புதன், 13 டிசம்பர், 2017

இயக்குநர் வசந்த் பிறந்த நாள் டிசம்பர் 14


இயக்குநர் வசந்த் பிறந்த நாள் டிசம்பர் 14.

வசந்த் பிரபலமான தமிழ்த் திரைப்பட இயக்குநர். தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளி கல்வியை புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூர் இல் பயின்றார் . இவருடைய முதற்படமான கேளடி கண்மணி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் நடித்த இந்தப் படம் திரையரங்குகளில் 285 நாள் ஓடிச் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாக கேளடி கண்மணி திரைப்படம் கருதப்படுகிறது.
வாழ்க்கை
வசந்த் சிறுகதை எழுதியும் பத்திரிக்கையாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார். . பிறகு
கே.பாலசந்திரடம் சிந்து பைரவி ,
புன்னகை மன்னன் உட்பட 18 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். பின் தன்னந்தனியாக விமர்சன ரீதியாக பாராட்டபட்டு 285 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நடிப்பில் வெளிவந்த
கேளடி கண்மணி திரைப்படத்தை 1990 ல் இயக்கினார். இவரது அடுத்த படம் முந்தைய படத்தில் இடம்பெற்ற பாடலின் தலைப்பை தாங்கி வந்த நீ பாதி நான் பாதி திரைப்படம் மணமாகாத தாய்மார்களை பற்றி பேசியது. இந்த படத்தில் வரும் 'நிவேதா' என்ற ஒற்றை வார்த்தையில் உருவாக்கப் பட்டிருக்கும் பாடல் படமாக்கபட்டிருக்கும் விதம் பரவலாக பேசப் பட்டது. இவரது மூன்றாவது படைப்பு த்ரில்லர் வகையை சார்ந்த ஆசை 1995 ம் ஆண்டு வெளியாகி 200 நாட்கள் ஒடி வணீக ரீதியாக புது பாதையை உருவாக்கியது . மணி ரத்னம் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம்
அஜித் குமாருக்கு வணிக ரீதியாலான மாற்றத்தை மட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாகவும் வழிவகுத்தது . தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் ஒன்றான சிறந்த அறிமுக கதாநாயகி க்கான விருது
சுவலட்சுமிக்கும் , சிறந்த இயக்குனருக்கான விருது வசந்துக்கும் வழங்கப்பட்டது. 1997ல் அடுத்த திரைப்படமான நேருக்கு நேர் படத்தையும் மணி ரத்னமே தயாரித்தார். இத்திரைப்படத்தில் அப்பொழுது முன்னணியில் இருந்த விஜய்க்கு இணையான கதாநாயகனாக நடிகர்
சிவகுமாரின் மூத்த மகனான
சூர்யாவை அறிமுகம் செய்து சிம்ரனை கதாநாயாகிக்கினார். தொடர்ச்சியாக வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப் பார் (1999) திரைப்படத்தில் பின்னாளில் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவை முதன்முதலில் ஜோடியாக்கினார். இந்த திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வுக்கும் மிகப்பெரிய இசை வெற்றியை தந்தது. அடுத்த ஆண்டு
அப்பு , ரிதம் என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கினார். அப்பு திரைப்படத்தில்
திருநங்கையாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தது எல்லோராலும் பாராட்டப்பட்டது. ஒரே விபத்தில் தங்கள் துணை இழந்த இருவர் அந்த துக்கத்தில் இருந்து வெளியேறி புது உறவை ஏற்பது ரிதம் படமாகும். இந்த திரைப்படத்தில் ஐவகை நிலங்களை அடிப்படியாக கொண்ட பாடல்களுக்கு
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்.
ரிதம் படமே தன் இதயத்துக்கு நெருக்கமான படம் என்று வசந்த் தெரிவித்துள்ளார். அடுத்த திரைப்படமான ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே (2002) வில் ஐந்து பாடல்களுக்கு ஐந்து புதுமுக இசையமைப்பாளர்களை அறிமுகம் செய்து இந்திய சினிமாவில் கவன ஈர்ப்பை ஏற்படுத்தினார் . 2007ல் இயக்கிய த்ரில்லர் படமான சத்தம் போடாதே படம் விமர்சன ரீதியாக பாராட்டபட்டு அதிக வசூலை பெற்று, தமிழ் மாநில திரைப்பட விருதான சிறந்த திரைக்கதாசிரியர் விருதையும் பெற்றார். மூன்று காதலை மையமாக கொண்ட மூன்று பேர் மூன்று காதல் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளிவந்தது . 2015ம் ஆண்டு தொடங்கிய பெண்களுக்கு ஆதரவாக சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்திற்கு பிரபல கர்னாடக இசை பாடகி
சுதா ரகுநாதனை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார்.
வசந்த் திரைப்படங்களுக்கிடையே நிறைய விளம்பர படங்கள், குறும் படங்கள் மற்றும் ஆவண படங்களையும் இயக்கியுள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான சா.கந்தசாமி எழுதிய விசாரணை கமிஷனை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய தாக்கையின் மீது நான்கு கண்கள் எனும் குறும்படம் சிறந்த கற்பனை குறும்படத்திற்கான தேசிய விருதினை 2005ம் ஆண்டு பெற்றது இவரது கலைப் பணியில் கவனிக்கபட வேண்டியது. 40க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை பன்னாட்டு நிறுவன்ங்களுக்காக விஜய் டிவிக்காக மணி ரத்னத்துடன் சேர்ந்து இயக்கியுள்ளார். இதற்கிடையில் மாணவர்களுக்காக திரைப்பட தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பட்டறைகளையும் வசந்த் நடத்திவருகிறார்.
திரைப்பட விபரம்

இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பங்காற்ற
இயக்குநர் ஆச
1990 கேளடி கண்மணி
1991 நீ பாதி நான் பாதி
1995 ஆசை
1997 நேருக்கு நேர்
1999 பூவெல்லாம் கேட்டுப்பார்
2000 அப்பு
2000 ரிதம்
2003
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
2007 சத்தம் போடாதே
2013 மூன்று பேர் மூன்று காதல்
2016
சிவரஞ்சனியும் சில பெண்களும்
தண்ணீர்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம்
2014 நினைத்தது யாரோ
2015 வை ராஜா வை
கார்த்தியின் தந்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக