வெள்ளி, 30 ஜூன், 2017

பாடகர் ஏ. எம். ராஜா பிறந்த தினம் ஜூலை 1, 1929.



பாடகர் ஏ. எம். ராஜா பிறந்த தினம் ஜூலை   1, 1929.

ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா (சூலை 1, 1929 - ஏப்ரல் 8, 1989)
தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை
தமிழ் , தெலுங்கு , கன்னடம் மற்றும்
மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி .
வாழ்க்கைக் குறிப்பு
ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.
திரையிசைப் பாடகராக
இசையார்வம் கொண்ட ஏ. எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார். கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச். எம். வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப் படமான
சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு
இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.
1951 இல் கே. வி. மகாதேவன் ஏ. எம். ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில்
அழியாத காதல் வாழ்வில்... என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை
கருநாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப் பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான முகமது ரஃபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தனக்கே உரித்தான பாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா.
துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ. எம். ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச்செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான ஆடாத மனமும் ஆடுதே, பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா , ஓகோ எந்தன் பேபி போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல்.
மைனர் லைஃப் ரொம்ப ஜாலி போன்ற பாடலகளையும் அவர் தன் பாணியில் பாடியுனார். முறையான கர்நாடக இசைப்பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ. எம். ராஜா மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித் தெளிவுடன் இயல்பாக பாடினார். மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் கலையே என் வாழ்க்கையின் வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல். தேன்நிலவு படத்தில் வரும் காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.
அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட வாடிக்கை மறந்ததும் ஏனோ , கண்மூடும் வேளையிலும் போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட நிலவும் மலரும், இதய வானின் உதய நிலவே , கண்ணாலே நான் கண்ட கணமே போன்றவை அவரது குரலின் அழகை முழுக்கக் காட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ. எம். ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மாசிலா உண்மைக்காதலே ( அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ),, கண்களின் வார்த்தைகள் புரியாதோ' (களத்தூர் கண்ணம்மா) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.
ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ. எம். ராஜா எம்.ஜி.ஆர் ,
சிவாஜி கணேசன் , என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ் , ஜெமினி கணேசன் , சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும், ஜெமினியின் பாடற்குரலாகவே விளங்கியவர் ஏ. எம். ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில், கல்யாணப்பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை புகழ்பெற்றவை.
நடிகராக
ஏ. எம். ராஜா சில படங்களில் நடித்திருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப் பற்றிய படமான 'பக்க இந்தி அம்மாயி' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுவாக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்தி அம்மாயி' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ. எம். ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் நடித்தார்.
1955இல் மகேஸ்வரி என்ற படத்தின் அழகு நிலவின் பாவனையிலே என்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது. ஜிக்கி ஏ. எம். ராஜா தம்பதியின் குழந்தைகளில் சந்திரசேகர் ஓரளவு தந்தையின் குரலையும் இசைத்திறனையும் கொண்டவர்.
ஏ. எம். ராஜாவும் ஜிக்கியும் தான்
பம்பாய்க்குச் சென்று இந்திப் படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் 'ன்' படத்துக்காக. இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹயே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடும் முறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் அதி மதுர அனுராகா போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார்.
சிங்களப் படத்தில்கூட அவர் பாடியிருக்கிறார்.
இசையமைப்பாளராக
இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த "சோபா". அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக்கியது.
1959இல் வந்த கல்யாணப்பரிசு இயக்குநர்
ஸ்ரீதரின் முதல் படம். தமிழில் இசையமைப்பாளராக ஏ. எம். ராஜாவுக்கும் அதுவே முதல் படம். "வாடிக்கை மறந்தது ஏனோ" போன்ற காதல் பாடல்கள் "காதலிலே தோல்வியுற்றாள்" போன்ற துயரப்பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. இதைத் தொடர்ந்து, தேன் நிலவு , விடிவெள்ளி போன்ற ஸ்ரீதரின் படங்களுக்கும்
ஆடிப்பெருக்கு போன்ற பல வேறு படங்களுக்கும் இசை அமைத்தார். ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் பி. சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..' என்ற பாடல் புகழ்பெற்ற ஒன்றாகும்.
வேறு மொழிகளில்
தமிழ் , தெலுங்கு , மலையாளம் என மூன்று தென்னிந்திய மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ. எம். ராஜா மட்டுமே. 1952இல் வி. தட்சணாமூர்த்தியின் இசையமைப்பில்
லோகநீதி என்ற படம் வழியாக ஏ. எம். ராஜா மலையாள திரையுலகில் நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச் சொற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. ஆனாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர். கேரளத்தின் முதல் 'சூப்பர் ஸ்டாரா'ன சத்யனின் குரலாக புகழ்பெற்ற ஏ. எம். ராஜா அறுபதுகளில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார். .
ராஜாவின் பல முக்கியமான பாடல்களுக்கு தேவராஜன் இசையமைத்தார். ராஜா பாடிய
பெரியாறே பெரியாறே போன்றபாடல்கள் தமிழ்நாட்டிலும் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தன. பொதுவாக எவரையும் புகழ்ந்து சொல்லாதவரும் குறைவாகப் பேசுபவருமான தேவராஜன் ராஜாவின் குரலின் இனிமையையும் சுருதி சுத்தத்தையும் மட்டுமில்லாது அவரது இனிய குணத்தையும், அர்ப்பணிப்பையும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். வடக்கு கேரளத்தின் காதல்பாட்டுகளான 'மாப்பிளைப்பாட்டு'களின் சாயலில் அமைந்த பல பாடல்களை ராஜா பாடியிருக்கும் விதம் அந்தப் பண்பாட்டின் சாரத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்து இன்றும் மலையாளிகளின் நெஞ்சங்களில் வாழ்கிறது. உதாரணமாக 'உம்மா' படத்தில் வரும் 'பாலாணு தேனாணு ' என்றபாடலில் என் சைனபா ! என்ற அழைப்பில் ராஜா தன் குரல்மூலம் அளிக்கும் உணர்ச்சிகரமான நெகிழ்வு அதை மறக்கமுடியாத காதல்பாடலா க்குகிறது. கேரளத்தின் என்றும் அழியாத இசைப்பாடல்களில் பல ஏ. எம். ராஜாவின் குரலில் ஒலிப்பவையே. காச கங்கையுடெ கரையில்.. போன்றபாடல்களை மலையாளத் திரையிசையின் 'கிளாசிக்'குகளாகவே சொல்லலாம்.
தெலுங்கில் ஏ. எம். ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் அப்பு சேஸி பாப்பு கோடு படத்தில் இடம்பெற்ற 'மூகாவைனா எமி லே' [தமிழில் 'போதும் இந்த ஜாலமே' ]இன்றும் ஆந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 1954 'விப்ரநாராயணா' படத்தில் இடம்பெற்ற 'சூடுமடே செலியா' 'பாலிஞ்சர ரங்கா', 1957ல் அக்கா செல்லுலு ப்டத்தில் இடம்பெற்ற அந்து மாமிடி போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. தமிழில் நீங்காப் புகழ்பெற்ற 'மாசிலா உண்மைக்காதலே' தெலுங்கில் வந்த 'பிரியதமா மனசு மரேனா' என்ற பாடத்தான். [லிபாபா 40 தொங்கலு]. அலாதீன் அற்புத தீபம் படத்தில் இடம்பெற்ற 'அண்டால கொனெட்டிலோனா' [1957] 'அமர சந்தேசம் 'படத்தில் இடம்பெற்ற 'ஏதோ நவீன பாவம்' என அவரது அழியாப்பாடல்களின் பட்டியலைப் பெரிதும் நீட்டமுடியும்.
பிற்காலம்
நடுவே திரைவாழ்க்கையில் ஏ. எம். ராஜாவுக்கு ஓர் இடைவெளி விழுந்தது. தன் மெல்லிசைக் கச்சேரிகள் மூலமாக அவர் வாழ்க்கையை நடத்தினார். பல வருடங்கள் கழித்து எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் வி. குமார் ஏ. எம். ராஜாவை மீண்டும் பாடவைத்தார். ரங்கராட்டினம் படத்துக்காக ஏ. எம். ராஜா பாடிய முத்தாரமே உன் ஊடல் என்னவோ? , புகுந்தவீடு படத்துக்காக ராஜா பாடிய செந்தாமரையே செந்தேனிதழே... ஆகியன குறிப்பிடத்தக்கதாக அமைந்தன. இரு பாடல்களும் சங்கர் கணேஷ் இசையமைத்தவை. 1973இல்
வீட்டுமாப்பிள்ளை படத்தின் வழியாக இசையமைப்பாளராகவும் ஏ. எம். ராஜா மறுவருகை புரிந்தார். அதில் வந்த ராசி நல்ல ராசி ஒரு வெற்றிப்பாடல். 1975இல் 'எனக்கொரு மகன் பிறப்பான்' படத்திற்காகவும் ஏ. எம். ராஜா இசையமைத்தார். இக்காலகட்டத்தில் 'தாய்க்கு ஒரு பிள்ளை', 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'பத்துமாத பந்தம்', 'அன்பு ரோஜா', 'இது இவர்களின் கதை' போன்ற பல படங்களுக்காக தொடர்ந்து பாடினார். 1970இல் ஏ. எம். ராஜா மலையாளத்தில் 'அம்ம எந்ந ஸ்திரீ' படத்திற்கு இசையமைத்தார். ஜிக்கியும் எழுபதுகளில் ஒரு மீள்வரவை நிகழ்த்தினார். 1970இல் 'காதலெனும் காவியம்' முதல் 1993 ல் இளையராஜா- விஸ்வநாதன் இசையில் 'செந்தமிழ்பாட்டு' படத்தில் 'வண்ணவண்ண மெட்டெடுத்து' வரை அந்தப் பயணம் நீண்டது.
மறைவு
ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டு இருந்தார். 1989, ஏப்ரல் 8 ஆம் நாள் தேதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் தொடருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் தொடருந்தைத் தவறவிட்டு விட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோயில் - நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் புகையிரத நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால்தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார்.

வியாழன், 29 ஜூன், 2017

நடிகர் அர்விந்த்சாமி பிறந்த நாள் 30 ஜூன் 1967.



நடிகர் அர்விந்த்சாமி பிறந்த நாள் 30 ஜூன் 1967.

அர்விந்த்சாமி (பிறப்பு: 30 ஜூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய் , மின்சார கனவு , இந்திரா , தேவராகம் ,
அலைபாயுதே என்பன அவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் சில.
இளமை வாழ்வு
அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று
தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம் வளர்ந்தார்.
திரைப்பட வாழ்வு
அவரது திரைப்பட அறிமுகம்
மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரோஜாவும் பம்பாயும் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.
தனி வாழ்வு
அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் எம் பி ஏ பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.
அர்விந்த்சாமி 1994ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். [2]
திரைப்படங்கள்
ஆண்டு பெயர் வேடம்
1991 தளபதி அர்ஜூன்
1992 ரோஜா ரிசிக்குமார்
1993 மறுபடியும் கெளரி சங்கர்
1993 டாடி
1993 பாசமலர்கள்
1995 பம்பாய் சேகர்
1995 மௌனம்
1995 இந்திரா தியாகு
1996 தேவராகம் விஷ்னு
1997 சாத் ரங் கே சப்னே மஹிபல்
1997 மின்சார கனவு தாமஸ்
1997 புதையல் Koti
1999 என் சுவாசக் காற்றே அருண்
2000 அலைபாயுதே ஐஏஎஸ் அதிகாரியாக
2002
ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா
மோஹித் குமார்
2005 சாசனம் முத்தையா
2012 கடல் பாதர்
2015 தனி ஒருவன்
பழநி (சித்தார்த் அபிமன்யு)

நடிகர் ஹரீஷ் கல்யாண் பிறந்த நாள் ஜூன் 29 ,



நடிகர் ஹரீஷ் கல்யாண் பிறந்த நாள்   ஜூன் 29 ,

ஹரீஷ் கல்யாண் (பிறப்பு: 29 ஜூன், 1990) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர்
சிந்து சமவெளி , அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா , பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பிறந்த நாள் ஜூன் 29.



இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா  பிறந்த நாள் ஜூன் 29.

கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் ஆவார்.

இசையமைத்துள்ள சில திரைப்படங்கள்
மாணிக்கம்
உல்லாசம்
அலெக்சாண்டர்
நாம் இருவர் நமக்கு இருவர்
உள்ளம் கொள்ளை போகுதே
டும் டும் டும்
ஆல்பம்
ரகசியமாய்
குடைக்குள் மழை
நெறஞ்ச மனசு
நாளை
மனதோடு மழைக்காலம்
சகாப்தம.

திங்கள், 26 ஜூன், 2017

தமிழிசைக் கலைஞர் எம். எம். தண்டபாணி தேசிகர் நினைவு தினம் ஜூன் 26 , 1972 .



தமிழிசைக் கலைஞர் எம். எம். தண்டபாணி தேசிகர் நினைவு தினம் ஜூன் 26 , 1972 .

எம். எம். தண்டபாணி தேசிகர் (பிறப்பு: ஆகத்து 27 , 1908 - சூன் 26 , 1972 ) ஒரு தமிழிசைக் கலைஞர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். பல தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
வாழ்க்கைச் சுருக்கம்
தண்டபாணி தேசிகர் சென்னை மாகாணம்
நன்னிலத்துக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டங்குடி என்ற ஊரில் முத்தையா தேசிகருக்கு மகனாகப் பிறந்தார். மாணிக்க தேசிகர், கும்பகோணம் ராசமாணிக்கம் பிள்ளை ஆகியோரிடம் இசைப் பயிற்சி பெற்றார். தெருவெங்கும் திருப்பாக்களைப் பாடி, தேவாரப் பாடகாசிரியராக அமர்ந்திருந்த தண்டபாணி தேசிகரை பட்டினத்தார் திரைப்படம் அவரைச் சென்னைக்கு இழுத்து வந்தது. பட்டினத்தார், நந்தனார் உட்படப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1952 தியாகராசர் ஆராதனை சம்பவம்
1952 தியாகராசர் ஆராதனை விழாவில் தண்டபாணி பாட அழைக்கப்பட்டார். அவரின் வழமை போல அவர் தமிழ்ப் பாட்டு ஒன்றோடு தொடங்கினார். பின்னர் அவர் தெலுங்கு, சமசுகிருத பாடல்களைப் பாடினார். இறுதியாக அவரின் வழமை போல தமிழ்ப் பாட்டோடு முடித்தார். தமிழ்ப் பாடல்களைப் பாடியது அங்கிருந்தவர்களுக்கு ஆத்திரம் ஊட்டியது. இவர் பாடி முடித்தவுடன் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தனர். பல கருநாடக இசைக் கலைஞர்கள், நாளிதழ்கள் இவரைக் கடுமையாக விமர்சித்தன. தமிழ்ப் பாடல்களால் தியாகராசர் ஆராதனையில் புனிதத்தை கலைத்து விட்டதாகக் அவர்கள் சாடினார்கள். [1]
நடித்த திரைப்படங்கள்
பட்டினத்தார் (1936)
வள்ளாள மகாராஜா (1937)
தாயுமானவர் (1938)
மாணிக்கவாசகர் (1939)
நந்தனார் (1942)
திருமழிசை ஆழ்வார் (1948)
விருதுகளும் பட்டங்களும்
சங்கீத சாகித்திய சிரோமணி பட்டத்தை 1951 ஏப்ரல் 3 ஆம் நாள் எம். பக்தவத்சலம் வழங்கிக் கௌரவித்தார்.
சங்கீத கலாசிகாமணி விருது , 1955, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (மிருணாளினி சாராபாய் தலைமை)
இசைப்பேரறிஞர் விருது , 1957 ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்
சங்கீத நாடக அகாதமி விருது , 1969

சனி, 24 ஜூன், 2017

இயக்குநர் ஜீவா நினைவு தினம் ஜூன் 25, 2007.



இயக்குநர்  ஜீவா நினைவு தினம் ஜூன் 25, 2007.

ஜீவா, (பிறப்பு 21 செப்டம்பர் 1963 , இறப்பு 25 ஜூன் 2007 )இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஆவார்.
இவர் பல இளம் நடிகர்களை அறிமுகப்படுத்தியும் உள்ளர். ஷாம், ஆர்யா, வினய், அசின், தனிஷா(தமிழில்) ஆகியோர் இவரின் அறிமுகங்களே. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை தனது படங்களுக்கு பயன்படுத்தும் இவர் பல சிறந்த இசை வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளார் (12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே). இவர் ரஷ்யாவில் மாரடைப்பினால் 44 ஆவது வயதில் மரணமடைந்தார்.
திரைப்படங்கள்
இயக்குநராக
2001 12B
2003 ரன் (ஹிந்தி)
2005 உள்ளம் கேட்குமே
2007 உன்னாலே உன்னாலே
2008 தாம் தூம் - முடிவடையவில்லை.
ஒளிப்பதிவாளராக
1993 ஜென்டில்மேன்
1994 காதலன்
1995 ஆசை
1996 இந்தியன்
1997 உல்லாசம்
1999 வாலி
2000 குஷி
2000 சிநேகிதியே
2001 12B
2002 ரன்
2005 சச்சின்
2005 உள்ளம் கேட்குமே
2005 சண்டக்கோழி
2007 உன்னாலே உன்னாலே
2008 தாம் தூம்

நகை பூஜா பிறந்த நாள் ஜூன் 25.



நகை பூஜா பிறந்த நாள் ஜூன் 25.

பூஜா தமிழ் , சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகையாவார். இவர்
மணிரத்னத்தின் நேற்று இன்று நாளை நிகழ்ச்சியிலும் பங்குபற்றுகிறார். ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
திரைப்பட விபரம்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2003 ஜே ஜே சீமா த
2004 அட்டகாசம் சுவப்னா த
2005 உள்ளம் கேட்குமே த
2005 ஜித்தன் பிரியா த
2006 அஞ்சலிகா அஞ்சலிகா,
உத்ரா ச
2006 பட்டியல் சந்தியா த
2006 தம்பி அர்ச்சனா த
2006 தகப்பன்சாமி மரிக்கொழுந்து சண்முகம் த
2007 பொறி பூஜா த
2007 பந்தயக் கோழி செண்பகம் ம
2007 ஆசை மண் பியபன்னா ரன்ம்லி / மலீசா ச
2007 ஓரம் போ ராணி த
2007 யகலூவோ மனோராணி ச
2009 நான் கடவுள் அம்சவள்ளி த
2009 தநா -07 AL 4777 த

2010
சுவந்த தெனுன ஜீவிதே
ரேஷ்மி ச
2010 துரோகி ரோஜா த
2010 ஆரஞ்ச் மீனாட்சி த
2011 ஸ்மோக்கிங் கில்ஸ் பூஜா
2012 குச பிரபா பபாவதி ச
2012 மிராஜ் பிரியா
2013 விடியும் முன் ரேகா த
2014
கடவுள் பாதி மிருகம் பாதி
சிறப்புத் தோற்றம் த
2016 பத்தினி கண்ணகி ச

பூஜா நடித்துள்ள இந்திய திரைப்படங்கள்
ஜே ஜே -ஆ. மாதவன்
அட்டகாசம் -அஜித் குமார்
உள்ளம் கேட்குமே -ஸாம்
ஜித்தன் -ரமேஸ்
பட்டியல் -பரத்
தம்பி -ஆ. மாதவன்
தகப்பன்சாமி -பிரசாந்த்
பொறி -ஜீவா
ஓரம் போ -ஆர்யா
நான் கடவுள் -ஆர்யா
மிராஜ் (ஆங்கிலம் திரைப்படம்) -அபிஷேக்

வெள்ளி, 23 ஜூன், 2017

இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் ( M. S. Viswanathan ). ஜூன் 24 , 1928.



இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் ( M. S. Viswanathan ). ஜூன் 24 , 1928.

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் ( M. S. Viswanathan ), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 - 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர்
கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி) விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ் , மலையாளம் ,
கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
தெலுங்கு , இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

வாழ்க்கை

தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு
கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.  இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.

இசை பயணம்
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள்  . தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும்
பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள் .
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல்
சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு , செந்தமிழ்ப் பாட்டு ,
செந்தமிழ் செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார்  . 1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர்
ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில்
சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது
நடிகராக விஸ்வநாதன்
கண்ணகி, காதல் மன்னன் , காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங் , கிருஷ்ணன் பஞ்சு , ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான
நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா ,
அ. இ. ரகுமான், கங்கை அமரன் , தேவா,
யுவன் சங்கர் ராஜா , ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் [6] .
இசையமைத்த திரைப்படங்கள்
தமிழ் - 800 திரைப்படங்கள்
மலையாளம் - 80 திரைப்படங்கள்
தெலுங்கு - 30 திரைப்படங்கள்
கன்னடம் - 15 திரைப்படங்கள்
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
முதன்மைக் கட்டுரை: எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
இராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.


முதன்மைக் கட்டுரை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான பாடல்களில் சில:
1. எங்கே தேடுவேன் (பணம்)
2. மயக்கும் மாலை (குலேபகாவலி)
3. குறுக்கு வழியில் (மகாதேவி)
4. முகத்தில் முகம் (தங்கப்பதுமை)
5. செந்தமிழ் தேன்மொழியாள் (மாலையிட்ட மங்கை)
6. தென்றல் உறங்கிடும் (பெற்ற மகனை விற்ற அன்னை)
7. ஆடைகட்டி (அமுதவல்லி)
8. ஏன் பிறந்தாய் மகனே (பாகப்பிரிவினை)
9. தங்கத்திலே ஒரு குறை (பாகப்பிரிவினை)
10. ஆடாத மனமும் (மன்னாதி மன்னன்)
11. பிறக்கும் போதும் (கவலை இல்லாத மனிதன்)
12. பாலிருக்கும் பழமிருக்கும் (பாவமன்னிப்பு)
13. அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)
14. ஜல் ஜல் ஜல் (பணம்)
15. காலங்களில் அவள் (பாவமன்னிப்பு)
16. மாலைப் பொழுதின் (பாக்யலெட்சுமி)
17. மலர்களைப்போல் தங்கை (பாசமலர்)
18. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
19. பால்வண்ணம் (பாசம்)
20. பாலும் பழமும் (பாசம்)
21. உடலுக்கு உயிர்காவல் (மணப்பந்தல்)
22. வாராய் என் தோழி (பாசமலர்)
23. அத்திக்காய் காய் (பலே பாண்டியா)
24. தேவன் கோயில் (மணியோசை)
25. எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்)
26. கல்லெல்லாம் மாணிக்க (ஆலயமணி)
27. கொடி அசைந்ததும் (பார்த்தால் பசி திரும்)
28. மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
29. ஓடம் நதயினிலே (காத்திருந்த கண்கள்)
30. பொன்னை விரும்பும் (ஆலயமணி)
31. பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
32. பூஜைக்கு வந்த மலரே (பாதகாணிக்கை)
33. நினைப்பதெல்லாம் ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
34. பொறந்தாலும் ( போலிஸ்காரன் மகள் )
35. ரோஜா மலரே ( வீர திருமகன் )
36. சொன்னது நீதானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
37. உள்ளம் என்பது ஆமை ( பார்த்தால் பசி திரும் )
38. வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
39. வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
40. வீடுவரை உறவு ( பாத காணிக்கை )
41. இந்த மன்றத்தில் ( போலிஸ்காரன் மகள் )
42. அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
43. அத்தை மடி ( கற்பகம் )
44. அவள் பறந்து போனாளே ( பார் மகளே பார் )
45. கண்கள் எங்கே ( கர்ணன் )
46. நெஞ்சம் மறப்பதில்லை ( கர்ணன் )
47. நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
48. பார் மகளே பார் ( ஆனந்த ஜோதி )
49. பனி இல்லாத ( ஆனந்த ஜோதி )
50. பாரப்பா பழனியப்பா ( பெரிய இடத்துப் பெண் )
51. பக்கத்து வீட்டு ( கற்பகம் )
52. பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
53. உள்ளத்தில் நல்ல உள்ளம் ( கர்ணன் )
54. ஆடவரெல்லாம் ( கருப்புப் பணம் )
55. ஆயிரத்தில் ( கை கொடுத்த தெய்வம் )
56. ஆரோடும் மண்ணில் ( பழனி )
57. அமைதியான நதி ( ஆண்டவன் கட்டளை )
58. அவளுக்கென்ன ( சர்வர் சுந்தரம் )
59. அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
60. அவள் மெல்ல சிரித்தாள் ( பச்சை விளக்கு )
61. அத்தை மகள் ரத்தினத்தை ( பணக்கார குடும்பம் )
62. அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
63. எனக்கொரு மகன் ( பணம் படைத்தவன் )
64. என்ன பார்வை ( காதலிக்க நேரமில்லை )
65. ஹலோ மிஸ் ( என் கடமை )
66. சிட்டுக் குருவி ( புதிய பறவை )
67. அண்ணன் என்னடா ( பழனி )
68. இந்த புன்னகை ( தெய்வத் தாய் )
69. நான் ஒரு குழந்தை ( படகோட்டி )
70. ஒளிமயமான எதிர்காலம் ( பச்சைவிளக்கு )
71. கண் போன போக்கிலே ( பணம் படைத்தவன் )
72. பறக்கும் பந்து பறக்கும் ( பணக்கார குடும்பம் )
73. பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
74. சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் )
75. மூன்றெழுத்தில் என் ( தெய்வத்தாய் )
76. தொட்டால் பூ மலரும் ( படகோட்டி )
77. தங்கரதம் ( கலைக்கோயில் )
78. அதோ அந்த பறவை ( ஆயிரத்தில் ஒருவன் )
79. சின்ன சின்ன கண்ணனுக்கு ( வாழ்க்கை படகு )
80. என்ன என்ன வார்த்தைகளோ ( வெண்ணிற ஆடை )
81. காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
82. கண்ணன் வருவான் ( நெஞ்சிருக்கும் வரை )
83. குமரிப் பெண்ணின் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
84. தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
85. நேற்றுவரை நீ யாரோ ( வாழ்க்கைப் படகு )
86. உன்னை நான் சந்தித்தேன் நீ ( ஆயிரத்தில் ஒருவன் )
87. யார் அந்த நிலவு ( சாந்தி )
88. ஹலோ மிஸ்டர் ஜமின்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
89. நான் மாந்தோப்பில் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
90. சித்திரமே ( வெண்ணிற ஆடை )
91. பூ முடிப்பாள் ( நெஞ்சிருக்கும் வரை )
92. விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )
பெற்ற விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது , 2003
கலைமாமணி விருது
மதிப்புறு முனைவர் பட்டங்கள் - 2
மறைவு
எம். எஸ். விஸ்வநாதன் 14 சூலை 2015 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.



இரண்டு தலைமுறையை இசையில் தாலாட்டி மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்கள்...
எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24.
அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத் தட்ட 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!
நடிக்கவும் ஆர்வம். 'கண்ணகி' படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, 'காதல் மன்னன்', 'காதலா... காதலா' உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார்எம்.எஸ்.வி.
Advertisement
இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி, கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!
மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!
குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரி தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!
இஷ்ட தெய்வம் முருகன். எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் 'முருகா முருகா'தான்!

மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோகசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார். அது, தமிழ் சினிமாவின் பொற்காலம்!
சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக,உச்சஸ் தாயியில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை. 'பாசமலர்' படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!
எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப் பட்டது வரலாறு. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!
மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இப்பவும் நடிகர்
களுக்கு காபி, டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவையோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்!
இளையராஜாவோடு சேர்ந்து, 'மெல்லத் திறந்தது கதவு', 'செந்தமிழ்ப் பாட்டு', 'செந்தமிழ் செல்வன்' என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!
'புதிய பறவை' படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு 'எங்கே நிம்மதி' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். 'பாகப் பிரிவினை' படத்தில் 'தாழையாம் பூ முடிச்சு' பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!
தன் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது மனைவியைத் தன் தாய்போல் கருதி, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக் காட்டியவர் சந்திரபாபு!

தமிழ்த் தாய் வாழ்த்தான 'நீராடும் கடலுடுத்த' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் 'பட்டத்து ராணி' பாடலும், பெர்சியன் இசையை 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது'விலும், ஜப்பான் இசையைப் 'பன்சாயி, காதல் பறவை'களிலும், லத்தீன் இசையை 'யார் அந்த நிலவிலும்', ரஷ்ய இசையைக் 'கண் போன போக்கிலே கால் போகலாமா'விலும், மெக்சிகன் இசையை 'முத்தமிடும் நேரமெப்போ' பாடலிலும் கொண்டுவந்தார்!
'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற 'முத்தான முத்தல் லவோ' பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல். 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!
இந்தியாவில் முதன்முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.விதான். சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!
பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாத மாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!
சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப் பட்டுப் பாடி இருக்கிறார்கள்!
வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக்கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!
'அத்தான்... என்னத்தான்...' பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்புகிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்' என்று ஒருமுறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம்!
நன்றி விக்கிபீடியா..,விகடன்.

கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24 .1927 .


கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24 .1927 .

கண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17 ,1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும்,
அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

குடும்பம்

கண்ணதாசனுக்கு முதல் திருமணம்
பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு: மே 31 , 2012 ) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
,. கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.
கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
அரசியல் ஈடுபாடு
அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
மறைவு
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல்
சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல்
அமெரிக்காவிலிருந்து அவரது சடலம்
சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.


மணிமண்டபம்
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறைக்கான பங்களிப்புகள்
திரையிசைப் பாடல்கள்
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்
கதை எழுதிய திரைப்படங்கள்
ராஜா தேசிங்கு
வசனம் எழுதிய திரைப்படங்கள்
நாடோடி மன்னன்
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
மதுரை வீரன்
இலக்கியப் படைப்புகள்
கவிதை நூல்கள்
காப்பியங்கள்
1. மாங்கனி
2. பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
3. ஆட்டனத்தி ஆதிமந்தி
4. பாண்டிமாதேவி
5. இயேசு காவியம்
6. முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்
1. கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2.
2. கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, காவியக்கழகம், சென்னை
3. கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
4. கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி
5. கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி
6. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி
7. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி
8. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி
9. பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்
1. அம்பிகை அழகுதரிசனம்
2. தைப்பாவை
3. ஸ்ரீகிருஷ்ண கவசம்
4. கிருஷ்ண அந்தாதி
5. கிருஷ்ண கானம்
கவிதை நாடகம்
1. கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு
1. பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
2. பஜகோவிந்தம்
புதினங்கள்
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
அரங்கமும் அந்தரங்கமும்
அதைவிட ரகசியம்
ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
ஒரு கவிஞனின் கதை
காமினி காஞ்சனா
காதல் கொண்ட தென்னாடு
சிவப்புக்கல் மூக்குத்தி
சிங்காரி பார்த்த சென்னை
சுருதி சேராத ராகங்கள்
சுவர்ணா சரஸ்வதி
ரத்த புஷ்பங்கள்
நடந்த கதை
மிசா
முப்பது நாளும் பவுர்ணமி
தெய்வத் திருமணங்கள்
வேலங்குடித் திருவிழா
விளக்கு மட்டுமா சிவப்பு
பிருந்தாவனம்
சிறுகதைகள்
1. குட்டிக்கதைகள்
2. மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
3. செண்பகத்தம்மன் கதை
வாழ்க்கைச்சரிதம்
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
சமயம்
அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
01. 02. 03. 04. 05. ஞானம் பிறந்த கதை 06. நெஞ்சுக்கு நிம்மதி 07. 08. போகம் ரோகம் யோகம் 09. 10. உன்னையே நீ அறிவாய்
நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
உரை நூல்கள்
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
1. பகவத் கீதை
2. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
3. திருக்குறள் காமத்துப்பால்
4. சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
5. சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
பேட்டிகள்
1. கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
2. சந்தித்தேன் சிந்தித்தேன்
வினா-விடை
1. ஐயம் அகற்று
2. கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது ( சேரமான் காதலி படைப்பிற்காக)



"காலமெனும் ஆழியிலும்
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!
கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும்.
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (ஜூன் 17 தேதி) பிறந்த நாள்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது.
சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்.


ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது.
ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.
கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.
பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.
கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது.
ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.
அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை.
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின.
”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.
தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.
கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.


கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.
“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.
கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை.
ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.
”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.
இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.
”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.
காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!
கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்
* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.
* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.
* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான்.
* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.
*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.


'கவியரசு' கண்ணதாசன் - பிரபல கவிஞர், பாடல் ஆசிரியர்
பல்லாயிரக்கணக்கான கவிதைகள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற 'கவியரசு' கண்ணதாசன் (Kannadasan) பிறந்த தினம் இன்று (ஜூன் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி யில் (1927) பிறந்தவர். இயற் பெயர் முத்தையா. சிறு வயதில் வேறொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டார். அங்கு 'நாராய ணன்' என அழைக்கப்பட்டார். சிறுகூடல்பட்டியில் ஆரம்பக்கல்வி யும், அமராவதிபுதூர் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு வரையும் பயின்றார்.
* சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் 'கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கி னேன்..' என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.
* சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 'கிரகலட்மி' பத்திரிகையில் வெளியான 'நிலவொளியிலே' என்பதுதான் இவரது முதல் கதை. புதுக்கோட்டையில் ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரிய ராக உயர்ந்தார். 'சண்டமாருதம்', 'திருமகள்', 'திரை ஒலி', 'தென்றல்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.
* கம்பர், பாரதியாரிடம் ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். 'கண்ணதாசன்' என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதினார். காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.
* சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார். 'கன்னியின் காதலி' படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதற்கிடையே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.
* 'பாகப்பிரிவினை' படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து 'பாசமலர்', 'பாவமன்னிப்பு', 'படிக்காத மேதை' உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின. தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.
* 'பராசக்தி', 'ரத்தத் திலகம்', 'கருப்புப் பணம்', 'சூரியகாந்தி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக படம் தயாரித்ததுதான் இவருக்கு கைகொடுக்கவில்லை. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.
* மேலே யாரோ எழுதிவைத்ததை கடகடவென்று படிப்பதுபோல அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டுமாம்! 'இயேசு காவியம்', 'பாண்டமாதேவி' உள்ளிட்ட காப்பியங்கள், பல தொகுதிகளாக வெளிவந்த 'கண்ணதாசன் கவிதைகள்', 'அம்பிகை அழகு தரிசனம்' உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் படைத்தார்.
* கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, 'வன வாசம்' என்பது உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார். இவரது 'அர்த்தமுள்ள இந்துமதம்' 10 பாகங்களாக வெளிவந்தது. 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். 'குழந்தைக் காக' திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.
* ஆழமான, புதிரான வாழ்வியல் கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன், உடல்நலக் குறைவு காரணமாக 54-வது வயதில் (1981) மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

புதன், 21 ஜூன், 2017

நடிகை தேவயானி Devayani , பிறந்த நாள் ஜூன் 22, 1974.



நடிகை தேவயானி  Devayani , பிறந்த நாள் ஜூன் 22, 1974.

தேவயானி ( Devayani , பிறப்பு: சூன் 22, 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் சுஷ்மா . திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ் ,
தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
திருமணம் வாழ்க்கை
தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில்
திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் ஏப்ரல் 9 , 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது. இத்தம்பதியருக்கு
இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திரைப்பட வரலாறு
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
1993 சாத் பென்சொமி
1994 கின்னாரி புழையோரம்
1995
தொட்டா சிணுங்கி ரம்யா
தில் கா டாக்டர்
ஆசான் ராஜாவு அப்பன் ஜிதாவு
திரி மென் ஆர்மி சுபா
காக்கக்கும் பூசாக்கும் கல்யாணம்
லதா .எஸ்.பிள்ளை
1996
கல்லூரி வாசல் நிவிதா
சோட்டா சா கர்
காதல் கோட்டை கமலி
பூமணி
சிவசக்தி
மகாத்மா சரஸ்வதி
கின்னம் கட்ட கள்ளன்
மிஸ்டர். கிலியன்
காதில் ஒரு கின்னரம்
1997
விவசாயி மகன்
காதலி
பெரிய இடத்து மாப்பிள்ளை
சூரிய வம்சம் நந்தினி.


1998
சுஷ்வாகதம் சந்யா
உதவிக்கு வரலாமா மைதிலி
கிழக்கும் மேற்கும்
மறுமலர்ச்சி
சொர்ணமுகி சொர்ணமுகி
நினைத்தேன் வந்தாய் சாவிதிரி
மூவேந்தர் வைதேகி
பூந்தோட்டம்
செந்தூரம்
உனக்கும் எனக்கும் கல்யாணம்
என் உயிர் நீ தான்
புதுமை பித்தன் ஆர்தி
சிரிமதி வொல்லோஸ்தா

1999
தொடரும் சீதா ஆனந்து
கும்மிப்பாட்டு
நீ வருவாய் என நந்தினி
ஒருவன் நந்தினி
பிரேமோத்சவா
நிலவே முகம் காட்டு கஸ்தூரி
பாட்டாளி சகுந்ததலா
மாணிக்யம்
2000 முதல் 2013 வரை
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2000
வல்லரசு அஞ்சலி வல்லரசு
அப்பு சீதா
என்னம்மா கண்ணு காயத்திரி
பாரதி செல்லமால் பாரதி
தெனாலி சைலஜா கைலாஸ்


2001
கண்ணுக்கு கண்ணாக தேவி
என் புருசன் குழந்தை மாதிரி
விண்ணுக்கும் மண்ணுக்கும் தேவயானி
ஆனந்தம் பாரதி
பிரண்ட்ஸ் பத்மினி அரவிந்து
சுந்தரபுருஷன்
நினைக்காத நாளில்லை கவிதா
2002
விவரமான ஆளு அப்பு
அழகி வளர்மதி சண்முகம்
கோட்டை மாரியம்மன்
பஞ்சதந்திரம் நிர்மலா
தென்காசிப் பட்டணம் சங்கீதா
குருவம்மா குருவம்மா
சமஸ்தானம் திவ்யா
படை வீட்டம்மன் சாமுண்டி
சென்னகேசவா ரெட்டி
2003
காதலுடன் கவிதா
பீஷ்மர் கௌரி பீஷ்மர்
பாலேட்டன் ராதிகா

2004
நானி நானியின் அம்மா
நியூ பப்புவின் அம்மா
கிரி
செம ரகளை
செந்தாழம் பூவே
சௌம்யம்
2005 நரன் ஜானகி
2009 ஐந்தாம் படை கல்பனா
2010 ஒரு நாள் வரும் ராஜலெட்சுமி
2011 சர்க்கார் காலனி
2013 திருமதி தமிழ்
வங்காளம் திரைப்படம்
துஷொர் கோ துளி
தொலைக்காட்சி
ஆண்டு நாடகம் பாத்திரம் மொழ
2003–2009 கோலங்கள் அபினயா தமிழ்
2007-08 மஞ்சள் மகிமை சௌந்தர்யா தமிழ்
2010-11 கொடி முல்லை
மலர்க் கொடி/அன்னக்கொடி தமிழ்
2011-12 முத்தாரம்
ரஞ்சனி தேவி / சிவரஞ்சனி
தமிழ்

விருதுகள்
2000 - ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது
2004 - சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதுகள். - கோலங்கள்
2008 - முதல் இடம் - சிறந்த நடிகைக்கான விவெல்லின் சின்னத்திரை விருதுகள் - ( கோலங்கள்)
2010 - நியமிக்கப்படுதல் - சிறந்த நடிகைக்கான சன் குடும்பம் விருது - ( கோலங்கள்)
2010 - ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது
2011 - பிக் ஃஎப்எம்மின் தமிழ் பொழுதுபோக்கு மிகுந்த பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நடிகைக்கான விருதுகள் - ( கொடி முல்லை)

நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22 , 1974.


நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22 , 1974.

விஜய் (பிறப்பு: சூன் 22 , 1974 ; இயற்பெயர்: ஜோசப் விஜய்) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எசு. ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்று அழைக்கிறார்கள்.
திரைப்படத்துறை
விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு . பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தற்பொழுது, விஜய்க்காக தளபதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள் . எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.

அரசியல்

2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில்
அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.

திரைப்பட விபரம்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு படம் வேடம்
2017 பைரவா பைரவா
2016 தெறி
விஜய் குமார்(விஜய்) / ஜோசெப் குருவில்லா / தர்மேஸ்வர்
2015 புலி மருதீரன்/புலிவேந்தன்
2014 கத்தி கதிரேசன்/ஜீவானந்தம்
2014 ஜில்லா ஷக்தி
2013 தலைவா விஷ்வா
2012 ரவுடி ரதோர்
2012 துப்பாக்கி ஜெகதீஸ்
2012 நண்பன்
பஞ்சவன் பாரிவேந்தன் / பாரி / கொசக்சி பசப்புகழ்
2011 வேலாயுதம் வேலு(எ)வேலாயுத
2011 காவலன் பூமிநாதன்
2010 சுறா சுறா
2009 வேட்டைக்காரன் போலிஸ் ரவி
2009 வில்லு புகழ்
2008 பந்தயம் விஜய்
2008 குருவி வெற்றிவேல்
2007 அழகிய தமிழ் மகன் குரு / பிரசாத்
2007 போக்கிரி சத்தியமூர்த்தி தமிழ்
2006 ஆதி ஆதி
2005 சிவகாசி முத்தப்பா / சிவகாசி
2005 சுக்ரன் சுக்ரன்
2005 சச்சின் சச்சின்
2005 திருப்பாச்சி சிவகிரி
2004 மதுர மதுரைவேல்
2004 கில்லி சரவணவேலு / கில்லி
2004 உதயா உதயக்குமரன்
2003 திருமலை திருமலை
2003 புதிய கீதை சாரதி
2003 வசீகரா பூபதி
2002 பகவதி பகவதி
2002 யூத் சிவா
2002 தமிழன் சூர்யா
2001 ஷாஜகான் அசோக்
2001 பத்ரி பத்ரி
2001 பிரெண்ட்ஸ் அரவிந்த்
2000 பிரியமானவளே விஜய்
2000 குஷி சிவா
2000 கண்ணுக்குள் நிலவு கௌதம்
1999 மின்சாரக் கண்ணா கண்ணன்/காசி
1999 நெஞ்சினிலே கருணாகரன்
1999 என்றென்றும் காதல் விஜய்
1999 துள்ளாத மனமும் துள்ளும் குட்டி
1998 நிலாவே வா சிலுவை
1998 பிரியமுடன் வசந்த்
1998 நினைத்தேன் வந்தாய்
கோகுல கிருஷ்ணன்
1997 காதலுக்கு மரியாதை ஜீவானந்தம்
1997 நேருக்கு நேர் விஜய்
1997 ஒன்ஸ்மோர் விஜய்
1997 லவ் டுடே கணேஷ்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணன்
1996 செல்வா செல்வா
1996 மாண்புமிகு மாணவன் சிவா
1996 வசந்த வாசல் விஜய்
1996 பூவே உனக்காக ராஜா
1996 கோயம்புத்தூர் மாப்ளே பாலு
1995 சந்திரலேகா ரகீம்
1995 விஷ்ணு விஷ்ணு
1995 ராஜாவின் பார்வையிலே விஜய்
1994 தேவா தேவா
1994 ரசிகன் விஜய்
1993 செந்தூரப் பாண்டி ' விஜய்
1992 நாளைய தீர்ப்பு விஜய்
1987 சட்டம் ஒரு விளையாட்டு விஜய்
1985 நான் சிவப்பு மனிதன் விஜய்
1984 வெற்றி விஜய்

பாடிய பாடல்கள்

இவர் சில திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார். அவை,
ஆண்டு பாடல் படம்
2016 செல்ல குட்டி தெறி
2015 ஏன்டி ஏன்டி புலி
2014 லெட்ஸ் டெக் ய செல்ஃபி புல்ல கத்தி
2014 கண்டாங்கி கண்டாங்கி ஜில்லா
2013 வாங்கண்ணா வணக்கங்கண்ணா தலைவா
2012 கூகுள் கூகுள் துப்பாக்கி
2005 வாடி வாடி சச்சின்
2002
கொக்கா கோலா பகவதி
உள்ளத்தைக் கிள்ளாதே தமிழன்
2001 என்னோட லைலா பத்ரி
2000
மிசிச்சிப்பி நதி குலுங்க பிரியமானவள
சின்னஞ்சிறு கண்ணுக்குள் நிலவு
இரவு பகலை கண்ணுக்குள் நிலவு
1999 தங்கநிறத்துக்கு நெஞ்சினிலே
1998
டிக் டிக் டிக் துள்ளி திரிந் காலம்
ரோட்டுல ஒரு பெரியண்ணா
தம்மடிக்கிற ஸ்டைல பாத்து பெரியண்ணா
காலத்துக்கு ஒரு கனா வேலை
சந்திர மண்டலத்தை நிலாவே வா
நிலவே.. நிலவே நிலாவே வா
மௌரிய மௌரிய ப்ரியமுடன்
1997
ஓஹ பேபி பேபி மற்றும் என்னை தாலாட்ட வருவாளா
காதலுக்கு மரியாதை
ஊர்மிளா ஊர்மிளா ஒன்ஸ் மோர்
1996
சிக்கன் கரே செல்வா
அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் ஏறி
காலமெல்லாம் காத்திருப்பே
திருப்பதி போனா மொட்ட
மாண்புமிகு மாணவன்
1995 பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி
கோயம்புத்தூ மாப்ளே
1994 தொட்டபெட்டா விஷ்ணு
1994
அய்யய்யா அலமேலு ஆவின் பசும்பாலு
தேவா
1994 கோத்தகிரி குப்பம்மா தேவா

விருதுகள்

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்
காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது
திருப்பாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள்
விருது திரைப்படங்கள் ஆ
நாளைய சூப்பர் ஸ்டார்
திருப்பாச்சி, சிவகாசி 2006
இந்த ஆண்டின் கேளிக்கையாளர்
போக்கிரி, அழகிய தமிழ் மகன் 2007
விருப்பமான நாயகன் வேட்டைக்காரன் 2009
இந்த ஆண்டின் கேளிக்கையாளர் நண்பன்,துப்பாக்கி 2012
விருப்பமான நாயகன் துப்பாக்கி 2012
பிற விருதுகள்
கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது
போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
துப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருத

இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் நினைவு தினம் சூன் 21, 2001.



இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் நினைவு தினம்   சூன் 21, 2001.

கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட
இசையமைப்பாளர் ஆவார். தமிழ்,
தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாட்டின் தென்பகுதியில்
நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர்
திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.
பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து
பம்பாய் ஐதராபாத் , தில்லி , நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.
திரைப்படத் துறையில்
1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)
1941 - 1950
1. மனோன்மணி (1942)
2. பக்த ஹனுமான் (1944)
1951 - 1960
1. மதன மோகினி (1953)
2. நல்லகாலம் (1954)
3. டவுன் பஸ் (1955)
4. சம்பூர்ண ராமாயணம் (1956)
5. முதலாளி (1957)
6. நல்ல இடத்து சம்பந்தம் (1958)
7. நீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)
8. நாலு வேலி நிலம் (1959)
9. சொல்லுத்தம்பி சொல்லு (1959)
10. பாஞ்சாலி (1959)
11. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் (1959)
12. ஆட வந்த தெய்வம் (1960)
13. பாவை விளக்கு (1960)
14. படிக்காத மேதை (1960)
15. கைதி கண்ணாயிரம் (1960)
16. எங்கள் செல்வி (1960)
17. சிவகாமி (1960)
18. தங்கம் மனசு தங்கம் (1960)
19. தங்கரத்தினம் (1960)
1961 - 1970
1. தாய் சொல்லை தட்டாதே (1961)
2. தாயைக்காத்த தனயன் (1962)
3. கவிதா (1962)
4. குடும்பத்தலைவன் (1962)
5. சாரதா (1962)
6. வடிவுக்கு வளைகாப்பு (1962)
7. வளர் பிறை (1962)
8. மாடப்புறா (1962)
9. அன்னை இல்லம் (1963)
10. இருவர் உள்ளம் (1963)
11. லவகுசா (1963)
12. வானம்பாடி (1963)
13. குலமகள் ராதை (1963)
14. குங்குமம் (1963)
15. கன்னித்தாய் (1965)
16. எங்க வீட்டுப் பெண் (1965)
17. திருவிளையாடல் (1965)
18. தாலி பாக்கியம் (1966)
19. சரஸ்வதி சபதம் (1966)
20. கந்தன் கருணை (1967)
21. திருமால் பெருமை (1968)
22. தில்லானா மோகனாம்பாள் (1968)
23. தெய்வீக உறவு (1968)
24. எதிரொலி (1970)
25. விளையாட்டுப் பிள்ளை (1970)
1971 - 1980
1. வசந்த மாளிகை (1972)
2. உத்தமன் (1976)
3. சத்யம் (1976)
1980 - 1990
1. பதில் சொல்வாள் பத்ரகாளி (1986)
வெளியான ஆண்டு தெரியாதவை
1. அக்கினி புராண மகிமை

விருதுகள்
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)
சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது (1969, அடிமைப் பெண் )
சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, சங்கராபரணம் )
சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது (தெலுங்கு) (1992, சுவாதி கிரணம்)
கலைமாமணி விருது
மறைவு
கே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்.


கே.வி.மகாதேவன் 10

# கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவிலில் (1918) பிறந்தவர். தந்தை கோட்டுவாத்திய இசைக் கலைஞர். சிறு வயதிலேயே இவருக்கு இசையில் நாட்டம் இருந்ததால் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை.
# தந்தையிடம் இசை பயின்றார். பிறகு பூதபாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக குருகுல முறையில் சில ஆண்டுகள் இசை பயின்றார். அங்கரை விஸ்வநாத பாகவதரின் குழுவில் இணைந்து டெல்லி, மும்பை, ஹைதராபாத், நாக்பூர் ஆகிய நகரங்களில் கச்சேரி செய்தார்.
# ஸ்ரீபாலகந்தர்வ கான சபாவில் 13 வயதில் சேர்ந்தார். பெண் வேடமேற்று பாடி, நடித்தார். வேறு சில நாடக கம்பெனிகளிலும் நடித்தார். சென்னையில் சில காலம் ஒரு ஹோட்டலில் வேலை செய்தார். நாடக ஆசிரியர் சந்தானகிருஷ்ண நாயுடு சிபாரிசில் வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது.
# பிரபல இசை அமைப்பாளர் டி.ஏ.கல்யாணம் இவரது இசை ஞானத்தை அடையாளம் கண்டு தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். 1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நிரந்தர இசை அமைப்பாளராகச் சேர்ந்தார். 1942-ல் மனோன்மணி திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார்.
# 1950-களின் மத்தியில் டவுன் பஸ், முதலாளி, மக்களைப் பெற்ற மகராசி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பேரும் புகழும் பெற்றார். பாடலுக்குப் பொருத்தமான இசையை வழங்குவது இவரது சிறப்பம்சம். சுமார் ரகப் படங்கள்கூட, கண்ணதாசன் வரிகளாலும், இவரது இசையமைப்பாலும் தோல்வியைத் தழுவாமல் தப்பித்தன.
# தமிழகத்தில் மட்டுமின்றி, தெலுங்கு மண்ணிலும் பெரிதும் கொண்டாடப்பட்ட இசை அமைப்பாளராக முத்திரை பதித்தார். இவரது நீண்ட நெடிய இசைப் பயணத்தில் யார் மனதும் புண்படும்படி இவர் நடந்துகொண்டதே இல்லை.
# ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில், மாறிவரும் நவீனத் திரையிசை சூழலுக்கு ஏற்ப கச்சிதமாகப் பொருந்தும் வகையில் இசையமைத்தார். பாடலாசிரியர்கள் விரும்பும் இசையமைப்பாளர் என்றும் புகழப்பட்டார்.
# ‘திரையிசைத் திலகம்’ என்று போற்றப்பட்ட இவருடைய பாடல்கள் சங்கீத நுட்பம் நிறைந்ததாக இருக்கும். திரை இசையில் சாஸ்திரிய இசை, நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்தார்.
# மதன மோகினி திரைப்படத்தில் பி.லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். கந்தன் கருணை, சங்கராபரணம் படங்களுக்காக இவருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதுகள் கிடைத்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழில் 218 படங்களுக்கு இசை அமைத்தார்.
# தனது அற்புதமான இசையமைப்பில் ஏராளமான பாடல்களை வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கே.வி.மகாதேவன் 83 வயதில் (2001) மறைந்தார்.

திங்கள், 19 ஜூன், 2017

நடிகை நீத்து சந்திரா Nitu Chandra , பிறந்த நாள் ஜூன் 20 , 1984 .



நடிகை நீத்து சந்திரா Nitu Chandra , பிறந்த நாள் ஜூன் 20 , 1984 .

நீத்து சந்திரா ( Nitu Chandra , ஜூன் 20 , 1984 ) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் ஆடல் அலங்கார விளம்பரத் தோற்றங்களில் தோன்றும் வடிவழகி ஆவார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
நீத்து சந்திரா இந்தியாவில், பீகார் மாநிலத்தில், பாட்னா நகரத்தில், ஜூன் 20, 1984 அன்று பிறந்தார். அவர் பாடலிபுத்ரா காலனியில் வசித்து வந்தார்; பாட்னாவில் உள்ள நோட்ரே டாம் அகாடமி பள்ளிக்கூடத்தில் படித்தார். இந்தி திரைப்பட உலகத்தில் நுழைவதற்கு முன்னர், நீத்து ஒரு விளையாட்டு வீராங்கனையாக புகழ் பெற்றார். இவர்
டைக்குவாண்டோ என்ற விளையாட்டில் கருப்பு இடைவார் (பிளாக் பெல்ட்) தகுதி பெற்றவராவார். அவர் இந்தியாவின் சார்பாக 1996 ஆம் ஆண்டில் ஹாங் காங் நகரத்தில் நடைப்பெற்ற சர்வதேச டைக்குவாண்டோ போட்டியில் கலந்து கொண்டார். மேலும் 1995 ஆம் ஆண்டில் புது டில்லியில் நடைப்பெற்ற உலக கோர்ப்பால் எனப்படும் உலக வலைப்பந்தாட்ட போட்டியிலும் கலந்துக் கொண்டார். அவர் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை (1996) இளம் 16 வயதிலேயே முடித்துவிட்ட்டார்..
ஒரு வியாபாரியான நீத்துவின் தந்தை, ஆரம்பத்தில் இவர் மாடல் தொழிலில் தனித்திறமையை வெளிப்படுத்துவதில் விருப்பமின்றி இருந்தார், ஆனால் அவரது தாயார் நீரா இவர் பக்கம் நின்றார். தில்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஐ.பி. கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் பொழுதே விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். அக்காலகட்டத்தில் பிரபல நிறுவனங்களுக்காக பன்னிரண்டுக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்தார்.


தொழில் வாழ்க்கை

அவர் 2005 ஆம் ஆண்டில் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார், முதல் முதலாக
கரம் மசாலா என்ற படத்தில் ஸ்வீட்டி என்ற ஒரு விமானப் பணிப்பெண் வேடத்தில் தோன்றினார். 2007 ஆம் ஆண்டில் இவர் மதூர் பண்டார்கர் தயாரித்த "டிராபிக் சிக்னல்", படத்தில் தோன்றினார். நீத்து சந்திரா ரசியா சாஜன் என்ற வீடியோ தொகுப்பில் ஜுபீன் கர்குடன் இணைந்து இஸ்மாயில் தர்பார் இசை அமைப்பில் மிகவும் நளினமாக நடனம் ஆடியுள்ளார். 2008 ஆம் ஆண்டின் முன்பகுதியில், இவர் நான்கு படங்களில் நடித்தார். அவர்
மாதவனுடன் நடித்த "யாவரும் நலம்" என்ற தமிழ் மொழிப் படம் வெற்றி பெற்றது பெரிய வெற்றிப்படமாக திகழ்ந்தது. பின்னர் ராம் கோபால் வர்மாவின் ரன்
மற்றும் ஜாக் முந்த்ரவின் அபார்ட்மென்ட்
ஆகியவற்றிலும் நடித்தார்.
20 மார்ச் 2008 அன்று, 7 சீஸ் டேக்நோலோஜீஸ் என்ற நிறுவனம், நீத்து சந்திரா முதன்மை வேடத்தில் நடிக்கும் ஒரு முப்பரிணாம விளையாட்டை உருவாக்கப் போவதாக அறிவித்தது. நீத்து (தி ஏலியன் கில்லர்) என்ற தலைப்புடன் கொண்ட அந்த விளையாட்டில், ஒரு வித்தியாசமான விளையாட்டுக் கதையை அடிப்படையாக கொண்டது; இதில் நீத்து பூமிக்கு எதிராக செயல்படும் வேற்றுலக வாசிகளை அழிக்கும் வேடமேற்றார். நீது சந்திரா ஆசிய அகாடெமி போர் பிலிம் அண்ட் டெலிவிஷனை சார்ந்த சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக்காட்சி மன்றம் மற்றும் சர்வதேச திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஆராய்ச்சி மன்றத்தின் முழுநாள் உறுப்பினர் ஆவார். மாக்சிம் இந்தியா இதழின் ஜனவரி 2009 இதழின் முன்னட்டையில் நீத்துவில் படம் ல் வெளியானது.
கீதாஞ்சலி குழுமத்தை சார்ந்த ஹூப் என்ற தயாரிப்புப் பொருளின் சின்னத் தூதுவராகவும் நீது சந்திரா செயல்படுகிறார். மேலும் இவர் மைசூர் சாண்டல் சோப்பின் வணிகரீதியான விளம்பர படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

திரைப்படப் பட்டியல்
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2003 விஷ்ணு த
2005 கரம் மசாலா ஸ்வீட்டி இ
2006 கோதாவரி ராஜி த
2007
போக்குவரத்து வழிகாட்டி (டிராபிக் சிக்னல்)
ராணி இ
2008
ஒன்று இரண்டு முன்று (ஒன் டூ த்ரீ)
இன்ஸ்பெக்டர் மாயாவதி சௌதாலா

கோடை 2005 கவர்ச்சி நடிகை இ
ஒயே லக்கி!
லக்கி ஒயே! சோனல் இ
2009
சத்யமேவ ஜெயதே பசர பாபா த
யாவரும் நலம் பிரியா மனோகர் த
மும்பை கட்டிங் இ
2010
ரன் (சண்டை) யாஸ்மின் ஹுசைன் இ
தீராத விளையாட்டு பிள்ளை
தேஜஸ்வினி (தேஜு) த
குடியிருப்பு வளாகம் நேஹா இ
பிரச்சனைகள் இல்லை (நோ ப்ரோப்லம்)
சோபியா இ
சடியான் இ
2011
யுத்தம் செய் த
குச் லவ் ஜெயிசா றியா இ
2013
குசர் பர்சாத் கே பூத் சபீலி இ
ஆதிபகவன்

பாடகர் கானா பாலா பிறந்த நாள் ஜூன் 20.



பாடகர் கானா பாலா பிறந்த  நாள் ஜூன் 20.

கானா பாலா என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பால முருகன் , தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். அட்டகத்தி யில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார்.

திரைப்படப் பாடல்கள் பின்னணிப் பாடகராக
ஆண்டு பாடல்(கள்) திரைப்படம்

2007
"பதினொரு பேரு ஆட்டம்"
"உன்னைப்போல பெண்ணை"
பிறகு
2008
"ஃபோனப் போட்டு" தொடக்கம்
"சிக்கு புக்கு ரயிலு" வேதா
2012
"ஆடி போனா ஆவணி"
"நடுக்கடலுல கப்பல"
அட்டகத்தி
"நெனைக்குதே" பீட்சா
2013
"டூயட் சாங்"
"போட்டியின்னு வந்துப்புட்டா"
கண்ணா லட்டு தின்ன ஆசையா
"தன்னைத் தானே" பரதேசி
"எதத்தான் கண்டுட்டே நீ புதுசா"
சேட்டை (திரைப்படம்)
"மண்ணடைச்ச பந்து"
"ஒரு கிராமம்"
கௌரவம்
"ஓரக் கண்ணால" உதயம் என்.எச்4 (திரைப்படம்)
"காசு பணம் துட்டு" சூது கவ்வும்
"பூசனிக்காய்" பட்டத்து யானை
"அய்யோ ராமரே"
புஸ்தகம்லோ கொன்னி பகீலு மிஸ்ஸி
"சந்தேகம்" ஆர்யா சூர்யா
"ஏய் பேபி" ராஜா ராணி
"என் வீட்டிலே"
இதற்குத்தான ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)
2015 "டப்பாங்குத்து மெட்டில" நண்பேன்டா
திரைப்படங்கள் வெளியானதை ஒட்டி பட்டியலிடப்பட்டுள்ளன; இசை வெளியீட்டை ஒட்டி அல்ல.
பாடலாசிரியராக
ஆண்டு பாடல்(கள்) திரைப்படம்
2012 "நடுக்கடலுல கப்பல" அட்டகத்தி
2013
"லவ் லெட்டர்"
"போட்டியின்னு வந்துப்புட்டா"
கண்ணா லட்டு தின்ன ஆசைய
"எதத்தான் கண்டுட்டே நீ புதுசா"
சேட்டை (திரைப்படம்)
"ஓரக் கண்ணால" உதயம் என்.எச்4 (திரைப்படம்)
"காசு பணம்" சூது கவ்வும்
"சந்தேகம்" ஆர்யா சூர்யா
"ஏய் பேபி" ராஜா ராணி
"20-20" கிரிக்கெட் ஸ்கேண்டல்
"வாழ்க்கை ஒரு" நவீன சரஸ்வதி சபதம்
வாராயோ வெண்ணிலாவ
உயிருக்கு உயிராக
ஒரு கன்னியு மூணு களவாணியும்

ஞாயிறு, 18 ஜூன், 2017

நடிகை காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ) பிறந்த நாள் ஜூன் 19 , 1985 )



நடிகை காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ) பிறந்த நாள் ஜூன் 19  , 1985 )

காஜல் அகர்வால் ( Kajal Aggarwal ) (பிறப்பு: 19 சூன் , 1985 ) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தித் திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த
பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. [இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010),
மிட்டர். பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.


இளமைக் கால வாழ்க்கை
மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தங்கை நிஷா அகர்வால் , தெலுங்கு, தமிழ்த் திரைப்பட நடிகை. இவர் தன்னுடைய கல்வியை மும்பையிலேயே முடித்த பிறகு, விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

திரை வாழ்க்கை
ஆரம்ப காலம்
இவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்...! ஹோ கயா நா , ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை, பின்னர் 2007-ம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார், இதுவும் வெற்றிபெற தவறியது. ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ச்சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார், இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தது.
அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு
பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார், ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை.


புகழின் உச்சத்தில் (2009 – தற்போது வரையிலும்)
2009-ம் ஆண்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஒடாத நிலையைல், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில்
இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது, இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.  , இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர். பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012) என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.
தற்போது, சூர்யாவுடன் , மாற்றான் திரைப்படத்திலும் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யுடன்
துப்பாக்கி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில், மகேஷ் பாபுவுடன் இணைந்து சுகுமாரின் பெயரிடப்படாத திரைப்படமொன்றிலும் நடித்து வருகிறார்.


திரைப்படங்கள்
ஆண்டு படம் பாத்திரம் ம
2004
கியூன்! ஹோ கயா நா...
தியாவின் தோழி இந்
2007 லக்ஷ்மி கல்யாணம் லக்ஷ்மி த
2007 சந்தமாமா மஹாலக்ஷ்மி த
2008 பவ்ருடு சம்யுக்தா த
2008 பழனி (திரைப்படம்) தீப்தி தம
2008 ஆட்டாடிஸ்டா சுன்னந்தா த
2008 சரோஜா (திரைப்படம்) பூஜா தம
2008 பொம்மலாட்டம் அனிதா தம
2009 மோதி விளையாடு
ஈஸ்வர் லக்ஷ்மிராம் தம
2009 மஹதீரா
யுவராணி மித்ராவிந்த தேவி,
இந்திரா (இந்து)த


2009 கணேஷ் ஜஸ்ட் கணேஷ் திவ்யா த
2009 ஆர்யா 2 கீதாஞ்சலி த
2010 ஓம் சாந்தி மேக்னா த
2010 டார்லிங் நந்தினி த
2010 நான் மகான் அல்ல
பிரியா சுதர்சன் தம
2010 பிருந்தாவனம் பூமி த
2011 மிஸ்டர். பர்பெக்ட் ப்ரியா த
2011 வீரா ச்சிட்டி த
2011 சிங்கம் காவ்யா போஷ்லே இந்
2011 தாதா ரியா த
2012 பிஸ்னஸ் மேன் சித்ரா த
2012 மாற்றான் அஞ்சலி தம
2012 பிரதர்சு த
2012 துப்பாக்கி நிஷா தம

2013 ஸ்பெஷல் சப்பீஸ் இந்
2013 பாட்ஷா த
2013 யேவது த
2013 ஆல் இன் ஆல் அழகு ராஜா
சித்ரா தேவி பிரியா தம
2013 ஜில்லா சாந்த்தி தம
2015 மாரி ஸ்ரீதேவி தம