திங்கள், 31 அக்டோபர், 2016

எம். கே. தியாகராஜ பாகவதர் நினைவு தினம் நவம்பர் 01.

எம். கே. தியாகராஜ பாகவதர் நினைவு தினம் நவம்பர்  01.

எம். கே. தியாகராஜ பாகவதர் -
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி
தியாகராஜ பாகவதர்
சுருக்கமாக எம். கே. டி என
அழைக்கப்படும் இவர் ( மார்ச் 1, 1910 -
நவம்பர் 1, 1959 ) தமிழ்த்
திரைப்படத்துறையின் முதல்
நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர்
நட்சத்திர கதாநாயகனும் மிகச்
சிறந்த கர்நாடக சங்கீத தமிழ்
பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு
பவளக்கொடி என்கிற
திரைப்படத்தில் கதாநாயகனாக
அறிமுகமான இவர் சுமார் 15
தமிழ்த் திரைப்படங்களில்
நடித்துள்ளார். அதில் 6 படங்கள்
மிகப்பெரிய
வெற்றிப்படங்களாகும். 1944 இல்
வெளியிடப்பட்ட இவரின் சாதனைப்
படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள்
ஒரே திரையரங்கில் (சென்னை
பிராட்வே திரையரங்கு) ஒடி 3
தீபாவளிகளைக் கண்ட ஒரே
இந்தியத் திரைப்படம் என்ற
சாதனையை அன்றையக்
காலகட்டத்தில் பெற்றது.
சென்னையில் (அன்றைய மதராஸ்)
மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில்
பாகவதர் மற்றும் அவரின்
திரையுலக உற்றத் தோழரான என்.
எஸ். கிருஷ்ணன் உடன் கைது
செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத்
தண்டனைப் பெற்றார். தண்டனைக்
காலத்திலேயே இவரின் வழக்கு
மறுவிசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டு 1948 இல்
இருவரும் குற்றமற்றவர்கள் என
இரண்டு ஆண்டு [1]
சிறைக்குப்பின்
விடுவிக்கப்பட்டனர். இருப்பினும்
சிறை விடுதலைக்குப்பின் அவர்
நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த
வெற்றியை பெறவில்லை. அதில்
நொடிந்துபோன பாகவதர்
அதன்பின் திரைப்படங்களில் நடிக்க
மனமில்லாமல் இருந்துவந்தார்.
நவம்பர் 1, 1959 இல் ஈரல் நோயினால்
பாதிக்கப்பட்டு இளவயதிலேயே
மரணமடைந்தார் [1] . தமிழ்த்
திரையிலகில் அவரைப்போல
வாழ்ந்தவருமில்லை, அவரைப்
போல வீழ்ந்தவருமில்லை [1] என்ற
கருத்து அவருடைய ஆத்ம
ரசிகர்களிடையேயும்,
திரையுலகிலும் நிலவுவது
உண்டு.
வாழ்க்கைச்
சுருக்கம்
தியாகராஜன் இந்தியாவின்
தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில்
(தற்பொழுது மயிலாடுதுறை),
விசுவகர்மா பொற்கொல்லர்
குடும்பத்தில் 1910 மார்ச் முதல்
தேதி கிருஷ்ணமூர்த்தி -
மாணிக்கத்தம்மாள் தம்பதியின்
மகனாக பிறந்தார். அவரின்
சிறுவயதிலேயே தந்தை
கிருஷ்ணமூர்த்தி, தமது
குடும்பத்துடன் திருச்சிக்குச்
சென்றுவிட்டார். சிறுவன்
தியாகராஜனுக்குப்
பள்ளிப்படிப்பில் நாட்டம்
செல்லவில்லை. யார்
பாடினாலும், இசைக் கச்சேரி
எங்கு நடைபெற்றாலும்
தியாகராஜன் அங்கே செல்வது
மட்டுமல்ல, மறுபடியும் அந்தப்
பாடல்களை ஒழுங்காகக் கேட்போர்
வியக்கும் வகையில்
பாடிக்காட்டுவாராம்.
எப். ஜி. நடேச அய்யர் தமது
திருச்சி இரசிக இரஞ்சனி சபா
நடத்தும் அரிச்சந்திரன் நாடகத்தில்
லோகிதாசன் பாத்திரத்தில்
தியாகராஜன் அரங்கேற்றம்
நடைபெற்றது. அரிச்சந்திரன்
நாடகத்தைப் பார்த்த பிரபல
வயலின் வித்துவான் மதுரை
பொன்னு ஐயங்கார்,
தியாகராஜனின் குரல்
வளத்தையும், இசை நயத்தையும்
கண்டு பாராட்டியதுடன்
அவருக்குக் கருநாடக இசையை
முறையாகக் கற்றுத்தர
முன்வந்தார். கருநாடக இசையில்
பயிற்சி பெற்ற அதேநேரத்தில்,
நாடகத் துறையில் ஆசானாக
விளங்கிய நடராஜ வாத்தியார்,
நடிப்பில் அவருக்குப் பயிற்சியும்
தந்தார்.
கர்நாடக இசையில்
தேர்ச்சி
ஆறு ஆண்டுகள் பயிற்சி
தரப்பட்டதும், தியாகராஜனுடைய
பாட்டுக் கச்சேரியின்
அரங்கேற்றத்தை நடத்த பொன்னு
ஐயங்கார் திட்டமிட்டு,
இசைக்கலையில் மிகப்
பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை
அணுகி, தமது மாணவரின்
இசைத் திறமையை விளக்கினார்.
கடைசியாக, தமிழ்நாட்டில்
தலைசிறந்த சங்கீத மேதையான
புதுக்கோட்டை
தட்சிணாமூர்த்தி பிள்ளை,
தியாகராஜன் கச்சேரியில்
கஞ்சிரா வாசிக்க முன்வந்தார்.
அவரையொட்டி, மிருதங்கம்,
வயலின் ஆகியவற்றில்
தலைசிறந்தவர்களும்
தியாகராஜனின் அரங்கேற்றத்தில்
உடன் வாசிக்க இசைந்தனர். இது
அன்றைய இசை உலகில்
மிகப்பெரிய நிகழ்ச்சியாகக்
கருதப்பட்டது.
யாரும் எதிர்பார்க்காத வகையில்
அன்றைய தினம் தியாகராஜனின்
குரல் வளமும், கர்நாடக இசையின்
இனிமையும் நுணுக்கமும்,
கேட்போர் வியப்படையும்
வகையில் நான்கு மணி நேரக்
கச்சேரியைச் சிறப்படையச்
செய்தன. கச்சேரி முடிவில்
புதுக்கோட்டை
தட்சிணாமூர்த்தி பிள்ளை
எழுந்து, தியாகராஜன் ஒரு
"பாகவதர்" என்று பட்டம்
வழங்கினார். அவ்வாறு
தியாகராஜ பாகவதர் தமிழிசை
உலகுக்கு
அறிமுகப்படுத்தப்பட்டார்.
நாளடைவில் பாகவதர் என்றால்
அவரை மட்டுமே குறிப்பதாக
அது மக்களிடம் அமைந்தது.
நாடக நடிகராக
1926ல் திருச்சி பொன்மலையில்
முதன்முதலாகப் பவளக்கொடி
நாடகத்தில் அர்ஜுனனாக
வேடமேற்று தியாகராஜ பாகவதர்
நடித்தார். அதில் பவளக்கொடி
வேடமேற்றுப் பெண் வேடத்தில்
டி.பி.இராமகிருஷ்ணன் நடித்தார்.
பிறகு அவருடன் இணைந்து
நாடகத்தில் பவளக்கொடி
வேடத்தில் எஸ். டி. சுப்புலட்சுமி
நடித்தார். பாகவதர்,
சுப்புலட்சுமி நாடகமேடை
நட்சத்திரங்களாகப்
பிரபலமடைந்தனர்.
திரைப்படத்தில்
அறிமுகம்
1934ல் அவர்கள் நடித்த பவளக்கொடி
நாடகம் திரைப்படமாக லேனா
(லெட்சுமணன் செட்டியார்)
தயாரிப்பில், பாபநாசம் சிவன்
பாடல்களுடன், கே. சுப்பிரமணியம்
இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப்
படத்தில் இருந்த 55 பாடல்களில் 22
பாடல்களை பாகவதர்
பாடியிருந்தார்.
தமிழ்நாடெங்கும் திரைப்படக்
கொட்டகைகளில் மக்கள் வெள்ளம்
வரலாறு காணாத அளவுக்கு
நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய
வரவேற்பு இருந்தது. ஒன்பது
மாதங்கள் தொடர்ந்து அப்படம்
ஓடியது.
அதன்பிறகு பாகவதர் நடிப்பில்,
நவீன சாரங்கதாரா (1936),
சத்தியசீலன் (1936 - பாகவதர் இரட்டை
வேடமேற்று நடித்தது),
சிந்தாமணி (1937), அம்பிகாபதி
(1937), திருநீலகண்டர் (1939), அசோக்
குமார் (1941), சிவகவி (1943),
ஹரிதாஸ் (1944) ஆகிய
திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக
வெளிவந்தன.
லட்சுமிகாந்தன்
கொலை
முதன்மைக் கட்டுரை:
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு
இலட்சுமிகாந்தன் என்பவர்
"சினிமா தூது" என்ற ஏடு மூலம்,
பொதுவாழ்விலும்,
தொழில்துறையிலும்,
கலையுலகிலும் இருந்த
பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான
வீண்பழிகளைச் சுமத்தியும்,
மிரட்டியும், பணம் பறித்து
வந்தார். இந்தப் பத்திரிகை பின்னர்
சட்டப்படி தடைசெய்ய்யப்பட்டது.
அதன் பிறகு, "இந்து நேசன்" என்ற
மற்றொரு பத்திரிகை மூலம்
எழுதி வந்தார் லட்சுமிகாந்தன்.
1944 நவம்பர் 9ம் நாள் சென்னையில்
இலட்சுமிகாந்தனை சிலர்
வழிமறித்துக் கத்தியால்
காயப்படுத்தினர். பொது
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள்
அதிகாலையில் மர்மமான
முறையில் இறந்துவிட்டார்.
1944 நவம்பர் 27ம் தேதி பாகவதரும்,
என்.எஸ்.கிருஷ்ணனும்
சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி
இலட்சுமிகாந்தன் அவதூறாகச்
செய்திகள் வெளியிட்டதைக்
கொலைக்குக் காரணமாகக்
காவல்துறை குறிப்பிட்டது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு
பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன்
மற்றும் நால்வர் குற்றவாளிகள்
என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்மீது செய்யப்பட்ட
மேல்முறையீட்டு மனுக்கள்
தள்ளுபடி செய்யப்பட்டன.
அதன்மீது மேலும் இலண்டன்
பிரிவி கவுன்சிலுக்கு
முறையீடு செய்யப்பட்டது. அதன்
பிறகு பாகவதரும்,
கிருஷ்ணனும் விடுதலை
செய்யப்பட்டனர்.
பாகவதர் சிறையிலிருந்து
வெளிவந்ததும் எல்லாப்
பற்றுகளையும் விட்டு நீங்கிய,
துறவிபோல் ஆகிவிட்டார்.
மேற்கொண்டு நடிப்பதற்கான பல
அழைப்புகளை அவர் தவிர்த்தார்.
மீண்டும் நடிப்பில்
சிறையிலிருந்து
வெளிவந்ததும், இராஜமுக்தி
(1948), அமரகவி (1952), சியாமளா
(1952), புதுவாழ்வு (1957),
சிவகாமி (1960) ஆகிய படங்கள்
பெரும் வெற்றியைப்
பெறவில்லை. ஆனால் அவர்
பாடல்கள் அந்தப்படங்களில்
எப்போதும்போல் சிறப்பாக
அமைந்திருந்தன.
நடிப்பு மற்றும்
சங்கீதம்
பாட்டு
எம்.கே.டி யின் பாடல்கள்
பெரும்பாலும்
இறைப்பற்றுடனும், தென்னிந்திய
பாரம்பரிய இசையை சார்ந்தே
இருக்கும். இவர் நடிக்கும்
திரைப்படங்களுக்கு வழக்கமாக
(ஆஸ்தான) பாடலெழுதும்
பாடலாசிரியரான பாபநாசம்
சிவன் [1] , இவருக்கென
தனித்துவமான பாடல்களை
இயற்றுவதில் வல்லவராவார்.
இவரின் பல பாடல்கள் எம்.கே.டி
யின் புகழை உயர்த்தின,
மக்களிடையை
பெரும்புகழையும் பெற்றன.
அவற்றில் சில,
உன்னை அல்லால் ,
நீலகண்டா,
அம்பா(ள்) மனம்
கனிந்துருகியுனது கடைக் கண்
பா(ர்) ,
சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்)
சுவாமி சுப்ரமணிய(ன்)உனை
மறந்தேன் ,
ஞானக்கண் இருந்திடும்
போதினிலே ,
பூமியில் மானிட ஜென்மம்
அடைந்துமோர் புண்ணியமின்றி
விலங்குகள் போல்,
மன்மத லீலையை வென்றார்
உண்டோ,
தீன கருணாகரனே நடராஜா
ராஜன் மஹராஜன்
வதனமே சந்திரபிம்பமோ
போன்ற பல பாடல்கள் இவரின்
புகழுக்கு சான்றாக உள்ளன.
அவர் பாடல்களில் 41/2 கட்டை (குரல்
தடிமன்) சுருதியில் (சுதி)
பாடக்கூடியவர். குரலில்
பெண்களின் நளினத்தன்மை
மிகுந்திருக்கும் பல நேரங்களில்
பெண் பாடுவது போல்
தோன்றுவதுண்டு. சுருதியின்
உச்சநிலையிலையிருந்து
உடனே கீழே இறங்கிப்பாடும்
வல்லமை பெற்றவர்.
வார்த்தைகளை உடைத்து
உடைத்துப் பாடுவதில் வல்லவர்.
இறுதியில் வல்லினமெய்
தெரியாமல் பாடக்கூடியவர்.
அவரின் கர்நாடக இசைக்கு
சான்றாக தஞ்சை அருகே நடந்த
நிகழ்வை சான்றாக கூறுவர்.
தஞ்சாவூர் அருகே உள்ள
மாவூரில்[1] இசைக் கச்சேரி
செய்யும் பொழுது இரவு
அங்கிருக்கும் அரவை இயந்திர
நிறுவனத்தின் வழக்கமான
அறிவிப்புச் சங்கொலி
முழங்கியது, அப்பொழுதும்
பாடுவதை நிறுத்தாமால், அந்த
சங்கொலிக்கு நிகராக தன்
குரலை இழுத்து அது முடியும்
வரை பாடினார்[1] . மக்களின்
கவனம் முழுவதும் அவரின்
குரலின் மீதுதான் இருந்தது.
அரிதாஸ் படத்தில் வரும் பாடலான
மன்மதலீலை[1] என்ற பாடல்
சாருகேசி எனும் பாரம்பரிய
இசையில் பாடப்பட்டது. அந்த
பாடலுக்குப்பிறகே பிற கர்நாடக
இசை வித்துவான்கள் சாருகேசி
(26 வது மூலராகம்-(மேளகர்த்தா))
[1] இசையை கச்சேரியில்
பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை
பிரபல கர்நாடக இசை விமர்சகர்
சுப்புடு [1] "சாருகேசியை
பிரபலமாக அறிமுகப்படுத்தியவர்"
என்று தியாகராஜ பாகவதைரை
இவ்வாறு வர்ணிக்கின்றார்.
அவரின் இசையை செல்வந்தர்
முதல் பாமரர்கள் வரை
அனைவரும் பாகுபாடின்றி
ரசித்தன்ர்[1] . அனைவருக்கும்
புரியும்படி பாடினார்.
நடிப்பு
அன்றைய நாட்கள் நாடக மோகம்
அதிகமிருந்த காலகட்டமானாதால்,
திரைப்படத்திற்கு
நாடகக்கலைஞர்களையே தேர்வு
செய்தனர்.
நாடகக்கலைஞர்களுக்கு
நடிப்புடன் பாடவும்
தெரிந்திருக்கவேண்டும்[1] .
ஆகையால் பாரம்பரிய
இசைக்கலைகளை கற்றுத்
தேர்ச்சிபெற்றிருந்தனர்.
பாகவதரும் அவ்வாறு
தேர்ச்சிபெற்றவராவார். அவரின்
இசைப்புலமைக்கு போட்டி
போட்டுக் கொண்டு
திரைப்படமெடுக்க மதுரை
செல்வந்தரான நாட்டாமை மல்லி.
என். எம். ஆர். வேங்கட கிருட்டிணன்,
மதுரை டாக்கிஸ் என்ற
குழுஅமைத்து படமெடுக்க
முன்வந்தார். மதுரை
செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் [1]
நிறுவனத்தால் எடுத்து
திரையிடப்பட்ட சிந்தாமணி படம்
அமோக வெற்றி பெற்றதினால்
அத்திரையரங்கு சிந்தாமணி
திரையரங்கம்[1] என்று பெயர்
பெற்று இன்றுவரை அவ்வாறே
அழைக்கப்படுகின்றது.
அவரின் சிகையலங்காரம் பாகவதர்
சிகையலங்காரம் என்று
அனைவராலும் அன்றைய
நிலையில் பின்பற்றபட்டு
அனைத்து தரப்பினரும்
அலங்கரித்து கொண்டனர்.
தமிழ்த்திரையுலகின் முதல் உயர்
நட்சத்திரமாக (சூப்பர் ஸ்டார்) [1]
கருதப்படுகின்றார். இவர் 1934 இல்
பவளக்கோடியின் மூலம்
அறிமுகமானவர் மறைவுக்கு
முன் வரை 14 படங்களில் நடித்தார்.
அதில் பெரும்பாலும் வெற்றி
பெற்றப் படங்களே. திருநீலகண்டர்,
அம்பிகாபதி, சிந்தாமணி , முதல்
வெற்றியைக் கொடுத்த படங்கள்.
1944 இல் வெளியிடப்பட்ட அரிதாஸ்
3 வருடம் ஒரே திரையரங்கமான
பிராட்வே திரையரங்கில் ஒடி
சாதனைப் படைத்தது. அவர் நடித்த
கடைசி திரைப்படம் சிவகாமி[1] .
மறைவு
சிவகாமி படத்தின் இறுதிக்
காட்சிகள் கோயில்களில்
எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின்
பொழுதே அவர் அதிக
நலிவடைந்திருந்தார். அவரின்
காட்சிகளுக்கு வாயசைக்க
முடியா நிலைமைக்கு
தள்ளப்பட்டவரானார். கண்கள்
பழுதடைந்த நிலையில்
காட்சிகளில் நடிக்கத்
தடுமாறினார் . சிந்தாமணியில்
பாடிய
“ ஞானக்கண் ஒன்று
இருந்திடும் போதினிலே
(பொழுதினிலே),
ஊனக்கண் இழந்ததால்
உலகிற்குறையுமுண்டோ
என்று அவர் அப்படத்தில் பாடிய
நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்
.
இறுதியில் நவம்பர் 1, 1959,
சென்னை
பொதுமருத்துமனையில்
சேர்க்கப்பட்டு சிகிச்சை
பலனளிக்காமல் அங்கு
காலமானார்.
இவர் நடித்த
திரைப்படங்கள்
1. பவளக்கொடி (1934)
2. நவீன சாரங்கதாரா (1936)
3. சத்தியசீலன் (1936)
4. சிந்தாமணி (1937)
5. அம்பிகாபதி (1937)
6. திருநீலகண்டர் (1939)
7. அசோக்குமார் (1941)
8. சிவகவி (1943)
9. ஹரிதாஸ் (1944)
10. ராஜ முக்தி (1948)
11. அமரகவி (1952)
12. சியாமளா (1952)
13. புது வாழ்வு (1957)
14. சிவகாமி (1959)
இவரைப் பற்றிய
நூல்கள்
எம். கே. டி. பாகவதர் கதை -
விந்தன்
பாகவதர் வரலாறு - மாலதி
பாலன்

*******************************
தன் வசீகரக் குரலால் தமிழ்
ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்
பிடித்த நடிகர், ‘எம்.கே.டி’
என்று அன்போடு
அழைக்கப்பட்ட
எம்.கே.தியாகராஜ பாகவதர்
(M.K.Thyagaraja Bhagavathar)நினைவு
தினம் இன்று (நவம்பர் 1). அவரைப்
பற்றிய அரிய முத்துக்கள்
பத்து:
* மாயவரத்தில் (1910) பிறந்தவர்.
தந்தை கிருஷ்ணமூர்த்தி.
இவரது சிறு வயதிலேயே
குடும்பம் திருச்சியில்
குடியேறியது. இவருக்கு
இசையில்தான் ஆர்வம் அதிகம்
இருந்தது.
* 10 வயதில் திருச்சி ரசிக
ரஞ்சன சபாவில் அரிச்சந்திரன்
நாடகத்தில் நடித்தார். இவரது
குரல் வளத்தைக் கண்ட வயலின்
வித்வான் மதுரை பொன்னு
ஐயங்கார், இவருக்கு கர்நாடக
இசை கற்றுத் தந்தார். நாடக
ஆசான் நடராஜ வாத்தியாரிடம்
நடிப்புப் பயிற்சி பெற்றார்.
* 6 ஆண்டுக்குப் பிறகு,
எம்.கே.டி.யின் மேடைக்
கச்சேரி அரங்கேறியது. 4
மணி நேரம் நடந்த அந்த கச்சேரி
பலரது பாராட்டுகளையும்
பெற்றது. ‘‘தியாகராஜன் ஒரு
பாகவதர்’’ என்று விழாவில்
மிருதங்க வித்வான்
புதுக்கோட்டை
தட்சிணாமூர்த்தி பிள்ளை
புகழாரம் சூட்டினார். அதன்
பிறகு இவரது பெயருடன்
அந்த பட்டமும்
சேர்ந்துகொண்டது.
* 1926-ல் திருச்சியில் நடந்த
பவளக்கொடி நாடகத்தில்
அர்ஜுனனாக நடித்தார். 1934-ல்
இந்த நாடகம் அதே பெயரில்
திரைப்படமாக வந்தது.
படத்தில் 55 பாடல்களில் 22
பாடல்களை இவர்
பாடியிருந்தார். படம் 9
மாதங்கள் ஓடியது.
இதையடுத்து, தமிழ்த்
திரையுலகில் நட்சத்திர
அந்தஸ்து பெற்றார்.
* இவரது வெற்றிப் பயணத்தில்
1944-ல் ஒரு தடங்கல் ஏற்பட்டது.
லட்சுமிகாந்தன் என்ற
பத்திரிகையாளர் கொலை
வழக்கில் எம்.கே.டி.க்கும்
அவரது நண்பர்
என்.எஸ்.கிருஷ்ணனுக்கும்
சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டது.
* நீண்ட விசாரணைக்குப்
பிறகு குற்றமற்றவர்கள் என்று
விடுதலை செய்யப்பட்டனர்.
1948-ல் மீண்டும் நடிக்கத்
தொடங்கினார். அந்த படங்கள்
பெரிதாக வெற்றி
பெறவில்லை. ஆனாலும்,
இவரது பாடல்கள்
பிரபலமடைந்தன.
* எம்.கே.டி. மனித நேயம்,
தயாள குணம் கொண்டவர்.
மற்றவர்களின் உதவியை
விரும்பாத அவர்,
வாழ்க்கையின்
நெருக்கடிகளை கம்பீரமாக
எதிர்கொண்டார்.
* அவரது பாடல்கள்,
பாமரர்களும் ரசிக்கும்
விதமாக இருந்தன. பல கோடி
மக்களின் இதயங்களில்
அப்பாடல்கள் இன்னமும்
எதிரொலிக்கின்றன. இவரது
சிகையலங்காரம் ‘பாகவதர்
கிராப்’ என்று புகழ்பெற்றது.
* தமிழ்த் திரையுலகின் முதல்
‘சூப்பர் ஸ்டாராக’ பாகவதர்
கருதப்படுகிறார். 1944-ல்
வெளிவந்த இவரது ‘ஹரிதாஸ்’
திரைப்படம் சென்னை
பிராட்வே திரையரங்கில் 3
ஆண்டுகள் தொடர்ச்சியாக
ஓடி, ‘3 தீபாவளி கண்ட
திரைப்படம்’ என்ற
சாதனையைப் படைத்தது.
* தமிழ்த் திரையுலகின்
முடிசூடா மன்னர், ஏழிசை
மன்னர் என்று போற்றப்பட்ட
தியாகராஜ பாகவதர் 49
வயதில் உடல்நலக் குறைவால்
(1959) மறைந்தார்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பாடகி பி. லீலா நினைவு தினம் அக்டேபர் 31.

பாடகி பி. லீலா நினைவு தினம் அக்டேபர் 31.

பி. லீலா என அழைக்கப்படும்
பொறயாத்து லீலா (19 மே
1934 – 31 அக்டோபர் 2005) பிரபலமான
தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப்
பாடகி ஆவார். இவருக்கு 2006 ஆம்
ஆண்டு இறப்பிற்குப் பின்னர் பத்ம பூசன்
விருது வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
பி. லீலா கேரள மாநிலம், பாலக்காடு
அருகில் சித்தூர் என்ற ஊரில்,
வி.கே.குஞ்சன்மேனன், லட்சுமி அம்மாவுக்கு
மூன்றாவது கடைசி மகளாக பிறந்தார்.
சாரதா, பானுமதி என்ற இரு
அக்காள். அப்பா மேனன் ராமவர்மா
பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து
வந்தார். லீலாவுக்கு மணிபாகவதர்
முதல் குருவாக இருந்து முறையான இசைப்
பயிற்சி அளித்தார். பின்னர் பத்தமடை
கிருஷ்ணா அய்யர், ராமபாகவதர்,
செம்பை வைத்தியநாத பாகவதர் என
பல மேதைகளிடம் பயின்று தனது இசைத் திறமையை
வளர்த்துக் கொண்டார்.
12 வயதில் ஆந்திர மகளிர் சபையில் லீலா
கச்சேரி செய்து துர்கா பாய் தேஷ்முக்
அவர்களிடம் பாராட்டையும், பரிசையும்
பெற்றார். பின்னர்
தென்னிந்தியா முழுக்க பல கச்சேரிகள்
செய்தார். 1948ல் திரைத்துறையில்
நுழைந்தார். எண்ணற்ற காலத்தால்
அழியாத பாடல்களை தமிழ்,
தெலுங்கு, மலையாள படங்களில்
பாடினார். நீண்ட இடைவெளிக்கு
பின்னர் இளையராஜாவின் இசையில் கற்பூர
முல்லை என்ற படத்திற்காக "ஸ்ரீசிவ சுத பத
கமல" என்ற பாடலைப் பாடினார்.
இவர் கடைசி வரை திருமணம் செய்து
கொள்ளவில்லை. தனது சகோதரி
குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.
விருதுகள்
ஞானகோகிலம், ஞானமணி,
கலாரத்னம், கானவர்சினி என பல
விருதுகளால் கௌரவிக்கப்பட்டார் பி.லீலா.
தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல
விருதுகள் பெற்றார். கேரள,
தெலுங்கு திரை உலகமும் பல விருதுகளை
அளித்து இவரை கௌரவித்தன. இவர் இறந்த
பின்னர் மத்திய அரசு 2006ல் பத்ம பூசன்
விருதை அளித்தது.
மறைவு
சென்னை டிபென்ஸ் காலனியில்
தனது உறவினர்கள் வீட்டில் வாழ்க்கை
நடத்தி வந்த பி.லீலா தனது 76ஆவது
வயதில் 2005ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம்
தேதி சென்னையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் காலமானார்.
பாடிய பாடல்கள்
எங்குமே ஆனந்தம் ( பலே ராமன் , 1957)
மாப்பிள்ளை டோய் ( மனம்போல்
மாங்கல்யம் , 1953)
தேன்சுவை மேவும் ( டாக்டர் சாவித்திரி,
1955)
காத்திருப்பான் கமலக்கண்ணன்
( உத்தமபுத்திரன் , 1958)
சில சில ஆண்டுகள் ( எங்கள்
செல்வி , 1960)
ராஜாமகள் ரோஜாமலர்,
வெண்ணிலவே ( வஞ்சிக்கோட்டை
வாலிபன்)
கன்னங்கறுத்த கிளி ( சிவகங்கை சீமை )
எண்ணம் எல்லாம் ( சக்கரவர்த்தி
திருமகள், 1957)
மாயமே நானறியேன், எனையாளும்
மேரிமாதா ( மிஸ்ஸியம்மா]], 1955)
கண்ணே கமலப்பூ ( பெரிய கோயில் ,
1958)
அமிர்தயோகம் ( அன்பு எங்கே , 1958)
ஆடி பிழைத்தாலும் ( படிக்காத மேதை , 1960)
தென்றல் உறங்கி ( சங்கிலித்தேவன் ,
1960)
சிறுவிழி குறுநகை ( இல்லற ஜோதி, 1954)
கானகமே எங்கள் ( யானை வளர்த்த
வானம்பாடி , 1959)
மனமோகனா ( புதுமைப்பித்தன் , 1957)
ஏட்டில் படித்ததோடு ( குமார ராஜா ,
1961)

***********************************
கண்ணும் கண்ணும் கலந்து, வாராயோ
வெண்ணிலாவே கேளாயோ எங்கள்
கதையைஉள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட
இனிமையான பாடல்களைப் பாடியுள்ளார்
லீலா.
ஏ.எம்.ராஜாவுடன் சேர்ந்து அவர்
பாடியுள்ள அனைத்துப் பாடல்களுமே சூப்பர்
ஹிட்ஆனவை. அந்தக்காலத்தில் பத்மினி,
சாவித்திரி போன்ற முன்னணி
நாயகிகளுக்குலீலா அதிக அளவில்
பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம்
உள்ளிட்ட பல்வேறு மொழிகளில்
லீலாபாடியுள்ளார்.

பாடகி எம். எல். வசந்தகுமாரி நினைவு தினம் அக்டோபர் 31.

பாடகி எம். எல். வசந்தகுமாரி நினைவு தினம் அக்டோபர் 31.

எம். எல். வசந்தகுமாரி ( M. L.
Vasanthakumari, 03 சூலை 1928 - 31 அக்டோபர்
1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப்
பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல்.
வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல
இந்திய மொழிகளில்
வெளிவந்த பாடல்களுக்குப்
பின்னணிப் பாடகராக இருந்துள்ளார்.
ஆரம்பகால
வாழ்க்கை
மெட்ராஸ் லலிதாங்கி
வசந்தகுமாரி என்ற இயற்பெயர்
கொண்ட எம். எல். வசந்தகுமாரி,
குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும்
லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார்.
தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர்.
சென்னையில் ஆங்கிலப்பள்ளியில்
படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர்,
பிரபல பாடகர் ஜி. என்.
பாலசுப்பிரமணியம் முயற்சியால்
இசைத்துறைக்கு வந்துவிட்டார்.
ஆக்கங்கள்
தெலுங்கு பாடல்கள்
ஆண்டு படம் பாடல்
1958 பூகாளிதாசு
1. தேவா
மகாதேவா
2. முன்னீட்ட
பவலிஞ்சு
நாகசயனா
சு
கோ
தமிழ்ப் பாடல்கள்
ஆண்டு படம் பா
1948 ராஜ முக்தி
1. குலக்க
தழைக்க
2. ஆராரோ
3. இங்கும்
எங்கும் இன்
4. என்ன ஆ
5. சந்தோசம
அன்பர் வரு
1948 கிருஷ்ண பக்தி ராதா சமே
கிருஷ்ணா
1949 நல்லதம்பி கானலோல
மதனகோபா
1949 வாழ்க்கை கோபாலனோடு
ஆடுவேனே
1949
1. புவி ராஜா
2. காண்பன
யாவும் காவியம்
போலே
சுப்பையா ந
சுப்புராம
1950 மந்திரி குமாரி
1. இசைக் கலை
2. காதல்
பலியாகினி
3. ஆகாஆ
வாழ்விலே
4. எண்ணும்

இன்பம்
5. மனம் போலே
பெறுவோ
1950 ஏழை படும் பாடு
1. யௌவனமே
கீதம்
2. கண்ண
நிலையே
1951 ஓர் இரவு அய்யா ச
சாமி
1951 மணமகள்
1. எல்லா
இன்பமயம்
2. சின்னஞ்சி
கண்ணம்ம
3.பாவியினு
படுபாவி
4. திறந்த கூட்
1951 ராஜாம்பாள் 1. ஆகாஆ
மனைவியா
1952 தாய் உள்ளம்
1. க
புறாவே
2. வெ
தாமரை பூவி
3. கோவில் முழு
கண்டேன்
4. கதையைக் கே
1952 புரட்சி வீரன் காரணம்
தெரிய
1952 பணம்
1. ஏழையின் கோ
நாடினேன்
2. குடும்பத்தி
1952 அந்தமான் கைதி காணி நில
பராசக்தி
1953 மனிதன் குயிலே உனக்
1953 நால்வர்
1. வானமீ
2. இன்பம்

3. மயிலே
4.இருள் சூழ்
வாழ்வில்
நிலவே
1953 மனிதனும் மிருகமும்
1. இன்பக்கு
குரலினிமை
2. இமய ம
சாரலிலே
1953 இன்ஸ்பெக்டர்
1. வாரா
மனமோகன
2. மதன சிங்
நீ வா
3. மூடி இருந்
விழியில்
1953 அன்பு 1. ஆடவரே ந
2. இசைபாடி
1953 என் வீடு
1. பூமியிலே ஒ
2.க

3. ராம ர
1953 கண்கள் இன்ப வீணை
1954 வைர மாலை
1. வஞ்சம்
வாஞ்சை இ
2. கூவாம
கோகிலம்
3. உன்னை எ
போதே
4. செந்
கண்ணனே
1954 ரத்தக் கண்ணீர்
1. கதவைச் ச
2. அலையின்
ஊதாயோ
1955 காவேரி மஞ்சள் வ
மாலையிலே
1955 காவேரி மனதினிலே ந

1955 கள்வனின் காதலி தமிழ்த் திருந
தன்னைப் ப
1956 கண்ணின்
மணிகள்
கண்ணின்
வா
1956 குலதெய்வம்
1. தாயே ய
2. வாரா
பாராயோ
3. ஆணும்
பெண்
வாழ்விலே
1956 மதுரை வீரன்
1. ஆடல் க
2. செந்
எழுந்து வா
1956 தாய்க்குப்பின்
தாரம் நாடு ச
நாளும் உ
1957 சக்கரவர்த்தி
திருமகள்
எந்தன் உள்


வந்த நீ ய
1957 இரு சகோதரிகள் தாயே உன்
செயல
1957 வணங்காமுடி சிரமதில் திக
1957 கற்புக்கரசி
1. கனியோ ப
கற்கண்டோ
2. விழியோடு வி
1959
மாமியார்
மெச்சிய
மருமகள்
1. மோகன ரங்
என்னைப் ப
2.கண்ண
வா மணிவ
வா வா
3. மைத்துனரே
4. விரல் மோதி
இங்கே....
5. இலவு க
கிளிபோல்
1959 தங்க பதுமை வருகிறாய்
தேடி
1959 காவேரியின்
கணவன்
வண்ணத்த

1959 கல்யாணிக்கு
கல்யாணம்
ஆனந்தம்
ஆரம்பம்
1960 பார்த்தீபன்
கனவு
1. அந்தி மய
2. வடிவேறி தி
தோன்றும்
1960 மீண்ட
சொர்க்கம் ஆடும் அருள்
1960 பெற்ற மனம் சிந்தனை
செய்ய
1960 மன்னாதி
மன்னன்
1. கலையோடு க
உண்மை
2. ஆடாத
உண்டோ
1960 ராஜ பக்தி கற்க கசடற
1960 ராஜா தேசிங்கு பாற்கடல்
1961 கொங்கு
நாட்டுத் தங்கம்
இருந்தும்
இல்லாத
1962 விக்கிரமாதித்தன் அதிசயம் இ
1965 மகனே கேள் கலை மங்கை
கண்டு
மல்லிய மங்களம் அவரின்றி ந
மனசுக்குள்
வைக்க முடிய
தொழில்
வாழ்க்கை
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:
ஸ்ரீவித்யா
சுதா ரகுநாதன்
ஏ. கன்யாகுமரி
சாருமதி ராமச்சந்திரன்
மீனா சுப்ரமணியன்
சிறப்புகள்
சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில்
பெற்ற பெண் கலைஞர் எனும்
பெருமை இவருக்கு உண்டு [சான்று தேவை] .
தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப்
பெற்றார்.
விருதுகள்
சங்கீத நாடக அகாதமி விருது, 1970
மதிப்புறு முனைவர் பட்டம், 1976 ;
வழங்கியது: மைசூர் பல்கலைக்கழகம்
சங்கீத கலாநிதி விருது, 1977;
வழங்கியது: மியூசிக் அகாதெமி ,
சென்னை
இசைப்பேரறிஞர் விருது , 1978
பத்ம பூஷன் விருது
சங்கீத கலாசிகாமணி விருது, 1987,
வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ்
சொசைட்டி.

***********************************
மாதங்களில் நான் மார்கழியாக
இருக்கிறேன் என்றார் கிருஷ்ண
பரமாத்மா. அந்த சிறந்த
மாதத்தைக் குறிக்கும் முதல் பாசுரம்
உட்பட முப்பது பாசுரங்களால் அழகு
சேர்த்தவர் ஆண்டாள். இதனை
ஆண்டுதோறும் பட்டிதொட்டி
எங்கும் பரவச் செய்தவர்
எம்.எல்.வசந்தகுமாரி. சங்கீத
கலாநிதி விருது பெற்றவர்.
இந்தியாவின் உயரிய விருதுகளில்
ஒன்றான பத்மபூஷண் இவரை நாடி
வந்தது.
எம்.எல்.வசந்தகுமாரியின் குரல்,
வசந்தத்தைக் கூவி அழைக்கும் குயிலின்
குரலைப் போன்றது என்று
சொல்லித் தெரிய
வேண்டியதில்லை. இவர் இரண்டு
உலகங்களை தன் குரல் இனிமையால்
ஆண்டார். கர்நாடக இசை உலகம்
மற்றும் திரையிசை உலகம். இசை என்னும்
தேருக்கு இந்த இரட்டைக் குதிரை சவாரி
அவருக்கு இத்துறையில் வேகமாக
முன்னேற பெரிதும் உதவியது.
இவ்விரண்டு இசை துறையுமே
ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்
கொண்டு அவரை புகழ்
உச்சிக்குக் கொண்டு
சென்றன.
எம்.எல்வி.யின் சீடர்கள்
இந்தப் புகழ் அவர் மறைந்த பின்னும்
மங்காமல் இருக்கக் காரணம்
அவரது சிஷ்யர்கள்தான். குறிப்பாக
அவர் கூடவே சிறு வயது முதல் மேடைக்
கச்சேரி செய்த இன்றைய சங்கீத
கலாநிதி சுதா ரகுநாதன். தனது
மகள் ஸ்ரீவித்யாவையும் கர்நாடக
இசைப்பாடகியாக இவர் உருவாக்கி
இருந்தாலும், ஸ்ரீவித்யாவின்
விருப்பம் நடிப்புத் துறையாக
இருந்ததால், அவரது பாதை வேறாக
மாறிவிட்டது.
அந்நேரத்தில் இசை என்ற தூணை இறுகப்
பிடித்துக் கொண்டார்
எம்.எல்.வசந்தகுமாரி. தன் திறமை
அனைத்தையும் வஞ்சனை இன்றி தன்
சிஷ்யர்களுக்கு அளித்தார்.
பன்மொழிப் படங்களில்
பாடியதால் இவரது புகழ் இந்தியா
முழுவதும் பரவியது.
எம்.எல்.வி.யின் குரு
பிரபல கர்நாடக இசைப்பாடகர்
ஜி.என்.பி.யிடம் இசையைக் கற்ற இவரின்
குரல் சங்கீத வித்வான் திரை இசை
வித்தகர் ஜி. ராமனாதனுக்குப்
பிடித்துவிட்டது. இவர் இசையமைத்த
திரைபடங்களில் பல பாடல்களைப் பாடி
ரசிகர்களை மகிழ்வித்தார். இவரது
இசையில் எம்.எல்.வி. பாடுவது
வழக்கமாக ஆகிவிட்டது. இந்த
காலகட்டத்தில்தான்
புரந்தரதாசரின் பாடல்களைப் பாடி
பிரபலப்படுத்தவும், பிரபலமடையவும்
தொடங்கினார்.
இளமைப்பருவத்திலேயே அரங்கேற்றம்
இவரது தந்தை அய்யாசாமி ஐயர்
சிறந்த பாடகர், தாய் லலிதாங்கியோ
அந்நாளிலேயே தனது இசையால் புகழ்
பெற்று இருந்தார். இசைப்
பாரம்பரியத்தில் பிறந்த இவரை சிறிய
வயதிலேயே சிறந்த பாடகி ஆக்க முடியும்
என்பதை முதன்முதலில் உணர்ந்தவர்
ஜி.என்.பி.
இசைதான் தனக்கேற்ற துறை என்பதை
அறிந்திருந்தார் எம்.எல்.வி. அவரது
முதல் தனிக் கச்சேரி
அரங்கேறியபொழுது மதராஸ்
லலிதாங்கி வசந்தகுமாரி என்ற
எம்.எல்.வியின் வயது
பன்னிரெண்டுதான்.