ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பாடகி எம். எல். வசந்தகுமாரி நினைவு தினம் அக்டோபர் 31.

பாடகி எம். எல். வசந்தகுமாரி நினைவு தினம் அக்டோபர் 31.

எம். எல். வசந்தகுமாரி ( M. L.
Vasanthakumari, 03 சூலை 1928 - 31 அக்டோபர்
1990) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப்
பாடகர் ஆவார். நேயர்களால் எம். எல்.
வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல
இந்திய மொழிகளில்
வெளிவந்த பாடல்களுக்குப்
பின்னணிப் பாடகராக இருந்துள்ளார்.
ஆரம்பகால
வாழ்க்கை
மெட்ராஸ் லலிதாங்கி
வசந்தகுமாரி என்ற இயற்பெயர்
கொண்ட எம். எல். வசந்தகுமாரி,
குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும்
லலிதாங்கிக்கும் மகளாகப் பிறந்தார்.
தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர் ஆவர்.
சென்னையில் ஆங்கிலப்பள்ளியில்
படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர்,
பிரபல பாடகர் ஜி. என்.
பாலசுப்பிரமணியம் முயற்சியால்
இசைத்துறைக்கு வந்துவிட்டார்.
ஆக்கங்கள்
தெலுங்கு பாடல்கள்
ஆண்டு படம் பாடல்
1958 பூகாளிதாசு
1. தேவா
மகாதேவா
2. முன்னீட்ட
பவலிஞ்சு
நாகசயனா
சு
கோ
தமிழ்ப் பாடல்கள்
ஆண்டு படம் பா
1948 ராஜ முக்தி
1. குலக்க
தழைக்க
2. ஆராரோ
3. இங்கும்
எங்கும் இன்
4. என்ன ஆ
5. சந்தோசம
அன்பர் வரு
1948 கிருஷ்ண பக்தி ராதா சமே
கிருஷ்ணா
1949 நல்லதம்பி கானலோல
மதனகோபா
1949 வாழ்க்கை கோபாலனோடு
ஆடுவேனே
1949
1. புவி ராஜா
2. காண்பன
யாவும் காவியம்
போலே
சுப்பையா ந
சுப்புராம
1950 மந்திரி குமாரி
1. இசைக் கலை
2. காதல்
பலியாகினி
3. ஆகாஆ
வாழ்விலே
4. எண்ணும்

இன்பம்
5. மனம் போலே
பெறுவோ
1950 ஏழை படும் பாடு
1. யௌவனமே
கீதம்
2. கண்ண
நிலையே
1951 ஓர் இரவு அய்யா ச
சாமி
1951 மணமகள்
1. எல்லா
இன்பமயம்
2. சின்னஞ்சி
கண்ணம்ம
3.பாவியினு
படுபாவி
4. திறந்த கூட்
1951 ராஜாம்பாள் 1. ஆகாஆ
மனைவியா
1952 தாய் உள்ளம்
1. க
புறாவே
2. வெ
தாமரை பூவி
3. கோவில் முழு
கண்டேன்
4. கதையைக் கே
1952 புரட்சி வீரன் காரணம்
தெரிய
1952 பணம்
1. ஏழையின் கோ
நாடினேன்
2. குடும்பத்தி
1952 அந்தமான் கைதி காணி நில
பராசக்தி
1953 மனிதன் குயிலே உனக்
1953 நால்வர்
1. வானமீ
2. இன்பம்

3. மயிலே
4.இருள் சூழ்
வாழ்வில்
நிலவே
1953 மனிதனும் மிருகமும்
1. இன்பக்கு
குரலினிமை
2. இமய ம
சாரலிலே
1953 இன்ஸ்பெக்டர்
1. வாரா
மனமோகன
2. மதன சிங்
நீ வா
3. மூடி இருந்
விழியில்
1953 அன்பு 1. ஆடவரே ந
2. இசைபாடி
1953 என் வீடு
1. பூமியிலே ஒ
2.க

3. ராம ர
1953 கண்கள் இன்ப வீணை
1954 வைர மாலை
1. வஞ்சம்
வாஞ்சை இ
2. கூவாம
கோகிலம்
3. உன்னை எ
போதே
4. செந்
கண்ணனே
1954 ரத்தக் கண்ணீர்
1. கதவைச் ச
2. அலையின்
ஊதாயோ
1955 காவேரி மஞ்சள் வ
மாலையிலே
1955 காவேரி மனதினிலே ந

1955 கள்வனின் காதலி தமிழ்த் திருந
தன்னைப் ப
1956 கண்ணின்
மணிகள்
கண்ணின்
வா
1956 குலதெய்வம்
1. தாயே ய
2. வாரா
பாராயோ
3. ஆணும்
பெண்
வாழ்விலே
1956 மதுரை வீரன்
1. ஆடல் க
2. செந்
எழுந்து வா
1956 தாய்க்குப்பின்
தாரம் நாடு ச
நாளும் உ
1957 சக்கரவர்த்தி
திருமகள்
எந்தன் உள்


வந்த நீ ய
1957 இரு சகோதரிகள் தாயே உன்
செயல
1957 வணங்காமுடி சிரமதில் திக
1957 கற்புக்கரசி
1. கனியோ ப
கற்கண்டோ
2. விழியோடு வி
1959
மாமியார்
மெச்சிய
மருமகள்
1. மோகன ரங்
என்னைப் ப
2.கண்ண
வா மணிவ
வா வா
3. மைத்துனரே
4. விரல் மோதி
இங்கே....
5. இலவு க
கிளிபோல்
1959 தங்க பதுமை வருகிறாய்
தேடி
1959 காவேரியின்
கணவன்
வண்ணத்த

1959 கல்யாணிக்கு
கல்யாணம்
ஆனந்தம்
ஆரம்பம்
1960 பார்த்தீபன்
கனவு
1. அந்தி மய
2. வடிவேறி தி
தோன்றும்
1960 மீண்ட
சொர்க்கம் ஆடும் அருள்
1960 பெற்ற மனம் சிந்தனை
செய்ய
1960 மன்னாதி
மன்னன்
1. கலையோடு க
உண்மை
2. ஆடாத
உண்டோ
1960 ராஜ பக்தி கற்க கசடற
1960 ராஜா தேசிங்கு பாற்கடல்
1961 கொங்கு
நாட்டுத் தங்கம்
இருந்தும்
இல்லாத
1962 விக்கிரமாதித்தன் அதிசயம் இ
1965 மகனே கேள் கலை மங்கை
கண்டு
மல்லிய மங்களம் அவரின்றி ந
மனசுக்குள்
வைக்க முடிய
தொழில்
வாழ்க்கை
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:
ஸ்ரீவித்யா
சுதா ரகுநாதன்
ஏ. கன்யாகுமரி
சாருமதி ராமச்சந்திரன்
மீனா சுப்ரமணியன்
சிறப்புகள்
சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில்
பெற்ற பெண் கலைஞர் எனும்
பெருமை இவருக்கு உண்டு [சான்று தேவை] .
தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப்
பெற்றார்.
விருதுகள்
சங்கீத நாடக அகாதமி விருது, 1970
மதிப்புறு முனைவர் பட்டம், 1976 ;
வழங்கியது: மைசூர் பல்கலைக்கழகம்
சங்கீத கலாநிதி விருது, 1977;
வழங்கியது: மியூசிக் அகாதெமி ,
சென்னை
இசைப்பேரறிஞர் விருது , 1978
பத்ம பூஷன் விருது
சங்கீத கலாசிகாமணி விருது, 1987,
வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ்
சொசைட்டி.

***********************************
மாதங்களில் நான் மார்கழியாக
இருக்கிறேன் என்றார் கிருஷ்ண
பரமாத்மா. அந்த சிறந்த
மாதத்தைக் குறிக்கும் முதல் பாசுரம்
உட்பட முப்பது பாசுரங்களால் அழகு
சேர்த்தவர் ஆண்டாள். இதனை
ஆண்டுதோறும் பட்டிதொட்டி
எங்கும் பரவச் செய்தவர்
எம்.எல்.வசந்தகுமாரி. சங்கீத
கலாநிதி விருது பெற்றவர்.
இந்தியாவின் உயரிய விருதுகளில்
ஒன்றான பத்மபூஷண் இவரை நாடி
வந்தது.
எம்.எல்.வசந்தகுமாரியின் குரல்,
வசந்தத்தைக் கூவி அழைக்கும் குயிலின்
குரலைப் போன்றது என்று
சொல்லித் தெரிய
வேண்டியதில்லை. இவர் இரண்டு
உலகங்களை தன் குரல் இனிமையால்
ஆண்டார். கர்நாடக இசை உலகம்
மற்றும் திரையிசை உலகம். இசை என்னும்
தேருக்கு இந்த இரட்டைக் குதிரை சவாரி
அவருக்கு இத்துறையில் வேகமாக
முன்னேற பெரிதும் உதவியது.
இவ்விரண்டு இசை துறையுமே
ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்
கொண்டு அவரை புகழ்
உச்சிக்குக் கொண்டு
சென்றன.
எம்.எல்வி.யின் சீடர்கள்
இந்தப் புகழ் அவர் மறைந்த பின்னும்
மங்காமல் இருக்கக் காரணம்
அவரது சிஷ்யர்கள்தான். குறிப்பாக
அவர் கூடவே சிறு வயது முதல் மேடைக்
கச்சேரி செய்த இன்றைய சங்கீத
கலாநிதி சுதா ரகுநாதன். தனது
மகள் ஸ்ரீவித்யாவையும் கர்நாடக
இசைப்பாடகியாக இவர் உருவாக்கி
இருந்தாலும், ஸ்ரீவித்யாவின்
விருப்பம் நடிப்புத் துறையாக
இருந்ததால், அவரது பாதை வேறாக
மாறிவிட்டது.
அந்நேரத்தில் இசை என்ற தூணை இறுகப்
பிடித்துக் கொண்டார்
எம்.எல்.வசந்தகுமாரி. தன் திறமை
அனைத்தையும் வஞ்சனை இன்றி தன்
சிஷ்யர்களுக்கு அளித்தார்.
பன்மொழிப் படங்களில்
பாடியதால் இவரது புகழ் இந்தியா
முழுவதும் பரவியது.
எம்.எல்.வி.யின் குரு
பிரபல கர்நாடக இசைப்பாடகர்
ஜி.என்.பி.யிடம் இசையைக் கற்ற இவரின்
குரல் சங்கீத வித்வான் திரை இசை
வித்தகர் ஜி. ராமனாதனுக்குப்
பிடித்துவிட்டது. இவர் இசையமைத்த
திரைபடங்களில் பல பாடல்களைப் பாடி
ரசிகர்களை மகிழ்வித்தார். இவரது
இசையில் எம்.எல்.வி. பாடுவது
வழக்கமாக ஆகிவிட்டது. இந்த
காலகட்டத்தில்தான்
புரந்தரதாசரின் பாடல்களைப் பாடி
பிரபலப்படுத்தவும், பிரபலமடையவும்
தொடங்கினார்.
இளமைப்பருவத்திலேயே அரங்கேற்றம்
இவரது தந்தை அய்யாசாமி ஐயர்
சிறந்த பாடகர், தாய் லலிதாங்கியோ
அந்நாளிலேயே தனது இசையால் புகழ்
பெற்று இருந்தார். இசைப்
பாரம்பரியத்தில் பிறந்த இவரை சிறிய
வயதிலேயே சிறந்த பாடகி ஆக்க முடியும்
என்பதை முதன்முதலில் உணர்ந்தவர்
ஜி.என்.பி.
இசைதான் தனக்கேற்ற துறை என்பதை
அறிந்திருந்தார் எம்.எல்.வி. அவரது
முதல் தனிக் கச்சேரி
அரங்கேறியபொழுது மதராஸ்
லலிதாங்கி வசந்தகுமாரி என்ற
எம்.எல்.வியின் வயது
பன்னிரெண்டுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக