- " நான் கடவுள்"
39. 2009- " குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் "
40. 2009- " ஆதவன் "
41. 2009- " வால்மீகி "
42. 2009- " அய்யன்"
43. 2009- " ஜெகன் மோகினி "
44. 2009- பழசிராஜா
2010-2014
1. 2010- " ஜிக்கு புக்கு "
2. 2010- " பெண் சிங்கம் "
3. 2010- " மாஞ்சா வேலு "
4. 2010- " நந்தா நந்திதா "
5. 2010- " காதலுக்கு மரணமில்லை "
6. 2010- " விருதகிரி"
7. 2010- " குரு சிஷ்யன் "
8. 2010- " கோவா"
9. 2010- " தொட்டுப்பார்"
10. 2010- " வாலிபன் சுற்றும் உலகம் "
11. 2010- " தில்லாலங்கடி "
12. 2010- " லீலை "
13. 2010- " தீராத விளையாட்டு பிள்ளை "
14. 2010- " அகராதி "
15. 2010- " சுறா"
16. 2010- " நினைவில் நின்றவள் "
17. 2010- " பாணா காத்தாடி "
18. 2011- " பொன்னர் சங்கர் "
19. 2011- " எங்கேயும் காதல் "
20. 2011- " கண்டேன் "
21. 2011- " மாவீரன்"
22. 2011- " உயர்திரு 420"
23. 2011- " ஒஸ்தி "
24. 2011- " வெடி "
25. 2011- " மங்காத்தா "
26. 2011- " சட்டப்படி குற்றம் "
27. 2011- " ஆடுபுலி"
28. 2011- " அய்யன்"
29. 2012- " ஆதலால் காதல் செய்வீர் "
30. 2012- " தடையறத் தாக்க "
31. 2012- " மிரட்டல் "
32. 2012- " போடா போடி"
33. 2013- " தில்லு முல்லு "
34. 2013- " எதிர்நீச்சல் "
35. 2013- " என்றென்றும் புன்னகை "
36. 2013- " அலெக்ஸ் பாண்டியன் "
37. 2013- " பிரியாணி"
38. 2013- " கண்ணா லட்டு திண்ண ஆசையா "
39. 2013- " உதயம் NH4 "
40. 2013- " மரியான் "
41. 2014- " யான்"
42. 2014- " திருடன் போலீஸ்"
43. 2014- " கோச்சடையான் "
44. 2014- " ராமானுஜன் "
45. 2014- " பண்ணையாரும் பத்மினியும் "
46. 2014- " நான்தான் பாலா "
47. 2014- " காவியத்தலைவன்" (கடைசி திரைப்படம்)
திரைக்கதை வசனம்
1. 1974- கலியுகக் கண்ணன்
2. 1975- காரோட்டிக் கண்ணன்
3. 1976- ஒரு கொடியில் இரு மலர்கள்
4. 1978- சிட்டுக்குருவி
5. 1979- கடவுள் அமைத்த மேடை
6. 1989- ஒரே ஒரு கிராமத்திலே