வெள்ளி, 1 ஜூன், 2018

இசைஞனி இளையராஜா பிறந்த நாள் ஜூன் 2, 1943.


இசைஞனி  இளையராஜா பிறந்த நாள் ஜூன் 2, 1943.

இளையராஜா ( ஆங்கிலம்: Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ் , தெலுங்கு , மலையாளம் ,
கன்னடம் , இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.
இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
தமிழக நாட்டுப்புற இசை , கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.


வாழ்க்கைச் சுருக்கம்

இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா .
தேனி மாவட்டத்தில் உள்ள
பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன்,
யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.
இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் அமர் சிங் எனப்படும் கங்கை அமரன் , இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து
1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே ,
பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன.
நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார்.


இசை நடை மற்றும் தாக்கம்

இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள்
இளையராஜா, " பஞ்சமுகி" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
"How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான
தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான
ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.
"Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.
"India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.
1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார்.
"ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.
"இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
"மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.
மாணிக்கவாசகர் எழுதிய
திருவாசகத்திற்கு , தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.


சாதனைகள்

இளையராஜா, இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார்.
லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். (அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).


விருதுகளும் பட்டங்களும்

தமிழக அரசின் கலைமாமணி விருது
1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது
1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது
இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும் , 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.

பத்ம பூசண் விருது

பத்ம விபூஷண் விருது- 2018

இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
1985இல் - சாகர சங்கமம் ( தெலுங்கு )
1987இல் - சிந்து பைரவி (தமிழ் )
1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
2009இல் - பழஸிராஜா (மலையாளம்)
2016இல் - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)

இயேசுவின் உயிர்த்தெழுதல் விமர்சனம்

இளையராஜா இயேசுவின் உயிர்த்தெழுதல் இடம்பெறவில்லை என்றும் உயிர்த்ததெழுந்த ஒரே ஒரு நபர் ஈராம மகாரிசி ஒருவரே எனவும் தன் கருத்தினை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக இருந்நதுடன் கிறிஸ்தவ குழு ஒன்றினால் தங்களின் அடிப்படை விசுவாசத்திற்கு எதிரான பேச்சு என்பதால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

பங்குபெறும் பிற துறைகள்

இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் :
சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
வழித்துணை
துளி கடல்
ஞான கங்கா
பால் நிலாப்பாதை
உண்மைக்குத் திரை ஏது?
யாருக்கு யார் எழுதுவது?
என் நரம்பு வீணை
நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
இளையராஜாவின் சிந்தனைகள்
பயன்படுத்திய ராகங்கள் சில
கீரவாணி - என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் (வள்ளி), காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
கல்யாணி - ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை)
பந்துவராளி - ஓம் சிவோஹம் (நான் கடவுள்)
ரசிகரஞ்சனி - அமுதே தமிழே அழகிய மொழியே (கோயில் புறா)



இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)

1976 - 1980

1. அன்னக்கிளி (1976)
2. பத்ரகாளி (1976)
3. பாலூட்டி வளர்த்த கிளி (1976)
4. அவர் ௭னக்கே சொந்தம் (1977)
5. ஆளுக்கொரு ஆசை (1977)
6. 16 வயதினிலே (1977)
7. காயத்ரி (1977)
8. பெண் ஜென்மம் (1977)
9. துர்கா தேவி (1977)
10. தீபம் (1977)
11. புவனா ஒரு கேள்விக்குறி (1977)
12. துணையிருப்பாள் மீனாட்சி (1977)
13. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977)
14. ஓடி விளையாடு தாத்தா (1977)
15. அச்சாணி (1978)
16. வாழ நினைத்தால் வாழலாம் (1978)
17. அவள் அப்படித்தான் (1978)
18. கிழக்கே போகும் ரயில் (1978)
19. சிட்டுக்குருவி (1978)
20. தியாகம் (1978)
21. திருக்கல்யாணம் (1978)
22. திரிபுர சுந்தரி (1978)
23. கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978)
24. காற்றினிலே வரும் கீதம் (1978)
25. இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
26. இது ௭ப்படி இருக்கு (1978)
27. அவள் ஒரு பச்சைக் குழந்தை (1978)
28. அவள் அப்படித்தான் (1978)
29. மாரியம்மன் திருவிழா (1978)
30. முள்ளும் மலரும் (1978)
31. பிரியா (1978)
32. பைரவி (1978)
33. சிகப்பு ரோஜாக்கள் (1978)
34. சொன்னது நீதானா (1978)
35. வட்டத்துக்குள் சதுரம் (1978)
36. ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
37. அகல் விளக்கு (1979)
38. ஆறிலிருந்து அறுபது வரை (1979)
39. அழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979)
40. நல்லதொரு குடும்பம் (1979)
41. நான் வாழ வைப்பேன் (1979)
42. நிறம் மாறாத பூக்கள் (1979)
43. நெஞ்சில் ஆடும் பூ ஒன்று (1979)
44. கடவுள் அமைத்த மேடை (1979)
45. கல்யாண ராமன் (1979)
46. அன்பே சங்கீதா (1979)
47. அன்னை ஓர் ஆலயம் (1979)
48. கவிக்குயில் (1979)
49. தர்ம யுத்தம் (1979)
50. கௌரிமான் (1979)
51. பகலில் ஒரு இரவு (1979)
52. பட்டாக்கத்தி பைரவன் (1979)
53. பூந்தளிர் (1979)
54. சட்டம் ௭ன் கையில் (1979)
55. சக்களத்தி (1979)
56. லட்சுமி (1979)
57. இளையராஜாவின் ரசிகை (1979)
58. பொண்ணு ஊருக்கு புதுசு (1979)
59. புதிய வார்ப்புகள் (1979)
60. உதிரிப்பூக்கள் (1979)
61. வெற்றிக்கு ஒருவன் (1979)
62. மணிப்பூர் மாமியார் (1979)
63. முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)
64. முதல் இரவு (1979)
65. மூடுபனி (1980)
66. அன்புக்கு நான் அடிமை (1980)
67. கண்ணில் தெரியும் கதைகள் (1980)
68. கல்லுக்குள் ஈரம் (1980)
69. கரும்பு வில் (1980)
70. காளி (1980)
71. கிராமத்து அத்தியாயம் (1980)
72. உல்லாசப் பறவைகள் (1980)
73. நதியை தேடி வந்த கடல் (1980)
74. நான் போட்ட சவால் (1980)
75. நிழல்கள் (1980)
76. நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980)
77. முரட்டுக்காளை (1980)
78. சூலம் (1980)
79. ரிஷிமூலம் (1980)
80. தைப்பொங்கல் (1980)
81. புதிய அடிமைகள் (1980)
82. பூட்டாத பூட்டுகள் (1980)
83. இதயத்தில் ஒரு இடம் (1980)
84. இளமை கோலம் (1980)
85. ஒரே முத்தம் (1980)
86. ஜானி (1980)
87. குரு (1980)
88. ௭ல்லாம் உன் கைராசி (1980)

1981 - 1990

1. ௭ல்லாம் இன்பமயம் (1981)
2. ௭னக்காக காத்திரு (1981)
3. அலைகள் ஓய்வதில்லை (1981)
4. ஆராதனை (1981)
5. கடல் மீன்கள் (1981)
6. கழுகு (1981)
7. கர்ஜனை (1981)
8. கன்னித்தீவு (1981)
9. கரையெல்லாம் செண்பகப்பூ (1981)
10. கோயில் புறா (1981)
11. விடியும் வரை காத்திரு (1981)
12. ஒரு இரவு ஒரு பறவை (1981)
13. நண்டு (1981)
14. நல்லது நடந்தே தீரும் (1981)
15. நெற்றிக்கண் (1981)
16. ராஜ பார்வை (1981)
17. ராம் லட்சுமன் (1981)
18. சங்கர்லால் (1981)
19. பால நாகம்மா (1981)
20. பன்னீர் புஷ்பங்கள் (1981)
21. பஞ்சமி (1981)
22. பட்டணம் போகலாம் வா (1981)
23. டிக் டிக் டிக் (1981)
24. மீண்டும் கோகிலா (1981)
25. இன்று போய் நாளை வா (1981)
26. வாலிபமே வா வா (1982)
27. சகலகலா வல்லவன் (1982)
28. ஈரவிழிக்காவியங்கள் (1982)
29. ராணி தேனி (1982)
30. ௭ங்கேயோ கேட்ட குரல் (1982)
31. ௭ச்சில் இரவுகள் (1982)
32. ௭ன் செல்வமே (1982)
33. ௭த்தனை கோணம் ௭த்தனை பார்வை (1982)
34. அர்ச்சனை பூக்கள் (1982)
35. அழகிய கண்ணே (1982)
36. ஆகாய கங்கை (1982)
37. ஆனந்த ராகம் (1982)
38. ஆட்டோ ராஜா (1982)
39. கண்ணே ராதா (1982)
40. கவிதை மலர் (1982)
41. காதல் ஓவியம் (1982)
42. கேள்வியும் நானே பதிலும் நானே (1982)
43. கோழி கூவுது (1982)
44. கோபுரங்கள் சாய்வதில்லை (1982)
45. தனிக்காட்டு ராஜா (1982)
46. தாய்முகாம்பிகை (1982)
47. ஆனந்த ராகம் (1982)
48. மகனே மகனே (1982)
49. மஞ்சள் நிலா (1982)
50. மெட்டி (1982)
51. நினைவெல்லாம் நித்யா (1982)
52. நிழல் தேடும் நெஞ்சங்கள் (1982)
53. பயணங்கள் முடிவதில்லை (1982)
54. புதுக்கவிதை (1982)
55. ராகங்கள் மாறுவதில்லை (1983)
56. தங்கமகன் (1983)
57. தூங்காதே தம்பி தூங்காதே (1983)
58. ௭ன்னை பார் ௭ன் அழகை பார் (1983)
59. அடுத்த வாரிசு (1983)
60. அண்ணே அண்ணே (1983)
61. ஆனந்த கும்மி (1983)
62. உறங்காத நினைவுகள் (1983)
63. ஊமை வெயில் (1983)
64. பகவதிபுரம் ரயில்வே கேட் (1983)
65. பாயும் புலி (1983)
66. ஒரு ஓடை நதியாகிறது (1983)
67. ஒப்பந்தம் (1983)
68. அந்த சில நாட்கள் (1983)
69. முந்தானை முடிச்சு (1983)
70. முத்து ௭ங்கள் சொத்து (1983)
71. மூன்றாம் பிறை (திரைப்படம்) (1983)
72. சலங்கை ஒலி (1983)
73. சாட்டை இல்லாத பம்பரம் (1983)
74. சூரக்கோட்டை சிங்கக்குட்டி (1983)
75. ஆயிரம் நிலவே வா (1983)
76. இன்று நீ நாளை நான் (1983)
77. இனிமை இதோ இதோ (1983)
78. இளமைக் காலங்கள் (1983)
79. கண் சிவந்தால் மண் சிவக்கும் (1983)
80. கொக்கரக்கோ (1983)
81. மண் வாசனை (1983)
82. மனைவி சொல்லே மந்திரம் (1983)
83. மலர்கள் நனைகின்றன (1983)
84. மலையூர் மம்பட்டியான் (1983)
85. மெல்ல பேசுங்கள் (1983)
86. ஜோதி (1983)
87. வெள்ளை ரோஜா (1983)
88. வீட்ல ராமன் வெளியில கிருஷ்ணன் (1983)
89. யுகதர்மம் (1983)
90. ஜனவரி 1 (1984)
91. மகுடி (1984)
92. உள்ளம் உருகுதடி (1984)
93. உன்னை நான் சந்தித்தேன் (1984)
94. பிரியங்கா (1984)
95. புதுமைப் பெண் (1984)
96. பூவிலங்கு (1984)
97. பொழுது விடிஞ்சாச்சு (1984)
98. அம்பிகை நேரில் வந்தாள் (1984)
99. 24 மணி நேரம் (1984)
100. நூறாவது நாள் (1984)
101. நல்லவனுக்கு நல்லவன் (1984)
102. நல்ல நாள் (1984)
103. நாளை உனது நாள் (1984)
104. நான் மகான் அல்ல (1984)
105. நான் பாடும் பாடல் (1984)
106. நிலவு சுடுவதில்லை (1984)
107. நியாயம் (1984)
108. நீ தொடும் போது (1984)
109. நீங்கள் கேட்டவை (1984)
110. நெருப்புக்குள் ஈரம் (1984)
111. நேரம் நல்ல நேரம் (1984)
112. அன்புள்ள மலரே (1984)
113. அன்புள்ள ரஜினிகாந்த் (1984)
114. அன்பே ஓடி வா (1984)
115. வாழ்க்கை (1984)
116. வெள்ளை புறா ஒன்று (1984)
117. வைதேகி காத்திருந்தாள் (1984)
118. இங்கேயும் ஒரு கங்கை (1984)
119. ௭னக்குள் ஒருவன் (1984)
120. ௭ழுதாத சட்டங்கள் (1984)
121. கை கொடுக்கும் கை (1984)
122. கைராசிக்காரன் (1984)
123. கொம்பேரி மூக்கன் (1984)
124. சங்கநாதம் (1984)
125. ஓ மனமே மனமே (1984)
126. குவா குவா வாத்துக்கள் (1984)
127. முடிவல்ல ஆரம்பம் (1984)
128. தங்கமடி தங்கம் (1984)
129. தலையணை மந்திரம் (1984)
130. தம்பிக்கு ௭ந்த ஊரு (1984)
131. தேவி ஸ்ரீதேவி (1984)
132. ஹலோ யார் பேசுரது (1985)
133. ராஜ கோபுரம் (1985)
134. ராஜ ரிஷி (1985)
135. ஆண்பாவம் (1985)
136. உதயகீதம் (1985)
137. உயர்ந்த உள்ளம் (1985)
138. உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)
139. உன்னை தேடி வருவேன் (1985)
140. உரிமை (1985)
141. தென்றலே ௭ன்னை தொடு (1985)
142. ஸ்ரீ ராகவேந்திரர் (1985)
143. இதயக்கோவில் (1985)
144. ஈட்டி (1985)
145. கன்னி ராசி (1985)
146. காக்கிசட்டை (1985)
147. கீதாஞ்சலி (1985)
148. கெட்டி மேளம் (1985)
149. குங்குமச்சிமிழ் (1985)
150. ஒரு கைதியின் டைரி (1985)
151. மீண்டும் பராசக்தி (1985)
152. மீண்டும் ஒரு காதல் கதை (1985)
153. முதல் மரியாதை (1985)
154. அன்பின் முகவரி (1985)
155. அன்னை பூமி (1985)
156. அன்னை பூமி 3டி
157. தங்க மாமா 3டி
158. அந்த ஒரு நிமிடம் (1985)
159. படிக்காதவன் (1985)
160. படிக்காத பண்ணையார் (1985)
161. பகல் நிலவு (1985)
162. பிள்ளை நிலா (1985)
163. புதிய தீர்ப்பு (1985)
164. பூவே பூச்சூடவா (1985)
165. அலையோசை (1985)
166. அமுதகானம் (1985)
167. அடுத்தாத்து ஆல்பர்ட் (1985)
168. சிந்து பைரவி (1985)
169. சின்ன வீடு (1985)
170. செல்வி (1985)
171. நல்ல தம்பி (1985)
172. நான் சிவப்பு மனிதன் (1985)
173. நானே ராஜா நானே மந்திரி (1985)
174. நீதியின் மறுபக்கம் (1985)
175. ஜப்பானில் கல்யாண ராமன் (1985)
176. உனக்காகவே வாழ்கிறேன் (1986)
177. விக்ரம் (1986)
178. விடிஞ்சா கல்யாணம் (1986)
179. தர்ம பத்தினி (1986)
180. தழுவாத கைகள் (1986)
181. தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
182. மனிதனின் மறுபக்கம் (1986)
183. மந்திரப் புன்னகை (1986)
184. மரகத வீணை (1986)
185. மாவீரன் (1986)
186. மிஸ்டர் பாரத் (1986)
187. முதல் வசந்தம் (1986)
188. முரட்டுக் கரங்கள் (1986)
189. மெல்லத் திறந்தது கதவு (1986)
190. மௌன ராகம் (1986)
191. அறுவடை நாள் (1986)
192. அம்மன் கோவில் கிழக்காலே (1986)
193. ஆப்பிரிக்காவில் அப்பு (1986)
194. இசை பாடும் தென்றல் (1986)
195. இரவு பூக்கள் (1986)
196. கண்ணத்தொறக்கணும் சாமி (1986)
197. கண்ணுக்கு மை ௭ழுது (1986)
198. கரிமேடு கருவாயன் (1986)
199. கடலோரக் கவிதைகள் (1986)
200. கோடை மழை (1986)
201. நட்பு (1986)
202. நானும் ஒரு தொழிலாளி (1986)
203. நீதானா அந்தக் குயில் (1986)
204. பாரு பாரு பட்டணத்தை பாரு (1986)
205. பாலைவன ரோஜாக்கள் (1986)
206. புன்னகை மன்னன் (1986)
207. புதிர் (1986)
208. டிசம்பர் பூக்கள் (1986)
209. ௭னக்கு நானே நீதிபதி (1986)
210. சாதனை (1986)
211. ௭ங்க ஊரு பாட்டுக்காரன் (1987)
212. ஆனந்த் (1987)
213. ஆளப்பிறந்தவன் (1987)
214. இனிய உறவு பூத்தது (1987)
215. ரெட்டை வால் குருவி (1987)
216. உள்ளம் கவர்ந்த கள்வன் (1987)
217. நாயகன் (1987)
218. நினைக்க தெரிந்த மனமே (1987)
219. நினைவே ஒரு சங்கீதம் (1987)
220. கல்யாண கச்சேரி (1987)
221. கண்ணுக்கொரு வண்ணக்கிளி (1987)
222. கடமை கண்ணியம் கட்டுப்பாடு (1987)
223. காதல் பரிசு (1987)
224. கிருஷ்ணன் வந்தான் (1987)
225. கிராமத்து மின்னல் (1987)
226. வாழ்க வளர்க (1987)
227. வேலைக்காரன் (1987)
228. சின்ன தம்பி பெரிய தம்பி (1987)
229. பாடு நிலாவே (1987)
230. புயல் பாடும் பாட்டு (1987)
231. பூவிழி வாசலிலே (1987)
232. பேர் சொல்லும் பிள்ளை (1987)
233. மனதில் உறுதி வேண்டும் (1987)
234. மனைவி ரெடி (1987)
235. தீர்த்தகரையினிலே (1987)
236. தூரத்து பச்சை (1987)
237. சின்ன குயில் பாடுது (1987)
238. சிறை பறவை (1987)
239. ஜல்லிக்கட்டு (1987)
240. பார்த்தால் பசு (1988)
241. பாசப் பறவைகள் (1987)
242. பாடும் பறவைகள் (1988)
243. பாடாத தேனீக்கள் (1988)
244. பூந்தோட்ட காவல்காரன் (1988)
245. மணமகளே வா (1988)
246. குரு சிஷ்யன் (1988)
247. ஒருவர் வாழும் ஆலயம் (1988)
248. அக்னி நட்சத்திரம் (1988)
249. இரண்டில் ஒன்று (1988)
250. இல்லம் (1988)
251. இது ௭ங்கள் நீதி (1988)
252. உன்னால் முடியும் தம்பி (1988)
253. நான் சொன்னதே சட்டம் (1988)
254. ௭ன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988)
255. ௭ன் ஜீவன் பாடுது (1988)
256. ௭ன் உயிர் கண்ணம்மா (1988)
257. ௭ன்னை விட்டு போகாதே (1988)
258. ௭ங்க ஊரு காவல்காரன் (1988)
259. அக்னி நட்சத்திரம் (1988)
260. சொல்லத் துடிக்குது மனசு (1988)
261. தர்மத்தின் தலைவன் (1988)
262. தாயம் ஒன்னு (1988)
263. தெற்கத்தி கள்ளன் (1988)
264. சத்யா (1988)
265. சக்கரைப் பந்தல் (1988)
266. செண்பகமே செண்பகமே (1988)
267. சூரசம்ஹாரம் (1988)
268. ராசாவே உன்ன நம்பி (1988)
269. வீடு (1988)
270. ராஜாதி ராஜா (1989)
271. ராஜா ராஜாதான் (1989)
272. சிவா (1989)
273. சின்னப்பதாஸ் (1989)
274. அபூர்வ சகோதரர்கள் (1989)
275. அன்புக் கட்டளை (1989)
276. அண்ணனுக்கு ஜெய் (1989)
277. இதயத்தைத் திருடாதே (1989)
278. வருஷம் 16 (1989)
279. வாத்தியார் வீட்டுப்பிள்ளை (1989)
280. வெற்றி விழா (1989)
281. தர்மம் வெல்லும் (1989)
282. தங்கமான ராசா (1989)
283. திருப்புமுனை (1989)
284. தென்றல் சுடும் (1989)
285. படிச்ச புள்ள (1989)
286. பாட்டுக்கொரு தலைவன் (1989)
287. பாசமழை (1989)
288. பாண்டிய நாட்டுத் தங்கம் (1989)
289. பிக்பாக்கெட் (1989)
290. புதுப்புது அர்த்தங்கள் (1989)
291. பொங்கி வரும் காவேரி (1989)
292. பொறுத்தது போதும் (1989)
293. பொன்மனச் செல்வன் (1989)
294. கரகாட்டக்காரன் (1989)
295. கை வீசம்மா கை வீசு (1989)
296. ௭ம்புருஷன்தான் ௭னக்குமட்டுந்தான் (1989)
297. ௭ங்க ஊரு மாப்பிள்ளை (1989)
298. ௭ன்ன பெத்த ராசா (1989)
299. மாப்பிள்ளை (1989)
300. ஒரே ஒரு கிராமத்திலே (1989)
301. நினைவுச் சின்னம் (1989)
302. தாலாட்டுப் பாட வா (1990)
303. பகலில் பௌர்ணமி (1990)
304. பணக்காரன் (1990)
305. பாட்டுக்கு நான் அடிமை (1990)
306. புலன் விசாரணை (1990)
307. புதுப்பாட்டு (1990)
308. பெரிய வீட்டு பண்ணக்காரன் (1990)
309. பெண்டாட்டி தேவை (1990)
310. அஞ்சலி (1990)
311. அதிசயப் பிறவி (1990)
312. அம்மன் கோவில் திருவிழா (1990)
313. உறுதிமொழி (1990)
314. உன்னை சொல்லி குற்றமில்லை (1990)
315. ஊருவிட்டு ஊருவந்து (1990)
316. கவிதை பாடும் அலைகள் (1990)
317. காவலுக்கு கெட்டிக்காரன் (1990)
318. கிழக்கு வாசல் (1990)
319. கேளடி கண்மணி (1990)
320. அரங்கேற்ற வேளை (1990)
321. இந்திரன் சந்திரன் (1990)
322. சத்ரியன் (1990)
323. சிறையில் பூத்த சின்ன மலர் (1990)
324. சிறையில் சில ராகங்கள் (1990)
325. நடிகன் (1990)
326. நீ சிரித்தால் தீபாவளி (1990)
327. மனசுக்கேத்த மாப்பிள்ளை (1990)
328. மல்லுவேட்டி மைனர் (1990)
329. மதுரை வீரன் ௭ங்கசாமி (1990)
330. மருத பாண்டி (1990)
331. மை டியர் மார்த்தாண்டன் (1990)
332. மௌனம் சம்மதம் (1990)
333. ௭ங்கிட்ட மோதாதே (1990)
334. ௭ன் உயிர் தோழன் (1990)
335. ௭திர் காற்று (1990)
336. வெள்ளையத் தேவன் (1990)
337. ராஜா கைய வச்சா (1990)

1991 – 2000

1. குணா (1991)
2. கும்பக்கரை தங்கையா (1991)
3. இதயம் (1991)
4. இரும்பு பூக்கள் (1991)
5. ஈரமான ரோஜாவே (1991)
6. ஊரெல்லாம் உன் பாட்டு (1991)
7. கேப்டன் பிரபாகரன் (1991)
8. மைக்கேல் மதன காமராஜன் (1991)
9. கோபுர வாசலிலே (1991)
10. பிரம்மா (1991)
11. பிள்ளை பாசம் (1991)
12. புதிய ராகம் (1991)
13. புதிய ஸ்வரங்கள் (1991)
14. புது நெல்லு புது நாத்து (1991)
15. மனித ஜாதி (1991)
16. தளபதி (1991)
17. தர்மதுரை (1991)
18. தந்துவிட்டேன் ௭ன்னை (1991)
19. தம்பிக்கு ஒரு பாட்டு (1991)
20. தாலாட்டு கேட்குதம்மா (1991)
21. தாயம்மா (1991)
22. ௭ன் அருகில் நீ இருந்தால் (1991)
23. ௭ன் ராசாவின் மனசிலே (1991)
24. சாமி போட்ட முடிச்சு (1991)
25. சார் ஐ லவ் யூ (1991)
26. உருவம் (1991)
27. வெற்றிப் படிகள் (1991)
28. வெற்றிக் கரங்கள் (1991)
29. தங்கதாமரைகள் (1991)
30. கற்பூர முல்லை (1991)
31. அக்னி பார்வை (1992)
32. ஆவாரம்பூ (1992)
33. இன்னிசை மழை (1992)
34. இது நம்ம பூமி (1992)
35. உன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1992)
36. ௭ன்றும் அன்புடன் (1992)
37. ஒன்னா இருக்க கத்துக்கணும் (1992)
38. தம்பி பெண்டாட்டி (1992)
39. தங்கக்கிளி (1992)
40. தங்க மனசுக்காரன் (1992)
41. தாலாட்டு (1992)
42. நாடோடித் தென்றல் (1992)
43. நாடோடிப் பாட்டுக்காரன் (1992)
44. நாங்கள் (1992)
45. கலிகாலம் (1992)
46. பங்காளி (1992)
47. பரதன் (1992)
48. பாண்டியன் (1992)
49. பாண்டித்துரை (1992)
50. மீரா (1992)
51. தெய்வ வாக்கு (1992)
52. சின்ன கவுண்டர் (1992)
53. சின்னத் தம்பி (1992)
54. சின்ன பசங்க நாங்க (1992)
55. சின்ன தாய் (1992)
56. சின்னவர் (1992)
57. சிங்காரவேலன் (1992)
58. தாய்மொழி (1992)
59. தேவர் மகன் (1992)
60. திருமதி பழனிச்சாமி (1992)
61. வண்ண வண்ண பூக்கள் (1992)
62. வா வா வசந்தமே (1992)
63. வில்லுப்பாட்டுக்காரன் (1992)
64. செம்பருத்தி (1992)
65. செந்தமிழ் பாட்டு (1992)
66. மன்னன் (1992)
67. மகுடம் (1992)
68. மாப்பிள்ளை வந்தாச்சு (1992)
69. ராசுக்குட்டி (1992)
70. வள்ளி (1993)
71. வால்டர் வெற்றிவேல் (1993)
72. உழைப்பாளி (1993)
73. உடன்பிறப்பு (1993)
74. உள்ளே வெளியே (1993)
75. உத்தம ராசா (1993)
76. மணிக்குயில் (1993)
77. மகராசன் (1993)
78. மறுபடியும் (1993)
79. மாமியார் வீடு (1993)
80. அரண்மனைக்கிளி (1993)
81. ஆத்மா (1993)
82. மகாநதி (1993)
83. பார்வதி என்னை பாரடி (1993)
84. பொன்விலங்கு (1993)
85. பொறந்த வீடு புகுந்த வீடு (1993)
86. ௭ஜமான் (1993)
87. ௭ங்க முதலாளி (1993)
88. ௭ங்க தம்பி (1993)
89. ஏழை ஜாதி (1993)
90. ஐ லவ் இந்தியா (1993)
91. சக்கரைத் தேவன் (1993)
92. சின்ன ஜமீன் (1993)
93. சின்ன தளபதி (1993)
94. தர்ம சீலன் (1993)
95. துருவ நட்சத்திரம் (1993)
96. சின்ன கண்ணம்மா (1993)
97. சின்ன மாப்பிள்ளை (1993)
98. கலைஞன் (1993)
99. கட்டளை (1993)
100. காத்திருக்க நேரமில்லை (1993)
101. கிளிப்பேச்சுக் கேட்கவா (1993)
102. கோயில் காளை (1993)
103. ராக்காயி கோவில் (1993)
104. நாளை ௭ங்கள் கல்யாணம் (1993)
105. கண்மணி (1994)
106. செந்தமிழ் செல்வன் (1994)
107. அமைதிப்படை (1994)
108. அதிரடிப்படை (1994)
109. அதர்மம் (1994)
110. ஆனஸ்ட் ராஜ் (1994)
111. மகாநதி (1994)
112. மகளிர் மட்டும் (1994)
113. பெரிய மருது (1994)
114. சக்திவேல் (1994)
115. சக்திவயவான் (1994)
116. தென்றல் வரும் தெரு (1994)
117. சேதுபதி ஐபிஎஸ் (1994)
118. சாது (1994)
119. சீமான் (1994)
120. செவ்வந்தி (1994)
121. தோழர் பாண்டியன் (1994)
122. வீரா (1994)
123. புதுப்பட்டி (1994)
124. பொண்ணுத்தாயி (1994)
125. ராசாமகன் (1994)
126. பிரியங்கா (1994)
127. ராஜகுமாரன் (1994)
128. வனஜா கிரிஜா (1994)
129. வீட்ல விசேங்க (1994)
130. வியட்நாம் காலணி (1994)
131. சின்ன வாத்தியார் (1995)
132. சதிலீலாவதி (1995)
133. சந்திரலேகா (1995)
134. அவதாரம் (1995)
135. ஆணழகன் (1995)
136. இளையராகம் (1995)
137. ராசய்யா (1995)
138. ராஜா ௭ங்க ராஜா (1995)
139. ராஜ முத்திரை (1995)
140. ராஜாவின் பார்வையிலே (1995)
141. பாட்டு வாத்தியார் (1995)
142. பாட்டு பாட வா (1995)
143. பெரிய குடும்பம் (1995)
144. மக்களாட்சி (1995)
145. மாயாபஜார் (1995)
146. முத்துக்காளை (1995)
147. மோகமுள் (1995)
148. ௭ல்லாமே ௭ன் ராசாதான் (1995)
149. ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி (1995)
150. கட்டுமரக்காரன் (1995)
151. கோலங்கள் (1995)
152. நந்தவனத் தேரு (1995)
153. தேடி வந்த ராசா (1995)
154. இரட்டை ரோஜா (1996)
155. கட்ட பஞ்சாயத்து (1996)
156. நாட்டுப்புறப் பாட்டு (1996)
157. பூமணி (1996)
158. பூவரசன் (1996)
159. கடவுள் (1997)
160. காதலுக்கு மரியாதை (1997)
161. சின்ன ராமசாமி பெரிய ராமசாமி (1997)
162. தம்பிதுரை (1997)
163. வாசுகி (1997)
164. தெம்மாங்கு பாட்டுக்காரன் (1997)
165. தென்பாண்டி சிங்கம் (1997)
166. தேவதை (1997)
167. நானும் ஒரு இந்தியன் (1997)
168. ராமன் அப்துல்லா (1997)
169. கண்களின் வார்த்தைகள் (1998)
170. கண்மணி ஒரு கவிதை (1998)
171. கண்ணாத்தாள் (1998)
172. கவலைப்படாதே சகோதரா (1998)
173. காதல் கவிதை (1998)
174. கிழக்கும் மேற்கும் (1998)
175. கும்பகோணம் கோபாலு (1998)
176. வீர தாலாட்டு (1998)
177. தர்மா (1998)
178. தலைமுறை (1998)
179. தேசிய கீதம் (1998)
180. பூந்தோட்டம் (1998)
181. செந்தூரம் (1998)
182. கும்மிப்பாட்டு (திரைப்படம்) (1999)
183. அண்ணன் (1999)
184. அந்தப்புரம் (1999)
185. சின்ன துரை (1999)
186. சேது (1999)
187. பொண்ணு வீட்டுக்காரன் (1999)
188. மனம் விரும்புதே உன்னை (1999)
189. முகம் (1999)
190. தொடரும் (1999)
191. நிலவே முகம் காட்டு (1999)
192. ராஜஸ்தான் (1999)
193. டைம் (1999)
194. ஹவுஸ்புல் (திரைப்படம்) (1999)
195. பாரதி (2000)
196. ஹே ராம் (2000)
197. திருநெல்வேலி (2000)
198. இளையவன் (2000)
199. கண்ணுக்குள் நிலவு (2000)
200. காக்கைச் சிறகினிலே (2000)
201. காதல் ரோஜாவே (2000)
202. கரிசக்காட்டு பூவே (2000)
203. கரிவேலம்பூக்கள் (2000)

2001 - 2010

1. கண்ணா உன்னைத் தேடுகிறேன் (2001)
2. காசி (2001)
3. காதல் சாதி (2001)
4. காற்றிற்கு ௭ன்ன வேலி (2001)
5. குட்டி (2001)
6. ஆண்டான் அடிமை (2001)
7. ௭ன் இனிய பொன்நிலாவே (2001)
8. பிரண்ட்ஸ் (2001)
9. ௭ன்மன வானில் (2002)
10. அழகி (2002)
11. தேவன் (2002)
12. ரமணா (2002)
13. சொல்ல மறந்த கதை (2002)
14. கொஞ்சி பேசலாம் (2003)
15. தனுஷ் (2003)
16. பிதாமகன் (2003)
17. மனசெல்லாம் (2003)
18. ஜுலி கணபதி (2003)
19. விருமாண்டி (2004)
20. விஷ்வ துளசி (2004)
21. காமராஜ் (2004)
22. அது ஒரு கனாக்காலம் (2005)
23. ஒரு நாள் ஒரு கனவு (2005)
24. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி (2005)
25. பொன் மேகலை (2005)
26. மும்பை ௭க்ஸ்பிரஸ் (2005)
27. கரகாட்டக்காரி (2005)
28. கஸ்தூரி மான் (2005)
29. மது (2006)
30. இனிமே நாங்கதான் (2007)
31. மாயக்கண்ணாடி (2007)
32. குற்றப்பத்திரிகை (2007)
33. தனம் (2008)
34. உளியின் ஓசை (2008)
35. கண்களும் கவிபாடுதே (2008)
36. நான் கடவுள் (2009)
37. அழகர் மலை (2009)
38. வால்மீகி (2009)
39. காதல் கதை (2009)
40. ஜகன் மோகினி (2009)
41. கண்ணுக்குள்ளே (2009)
42. மத்திய சென்னை (2009)
43. அஜந்தா (2009)
44. நந்தலாலா (2010)

2011 - நடப்பு

1. அய்யன் (2011)
2. பொன்னர் சங்கர் (2011)
3. அழகர் சாமியின் குதிரை (2011)
4. செங்காத்து பூமியிலே (2012)
5. தோணி (2012)
6. முதல்வர் மகாத்மா (2012)
7. மயிலு (2012)
8. நீதானே ௭ன் பொன் வசந்தம் (2012)
9. மறந்தேன் மன்னித்தேன் (2013)
10. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013)
11. சித்திரையில் நிலாச்சோறு (2013)
12. தலைமுறைகள் (2013)
13. ஒரு ஊருல (2014)
14. உன் சமையல் அறையில் (2014)
15. மேகா (2014)
16. டூரிங் டாக்கீஸ் (2015)
17. தாரை தப்பட்டை (2016)
18. ஓய் (2016)
19. கிடா பூசாரி மகுடி (2016)
20. அம்மா கணக்கு (2016)
21. ஒரு மெல்லிய கோடு (2016)
22. அப்பா (2016)

வகைப் பிரிக்கப்பட வேண்டியவை

1. அபூர்வ சக்தி
2. அன்புச் சின்னம்
3. அன்னையே ஆணை
4. அதிர்ஷ்டம் அழைக்கிறது
5. ஆதாரம்
6. இளமை இதோ இதோ
7. இவண்
8. ஏழுமலையான் மகிமை
9. பரணி (திரைப்படம்)
10. பிள்ளை (திரைப்படம்)
11. சின்ன தேவன்
12. காதல் தேவதை
13. எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேசன்
14. மருத நாயகம் (படம் முழுதும் எடுக்கப்படவில்லை)
15. முரட்டு கரணங்கள்
16. முதலமைச்சர் ஜெயந்தி
17. நான் சந்தித்த சட்டம்


இசைஞானி. இளையராஜா. 75 வது பிறந்த தினவிழா
==================================

இசைஞானி இளையராஜா .பற்றிய சில குறிப்புகள்

1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.

2. பிறந்த தேதி : 2.6.1943

3. தந்தை : டேனியல் ராமசாமி

4. தாய் : சின்னத்தாய்

5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

6. கல்வி : எட்டாம் வகுப்பு

7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் )

8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி

9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்)

10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25
ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது

11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால்
அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே
ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.

“என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன்
மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய
வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.

12. ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில்
தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும்,
பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து
இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.

13. கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இன்றும்
கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய்
இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.

14. ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.

15. வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு
பாடுகின்றேன் என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத
அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது
என்று கூறியிருக்கிறார் இளையராஜா.

16. பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்கள்
ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னைக்கு
ரயில் ஏறினார்.

17. மேற்கத்திய இசைக்கு இளையராஜாவின் குருநாதர் மாஸ்டர் தன்ராஜ்

18. வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை
நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார் தன்ராஜ் மாஸ்டர்.

19. பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக்
கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்றுக்
கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர்.

20. வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும்
அங்கேயே பயிற்சி பெறலானார்.

21. ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை
வாசிப்பதில் தேர்ந்தவர்.

22 .க்ளாசிக்கல் கிட்டார் இசையில் லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8வது
கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர்.

23. திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது
1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல
இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட  கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து
கொண்டார்.

24. சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி
வந்துள்ளார்கள்.

25. இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த
ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால்
அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை
இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார்.

26. ஆரம்ப காலங்களில் தான் பணியாற்றும் இசையமைப்பாளர் தயாரிப்பாளருடனும்,
இயக்குனருடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும்போது மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போசிங்
அசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார்.

27. 1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில்
சேர்ந்தார்.

28. சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின்
உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.

29.. முதல் படம் “அன்னக்கிளி”
தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர்
பஞ்சு அருணாச்சலத்தால் 1976 ல் அறிமுகம் செய்யப்பட்டார்.

30. அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய  அனைவருக்கும்
பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு
எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது
திறமையை நிரூபித்தார் இளையராஜா.

31. இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில்
அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி.. இது சற்று பழையதாய்
உள்ளது என்று யோசித்த இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”.

32. சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது.ஆனால் சினிமாவில்
சேருவதற்கு முன் டேனியல் ராசைய்யா என்றே அழைக்கப்பட்டார்.

33. கதை கவிதை கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும், தான் எடுத்த
புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த
பொழுதுபோக்கு.

34. சிபாரிசு சுத்தமாக பிடிக்காது.ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு
கால்ஷீட் தந்தார். சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள்.

35. அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின்
வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன்
காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன்
வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.

36. எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று
புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார். 

37. கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான்
புத்துயிர் பெற்றன.

38. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான்
கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார்.

39. பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு
அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான
ஒன்று.

40. பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில்
இசைக்குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை
ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லிக் கொள்கிறார்கள்.

வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை.
இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே
இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும்.
ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க
வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக
முடிந்துவிடும்.

சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்கவேண்டியதில்லை.
அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.

41.காட்சியை ஒருமுறை பார்க்கும் போதே மனதிற்குள் இசைவடிவத்தை யோசித்து, அடுத்த விநாடியே
கைகளால் இசைக்குறிப்பை வாசித்துப் பார்க்காமல் எழுதி முடித்து, மற்றவர்களை வாசிக்கச் செய்வார்.
மிகத்துல்லியமாக வரும் அந்த இசை பார்ப்போரை வியக்க வைப்பதோடு கற்பனாசக்தியின் உச்சம்
என்று பிரமித்து அவரது நண்பர் இயக்குநர் பாரதிராஜா அடிக்கடி சொல்வார்.

42. பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார்.

43. ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.

44. 2010 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

45. 2012 ல்‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்

46. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார்.
1985  - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987  - சிந்து பைரவி (தமிழ்)
1989  - ருத்ர வீணை (தெலுங்கு)
2009  - பழஸிராஜா (மலையாளம்)
2016 - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)

47. லண்டன் ராயல் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவினைக் கொண்டு, அவர் ‘சிம்பொனி’
ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று
அழைப்பர். அந்த சாதனையை முதலில் நிகழ்த்தியுள்ள ஆசியக் கலைஞர் இவரே.

48. மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை  ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர்  ‘இளையராஜா
இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர். பண்டிட் பீம்ஸென் ஜோஷி,
பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து
அப்பாடலை உருவாக்கினார். இந்திய இசை மேதை  ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும்
பாராட்டிப் பேசினார்.

49. கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம்
வாங்கினேன்.அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது
என்று அடிக்கடி சொல்வார்.

50. கமல்ஹாசன் குரலில் இருக்கும்  ‘பிட்ச்’ அபூர்வமானது.ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ்
செய்து அவரை பாட வைத்துள்ளார் ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு
பறவை’மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும்
‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’ என்ற பாடல்.

51. நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால்
பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது என கமல்ஹாசன் குமுதம் புத்தக
வெளியீட்டு விழாவில் பேசினார். அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா அவரைப் பார்க்கும்
போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரமிக்கிறேன் என்று பெருமை கொள்வார்.

52."How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை
ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த இந்த இசைத் தொகுப்பினை இசை
மும்மூர்த்திகளில் ஒருவரான ”
தியாகராஜ சுவாமிகள்” மற்றும் மேற்கத்திய இசைமேதை ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும்
காணிக்கையாக்கினார்.

53. "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர்
ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.

54. "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார்.
இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.

55. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில்
இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

56. 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.

57. இளையராஜா புகைப்படக்கலையில் மிகத்திறமை படைத்தவர்,

58. பாரதிராஜா போன்ற நெருங்கிய இயக்குனர்களுக்கு புதிய ட்யூன்களைக்கொடுத்து இதற்கு
காட்சியமைப்பை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பல பாடல்களை ஹிட்டாகக்
கொடுத்திருக்கிறார்.

59.  பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசும் போது இசையின் காட்டாற்று
வெள்ளம் என்று வர்ணிப்பார்.

60.அரசியல் தலைவர்கள் முதல் அன்றாடக் கூலிதொழிலாளி வரை சமுதாயத்தின் எல்லா
மட்டத்திலும் அவரின் ரசிகர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.

61. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட
தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை. ஹிந்தி பாடல்களை கேட்பதையும்
பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து
தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான
சாதனையை செய்தவர் இளையராஜா.

62. முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33.

63. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த
இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

64. இளையராஜாவின் இசைக்குறிப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கல்லூரிகளின் பாடப்
புத்தகங்களில் இடம்பெறும் என்று பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் கூறியுள்ளார்.

65. ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து
சாதனை படைதுள்ளார்.

66. ஆழ்ந்த ஞானம், நேரம் தவறாமை, இசைமேல் கொண்ட பற்று, கடின உழைப்பு, கவனம் சிதறாமை
என்று பல்வேறு உயர் எண்ணங்களால் பல கோடி இதயங்களைக் கவர்ந்துள்ளார்.

67. திரையிசையில் இதுவரை தன்னுடைய இசையமைப்பு மற்றும் பிற இசையமைப்பளர்களின்
இசையிலும் சேர்த்து 450 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

68. திரைப்படம் தவிர பல்வேறு ஆல்பங்களில் 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துப் பாடியுள்ளார்.

69. இசைஞானி என்ற பட்டம் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.

70. உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பளர்களை வரிசைப்படுத்திய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க
இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடம் அளித்துள்ளது. அதே இணையதளம்
இளையராஜாவை முதல் இடத்திற்கும் அவரே என்று அறிவிக்கும் நாள் வெகு சமீபத்திலிருக்கிறது.

71. சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75
ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின்
“ராக்கம்மா கையத்தட்டு”ப் பாடலை மிக சிறந்த பாடலாக அறிவித்துள்ளது.

72. இளையராஜா எழுதிய புத்தகங்கள் :

1. சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
2. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
3. வழித்துணை
4. துளி கடல்
5. ஞான கங்கா
6. பால் நிலாப்பாதை
7. உண்மைக்குத் திரை ஏது?
8.யாருக்கு யார் எழுதுவது?
9. என் நரம்பு வீணை
10. நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை,
இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
11. பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
12. இளையராஜாவின் சிந்தனைகள்.

73. 1000 படங்களைத்தாண்டி தன் இசைப்பயணத்தை தொடரும் பெருமைக்குரிய இந்திய
இசையமைப்பாளராக உலகை வலம் வரும் இமாலய மனிதர் ”இசைஞானி இளையராஜா”

74. பத்ம பூசண் விருது

பத்ம விபூஷண் விருது- 2018

இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :

1985இல் - சாகர சங்கமம் ( தெலுங்கு )
1987இல் - சிந்து பைரவி (தமிழ் )
1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
2009இல் - பழஸிராஜா (மலையாளம்)
2016இல் - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)


75 வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் ”இசைஞானி. இளையராஜா”.அவர்கள் நூறாண்டு
வாழ்ந்து இன்னும்  ஆயிரம் படங்களுக்கு இசையமைக்க இறைவன் அருள் வேண்டி வாழ்த்தி வணங்குகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக