வெள்ளி, 14 அக்டோபர், 2016

கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம் அக்டோபர் 17 .

கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம் அக்டோபர்
17 .

கண்ணதாசன் ( ஜூன் 24 1927 – அக்டோபர்
17 1981 ) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப்
பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள்,
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்
பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல
எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை
ஒலி, தென்றல், தென்றல்திரை,
முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின்
ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின்
அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய
அகாதமி விருது பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கண்ணதாசனின் இயற்பெயர்
முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில்
தன வணிகர் மரபில் பிறந்தார். தாய்
விசாலாட்சி ஆச்சி, தந்தை
சாத்தப்பனார். இவருடன் உடன்பிறந்தோர்
8 பேர். சிறு வயதில் இவரை ஒருவர் 7000
ரூபாய்க்கு தத்து
எடுத்துக்கொண்டார். அவர்
வீட்டில் நாராயணன் என்ற
பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக்
கல்வியை சிறுகூடல்பட்டியிலும்,
அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில்
எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம்
ஆண்டில் திருவொற்றியூர்
ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில்
சேர்ந்தார்.
குடும்பம்
கண்ணதாசனுக்கு முதல் திருமணம்
பொன்னழகி என்னும்
பொன்னம்மா (இறப்பு: மே 31,
2012 ) என்பவரோடு 1950 பிப்ரவரி 9 ஆம்
நாள் காரைக்குடியில் நடைபெற்றது.
இவர்களுக்கு கண்மணிசுப்பு,
கலைவாணன், ராமசாமி,
வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும்,
அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை,
விசாலாட்சி ஆகிய 3 மகள்களும்
உள்ளனர்  . கண்ணதாசன் தனக்கு
முதல் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே
பார்வதி என்பவரை இரண்டாம்
திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு
காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால
கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5
மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய
2 மகள்களுமாக ஏழு குழந்தைகள்
உள்ளனர். ஐம்பதாவது வயதில்
புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம்
செய்து கொண்டார்.
இவர்களுக்கு விசாலி என்னும் மகள்
ஒருவர் உள்ளார். [5]
கம்பரின் செய்யுளிலும்,
பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த
ஈடுபாடு கொண்டவர். இவர்
பாரதியாரை மானசீகக் குருவாகக்
கொண்டவர்.
அரசியல் ஈடுபாடு
அண்ணாவின் திராவிட கழகத்தில்
இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல்
கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து
வெளியேறினார்.
மறைவு
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல்
சிகாகோ நகர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை
இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார்.
அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து
அவரது சடலம் சென்னைக்குக்
கொண்டு வரப்பட்டு,
இலட்சக்கணக்கான மக்களின் இறுதி
அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன்
அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
மணிமண்டபம்
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப்
போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம்
காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில்
கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்
அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம்
1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்
அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல்
முதல்வர் கலைஞர் கருணாநிதி
அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு,
1992ல் முதல்வர் செல்வி.
ஜெயலலிதா அவர்களால் திறந்து
வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக்
கொண்ட இம்மணிமண்டபத்தில்
கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை
அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில்
அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன்
ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு
கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை
வரலாறு தொடர்பான
புகைப்படங்கள் கண்காட்சியாக
வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறைக்கான
பங்களிப்புகள்
திரையிசைப் பாடல்கள்
கண்ணதாசன் எழுதிய திரைப்படப்
பாடல்கள்
கதை எழுதிய திரைப்படங்கள்
ராஜா தேசிங்கு
வசனம் எழுதிய திரைப்படங்கள்
நாடோடி மன்னன்
கதை, வசனம் எழுதிய
திரைப்படங்கள்
மதுரை வீரன்
இலக்கியப் படைப்புகள்
கவிதை நூல்கள்
காப்பியங்கள்
1. மாங்கனி
2. பெரும்பயணம் (1955), அருணோதயம்,
சென்னை - 14.
3. ஆட்டனத்தி ஆதிமந்தி
4. பாண்டிமாதேவி
5. இயேசு காவியம்
6. முற்றுப்பெறாத காவியங்கள்
தொகுப்புகள்
1. கண்ணதாசன் கவிதைகள் (1959),
காவியக்கழகம், சென்னை-2.
2. கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம்
தொகுதி, காவியக்கழகம்,
சென்னை
3. கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு
தொகுதிகள்
4. கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம்
தொகுதி
5. கண்ணதாசன் கவிதைகள்:
நான்காம் தொகுதி
6. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம்
தொகுதி
7. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம்
தொகுதி
8. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம்
தொகுதி
9. பாடிக்கொடுத்த மங்களங்கள்
சிற்றிலக்கியங்கள்
1. அம்பிகை அழகுதரிசனம்
2. தைப்பாவை
3. ஸ்ரீகிருஷ்ண கவசம்
4. கிருஷ்ண அந்தாதி
5. கிருஷ்ண கானம்
கவிதை நாடகம்
1. கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு
1. பொன்மழை (ஆதிசங்கரரின்
கனகதாரா ஸ்தோத்திரத்தின்
தமிழ்ப்பாடல் வடிவம்)
2. பஜகோவிந்தம்
புதினங்கள்
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
சிவப்புக்கல் மூக்குத்தி
ரத்த புஷ்பங்கள்
சுவர்ணா சரஸ்வதி
நடந்த கதை
மிசா
சுருதி சேராத ராகங்கள்
முப்பது நாளும் பவுர்ணமி
அரங்கமும் அந்தரங்கமும்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
தெய்வத் திருமணங்கள்
ஆயிரங்கால் மண்டபம்
காதல் கொண்ட
தென்னாடு
அதைவிட ரகசியம்
ஒரு கவிஞனின் கதை
சிங்காரி பார்த்த சென்னை
வேலங்காட்டியூர் விழா
விளக்கு மட்டுமா சிவப்பு
வனவாசம்
பிருந்தாவனம்
சிறுகதைகள்
1. குட்டிக்கதைகள்
வாழ்க்கைச்சரிதம்
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல்
தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின்
விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த
காலத்தின் வாழ்க்கை)
கட்டுரைகள்
கடைசிப்பக்கம்
போய் வருகிறேன்
அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
நான் பார்த்த அரசியல்
எண்ணங்கள்
வாழ்க்கை என்னும் சோலையிலே
குடும்பசுகம்
ஞானாம்பிகா
ராகமாலிகா
இலக்கியத்தில் காதல்
தோட்டத்து மலர்கள்
இலக்கிய யுத்தங்கள்
சமயம்
1. அர்த்தமுள்ள இந்து மதம் (10
பாகங்கள்)
நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை
உரை நூல்கள்
கண்ணதாசன் பின்வரும்
இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
1. பகவத் கீதை
2. அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
3. திருக்குறள் காமத்துப்பால்
4. சுப்ரதீபக் கவிராயரின்
கூழப்பநாயக்கன் காதல்
5. சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது ( சேரமான்
காதலி படைப்பிற்காக)

எழுதிய பாடல்கள்
இது முழுமையான பட்டியல் அல்ல.
1950களில்
ஆண்டு திரைப்படம் இசையமைப்பா
1957 மகாதேவி விசுவநாதன்-
இராமமூர்த்தி
1959 சிவகெங்கைச்
சீமை
விசுவநாதன் -
இராமமூர்த்தி
1960களில்
ஆண்டு திரைப்படம் இசையமைப்பா
1960 மன்னாதி
மன்னன்
விசுவநாதன்-
இராமமூர்த்தி
1961
தாய்
சொல்லை
தட்டாதே
கே. வி.
மகாதேவன்
1962
தாயைக்காத்த
தனயன்
கே. வி.
மகாதேவன்
பாசம் விசுவநாதன்-
இராமமூர்த்தி
1963
பணத்தோட்டம் விசுவநாதன்-
இராமமூர்த்தி
பெரிய
இடத்துப்
பெண்
விசுவநாதன்-
இராமமூர்த்தி
இருவர் உள்ளம் கே. வி.
மகாதேவன்
1964 பணக்கார
குடும்பம்
விசுவநாதன்-
இராமமூர்த்தி
1965
திருவிளையாடல் கே. வி.
மகாதேவன்
ஆயிரத்தில்
ஒருவன்
விசுவநாதன்-
இராமமூர்த்தி
1966
சரஸ்வதி சபதம் கே. வி.
மகாதேவன்
நாடோடி ம. சு.
விசுவநாதன்
1970களில்
ஆண்டு திரைப்படம் இசையமைப்ப
1970 என் அண்ணன் கே. வி.
மகாதேவன்
1972 பட்டிக்காடா
பட்டணமா ம. சு.
விசுவநாத
1973 உலகம் சுற்றும்
வாலிபன்
ம. சு.
விசுவநாத
1974
அவள் ஒரு
தொடர்கதை
ம. சு.
விசுவநாத
உரிமைக்குரல் ம. சு.
விசுவநாத
தங்கப்பதக்கம் ம. சு.
விசுவநாத
எங்கம்மா சபதம் விஜய பா
1975 மயங்குகிறாள்
ஒரு மாது விஜய பா
1979 திரிசூலம் ம. சு.
விசுவநாத
1980களில்
ஆண்டு திரைப்படம் இசையமைப்பாளர் ப
1983 மூன்றாம்
பிறை இளையராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக