வெள்ளி, 29 ஜூன், 2018

நடிகர் அர்விந்த்சாமி பிறந்த நாள் ஜூன் 30 ,1967.

நடிகர் அர்விந்த்சாமி பிறந்த நாள் ஜூன் 30 ,1967.

அர்விந்த்சாமி (பிறப்பு: 30 ஜூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் , தெலுங்கு ,
மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ரோஜா , பம்பாய் , மின்சார கனவு , இந்திரா ,
தேவராகம் , அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.

இளமை வாழ்வு

அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று
தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம் வளர்ந்தார்.

திரைப்பட வாழ்வு

அவரது திரைப்பட அறிமுகம்
மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த ரோஜா மற்றும்
பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.
தனி வாழ்வு
அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டமேற்படிப்பை
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.
அர்விந்த்சாமி 1994 ஆம் ஆண்டு காயத்திரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். [2]
திரைப்படங்கள்
ஆண்டு பெயர் வேடம் இயக்குனர் நடிகர்கள் மொழி
1991 தளபதி அர்ஜூன் மணிரத்னம் ரசினிகாந்து ,
மம்முட்டி ,
ஷோபனா தமிழ்
1992 ரோஜா ரிசிக்குமார் மணிரத்னம் மதுபாலா தமிழ்
1993 மறுபடியும் கெளரி சங்கர் பாலு மகேந்திரா ரோகிணி ,
நிழல்கள் ரவி ,
ரேவதி தமிழ்
1993 டாடி சங்கீத சிவன் கௌதமி ,
சுரேஷ் கோபி மலையாளம்
1993 பாசமலர்கள் சுரேஷ் மேனன் ரேவதி , அஜித் குமார், தமிழ்
1995 பம்பாய் சேகர் மணிரத்னம் மனிஷா கொய்ராலா தமிழ்
1995 மௌனம் உமா மகேஷ்வர ராவ் நக்மா , சாரு ஹாசன் தெலுங்கு
1995 இந்திரா தியாகு சுஹாசினி அனு ஹாசன் ,
நாசர் தமிழ்
1996 தேவராகம் விஷ்னு பரதன் ஸ்ரீதேவி மலையாளம்
1997 சாத் ரங் கே சப்னே மஹிபல் பிரியதர்சன் ஜூஹி சாவ்லா இந்தி
1997 மின்சார கனவு தாமஸ் ராஜிவ் மேனன் கஜோல்,
பிரபுதேவா தமிழ்
1997 புதையல் Koti செல்வா மம்முட்டி ,
சாக்ஷி சிவானந்த் தமிழ்
1999 என் சுவாசக் காற்றே அருண் கே எஸஸ ரவி இசா கோபிகர் தமிழ்
2000 அலைபாயுதே ஐஏஎஸ் அதிகாரியாக மணிரத்னம் மாதவன் ,
சாலினி ,
குஷ்பூ தமிழ்
2002 ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா மோஹித் குமார் ராஜிவ் குமார் மனிஷா கொய்ராலா இந்தி
2005 சாசனம் முத்தையா மகேந்திரன் கௌதமி தமிழ்
2012 கடல் பாதர் மணிரத்னம் அர்ஜூன் ,
கௌதம் கார்த்திக் ,
துளசி நாயர் தமிழ்
2015 தனி ஒருவன் பழநி (சித்தார்த் அபிமன்யு) மோகன் ராஜா ஜெயம் ரவி ,
நயன்தாரா தமிழ்
2017 போகன் ஆதித்யா இலட்சுமன் ஜெயம் ரவி ,
ஹன்சிகா மோட்வானி தமிழ்

திங்கள், 25 ஜூன், 2018

நடிகர் சுரேஷ் கோபி பிறந்த நாள் ஜுன் 26,


நடிகர் சுரேஷ் கோபி பிறந்த நாள் ஜுன் 26, 

சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் ஜுன் 26, 1960ல் பிறந்தார். இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.

பிறப்பு சுரேஷ் கோபிநாதன் நாயர்
சூன் 26, 1960 (அகவை 57)
கொல்லம் , கேரளா , இந்தியா
மற்ற பெயர்கள் சுரேஷ்
பணி திரைப்பட நடிகர் , பின்னணிப் பாடகர்
செயல்பட்ட
ஆண்டுகள் 1965, 1986 - இன்று வரை
பெற்றோர் கோபிநாதப் பிள்ளை, ஞானலட்சுமி
வாழ்க்கைத்
துணை ராதிகா
பிள்ளைகள் லெட்சுமி(இறந்து விட்டார்), கோகுல், பாக்யா, பாவ்னா, மாதவ்
வலைத்தளம்
http://www.bharatsureshgopi.com

சனி, 23 ஜூன், 2018

பாடகர் மது பாலகிருஷ்ணன் பிறந்த நாள் ஜூன் 24 , 1974 .


பாடகர் மது பாலகிருஷ்ணன் பிறந்த நாள் ஜூன் 24 , 1974 .

மது பாலகிருஷ்ணன் (சூன் 24 , 1974 )
மலையாளம் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் பாடியுள்ள ஓர்
இந்தியத் திரைப்படப் பாடகர்.

வாழ்க்கை வரலாறு

மது பாலகிருஷ்ணன் கேரளத்தைச் சேர்ந்த கொச்சி மாமன்னரின் தலைநகராகத் திகழ்ந்த திருப்புனித்துறையில் பிறந்தவர். சென்னையில் உள்ள இந்திய இசை மற்றும் கலை அகாடமியில் இசையில் பட்டம் பெற்று அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சனில் தரபடுத்தப்பட்ட கலைஞராக பணியாற்றி யுள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் மாதவன் என்ற மகனும் உள்ளனர். துடுப்பாட்ட வேகப்பந்து வீச்சாளர்
ஸ்ரீசாந்த் இவரது மனைவியின் தமையனாவார்.
சிறுவயதில் ஸ்ரீதேவி மற்றும் சந்திரமனா நாரயணன் நம்பூதிரியிடம் கருநாடக இசை பயிற்சியைத் துவக்கிய மது சென்னையில் டி.வி.கோபாலகிருஷ்ணன், மணி கிருஷ்ணசாமி மற்றும் வேதவல்லி ஆகியோரிடம் மேற்பயிற்சி பெற்றுள்ளார்.

இசைப்பயணம்

2002ஆம் ஆண்டு "வால்கண்ணாடி" என்ற மலையாளத் திரைப்படத்தில் இவரது "அம்மே அம்மே" என்ற பாடலுக்கு கேரள அரசு மாநில விருது கிடைத்தப்பிறகு புகழ் பெறத் துவங்கினார். இதனைத் தொடர்ந்து 90 மலையாளம், 65 கன்னடம், 45 தெலுங்கு மற்றும் 65 தமிழ் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். சமய வழிபாட்டுப் பாடல்கள் மற்றும் பிற திரையிசை தவிர்த்த பாடல்கள் கூடுதல் எண்ணிக்கையில் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கன சில :
"கொஞ்சநேரம் கொஞ்சும் நேரம்" - ஆஷா போன்சலேயுடன் ( சந்திரமுகி )
"கனாக் கண்டேனடி" ( பார்த்திபன் கனவு )
"குட்டநாடன் காயலிலே" (காழ்ச்ச- மலையாளம்)
"கனாக் கண்டேனடி சாரதே" (ஆப்தமித்ரா - கன்னடம்)
2010ஆம் ஆண்டு இளையராஜா இசையில்
நான் கடவுள் திரைப்படத்திற்காக இவர் பாடிய "பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்" என்ற பாட்டு மிர்ச்சி இசை விருது பெற்றுள்ளது. இளையராஜாவின் "திருவாசகம்" இசைக்கோப்பிலும் பாடியுள்ளார்.


நடிகை விஜயசாந்தி பிறந்த நாள் ஜூன் 24 .1966


நடிகை விஜயசாந்தி பிறந்த நாள் ஜூன் 24 .1966

விஜயசாந்தி (பி: 24 சூன் 1966) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய
அரசியல்வாதி ஆவார். இவர் 2004இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ் , தெலுங்கு,
மலையாளம் , கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். 1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஐந்து முறையும், ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை நான்கு முறையும் வென்றுள்ளார். மேலும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.


வாழ்க்கைக் குறிப்பு

சிறுவயதில்
விஜயசாந்தி 1966 சூன் 24 அன்று சென்னையில் பிறந்தார்.
இவரது பெற்றோர் வரலட்சுமி, சீனிவாச பிரசாத் இருவரும் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி மாவட்டத்தின் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர்கள். ஆயினும் இவர்கள் ஆந்திராவின் வாராங்கல் மாவட்டத்தில் ராமாங்குடம் பகுதியில் (தற்போது தெலங்கானா ) வாழ்ந்து வருகின்றனர்.  இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு சென்னையில்
ஹோலி ஏஞ்சல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது பத்தாம் வகுப்பு கல்வியை பூர்த்தி செய்தார்.

திருமண வாழ்க்கை

விஜயசாந்தி ஆந்திராவைச் சேர்ந்த எம். வி. சீனிவாச பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விருதுகள்

இந்திய தேசிய திரைப்பட விருதுகள்
சிறந்த நடிகைக்கான விருது -
கர்த்தவ்யம் (1990).
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
வாழ்நாள் சாதனையாளர் விருது (2003).
சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது - ஓசே ரமுலம்மா (1997).
சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது - போலீஸ் லாக்-அப் (1993).
சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது - கர்த்தவ்யம் (1990).
சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது - பாரதனாரி (1989).
சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது - பிரதிகதனா (1985).


திரைப்பட விபரம்

நடித்த தமிழ் திரைப்படங்களில் சில
கல்லுக்குள் ஈரம்
மன்னன்
தயாரித்த திரைப்படங்கள்
1. கர்த்தவ்யம்
2. தேஜாஸ்வினி 1994) — இந்தி
3. அதாவி சக்கா (1999) — தெலுங்கு


கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் ஜூன் 24 1927 .


கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் ஜூன் 24 1927 .

கண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர் 17
1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

பிறப்பு முத்தையா
சூன் 24 , 1927
சிறுகூடல்பட்டி, சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு , இந்தியா
இறப்பு அக்டோபர் 17, 1981 (அகவை 54)
சிக்காகோ, இலினொய் , ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர் காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில் கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியா
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியர்
எழுதிய காலம் 1944-1981
குறிப்பிடத்தக்க
விருது(கள்) சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1961 குழந்தைக்காக
சாகித்திய அகதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்(கள்) பொன்னழகி
பார்வதி
வள்ளியம்மை
பிள்ளைகள் 15

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
தமிழ்நாடு , சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும்,
அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான ஜலகண்டபுரம் ப.கண்ணன் அவரின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

குடும்பம்

கண்ணதாசனுக்கு முதல் திருமணம்
பொன்னழகி என்னும் பொன்னம்மா (இறப்பு: மே 31 , 2012 ) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.
இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர் .
கண்ணதாசன் தனக்கு முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே
பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.
கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

அரசியல் ஈடுபாடு

அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மறைவு

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல்
அமெரிக்காவிலிருந்து அவரது சடலம்
சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.

மணிமண்டபம்

தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் [8] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.


திரைத்துறைக்கான பங்களிப்புகள்

திரையிசைப் பாடல்கள்
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்
கதை எழுதிய திரைப்படங்கள்
ராஜா தேசிங்கு
வசனம் எழுதிய திரைப்படங்கள்
நாடோடி மன்னன்
மகாதேவி
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
மதுரை வீரன்
இலக்கியப் படைப்புகள்
கவிதை நூல்கள்
காப்பியங்கள்
1. மாங்கனி
2. பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14.
3. ஆட்டனத்தி ஆதிமந்தி
4. பாண்டிமாதேவி
5. இயேசு காவியம்
6. முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்
1. கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2.
2. கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, காவியக்கழகம், சென்னை
3. கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
4. கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி
5. கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி
6. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி
7. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி
8. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி
9. பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்
1. அம்பிகை அழகுதரிசனம்
2. தைப்பாவை
3. ஸ்ரீகிருஷ்ண கவசம்
4. கிருஷ்ண அந்தாதி
5. கிருஷ்ண கானம்
கவிதை நாடகம்
1. கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு
1. பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
2. பஜகோவிந்தம்
புதினங்கள்
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
அரங்கமும் அந்தரங்கமும்
அதைவிட ரகசியம்
ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
ஒரு கவிஞனின் கதை
காமினி காஞ்சனா
காதல் கொண்ட தென்னாடு
சிவப்புக்கல் மூக்குத்தி
சிங்காரி பார்த்த சென்னை
சுருதி சேராத ராகங்கள்
சுவர்ணா சரஸ்வதி
ரத்த புஷ்பங்கள்
நடந்த கதை
மிசா
முப்பது நாளும் பவுர்ணமி
தெய்வத் திருமணங்கள்
வேலங்குடித் திருவிழா
விளக்கு மட்டுமா சிவப்பு
பிருந்தாவனம்
சிறுகதைகள்
1. குட்டிக்கதைகள்
2. மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
3. செண்பகத்தம்மன் கதை
வாழ்க்கைச்சரிதம்
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
சமயம்
அர்த்தமுள்ள இத்து மதம் (10 பாகங்கள்)
01. 02. 03. 04. 05. ஞானம் பிறந்த கதை 06. நெஞ்சுக்கு நிம்மதி 07. 08. போகம் ரோகம் யோகம் 09. 10. உன்னையே நீ அறிவாய்
நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
உரை நூல்கள்
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
1. பகவத் கீதை
2. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
3. திருக்குறள் காமத்துப்பால்
4. சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
5. சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
பேட்டிகள்
1. கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4)
2. சந்தித்தேன் சிந்தித்தேன்
வினா-விடை
1. ஐயம் அகற்று
2. கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும்
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது ( சேரமான் காதலி படைப்பிற்காக)


தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு!கவிஞர் கண்ணதாசன்

"காலமெனும் ஆழியிலும்
காற்று, மழை, ஊழியிலும்
சாகாது கம்பனவன் பாட்டு...
அது தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு...!
கண்ணதாசன், கம்பனுக்கு எழுதிய கவிதை இது. கம்பனுக்கு மட்டுமின்றி, கண்ணதாசனுக்கும் இது பொருந்தும்.
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் என காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி... சங்க இலக்கிங்களின் செழுமையையும், தத்துவங்களையும், அனுபவங்களையும், சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய இந்த மாபெரும் கவிஞனுக்கு இன்று (அக்டோபர் 17ம் தேதி) 35வது ஆண்டு நினைவு நாள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. அப்பா பெயர் சாத்தப்ப செட்டியார். அம்மா பெயர் விசாலாட்சி. உடன் பிறந்தவர்கள், ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள்.
செட்டிநாட்டில், நிறைய குழந்தைகளைப் பெற்ற தம்பதி, குழந்தைகள் இல்லாத தம்பதிக்கு பிள்ளையை சுவீகாரம் கொடுக்கும் நடைமுறையாக இருக்கிறது. கண்ணதாசனும் அவ்விதம் காரைக்குடியைச் சேர்ந்த பழனியப்ப செட்டியார்-சிகப்பி ஆச்சி தம்பதிக்கு சுவீகாரம் தரப்பட்டார். சுவீகாரம் சென்ற வீட்டில் அவருக்கு வைக்கப்பட்ட பெயர் நாராயணன். எட்டாவதாகப் பிறந்ததாலோ என்னவோ, கண்ணதாசனுக்கு எட்டாம் வகுப்பு வரைக்கும் தான் பள்ளிக்கல்வி வாய்த்தது.
சிறு வயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வம். சிறு சிறு புத்தகங்கள் வாசிக்கக் கிடைத்தன. பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 16 வயதில் வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு கிளம்பி வந்தார். சந்திரசேகரன் என்று புனைப் பெயர் சூடிக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடினார்.
ஆனால், சென்னை அவருக்கு பல கொடுமையான அனுபவங்களைத் தந்தது. பசியும், எதிர்காலம் குறித்த பயமும் வாட்டியது. திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் கோவிலிலேயே படுத்துக் கிடந்தார். ஒரு நிறுவனத்தில் உதவியாளராக வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் ”நிலவொளியிலே” என்ற அவரது முதல் கதை வெளிவந்தது. முதல் கதையை அச்சில் கண்ட உத்வேகத்தில், இன்னும் தீவிரமாக எழுதத் தொடங்கினார். பத்திரிகை துறையின் மீது பெரும் நாட்டம் ஏற்பட்டது.
ஒரு நண்பரின் பரிந்துரையோடு, புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த திருமகள் என்ற பத்திரிகையில், "ப்ரூப் திருத்துனர்" வேலை கேட்டு வந்தார். நேர்க்காணலில், பத்திரிகையின் அதிபர், உங்கள் பெயரென்ன? என்று கேட்டார். அந்த நேரத்தில் எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்து எழுதுவது ஃபேஷனாக இருந்தது. அதிலும் ”தாசன்” என்று முடியும் பெயரை வைத்திருப்பவர்களுக்கு தனி மரியாதை கிடைத்தது. கிடைத்த சில நொடிகளில் ”கண்ணதாசன்” என்று பதில் சொன்னார். முத்தையா, கண்ணதாசனாக மாறியது அந்தத் தருணத்தில் தான்.
கண்ணதாசனின் திறமையைத் தொடர்ந்து கவனித்த பத்திரிகையின் அதிபர், ஒருநாள் இதழுக்கு தலையங்கம் எழுதச் சொன்னார். இந்திய தேசிய ராணுவம் பற்றி கண்ணதாசன் எழுதிய தலையங்கம், பத்திரிகை அதிபரை பெரிதும் கவர்ந்தது. உடனடியாக பத்திரிகையின் ஆசிரியராக பணி அமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17.
பிறகு திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்து பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.
கவிதைகள் மூலம் அடையாளம் கிடைத்த பிறகு, திரைப்படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்கு ஏற்பட்டது. சண்டமாருதம் பத்திரிகை நிறுத்தப்பட்ட பிறகு, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கண்ணதாசனும் சேர்க்கப்பட்டார். கதை இலாகா சந்திப்புகளில் கருணாநிதியின் நட்பு கிட்டியது. அதன் வழி திராவிட இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகமானது.
பிறகு பத்திரிகை பணிகளை உதறிவிட்டு முழுமூச்சாக திரைப்படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்புத் தேடினார். ஜூபிடர் நிறுவன தயாரிப்பில், தான் இயக்கிய கள்வனின் காதலி படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார் கே.ராம்நாத். ”கலங்காதிரு மனமே... உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்ற பாடல் தான் கண்ணதாசனின் முதல் பாடல். அதன்பிறகு, அடுத்த 30 ஆண்டுகள் திரைத்துறையை முற்றுமுழுதாக ஆளுமை செய்தார் கண்ணதாசன். திரையுலகமே அவர் எழுதும் கவிக்காக காத்துக் கிடந்தது.
ஆசுகவி என்பார்களே... அதைப்போல, கண்ணதாசனிடம் அருவியெனக் கொட்டியது தமிழ். கதை, வசனம், தயாரிப்பு என சகல துறைகளிலும் இயங்கினார் இசையமைப்பாளர்கள் எல்லாம் தங்கள் இசையில் அவருடைய பாடல் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர்.
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரிடம் கற்ற இலக்கிய வளமை, திராவிட இயக்கத்தின் தீவிரம், பாரதிதாசன் பால் ஏற்பட்ட ஈர்ப்பு எல்லாம் சேர்ந்து கண்ணதாசனை தனித்துவமிக்க படைப்பாளியாக நிலை நிறுத்தியது.
அரசியலிலும் தீவிர ஆர்வம் காட்டினார். திமுகவில் தொடங்கிய அவருடைய அரசியல் காங்கிரசில் முடிவுற்றது. ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார். அவரின் இயல்புக்கு அரசியல் பொருத்தமாக இல்லை. வெளிப்படையான பேச்சு, ஒரு கொள்கை தவறெனப் படும்போது தயக்கமில்லாமல் மாற்றிக்கொள்ளும் நேர்மை, எதற்கும் அஞ்சாத விமர்சனங்கள்... இதெல்லாம் அரசியலுக்கு சரிப்படவில்லை.
பாடலில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் கண்ணதாசன் செல்வத்தில் திளைத்தார். ஆனால், சேமித்து வைக்கும் வழக்கமில்லை. சொந்தப்படங்கள் எடுத்தார். அவை கடனில் தள்ளின.
”பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் கண்ணதாசன்.
தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இயங்கிய கண்ணதாசன் பிற்காலத்தில் இந்து மதத்தில் பற்றுடையவரானார். இந்து மதம் சார்ந்து எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு எளிய மொழில் பதில்களையும், அனுபவங்களையும் உள்ளடக்கி அவர் எழுதிய ”அர்த்தமுள்ள இந்துமதம்” தொகுப்பு இன்றளவும் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.
கண்ணதாசனுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். தனக்கு சரியெனப் பட்டத்தை அவர் செய்யத் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அதை ஒப்புக்கொள்ளத் தயங்கியதும் இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட ஆளுமைகள் யாருமில்லை. வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களும் கண்ணதாசனின் சுய சரிதைகள்.
 கண்ணதாசனுக்கு மூன்று மனைவியர். 15 பிள்ளைகள்.
“கண்ணதாசன் எப்போதுமே பாக்கெட்டில் பணம் வைத்துக் கொள்ள மாட்டார். ஒருநாள் மௌண்ட்ரோடு பக்கமாக காரில் போகும்போது அவரது பாக்கெட்டில் பணம் இருந்தது. உடனடியாக ஒரு துணிக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி உள்ளே நுழைந்து, ”குழந்தைகளுக்கான உடை வேண்டும்” என்று கேட்டார். கடைகாரர் ”குழந்தைக்கு என்ன வயது?” என்று கேட்டார். கவிஞர் திகைத்து விட்டார். பிறகு சுதாரித்துக் கொண்டு, ”நம்ம வீட்டில் எல்லா வயதிலும் குழந்தைகள் உண்டு. எல்லா வயசுக்கும் ஒன்னொன்னு குடுப்பா” என்று சிரித்துக்கொண்டே வாங்கிச் சென்றார்...” என்று கண்ணதாசன் பற்றிய தன் நினைவுகளை சிரிப்போடு பகிர்ந்து கொள்கிறார் அவரிடம் உதவியாளராக இருந்தவரும் மூத்த இயக்குனருமான எஸ்பி, முத்துராமன்.
கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. அந்தந்த சூழலுக்கேற்ப பாடல் புனைவதில் அவருக்கு இணை யாருமில்லை.
ஒருமுறை, நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்காக இசையமைப்பாளர் விஸ்வநாதன் ஒரு பாடல் எழுத கண்ணதாசனை அழைத்திருந்தார். கண்ணதாசன் வரத் தாமதமாகி விட்டது. நெடுநேரம் காத்திருந்த விஸ்வநாதன், ”இனிமேல் கண்ணதாசனிடம் பாடல் கேட்கப் போவதில்லை” என்று நண்பர்களிடம் வருத்தமாக சொன்னார். இதைக் கேள்விப்பட்டு உடனடியாக விஸ்வநாதனைச் சந்தித்த கண்ணதாசன், பாடலை கொடுத்தார்.
”சொன்னது நீதானா? சொல்... சொல்.., என்னுயிரே” என்ற அந்தப் பாடலைப் படித்ததும் கண்கலங்கி கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டாராம் விஸ்வநாதன். இப்படி பெரும்பாலான கதைகள் கண்ணதாசன் வாழ்க்கையில் உண்டு.
இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள். வாழ்வின் அனுபவத்தில் இருந்து எழும், உண்மையான ஒரு படைப்பு காலத்தை வென்று தலைமுறைகளைக் கடந்தும் நீடித்து வாழும் என்பதற்கு கண்ணதாசனின் பாடல்களும், படைப்புகளும் மிகச்சிறந்த உதாரணம்.
”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்றார் அவர்.
காலமாகி 35 ஆண்டுகள் கடந்தும் கண்ணதாசன் இன்னும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் இந்த நேர்மையும், உண்மையும் தான்..!
கண்ணதாசன் பற்றிய சில தகவல்கள்
* கண்ணதாசன் பாடல்களை தானே எழுதுவதில்லை. சொல்லச் சொல்ல அவரது உதவியாளர்கள் எழுதுவார்கள். இயக்குனர் எஸ்பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், இராம.கண்ணப்பன் ஆகியோர் கண்ணதாசனிடம் உதவியாளர்களாக பணியாற்றினார்கள்.
* ”இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே... உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்?” என்று கண்ணதாசனிடம் கேட்கப்பட்டது. ”என் தாய் வாசாலாட்சி பாடிய தாலாட்டு தான் என் பாடல்களுக்கு ஆதர்சம்” என்றார் கண்ணதாசன்.
* மெட்டுக்கு இசையமைப்பதையே விரும்புவார் கண்ணதாசன். பெரும்பாலும், வெறும் சூழ்நிலையை மட்டும் கேட்காமல் படத்தின முழுக்கதையையும் கேட்டு, அக்கதையை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய பாடல்கள் இன்றும் உயிர்ப்போடு இருக்கின்றன. இயக்குனர் பீம்சிங் இயக்கிய பெரும்பாலான ”பா” வரிசைப் படங்களின் பாடல்கள் அப்படி எழுதப்பட்டவை தான்.
* கண்ணதாசன் எப்போதும் மதுவில் திளைத்துக்கிடப்பார் என்றொரு கருத்து உண்டு. ஆனால் கண்ணதாசன் பாடல்கள் எழுதும்போது மது அருந்தமாட்டார்.
*மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார் கண்ணதாசன். குறிப்பாக அசைவ உணவுகள். கண்ணதாசனின் மனைவி பார்வதி ஆச்சி மிகச்சிறப்பாக அசைவ உணவுகளை சமைப்பார். அவரது மகள் ரேவதி சண்முகம் சமையல் நிபுணராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
* சேரமான காதலி படைப்புக்காக கண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.


மனைவி எப்படி இருக்க வேண்டும் ? என்கிறார் கவிஞர் கண்ணதாசன்

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.
ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.
பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.
காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.
எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்
கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.
பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.
மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.
- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.
நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.
சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.
தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.
பெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.
ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்"என்கிறார் கண்ணதாசன்.
தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.

இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம் ஜூன் 24 .1928.



இசையமைப்பாளர்  எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம் ஜூன் 24 .1928.

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் ( M. S. Viswanathan ), அல்லது பொதுவாக எம்எஸ்வி , (24 சூன் 1928 - 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர்
கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)  . விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ் , மலையாளம் ,
கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
தெலுங்கு , இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

வாழ்க்கை

தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.  இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.

இசை பயணம்

உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள். தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும்
பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல்
சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு , செந்தமிழ்ப் பாட்டு ,
செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். 1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர்
ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில்
சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.
நடிகராக விஸ்வநாதன்
கண்ணகி, காதல் மன்னன் , காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங் , கிருஷ்ணன் பஞ்சு , ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான
நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா,
அ. இ. ரகுமான் , கங்கை அமரன் , தேவா,
யுவன் சங்கர் ராஜா , ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் .


இசையமைத்த திரைப்படங்கள்

எம். எஸ். விஸ்வநாதன் தனித்து இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)
1951 - 1960
1. போன மச்சான் திரும்பி வந்தான் (1954)
2. தெனாலி ராமன் (1956)
1961 - 1970
1. கலங்கரை விளக்கம் (1965)
2. குழந்தையும் தெய்வமும் (1965)
3. நீலவானம் (1965)
4. பஞ்சவர்ணக்கிளி (1965)
5. அன்பே வா (1966)
6. சந்திரோதயம் (1966)
7. அனுபவி ராஜா அனுபவி (1967)
8. சாந்தி நிலையம் (1969)
1971 - 1975
1. அலைகள் (1973)
2. பாக்தாத் பேரழகி (1973)
3. பாரத விலாஸ் (1973)
4. எங்கள் தாய் (1973)
5. கங்கா கௌரி (1973)
6. கௌரவம் (1973)
7. மணிப்பயல் (1973)
8. மனிதரில் மாணிக்கம் (1973)
9. நல்ல முடிவு (1973)
10. பாசதீபம் (1973)
11. பொன்னூஞ்சல் (1973)
12. தலைப்பிரசவம் (திரைப்படம்) (1973)
13. பூக்காரி (1973)
14. தாய் பிறந்தாள் (1974)
15. தங்கப்பதக்கம் (1974)
16. தீர்க்கசுமங்கலி (1974)
17. திருடி (1974)
18. திருமாங்கல்யம் (1974)
19. உரிமைக்குரல் (1974)
20. அக்கரைப் பச்சை (1974)
21. அன்பைத்தேடி (1974)
22. அத்தையா மாமியா (1974)
23. அவள் ஒரு தொடர்கதை (1974)
24. எங்கள் குலதெய்வம் (1974)
25. மகளுக்காக (1974)
26. மாணிக்கத் தொட்டில் (1974)
27. நான் அவனில்லை (1974)
28. நேற்று இன்று நாளை (1974)
29. பணத்துக்காக (1974)
30. பெண் ஒன்று கண்டேன் (1974)
31. ரோஷக்காரி (1974)
32. சமையல்காரன் (1974)
33. சிரித்து வாழ வேண்டும் (1974)
34. சிவகாமியின் செல்வன் (1974)
35. தாய் (திரைப்படம்) (1974)
36. அன்பே ஆருயிரே (1975)
37. அமுதா (1975)
38. அணையா விளக்கு (1975)
39. டாக்டர் சிவா (1975)
40. இதயக்கனி (1975)
41. மன்னவன் வந்தானடி (1975)
42. நாளை நமதே (1975)
43. நினைத்ததை முடிப்பவன் (1975)
44. பாட்டும் பரதமும் (1975)
45. தாய்வீட்டு சீதனம் (1975)
46. வைர நெஞ்சம் (1975)
47. வாழ்ந்து காட்டுகிறேன் (1975)
1976 - 1980
1. துணிவே துணை (1976)
2. உனக்காக நான் (1976)
3. உங்களில் ஒருத்தி (1976)
4. உண்மையே உன் விலையென்ன (1976)
5. உழைக்கும் கரங்கள் (1976)
6. வாழ்வு என் பக்கம் (1976)
7. அக்கா (திரைப்படம்) (1976)
8. சித்ரா பௌர்ணமி (1976)
9. இதயமலர் (1976)
10. கிரஹபிரவேசம் (1976)
11. லலிதா (திரைப்படம்) (1976)
12. மகராசி வாழ்க (1976)
13. மேயர் மீனாட்சி (1976)
14. மன்மத லீலை (1976)
15. மூன்று முடிச்சு (1976)
16. முத்தான முத்தல்லவோ (1976)
17. நீ இன்றி நானில்லை (1976)
18. நீதிக்கு தலைவணங்கு (1976)
19. ஓ மஞ்சு (1976)
20. ஊருக்கு உழைப்பவன் (1976)
21. ஒரு கொடியில் இரு மலர்கள் (1976)
22. பயணம் (1976)
23. பேரும் புகழும் (1976)
24. ரோஜாவின் ராஜா (1976)
25. சந்ததி (திரைப்படம்) (1976)
26. சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
27. ஆறு புஷ்பங்கள் (1977)
28. அண்ணன் ஒரு கோயில் (1977)
29. அவன் ஒரு சரித்திரம் (1977)
30. தேவியின் திருமணம் (1977)
31. எல்லாம் அவளே (1977)
32. என்ன தவம் செய்தேன் (1977)
33. கியாஸ்லைட் மங்கம்மா (1977)
34. இளைய தலைமுறை (1977)
35. இன்றுபோல் என்றும் வாழ்க (1977)
36. மீனவ நண்பன் (1977)
37. நாம் பிறந்த மண் (1977)
38. நீ வாழவேண்டும் (1977)
39. பட்டினப் பிரவேசம் (1977)
40. பெண்ணை சொல்லி குற்றமில்லை (1977)
41. பெருமைக்குரியவன் (1977)
42. புனித அந்தோனியார் (1977)
43. புண்ணியம் செய்தவர் (1977)
44. தனிக் குடித்தனம் (1977)
45. நீ வாழ வேண்டும் (1977)
46. சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
47. இறைவன் கொடுத்த வரம் (1978)
48. அக்னி பிரவேசம் (1978)
49. அந்தமான் காதலி (1978)
50. அதிர்ஷ்டக்காரன் (1978)
51. அவள் தந்த உறவு (1978)
52. ஆயிரம் ஜென்மங்கள் (1978)
53. என் கேள்விக்கு என்ன பதில் (1978)
54. என்னைப்போல் ஒருவன் (1978)
55. கங்கா யமுனா காவேரி (1978)
56. ஜெனரல் சக்ரவர்த்தி (1978)
57. இளையராணி ராஜலட்சுமி (1978)
58. இறைவன் கொடுத்த வரம் (1978)
59. ஜஸ்டிஸ் கோபிநாத் (1978)
60. குங்குமம் கதை சொல்கிறது (1978)
61. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)
62. நிழல் நிஜமாகிறது (1978)
63. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)
64. ஒரு வீடு ஒரு உலகம் (1978)
65. ஆசைக்கு வயசில்லை (1979)
66. செல்லக்கிளி (1979)
67. சித்திரச்செவ்வானம் (1979)
68. இமயம் (1979)
69. காம சாஸ்திரம் (1979)
70. கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன (1979)
71. குப்பத்து ராஜா (1979)
72. மங்களவாத்தியம் (1979)
73. மாயாண்டி (1979)
74. நீலமலர்கள் (1979)
75. நீலக்கடலின் ஓரத்திலே (1979)
76. நீதிக்கு முன் நீயா நானா (1979)
77. நினைத்தாலே இனிக்கும் (1979)
78. நூல் வேலி (1979)
79. ஒரே வானம் ஒரே பூமி (1979)
80. போர்ட்டர் பொன்னுசாமி (1979)
81. சுப்ரபாதம் (1979)
82. திரிசூலம் (1979)
83. திசை மாறிய பறவைகள் (1979)
84. சிகப்புக்கல் மூக்குத்தி (1979)
85. ஸ்ரீராமஜெயம் (1979)
86. வெள்ளி ரதம் (1979)
87. இமயம் (1979)
88. பில்லா (1980)
89. வறுமையின் நிறம் சிகப்பு (1980)
90. அவன் அவள் அது (1980)
91. அழைத்தால் வருவேன் (1980)
92. பாமா ருக்மணி (1980)
93. பம்பாய் மெயில் 109 (1980)
94. தர்மராஜா (1980)
95. எங்க வாத்தியார் (1980)
96. கீதா ஒரு செண்பகப்பூ (1980)
97. இவர்கள் வித்தியாசமானவர்கள் (1980)
98. மழலைப்பட்டாளம் (1980)
99. மேகத்துக்கும் தாகமுண்டு (1980)
100. ஒரு கை ஓசை (1980)
101. பொல்லாதவன் (1980)
102. சுஜாதா (1980)
103. தெய்வீக ராகங்கள் (1980)
104. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது (1980)
105. விஸ்வரூபம் (1980)
1981 - 1985
1. ஸ்ரீநிவாச கல்யாணம் (1981)
2. அமரகாவியம் (1981)
3. அன்புள்ள அத்தான் (1981)
4. அரும்புகள் (1981)
5. அந்த 7 நாட்கள் (1981)
6. தேவி தரிசனம் (1981)
7. எங்க ஊரு கண்ணகி (1981)
8. கல்தூண் (1981)
9. கீழ்வானம் சிவக்கும் (1981)
10. குடும்பம் ஒரு கதம்பம் (1981)
11. குலக்கொழுந்து (1981)
12. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
13. மாடி வீட்டு ஏழை (1981)
14. மோகனப் புன்னகை (1981)
15. நதி ஒன்று கரை மூன்று (1981)
16. பட்டம் பதவி (1981)
17. ராணுவ வீரன் (1981)
18. சத்ய சுந்தரம் (1981)
19. சவால் (1981)
20. தண்ணீர் தண்ணீர் (1981)
21. தீ (1981)
22. தில்லு முல்லு (1981)
23. திருப்பங்கள் (1981)
24. மாடி வீட்டு ஏழை (1981)
25. மோகனப் புன்னகை (1981)
26. தீர்ப்பு (திரைப்படம்) (1982)
27. ஒரு வாரிசு உருவாகிறது (1982)
28. ஒரு இந்திய கனவு (திரைப்படம்) (1983)
29. தம்பதிகள் (1983)
30. உண்மைகள் (திரைப்படம்) (1983)
31. ஆலய தீபம் (1984)
32. இருமேதைகள் (1984)
33. நெஞ்சத்தை அள்ளித்தா (1984)
34. ராஜதந்திரம் (1984)
35. ராஜா வீட்டு கண்ணுக்குட்டி (1984)
36. சரித்திர நாயகன் (1984)
37. சிறை (1984)
38. சிரஞ்சீவி (1984)
39. தராசு (1984)
40. திருப்பம் (1984)
41. நேர்மை (திரைப்படம்) (1985)
42. மூக்கணாங்கயிறு (திரைப்படம்) (1985)
1986 - 1990
1. மீண்டும் பல்லவி (1986)
2. கண்ணே கனியமுதே (1986)
3. சிவப்பு மலர்கள் (1986)

4. திராவிடன் (திரைப்படம்) (1989)
5. அவசர போலீஸ் 100 (திரைப்படம்) (1990)

தமிழ் - 800 திரைப்படங்கள்
மலையாளம் - 80 திரைப்படங்கள்
தெலுங்கு - 30 திரைப்படங்கள்
கன்னடம் - 15 திரைப்படங்கள்
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
முதன்மை கட்டுரை: எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
இராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.


முதன்மை கட்டுரை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான பாடல்களில் சில:

1. எங்கே தேடுவேன் (பணம்)
2. மயக்கும் மாலை (குலேபகாவலி)
3. குறுக்கு வழியில் (மகாதேவி)
4. முகத்தில் முகம் (தங்கப்பதுமை)
5. செந்தமிழ் தேன்மொழியாள் (மாலையிட்ட மங்கை)
6. தென்றல் உறங்கிடும் (பெற்ற மகனை விற்ற அன்னை)
7. ஆடைகட்டி (அமுதவல்லி)
8. ஏன் பிறந்தாய் மகனே (பாகப்பிரிவினை)
9. தங்கத்திலே ஒரு குறை (பாகப்பிரிவினை)
10. ஆடாத மனமும் (மன்னாதி மன்னன்)
11. பிறக்கும் போதும் (கவலை இல்லாத மனிதன்)
12. பாலிருக்கும் பழமிருக்கும் (பாவமன்னிப்பு)
13. அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)
14. ஜல் ஜல் ஜல் (பணம்)
15. காலங்களில் அவள் (பாவமன்னிப்பு)
16. மாலைப் பொழுதின் (பாக்யலெட்சுமி)
17. மலர்களைப்போல் தங்கை (பாசமலர்)
18. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
19. பால்வண்ணம் (பாசம்)
20. பாலும் பழமும் (பாசம்)
21. உடலுக்கு உயிர்காவல் (மணப்பந்தல்)
22. வாராய் என் தோழி (பாசமலர்)
23. அத்திக்காய் காய் (பலே பாண்டியா)
24. தேவன் கோயில் (மணியோசை)
25. எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்)
26. கல்லெல்லாம் மாணிக்க (ஆலயமணி)
27. கொடி அசைந்ததும் (பார்த்தால் பசி திரும்)
28. மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
29. ஓடம் நதயினிலே (காத்திருந்த கண்கள்)
30. பொன்னை விரும்பும் (ஆலயமணி)
31. பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
32. பூஜைக்கு வந்த மலரே (பாதகாணிக்கை)
33. நினைப்பதெல்லாம் ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
34. பொறந்தாலும் ( போலிஸ்காரன் மகள் )
35. ரோஜா மலரே ( வீர திருமகன் )
36. சொன்னது நீதானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
37. உள்ளம் என்பது ஆமை ( பார்த்தால் பசி திரும் )
38. வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
39. வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
40. வீடுவரை உறவு ( பாத காணிக்கை )
41. இந்த மன்றத்தில் ( போலிஸ்காரன் மகள் )
42. அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
43. அத்தை மடி ( கற்பகம் )
44. அவள் பறந்து போனாளே ( பார் மகளே பார் )
45. கண்கள் எங்கே ( கர்ணன் )
46. நெஞ்சம் மறப்பதில்லை ( கர்ணன் )
47. நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
48. பார் மகளே பார் ( ஆனந்த ஜோதி )
49. பனி இல்லாத ( ஆனந்த ஜோதி )
50. பாரப்பா பழனியப்பா ( பெரிய இடத்துப் பெண் )
51. பக்கத்து வீட்டு ( கற்பகம் )
52. பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
53. உள்ளத்தில் நல்ல உள்ளம் ( கர்ணன் )
54. ஆடவரெல்லாம் ( கருப்புப் பணம் )
55. ஆயிரத்தில் ( கை கொடுத்த தெய்வம் )
56. ஆரோடும் மண்ணில் ( பழனி )
57. அமைதியான நதி ( ஆண்டவன் கட்டளை )
58. அவளுக்கென்ன ( சர்வர் சுந்தரம் )
59. அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
60. அவள் மெல்ல சிரித்தாள் ( பச்சை விளக்கு )
61. அத்தை மகள் ரத்தினத்தை ( பணக்கார குடும்பம் )
62. அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
63. எனக்கொரு மகன் ( பணம் படைத்தவன் )
64. என்ன பார்வை ( காதலிக்க நேரமில்லை )
65. ஹலோ மிஸ் ( என் கடமை )
66. சிட்டுக் குருவி ( புதிய பறவை )
67. அண்ணன் என்னடா ( பழனி )
68. இந்த புன்னகை ( தெய்வத் தாய் )
69. நான் ஒரு குழந்தை ( படகோட்டி )
70. ஒளிமயமான எதிர்காலம் ( பச்சைவிளக்கு )
71. கண் போன போக்கிலே ( பணம் படைத்தவன் )
72. பறக்கும் பந்து பறக்கும் ( பணக்கார குடும்பம் )
73. பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
74. சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் )
75. மூன்றெழுத்தில் என் ( தெய்வத்தாய் )
76. தொட்டால் பூ மலரும் ( படகோட்டி )
77. தங்கரதம் ( கலைக்கோயில் )
78. அதோ அந்த பறவை ( ஆயிரத்தில் ஒருவன் )
79. சின்ன சின்ன கண்ணனுக்கு ( வாழ்க்கை படகு )
80. என்ன என்ன வார்த்தைகளோ ( வெண்ணிற ஆடை )
81. காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
82. கண்ணன் வருவான் ( நெஞ்சிருக்கும் வரை )
83. குமரிப் பெண்ணின் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
84. தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
85. நேற்றுவரை நீ யாரோ ( வாழ்க்கைப் படகு )
86. உன்னை நான் சந்தித்தேன் நீ ( ஆயிரத்தில் ஒருவன் )
87. யார் அந்த நிலவு ( சாந்தி )
88. ஹலோ மிஸ்டர் ஜமின்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
89. நான் மாந்தோப்பில் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
90. சித்திரமே ( வெண்ணிற ஆடை )
91. பூ முடிப்பாள் ( நெஞ்சிருக்கும் வரை )
92. விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )
பெற்ற விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது, 2003
கலைமாமணி விருது
மதிப்புறு முனைவர் பட்டங்கள் - 2

மறைவு

எம். எஸ். விஸ்வநாதன் 14 சூலை 2015 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.


எம்எஸ் விஸ்வநாதன்... காற்றுள்ள வரை காதுகளில் ரீங்கரிக்கும் ஒரு மாபெரும் கலைஞன்!

எம்எஸ் விஸ்வநாதன் திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட மகத்தான இசைக் கலைஞன்... தான் அப்படியொரு மாமேதை என்ற நினைப்பே இல்லாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே!
பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்தவரில்லை எம்எஸ்வி. நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டமில்லை. சினிமா, அதுவும் பாட்டு என்றால் உயிர்.
ஆனால் சினிமா பார்க்க காசு வேண்டுமே... அருகிலுள்ள தியேட்டருக்கு முறுக்கு விற்கும் பையனாகப் போய், முறுக்கு விற்கிற இடைவெளியில் பாட்டுக் கேட்டு ரசிப்பாராம்.
இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று பதிமூன்றாவது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தியவர் இவர்.

எம்எஸ் விஸ்வநாதன்

இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இசைக் குழுவில் எம். எஸ். விஸ்வநாதன் ஆர்மோனியக் கலைஞராகவும், டி. கே. ராமமூர்த்திவயலின் கலைஞராகவும் பணிபுரிந்தனர். உடல் நலகுறைவு காரணமாக, தன்னுடைய முப்பது வயதில் சுப்புராமன் மறைந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து அவரது இசையமைப்பில் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களின் இசைப்பணியை அவரின் உதவியாளர்களாக இருந்த இவரும் ராமமூர்த்தியும் முடித்துக் கொடுத்தார்கள்.
இதனால் தமிழ், தெலுங்கு தேவதாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான சண்டிராணி படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப் படுத்தப்பட்டார்கள்.
எம்ஜிஆர் படம்
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியானது. எம்ஜிஆர் இயேசுவாக தோன்றிய படம்.
என்எஸ்கே ஆசி
"வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது'' என்று சொல்லி தன்னுடைய "பணம்' என்ற படத்தில் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் "ராமமூர்த்தி -விஸ்வநாதன்' என்று போட்டவர் பணம் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்.
அப்படத்திலிருந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தார்கள்.
இது தவிர எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக ஆயிரம் படங்கள் வரை இசையமைத்துள்ளார்.
இளையராஜாவுடன் சேர்ந்து
இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன், விஸ்வ துளசி என நான்கு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தில்லு முல்லு படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைத்தார்.
1951-ல்ஆரம்பித்து 1990 வரை 40 ஆண்டுகள் தமிழ்த் திரை இசை உலகின் முடிசூடா மன்னராக இருந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.
பாடகர்
`பாசமலர்' படத்தில் பாட ஆரம்பித்த இவர், வி.குமார், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என பல இசையமைப்பாளர்களின் இசையில் நூற்றுக்கும் அதிகமான பாடல்கள் பாடி இருக்கிறார்.
முன்னூறும் மூன்றும்
`புதிய பறவை' படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த இவர் `பாகப்பிரிவினை' படத்தில் `தாழையாம் பூ முடிச்சு' பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக் கொண்டு இசைக் கோர்ப்பு செய்தவர்
20 நிமிடங்கள்... 2 மாதங்கள்
`நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ' பாடலை 20 நிமிடங்களில் உருவாக்கிய இவருக்கு `நெஞ்சம் மறப்பதில்லை' பாடலை உருவாக்க இரண்டு மாதம் ஆனதாம்!
தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமையும் இவருக்கு உண்டு.
உலக இசை
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப் படுத்திய பெருமையும் இவருக்கு சொந்தமானது எகிப்திய இசையைப் `பட்டத்துராணி' பாடலிலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயதிலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை'களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்', ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா'விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ' பாடலிலும் கொண்டு வந்தவர் இவர்.
கர்நாடக இசைக் கலைஞர்களுடன்...
எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளிகிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரது இசையில் பாடி இருக்கிறார்கள்!
முதல் லைவ் கச்சேரி
இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திய வரும் இவர் தான்.
நடிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமா துறையில் அடியெடுத்து வைத்த இவரது ஆசை ஆரம்பத்தில் நிறைவேறாமல் போனாலும் `கண்ணகி' படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் `காதல் மமன்னன்,' `காதலா.... காதலா' உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.
குடும்பம்
எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி அம்மாள். இவர்களுக்கு கோபிகிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்களும், லதா மோகன், மது பிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்களும் உள்ளனர்.
சிவாஜி தந்த பட்டம்
1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி கவியரசு கண்ணதாசன் இயக்குனர் ஸ்ரீதர் ஜெமினி கணேசன் சந்திரபாபு "சித்ராலயா" கோபு முன்னிலையில் நடைபெற்ற ஒரு விழாவில் சிவாஜி கணேசனால் இவருக்கும் இராமமூர்த்திக்கும் மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.
விருதுக்கு வருத்தப்பட்டதில்லை
கலைமாமணி, ஃபிலிம் ஃபேர், போன்ற பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு தேசிய விருதோ, பத்மஸ்ரீ போன்ற இந்திய அரசின் உயரிய விருதோ இதுவரை கொடுக்கப்படாதது குறித்து விஸ்வநாதன் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை என்றாலும் தமிழ் இசை ரசிகர்களைப் பொறுத்தவரை அது இன்றுவரை பெரிய ஏமாற்றம்தான்.
மக்கள் மனதில் வாழும் கலைஞர்
இந்த விருதுகளை விட பெரிய விருதாக இவர் நினைப்பது எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் வாழ்வதைத்தான். அந்த இடம் இவரைப் பொறுத்தவரை நிரந்தரமானது என்பதிலும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அந்த இடத்திற்கு அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது என்பதும் நிஜம்.


எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ்.வி-யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். மனதைத் தொடும் மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றின் பெர்சனல் பக்கங்கள் இதோ.....
எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.
அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!.
நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி.
இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!.
மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!
குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!
இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான்!
மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம்!
சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!
எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!
மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்!
இளையராஜவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!
`புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!
தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு!
தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார்!
`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!
இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான் சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறு சுறுப்பாக இருக்கிறார்!
பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!
சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள்!
வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!
`அத்தான்..... என்னத்தான்....’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிரிந்தது அரங்கம்!

வியாழன், 21 ஜூன், 2018

நடிகை தேவயானி Devayani , பிறந்த நாள் ஜூன் 22, 1974.



நடிகை தேவயானி  Devayani , பிறந்த நாள் ஜூன் 22, 1974.

தேவயானி ( Devayani , பிறப்பு: சூன் 22, 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் சுஷ்மா . திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ் ,
தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
திருமணம் வாழ்க்கை
தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில்
திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் ஏப்ரல் 9 , 2001 ஆம் ஆண்டு திருத்தணியில் காலை 9.30 மணிக்கு நடந்தது. இத்தம்பதியருக்கு
இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

திரைப்பட வரலாறு
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
1993 சாத் பென்சொமி
1994 கின்னாரி புழையோரம்
1995
தொட்டா சிணுங்கி ரம்யா
தில் கா டாக்டர்
ஆசான் ராஜாவு அப்பன் ஜிதாவு
திரி மென் ஆர்மி சுபா
காக்கக்கும் பூசாக்கும் கல்யாணம்
லதா .எஸ்.பிள்ளை
1996
கல்லூரி வாசல் நிவிதா
சோட்டா சா கர்
காதல் கோட்டை கமலி
பூமணி
சிவசக்தி
மகாத்மா சரஸ்வதி
கின்னம் கட்ட கள்ளன்
மிஸ்டர். கிலியன்
காதில் ஒரு கின்னரம்
1997
விவசாயி மகன்
காதலி
பெரிய இடத்து மாப்பிள்ளை
சூரிய வம்சம் நந்தினி.


1998
சுஷ்வாகதம் சந்யா
உதவிக்கு வரலாமா மைதிலி
கிழக்கும் மேற்கும்
மறுமலர்ச்சி
சொர்ணமுகி சொர்ணமுகி
நினைத்தேன் வந்தாய் சாவிதிரி
மூவேந்தர் வைதேகி
பூந்தோட்டம்
செந்தூரம்
உனக்கும் எனக்கும் கல்யாணம்
என் உயிர் நீ தான்
புதுமை பித்தன் ஆர்தி
சிரிமதி வொல்லோஸ்தா

1999
தொடரும் சீதா ஆனந்து
கும்மிப்பாட்டு
நீ வருவாய் என நந்தினி
ஒருவன் நந்தினி
பிரேமோத்சவா
நிலவே முகம் காட்டு கஸ்தூரி
பாட்டாளி சகுந்ததலா
மாணிக்யம்
2000 முதல் 2013 வரை
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2000
வல்லரசு அஞ்சலி வல்லரசு
அப்பு சீதா
என்னம்மா கண்ணு காயத்திரி
பாரதி செல்லமால் பாரதி
தெனாலி சைலஜா கைலாஸ்


2001
கண்ணுக்கு கண்ணாக தேவி
என் புருசன் குழந்தை மாதிரி
விண்ணுக்கும் மண்ணுக்கும் தேவயானி
ஆனந்தம் பாரதி
பிரண்ட்ஸ் பத்மினி அரவிந்து
சுந்தரபுருஷன்
நினைக்காத நாளில்லை கவிதா
2002
விவரமான ஆளு அப்பு
அழகி வளர்மதி சண்முகம்
கோட்டை மாரியம்மன்
பஞ்சதந்திரம் நிர்மலா
தென்காசிப் பட்டணம் சங்கீதா
குருவம்மா குருவம்மா
சமஸ்தானம் திவ்யா
படை வீட்டம்மன் சாமுண்டி
சென்னகேசவா ரெட்டி
2003
காதலுடன் கவிதா
பீஷ்மர் கௌரி பீஷ்மர்
பாலேட்டன் ராதிகா

2004
நானி நானியின் அம்மா
நியூ பப்புவின் அம்மா
கிரி
செம ரகளை
செந்தாழம் பூவே
சௌம்யம்
2005 நரன் ஜானகி
2009 ஐந்தாம் படை கல்பனா
2010 ஒரு நாள் வரும் ராஜலெட்சுமி
2011 சர்க்கார் காலனி
2013 திருமதி தமிழ்
வங்காளம் திரைப்படம்
துஷொர் கோ துளி
தொலைக்காட்சி
ஆண்டு நாடகம் பாத்திரம் மொழ
2003–2009 கோலங்கள் அபினயா தமிழ்
2007-08 மஞ்சள் மகிமை சௌந்தர்யா தமிழ்
2010-11 கொடி முல்லை
மலர்க் கொடி/அன்னக்கொடி தமிழ்
2011-12 முத்தாரம்
ரஞ்சனி தேவி / சிவரஞ்சனி
தமிழ்

விருதுகள்
2000 - ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது
2004 - சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதுகள். - கோலங்கள்
2008 - முதல் இடம் - சிறந்த நடிகைக்கான விவெல்லின் சின்னத்திரை விருதுகள் - ( கோலங்கள்)
2010 - நியமிக்கப்படுதல் - சிறந்த நடிகைக்கான சன் குடும்பம் விருது - ( கோலங்கள்)
2010 - ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது
2011 - பிக் ஃஎப்எம்மின் தமிழ் பொழுதுபோக்கு மிகுந்த பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நடிகைக்கான விருதுகள் - ( கொடி முல்லை)