புதன், 23 மே, 2012

கவுண்டமணி பிற‌ந்த‌ நாள் மே 25,


கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.
இளமையும் வாழ்க்கையும்.
கவுண்டமணி இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கண்ணம்பாளையம் கிராமத்தில் 1950-ல் பிறந்தார். அவரது நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது.அவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார். 26ஆம் அகவை முதலே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர் பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது.
இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள்:
இவர் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் சுமார் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வில்லன், குணசித்திர நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன. இவர் நடித்திருக்கும் சில திரைப்படங்கள் பின்வருமாறு
கரகாட்டக்காரன்
சின்னக்கவுண்டர்
* உள்ளத்தை அள்ளித் தா
மேட்டுக்குடி
நடிகன்
தங்கம்
மன்னன்
இந்தியன்
நாட்டாமை
மாமன் மகள்
உனக்காக எல்லாம் உனக்காக
முறை மாமன்
சூரியன்
இவரது நகைச்சுவை சொல்லாடல்கள் சில:
நாராயணா.. இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி..
ஊ இஸ் த டிஸ்டபென்ஸ்” (சூரியன்)
சொரி புடிச்ச மொன்ன நாயி” (கோயில் காளை)
இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா “(சூரியன்)
ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சாணிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிர“ (வைதேகி காத்திருந்தாள்)
நான் ரொம்ப பிஸி “ (சூரியன்)
ஒரு எளனிய எவ்ளோ நேரம்டா உறிஞ்சுவ போடா” (கோயில் காளை)
இந்த டகால்டி தானே வேணாங்கிறது
வாட் எ பியூட்டி யெங் கேள் ” (உனக்காக எல்லாம் உனக்காக)
டேய் தகப்பா ” (நாட்டாமை)
ஐயா தீஞ்ச மண்ட தர்மம் போடுங்க” (கோயில் காளை)
நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடிலப்பா” (மன்னன்)
இந்த நாயே 6 ஆங் கிளாஸ்ல அஞ்சு தடவ பெயில் ” (முறைமாமன்)
நாயக் கல்நாயக்” (கர்ணா)
எங்கயோ கொழுத்து வேல செஞ்சுட்டுருந்த கம்முனாட்டி பையன் நீ ” (சின்ன தம்பி)
நான் எங்க எப்படி இருக்க வேண்டியவேன்
"நாலு வீடு வாங்கி திங்குற நாய்க்கி பழமய பாரு பேச்ச பாரு" (சின்ன கவுண்டர்)
பழமொழிய ஏண்டா சொல்றீங்க நாய்ங்களா ” (கரகாட்டகாரன்)
மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா
கவுண்டமணி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே...      
·         `சுப்பிரமணியாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!.  
·         கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளிஎன்பார் இயக்குநர் மணிவண்ணன்!    
·         பாரதிராஜாதான் `கவுண்டமணிஎனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலேதான் அறிமுகப் படம்!  
·         அம்மாவை `ஆத்தாஎன்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்! 
·         கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது `மிஸ்டர் பெல்என்று கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்தத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொடர்ந்து வருகிறார்!      
·         மிகப் பிரபலமான கவுண்டமணி செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை!    
·         இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.      
·         கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு . எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட `சரிஎன்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ் கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்!     
·         உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பாஎன நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!       
·         திருப்பதி ஏழுமலையான் தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம், நினைத்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசனத்தை இப்போதுதான் குறைந்திருக்கிறார் கவுண்டமணி!  
·         சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜீன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்! 
·         கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகன் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டு கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!      
·         புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது தனிமை விரும்பி!       
·         ஓஷோவின் புத்தங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசு செய்வார்!     
·         கவுண்டமணி தி.நகர் ஆபீஸீக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்து பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!  
·         கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டு கொள்ளப் பிடிக்காது. `என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம், அவருக்கு பட்டம் கிடையாதுடா!என்பார்.      
·         ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு! 
·         ஷீட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போதுதான்!    
·         கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். `நம் செளகர்யம் பார்த்தா பத்தாது.... ஜனங்க நடமாட செளகர்யம் கொடுக்கணும்என்பார்!    
·         எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெக்‌ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!   
·         டுபாக்கூர் சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார், `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்றுவேலைஎன்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!
         கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் `ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ `வரவு எட்டணா செலவு பத்தணா’, `நடிகன்’, அட... என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானுஎன சுய எள்ளலும் செய்துகொள்வார்!     
         `மறக்கவேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களைஎன அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!    
·         சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருந்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!     
·         ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக