வெள்ளி, 13 ஜனவரி, 2017

புரட்சிதலைவர் எம் ஜிஆர் பிறந்த தினம் ஜனவரி 17




புரட்சிதலைவர் எம் ஜிஆர் பிறந்த தினம் ஜனவரி 17
நாடகத்தில் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்த காலகட்டத்தில் நாடக மன்றம் துவக்கினார். முதல் நாடகமாக இடிந்த கோவில் திருச்சியில் துவங்கியது. அதில் ரத்னமாலா கதாநாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆருக்கு இடிந்த கோவில் என்ற பெயரும் அபசகுனமாகப்பட்டது. அதனால் இன்பக்கனவு என்று மாற்றினார். ரத்னமாலாவுக்கு பதில் ஜி.சகுந்தலா நடித்தார்.

ஒவ்வொரு மாதமும் நாடக மன்றம் 1-ந் தேதி சென்னையை விட்டுக் கிளம்பினால் 20-ந் தேதி வரை வெளியூர்களில் நாடகம் நடக்கும்.

எப்போதும் இரவு 10-00 மணிக்கு மேல் நாடகம் துவங்கி நள்ளிரவு 2-00 மணிக்கு. சில சமயங்களில் அதிகாலை 4 -00 மணிக்கும் முடிவடையும். அதற்கு பின் உணவுண்டு. உடனே அடுத்த ஊருக்கு பயணம் துவங்கும்.

ஓவ்வொரு ஊரிலும் நாடகம் முடிந்து எம்.ஜி.ஆர். சிறிது நேரம் மக்கள் முன் உரை நிகழ்த்துவார். அப்போது தி.மு.க.வின் கொள்கைகளைப் பற்றி சொல்வார். நாடகத்துடன் கட்சிப் பிரச்சாரமும் சேர்ந்தே நடந்து வந்தது.

நாடகத்தில் எம்.ஜி.ஆருக்குப் மேக்கப் என்பதே கிடையாது. எம்.ஜி.ஆர் ஒரு சட்டையும், ஒரு பேண்டும் அணிந்து கொள்வார்.

கனவுக் கட்சியின் போது மட்டும்(சுமார் பத்து நிமிடங்கள் வரை இடம்பெறும்) விதம் விதமான வண்ண உடைகள் அணிவார். அந்தக் காட்சியின் போது அவர் ஒரு சில நொடிகளுக்குள் உடை மாற்றம் செய்து வருவது ரசிகர்களுக்கே பிரமிப்பூட்டும்.

எம்.ஜி.ஆர். எந்த ஊரில் நாடகம் நடத்துகிறாரோ அங்கு தனி பங்களாக்கள், வீடுகளை வாடகைக்குப் பிடித்து இருப்பார்கள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அனாவசியமாக எந்த ஒரு நடிகரும், ஒரு நடிகையைப் பார்த்து பேசி விட முடியாது. ராணுவ கட்டுப்பாடுகள் போலிருக்கும்.

அது மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் வெளியாட்களால் தொந்தரவு நேரக்கூடாது என்று. எம்.ஜி.ஆர். தூங்காமல் டார்ச் லைட்டுடன் தங்கும் இடத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பார்.வீட்டிற்குள்ளும் சில சமயம் வெளிச்சம் வந்து விழும்.

எம்.ஜி.ஆர். நாடக மன்றம் நடத்திய நாடகங்கள் இன்பக்கனவு, அட்வகேட் அமரன், சுமைதாங்கி (இது பின்னர் நல்லவன் வாழ்வான் என்ற பெயரில் படமாகிறது), பகைவனின் காதலி ஆகியவை. புஷ்பலதா, ஜி.சகுந்தலா, தங்கவேலு ஆகியோர் எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் மூலமாகத் தான் சினமாவுக்கு வந்தார்கள்.

சீர்காழியில் இன்பக்கனவு நாடகம் நடத்த போது அதில் சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆர்., நடிக்கையில் குண்டுமணியை தூக்கிப்போடும் போது, அவர் வழுக்கி எம்.ஜி.ஆர். காலில் விழ, அதனால் எம்.ஜி.ஆர்., இடது காலொடிந்து போனது. சென்னை வந்து சிகிச்சை பெற்ற எம்.ஜி.ஆர்., ஆறே மாதங்களில் குணமாக்கி, சினிமாவில் மீண்டும் சண்டைக்காட்சிகளில் முன்னிலும் வேகமாக நடித்தார்.
*************************************************************************************************************

எம்.ஜி.ஆரின் சாதனை திரைப்படங்கள்


1. சதிலீலாவதி

2. இரு சகோதரர்கள்

3. தட்சயக்ஞம்

4. மாயமச்சீந்திரா

5. பிரகலாதா

6. அசோக்குமார்

7. அரிச்சந்திரா

8. சாலிவாகனன்

9. மீரா

10. ஸ்ரீ முருகன்

11. ராஜகுமாரி

12. பைத்தியக்காரன்

13. அபிமன்யூ

14. மோகினி

15. மருதநாட்டு இளவரசி

16. மந்திரி குமாரி

17. மர்மயோகி

18. சர்வாதிகாரி

19. அந்தமான் கைதி

20. என் தங்கை

21. ஜெனோவா

22. மலைக்கள்ளன்

23. அலிபாபாவும் 40 திருடர்களும்

24. குலேபகாவலி

25. மதுரை வீரன் (தமிழ்நாட்டில் 35 திரையரங்கில் 100 நாள். இலங்கை, பெங்களூரில் 100 நாள் ஓடியது. சென்னையில் நான்கு தியேட்டர்களில் முதல் முறையாக 100 நாள்)

26. தாய்க்குப்பின் தாரம்

27. சக்கரவர்த்தி திருமகள்

28. புதுமைப்பித்தன்

29. மகாதேவி

30. நாடோடி மன்னன்

31. பாக்தாத் திருடன் (மதுரையில் மட்டும் 100 நாள்)

32. திருடாதே

33. தாய் சொல்லைத் தட்டாதே

34. தாயைக்காத்த தனயன்

35. குடும்பத் தலைவன்

36. தர்மம் தலைக்காக்கும் (கோவை ராயல் மட்டும்)

37. பரிசு (சேலம் மட்டும்)

38. நீதிக்குப்பின் பாசம் (சேலம் மட்டும்)

39. பெரிய இடத்துப் பெண்

40. வேட்டைக்காரன்

41. பணக்காரன்

42. தெய்வத்தாய்

43. படகோட்டி

44. எங்க வீட்டுப் பிள்ளை

45. ஆயிரத்தில் ஒருவன்

46. அன்பே வா

47. முகராசி (சென்னை கெயிட்டி மட்டும்)

48. பெற்றால்தான் பிள்ளையா?

49. காவல்க்காரன்

50. ரகசிய போலீஸ்-115

51. குடியிருந்த கோயில்

52. ஒளி விளக்கு

53. அடிமைப்பெண்

54. நம்நாடு

55. மாட்டுக்கார வேலன்

56. என் அண்ணன்

57. எங்கள் தங்கம்

58. குமரிக்கோட்டம்

59. ரிக்க்ஷாக்காரன்

60. நீரும் நெருப்பும் (இலங்கை யாழ் ராணி)

61. நல்ல நேரம்

62. இதய வீணை

63. உலகம் சுற்றும் வாலிபன்

64. ராமன் தேடிய சீதை (இலங்கையில் மட்டும்)

65. நேற்று இன்று நாளை

66. உரிமைக்குரல்

67. இதயக்கனி

68. பல்லாண்டு வாழ்க

69. சிரித்து வாழ வேண்டும்

70. நீதிக்குத் தலை வணங்கு

71. நினைத்ததை முடிப்பவன்

72. நாளை நமதே (இலங்கை-கொழும்பு-சமந்தா)

73. உழைக்கும் கரங்கள் (இலங்கை மட்டும்)

74. ஊருக்கு உழைப்பவன் (இலங்கை-கொழும்பு செல்லமஹால், யாழ் மனோகரா மட்டும்)

75. இன்று போல் என்றும் வாழ்க

76. மீனவ நண்பன்

******************************************************************************************************************
தமிழக அரசு விருதுகள்


1967-ல் சிறந்த படம்- காவல்காரன்

1968-ல் சிறந்த நடிகர்- குடியிருந்த கோயில்

1969-ல் சிறந்த படம்- அடிமைப்பெண்

1970-ல் சிறந்த 2வது படம்- எங்கள் தங்கம்

1978-ல் சிறந்த படம்-மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.


சினிமா ரசிகர் சங்கம்


40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்ப்பட்டு வரும் சென்னை சினிமா ரசிகர் சங்கம் அளித்த விருதுகள்:

1956-ல் சிறந்த படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்

1965-ல் சிறந்த படம், சிறந்த நடிகர்- எங்க வீட்டுப் பிள்ளை

1969-ல் சிறந்த படம்- நம்நாடு

1973-ல் சிறந்த இயக்குனர், சிறந்த தயாரிப்பு நிறுவனம்- உலகம் சுற்றும் வாலிபன்


ஜனாதிபதி விருது பெற்ற படங்கள்


1954-ல் தமிழில் சிறந்த படமாக முதன் முதலில் விருது பெற்றுத் துவக்கி வைத்தது 'மலைக்கள்ளன்'

1971-ல் இந்தியாவிலேயே சிறந்த நடிகராக எம்.ஜி.ஆருக்கு விருது பெற்றுத் தந்த படம் 'ரிக்க்ஷாக்காரன்'. தமிழ் நடிகர் ஒருவர் தேசிய அளவில் விருது பெற்றது அதுவே முதல் முறை.


பிலிம்பேர் விருதுகள்:


1969-ல் சிறந்த தமிழ் படம்- அடிமைப்பெண்

1973-ல் சிறந்த படம்- உலகம் சுற்றும் வாலிபன்

****************************************************************************************************************
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்


உலகிலேயே திரைப்படத்தின் மூலமாக மக்களிடையே செல்வாக்கைப் பெற்று, அதை அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சி புரிந்தவர் எம்.ஜி.ஆரைப் போல எவரும் இருக்க முடியாது.

திரைப்படத் துறையில் அவரை ஒரு சகாப்தம் என்று சொல்லும் அதே நேரத்தில் அரசியலிலும் அவர், யாராலும் யூகிக்க முடியாத அதிசய மனிதராக விளங்கினார்.

சினிமா மூலம் மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்து இன்று வரை எம்.ஜி.ஆரின் வாழ்க்கை கட்டங்கள் ஒரு சரித்திரமாகவே அமைத்து விட்டிருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்ல இயல்புகளை உணர்ச்சி வசத்துடன் சொல்கிறார்கள். மொத்தத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே "மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்; அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்" என்று 'தெய்வத்தாய்' படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போல அவரது வாழ்க்கை அமைந்துவிட்டது.

இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917 -ந் தேதி ரேவதி நட்சத்திரத்தில்.

எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு.

முதலாவதாக பிறந்த சகோதரி பெயர் காமாட்சி. இரண்டாவதாக பிறந்த மூத்த சகோதரர் பெயர் பாலகிருஷ்ணன். மூன்றாவது சகோதரி சுமித்ரா, நான்காமவர் தன சக்ரபாணி.

பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர்க்கு இரண்டு வயதான போது மீண்டும் தாயகம் திரும்பினார்கள் பெற்றோர். நெருங்கிய உறவினர்கள் ஆதரிக்காத நிலையில் அப்பா கோபாலன் காலமானார். அதனால் தன் உறவினர் சிலர் ஏற்கனவே குடியிருத்த கும்பகோணம் நகருக்கு தாயார் சத்யபாமா தன் குழந்தைகளோடு வந்தார்.

கும்பகோணத்தில் உறவினர்கள் வேலு நாயரும், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்பாட்டு பாடியவரான நாராயண நாயரும் சத்தியபாமா குடும்பத்துக்கு உதவியாக இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் கும்பகோணத்திலுள்ள ஆனையடி பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க குடும்பத்திலுள்ள வசதியின்மை இடம் கொடுக்கவில்லை.

பள்ளியில் படித்தபோது எம்.ஜி.ஆர். பள்ளியில் நடந்த 'லவகுசா' என்ற நாடகத்தில் லவனாக நடித்தார். இது தான் எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகமும்,முதல் வேடமும் ஆகும். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழு கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்த நாராயண நாயர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரிடம் எம்.ஜி.ஆரின் அழகிய தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் கூறி கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.

தன்னையும் சேர்த்துக் கொண்டதாள் தான் தம்பியை நடிக்க அனுமதிக்க முடியும் என்று சக்ரபாணி சொல்ல, இருவரும் நாடகக் குழுவில் சேர்க்கப்பட்டனர். "படிக்க வேண்டிய வயதில் என் பிள்ளைகளை நடிக்க வைத்து பிழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே" என்று எம்.ஜி.ஆரின் தாயார் கண் கலங்கினாராம்.

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு கும்பலில் ஒரு வேஷம். வாரத்துக்கு நாலரை சிபாரிசில் எம்.ஜி.ஆருக்கு நல்ல வேஷங்கள் கிடைத்தன. கம்பெனியில் சகோதரர்களின் நண்பர் பி.யூ.சின்னப்பா, சின்னப்பா ராஜ்பார்ட் ஆனதும் அவருக்கு ஸ்திரீ பார்ட்டாக எம்.ஜி.ஆர். நடித்தார்.

நாடகக்குழு சேர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு. பதினைந்து வயதுக்குள்ளாக எம்.ஜி.ஆர் அந்த கம்பெனி நடத்திய 30 நாடகங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றார்.

இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு இருக்கும் போதுதான் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி காமாட்சி தனது பதினாறாம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

சகோதரியின் மறைவு எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. அதுமட்டுமல்ல, ஒரிஜினல் பாய்ஸ் கம்பேனியார் நாடகங்களை சரிவர நடத்த முடியாத நிலையில் தத்தளித்ததால் எம்.ஜி.ஆர் வருமானமின்றி அவதிப்பட்டார்.

அப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியில் சேர எம்.ஜீ.ஆர்., சக்ரபாணி இருவருக்குமே அழைப்பு வந்தது. அழைப்பை இருவரும் ஏற்றுக் கொள்ள ஒரு காரணமும் உண்டு.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாக பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து எம்.ஜி.ஆர்., தன் கவுரத்தை இழக்க விரும்பாமல் 1930-ல் விலகி, மொய்தீன் கம்பெனி குழுவுடன் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்கு புறப்பட்டார்.

ரங்கூனுக்கு திரும்பிய எம்.ஜி.ஆரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி முதலாளி மீண்டும் அழைத்தார். எம்.ஜி.ஆரும் சேர்ந்தார். தொண்டை உடைந்து போனதால் கதாநாயகன் வேஷங்களைத் தன்னால் சமாளித்துக்கொள்ள இயலாது என்று உணர்ந்த எம்.ஜி.ஆர். வீர விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.கத்திச் சண்டை, கம்புச் சண்டை போன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமின்றி நம்பியார், பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கும் இந்த பயிற்சிகளை அளித்த குரு 'காளி' என்.ரத்தினம் ஆவார்.

சினிமாவில் நகைச்சுவை நடிப்பில் ஆரம்ப கால முன்னணி நடிகர் அவர். அவரது காதல் மனைவி தான் நகைச்சுவை நடிகை சி.தி.ராஜகாந்தம்.

இந்த சமயத்தில் தான் 'சதிலீலாவதி' படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் நாயகன் ராதா.

அதைத் தொடர்ந்து தி.எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்த 'இரு சகோதரர்கள்' படத்தில் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி, சக்ரபாணியும் நடித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு தக்ஷ்யங்கம், வீர ஜெகதீஸ், மாயமச்சீந்திரா, பிரகலாதன், அசோக் குமார், சீத ஜனனம், தாசிப்பெண், ஹரிச்சந்திரா, பைத்தியக்காரன், மீரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

'saalivaganan' படத்தின் கதாநாயகன் ரஞ்சன். அவருக்கு எதிரான விக்கிரமாதித்தன் வேடம் எம்.ஜி.ஆருக்கு அவரது மந்திரி பட்டியாக சின்னப்பாதேவர் நடித்தார்.

அதன்பிறகு ஜுபிடர் பிக்சர்ஸில் மாத சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். 'ராஜகுமாரி' என்ற படத்தில் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரியை நடிக்க வைப்பதற்கு ஜுபிடர் பிக்சர்ஸார் திட்டமிட்டார்கள்.

குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க யோசனை சொன்ன இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, "ஸ்ரீமுருகன் படத்தில் எம்.ஜி.ஆரும், மாலதியும் பரமசிவன்-பார்வதியாக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பொருத்தமான ஜோடியாகவும் இருக்கிறார்கள். அவர்களையே கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க வைத்து விடலாம்" என்றார்.

செய்தியைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆரால் நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ள படப்பிடிப்பு துவங்கியது. படத்திற்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி.

'ராஜகுமாரி' படத்தின் வெற்றி அவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. வீரத்தின் விளை நிலமான தமிழ் மக்களுக்கு எம்.ஜி.ஆரின் வீரமிக்க நடிப்பு நிறைந்த படங்கள் உற்சாக மூட்டின.

எம்.ஜி.ஆர்., சக்ரபாணி இருவரும் படித்தது கும்பகோணத்திலுள்ள ஆனையடி நகராட்சி பள்ளியில், அன்றைக்கு பள்ளியானது கூரைக் கட்டிடத்துடன் இருந்தோம்.

எதிரே காயான் குளம். அந்த இடம் இப்போது காந்தி பார்க்காக மாறிவிட்டது. பள்ளி இருந்த இடம் கிளப்பாகி இருக்கிறது. இப்போது உள்ள பள்ளி பழைய இடத்திலிருந்து சற்று இடம் பெயர்ந்திருக்கிறது.

அந்த இடம் இப்போது கும்பகோணத்தில் 'நாகேஸ்வரம் வடக்கு வீதி' என அழைக்கப்படுகிறது. முன்பிருந்தது அடுக்கு மாடி கடைகளாக மாறிவிட்டன.

கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். குடும்பம் இருந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்னணி பாடும் நாராயணன் நாயர்.

ஆனையடி பள்ளியில் எம்.ஜி.ஆரையும் சக்கரபானயையும் சேர்ந்தது அவர்தானாம். பள்ளியில் படிக்கும் போது எம்.ஜி.ஆர். மேல் சட்டை இடுப்பில் (துண்டு போல்) சிறு வேஷ்டி, தோளில் சிறு துண்டு அணிந்து நடந்து செல்வதை பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.

எம்.ஜி.ஆருக்கு படிப்பில் இருந்த ஆர்வம் போல விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டாம். அவருக்கு பிடித்தமான இனிப்பு சவ் மிட்டாய். எம்.ஜி.ஆரிடம் காசில்லாத போது வசதி படைத்த பள்ளித் தோழர்கள் வாங்கித் தந்திருக்கிறார்களாம்.

கும்பகோணத்தில் அசேன், உசேன் என்ற இரட்டையர் குச்சி சண்டை, அடி தடி என எல்லா வகை சண்டையும் போடுவார்கள். அதைப்பார்க்க எம்.ஜி.ஆர். மிகுந்த ஆர்வம் காட்டுவாராம்.

பள்ளியில் நடந்த 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருக்கிறார்.

இந்த நாடகம் தான் நாராயண நாயர் மூலம் எம்.ஜி.ஆரை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்க்கச் செய்தது.

பள்ளி பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபால மேனன் - பெரிய தெரு (வியாபாரம்) என்றும், எம்.ஜி.ஆர். பிறந்த தேதியாக 25-5-1916 என்றும் , வகுப்பு: மலையாளி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

எம்.ஜி.ஆர் பள்ளியில் சேர்ந்த தேதி 7-12-1922. முதல் வகுப்பு 'அ' பிரிவில், பள்ளியில் விட்டு வெளியேறியது நான்காம் வகுப்பு தொடங்கிய சில நாட்களில் 27-7-1925 என்றும் உள்ளதாம்.

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின் ஆனையடி பள்ளியில் அவரது உருவப்படத்தினை முனு ஆதி திறந்து வைத்தார்.

30-10-1977 ல் தஞ்சை மாவட்ட பட்டதாரி மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முதல்வர் எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அப்போது நேரில் சென்று ஆனையடி பள்ளியை சுற்றிப் பார்த்தவர் பள்ளிப்பதிவேட்டில் தனது பெயர், தான் பள்ளியில் சேர்க்கப்பட்ட மற்ற விவரங்களை பார்த்தார்.

எம்.ஜி.ஆரின் பள்ளி சீரியல் எண் 100 என்றும் சக்கரபாணியின் எண் 113 என்றும் இருந்ததாக எம்.ஜி.ஆரின் பள்ளித் தோழர் சுவாமிநாதனின் மகன் ஆதிமூலம் எம்.ஜி.ஆருடன் உடனிருந்து கவனித்ததாக குறிப்பிட்டார்.

****************************************************************************************************************
நடிகர் சங்கத்தில் எம்.ஜி.ஆர்.

29-8-1952-ல் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம் துவங்கியது. அப்போது எம்.ஜி.ஆர். உப தலைவர்.

14-9-1952-ல் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் மாறியது. அதற்கு எம்.ஜி.ஆர். முதல் நன்கொடையாக ரூ.501 அளித்தார்.

1953-ல் எம்.ஜி.ஆர் ---> உப தலைவர்

1954-ல் எம்.ஜி.ஆர் ---> பொதுச் செயலாளர்

1955-ல் எம்.ஜி.ஆர் ---> செயலாளர்

1957-ல் எம்.ஜி.ஆர் ---> பொதுச் செயலாளர்

1958-ல் எம்.ஜி.ஆர் ---> தலைவர்

1961-ல் எம்.ஜி.ஆர் ---> தலைவர்
*********************************************************************************************************

அதிக படங்களை இயக்கியவர்கள்

ப.நீலகண்டன்-17

எம்.ஏ.திருமுகம்-16

டி.ஆர்.ராமண்ணா-8

கே.சங்கர்-8

**************************************************************************************************************
எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்.

எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களின் பட்டியல்!


வரிசை எண்    படத்தின் பெயர்    வெளியான தேதி
1    சதிலீலாவதி    28-03-1936
2    இரு சகோதரர்கள்    1936
3    தட்சயக்ஞம்    31-03-1938
4    வீர ஜெகதீஷ்    1938
5    மாயா மச்சீந்திரா    22-04-1939
6    பிரகலாதா    12-12-1939
7    வேதவதி (அல்லது) சீத ஜனனம்     22-02-1941
8    அசோக்குமார்    10-07-1941
9    தமிழ் அறியும் பெருமாள்    30-04-1942
10    ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண்    03-03-1943
11    ஹரிச்சந்திரா    14-01-1944
12    சாலிவாகனன்    16-02-1945
13    மீரா    03-11-1945
14    ஸ்ரீமுருகன்    04-06-1946
15    ராஜகுமாரி    11-04-1947
16    பைத்தியக்காரன்    26-09-1947
17    அபிமன்யூ    06-05-1948
18    ராஜமுக்தி    09-10-1948
19    மோகினி    31-10-1948
20    ரத்னகுமார்    15-12-1949
21    மருதநாட்டு இளவரசி    02-04-1950
22    மந்திரி குமாரி    24-06-1950
23    மர்ம யோகி    02-02-1951
24    சர்வாதிகாரி    14-09-1951
25    அந்த மாண் கைதி    14-03-1952
26    குமாரி    11-04-1952
27    என் தங்கை    31-05-1952
28    நாம்    05-03-1953
29    ஜெனோவா (மலையாளம்)    1953
30    பணக்காரி    1953
31    ஜெனோவா (தமிழ்)    1953
32    மலைக்கள்ளன்    22-07-1954
33    கூண்டுக்கிளி    26-08-1954
34    குலேபகாவலி    29-07-1955
35    அலிபாபாவும் 40 திருடர்களும்    14-01-1956
36    மதுரை வீரன்    13-04-1956
37    தாய்க்குப் பின் தாரம்    21-09-1956
38    சக்ரவர்த்தி திருமகள்    18-01-1957
39    ராஜராஜன்    26-04-1957
40    புதுமை பித்தன்    02-08-1957
41    மகாதேவி    22-11-1957
42    நாடோடி மன்னன்    22-08-1958
43    தாய் மகளுக்குக் கட்டிய தாலி    31-12-1959
44    பாக்தாத் திருடன்    06-05-1960
45    ராஜாதேசிங்கு    02-09-1960
46    மன்னாதி மன்னன்    19-10-1960
47    அரசிளங்குமரி    01-01-1961
48    திருடாதே    23-03-1961
49    சபாஷ் மாப்பிளே    14-07-1961
50    நல்லவன் வாழ்வான்    31-08-1961
51    தாய் சொல்லைத் தட்டாதே    07-11-1961
52    ராணி சம்யுக்தா    14-01-1962
53    மாடப்புறா    16-02-1962
54    தாயைக் காத்த தனயன்    13-04-1962
55    குடும்பத் தலைவன்    15-08-1962
56    பாசம்    31-08-1962
57    விக்கிரமாதித்தன்    27-10-1962
58    பணத்தோட்டம்    11-01-1963
59    கொடுத்து வைத்தவள்    09-02-1963
60    தர்மம் தலைக் காக்கும்    22-02-1963
61    கலை அரசி    19-04-1963
62    பெரிய இடத்துப் பெண்    10-05-1963
63    ஆனந்த ஜோதி    28-06-1963
64    நீதிக்குப் பின் பாசம்     15-08-1963
65    காஞ்சித் தலைவன்    26-10-1963
66    பரிசு    15-11-1963
67    வேட்டைக்காரன்    14-01-1964
68    என் கடமை    13-03-1964
69    பணக்காரக் குடும்பம்    24-04-1964
70    தெய்வத்தாய்    18-07-1964
71    தொழிலாளி    25-09-1964
72    படகோட்டி    03-11-1964
73    தாயின் மடியில்    18-12-1964
74    எங்க வீட்டுப் பிள்ளை    14-01-1965
75    பணம் படைத்தவன்    27-03-1965
76    ஆயிரத்தில் ஒருவன்    09-07-1965
77    கலங்கரை விளக்கம்    28-08-1965
78    கன்னித்தாய்    10-09-1965
79    தாழம் பூ    23-10-1965
80    ஆசை முகம்    10-12-1965
81    அன்பே வா    14-01-1966
82    நான் ஆணையிட்டால்    04-02-1966
83    முகராசி    18-02-1966
84    நாடோடி    14-04-1966
85    சந்திரோதயம்    27-05-1966
86    தாலி பாக்கியம்    27-08-1966
87    தனிப் பிறவி    16-09-1966
88    பறக்கும் பாவை    11-11-1966
89    பெற்றால்தான் பிள்ளையா    09-12-1966
90    தாய்க்குத் தலைமகன்    13-01-1967
91    அரசக்கட்டளை    19-05-1967
92    காவல்காரன்    07-09-1967
93    விவசாயி    01-11-1967
94    ரகசிய போலீஸ் 115    11-01-1968
95    தேர்த்திருவிழா     23-02-1968
96    குடியிருந்த கோவில்    05-03-1968
97    கண்ணன் என் காதலன்    25-04-1968
98    புதிய பூமி    27-06-1968
99    கணவன்    15-08-1968
100    ஒளி விளக்கு    20-09-1968
101    காதல் வாகனம்    21-10-1968
102    அடிமைப்பெண்    01-05-1969
103    நம்நாடு    07-11-1969
104    மாட்டுக்கார வேலன்    14-01-1970
105    என் அண்ணன்    21-05-1970
106    தலைவன்    24-07-1970
107    தேடி வந்த மாப்பிள்ளை    29-08-1970
108    எங்கள் தங்கம்     09-10-1970
109    குமரிக் கோட்டம்    26-01-1971
110    ரிக்க்ஷாக்காரன்    29-05-1971
111    நீரும் நெருப்பும்    18-10-1971
112    ஒரு தாய் மக்கள்    09-12-1971
113    சங்கே முழங்கு    04-02-1972
114    நல்ல நேரம்    10-03-1972
115    ராமன் தேடிய சீதை    13-04-1972
116    நான் ஏன் பிறந்தேன்    09-06-1972
117    அன்ன மிட்ட கை    15-09-1972
118    இதய வீணை    20-10-1972
119    உலகம் சுற்றும் வாலிபன்    11-05-1973
120    பட்டிக்காட்டுப் பொன்னையா    10-08-1973
121    நேற்று இன்று நாளை    12-07-1974
122    உரிமைக்குரல்    07-01-1974
123    சிரித்து வாழ வேண்டும்    30-11-1974
124    நினைத்ததை முடிப்பவன்    09-05-1975
125    நாளை நமதே    04-07-1975
126    இதயக்கனி    22-08-1975
127    பல்லாண்டு வாழ்க    31-10-1975
128    நீதிக்குத் தலைவணங்கு    18-03-1976
129    உழைக்கும் கரங்கள்    23-05-1976
130    ஊருக்குப் உழைப்பவன்    12-11-1976
131    நவரத்தினம்    05-03-1977
132    இன்று போல் என்றும் வாழ்க    05-05-1977
133    மீனவ நண்பன்    14-08-1977
134    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்    14-01-1978
135    அவசர போலீஸ் 100    -
136    நல்லதை நாடு கேட்கும்    -
வரிசை எண்    பிறமொழி படத்தின் பெயர்    வெளியான தேதி
1    ஏக்தா ராஜா (ஹிந்தி)    15-06-1951
2    சர்வாதிகாரி (தெலுங்கு)    05-10-1951

*********************************************************************************************************
எம்.ஜி.ஆர் படங்களுக்கு உள்ள சிறப்புகள்

விஞ்ஞான ரீதியில் முயன்று பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப்படம் "கலை அரசி".

தமிழ் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் 100 நாள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்"- திருவண்ணாமலை, "எங்க வீட்டுப் பிள்ளை".

மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிச்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி, சத்யா மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் வண்ண தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களே! (தேவர் படம் உட்பட).....

1)தமிழின் முதல் வண்ண படம்= அலிபாபாவும் 40 திருடர்களும்

2)தமிழில் வயது வந்தவர்களுக்கான 'ஏ' சான்றிதழ் பெற்ற முதல் படம் 'மர்மயோகி'(இது ஆபாசத்திற்காக அல்ல திகிலூட்டும் காட்சிகள் இருக்கிறதென்பதற்காக)

3)தமிழில் அதிக எண்ணிக்கையில் இரட்டை வேடங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர்.=16 படங்கள்.
******************************************************************************************************************
எம்.ஜி.ஆருடன் நடித்த கதாநாயகியர்


ஜெயலலிதா-28;

சரோஜாதேவி-26;

லதா-13;


நன்றி -இதயக்கனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக