வியாழன், 5 ஜனவரி, 2017

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பிறந்த நாள் ஜனவரி 6, 1966),




 இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பிறந்த  நாள்  ஜனவரி 6, 1966),

அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்று அழைக்கப்படுகிறார்.

2009ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர சொல்லைப் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

ரகுமான் ஜனவரி 6, ஆம் திகதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.

முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.
இசையில் ஆரம்ப காலம்

ரகுமான் தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார்.பூஸ்ட்,ஏசியன் பெயின்ட்ஸ்,ஏர்டெல்,லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார்.
படைப்புகள்
திரைப்பட இசையமைப்புகள்
ஆண்டு     தமிழ்     தெலுங்கு     ஹிந்தி     ஆங்கிலம்     விருதுகள்
1992     ரோஜா     ரோஜா     ரோஜா         "சிறந்த இசையமைப்பாளர் - தேசிய விருது, பிலிம்பேர்"
1993     ஜென்டில்மேன்     ஜென்டில்மேன்     தி ஜென்டில்மேன்         "சிறந்த இசையமைப்பாளர் - தமிழ்நாடு மாநில விருது, பிலிம்பேர்"
கிழக்குச்சீமையிலே               
புதிய முகம்               
திருடா திருடா     டொங்கா டொங்கா     ச்சோர் ச்சோர்       
உழவன்               
1994     டூயட்               
காதலன்         ஹம்ஸே ஹே முக்காப்லா         "சிறந்த இசையமைப்பாளர் - தமிழ்நாடு மாநில விருது, பிலிம்பேர்"
கருத்தம்மா               
மே மாதம்               
புதிய மன்னர்கள்               
வண்டிச்சோலை சின்னராசு               
பவித்ரா               
    சூப்பர் போலீஸ்           
    கேங் மாஸ்டர்           
1995     பம்பாய்     பம்பாய்     பம்பாய்       
இந்திரா               
முத்து               
ரங்கீலா         ரங்கீலா       
1996     இந்தியன்     பாரதீயடு     ஹிந்துஸ்தானி   
காதல் தேசம்     பிரேம தேசம்     துனியா தில்வாலோன் கீ       
லவ் பேர்ட்ஸ்               
மிஸ்டர் ரோமியோ               
1997     இருவர்               
மின்சார கனவு     மெருப்பு கலலு     சப்னே         "சிறந்த இசையமைப்பாளர் - தேசிய, தமிழ்நாடு மாநில மற்றும் பிலிம்பேர் விருதுகள்"
ரட்சகன்     ரக்ஷடு           
        தவுட்       
1998     ஜீன்ஸ்     ஜீன்ஸ்     ஜீன்ஸ்   
உயிரே     ஹிருதயாஞ்சலி     தில் சே       
        தோலி சஜா கே ரக்ஹ்னா       
        கபி நா கபி       
1999     முதல்வன்     ஒக்கே ஓக்கடு     நாயக்   
தாஜ் மஹால்               
சங்கமம்               
காதலர் தினம்     பிரேமிகுலு ரோஜு           
ஜோடி               
தாளம்         தாள்       
என் சுவாசக் காற்றே               
படையப்பா               
        1947 எர்த்       
        தக்ஷக்   
        புக்கார்       
2000     அலைபாயுதே     சகி     சாத்தியா   
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்     ப்ரியலு பிலிச்சிந்தி           
ரிதம்     ரிதம்           
தெனாலி     தெனாலி           
        தில் ஹே தில் மே       
2001     ஸ்டார்           
பார்த்தாலே பரவசம்     பரவசம்           
அல்லி அர்ஜூனா               
        சுபைதா       
        ஒன் 2 கா 4       
        லவ் யூ ஹமேஷா       
        லகான்       
2002     கன்னத்தில் முத்தமிட்டால்     அம்ருதா       
பாபா               
காதல் வைரஸ்               
        தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங்       
        சாத்தியா       
2003     உதயா           
பரசுராம்               
பாய்ஸ்     பாய்ஸ்           
            வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் எர்த்   
எனக்கு 20 உனக்கு 18     நீ மனசு நாக்கு தெலுசு           
கண்களால் கைது செய்               
        தெஹ்ஜீப்       
2004     ஆய்த எழுத்து     யுவா     யுவா   
நியூ     நானி           
தேசம்         ஸ்வதேஸ்       
        லகீர்       
        மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ்       
        தில் நே ஜிஸே அப்னா கஹா       
        கிஸ்னா       
2005             போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ   
        மங்கள் பாண்டே - தி ரைஸிங்       
அ ஆ               
        வாட்டர்       
2006             ரங் தே பசந்தி       
சில்லுனு ஒரு காதல்               
வரலாறு (காட்பாதர்)               
2007     குரு     குரு     குரு   
            ப்ரோவோக்டு   
சிவாஜி               
அழகிய தமிழ் மகன்           
            எலிசபெத்: தி கோல்டென் ஏஜ்   
2008             ஜோதா அக்பர்   
        ஜானே து யா ஜானே நா       
        அடா : எ வே ஆப் லைப்       
சக்கரகட்டி               
        யுவ்ராஜ்       
        கஜினி       
            ஸ்லம் டாக் மில்லியனியர்
2009             டில்லி 6   
        ப்ளூ       
            பாசேஜ்   
            கபுள்ஸ் ரிட்ரீட்   
2010     விண்ணைத்தாண்டி வருவாயா     யே மாய சேசாவே     ஏக் தீவானா தா       
எந்திரன்     ரோபோ     ரோபோ           
        ஜ்ஹூதா ஹீ சஹி       
            127 ஹவர்ஸ்     கோல்டன் க்லோபுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
    கொம்மாரம் புலி           
2011             ராக் ஸ்டார்       
2012             '     பீப்பிள் லைக் அஸ்   
        ஜப் தே கே ஜான்       
கடல்     கடலி             '
2013     மரியான்               
அம்பிகாபதி         ராஞ்சனா       
2014             ஹை வே       
கோச்சடையான் (திரைப்படம்)     விக்கிரமசிம்ஹா     கோச்சடையான்       
            மில்லியன் டாலர் ஆர்ம்   
காவியத் தலைவன்               
லிங்கா     லிங்கா     லிங்கா       
2015     ஐ (திரைப்படம்)     ஐ     ஐ       

    குறிப்பு: "ஆண்டு", பன்மொழி திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டை குறிக்கும்.

பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:

    1993 யோதா (மலையாளம்)
    1999 Return of the Thief of Baghdad (ஆங்கிலம்)
    2003 Tian di ying xiong (சீன மொழி)
    1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).

திரைப்படமல்லாத இசையமைப்புகள்

    Return of the Thief of Baghdad (2003)
    தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
    செட் மீ ஃப்ரீ (1991)
    வந்தே மாதரம் (1997)
    ஜன கன மன (2000)
    பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
    இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
    ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)

இவர் பெற்ற விருதுகள்
சென்னையில் தான் பெற்ற ஆஸ்கார் விருதுடன் ஏ. ஆர். ரகுமான்

    இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை பெருமைபடுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது[3].
    2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
    இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
    மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
    ரங் தே பசந்தி, லகான், சாத்தியா, தால் ஆகிய திரைப்படங்களுக்காக ஐ.ஐ.எஃப்.ஏ விருது பெற்றுள்ளார்.
    சிகரமாக, இந்திய குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருதும் வழங்கப்பட்டது.
    ஸ்வரலயா யேசுதாஸ் விருது(2006), மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது (2004) ஆகிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
    ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு உலக பங்களிப்புக்கான மதிப்புறு விருதை வழங்கியுள்ளது.

இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர்

ரியோ டி ஜனேரோ 2016 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்காக ஏ. ஆர். ரகுமான் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
**********************************************************************

“இசைப்புயல்” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர். ரகுமான், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாற்றையும் சாதனைகளையும் பற்றி விரிவாக காண்போம்.

பிறப்பு: ஜனவரி 6, 1967

இடம்: சென்னை (தமிழ்நாடு)

தொழில்: இசையமைப்பாளர்

பிறப்பு:

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில், 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார் ஆகும். இவருடைய தந்தை பெயர் சேகர். மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

ஏ.ஆர். ரகுமான், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார். அவருடைய தந்தை இறந்தபோது, அவருக்கு வயது ஒன்பது. ஒருமுறை இவருடைய சகோதரி நோயால் அவதியுற்ற போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்ததன் விளைவாக இவருடைய சகோதரி முற்றிலும் நோயிலிருந்து விடுபெற்றார். இதனால் இவருடைய குடும்பம் இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.

இசை பயணம்:


ஏ.ஆர். ரகுமான், தன்னுடைய பதினொரு வயதில், இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர், எம்.எஸ். விஸ்வநாதன், ரமேஸ் நாயுடு, மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசை கலைஞர்களிடமும் பணியாற்றினார். இசைத்துறையில் ஏற்பட்ட ஆவலினால் “ட்ரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில்” கிளாசிக்கல் இசைத்துறையில் இசை பயின்று பட்டமும் பெற்றார். 1992 ஆம் ஆண்டு, மணிரத்தினம் இயக்கத்தில் “ரோஜா” திரைப்படம் மூலம் இசைதுறையில் அறிமுகமானார் ஏ.ஆர். ரகுமான். தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரைப் பதித்தார். இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை தந்தது என்றால் அது மிகையாகாது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் பிரபலமானது மட்டுமல்லாமல், முதல் படமே இவருக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது. ரகுமானை தமிழர்கள் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் ‘யார் இந்த இளைஞன்?’ என்று கேட்க வைத்தது. பின்னர், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைபடங்களுக்கும் இசையமைத்த இவர் “இசைப்புயல்” எனவும் அழைக்கப்பட்டார்.

சாதனைகள்:

1997 ஆம் ஆண்டு, ‘மின்சாரக் கண்ணா’ என்ற திரைப்படத்திற்கும், 2002 ஆம் ஆண்டு இசையமைத்து வெளிவந்த ‘லகான்’ திரைப்படத்திற்கும், 2003 ஆம் ஆண்டு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்திற்கும், தேசியவிருதுகள் கிடைத்தது. ‘ரோஜா’ திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக “தேசியவிருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், ஜென்டில்மேன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “காதலன்” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும், “மின்சார கனவு” படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய இசையால் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஹாலிவுட்டிலும் வெற்றிக் கொடி நட்டுள்ளார்.

ஆஸ்கார் விருதுபெற்ற “ஸ்லம் டாக் மில்லியனியர்”:        

2008 ஆம் ஆண்டு, இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது. படத்தின் ‘சவுண்ட் ட்ராக்’ மற்றும் “ஜெய் ஹோ” பாடல் ஆகியவற்றிற்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன. ஆஸ்கார் விருதை பெற்றுக்கொண்டு “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று, இந்தியாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றார். அதுமட்டுமல்லாமல், 2008-க்கான “கோல்டன் குளோப்” விருதும், “பாபடா” விருதும் இத்திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. இவ்விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே.

ஆல்பம்:

ஏ.ஆர். ரகுமான் திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆல்பங்களும் வெளியிட்டு வந்தார். 1989 ஆம் ஆண்டு, “தீன் இசை மாலை” என்ற தன்னுடைய முதல் ஆல்பத்தை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த “வந்தே மாதரம்” இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தையும் பெற்றுத்தந்தது. இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது. பின்னர், இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட “இன்ஃபினிட் லவ்” என்ற ஆல்பம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. ‘ஜன கன மன’, ‘இக்னைட்டட் மைன்ட்ஸ்’, ‘மா தூஜே சலாம்’ (அம்மாவுக்கு வணக்கம் – தமிழில்) மற்றும் மேலும் பல ஆல்பங்களையும் படைத்துள்ளார்.

பிற விருதுகள்:

    இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூசன்” வழங்கப்பட்டது.
    இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது.
    பத்மஸ்ரீ விருது
    லாரன்ஸ் ஆலிவர் விருது
    தமிழக திரைப்பட விருது
    மலேசிய விருது
    ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது.
    கோல்டன் குளோப் விருது
    கிராமிய விருது

இசையால், உலகத் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர், ஏ.ஆர். ரகுமான். அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. இதனால் உலகம் முழுக்க தனகென்று ரசிகர்களை கொண்டுள்ளார். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள்.

இன்று ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிக தேசிய விருதைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர், இந்த இசை புயல் மட்டுமே.

“உலகத்தரத்தில் ஒரு இந்திய இசையமைப்பாளர் என்றால் அது மிகையாகாது.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக