வியாழன், 10 நவம்பர், 2011

உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற டி. ஆர். மகாலிங்கம்...

உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற டி. ஆர். மகாலிங்கம்...
டி. ஆர். மகாலிங்கம் ...
தென்கரை இராமகிருஷ்ணன் மகாலிங்கம் அல்லது பொதுவாக டி. ஆர். மகாலிங்கம் (1923 – 1978) 1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவரின் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில் பிறந்த மகாலிங்கம் ஐந்து வயதில் இருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். சோழ வந்தான் அருகே இருந்த செல்லூர் சேஷ அய்யங்கார் மிருதங்கம் பாட்டும் மகாலிங்கத்துக்கு சொல்லிக் கொடுத்தார். அவரது குழுவுடன் மடங்களிலும் கோவில்களிலும் பஜனை பாடும் வாய்ப்பு மகாலிங்கத்துக்கு கிடைத்தது. பிரபல பாடகர் எஸ். சி. கிருஷ்ணன் அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் எஸ். ஜி. கிட்டப்பா, மகாலிங்கம், எஸ்.சி.கிருஷ்ணன், எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் டி. எம். செளந்தரராஜன் வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது.
பாய்ஸ் நாடகக் கம்பனியில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் வாரிசு எனப் புகழடைந்திருந்த மகாலிங்கத்துக்கு 13வது வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆவது வயதில் மகாலிங்கம் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில் மெய்சிலிர்த்து போன ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், தனது படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1937ல் ஏவிஎம் இன் பிரகதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். நடிக்க கதாநாயகனாக நடித்தார். எஸ். வி. வெட்கட்ராமன் இசை அமைத்த பாடலை பாடியபடியே அறிகமானார் மகாலிங்கம். கிருஷ்ணரைப் பற்றி தமிழ், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் எடுக்கப்பட்ட இப்படம் அதிக வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் பிரகலாதா, சதிமுரளி, வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி நடித்துப் புகழ் பெற்றார்.
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவலக்கொடி போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1945 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். அவர் நடிகராகவும் பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது. 55 வாரங்கள் இத்திரைப்படம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.
நடித்த திரைப்படங்கள்
நந்தனார்
சின்னதுரை
தெருப்பாடகன்
விளையாட்டு பொம்மை
மோகன சுந்தரம்
மச்ச ரேகை
நாம் இருவர்
ஸ்ரீவள்ளி
பவளக்கொடி
ஆதித்தன் கனவு
ரத்தினபுரி இளவரசி
ஆடவந்த தெய்வம்
அபலை அஞ்சுகம்
மணிமேகலை
அமுதவல்லி
ஸ்ரீவள்ளி (சிவாஜி கணேசனின்)
திருவிளையாடல்
ராஜராஜ சோழன்
அகத்தியர்
திருமலை தெய்வம்
கவலையில்லாத மனிதன்
திருநீலகண்டர்
தந்தைக்குப்பின் தமையன்
பண்ணையார் மகள்
என்னைப் பார்
மாலையிட்ட மங்கை
ஞான செளந்தரி
லைலா மஜ்னு
வேலைக்காரன்
தயாளன்
பிரகலாதா
மனோன்மணி
வேதாள உலகம்
மாயாவதி
ஸ்ரீகிருஷ்ண லீலா.

          மகாலிங்கம் புகழும் செல்வமும் ஓங்கி சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர். திரைப்பட உலகின் தவிர்க்கமுடியாத ஒரு தீங்கு சிலருக்கு வீழ்ச்சியும் ஏற்படத்தான் செய்யும். அப்படி நல்ல நிலையிலிருந்த டி.ஆர்.மகாலிங்கம், காலமானபோது அப்படியொன்றும் செல்வத்தின் சிறப்போடு இறக்கவில்லை. என்றாலும் மக்களால் மறக்கமுடியாத மனிதராக, இனிமையான பாடல்களுக்குச் சொந்தக் காரராக மக்களின் அன்புக்கு உகந்தவராக இருந்து மறைந்தார். வாழ்க அவர் புகழ்! 
நன்றி -விக்கிபிடியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக