சனி, 23 ஜூன், 2018

இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம் ஜூன் 24 .1928.



இசையமைப்பாளர்  எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த தினம் ஜூன் 24 .1928.

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் ( M. S. Viswanathan ), அல்லது பொதுவாக எம்எஸ்வி , (24 சூன் 1928 - 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர்
கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்ரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி)  . விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ் , மலையாளம் ,
கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
தெலுங்கு , இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

வாழ்க்கை

தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.  இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்.

இசை பயணம்

உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள். தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும்
பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல்
சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு , செந்தமிழ்ப் பாட்டு ,
செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். 1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர்
ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில்
சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.
நடிகராக விஸ்வநாதன்
கண்ணகி, காதல் மன்னன் , காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங் , கிருஷ்ணன் பஞ்சு , ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான
நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா,
அ. இ. ரகுமான் , கங்கை அமரன் , தேவா,
யுவன் சங்கர் ராஜா , ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் .


இசையமைத்த திரைப்படங்கள்

எம். எஸ். விஸ்வநாதன் தனித்து இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: (இது முழுமையான பட்டியல் அல்ல.)
1951 - 1960
1. போன மச்சான் திரும்பி வந்தான் (1954)
2. தெனாலி ராமன் (1956)
1961 - 1970
1. கலங்கரை விளக்கம் (1965)
2. குழந்தையும் தெய்வமும் (1965)
3. நீலவானம் (1965)
4. பஞ்சவர்ணக்கிளி (1965)
5. அன்பே வா (1966)
6. சந்திரோதயம் (1966)
7. அனுபவி ராஜா அனுபவி (1967)
8. சாந்தி நிலையம் (1969)
1971 - 1975
1. அலைகள் (1973)
2. பாக்தாத் பேரழகி (1973)
3. பாரத விலாஸ் (1973)
4. எங்கள் தாய் (1973)
5. கங்கா கௌரி (1973)
6. கௌரவம் (1973)
7. மணிப்பயல் (1973)
8. மனிதரில் மாணிக்கம் (1973)
9. நல்ல முடிவு (1973)
10. பாசதீபம் (1973)
11. பொன்னூஞ்சல் (1973)
12. தலைப்பிரசவம் (திரைப்படம்) (1973)
13. பூக்காரி (1973)
14. தாய் பிறந்தாள் (1974)
15. தங்கப்பதக்கம் (1974)
16. தீர்க்கசுமங்கலி (1974)
17. திருடி (1974)
18. திருமாங்கல்யம் (1974)
19. உரிமைக்குரல் (1974)
20. அக்கரைப் பச்சை (1974)
21. அன்பைத்தேடி (1974)
22. அத்தையா மாமியா (1974)
23. அவள் ஒரு தொடர்கதை (1974)
24. எங்கள் குலதெய்வம் (1974)
25. மகளுக்காக (1974)
26. மாணிக்கத் தொட்டில் (1974)
27. நான் அவனில்லை (1974)
28. நேற்று இன்று நாளை (1974)
29. பணத்துக்காக (1974)
30. பெண் ஒன்று கண்டேன் (1974)
31. ரோஷக்காரி (1974)
32. சமையல்காரன் (1974)
33. சிரித்து வாழ வேண்டும் (1974)
34. சிவகாமியின் செல்வன் (1974)
35. தாய் (திரைப்படம்) (1974)
36. அன்பே ஆருயிரே (1975)
37. அமுதா (1975)
38. அணையா விளக்கு (1975)
39. டாக்டர் சிவா (1975)
40. இதயக்கனி (1975)
41. மன்னவன் வந்தானடி (1975)
42. நாளை நமதே (1975)
43. நினைத்ததை முடிப்பவன் (1975)
44. பாட்டும் பரதமும் (1975)
45. தாய்வீட்டு சீதனம் (1975)
46. வைர நெஞ்சம் (1975)
47. வாழ்ந்து காட்டுகிறேன் (1975)
1976 - 1980
1. துணிவே துணை (1976)
2. உனக்காக நான் (1976)
3. உங்களில் ஒருத்தி (1976)
4. உண்மையே உன் விலையென்ன (1976)
5. உழைக்கும் கரங்கள் (1976)
6. வாழ்வு என் பக்கம் (1976)
7. அக்கா (திரைப்படம்) (1976)
8. சித்ரா பௌர்ணமி (1976)
9. இதயமலர் (1976)
10. கிரஹபிரவேசம் (1976)
11. லலிதா (திரைப்படம்) (1976)
12. மகராசி வாழ்க (1976)
13. மேயர் மீனாட்சி (1976)
14. மன்மத லீலை (1976)
15. மூன்று முடிச்சு (1976)
16. முத்தான முத்தல்லவோ (1976)
17. நீ இன்றி நானில்லை (1976)
18. நீதிக்கு தலைவணங்கு (1976)
19. ஓ மஞ்சு (1976)
20. ஊருக்கு உழைப்பவன் (1976)
21. ஒரு கொடியில் இரு மலர்கள் (1976)
22. பயணம் (1976)
23. பேரும் புகழும் (1976)
24. ரோஜாவின் ராஜா (1976)
25. சந்ததி (திரைப்படம்) (1976)
26. சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
27. ஆறு புஷ்பங்கள் (1977)
28. அண்ணன் ஒரு கோயில் (1977)
29. அவன் ஒரு சரித்திரம் (1977)
30. தேவியின் திருமணம் (1977)
31. எல்லாம் அவளே (1977)
32. என்ன தவம் செய்தேன் (1977)
33. கியாஸ்லைட் மங்கம்மா (1977)
34. இளைய தலைமுறை (1977)
35. இன்றுபோல் என்றும் வாழ்க (1977)
36. மீனவ நண்பன் (1977)
37. நாம் பிறந்த மண் (1977)
38. நீ வாழவேண்டும் (1977)
39. பட்டினப் பிரவேசம் (1977)
40. பெண்ணை சொல்லி குற்றமில்லை (1977)
41. பெருமைக்குரியவன் (1977)
42. புனித அந்தோனியார் (1977)
43. புண்ணியம் செய்தவர் (1977)
44. தனிக் குடித்தனம் (1977)
45. நீ வாழ வேண்டும் (1977)
46. சில நேரங்களில் சில மனிதர்கள் (1977)
47. இறைவன் கொடுத்த வரம் (1978)
48. அக்னி பிரவேசம் (1978)
49. அந்தமான் காதலி (1978)
50. அதிர்ஷ்டக்காரன் (1978)
51. அவள் தந்த உறவு (1978)
52. ஆயிரம் ஜென்மங்கள் (1978)
53. என் கேள்விக்கு என்ன பதில் (1978)
54. என்னைப்போல் ஒருவன் (1978)
55. கங்கா யமுனா காவேரி (1978)
56. ஜெனரல் சக்ரவர்த்தி (1978)
57. இளையராணி ராஜலட்சுமி (1978)
58. இறைவன் கொடுத்த வரம் (1978)
59. ஜஸ்டிஸ் கோபிநாத் (1978)
60. குங்குமம் கதை சொல்கிறது (1978)
61. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (1978)
62. நிழல் நிஜமாகிறது (1978)
63. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978)
64. ஒரு வீடு ஒரு உலகம் (1978)
65. ஆசைக்கு வயசில்லை (1979)
66. செல்லக்கிளி (1979)
67. சித்திரச்செவ்வானம் (1979)
68. இமயம் (1979)
69. காம சாஸ்திரம் (1979)
70. கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன (1979)
71. குப்பத்து ராஜா (1979)
72. மங்களவாத்தியம் (1979)
73. மாயாண்டி (1979)
74. நீலமலர்கள் (1979)
75. நீலக்கடலின் ஓரத்திலே (1979)
76. நீதிக்கு முன் நீயா நானா (1979)
77. நினைத்தாலே இனிக்கும் (1979)
78. நூல் வேலி (1979)
79. ஒரே வானம் ஒரே பூமி (1979)
80. போர்ட்டர் பொன்னுசாமி (1979)
81. சுப்ரபாதம் (1979)
82. திரிசூலம் (1979)
83. திசை மாறிய பறவைகள் (1979)
84. சிகப்புக்கல் மூக்குத்தி (1979)
85. ஸ்ரீராமஜெயம் (1979)
86. வெள்ளி ரதம் (1979)
87. இமயம் (1979)
88. பில்லா (1980)
89. வறுமையின் நிறம் சிகப்பு (1980)
90. அவன் அவள் அது (1980)
91. அழைத்தால் வருவேன் (1980)
92. பாமா ருக்மணி (1980)
93. பம்பாய் மெயில் 109 (1980)
94. தர்மராஜா (1980)
95. எங்க வாத்தியார் (1980)
96. கீதா ஒரு செண்பகப்பூ (1980)
97. இவர்கள் வித்தியாசமானவர்கள் (1980)
98. மழலைப்பட்டாளம் (1980)
99. மேகத்துக்கும் தாகமுண்டு (1980)
100. ஒரு கை ஓசை (1980)
101. பொல்லாதவன் (1980)
102. சுஜாதா (1980)
103. தெய்வீக ராகங்கள் (1980)
104. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது (1980)
105. விஸ்வரூபம் (1980)
1981 - 1985
1. ஸ்ரீநிவாச கல்யாணம் (1981)
2. அமரகாவியம் (1981)
3. அன்புள்ள அத்தான் (1981)
4. அரும்புகள் (1981)
5. அந்த 7 நாட்கள் (1981)
6. தேவி தரிசனம் (1981)
7. எங்க ஊரு கண்ணகி (1981)
8. கல்தூண் (1981)
9. கீழ்வானம் சிவக்கும் (1981)
10. குடும்பம் ஒரு கதம்பம் (1981)
11. குலக்கொழுந்து (1981)
12. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
13. மாடி வீட்டு ஏழை (1981)
14. மோகனப் புன்னகை (1981)
15. நதி ஒன்று கரை மூன்று (1981)
16. பட்டம் பதவி (1981)
17. ராணுவ வீரன் (1981)
18. சத்ய சுந்தரம் (1981)
19. சவால் (1981)
20. தண்ணீர் தண்ணீர் (1981)
21. தீ (1981)
22. தில்லு முல்லு (1981)
23. திருப்பங்கள் (1981)
24. மாடி வீட்டு ஏழை (1981)
25. மோகனப் புன்னகை (1981)
26. தீர்ப்பு (திரைப்படம்) (1982)
27. ஒரு வாரிசு உருவாகிறது (1982)
28. ஒரு இந்திய கனவு (திரைப்படம்) (1983)
29. தம்பதிகள் (1983)
30. உண்மைகள் (திரைப்படம்) (1983)
31. ஆலய தீபம் (1984)
32. இருமேதைகள் (1984)
33. நெஞ்சத்தை அள்ளித்தா (1984)
34. ராஜதந்திரம் (1984)
35. ராஜா வீட்டு கண்ணுக்குட்டி (1984)
36. சரித்திர நாயகன் (1984)
37. சிறை (1984)
38. சிரஞ்சீவி (1984)
39. தராசு (1984)
40. திருப்பம் (1984)
41. நேர்மை (திரைப்படம்) (1985)
42. மூக்கணாங்கயிறு (திரைப்படம்) (1985)
1986 - 1990
1. மீண்டும் பல்லவி (1986)
2. கண்ணே கனியமுதே (1986)
3. சிவப்பு மலர்கள் (1986)

4. திராவிடன் (திரைப்படம்) (1989)
5. அவசர போலீஸ் 100 (திரைப்படம்) (1990)

தமிழ் - 800 திரைப்படங்கள்
மலையாளம் - 80 திரைப்படங்கள்
தெலுங்கு - 30 திரைப்படங்கள்
கன்னடம் - 15 திரைப்படங்கள்
இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
முதன்மை கட்டுரை: எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
இராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.


முதன்மை கட்டுரை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான பாடல்களில் சில:

1. எங்கே தேடுவேன் (பணம்)
2. மயக்கும் மாலை (குலேபகாவலி)
3. குறுக்கு வழியில் (மகாதேவி)
4. முகத்தில் முகம் (தங்கப்பதுமை)
5. செந்தமிழ் தேன்மொழியாள் (மாலையிட்ட மங்கை)
6. தென்றல் உறங்கிடும் (பெற்ற மகனை விற்ற அன்னை)
7. ஆடைகட்டி (அமுதவல்லி)
8. ஏன் பிறந்தாய் மகனே (பாகப்பிரிவினை)
9. தங்கத்திலே ஒரு குறை (பாகப்பிரிவினை)
10. ஆடாத மனமும் (மன்னாதி மன்னன்)
11. பிறக்கும் போதும் (கவலை இல்லாத மனிதன்)
12. பாலிருக்கும் பழமிருக்கும் (பாவமன்னிப்பு)
13. அத்தான் என்னத்தான் (பாவமன்னிப்பு)
14. ஜல் ஜல் ஜல் (பணம்)
15. காலங்களில் அவள் (பாவமன்னிப்பு)
16. மாலைப் பொழுதின் (பாக்யலெட்சுமி)
17. மலர்களைப்போல் தங்கை (பாசமலர்)
18. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
19. பால்வண்ணம் (பாசம்)
20. பாலும் பழமும் (பாசம்)
21. உடலுக்கு உயிர்காவல் (மணப்பந்தல்)
22. வாராய் என் தோழி (பாசமலர்)
23. அத்திக்காய் காய் (பலே பாண்டியா)
24. தேவன் கோயில் (மணியோசை)
25. எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்)
26. கல்லெல்லாம் மாணிக்க (ஆலயமணி)
27. கொடி அசைந்ததும் (பார்த்தால் பசி திரும்)
28. மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
29. ஓடம் நதயினிலே (காத்திருந்த கண்கள்)
30. பொன்னை விரும்பும் (ஆலயமணி)
31. பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
32. பூஜைக்கு வந்த மலரே (பாதகாணிக்கை)
33. நினைப்பதெல்லாம் ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
34. பொறந்தாலும் ( போலிஸ்காரன் மகள் )
35. ரோஜா மலரே ( வீர திருமகன் )
36. சொன்னது நீதானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
37. உள்ளம் என்பது ஆமை ( பார்த்தால் பசி திரும் )
38. வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
39. வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
40. வீடுவரை உறவு ( பாத காணிக்கை )
41. இந்த மன்றத்தில் ( போலிஸ்காரன் மகள் )
42. அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
43. அத்தை மடி ( கற்பகம் )
44. அவள் பறந்து போனாளே ( பார் மகளே பார் )
45. கண்கள் எங்கே ( கர்ணன் )
46. நெஞ்சம் மறப்பதில்லை ( கர்ணன் )
47. நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
48. பார் மகளே பார் ( ஆனந்த ஜோதி )
49. பனி இல்லாத ( ஆனந்த ஜோதி )
50. பாரப்பா பழனியப்பா ( பெரிய இடத்துப் பெண் )
51. பக்கத்து வீட்டு ( கற்பகம் )
52. பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
53. உள்ளத்தில் நல்ல உள்ளம் ( கர்ணன் )
54. ஆடவரெல்லாம் ( கருப்புப் பணம் )
55. ஆயிரத்தில் ( கை கொடுத்த தெய்வம் )
56. ஆரோடும் மண்ணில் ( பழனி )
57. அமைதியான நதி ( ஆண்டவன் கட்டளை )
58. அவளுக்கென்ன ( சர்வர் சுந்தரம் )
59. அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
60. அவள் மெல்ல சிரித்தாள் ( பச்சை விளக்கு )
61. அத்தை மகள் ரத்தினத்தை ( பணக்கார குடும்பம் )
62. அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
63. எனக்கொரு மகன் ( பணம் படைத்தவன் )
64. என்ன பார்வை ( காதலிக்க நேரமில்லை )
65. ஹலோ மிஸ் ( என் கடமை )
66. சிட்டுக் குருவி ( புதிய பறவை )
67. அண்ணன் என்னடா ( பழனி )
68. இந்த புன்னகை ( தெய்வத் தாய் )
69. நான் ஒரு குழந்தை ( படகோட்டி )
70. ஒளிமயமான எதிர்காலம் ( பச்சைவிளக்கு )
71. கண் போன போக்கிலே ( பணம் படைத்தவன் )
72. பறக்கும் பந்து பறக்கும் ( பணக்கார குடும்பம் )
73. பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
74. சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் )
75. மூன்றெழுத்தில் என் ( தெய்வத்தாய் )
76. தொட்டால் பூ மலரும் ( படகோட்டி )
77. தங்கரதம் ( கலைக்கோயில் )
78. அதோ அந்த பறவை ( ஆயிரத்தில் ஒருவன் )
79. சின்ன சின்ன கண்ணனுக்கு ( வாழ்க்கை படகு )
80. என்ன என்ன வார்த்தைகளோ ( வெண்ணிற ஆடை )
81. காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
82. கண்ணன் வருவான் ( நெஞ்சிருக்கும் வரை )
83. குமரிப் பெண்ணின் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
84. தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
85. நேற்றுவரை நீ யாரோ ( வாழ்க்கைப் படகு )
86. உன்னை நான் சந்தித்தேன் நீ ( ஆயிரத்தில் ஒருவன் )
87. யார் அந்த நிலவு ( சாந்தி )
88. ஹலோ மிஸ்டர் ஜமின்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
89. நான் மாந்தோப்பில் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
90. சித்திரமே ( வெண்ணிற ஆடை )
91. பூ முடிப்பாள் ( நெஞ்சிருக்கும் வரை )
92. விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )
பெற்ற விருதுகள்
இசைப்பேரறிஞர் விருது, 2003
கலைமாமணி விருது
மதிப்புறு முனைவர் பட்டங்கள் - 2

மறைவு

எம். எஸ். விஸ்வநாதன் 14 சூலை 2015 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார்.


எம்எஸ் விஸ்வநாதன்... காற்றுள்ள வரை காதுகளில் ரீங்கரிக்கும் ஒரு மாபெரும் கலைஞன்!

எம்எஸ் விஸ்வநாதன் திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட மகத்தான இசைக் கலைஞன்... தான் அப்படியொரு மாமேதை என்ற நினைப்பே இல்லாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே!
பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்தவரில்லை எம்எஸ்வி. நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விஸ்வநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருஷ்ணன் நாயர் வீட்டில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டமில்லை. சினிமா, அதுவும் பாட்டு என்றால் உயிர்.
ஆனால் சினிமா பார்க்க காசு வேண்டுமே... அருகிலுள்ள தியேட்டருக்கு முறுக்கு விற்கும் பையனாகப் போய், முறுக்கு விற்கிற இடைவெளியில் பாட்டுக் கேட்டு ரசிப்பாராம்.
இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் கர்நாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று பதிமூன்றாவது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தியவர் இவர்.

எம்எஸ் விஸ்வநாதன்

இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இசைக் குழுவில் எம். எஸ். விஸ்வநாதன் ஆர்மோனியக் கலைஞராகவும், டி. கே. ராமமூர்த்திவயலின் கலைஞராகவும் பணிபுரிந்தனர். உடல் நலகுறைவு காரணமாக, தன்னுடைய முப்பது வயதில் சுப்புராமன் மறைந்தார். அவருடைய மறைவைத் தொடர்ந்து அவரது இசையமைப்பில் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களின் இசைப்பணியை அவரின் உதவியாளர்களாக இருந்த இவரும் ராமமூர்த்தியும் முடித்துக் கொடுத்தார்கள்.
இதனால் தமிழ், தெலுங்கு தேவதாஸ், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான சண்டிராணி படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப் படுத்தப்பட்டார்கள்.
எம்ஜிஆர் படம்
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியானது. எம்ஜிஆர் இயேசுவாக தோன்றிய படம்.
என்எஸ்கே ஆசி
"வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஏன் இருக்கக் கூடாது'' என்று சொல்லி தன்னுடைய "பணம்' என்ற படத்தில் இருவரையும் இணைத்து முதன்முதலில் இசையமைக்க வைத்து டைட்டிலில் "ராமமூர்த்தி -விஸ்வநாதன்' என்று போட்டவர் பணம் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்.
அப்படத்திலிருந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்தார்கள்.
இது தவிர எம்.எஸ்.விஸ்வநாதன் தனியாக ஆயிரம் படங்கள் வரை இசையமைத்துள்ளார்.
இளையராஜாவுடன் சேர்ந்து
இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ் செல்வன், விஸ்வ துளசி என நான்கு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தில்லு முல்லு படத்தில் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைத்தார்.
1951-ல்ஆரம்பித்து 1990 வரை 40 ஆண்டுகள் தமிழ்த் திரை இசை உலகின் முடிசூடா மன்னராக இருந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார்.
பாடகர்
`பாசமலர்' படத்தில் பாட ஆரம்பித்த இவர், வி.குமார், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் என பல இசையமைப்பாளர்களின் இசையில் நூற்றுக்கும் அதிகமான பாடல்கள் பாடி இருக்கிறார்.
முன்னூறும் மூன்றும்
`புதிய பறவை' படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டு `எங்கே நிம்மதி' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த இவர் `பாகப்பிரிவினை' படத்தில் `தாழையாம் பூ முடிச்சு' பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக் கொண்டு இசைக் கோர்ப்பு செய்தவர்
20 நிமிடங்கள்... 2 மாதங்கள்
`நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம் பெற்ற `முத்தான முத்தல்லவோ' பாடலை 20 நிமிடங்களில் உருவாக்கிய இவருக்கு `நெஞ்சம் மறப்பதில்லை' பாடலை உருவாக்க இரண்டு மாதம் ஆனதாம்!
தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த' பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமையும் இவருக்கு உண்டு.
உலக இசை
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப் படுத்திய பெருமையும் இவருக்கு சொந்தமானது எகிப்திய இசையைப் `பட்டத்துராணி' பாடலிலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயதிலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை'களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்', ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா'விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ' பாடலிலும் கொண்டு வந்தவர் இவர்.
கர்நாடக இசைக் கலைஞர்களுடன்...
எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளிகிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரது இசையில் பாடி இருக்கிறார்கள்!
முதல் லைவ் கச்சேரி
இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திய வரும் இவர் தான்.
நடிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமா துறையில் அடியெடுத்து வைத்த இவரது ஆசை ஆரம்பத்தில் நிறைவேறாமல் போனாலும் `கண்ணகி' படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் `காதல் மமன்னன்,' `காதலா.... காதலா' உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.
குடும்பம்
எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி பெயர் ஜானகி அம்மாள். இவர்களுக்கு கோபிகிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்களும், லதா மோகன், மது பிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்களும் உள்ளனர்.
சிவாஜி தந்த பட்டம்
1963ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி கவியரசு கண்ணதாசன் இயக்குனர் ஸ்ரீதர் ஜெமினி கணேசன் சந்திரபாபு "சித்ராலயா" கோபு முன்னிலையில் நடைபெற்ற ஒரு விழாவில் சிவாஜி கணேசனால் இவருக்கும் இராமமூர்த்திக்கும் மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.
விருதுக்கு வருத்தப்பட்டதில்லை
கலைமாமணி, ஃபிலிம் ஃபேர், போன்ற பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு தேசிய விருதோ, பத்மஸ்ரீ போன்ற இந்திய அரசின் உயரிய விருதோ இதுவரை கொடுக்கப்படாதது குறித்து விஸ்வநாதன் ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை என்றாலும் தமிழ் இசை ரசிகர்களைப் பொறுத்தவரை அது இன்றுவரை பெரிய ஏமாற்றம்தான்.
மக்கள் மனதில் வாழும் கலைஞர்
இந்த விருதுகளை விட பெரிய விருதாக இவர் நினைப்பது எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் வாழ்வதைத்தான். அந்த இடம் இவரைப் பொறுத்தவரை நிரந்தரமானது என்பதிலும் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அந்த இடத்திற்கு அவர்களால் சொந்தம் கொண்டாட முடியாது என்பதும் நிஜம்.


எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ்.வி-யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். மனதைத் தொடும் மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றின் பெர்சனல் பக்கங்கள் இதோ.....
எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.
அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!.
நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி.
இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!.
மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை!
குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்!
இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான்!
மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம்!
சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி!
எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்!
மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்!
இளையராஜவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்!
`புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்!
தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்!
1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு!
தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது!
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார்!
`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது!
இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான் சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது!
கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறு சுறுப்பாக இருக்கிறார்!
பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்!
சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள்!
வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது!
`அத்தான்..... என்னத்தான்....’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிரிந்தது அரங்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக