செவ்வாய், 30 மே, 2017

நடிகர் ஆர். மாதவன் பிறந்த நாள் ஜூன் 1 , 1970.



நடிகர் ஆர். மாதவன் பிறந்த நாள் ஜூன் 1 , 1970.

ஆர். மாதவன் (பிறப்பு: ஜூன் 1 , 1970 , ஜாம்ஷெட்பூர் ), இந்தியத் திரைப்பட நடிகர், எழுத்தாளர், படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். திரைப்படத் துறைக்கு வரும் முன்னர் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை 'பனேகி அப்னி பாத்' என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் ஃபேர் விருது வாங்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த இவர் மணிரத்தினத்தின்
அலைபாயுதே திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் நிறையப் படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது.

மாதவன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:
அலைபாயுதே
கன்னத்தில் முத்தமிட்டால்
ஆய்த எழுத்து
மின்னலே
ரன்
என்னவளே
தம்பி
அன்பே சிவம்
பிரியசகி
ஜேஜே
ப்ரியமான தோழி
நள தமயந்தி
பார்த்தாலே பரவசம்
டும் டும் டும்
லேசா லேசா
வாழ்த்துகள்
நடித்த திரைப்படங்கள்
வருடம் திரைப்படம் பாத்திரத்தின் பெயர்
1996 இஸ் ராத் கி சுபாக் நகின் கிளப் பாடகர்
1997 இண்பெர்னோ ரவி
1999 சாந்தி சாந்தி சாந்தி சித்தார்த்
2000 அலைபாயுதே கார்த்திக்
என்னவளே ஜேம்சு வசந்த்
2001
மின்னலே ராஜேஷ் சிவகுமார்
டும் டும் டும் ஆதித்யா
பார்த்தாலே பரவசம் மாதவா
ரகுனா கை தில் மெய்ன்
மாதவ் சாஸ்திரி
2002
கன்னத்தில் முத்தமிட்டால் திருசெல்வன்
ரன் சிவா
தில் வில் பியார் வியார் கிரிஷ்
2003
அன்பே சிவம் அன்பரசு
நள தமயந்தி ராம்ஜி
லேசா லேசா தேவ நாராயணன்
ப்ரியமான தோழி அசேக்
ஜேஜே ஜெகன்
2004
நத்திங் பட் லைப் தாமஸ் ராபர்ட்சு
எதிரி சுப்பிரமணி
ஆய்த எழுத்து இன்பா சேகர்
2005
பிரியசகி சந்தான கிருஷ்ணன்
ராம்ஜி லண்டன்வாலே ராம்ஜி திவாரி
2006
ரங் தே பசந்தி அஜய் ரதோட்
தம்பி வேலு தொண்டைமான்
ரெண்டு சக்தி,
கண்ணன்
2007
குரு சியாம் சக்சேனா
தில்லி ஹைட்ஸ் அவராக
ஆர்யா ஆர்யா
தட் போர்-லட்டர் வேர்டு அவராக
எவனோ ஒருவன்
சிறீதர் வாசுதேவன்
2008
வாழ்த்துகள் கதிரவன்
மும்பை மேரி ஜான்
நிகில் அகர்வால்
திப்பு கன்யன் திப்பு கிரி அவராக
2009
யாவரும் நலம் மனோகர்
13பி மனோகர்
குரு என் ஆளு குரு
சிக்கந்தர் ராஜேஸ் ராவ்
3 இடியட்சு ஃபர்ஹான் குரேஷி
2010
ஓம் சாந்தி மேடி
டீன் பாட்டி சந்தானு
ஜூடா ஹி ஜாகி
மன்மதன் அம்பு
சண் கிளாஸ்(திரைப்படம்)
2011
தனு வெட்ஸ் மனு மனு
நான் அவள் அது ஆதித்யா

திங்கள், 29 மே, 2017

நடிகை டி. பி. முத்துலட்சுமி T. P. Muthulakshmi நினைவு தினம் மே 29, 2008.



நடிகை டி. பி. முத்துலட்சுமி  T. P. Muthulakshmi  நினைவு தினம் மே 29, 2008.

டி. பி. முத்துலட்சுமி ( T. P. Muthulakshmi , இறப்பு: மே 29, 2008) 1950-60களில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தவர். 300 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இளமைக் காலம்
தமிழ்நாடு தூத்துக்குடியில் பொன்னைய பாண்டியர், சண்முகத்தம்மாள் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி. தந்தை ஒரு விவசாயி. எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

திரைப்படங்களில் நடிப்பு

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு சென்றார். சென்னையில் அவருடைய மாமா எம். பெருமாள், இயக்குநர் கே. சுப்பிரமணியத்துடன் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக் கொடுத்தார்.
எஸ். எஸ். வாசன் தயாரித்த சந்திரலேகா திரைப்படத்தில் வரும் முரசு நடனத்தில் குழுவினருடன் சேர்ந்து நடனமாடும் வாய்ப்பு முத்துலட்சுமிக்குக் கிடைத்தது. அத்துடன் சில காட்சிகளில் டி. ஆர். ராஜகுமாரிக்காக சில காட்சிகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் "மகாபலி சக்கரவர்த்தி ", மின்மினி , தேவமனோகரி,
பாரிஜாதம் முதலான படங்களில் நடித்தார்.
நகைச்சுவை நடிகையாக அறிமுகம்
1950 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த
பொன்முடி படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இதனை அடுத்து அவருக்கு ஏராளமான வாய்ப்புக்கள் வந்தன. 1951ல் ஓர் இரவு படத்தில் டி. கே. சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த
திரும்பிப்பார் படத்தில் தங்கவேலு மனைவியாக ஊமைப் பெண்ணாக முத்துலட்சுமி நடித்தார். இருவர் உள்ளம் படத்தில் எம். ஆர். ராதாவின் மனைவியாக முத்துலட்சுமி நடித்தார்.
குடும்பம்
முத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம், அரச நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர். தமிழ் நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத் தலைவர்.  நடிகரும் இயக்குனருமான டி. பி. கஜேந்திரன் இவர்களது வளர்ப்பு மகன் ஆவார்.  முத்துலட்சுமி தனது 77வது அகவையில் 2008 மே 29 இல் சென்னையில் காலமானார்.

விருதுகள்

கலைமாமணி விருது (1999)
கலைவாணர் விருது
நடித்த சில திரைப்படங்கள்
ராஜாம்பாள் (1951)
வளையாபதி (1952)
தாய் உள்ளம் (1952)
பராசக்தி (1952)
மனோகரா (1954)
பொன் வயல் (1954)
ராஜி என் கண்மணி (1954)
சுகம் எங்கே (1954)
துளி விஷம் (1954)
கணவனே கண் கண்ட தெய்வம் (1955)
பாசவலை (1956)
நான் பெற்ற செல்வம் (1956)
மக்களைப்பெற்ற மகராசி (1957)
மாயா பஜார் (1957)
சக்கரவர்த்தி திருமகள் (1957)
முதலாளி (1957)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
வண்ணக்கிளி (1959)
தங்கப்பதுமை (1959)
அடுத்த வீட்டுப் பெண் (1960)
படிக்காத மேதை (1960)
ஹரிச்சந்திரா (1968)
அன்னையின் ஆணை
அனுபவி ராஜா அனுபவி
இருவர் உள்ளம்
ஏழை உழவன்
ஓர் இரவு
கடன் வாங்கி கல்யாணம்
குணசுந்தரி
கொஞ்சும் சலங்கை
சந்திரலேகா
டவுன் பஸ்
திரும்பிப்பார்
திருவருட்செல்வர்
தேவமனோகரி
பத்மினி
பாரிஜாதம்
பிரேம பாசம்
பொன்முடி
போர்ட்டர் கந்தன்
மகாபலி சக்கரவர்த்தி
மகேஸ்வரி
மரகதம்
வடிவுக்கு வளைகாப்பு
வாழ்க்கை ஒப்பந்தம்
வாழவைத்த தெய்வம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
ஜமீந்தார்


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ரி.பி.முத்துலட்சுமி 1948-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பொன்முடி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரி.பி.முத்துலட்சுமி “சௌபாக்கியவதி’, “மக்களைப் பெற்ற மகராசி, நான், ஒளிவிளக்கு நாடோடி மன்னன் அறிவாளி, ஆரவல்லி, வீரபாண்டிய கட்டபொம்மன், இருவர் உள்ளம், நவராத்திரி, அன்பே வா’ உள்பட சுமார் 350 படங்களுக்கு மேல் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தார். நடிப்பில்
தன்னுடைய சிறப்பான பங்களிப்புக்காக கலைமாமணி விருது பெற்ற இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா, ரி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, சந்திரபாபு, ஏ.கருணாநிதி, ரி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் இவருடைய நெருங்கிய உறவினர்.  நடிகை முத்துலட்சுமி நடிகர் தங்கவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவைக்காட்சிகளில் நடித்தவர். இன்றும் மறக்க முடியாத பல சிரிப்புக்காட்சிகளில் இவர் நடித்துள்ளார்.
இறுதிக்காலத்தில் நடக்க முடியாமல் அவதியுற்ற முத்துலட்சுமி சக்கர நாற்காலியைத் தான் பயன்படுத்தி வந்தார். இவரது கணவர் பெயர் முத்துராமலிங்கம். 29.5.2008 அன்று தனது 77-ஆவது வயதில் மரணடைந்தார்.
1957 -இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் வெற்றிப்படமான ‘ஆரவல்லி’ படத்தில் இவர் சிங்காரவல்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். மைனாவதியின் தோழி. ரி.பி.முத்துலட்சுமியை ஏ.கருணாநிதியும் இவரும் காதலிப்பார்கள். ரி.பி.முத்துலட்சுமிக்கு யாருடைய காதலை ஏற்றுக்கொள்வது என்பதில் குழப்பம். குழப்பத்தைத் தீர்க்க இருவருக்கும் ஒரு போட்டி வைப்பார். ஒரே போலவுள்ள மூன்று பெண்களின் முழு உருவச்சிலையை ஓரிடத்தில் வைத்து இந்த 3 பெண்களில் யாரைப்போல் இருந்தால் என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்று இருவரும் சரியாகச் சொன்னால்தான் நான் அதில் சரியாகச் சொல்பவரை என் துணையாக ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லிவிடுவார். ஏ.கருணாநிதியோ 3 சிலைகளும் ஒன்று போலவே இருக்கின்றன. மூன்றுமே அழகாக இருக்கின்றன. என்று வீர வசனம் பேசிவிட்டு அதனால் என்னை ஏற்றுக்கொள் என்பார். ஆனால் ரி.பி.முத்துலட்சுமி ஏற்றுக்கொள்ளமாட்டார். இரு இரு நான் பார்த்து சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வழக்கம்போல தனது காதில் திரியை விட்டு குடைந்து ஆராய்ச்சி செய்துவிட்டு , நான் இப்போது சொல்கிறேன் என்று 3 பெண்களது சிலைகளின் காதுகளில் வரிசையாக ஒரு காதில் ஒரு நீள திரியை விடுவார். ஒரு பெண்ணின் ஒரு பக்கக் காதிலிருந்து மறுபக்க காதுக்கு திரி வந்துவிடும். இன்னொரு பெண்ணின் ஒரு காதிலிருந்து திரி வாய்க்கு வந்துவிடும். மூன்றாவது சிலையில் திரியை நுழைப்பார்… அத்திரி ஒரு காதில் போய் உள்ளேயே நின்றுவிடும். இப்பெண்தான் சரியானவள் குடித்தனத்திற்கு ஏற்றவள். அவளைப் போல் நீ இருக்கவேண்டும் என்பார். ரி.பி.முத்துலட்சுமியும் சரியென ஏற்றுக்கொள்வார். இக்காட்சி படத்தில் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும்.
நகைச்சுவை வேடத்தில் 300 படங்களில் நடித்த டி.பி.முத்துலட்சுமி என்ற தலைப்பில் “மாலை மலர்” நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி.



டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே, `பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும்’ என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திடுக்கிட்டனர்.முத்துலட்சுமியின் தந்தை ஒரு விவசாயி. ‘நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு’ என்று கூறிவிட்டார்.ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று உறுதி கொண்டார். சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரெயில் ஏறினார்.முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக்கொடுத்தார்.அந்த சமயத்தில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், ‘சந்திரலேகா’வை பிரமாண்டமாகத் தயாரித்து வந்தார். பெருமாளின் முயற்சியினால், ‘சந்திரலேகா’வில் வரும் முரசு நடனத்தில் இடம் பெறும் வாய்ப்பு முத்துலட்சுமிக்கு கிடைத்தது. ஏராளமான பெண்கள் பங்கு கொண்ட அந்த நடனக் காட்சியில், முத்துலட்சுமி நடனம் ஆடியதுடன், சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு ‘டூப்’பாக ஆடினார்.ஜெமினியில் 65 ரூபாய் மாத சம்பளத்தில் சில காலம் வேலை பார்த்தார்.பின்னர் ‘மகாபலிசக்ரவர்த்தி’, ‘மின்மினி’, ‘தேவமனோகரி’, ‘பாரிஜாதம்’ முதலான படங்களில் நடித்தார்.1950-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘பொன்முடி’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பட வாய்ப்புகள் தேடிவந்தன.1951-ல் ஏவி.எம். தயாரித்த அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தில், டி.கே.சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார். பின்னர் ‘சர்வாதிகாரி’, ‘ஏழை உழவன்’ போன்ற படங்களில் நடித்தார்.மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘திரும்பிப்பார்’ படத்தில், சிவாஜிகணேசனின் தந்தையாக தங்கவேலு நடித்தார். (ஆரம்ப காலப்படங்களில், வயோதிக வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தங்கவேலு)வயதான காலத்தில் தங்கவேலு மணக்கும் ஊமைப் பெண்ணாக டி.பி.முத்துலட்சுமி நடித்தார்.1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான ‘நாடோடி மன்ன’னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, ‘புருஷன்! புருஷன்! புருஷன்’ என்று பூஜை செய்வார்.இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், ‘இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். ‘நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்’ என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்’ என்றார்.சிவாஜி -சரோஜாதேவி நடித்த ‘இருவர் உள்ளம்’ படத்தில், எம்.ஆர்.ராதாவின் ஜோடியாக முத்துலட்சுமி நடித்தார்.
‘அறிவாளி’ படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து நடித்தார். இதில், நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக அமைந்தன.
மனோகரா, வஞ்சிக்கோட்டை வாலிபன், அடுத்த வீட்டுப்பெண், கொஞ்சும் சலங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதுமை, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப்பெற்ற மகராசி, மாயாபஜார், அனுபவிராஜா அனுபவி, திருவருட்செல்வர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முத்துலட்சுமி நடித்துள்ளார்.
பட உலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-
‘தங்கவேலு அண்ணனுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். அவர் நல்ல திறமைசாலி. கலைவாணரைப் பின்பற்றி படத்திற்கு ஏற்ப நகைச்சுவை காட்சிகளை அமைப்பார். பந்தா இல்லாதவர். படங்களில், அபசகுனமான எந்த வார்த்தையையும் உச்சரிப்பதில்லை என்று கொள்கையே வைத்திருந்தார்.
‘டவுன் பஸ்’ படத்தில், நானும், அஞ்சலிதேவியும் பஸ் கண்டக்டர்களாக நடிப்போம். அஞ்சலிதேவியின் ஜோடியாக கண்ணப்பாவும், எனக்கு ஜோடியாக ஏ.கருணாநிதியும் நடித்தனர். குறைந்த பட்ஜெட் படம். மிக வெற்றிகரமாக ஓடியது.
நடிகர் திலகம் சிவாஜி அண்ணன் நடித்த ‘அன்னையின் ஆணை’யில், தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படம் வெளிவந்தபோது, சிவாஜி அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘தேன்மொழி’ என்று அண்ணன் பெயரிட்டார்.
அரியலூர் ரெயில் விபத்தில் என் தாயார் இறந்துவிட்டார். அதுபற்றி எனக்கு தந்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால், சிவாஜியிடம் கொடுத்து, படித்துச் சொல்லும்படி கேட்டேன். அதைப் படித்த அவர், உண்மையைச் சொன்னால் நான் மிகவும் அதிர்ச்சி அடைவேன் என்று கருதி, ‘உன் தாயாருக்கு உடம்பு சரி இல்லையாம். உடனே புறப்படு’ என்றுகூறி, தன்னுடைய காரில் என்னை அனுப்பி வைத்தார். ஒரு தங்கை போல் என்னிடம் பாசம் வைத்திருந்தார்.’
இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.
முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம். அரசு நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றியவர். ‘தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக’த்தின் நிறுவனத் தலைவர்.
தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது, ‘கலைவாணர் விருது’ உள்பட பல விருதுகளைப் பெற்றவர், முத்துலட்சுமி. இவருடைய மாமன் மகன்தான் டைரக்டர் டி.பி.கஜேந்திரன்.

வெள்ளி, 26 மே, 2017

பாடகி ஜெயலட்சுமி நினைவு தினம் மே 26, 2014.



பாடகி ஜெயலட்சுமி நினைவு தினம் மே 26, 2014.

ராதா ஜெயலட்சுமி எனப் பிரபலமாக அழைக்கப்படும் ராதா மற்றும்
ஜெயலட்சுமி (இறப்பு: மே 26, 2014) இரட்டையர் இந்திய கருநாடக இசைப்
பாடகர்களும் திரைப்படப் பின்னணிப் பாடகிகளும் , இசை ஆசிரியைகளும் ஆவர். இவ்விரட்டையர்களில் ஜெயலட்சுமியே பெரும்பாலும் பின்னணிக் குரல் கொடுப்பவர். ஆனாலும் திரையுலகில் இவர் ராதா ஜெயலட்சுமி என்றே அழைக்கப்பட்டார். ராதா இவரது உடன்பிறவா சகோதரி ஆவார். 1950களில் இருந்து இவர்கள் மேடைக் கச்சேரிகளில் இணைந்தே பாடுவார்கள்.
1981 ஆம் ஆண்டில் இவர்களுக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
ராதா, ஜெயலட்சுமி ஆகியோர் ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் பள்ளியில் கருநாடக இசை பயின்றார்கள். 1940கள் முதல் ஜெயலட்சுமி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் பின்னணிப் பாடல்களைப் பாடி வந்தார். 50களில் கே. வி. மகாதேவன் , ஜி. ராமநாதன் , சுந்தரம் பாலச்சந்தர் , போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்தார்.
குன்னக்குடி வைத்தியநாதனின் இசையில் தெய்வம் திரைப்படத்தில் "திருச்செந்தூரில் போர் புரிந்து" என்ற பாடலை ராதா பாடியிருந்தார். இதுவே இவர் பாடிய ஒரேயொரு திரையிசைப் பாடல் எனக் கருதப்படுகிறது.
இவர்களிடம் கருநாடக இசை பயின்றவர்களில் பிரியா சகோதரிகள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இறப்பு
ராதா ஜெயலட்சுமி இரட்டையர்களில் ஜெயலட்சுமி 2014 மே 26 இல் தனது 82வது அகவையில் சென்னையில் காலமானார்.



ஜெயலக்ஷ்மி [ராதா-ஜெயலக்ஷ்மி] பின்னணிப் பாடகி
மேடைக்கச்சேரிகளிலும், திரையிசைப் பாடல்களிலும் பிரபலமாக விளங்கியவர்கள் ராதா-ஜெயலக்ஷ்மி இருவரும். ஆண்கள் மட்டுமே மேடைகளில் கச்சேரிகள் செய்துவந்த 1930-களில் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் ஒரு புரட்சி நடக்கத் தொடங்கியது. மேடைகளில் பெண் பாடகிகள் தோன்றி இசை ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கினார்கள். அந்த வரிசையில் ராதா ஜெயலட்சுமி சகோதரிகள் பிரபலமான பாடும் இணையாக பவனி வந்தார்கள்.
மிக இளவயதிலேயே தங்கள் இனிய குரல் வளத்தாலும், விறுவிறுப்பான இசையினாலும் இசை ரசிகர்களைக் கவர்ந்தார்கள். ராதா-ஜெயலக்ஷ்மி சகோதரிகளில் ஜெயலக்ஷ்மிக்கு சினிமாவுக்குப் பொருத்தமான குரல் அமைந்திருப்பதை அறிந்து 1950-இல் கே.ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ”ஏழை படும்பாடு” திரைப்படத்தில் விதியின் விளைவால் அனாதையானேன் என்ற சோகப் பாடலை பாடியபடியே திரையிசையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் 1951-இல் வீணை எஸ்.பாலசந்தர் ‘கைதி’ என்ற ஒரு படத்தை எடுத்தார். இதில் பாலசந்தரே கதாநாயகன் விஜயனாக நடித்தார். இந்தப் படத்தில் ஜெயலக்ஷ்மிக்கு ஒரு பாடல் அமைந்தது. கதாநாயகன் விஜயனை சந்தோஷப்படுத்துவதற்காக பாடும் ஒரு பாடல் We happy we cheerful we jolly. ஆங்கிலம் கலந்த பாடல். மேற்கத்திய இசையிலான பாடல். கீர்த்தனை, ஸ்வரம், என்று பழக்கப்பட்ட ஜெயலக்ஷ்மிக்குப் புதிய அனுபவம் இது. ஆனாலும் மிக நன்றாகவே பாடினார். இந்தப் பாடலில் இடையிடையே வரும் வசனங்களையும் அவரே பேசி பாடலை வெகு சிறப்பாகவே பாடியிருந்தார்.

1952-இல் ”தாய் உள்ளம்” படத்தில் ஜெயலக்ஷ்மியின் மற்றொரு வெற்றிப் பாடல் அமைந்தது. ‘போக்கிரிப்பயலே உன்னைத் தூக்கவே மாட்டேன்’ குறும்பு செய்யும் குழந்தையை நோக்கித் தாய் பாடும் பாடல். தாயின் பாசத்தோடு இயற்கையாக அமைந்த ஒரு பாடல். 1953-இல் வெளிவந்த ‘கூண்டுக்கிளி’ படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் ’பாரு மகளே பாரு’ என்ற பாடலைப் பாடினார். ‘மனோகரா’ படத்தில் கலைஞர் கருணாநிதியின் பாடல் ‘சிங்காரப் பைங்கிளியே பேசு’ இதை ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடினார். கே.வி.மகாதேவனின் இனிய இசையில் ‘மாங்கல்யம்’ என்ற படத்தில் ’ஒட்டும் இரு உள்ளங்களை வெட்டுவது ஞாயமல்ல’ என்ற பாடலும் ஜெயலக்ஷ்மியைத் திரையிசையுலகில் வெற்றி பெறச் செய்த பாடல்களுள் ஒன்றாகும். 1954-இல் ‘எதிர்பாராதது’ என்ற படத்தில் ‘ஜெகமே நீயே அம்மா’ என்ற பாடல் சிறப்பாக அமைந்தது.
1955-இல் டவுன் பஸ், மேனகா, முல்லை வனம், காஞ்சனா போன்ற படங்களிலும் பாடியிருக்கிறார். 1950-களில் எஸ்.எம்.சுப்பையா, கே.வி.மகாதேவன், ஜி.ராமனாதன் போன்ற இசையமைப்பாளர்கள் ஜெயலக்ஷ்மிக்குத் தொடர்ந்து பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் கொடுத்து வந்தார்கள்.
பி.ஆர்.பந்துலு தயாரித்த படம் ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’. இந்தப் படத்தில் பாரதிதாசன் இயற்றிய பாடலான ’வெண்ணிலாவும் வானும் போலே’ என்ற பாடலை ஜெயலக்ஷ்மி மெருகூட்டிப் பாடினார். சி.என்.பாண்டுரங்கம் 1958-இல் பூலோக ரம்பை’ என்ற படத்தில் 4 பாடல்கள் பாடுவதற்கு சந்தர்ப்பம் அளித்தார். இதில் ஆசை நெஞ்சமே என்ற பாடலை ஏ.எம்.ராஜாவோடு இணைந்து பாடினார். வேதாவுக்கு இசைத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்புத் தந்த படம் ‘அன்பு எங்கே’. இது 1958-இல் வெளிவந்தது. இதில் இந்துஸ்தானி இசையில் அமைந்த ஒரு நடனப்பாடல் தான் “காயா பழமா சொல்லு ராஜா”.
மிகப் பெரிய பட நிறுவனமான ஜெமினியில் இரும்புத்திரை படத்தில் பக்தி மணம் கமழும் விதத்தில் ஒரு இனிமையான பாடலைப் பாடியிருக்கிறார். என்ன செய்தாலும் துணை நீயே என்ற கரஹரப்ரியாவில் அமைந்த பாடல் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் பாபநாசம் சிவனின் பாடல். 1959-இல் மரகதம் என்ற படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் ’மாலை மயங்குகின்ற நேரம் பச்சை அருவிகள்’ என்ற பாடல் ரசிகர்களை மயக்கியது. இந்தியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘அக்பர்’ திரைப்படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையமைப்பில் ஒரு இனிமையான பாடலைப் பாடியிருக்கிறார்.
அம்மன் அருள், தெய்வம், நத்தையில் முத்து போன்ற படங்களில் ஜெயலக்ஷ்மி பாடிய பாடல்கள் நெஞ்சம் நிறைந்த பாடல்களாக அமைந்துவிட்டன. ஜெயலக்ஷ்மி பாடல்களைப் பாடினாலும் இசைத்தட்டுக்களில் ராதா-ஜெயலக்ஷ்மி என்றே வெளியிடப்பட்டு வந்தது. ஆதி பராசக்தி என்ற படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் கவியரசு கண்ணதாசன் இயற்றிய ஒரு பாடல் ஜெயலக்ஷிமியின் திறமையை வெளிப்படுத்திய ஒரு பாடலாக அமைந்தது. ‘கொக்கு பறக்கும் அந்த குளக்கரையில்’ என்பதே அந்தப் பாடல்.
ராதா-ஜெயலட்சுமி இரட்டையர்களில் ஜெயலட்சுமி அவர்கள் 2014 மே 26 -அன்று தனது 82-ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் “இன்னிசைச் சுவடிகள்” என்ற நிகழ்ச்சியில் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. விசாலாக்ஷி ஹமீது அவர்கள் தொகுத்தளித்த நிகழ்ச்சியிலிருந்து; மேற்படி விவரங்கள் திரட்டப்பட்டன.

இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு ( S. M. Subbiah Naidu , 15 மார்ச் 1914 – மே 26 ,1979) .

இசையமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு ( S. M. Subbiah Naidu , 15 மார்ச் 1914 –  மே 26   ,1979) .

எஸ். எம். சுப்பையா நாயுடு ( S. M. Subbiah Naidu , 15 மார்ச் 1914 – 26 மே 1979) தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
ஸ்ரீ முருகன் (1946)
கஞ்சன் (1947)
குண்டலகேசி (1947)
ராஜகுமாரி (திரைப்படம்) (1947)
அபிமன்யு (1948)
ராஜ முக்தி (1948)
மோகினி (1948)
வேலைக்காரி (1949)
கிருஷ்ண விஜயம் (1950)
ஏழை படும் பாடு (1950)
திகம்பர சாமியார் (1950)
மர்மயோகி (1951)
பொன்னி (1953)
மலைக்கள்ளன் (1954)
வாழ்விலே ஒரு நாள் (1956)
அன்னையின் ஆணை (1958)
திருமணம் (1958)
நாடோடி மன்னன் (1958)
அதிசய பெண் (1959)
திருடாதே (1961)
கொஞ்சும் சலங்கை (1962)
கல்யாணியின் கணவன் (1963)
ராஜா வீட்டுப் பிள்ளை (1967)
சக்கரம் (1968)
குலகௌரவம் (1976)

வியாழன், 25 மே, 2017

நடிகை மனோரமா பிறந்த தினம் மே 26, 1943.



நடிகை மனோரமா பிறந்த தினம் மே 26, 1943.

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், அவர் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது தான். அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: மே 26, 1943
பிறப்பிடம்: மன்னார்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகை
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
கோபிசாந்தா என்னும் இயற்பெயர் கொண்ட அவர், 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி என்ற இடத்தில் தந்தையார் காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாயார் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.


ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
வறுமை மற்றும் பல குடும்பப் பிரச்சனைக் காரணமாக, இவரும் இவருடைய தாயாரும் இராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் குடிபெயர்ந்தனர். தன்னுடைய பள்ளிப்படிப்பை பள்ளத்தூரிலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கிய அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் பெற்று விளங்கினார். ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு ரத்தப்போக்கு ஏற்படவே, தன்னுடைய பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு, ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார்.
நாடகத் துறையில் ஒரு பயணம்
ஒரு நாள் அவருடைய ஊரில் ‘அந்தமான் காதலி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை எனக் கருதி, மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். அந்த நாடகத்தில் இவருடைய பாட்டையும், குரல் இனிமையையும், நடனத்தையும் பார்த்த அனைவரும் இவரை வெகுவாகப் பாராட்டினார்கள். அது மட்டுமல்லாமல், இந்த நாடகத்தில் பணியாற்றிய இயக்குனர் சுப்பிரமணியனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவருடைய பெயரை ‘மனோரமா’ என மாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து, பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.
திரைப்படத்துறையில் அவரது பயணம்
அவர், வைரம் நாடக சபாவில் நடித்துக்கொண்டிருந்த பொழுது, சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாகவும் கூறினார். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடவே, அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார். இருந்தாலும், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமா திரையில் முதன் முதலாக மனோரமாவை அறிமுகம் செய்தார்.


கலையுலக வெற்றிப் பயணம்
தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும், பல நாடகங்களில் நடித்து வந்த அவர், ‘மாலையிட்ட மங்கை’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘கொஞ்சும் குமரி’, ‘பாலும் பழமும்’, ‘பார் மகளே பார்’, ‘திருவிளையாடல்’, ‘அன்பே வா’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘கந்தன் கருணை’, ‘எதிர் நீச்சல்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘ஆயிரம் பொய்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘காசேதான் கடவுளடா’ எனத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.
1958 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் அவர்களின், ‘மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று வரை சுமார் 1000 – த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘உலக சாதனை கின்னஸ் புத்தகத்தில்’ தன்னுடைய பெயரை பதிவு செய்து, மாபெரும் சாதனைப் படைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரிய ஒருவர், மனோரமா மட்டுமே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ‘காட்டுப்பட்டிச் சரித்திரம்’, ‘அன்புள்ள அம்மா’, ‘தியாகியின் மகன்’, ‘வானவில்’, ‘ஆச்சி இன்டர்நேஷனல்’, அ’ன்புள்ள சிநேகிதி’, ‘அல்லி ராஜ்யம்’, ‘அவள்’, ‘ரோபோ ராஜா’, ‘மனுஷி’, ‘வா வாத்தியாரே’, ‘டீனா மீனா’ போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.


அவர் நடித்த சில திரைப்படங்கள்
‘மாலையிட்ட மங்கை’, ‘புதிய பாதை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘ரத்த திலகம்’, ‘கொஞ்சும் குமரி’, ‘அன்பே வா’, ‘கந்தன் கருணை’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘எங்கள் தங்கம்’, ‘காசேதான் கடவுளடா’, ‘அந்தமான் காதலி’, ‘வாழநினைத்தால் வாழலாம்’, ‘என் கேள்விக்கு என்ன பதில்’, ‘குப்பத்து ராஜா’, ‘பில்லா’, ‘காளி’, ‘தீ’, ‘வாழ்வே மாயம்’, ‘போக்கிரி ராஜா’, ‘தங்க மகன்’, ‘பாயும் புலி’, ‘அடுத்த வாரிசு’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘நான் அடிமை இல்லை’, ‘அன்னை என் தெய்வம்’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘பாட்டி சொல்லத் தட்டாதே’, ‘இது நம்ம ஆளு’, ‘குரு சிஷ்யன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘இதயம்’, ‘சின்னத் தம்பி’, ‘சின்ன கவுண்டர்’, ‘சிங்கார வேலன்’, ‘அண்ணாமலை’, ‘எஜமான்’, ‘ஜென்டில்மேன்’, ‘வியட்நாம் காலனி’, ‘மே மாதம்’, ‘காதலன்’, ‘நந்தவனத் தேரு’, ‘நான் பெத்த மகனே’, ‘முத்துக் காளை’, ‘இந்தியன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘அருணாசலம்’, ‘மறுமலர்ச்சி’, ‘புதிய பாதை’, ‘பாண்டவர் பூமி’, ‘மாயி’, ‘சாமி’, ‘பேரழகன்’.
தனிப்பட்ட வாழ்க்கை
சபா நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் அவர்கள், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.



விருதுகளும், மரியாதைகளும்..
தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது’.
1988 – ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’.
2002 – மத்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ விருது’.
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக ‘கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்’ இடம்பெற்றுள்ளார்.
மலேசிய அரசிடம் இருந்து’ டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’.
கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’.
‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’.
சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ எனப் பல்வேறு விருதுகளை, தமிழ் நாடு அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது.
சினிமா உலகில், நகைச்சுவை என்றால் நடிகர்கள் மட்டும் தான் என்னும் நிலையை மாற்றி, நடிகைகளும் காமெடியில் சாதனைப் படைக்க முடியும் என்று நிரூபித்தவர், மனோரமா அவர்கள். திரையுலக வரலாற்றில் 1000 படங்களுக்கு மேல் நடித்து, உலகப் புகழ் பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை; இந்தியாவில் ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமை; தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளிலும் சிறந்த குணச்சித்திர நடிகை என இன்னும் பல அடையாளங்களை இவருக்கு சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சொல்லப்போனால், சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என அன்றைய காலம் முதல் இன்றைய தலைமுறை வரை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.



கின்னஸ் சாதனை படைத்த நடிகை
‘ஆச்சி’ என தமிழ் திரையுலகில் அன்போடு அழைக்கப்பட்ட நடிகை மனோரமா (Manorama) பிறந்த தினம் இன்று (மே 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் வசதியான குடும்பத்தில் (1937) பிறந்தவர். இயற்பெயர் கோபிசாந்தா. தந்தை பிரிந்து சென்ற பிறகு, குழந்தையாக இருந்த மனோரமாவையும் அழைத்துக்கொண்டு, காரைக்குடி அடுத்த பள்ளத்தூருக்கு குடி பெயர்ந்தார் தாய்.
# மூன்று வயதிலேயே மிக அருமை யாக பாடுவாராம். பலகாரக் கடை நடத்தி வந்த தாயின் உடல்நலம் குன்றியதால், 6-ம் வகுப்புடன் இவரது படிப்பு நின்றது. ஒரு வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையில் சேர்ந்தார்.
# எதேச்சையாக நாடகத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அருமையாகப் பாடியதுடன், அற்புதமாக நடித்தும், நடனமாடியும் அனைவரையும் கவர்ந்தார் இந்த 12 வயது சிறுமி. ‘பள்ளத்தூர் பாப்பா’ என அழைக்கப்பட்டார். பின்னர் ‘மனோரமா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வைரம் நாடக சபாவில் சிறு வேடங்களில் நடித்தார்.
# பி.ஏ.குமார் என்பவர் மூலமாக நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் அறிமுகம் கிடைத்தது. அவரது எஸ்எஸ்ஆர் நாடக மன்றத்தில் சேர்ந்து பல நாடகங்களில் நடித்தார். மொத்தம் 1,000 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘நாடக உலகின் ராணி’ எனப் போற்றப்பட்டார்.
# சிங்களத் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தார். 1958-ல் கண்ணதாசன் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். நாகேஷ் - மனோரமா ஜோடி மிகவும் பிரபலமடைந்தது.
# தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே, தவறே இல்லாமல் பேசி நடிக்கும் ஆற்றல் பெற்றவர். குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்து வாங்கினார். 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். 1,000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர்.
# அதிக எண்ணிக்கையில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்தவர். கதாநாயகி, அண்ணி, வில்லி என இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். நடிப்புலகில் 50 ஆண்டுகளைக் கடந்து பொன்விழா கொண்டாடியவர். நன்கு பாடக்கூடியவர். ‘டில்லிக்கு ராஜான்னாலும்’, ‘வா வாத்யாரே’, ‘மெட்ராச சுத்திப் பாக்க’, ‘மஞ்சக் கயிறு’ ஆகிய பாடல்கள் பிரபலமானவை.
# அறிஞர் அண்ணா, மு.கருணாநிதியுடன் மேடைகளிலும் எம்ஜிஆர், என்.டி.ராமாராவ், ஜெயலலிதாவுடன் திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்தியாவின் 5 முதல்வர்களுடன் நடித்த பெருமை பெற்றவர்.
# பத்மஸ்ரீ , கலைமாமணி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, டத்தோ சாமிவேல் சரித்திர நாயகி விருது, கலா சாகர் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றவர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பத்திரிகையாளர் ‘சோ’இவரை ‘பெண் சிவாஜி’ என புகழ்ந்துள்ளார்.
# வறுமையில் வாடி, எந்தப் பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே உலக அளவில் புகழ்பெற்ற மனோரமா கடந்த அக்டோபர் மாதம் 78-வது வயதில் மறைந்தார்.

புதன், 24 மே, 2017

பாடகர் டி. எம். சௌந்தரராஜன் நினைவு தினம் மே 25 , 2013 .



பாடகர் டி. எம். சௌந்தரராஜன் நினைவு தினம் மே 25 , 2013 .

டி. எம். சௌந்தரராஜன் ( மார்ச் 24 , 1923 - மே 25 , 2013 ) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2003இல் பத்மசிறீ விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார்.
வாழ்க்கைச் சுருக்கம்
சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். சௌந்தரராஜன் 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன்
காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது
கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி , தேவகி , சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.
சிறப்புகள்
இவர் சிவாஜி , எம்.ஜி.ஆர் , ஜெமினி ,
ஜெய்சங்கர் , ரவிச்சந்திரன் ,
முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர் வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார்.
2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும்[1] .
நடிகராக
1962 ஆம் ஆண்டு வெளியான பட்டினத்தார் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்துள்ளார். அருணகிரிநாதர் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடல் குறிப்பிடத்தக்க புகழடைந்தது.
செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள்
மாசிலா நிலவே நம் ( அம்பிகாபதி 1957 )
வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 )
மோஹன புன்னகை ( வணங்காமுடி 1957 )
ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 )
ஏரிக்கரையின் மேலே ( முதலாளி 1957 )
மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 )
யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 )
சித்திரம் பேசுதடி ( சபாஷ் மீனா 1959)
உள்ளதை சொல்வேன் ( படிக்காத மேதை 1960 )
நினைச்சது ஒண்ணு ( தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 )
இசை கேட்டால் ( தவப் புதல்வன் 1972 )
நான் பெற்ற செல்வம் ( தவப் புதல்வன் 1972 )
நினைத்து நினைத்து ( சதாரம் 1956 )
முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 )↑
பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 )
சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 )
சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் 1964 )
முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப் பதுமை 1958 )
டிங்கிரி டிங்காலே ( அன்பு எங்கே )
முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி )
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் ( என் கடமை )
கை விரலில் பிறந்தது நாதம் ( கல்லும் கனியாகும் )
என்னருமை காதலிக்கு ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் )
வெண்ணிலா வானில் ( மன்னிப்பு )
வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
மயங்கிவிட்டேன் ( அன்னமிட்டகை )
கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி தீரும் )
மெல்ல மெல்ல அருகில் ( சாரதா )
குயிலாக நான் ( செல்வமகள் )
மனம் ஒரு குரங்கு ( செல்வமகள் )
ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு )
பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
மலர்களைப் போல் தங்கை ( பாசமலர் )
முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை )
கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி )
ஞாயிறு என்பது ( காக்கும் கரங்கள் )
எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் )
திருடாதே பாப்பா ( திருடாதே )
காசேதான் கடவுளப்பா ( சக்கரம் )
தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் )
ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் )
ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் )
மெல்லப்போ மெல்லப்போ ( காவல்காரன் )
கண்ணுக்கு தெரியலயா ( அதே கண்கள் )
அடி என்னடி ராக்கம்மா ( பட்டிக்காடா பட்டணமா )
அம்மாடி பொண்ணுக்கு ( ராமன் எத்தனை ராமனடி )
அடுத்தாத்து அம்புஜத்தை ( எதிர் நீச்சல் )
பூ மாலையில் ( ஊட்டி வரை உறவு )
நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )
அஹா மெல்ல நட ( புதிய பறவை )
அன்புள்ள மான் விழியே ( குழந்தையும் தெய்வமும் )
யார் அந்த நிலவு ( சாந்தி )
சிவப்புக்கல்லு மூக்குத்தி ( எல்லோரும் நல்லவரே )
பொன்மகள் வந்தாள் ( சொர்கம் )
என்ன வேகம் நில்லு பாமா ( குழந்தையும் தெய்வமும் )
உன்னை அறிந்தால் ( வேட்டைக்காரன் )
சத்தியம் இது ( வேட்டைக்காரன் )
சத்தியமே ( நீலமலைத் திருடன் )
நிலவைப்பார்த்து வானம் ( சவாளே சமாளி )
எங்கே நிம்மதி ( புதிய பறவை )
தரைமேல் பிறக்க வைத்தான் ( படகோட்டி )
சோதனை மேல் சோதனை ( தங்கப் பதக்கம் )
நண்டு ஊறுது ( பைரவி )
அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )
ஓராயிரம் பார்வையிலே ( வல்லவனுக்கு வல்லவன் )
உலகத்தின் கதவுகள் ( இரவும் பகலும் )
எங்கே அவள் ( குமரிக் கோட்டம் )
ஒரு தரம் ( குமரிக் கோட்டம் )
யாரை நம்பி ( எங்க ஊரு ராஜா )
அங்கே சிரிப்பவர்கள் ( ரிக்சாகாரன் )
மனிதன் நினைப்பதுண்டு ( அவன்தான் மனிதன் )
ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )
உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் )
அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் )
அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் )
ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் )
முத்தமோ மோகமோ ( பறக்கும் பாவை )
மல்லிகை முல்லை ( அண்ணன் ஒரு கோவில் )
நான் பாடும் பாடல் ( நான் ஏன் பிறந்தேன் )
மலர் கொடுத்தேன் ( திரிசூலம் )
கட்டித்தங்கம் ( தாயைக் காத்த தனையன் )
அந்தப் புறத்தில் ஒரு மஹராணி ( தீபம் )
நீயும் நானும் ( கெளரவம் )
தெய்வமே ( தெய்வ மகன் )
யாருக்காக ( வசந்த மாளிகை )
நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை )
பூமழைத் தூவி ( நினைத்ததை முடிப்பவன் )
வடிவேலன் மனசு ( தாயில்லாமல் நானில்லை )
பெற்ற விருதுகள்
பத்மசிறீ
கலைமாமணி விருது
மறைவு
இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர் சென்னையில் காலமானார்.



தெய்வப் பாடகர் ‘டி.எம்.எஸ்’ அவர்களின் பிறந்த தினம் தெய்வப் பாடகர் ‘டி.எம்.எஸ்’ அவர்களின் பிறந்த தினம் இன்றாகும்.
‘டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா போன்றோருக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர். பின்னணித் துறையில், ‘டி.எம்.எஸ்’ மற்றும் ‘பி.சுசீலா’ அவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்பாடல்களைப் பாடியுள்ளனர். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடிய டாக்டர் டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: மார்ச் 24, 1922
பிறந்த இடம்: மதுரை, தமிழ்நாடு, பிரிட்டிஷ் இந்தியா
தொழில்: பாடகர், நடிகர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தமிழ்நாட்டில் மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி, 1922 ஆம் ஆண்டில், மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது மூத்த சகோதரர், வேத நூல்களைக் கற்று அறிஞராகத் திகழ்ந்தவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
தன்னுடைய ஏழு வயதில் இருந்தே, தனது குரல்வளத்தின் மீது அக்கறைக் காட்டத் தொடங்கிய அவர், மதுரையிலுள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியின் இசை ஆசிரியராக இருந்த சின்னகொண்டா சாரங்கபாணி பாகவதர் என்பவரிடம் கர்நாடக சங்கீதம் கற்றார். பின்னர், காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக, இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்ற அவர், தனது 21வது வயதிலிருந்து தனியாக கச்சேரிகளில் பாடி வந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரிகளில் பாடிய அவரை, சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குனர் கவனித்தார். ஆகவே, அவரது அடுத்த படமான ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். இந்தப் படம், 1946ல் எடுக்கப்பட்டிருந்தாலும், 1950ல் தான் வெளியானது. இதில், டி.எம்.எஸ். அவர்கள் ஐந்து பாடல்கள் பாடியுள்ளார். இதுவே அவர் திரையுலகில் நுழைவதற்கான ஒரு வழியை வகுத்தது.
திரையுலக வாழ்க்கை
1950ல் வெளியான ‘கிருஷ்ண விஜயம்’ படத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டில் டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், ‘மந்திரி குமாரி’ என்ற படத்தில், ‘அன்னமிட்ட வீட்டிலே’ என்ற பாடலைப் பாடினார். பிறகு ‘தேவகி’, ‘சர்வாதிகாரி’ போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. 1951ல் வெளியான ‘தேவகி’ என்ற படத்தில் வந்த ‘தீராத துயராலே’ என்ற பாடலைப் பாடி, நடிக்கவும் செய்திருந்தார். 1952ல், ‘வளையாபதி என்னும் படத்தில், ஜமுனா ராணியுடன் இணைந்து இரண்டு பாடல்களைப் பாடினார். இதற்குப் பின், சில ஆண்டுகள் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் இருந்ததால், கே.வி. மகாதேவனுடன் இணைந்து பக்திப் பாடல்கள் பாடினார். 1955ல் வெளியான ‘செல்லபிள்ளை’ என்ற திரைப்படத்தில், ஆர். சுதர்சனம் அவர்களின் படைப்பான இரண்டு டூயட் பாடல்களை, எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து பாடினார்.
இதற்கிடையில், சிவாஜி கணேசன் அவர்களுக்குப் பின்னணிப் பாடிய சி.எஸ். ஜெயராமனுக்கு பதிலாக, டி.எம்.எஸ் அவர்களைப் பாட வைக்கும் நோக்கமாக மருதகாசி அவர்கள், அவரை இசையமைப்பாளார் ஜி. ராமநாதன் என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். ‘சிவாஜி கணேசன் அவர்களுடைய குரலுக்கு டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்துமா?’ என்று ஐயம் கொண்டார், இசையமைப்பாளார். ஆகவே, சிவாஜிக்கு, டி.எம்.எஸ்சை அறிமுகம் செய்து வைத்தார். ஒரிரண்டு சந்திப்புகளிலேயே, அவரது குரலைப் படித்த அவருக்கு, ‘சுந்தரி சௌந்தரி’ மற்றும் ‘ஏறாத மலைதனிலே’ என்ற பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் குரலைப் போலவே, அவர் பாடியதால், மிகவம் மகிழ்ச்சி அடைந்த ஜி. ராமநாதன், அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாட வாய்ப்பு வழங்கினார். மேலும், அப்படத்தின் எல்லா பாடல்களும் வெற்றிப் பெற்று, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், டி.எம்.எஸ் அவர்கள் மிகவும் பிரபலமானார். பின்னர், ஆர். ஆர். பிலிம்ஸ் தயாரிப்பான ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தில், ‘கொஞ்சும் கிளியானப் பெண்ணை’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பைக் கைப்பற்றினார், டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்ட எம்.ஜி.ராமசந்திரன் அவர்கள், அவரது குரல் வளத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவரது அடுத்த படமான ‘மலைக்கள்ளன்’ என்ற திரைப்படத்தில், தஞ்சை ராமையா தாஸ் எழுதிய ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்’ என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இந்தக் காலக்கட்டங்களில், இவருக்கு ‘வேடன் கண்ணப்பா’, ‘ரிஷி ஸ்ரிங்கார்’, ‘நீள மலைத் திருடன்’ போன்ற பாடங்களில் பாட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தது. பின்னர், ‘குமுதம்’ என்ற படத்தில், எம்.ஆர்.ராதா அவர்களின் குரலைப் பின்பற்றும் விதமாக, ‘சரக்கு இருந்தா அவுத்து விடு’ என்ற பாடலை, அவரைப் போலவே பாடி அனைவரின் மனத்தையும் கவர்ந்தார். 1955 ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிவாஜி அவர்களின் வற்புறுத்தலின் பேரில், அவருக்குப் பின்னணிப் பாடினார். 1977 ஆம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆரின் மறைவு வரை, மற்றும் 1995 வரை சிவாஜியின் மறைவு வரை அவர்கள் இருவருக்கும், அவரே பின்னணிப் பாடி வந்தார். 1950 களில் இருந்து 1980 வரை, தமிழ்த் திரையுலகின் பின்னணித் துறையில், முடிசூடாமன்னனாகத் திகழ்ந்தார்.
விருதுகளும், அங்கீகாரங்களும்
11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2500 பக்திப் பாடல்களையும் பாடி, பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து, பல பாடல்களுக்கு இசையமைத்து, ‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’, ‘கல்லும் கனியாகும்’ & ‘கவிராஜ காலமேகம்’ போன்ற சில தமிழ்ப் படங்களில் நடித்த டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பெற்ற விருதுகளும், அங்கீகாரங்களும் எண்ணிலடங்காதவை.
அவருக்குக் கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்களில் சில
2012 – ‘கைராலி ஸ்வராலயா யேசுதாஸ் விருது’
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி விருது’ பெற்றார்.
“பாரத் கலாச்சார் ” விருது
“சவுராஷ்டிரா சமூக அங்கீகாரம்” விருது
வாழ்நாள் சாதனையாளர் எம்.ஜி. ஆர் நினைவு விருது
வாழ்நாள் சாதனையாளர் சிவாஜி நினைவு விருது
‘பாடகர் திலகம்’, சிங்கக் குரலோன்’, ‘இசை சக்கரவர்த்தி’, இசைக்கடல்’, ‘எழிலிசை மன்னர்’, ‘குரலரசர்’, ‘டாக்டர்’ பட்டம் போன்ற பல்வேறு பட்டங்களையும் பெற்றுள்ளார்.
1964 – “அறிஞர் அண்ணாத்வாரியா அங்கீகாரம்” பெற்றார்.
மலேசிய, சிங்கப்பூர், பிரஞ்சு, ஐக்கிய ராஜ்யம், கனடா, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், மற்றும் பெர்த்தில் வாழும் தமிழ் ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பல முறைப் பெற்றுள்ளார்.
மறைந்த பிரதமர் திருமதி. இந்திரா காந்தி மற்றும் மொரார்ஜி தேசாய் அவர்களிடமிருந்து தனிப்பட்ட பாராட்டுப் பெற்றார்.
இந்திய ஜனாதிபதிகளான டாக்டர் சர்வபள்ளி ராதாக்ருஷ்ணன், வி.வி.கிரி, ஆர் வெங்கட்ராமன், மற்றும் ஜெயில் சிங் போன்றோரிடமிருந்தும் தனிப்பட்ட பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
டி.எம். சௌந்தரராஜன் அவர்கள், தனது 24வது வயதிலேயே, அதாவது மார்ச் 28 ஆம் தேதி, 1946 ஆம் ஆண்டில், சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மாகங்களும், மூன்று மகள்களும் உள்ளனர். தற்போது, அவர் தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள மந்தவளிப்பாக்கத்தில் வாழ்கிறார்.
மிகப் பிரபலமானப் பாடல்களில் சில
‘வசந்த முல்லை’ – சாரங்கதாரா
‘யாரடி நீ மோகினி’ – உத்தம புத்திரன்
‘முத்தைத்தரு’ – அருணகிரிநாதர்
‘பாட்டும் நானே’ – திருவிளையாடல்
‘வாழ நினைத்தால்’ – பலே பாண்டியா
‘கொடி அசைந்ததும்’ – பார்த்தால் பசி தீரும்
‘ஒளிமயமான எதிர்காலம்’ – பச்சை விளக்கு
‘மலர்களைப் போல் தங்கை’ – பாசமலர்
‘எத்தனை காலம்தான்’ – மலைக்கள்ளன்
‘திருடாதே பாப்பா’ – திருடாதே
‘காசேதான் கடவுளப்பா’ – சக்கரம்
‘தூங்கதே தம்பி’ – நாடோடிமன்னன்
‘பூ மாலையில்’ – ஊட்டி வரை உறவு
‘பொன்மகள் வந்தாள்’ – சொர்கம்
‘நிலவைப்பார்த்து வானம்’ – சவாளே சமாளி
‘எங்கே நிம்மதி’ – புதிய பறவை
‘அங்கே சிரிப்பவர்கள்’ – ரிக்சாகாரன்
‘ஏன் பிறந்தாய் மகனே’ – பாகப்பிரிவினை
‘உலகம் பிறந்தது எனக்காக’ – பாசம்
‘அதோ அந்த பறவை போல’ – ஆயிரத்தில் ஒருவன்
‘அன்று வந்ததும் அதே நிலா’ – பெரிய இடத்துப் பெண்
‘ஒரு ராஜா ராணியிடம்’ – சிவந்த மண்
‘மலர் கொடுத்தேன்’ – திரிசூலம்
‘தெய்வமே’ – தெய்வ மகன்
‘யாருக்காக’ – வசந்த மாளிகை
‘நான் ஆணையிட்டால்’ – எங்க வீட்டுப் பிள்ளை
காலவரிசை
1922: மதுரையில், மார்ச் 24 ஆம் தேதி ஒரு சௌராஷ்டிர பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
1946: தனது 24வது வயதிலேயே, அதாவது மார்ச் 28 ஆம் தேதி, சுமித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1946: ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தமானார்.
1952: ‘வளையாபதி என்னும் படத்தில், ஜமுனா ராணியுடன் இணைந்து இரண்டு பாடல்களைப் பாடினார்.
1955: 1955ல், வெளியான ‘செல்லபிள்ளை’ என்ற திரைப்படத்தில், எம்.எஸ். ராஜேஸ்வரியுடன் சேர்ந்து இரண்டு டூயட் பாடல்களைப் பாடினார்.
1977: 1977 ஆம் ஆண்டு வரை, எம்.ஜி.ஆரின் மறைவு வரை அவருக்குப் பின்னணிப் பாடினார்.
1995: 1995 வரை சிவாஜியின் மறைவு வரை அவருக்குப் பின்னணிப் பாடி வந்தார்.
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.



‘கௌ ரவம்’ படத்தின் பாடல் காட்சி ஒன்றில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு தளத்துக்கு வந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த அந்த பாடலின் ஒலிப்பேழையை ஓடவிட்டார் உதவி இயக்குநர். காட்சிக்கான உடைகளை அணிந்தபடி சிவாஜி பாடலை கேட்கத் துவங்கினார். ஒருதடவையல்ல... இருதடவையல்ல; கிட்டதட்ட 11 முறைக்கும் மேலாக பாடலை ஓடவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தபடி பாடலை கேட்டு முடித்த சிவாஜி படத்தின் இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரத்தை அழைத்து “சுந்தரா கொஞ்சம் டயம் கொடு...அப்புறம் சூட் பண்ணிக்கலாம்...”
Advertisement
எந்த பாடலையும் அதிகபட்சம் ஓரிருமுறை கேட்டுவிட்டு நடிக்கத் தயாராகும் சிவாஜியின் இந்த மாற்றத்தை கண்டு குழம்பிய சுந்தரம் “என்னண்ணே ஏதாவது பிரச்னையா...சூட்டிங்கை இன்னொரு நாள் வெச்சிடலாமா...? என்றார் பதறியபடி. “இல்லை சுந்தரா, அண்ணன் எனக்கு பெரிய சவாலை கொடுத்திருக்கிறார். இந்தப் பாடலை, தேர்ந்த நடிகனுக்குரிய உணர்ச்சிப் பிரவாகத்தோடு பாடியிருக்கிறார். பல்லவியில் ஒரு விதமான பாவம், ஆக்ரோஷம்…அடுத்த சரணத்தில்..இன்னொரு விதமான..தொனி. மற்ற சரணத்தில்…இன்னொரு பரிமாணம்…என பிச்சு உதறியிருக்கிறார். ஒரே வரியையே இரண்டு இடங்களில் இரண்டு விதமான தொனிகளில் பாடி அற்புதம் செய்திருக்கிறார். ஒரு நடிகனின் வேலையை அவர் செய்திருக்கும்போது ஒரு நடிகனாக நான் இன்னும் அதிகம் மெனக்கெட்டால்தான் நான் அவர் சவாலை எதிர்கொள்ளமுடியும்... காட்சியும் எடுபடும். அதனால் எனக்கு கொஞ்சம் ஒய்வு கொடு பிறகு நடித்துக்கொடுக்கிறேன்” என ஓய்வறைக்குள் புகுந்துகொண்டார் சிவாஜி.
Advertisement
உச்சி முதல் உள்ளங்கால்வரை நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் திலகத்துக்கு, தம் குரலிலேயே சவால் கொடுத்த அந்த பாடகர் டி.எம். சௌந்தரராஜன் என்கிற டி.எம்.எஸ்.!
கவுரவம் படத்தில் இடம்பெற்ற “ நீயும் நானுமா... கண்ணா நீயும் நானுமா...” என்ற அந்த பாடலில் சிவாஜிக்கு சவால் தந்த டி.எம்.எஸ்க்கு தபால் தலைவெளியிட்டு கவுரவம் செய்திருக்கிறது மத்திய அரசு. கடந்த 30-ம் தேதி இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த 10 ஆளுமைகளுக்கு தபால் தலை வெளியிட்டு கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய கலைஞர் டி.எம்.எஸ் மட்டுமே.
தமிழ்சினிமாவின் சாகாவரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரரான டி.எம். சவுந்தரராஜன், மதுரையில் 1923- ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி பிறந்தார். பிரபல வித்வான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றார். இசை ஞானம் அடைந்தபின் தன் அறிவை பெருக்கிக்கொள்ள சிறியதும் பெரியதுமான கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். தன் திறமையை மெருகேற்றிக்கொள்ள மதுரை சுற்றுப்புறங்களில் கோயில் பஜனைகளில் கூட சங்கடங்கள் இன்றி பாடுவார். டி.எம்.எஸ் திரையுலகில் நுழைய காரணம் அவரது குரல்வளம். ஆம் அவரது குரல் அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் குரலை ஒத்திருக்கும். “டேய் உன் குரலுக்கு பாகவதர் போல் நீ எங்கேயோ போகப்போறெ” என அவருக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை நண்பர்கள் ஏற்படுத்திவைத்தனர். கச்சேரிகளில் அவர் பாடுகிறபோது சற்று கண்ணை மூடிக்கேட்டால் தியாகராஜ பாகதவர்தான் நினைவுக்கு வருவார். தெய்வாதீனமாக அமைந்த இந்த குரல்வளம்தான் அவருக்கு சினிமா உலக கதவு திறக்க காரணமானது. புகழின் உச்சியில் இருந்த சமயம் தியாகராஜ பாகவதர் திருச்சியில் கச்சேரி செய்ய வந்திருந்தார். அதே கச்சேரியில் அவருக்கு முன்பு பாடிய சிறுவன் ஒருவனது குரல் அவரை ஈர்த்தது. ஆச்சர்யத்துடன் சிறுவனை அழைத்து பாடச் சொன்னார் பாகவதர். பாகவதரின் புகழ்பெற்ற பாடல் ஒன்றை அட்சரம் பிசகாமல் பாடிக் காண்பித்தான் சிறுவன். “சென்னைக்கு வா தம்பி நல்ல எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையாய் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் தியாகராஜபாகவதர். திரையுலக கனவில் மிதக்க ஆரம்பித்த சிறுவன் டி.எம்.சௌந்தரராஜன் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.
சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளியான கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரல் ஒலித்த முதல்பாடல். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடினார்.
மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்கு பாடிய எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடல் பட்டிதொட்டியெல்லாம் டி.எம்.எஸ் என்ற மந்திரக்குரலோனை கொண்டு சேர்த்தது. தொடர்ந்து திரையுலகில் டி.எம்.எஸ்ஸின் சகாப்தம் துவங்கியது.
எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. தம் குரல் வளம், இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத மற்ற பாடகர்களிடமிருந்து டி.எம்.எஸ் முற்றிலும் மாறுபட்டார். திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல...அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.
உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்...ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில ஃபார்முலாவில் பாடி அசரடிக்கும் திறமைசாலியாக உலாவந்தவர் டி.எம்.எஸ்.
பாடல்களை பாடுகிறபோது இசையமைப்பாளர் சொல்லிக்கொடுத்ததுபோல் நில்லாமல் பாடலை மெருகேற்ற பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வார் டி.எம்.எஸ். அதற்காக பாடலின் இசை அம்சங்களை தவிர்த்து பாடல்காட்சியின் சூழலையும் இயக்குநரிடம் கேட்டு தெரிந்துகொண்டு பாடுவது அவரது குணம். 'உயர்ந்த மனிதன்' படத்தில் இடம்பெறும் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' பாடல் நடுத்தர வயதைக் கடந்த கதாநாயகன் தன் பால்ய நினைவுகளை சுமந்தபடி தன் வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து பாடுவதாக காட்சி. படத்தின் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குநர் காட்சியை சித்தரித்திருந்தார். அதைக்கேட்டுக்கொண்ட டி.எம்.எஸ் ரிக்கார்டிங் நடந்த அறையில் பாடலை பாடியபடி தேவைப்பட்ட நேரத்தில் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சிக்கு தக்கபடி டி.எம்.எஸ் குரல் தத்ரூபமாக பாடல் காட்சிக்கு பொருந்தி பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.
வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும்,மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். முருகனுக்காக அவர் பாடி இசையமைத்த பாடல்கள் சாகாவரம்பெற்றவை.
மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம் விதிவிலக்கல்ல . திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ் தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுவார்.
“டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி, நான் உட்பட அரசியலில் பங்கெடுத்த நடிகர்களின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; அரசியல் வாழ்க்கையிலும் டி.எம்.எஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஆம்...தேர்தல் பிரசாரங்களுக்கு நாங்கள் செல்லும் இடங்களில் எத்தனை மணிநேரங்கள் நாங்கள் தாமதமாக சென்றாலும் மக்களை காத்திருக்கச்செய்தது, எங்களுக்காக அவர் குரல் கொடுத்து பாடிய பாடல்கள்தான். இப்படி எங்கள் அரசியல்வாழ்விலும் அவர் பங்கு முக்கியமானது" என வெளிப்படையாக சொன்னார் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இது நிதர்சனமும் கூட.
ஆனால் தன்னால் பயனடைந்த கதாநாயகர்கள் பின்னாளில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தபோதுகூட அவர்களின் சிறு பரிந்துரைக்கு கூட சென்று பல் இளிக்காத பண்பாளராக இறுதிவரை திகழ்ந்தார் டி.எம்.எஸ்.
கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார்.
அருணகிரிநாதர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை புகழ்ந்து “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடலை பாடியிருந்தார். தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ் இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட அவரது பையன்களில் ஒருவர், “அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா” என கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ்.
“வடநாட்டுக்கு ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என ஒரு முறை டி.எம்.எஸ் குறித்து சிலாகித்த வாலி, கர்நாடக பாடகர்களே கூட சமயங்களில் சுருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை இசைஞானம்” என புகழ்ந்தார்.
“ லட்ச ரூபாய் கொடுப்பதாக சொன்னாலும் டி.எம்.எஸ் சுருதி விலகி பாடமாட்டார். அதுதான் டி.எம்.எஸ்” என இன்னும் ஒரு படிமேலாக டி.எம்.எஸ் பற்றி எம்.எஸ்.வி குறிப்பிட்டார் ஒருசமயம்.
உண்மைதான், இசைக்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயங்காதவர் டி.எம்.எஸ். தான் இசையமைத்த ஒரு படத்தில் தன் இருமகன்கள் இசையுலகில் தலையெடுத்த நேரத்திலும் பாடலின் சுவைக்காக அவர்களை தவிர்த்து மற்றொரு புகழ்பெற்ற பாடகர் திருச்சி லோகநாதனின் மகனான டி.எல்.மகராஜனை பாடவைத்தார். பாடகருக்கு புகழ் கிடைக்கும் பாடல் என்று தெரிந்தும் இசைக்கே முக்கியத்துவம் அளித்து வேறொருவரை பாடவைத்த அவரது பண்பு ஆச்சர்யமானது.
தமிழை அட்சர சுத்தமாக அழகாக உச்சரித்து தமிழுக்கு பெருமை சேர்ந்த டி.எம்.எஸ், தமிழை தாய்மொழியாக கொண்டவரல்ல என்பது ஆச்சர்யமான தகவல்.
2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “செம்மொழியான தமிழ்மொழியாம்” என பாடியதுதான் இசையுலகில் டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடல். 3 தலைமுறையினரை தன் இனிய குரலால் மகிழ்வித்த 'மதுரை மாங்குயில்' டி.எம்.எஸ்ஸின் புகழ் தமிழர்கள் காதுகள் இல்லாது பிறக்கும் காலம் வரை நீடித்து நிலைக்கும்.





டி.எம்.சௌந்தரராஜன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
டி.எம்.எஸ்.... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்: தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்!
· டி.எம்.எஸ். என்பதில் உள்ள `எஸ் ’ என்றால், செளந்தரராஜன்: `எம் ’ என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்: `டி ’ என்பது அவரின் குடும்பப் பெயர் `தொகுளுவா ’, கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!
· டி.எம்.எஸ்- ஸீக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!
· மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.
· டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் `ராதே என்னை விட்டு ஓடாதேடி’ ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்!
· மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விஷேங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஒடியது!
· டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும் `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்.... ’ `உள்ளம் உருகுதய்யா முருகா ’, `சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, `மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!
· டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய
`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் ’
இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்திப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!
· `அடிமை பெண் ’ படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம்.
`பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு. அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். `ஆயிரம் நிலவே வா! ’
· பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர்.
`இல்லாட்ட ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா!
`பாவம், டி.எம்.எஸ்ஸீக்கு என்ன கஷ்டமோ! ’ ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு ’ என்பார்!
· கவிஞர் வாலியை த் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல். `இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ் போட்டது ’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி!
· `நீராரும் கடலுடுத்த.. ’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், `ஜன கண மன ’
என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்ஸீம் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!
· தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸீக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!
· `வசந்தமாளிகை ’ படத்தில் வரும்
`யாருக்காக ’ பாடலை பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி)
வைக்கச் சொன்னார். `அதெல்லாம் வீண் வேலை ’ என்று தயாரிப்பாளர் மறுத்துவிட
`எக்கோ எஃபெக்ட் ’ வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!
· வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் `யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு ’. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்தை விட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!
· காஞ்சிப் பெரியவர். புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை `கற்பகவல்லி ’ பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!
· கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்: அவன் காதலித்து வேதனையில் `சாக வேண்டும்’ என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் `சாகவேண்டும் ’ என்பதை
`வாடவேண்டும் ’ என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!
· நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையவாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு. பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போது தான்!
· எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி ஜெயலலிதா என அனைவைரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!
· `பாகப் பிரிவினை ’ படத்தின் 100- வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ். விழாவில் `கடவுள் வாழ்த்து ’
பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!
· `நவராத்திரி ’ படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
· `பட்டினத்தார், `அருணகிரிநாதர்’ என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!
· மத்திய அமைச்சர் மு.க அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ் பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்!
· தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.(அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)
· சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாராம் என்று டி.எம்.எஸ்ஸீக்கு எதுவும் இல்லை.
· எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ் சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!




வாழ்க்கை வரலாறு ;
டி.எம்.சவுந்திரராஜன், 1922, மார்ச் 24ம் தேதி, மதுரையில் பிறந்தார். திரையுலக பின்னணி பாடலில் சிகரம் தொட்ட இவர், பக்திப் பாடலிலும் முத்திரை பதித்தார். 1946ம் ஆண்டு முதல், திரையுலகில், 60 ஆண்டு காலம் பணியாற்றினார். வயது முதிர்வின் காரணமாக ஓய்வெடுத்து வந்தார்.
சிறு வயதில் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றார். பல ஆண்டுகள் கச்சேரியில் பாடியவருக்கு, 1950ம் ஆண்டு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது. சுந்தரராவ் நட்கர்னியின் "கிருஷ்ண விஜயம்' படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகதேடி' என்ற பாடலை பாடினார். "தேவகி' என்ற படத்தில் பாடி, நடிக்கவும் செய்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுக்கு இவர் பாடிய பாடல்கள், அழியாப் புகழ் பெற்றவை. 1950-90 வரை நடித்த முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் குரல் கொடுத்தார். தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும் பாடினார். இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தமிழ் செம்மொழி மாநாட்டு' பாடலை பாடினார். இந்தியாவின் முன்னணி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப் பாடல்களையும் பாடினார். மத்திய அரசு இவருக்கு 2003ம் ஆண்டு "பத்ம ஸ்ரீ' விருதளித்து கவுரவித்தது. தமிழக அரசின் "கலைமாமணி' உட்பட பல விருதுகளை பெற்றார்.
பட்டங்கள் ; இவரது திறமையை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் இவருக்கு ஏராளமான பட்டங்களை வழங்கின. பாடகர் திலகம், சிம்மக் குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், எழிலிசை மன்னர், குரல் அரசர் போன்றவை இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள்.
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...நீங்கிடாத துன்பம் பெருகுதே!
* ஏழிசை அரசருக்கு ரசிகர்கள் இசையாஞ்சலி
மதுரை : "இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்... அது இறைவன் அருளாகும்...!,' என்ற வைரவரிகளுக்கு வர்ணம் பூசியவர். பாடல்களில், வார்த்தைகளுக்கு உயிர்வார்த்தவர். வசீகரக் குரலால் இசைப்பிரியர்களின் உள்ளங்களை வளைத்து, மனதில் குடிகொண்டவர். தேனருவி போல் செவிகளுக்கு விருந்தளித்து, இசையுலகில் கோலோச்சியவர்... அவர் ,"ஏழிசை அரசர்' டி.எம்.சவுந்திரராஜன். அவர் உயிர், இவ்வுலகை விட்டுப்பிரிந்திருக்கலாம். ஆனால், அவரது குரலோசை வானம் உள்ளவரை வாழ்ந்து கொண்டிருக்கும். காற்றோடு கலந்து, நம் காதுகளில் ரீங்காரமிடும். அவர் பாடிய பாடலை, பொழுதெல்லாம் முணுமுணுத்து கொண்டிருக்கும் ரசிகர்களிடம், அவர் பாடல்களில் பிடித்த பாடல் என்ன என்று கேட்டோம்.
ரசிகர்கள் தங்களின் கண்ணீர் அஞ்சலியை... இசையாஞ்சலியாக... பொழிந்தனர்.
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே
வந்ததே... நண்பனே
நா.மம்மது (இசை ஆராய்ச்சியாளர், மதுரை): கவிஞர்கள் எந்த உணர்வில் பாடல்கள் எழுதினரோ, அதே உணர்வில், பொருளை புரிந்து கொண்டு பாடக்கூடிய திறமையாளர். மிகச்சிறந்த உச்சரிப்பு, குரலிசை, குரல் அழுத்தம் இருக்கும். பாடும்போது சுரத்தை அவரே எழுதி பாடுவார். இதனால், ராகங்களை துல்லியமாக வெளிக்கொணர முடிந்தது.
"மருதநாட்டு இளவரசி'யில் "பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா...' (மோகனராகம்), "அம்பிகாபதி'யில் "சிந்தனை செய் மனமே...'(கல்யாணிராகம்), "தாரங்கதாரா'வில் "வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்...' (சாருகேசி ராகம்) பாடல்களை சிறந்த பண்களுக்கு (ராகம்) உதாரணமாக இன்றும் இசை விமர்சகர்கள், இசையமைப்பாளர்கள் குறிப்பிடுவதுண்டு.
பாடல்களை மட்டுமல்ல வசனத்தையும் பாடக்கூடியவர். "உயர்ந்த மனிதன்' படத்தில் "அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே', "செல்வம்' படத்தில் "அவளா சொன்னாள்... இருக்காது, அப்படி எதுவும் நடக்காது...நம்ப முடியவில்லை...' என வசனத்தில் அமைந்த சிரமமான பாடல்களை, ரசிக்கும்படி எளிதாக பாடியவர்.
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே...
எம்.பி.சக்தி(குடும்பத்தலைவி, மதுரை): ""அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. நண்பனே... நண்பனே... நண்பனே... இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே... அது ஏன்... ஏன்... நண்பனே, சட்டி சுட்டதடா... கை விட்டதடா, கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா... கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... என்ற பாடல்களை ஆயிரக்கணக்கான முறை கேட்டுள்ளேன். என் மூச்சு உள்ளவரை பாடிக்கொண்டிருப்பேன்.
உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை
எல்.என்.சுப்பிரமணியன்(75 வயது ரசிகர், மதுரை): "உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை. எனக்காக்க உனையன்றி யாரும் இல்லை. முருகா... முருகா... முருகா...' என்ற டி.எம்.எஸ்.பாடலில் உயிரோட்டம் இருக்கும். இப்பாடலை எப்போது கேட்டாலும் அழுது விடுவேன். அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர். அவர் இறக்கவில்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒருபக்கம் பாக்குறா... ஒரு கண்ண சாய்க்குறா
டி.கே.சரவணன்(வர்த்தகர், மதுரை): "ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ...' மற்றும் "ஒருபக்கம் பாக்குறா... ஒரு கண்ண சாய்க்குறா... அவ உதட்டக்கடிச்சுக்கிட்டு அங்கே மெதுவா சிரிக்கிறா... சிரிக்கிறா...' என்ற பாடல்கள் தேன் வண்டு ரீங்காரம் இடுவதுபோல் செவிகளில் இன்றளவும் ரீங்காரமிடுகிறது. தேனினும் இனிய குரலோசை மன்னர் டி.எம்.எஸ்., குரல் சாகாது.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சாந்தி(குடும்பத்தலைவி, மதுரை): "ஆறுமனமே ஆறு. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு. இனும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே', என்ற பாடல் டி.எம்.எஸ்., இளைமை பருவத்தில் பாடியது. அந்தக்குரல் வேறொருவருக்கு இல்லை.
அச்சம் என்பது மடமையடா...
ரா.சொக்கலிங்கம் (கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர்):
மக்களிடம் உணர்வுகளை ஊட்டிய பாடல், "மன்னாதி மன்னன்' படத்திலுள்ள "அச்சம் என்பது மடமையடா'. "ஊட்டி வரை உறவு' படத்தில் தமிழ், ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பை எந்த வித கலப்புகளும் இல்லாமல் "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி' என்ற வரிகளால் வெளிநாட்டினரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு பாடி மகிழவைத்தார்.
எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்த்த முதல்தர பாடல்களில் "நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு', என்ற தத்துவ பாடல், அவரின் புகழை பன்மடங்கு மக்களிடம் எடுத்துச் சென்றது. "பொன்னூஞ்சல்' படத்தில் உள்ள "ஆகாய பந்தலிலே' பாடல் அந்த காலத்தில் ஒலி நாடா விற்பனையில் முதலிடம் பிடித்தது சாதனையாக பேசப்பட்டது.
மதுரையும் - டி.எம்.எஸ்ஸூம்
மதுரை : மதுரையில் பிறந்தவர் டி.எம்.சவுந்திரராஜன். அவரையும், மதுரையையும் பிரிக்க முடியாது. பின்னணி பாடகருக்கு, முதல்முறையாக ரசிகர் நற்பணி மன்றம் அமைத்து மதுரையில் தான். அதுவும் டி.எம்.எஸ்.,சிற்கு தான்! மதுரை தெற்குமாசிவீதி தெற்குகிருஷ்ணன் கோவிலை சேர்ந்த மீனாட்சி அய்யங்கார் - வெங்கிட அம்மாள் தம்பதிக்கு டி.எம்.சவுந்திரராஜன், பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி பாடல்களை பாடும் திறன் பெற்றார். மகனின் இசை ஞானத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த மீனாட்சி அய்யங்கார், இசை ஆர்வத்திற்கு அச்சாரம் போட்டார். சிறு வயதில் கோயில்கள், விழாக்களில் குரல் கொடுத்து வந்த டி.எம்.எஸ்., முதல் முறையாக 1946ல் வெளியான "கிருஷ்ண விஜயம்' என்ற சினிமாவில், ""ராதை என்னை விட்டு ஓடாதடி,'' என்ற பாடலை பாடி ரசிகர்களின் உள்ளங்களை பரவசப்படுத்தினார். முதல் பாடலே சர்வதேச அளவில் பேச வைத்தது. அடுத்தடுத்து டி.எம்.எஸ்., பாடிய 15 ஆயிரம் பாடல்கள், இசை எனும் இமயமலைக்கு அதிபதியாக்கியது.
சென்னையில் வசித்து வந்தாலும். அவர், அடிக்கடி மதுரைக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டார். மதுரை நரசிம்மபுரத்தில் முதல்முறையாக 1980ல் "அகில இந்திய டி.எம்.எஸ்., தலைமை நற்பணி மன்றம்' ஏற்படுத்தப்பட்டது. பின், இதே பகுதியில் 1986ல் "மதுரை நரசிம்மபுரம் பத்மஸ்ரீ டாக்டர் டி.எம்.எஸ். ரசிகர் மன்றம்' உதயமானது. இச்சங்களின் தலைவர் எம்.பி.பாலன் கூறுகையில், ""பின்னணி பாடருக்கு முதல்முதலில் ரசிகர் நற்பணி மன்றம் வைத்தது நாங்கள் தான். இம்மன்றங்கள் மூலம் ஆண்டு தோறும் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறோம். டி.எம்.எஸ்ஸின் 91வது பிறந்த நாள் விழாவை மதுரையில் நடத்த இருந்தோம். அவர், உடல் நிலை சரியில்லாததால் முடியாமல் போனது,'' என்றார்.
சவுராஷ்டிரா பள்ளியில் "வாக்கிங்' : தனலட்சுமி, சீனிவாசனை அடுத்து டி.எம்.எஸ்., பிறந்தார். இவரது இளைய சகோதரர் கிருஷ்ணமூர்த்தி, உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். மதுரையில் டி.எம்.எஸ்., இருக்கும்போது சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஏற்பாட்டில், கருணாநிதி தலைமையில், 2008ல் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சீனிவாசனின் பேரன் டி.எஸ்.ஆர்.மணிகண்டன், ""கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற தாத்தாவின் பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என தான் சொல்வேன். எங்கள் பரம்பரையில் மூத்த அவர் இறந்து விட்ட செய்தியை கேட்டதும் துவண்டு விட்டோம். எனினும், அவரது குரல் வாழ்ந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.
டி.எம்.எஸ்ஸின் கடைசி நிகழ்ச்சி ;
டி.எம்.சவுந்திரராஜன் - சுமித்ரா தம்பதிக்கு டி.எம்.எஸ்.பால்ராஜ், டி.எம்.எஸ். செல்வக்குமார் என்ற மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். தந்தை உயிருடன் இருக்கும்போதே மகன் செந்தூரனுக்கு திருமணம் செய்ய வேண்டும், என பால்ராஜ் தீர்மானித்தார். இந்நிலையில் டி.எம்.எஸ்ஸூக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். சற்று உடல் நலம் தேறிய அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் செந்தூரான், விஜயலட்சுமி திருமணம் மே 22ல் நடந்தது. அதை டி.எம்.எஸ்., முன்நின்று நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
டி.எம்.எஸ் - சங்கீத மும்மூர்த்திகள் ; "சங்கீத மும்மூர்த்திகள்' என தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்ஷிதர், ஷியாம சாஸ்திரிகள் ஆகியோர் அழைக்கப்படுவர். இவர்களின் பெயரின் ஆங்கில முதல்எழுத்து "டி' "எம்' "எஸ்' என வரும். ""சங்கீத மும்மூர்த்திகளின் பெயர்களை எனது இன்ஷியலில் பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம்,'' என டி.எம்.எஸ்., அடிக்கடி பெருமையாக கூறுவார்.
சவுராஷ்டிரா மொழியில் கடைசி பாடல் ; "வாலிபர்கள் சுற்றிய உலகம்' என்ற சினிமா 2005ல் வெளியானது. இப்படத்தில் டி.எம்.சவுந்திரராஜனும், பி.சுசிலாவும் இணைந்து பாடினர். அதன் பின் சினிமாவில் டி.எம்.எஸ்., பாடவில்லை. எனினும், சவுராஷ்டிரா மொழியில் "கெட்டி விடோ' (நிச்சயதார்த்தம்) எனும் தலைப்பில் ரசிகர் மன்றத் தலைவர் எம்.பி.பாலன் முயற்சியில் எடுக்கப்பட்ட படத்தில் டி.எம்.எஸ்., சவுராஷ்டிரா மொழியில் பாடினார். இதுவே, அவர் பாடிய கடைசிப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் திலீ்ப் நினைவு தினம் மே 25 .



நடிகர் திலீ்ப் நினைவு தினம் மே 25 .

திலீப் (இறப்பு: மே 25 , 2012 ) இந்திய நடிகர், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். 1980-களில் உச்சத்தில் இருந்த இவர்,
கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த
வறுமையின் நிறம் சிகப்பு மற்றும்
தூங்காதே தம்பி தூங்காதே முதலியவை மிகவும் பிரபலமானவையாகும். 1990-களில்
ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளிவந்த
வள்ளி திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் நடித்த ஞான் ஏகனன்னு மிகப்பெரிய வெற்றி பெற்றது, அத்திரைப்படத்தின் பாடல்கள் இன்று வரையிலும் கேரளாவில் பிரபலமாக உள்ளது. பெரும்பலான திரைப்படங்களில் இவர் கதையின் நாயகனுக்கு நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமலிருந்தார்.
குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1980 வறுமையின் நிறம் சிகப்பு
1982 ஞான் ஏகனன்னு மலையாளம்
1983 தூங்காதே தம்பி தூங்காதே
1988
சொல்ல துடிக்குது மனசு
சம்சாரம் அது மின்சாரம்
பெண்மணி அவள் கண்மணி
மாப்பிள்ளை
மரணம்
2012-ம் ஆண்டு மே மாதம், 25-ம் திகதி
மாரடைப்பு காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நடிகர் கார்த்திக் சிவகுமார் பிறந்த தினம் மே 25.



நடிகர் கார்த்திக் சிவகுமார் பிறந்த தினம் மே 25.

கார்த்திக் சிவகுமார் , சுருக்கமாக கார்த்தி, ஒரு தமிழ் திரைப்பட நடிகர் ;
இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடித்த முதல் திரைப்படம் பருத்தி வீரன் ஆகும்.
இவர் நடிகர் சிவகுமாரின் மகனும், நடிகர்
சூர்யாவின் தம்பியும் ஆவார்.
திருமணம்
இவரது திருமணம் திரு சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன்,
சூலை மாதம் 3 ஆம் தேதி 2011 அன்று
கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்திரம் கு
2007 பருத்தி வீரன் பருத்தி வீரன்
சி நட பி வி
தம சி வி
வி வி (சி அற நட
2010
ஆயிரத்தில் ஒருவன் முத்து
பையா சிவா
நான் மகான் அல்ல
ஜீவா பிரகாசம்
2011
சிறுத்தை
ரத்னவேல் பாண்டியன்,
ராக்கெட் ராஜா
கோ கார்த்திக் சிவகுமார்
(சி த
2012 சகுனி கமலக்கண்ணன்
2013
அலெக்ஸ் பாண்டியன்
அலெக்ஸ் பாண்டியன்
ஆல் இன் ஆல் அழகு ராஜா அழகுராஜா 201 வ
பிரியாணி சுகன்
2014 மெட்ராஸ் காளி
2015 கொம்பன் கொம்பையா பாண்டியன்
2016 தோழா
2016 காஷ்மோரோ 201 வ

நடிகர் கவுண்டமணி பிறந்த நாள் மே 25.




நடிகர் கவுண்டமணி பிறந்த நாள் மே 25.


கவுண்டமணி அவர்கள், தமிழகத்தின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘இந்தியன்’, ‘நாட்டாமை’, ‘மாமன் மகள்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘முறைமாமன்’, ‘சூரியன்’, ‘சின்னத்தம்பி’, ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஜென்டில்மேன்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என மேலும் பல திரைப்படங்களில், இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், ‘ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ உள்ளிட்ட பன்னிரெண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், செந்திலுடன் இணைந்து, சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர்களுடைய கூட்டணி, ஹாலிவுட்டின் ‘லாரல்-ஹார்டி’ ஜோடிக்கு இணையானவர்கள் எனப் புகழப்பட்டது. இவர் நடித்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ (வைதேகி காத்திருந்தால்), ‘அமாவாசை’ (புதிய வார்ப்புகள்), ‘விஷமுருக்கி வேலுசாமி’ (மண்ணுக்கேத்த பொண்ணு), ‘ஐடியா மணி’ (மை டியர் மார்த்தாண்டன்), ‘அஞ்சாத சிங்கம் மருதுபாண்டி’ (வரவு எட்டணா செலவு பத்தணா) போன்ற திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமாக ப்பேசப்பட்டது. ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், பல குணச்சித்திரக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, புகழின் உச்சியை அடைந்த கவுண்டமணியின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: மார்ச் 18, 1939
பிறப்பிடம்: வல்லகொண்டபுரம், கோயம்புத்தூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: நடிகர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
“சுப்பிரமணி” என்னும் இயற்பெயர்கொண்ட கவுண்டமணி அவர்கள், 1939 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், கோயமுத்தூர் மாவட்டதிலுள்ள “வல்லகொண்டபுரம்” என்ற இடத்தில் ‘கருப்பையா’, என்பவருக்கும், ‘அன்னாம்மாவிற்கும்’ மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்துவந்த கவுண்டமணி அவர்கள், நாடகங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, நாடக நடிப்பில் பெயர் பெற்று விளங்கினார். அதில் ஒரு நாடகத்தில் அவர் ஏற்று நடித்த “ஊர் கவுண்டர்” என்ற பாத்திரம் மிகவும் பிரபலமானதால், அன்று முதல் அவரை ‘கவுண்டமணி’ என அழைக்கத் துவங்கினர்.


தமிழ் சினிமாவில் கவுண்டமணி பயணம்
தன்னுடைய இருபத்தி ஆறாவது வயதில், நாடக உலகில் இருந்து சினிமா உலகத்திற்கு முதன் முதலாக கால்பதித்த கவுண்டமணி அவர்கள், தொடக்கக் காலத்தில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தார். 1976 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினிகாந்த் அவர்கள் கூறும் “இதெப்படி இருக்கு…?” என்ற வசனத்திற்கு, கவுண்டமணி பேசும் “பத்த வெச்சுட்டியே பரட்டை” என்ற டயலாக் ரசிகர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. தாம் நடித்த நான்காவது படத்திலேயே, தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையை உலகத்திற்கு வெளிபடுத்திய அவர், பின்னர் தமிழ் சினிமாவில் மற்றுமொரு நகைச்சுவை நடிகராக செந்திலுடன் இணைந்து, பல நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து பெரும் வெற்றிக்கண்டார். குறிப்பாக சொல்லப்போனால், எண்ணற்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த கவுண்டமணி-செந்தில் என்ற கூட்டணி படிப்படியாக பல வெற்றிப் படிகளில் கால்பதித்து, தமிழ் திரைப்படங்களில் ஒரு முக்கிய சக்தியாகவே மாற ஆரம்பித்துவிட்டது. செந்திலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வந்த ‘வாழைப்பழம் காமெடி’, ‘வைதேகி காத்திருந்தால்’ திரைப்படத்தில் ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘நாட்டாமை’ திரைப்படத்தில் ‘இந்த டகால்டி தானே வேணாங்கிறது’, ‘டேய் தகப்பா’, சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் ‘ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தபய பயப்புடுறான்’ என மேலும் பல திரைப்படங்களில் வெளிவந்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவைப் பதிவுகளாக இருந்து வருகிறது.
அதிலும், 1989 ஆம் ஆண்டு கங்கை அமரனின் இயக்கத்தில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் “வாழைப்பழம்” காமெடி மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியாக முத்திரைப் பதித்தது. மேலும் ‘நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி’ மற்றும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ (சூரியன்), ‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புடா சாமி’ (மாமன் மகள்), போன்றவை சினிமா உலகம் இருக்கும் வரை தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடையே என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், மேன்மை பொருந்திய குணச்சித்திர கதாபத்திரங்களிலும், பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், ‘இவர் ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ உள்ளிட்ட பன்னிரெண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
கவுண்டமணி நடித்த சில திரைப்படங்கள்
‘பதினாறு வயதினிலே’ (1977), ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ (1979), ‘நெற்றிக்கண்’ (1981), ‘பயணங்கள் முடிவதில்லை’ (1982), ‘அடுத்த வாரிசு’ (1983), ‘வைதேகி காத்திருந்தால்’ (1984), ‘கன்னிராசி’ (1985), ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ (1985), ‘ஜப்பானில் கல்யாண ராமன்’ (1985), ‘பாடும் பறவைகள்’ (1985), ‘நானே ராஜா நானே மந்திரி’ (1985), ‘இதயக் கோயில்’ (1985), ‘உதய கீதம்’ (1985), ‘மிஸ்டர் பாரத்’ (1986), ‘பேர் சொல்லும் பிள்ளை’ (1987), ‘நினைவே ஒரு சங்கீதம்’ (1987), ‘என்னப் பெத்த ராசா’ (1989), ‘கரகாட்டக்காரன்’ (1989), ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’ (1989), ‘மைடியர் மார்த்தாண்டன்’ (1990), ‘நடிகன்’ (1990), ‘நீங்களும் ஹீரோதான்’ (1990), ‘ஊரு விட்டு ஊரு வந்து’ (1990), ‘வாழ்க்கை சக்கரம்’ (1990), ‘பட்டணத்தில் பெட்டி’ (1990), ‘பாட்டுக்கு நான் அடிமை’ (1990), ‘ராஜாவின் பார்வை’ (1990), ‘சின்னத்தம்பி’ (1991), ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ (1991), ‘என் ராவின் மனசுலே’ (1991), ‘சேரன் பாண்டியன்’ (1991), ‘ரிக்ஷா மாமா’ (1992), ‘பங்காளி’ (1992), ‘திருமதி பழனிசாமி’ (1992), ‘மன்னன்’ (1992), ‘வில்லுப்பாட்டுக்காரன்’ (1992), ‘சின்ன கவுண்டர்’ (1992), ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ (1992), ‘சூரியன்’ (1992), ‘சின்னவர்’ (1992), ‘ஊர் மரியாதை’ (1992), ‘பெரிய கவுண்டர் பொண்ணு’ (1992), ‘உடன் பிறப்பு’ (1993), ‘ஜென்டில்மேன்’ (1993), ‘பொன்னுமணி’ (1993), ‘பொறந்த வீடா புகுந்த வீடா’ (1993), ‘எஜமான்’ (1993), ‘கோயில் காளை’ (1993), ‘சேதுபதி ஐபிஎஸ்’ (1994) ‘உழைப்பாளி’ (1993), ‘ராசகுமாரன்’ (1994), ‘ஜெய்ஹிந்த்’ (1994), ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ (1994), ‘தாய்மாமன்’ (1994), ‘ரசிகன்’ (1994), ‘கூலி’ (1995), ‘கர்ணா’ (1995), ‘முறை மாமன்’ (1995), ‘முறை மாப்பிளை’ (1995), ‘நாடோடி மன்னன்’ (1995), ‘லக்கிமேன்’ (1995), ‘மேட்டுக்குடி’ (1996), ‘இந்தியான்’ (1996), ‘டாட்டா பிர்லா’ (1996), ‘காதலர் தினம்’ (1999), ‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ (2001).
கவுண்டமணியின் நகைச்சுவை சொல்லாடல்கள் சில
‘நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி.’ (சூரியன்)
‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.’ (சூரியன்)
‘நான் ரொம்ப பிஸி.’ (சூரியன்
‘நாட்டுல இந்தத் தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா.’ (மன்னன்)
‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.’
‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புட சாமி.’ (மாமன் மகள்)
‘பெட்டர்மாஸ் லைடேதான் வேணுமா, கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்டர்மாஸ் லைட் தர்றதில்லை.’ (வைதேகி காத்திருந்தால்)
‘இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது.’ (வைதேகி காத்திருந்தால்)
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு என்று, ஒரு தனி இடத்தை பிடித்த கவுண்டமணி அவர்கள், தன் பெயருக்கு முன்னாள் எந்தப் பட்டங்களும் போட்டுக் கொள்ள விரும்பாத அற்புத மனிதர். குறிப்பாக சொல்லப்போனால், இதுவரை தமிழ் சினிமாவில் நடித்த நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் கவுண்டமணி அவர்களுக்கு தனியிடம் உண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கல்வியறிவு எதுவும் இல்லாமல், நாடக நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கி, அதன் பிறகு, சினிமா துறையில் கால்பதித்து, சுமார் 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.



லொள்ளு மன்னன் கவுண்டமணி பற்றி....

கவுண்டமணி....கல கல மணி!

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டரின் பிறந்த தினமான இன்று (மே 25) அவரின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...

* 'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்!

* கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்!

* பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்!

* அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

* கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது 'மிஸ்டர் பெல்' என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!



* மிகப் பிரபலமான கவுண்டமணி - செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!

* இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

* கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட 'சரி' என்பார். 'இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!

* உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. 'பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

* திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்!

* சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்!

* கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

* புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி!

* ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

* கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

* கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டுக்கொள்ளப் பிடிக்காது. 'என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!' என்பார்.

* ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

* ஷ¨ட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!

* கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். 'நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது... ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்' என்பார்!

* எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!

* டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். 'மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

* கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'நடிகன்'. 'அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்!

* 'மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

* 2010-ல் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

* ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!