செவ்வாய், 31 மே, 2016

இயக்குனர் மணிரத்னம் பிறந்த நாள் ஜூன் 02



மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 2, 1956) இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. ஏ. ஆர். ரகுமானை திரையிசைக்கு அறிமுகம் செய்தவர் இவர்.

ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் படித்துவிட்டு, சென்னையில் உள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமல், தன் முதல் படமாகிய "பல்லவி அனுபல்லவி" படத்தினை இயக்கினார். சென்னையில், மனைவி சுஹாசினி மற்றும் மகன் நந்தனுடன் வாழ்கின்றார் மணிரத்னம்.

இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன. இவரது முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜா இசையிலும், ரோஜா முதல் இன்று வரை ஏ. ஆர். ரஹ்மான் இசையிலும் வெளியாகியுள்ளன.

இவரது வெற்றித் திரைப்படங்களில் சில
1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
1984 - உணரு (மலையாளம்)
1985 - இதய கோவில்
1985 - பகல் நிலவு
1986 - மௌன ராகம் (பாக்யராஜின் "அந்த ஏழு நாட்கள்" திரைப்படத்தின் தழுவல் என்று விமர்சனங்களுக்கு உள்ளானது)
1987 - நாயகன்
1988 - அக்னி நட்சத்திரம்
1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)
1990 - அஞ்சலி
1991 - தளபதி (மகாபாரதத்தின் கர்ணன், துரியோதனன் கதாபாத்திரங்களின் தழுவலாக கருதப்பட்டது)
1992 - ரோஜா இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது
1993 - திருடா திருடா
1995 - பம்பாய்
1997 - இருவர்
1998 - தில் சே (இந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
2000 - அலைபாயுதே
2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன
2007 - குரு (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
2010 - ராவணன்(இந்தி)- திரைக்கதை இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது
2013- கடல்
2015-ஓ காதல் கண்மணி

மணிரத்னம் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

*தீபாவளிக்கு  முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள்,உறவினர்கள் அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி சைவ விருந்து அளிப்பர். பாட்டும் ஆட்டமும் அவசியம் உண்டு.


*கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை. ஆனால்,கடிகாரத்தை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்து, நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார்.


*மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள். மாப்ளே, மதுரைக்காரர். ஜீன் 2...பிறந்த தேதி!.


*தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும்  ரியர்க்‌ஷன் காட்டவே மாட்டார். இரண்டையும் புறம்தள்ளி விடுகிற இயல்புடையவர்.!


*கதை விவாதத்துக்கு எப்பொதும் துணை சேர்க்கவே மாட்டார். எல்லாமே அவரது எண்ணங்களாகத்தான் இருக்கும். சந்தேகம் இருந்தால் மட்டும், ராக்கெட்டோ ஜாக்கெட்டோ சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொள்வார்!.


*முழு ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலில்தான் எழுதுவார். பேனா உபயோகிக்க மாட்டார். தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே. பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்க்ரிப்ட் கம்ப்யூட்டர்மயமாகி விடும்!.


*படம் ரிலீஸான தினத்தன்று கொஞ்சம்கூட டென்ஷன் ஆக மாட்டார். தியேட்டர் நிலவரம் விசாரிக்க மாட்டார். நிதானமாக அன்றைக்கு அடுத்த பட்த்தின் வேலையை ஆரம்பிப்பார்!.


*நந்தனுக்குப் பரீட்சை என்றால் அன்று அலுவலகத்துக்கு விடுமுறை போடுவார். மகனுக்கு சொல்லிக்கொடுக்கத்தான் இந்த விடுமுறை!.


*நல்ல படமாகவும் இருக்க வேண்டும், அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும். அந்த வித்த்தில் ’16 வயதினிலே’ பட்த்தைத்தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்!.


*காரில் ஏறி உட்கார்ந்ததும் முதல் வேலையாக ஸீட் பெல்ட் போட்டுக்கொள்வார். எல்லோரையும் அவ்விதம் செய்யத்தூண்டுவார்!.


*படத்துக்கு பூஜை கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்துத் தீபாராதனை காட்டுவது, பூசணிக்காய் உடைப்பது,ராகுகாலம்,எமகண்டம் இப்படி  எதையும் பார்க்க மாட்டார். தன் உழைப்பு ஒன்றையே நம்புவார்!.


*பாலாவின் ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார். பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெஷல் மரியாதை!.


*தன்னிடம் இருந்து எந்த அசிஸ்டென்ட் வெளியே வாய்ப்பு தேடிப் போனாலும் அவர்களுக்கு ஒரு தொகையைக் கொடுத்து, வாய்ப்பு  கிடைக்கும் வரை பயன்படுத்திக் கொள்ளச் சொல்வார்!.


*மனைவியை எப்பொழுதும் ‘ஹாசினி’ என்றே அழைப்பார். சுஹாசினியும் இவரை சிம்பிளாக ‘மணி’!.


*பெண் குழந்தை ரொம்பவும் பிடிக்கும். அநேகமாக அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினைப் பார்த்து ‘என்க்குப் பெண் குழந்தை பிடிக்கும்’ எனச் சொல்லும் ஸீன் இருக்கும்!.


*மணிரத்னம் முதல் ஐந்து படங்கள் முடியும் வரை கார் வாங்கவே இல்லை. ‘தளபதி’ படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார். அவரின் திருமணமும் அப்புறம்தான் நடந்தது!.


*மணிரத்னம் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்த்தாகவும், சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது ‘இருவர்’. பேச்சின் ஊடாக அதை அடிக்கடி குறிப்பிடுவார்!.


*நடிகர்களிடம் இப்பிடித்தான் நடிக்க வேண்டும் என நடித்துக் காட்ட மாட்டார். அவர்களை இயல்பாக் நடிக்கவிட்டு, தேவையான கரெக்‌ஷன்களை மட்டுமே கொடுத்துப் படமாக்குவதையே விரும்புவார்!.


*மணிரத்னத்தின் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும்.கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்குப் புரிபடும் இந்த உண்மை!.


*தனிமை விரும்பி, அவரைத் தெரிந்துகொண்டவர்கள் அதை அனுசரித்து நடப்பார்கள்!.


*மணியின் மானசீக குரு, அகிரா குரோசோவா. அவரது படங்களைத் திரையிட்டுக்  காண்பதை அதிகம் விரும்பும் மனசு!.


*கொடைக்கானலில் மணியின் கனவு இல்லம் கிட்ட்த்தட்டத் தயார். பெரிய தியேட்டரும் உள்ளே உண்டாம்!.


*மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர்களாக ‘ரியல் இமேஜ்’ ஜெயேந்திரா,பி.சி.ஸ்ரீராம், ச்ந்தோஷ்சிவன் மூவரைச் சொல்லலாம். மாதம் ஒரு தடவையாவது ச்ந்தித்துச் சிரிப்பது வழக்கம்!.


*உடை, தேர்வில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார். சிம்பிளாக பருத்தி ஆடைகள் போதும். எவ்வளவு கிராண்ட் ஃபங்ஷனாக் இருந்தாலும் கவலையேபடாமல் எளிமையின் வடிவில் வருவார்!.


*உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக ‘நாயகன்’ டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்ட்து. மிகப் பெரிய கெளரவத்தைக் கொண்டாட விழா எடுக்க நினைத்தபோது அதைத் தடுத்தவர் மணிரத்னம்!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக