திங்கள், 3 அக்டோபர், 2016

நடிகை பி. கண்ணாம்பா பிறந்த நாள் அக்டோபர் 5,

நடிகை பி. கண்ணாம்பா பிறந்த நாள் அக்டோபர் 5,

பி. கண்ணாம்பா (பசுப்புலேட்டி
கண்ணாம்பா, தெலுங்கு: పసుపులేటి
కన్నాంబ, அக்டோபர் 5, 1910[1] - மே 7, 1964 )
பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்குத்
திரைப்பட நடிகை. மு. கருணாநிதியின்
மனோகரா திரைப்படம் மூலம் வசனத்தை
திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை
பெற்றவர். 150 படங்களுக்கு மேல்
நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும்
உள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
கண்ணாம்பா தெலுங்கைத் தாய்
மொழியாக
கொண்டவர். ஆந்திரப் பிரதேசம் ,
குட்டப்பா என்ற ஊரில் எம்.
வெங்கணராசையா, லோகாம்பா
ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார்.
தாயின் பெற்றோருடன் ஏலூருவில்
வளர்ந்தார். 1927 ஆம் ஆண்டு
கண்ணம்பா 16 வயதில் நாரலா
நாடகி சமாஜன் நாடக மன்றத்தில்
சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில்
சந்திரமதியாக நடித்து பெயர்
பெற்றார். அதன் பிறகு அந்த நாடக
மன்றம் மேடையேற்றிய அனுஷியா,
சாவித்திரி, யசோதா போன்ற நாடகங்களில்
நடித்தார். இந்நாடக நிர்வாகிகளில்
ஒருவரான கே. பி. நாகபூஷணம் 1934
இல் கண்ணாம்பாவைத் திருமணம்
செய்து கொண்டார். அதே
ஆண்டு இருவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
நாட்டிய மண்டலி என்ற புதிய நாடகக்
கம்பனியை ஆரம்பித்து
தென்னிந்தியாவெங்கும்
நாடகங்களை நடத்தி வந்தார்கள்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால்
ஒரு ஆண்பிள்ளையும், பெண்
பிள்ளையையும் தத்தெடுத்து
வளர்த்தார்கள். மகள் ராஜராஜேஸ்வரி
பிரபல தெலுங்கு இயக்குனர் சி.
புல்லையாவின் மகனைத் திருமணம்
செய்து கொண்டார்.
திரைப்படங்களில்
ஸ்டார் கம்பெனியைச் சேர்ந்த ஏ.
ராமையா கண்ணாம்பாவை சந்திரமதி
பாத்திரத்தில் ஹரிச்சந்திரா திரைப்படத்தில்
நடிக்க வைத்தார். அதன்பிறகு சரசுவதி
டக்கீஸ் கம்பெனி தயாரித்த துரோமதி
படத்தில் நடித்தார். 1938 இல் பி. என்.
ரெட்டி தயாரித்த கிரலட்சுமி படத்தில்
நடித்தார்.
கண்ணாம்பா நடித்த முதல் தமிழ்த்
திரைப்படம் மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்
(பின்னர் ஜெமினி ஸ்டூடியோவாக
மாறியது) ராஜகோபாலின் கிருஷ்ணன்
தூது[2] . தமிழ் வசனங்களை தெலுங்கில்
எழுதிப் பேசி நடித்தார். இது 1940 ஆண்டு
வெளிவந்தது. அடுத்து அவர் எம்.கே.
தியாகராஜ பாகவதருடன் அசோக்குமார்
படத்தில் நடித்தார். 1941 இல் ஜுப்பிட்டர்
பிக்சர்ஸ் தயாரித்த கண்ணகி படத்தில்
நடித்தார்.
கண்ணகிக்குப் பிறகு கண்ணாம்பா
தமிழ் நாட்டில் புகழ் பெற்ற
நடிகையாக விளங்கினார். கலைஞர் மு.
கருணாநிதி எழுதிய வசனங்களை மனோகரா
திரைப்படத்தில் சிறப்பாக பேசி நடித்தார்.
நடித்த தமிழ்த்
திரைப்படங்கள்
1. ஹரிச்சந்திரா (1944)
2. லைலா மஜ்னு (1950)
3. உத்தம புத்திரன் (1958)
4. நிச்சய தாம்பூலம்
5. அர்த்தனாரி
6. அவன் அமரன்
7. உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்
8. ஏழை உழவன்
9. கண்ணகி
10. தாய்க்குப்பின் தாரம்
11. துளசி ஜலந்தர்
12. தெய்வ நீதி
13. நிச்சய தாம்பூலம்
14. படித்தால் மட்டும் போதுமா
15. பெண்ணரசி
16. பெரிய கோவில்
17. மங்கையர்க்கரசி
18. லட்சுமி
19. வாழவைத்த தெய்வம்
விருதுகள்
கலைமாமணி விருது.

**********************************
பிளாஷ்பேக்: சொந்தப் படம்
எடுத்து கண்ணீர் சிந்திய
கண்ணாம்பா

பழம்பெரும் நடிகை கண்ணாம்பா,
தியாகராஜ பாகவதருக்கு
ஜோடியாகவும், சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு
அம்மாவாகவும் நடித்து
புகழ்பெற்றார். சினிமா உலகில்
அந்தக் காலத்திலேயே லட்சக் கணக்கில்
சம்பாதித்தவர் அவர். ஆனால்
சொந்தப் படம் எடுத்து, சம்பாதித்த
அனைத்தையும் இழந்து கண்ணீர் கடலிலும்,
கடன் கடலிலும் மூழ்கிய முதல் நடிகை அவர்
தான்.
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி பிலிம்ஸ் என்ற
தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய
கண்ணாம்பா பி.யூ.சின்னப்பா நடிப்பில்
ஹரிச்சந்திரா என்ற படத்தை பிரமாண்ட
பொருட் செலவில்
தயாரித்தார். அந்த நேரத்தில்
கன்னடத்தில் தயாரான ஹரிச்சந்திர
படம் தமிழில் டப் செய்யப்பட்டு
கண்ணாம்பாவின் ஹரிச்சந்திராவுக்கு
முன்னமே வெளியானதால் படுதோல்வி
அடைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.
அதன்பிறகு நாகபஞ்சமி என்ற புராண
படத்தை தயாரித்தார். இதில் அஞ்சலிதேவி,
எஸ்.வரலட்சுமி, தங்கவேலு நடித்தனர். இதே
கதை மோகனராவ், ஜமுனா, ஜானகி
நடிப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில்
தயாரானது. இந்தப் படம்
கண்ணாம்பாவின் நாகபஞ்சமிக்கு
முன்பே நாகதேவதை என்ற பெயரில் டப்
செய்யப்பட்டு வெளியிடப்பட்டு
பெரும் வெற்றி பெற்றது.
கண்ணாம்பாவின் ஒரிஜினல்
நாகபஞ்சமி பெரும் தோல்வி அடைந்தது.
இதிலும் பெரும் நஷ்டம் அடைந்தார்.
அதன் பிறகும் அவர் தயாரித்த
நவஜீவனம், ஏழை உழவன் படங்களும் தோல்வி
அடையவே பெரும்
பொருளாதார சிக்கல்களை
உருவாக்கி பெரும்
கடனாளியானார். அவரின் தயாரிப்பு
நிறுவனமான ராஜ ராஜேஷ்வரி பிலிம்ஸ்
சீர்குலைந்து போனது. நடிப்பில் ரசிகர்களை
அழவைத்த கண்ணாம்பா, தன் இறுதி
காலத்தை கண்ணீருடேனேயே கழித்தார்.
அன்று கண்ணாம்பாவிற்கு ஏற்பட்ட
இழப்புதான். இன்றுவரை நடிகைகளை
சொந்தப் படம் எடுக்க யோசிக்க
வைக்கிறதோ என்னவோ...?

நன்றி விக்கிப்பீடியா .தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக