புதன், 6 டிசம்பர், 2017

நடிகர் சோ ராமசாமி நினைவு தினம் - டிசம்பர் 7, 2016.



நடிகர் சோ ராமசாமி நினைவு தினம் - டிசம்பர் 7, 2016.

சோ ராமசாமி (அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது.

வாழ்க்கைக் குறிப்பு

சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953 - 55 -ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும்.

கலையுலகம்

1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
விருதுகள்
இவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு
கொயங்கா விருதும், 1998 இல்
நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார்.
படைப்புகள்
இவர் 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரது முகமது பின் துக்ளக் என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.

அரசியல்

இவர் மாநிலங்களவை உறுப்பினராக
வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.
இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு
சோ ராமசாமி இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான[2] போக்கினைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் பற்றிய போதியளவு புரிதல் அற்றும் இருந்தார். [3] இவர் 1980 இல் இலங்கை வந்து, அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிடமிருந்து பரிசு வாங்கியது முதல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற கருத்துள்ளது. இவரின் தமிழின எதிர்ப்பின் காரணமான 1986 இல் மதுரையில் வைத்து அமில முட்டை வீசப்பட்டது. அதனால் அவருக்கு பல வருடங்களாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.  இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின. அவர்களை சில செய்திகள் விடுதலைப் புலிகள் என்றும், அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்தன.

மறைவு
சோ ராமசாமி, 7 டிசம்பர் 2016 அன்று காலை 4 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

சோ, பன்முகங்களை கொண்டவர். சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சோ மொத்தம் 89 திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் பல்வேறு படங்களில் நகைச்சுவை நாயகனாக ஜொலித்துள்ளார்.
நாடக நடிகராக இருந்து பின்னர் சினிமாவில் நுழைந்த சோ நடிப்பில் தனிமுத்திரை பதித்தவர். 5 நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதி உள்ளார். 5 சினிமா படங்களை இயக்கி உள்ளார்.
பத்திரிகையாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய அவர் சிறந்த அரசியல் விமர்சகராகவும் விளங்கினார். பன்முக தன்மையுடன் விளங்கிய சோவின் மரணம், சினிமா, பத்திரிகை, அரசியல் நாடக உலகில் பேரிழப்பாக கருதப்படுகிறது.
1934-ம் ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி பிறந்த சோ வக்கீல் படிப்பை முடித்துள்ளார். இவரது தந்தை சீனிவாச ஐயர், தாய் ராஜம்மாள்.
14 திரைப்படங்கள் மற்றும் நாடகங்களுக்கு கதை எழுதி உள்ளார். சிறந்த கதாசிரியராகவும் திகழ்ந்தார். “தேன்மொழியாள் மேடை” எனும் நாடகத்தில் இவர் “சோ” என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பின்னரே அவரது ராமசாமி என்கிற பெயருக்கு முன்னால் “சோ” என்கிற பெயரும் சேர்ந்து கொண்டது.
நாளடைவில் அவரது இயற்பெயரான ராமசாமி என்கிற பெயர் மறைந்து போகும் அளவுக்கு ‘சோ’ என்கிற பெயரே நிலைத்து நின்றது.
1966-ம் ஆண்டு சோவுக்கு திருமணம் நடந்தது. மனைவி பெயர் சவுந்திரா. ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துமா என்ற மகளும் உள்ளனர். மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த சோ, பி.எஸ்.சி. பட்டப்படிப்பை முடித்து வக்கீலுக்கு படித்தார்.
1957 முதல் 1962 வரை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாகவும் பணியாற்றினார். சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
1970-ம் ஆண்டு துக்ளக் வார இதழை தொடங்கிய சோ, அதில் பல்வேறு அரசியல் கட்டுரைகளை எழுதி உள்ளார். நையாண்டித்தனமான அவரது அரசியல் விமர்சனங்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
அரசியல் தலைவர்களை நையாண்டி செய்து துணிச்சலாக விமர்சனம் செய்து வந்தார். தனக்கு சரி என்று பட்டதை எழுத்துக்கள் மூலமாக அவர் வெளிப்படுத்தினார். பத்திரிகை துறை பணியை பாராட்டி சோவுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
1980-ம் ஆண்டு ‘வீரகேசரி’ விருதை பெற்ற இவர் “ஹால்டிகாட்டி”, ‘கொயங்கா” ‘நச்சிக்கேதஸ்’ விருதுகளையும் பெற்றுள்ளார். “முகமது பின் துக்ளக்” என்கிற சோவின் அரசியல் நாடக நையாண்டி நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றது. அது சினிமா படமாகவும் தயாரிக்கப்பட்டு பரபரப்பாக ஓடியது.
தனது பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களால் அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுபவராக இருந்து வந்த சோ எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அதே நேரத்தில் பா.ஜனதா தலைவர்களுடன் நெருக்கம் காட்டினார். 1999-ம் ஆண்டு முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் இவர் நியமனம் செய்யப்பட்டார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்ற நண்பராக திகழ்ந்த சோ முக்கிய காலக் கட்டங்களில் பல்வேறு அரசியல் ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார். அவர் முயற்சியால் பல தடவை தமிழகத்தில் அரசியல் கூட்டணிகள் ஏற்பட்டுள்ளன.
மூப்பனார் தலைமையில் த.மா.கா. உதயமானதற்கும் காரணமாக இருந்தார். ஜெயலலிதா மூப்பனார் கூட்டணியில் அ.தி.மு.க. ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்தார்.
ரஜினியை த.மா.கா.வுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வைத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.
காமராஜரை மட்டுமே தலைவராக ஏற்றுக்கொண்ட அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை. ஆனால் காமராஜர் இடம் பெற்ற பழைய காங்கிரசுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்தார்.
இந்திராகாந்தி நெருக்கடி நிலை கொண்டு வந்தபோது கடுமையாக எதிர்த்தார். இந்திராவின் இந்த நடவடிக்கையை விமர்சித்து துக்ளக் பத்திரிகையில் கருத்து தெரிவித்தார்.



சோ ராமசாமியின் வாழ்க்கை குறிப்பு

சோ ராமசாமி பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். சோ என அழைக்கப்படுகிறார். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் ‘அரசியல் நையாண்டி’ எழுத்துக்கள் இவருக்கு ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடம் வகுத்து தந்தது.
மறைந்த சோவுக்கு மனைவியும் ஒரு மகளும் , மகனும் உள்ளனர். பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர் சோ.
துக்ளக் பத்திரிக்கையின் ஸ்தபகரான இவர் அதில் எழுதிய அரசியல் கட்டூரைகள் பிரபலமானவை. நையாண்டி கட்டூரைகளை எழுதுவதில் வல்லவர். சாதாரண்மாக பேசும்போதே நகைச்சுவையும் நையாண்டியும் இவரது வார்த்தைகளில் வந்து விழும் . ‘அரசியல் நையாண்டி’ எழுத்துக்கள் இவருக்கு ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடம் வகுத்து தந்தது.
1934 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ்சி.) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார்.
பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 – ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்.
1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். பின்னர் திரைப்படத்துறையில் ஈடுபட்டு சிறந்த நகைச்சுவை நடிகராகவிளங்கினார். திரைப்படத்தில் இபர்நகைச்சுவையாக அரசியலை கிண்டலடிக்கும் காட்சிகள் பிரபலமாக ரசிக்கப்பட்டது.
தங்கப்பதக்கம்படத்திலிவரது கவுன்சிலராக வரும் அரசியல்வாதி வேடம் அன்றைய ரசியலை தோலுரித்து காட்டியது. திராவிட அரசியலை முக்கியமாக விமர்சித்தவர்.
அதே நேரம் திராவிட கட்சி தலைவர்களான அண்ணா , கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர். ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் போன்றவர், அவருக்கு அரசியல் வழிகாட்டி என்று குறிப்பிடுவர்கள்.
1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
இவரது முகமது பின் துக்ளக் என்னும் ‘அரசியல் நையாண்டி’ நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்து பிரபலமானது.
இவர் மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை செயல்பட்டார் எனபதும் குறிப்பிடத்தக்கது.
நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’, ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கி சொந்தமாக நடத்தி வந்தார்.
அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.
*தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றியவர், சோ ராமசாமி ஆவார்.
இந்நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. மூச்சுத் திணறல் அதிகம் ஏற்பட்டு இன்று காலை சோ ராமசாமி காலமானார்.
சோ.. ராமசாமி வீட்டு முகவரி வீட்டு முகவரி
பனழயநம்பர்.46
புதிய நம்பர். 166
கீரின்வேஸ்ரோடு
M.R.C நகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக