வெள்ளி, 23 ஜூன், 2017

இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் ( M. S. Viswanathan ). ஜூன் 24 , 1928.



இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் ( M. S. Viswanathan ). ஜூன் 24 , 1928.

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் ( M. S. Viswanathan ), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 - 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர்
கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி) விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ் , மலையாளம் ,
கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
தெலுங்கு , இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

வாழ்க்கை

தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு
கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.  இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.

இசை பயணம்
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள்  . தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும்
பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள் .
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல்
சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு , செந்தமிழ்ப் பாட்டு ,
செந்தமிழ் செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார்  . 1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர்
ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில்
சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது
நடிகராக விஸ்வநாதன்
கண்ணகி, காதல் மன்னன் , காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங் , கிருஷ்ணன் பஞ்சு , ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான
நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா ,
அ. இ. ரகுமான், கங்கை அமரன் , தேவா,
யுவன் சங்கர் ராஜா , ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் [6] .
இசையமைத்த திரைப்படங்கள்
தமிழ் - 800 திரைப்படங்கள்
மலையாளம் - 80 திரைப்படங்கள்
தெலுங்கு - 30 திரைப்படங்கள்
கன்னடம் - 15 திரைப்படங்கள்
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
முதன்மைக் கட்டுரை: எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
இராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.


முதன்மைக் கட்டுரை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான பாடல்களில் சில:
1. எங்கே தேடுவேன் (பணம்)
2. மயக்கும் மாலை (குலேபகாவலி)
3. குறுக்கு வழியில் (மகாதேவி)
4. முகத்தில் முகம் (தங்கப்பதுமை)
5. செந்தமிழ் தேன்மொழியாள் (மாலையிட்ட மங்கை)
6. தென்றல் உறங்கிடும் (பெற்ற மகனை விற்ற அன்னை)
7. ஆடைகட்டி (அமுதவல்லி)
8. ஏன் பிறந்தாய் மகனே (பாகப்பிரிவினை)
9. தங்கத்திலே ஒரு குறை (பாகப்பிரிவினை)
10. ஆடாத மனமும் (மன்னாதி மன்னன்)
11. பிறக்கும் போதும் (கவலை இல்லாத மனிதன்)
12. பாலிருக்கும் பழமிருக்கும் (பாவமன்னிப்பு)
13. அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)
14. ஜல் ஜல் ஜல் (பணம்)
15. காலங்களில் அவள் (பாவமன்னிப்பு)
16. மாலைப் பொழுதின் (பாக்யலெட்சுமி)
17. மலர்களைப்போல் தங்கை (பாசமலர்)
18. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
19. பால்வண்ணம் (பாசம்)
20. பாலும் பழமும் (பாசம்)
21. உடலுக்கு உயிர்காவல் (மணப்பந்தல்)
22. வாராய் என் தோழி (பாசமலர்)
23. அத்திக்காய் காய் (பலே பாண்டியா)
24. தேவன் கோயில் (மணியோசை)
25. எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்)
26. கல்லெல்லாம் மாணிக்க (ஆலயமணி)
27. கொடி அசைந்ததும் (பார்த்தால் பசி திரும்)
28. மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
29. ஓடம் நதயினிலே (காத்திருந்த கண்கள்)
30. பொன்னை விரும்பும் (ஆலயமணி)
31. பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
32. பூஜைக்கு வந்த மலரே (பாதகாணிக்கை)
33. நினைப்பதெல்லாம் ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
34. பொறந்தாலும் ( போலிஸ்காரன் மகள் )
35. ரோஜா மலரே ( வீர திருமகன் )
36. சொன்னது நீதானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
37. உள்ளம் என்பது ஆமை ( பார்த்தால் பசி திரும் )
38. வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
39. வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
40. வீடுவரை உறவு ( பாத காணிக்கை )
41. இந்த மன்றத்தில் ( போலிஸ்காரன் மகள் )
42. அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
43. அத்தை மடி ( கற்பகம் )
44. அவள் பறந்து போனாளே ( பார் மகளே பார் )
45. கண்கள் எங்கே ( கர்ணன் )
46. நெஞ்சம் மறப்பதில்லை ( கர்ணன் )
47. நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
48. பார் மகளே பார் ( ஆனந்த ஜோதி )
49. பனி இல்லாத ( ஆனந்த ஜோதி )
50. பாரப்பா பழனியப்பா ( பெரிய இடத்துப் பெண் )
51. பக்கத்து வீட்டு ( கற்பகம் )
52. பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
53. உள்ளத்தில் நல்ல உள்ளம் ( கர்ணன் )
54. ஆடவரெல்லாம் ( கருப்புப் பணம் )
55. ஆயிரத்தில் ( கை கொடுத்த தெய்வம் )
56. ஆரோடும் மண்ணில் ( பழனி )
57. அமைதியான நதி ( ஆண்டவன் கட்டளை )
58. அவளுக்கென்ன ( சர்வர் சுந்தரம் )
59. அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
60. அவள் மெல்ல சிரித்தாள் ( பச்சை விளக்கு )
61. அத்தை மகள் ரத்தினத்தை ( பணக்கார குடும்பம் )
62. அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
63. எனக்கொரு மகன் ( பணம் படைத்தவன் )
64. என்ன பார்வை ( காதலிக்க நேரமில்லை )
65. ஹலோ மிஸ் ( என் கடமை )
66. சிட்டுக் குருவி ( புதிய பறவை )
67. அண்ணன் என்னடா ( பழனி )
68. இந்த புன்னகை ( தெய்வத் தாய் )
69. நான் ஒரு குழந்தை ( படகோட்டி )
70. ஒளிமயமான எதிர்காலம் ( பச்சைவிளக்கு )
71. கண் போன போக்கிலே ( பணம் படைத்தவன் )
72. பறக்கும் பந்து பறக்கும் ( பணக்கார குடும்பம் )
73. பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
74. சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் )
75. மூன்றெழுத்தில் என் ( தெய்வத்தாய் )
76. தொட்டால் பூ மலரும் ( படகோட்டி )
77. தங்கரதம் ( கலைக்கோயில் )
78. அதோ அந்த பறவை ( ஆயிரத்தில் ஒருவன் )
79. சின்ன சின்ன கண்ணனுக்கு ( வாழ்க்கை படகு )
80. என்ன என்ன வார்த்தைகளோ ( வெண்ணிற ஆடை )
81. காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
82. கண்ணன் வருவான் ( நெஞ்சிருக்கும் வரை )
83. குமரிப் பெண்ணின் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
84. தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
85. நேற்றுவரை நீ யாரோ ( வாழ்க்கைப் படகு )
86. உன்னை நான் சந்தித்தேன் நீ ( ஆயிரத்தில் ஒருவன் )
87. யார் அந்த நிலவு ( சாந்தி )
88. ஹலோ மிஸ்டர் ஜமின்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
89. நான் மாந்தோப்பில் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
90. சித்திரமே ( வெண்ணிற ஆடை )
91. பூ முடிப்பாள் ( நெஞ்சிருக்கும் வரை )
92. விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )
பெற்ற விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது , 2003
கலைமாமணி விருது
மதிப்புறு முனைவர் பட்டங்கள் - 2
மறைவு
எம். எஸ். விஸ்வநாதன் 14 சூலை 2015 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.



இரண்டு தலைமுறையை இசையில் தாலாட்டி மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்கள்...
எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24.
அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத் தட்ட 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!
நடிக்கவும் ஆர்வம். 'கண்ணகி' படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, 'காதல் மன்னன்', 'காதலா... காதலா' உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார்எம்.எஸ்.வி.
Advertisement
இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி, கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!
மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!
குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரி தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!
இஷ்ட தெய்வம் முருகன். எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் 'முருகா முருகா'தான்!

மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோகசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார். அது, தமிழ் சினிமாவின் பொற்காலம்!
சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக,உச்சஸ் தாயியில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை. 'பாசமலர்' படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!
எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப் பட்டது வரலாறு. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!
மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார். இப்பவும் நடிகர்
களுக்கு காபி, டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவையோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்!
இளையராஜாவோடு சேர்ந்து, 'மெல்லத் திறந்தது கதவு', 'செந்தமிழ்ப் பாட்டு', 'செந்தமிழ் செல்வன்' என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!
'புதிய பறவை' படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு 'எங்கே நிம்மதி' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். 'பாகப் பிரிவினை' படத்தில் 'தாழையாம் பூ முடிச்சு' பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!
தன் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது மனைவியைத் தன் தாய்போல் கருதி, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக் காட்டியவர் சந்திரபாபு!

தமிழ்த் தாய் வாழ்த்தான 'நீராடும் கடலுடுத்த' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் 'பட்டத்து ராணி' பாடலும், பெர்சியன் இசையை 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது'விலும், ஜப்பான் இசையைப் 'பன்சாயி, காதல் பறவை'களிலும், லத்தீன் இசையை 'யார் அந்த நிலவிலும்', ரஷ்ய இசையைக் 'கண் போன போக்கிலே கால் போகலாமா'விலும், மெக்சிகன் இசையை 'முத்தமிடும் நேரமெப்போ' பாடலிலும் கொண்டுவந்தார்!
'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற 'முத்தான முத்தல் லவோ' பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல். 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!
இந்தியாவில் முதன்முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.விதான். சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!
பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாத மாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!
சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப் பட்டுப் பாடி இருக்கிறார்கள்!
வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக்கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!
'அத்தான்... என்னத்தான்...' பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்புகிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்' என்று ஒருமுறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிர்ந்தது அரங்கம்!
நன்றி விக்கிபீடியா..,விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக