வியாழன், 18 ஜனவரி, 2018

பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த நாள் ஜனவரி 19 ,193


பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த நாள் ஜனவரி 19 ,1933 -

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் ( ஜனவரி 19 ,1933 - மார்ச் 24 , 1988 ) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
பெயர் : சி. கோவிந்தராசன்
பிறப்பு: 19 ஜனவரி 1933
இறப்பு: 24 மார்ச் 1988.
பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்
பிறப்பிடம்: சீர்காழி
ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:
தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்
கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்:தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி
இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி
இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்
பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம்
திரைப்படப் பாடகர்
திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.
திரைப்படத்துக்காக பாடிய பாடல்கள்
( பட்டியல் முழுமையானதன்று )
எண் பாடல் பாடலாசிரியர்
1 பட்டணந்தான் போகலாமடி ... எ
2
அமுதும் தேனும் எதற்கு ...
க ம
3 மாட்டுக்கார வேலா ...
க ம
4 வில் எங்கே கணை இங்கே ...
எ வ இ
5
வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே ...

6
கொங்கு நாட்டுச் செங்கரும்பே ...
மாயவநாதன் ஜ
7 மலையே என் நிலையே ... ஜ
8 ஜக்கம்மா ... ஜ
9 பட்டணந்தான் போகலாமடி ... எ
10 ஒற்றுமையாய் வாழ்வதாலே ...
க ம
11 எங்கிருந்தோ வந்தான் ... பாரதியார் க ம
12 ஓடம் நதியினிலே ...
13 கோட்டையிலே ஒரு ஆலமரம் ...
14 நல்ல மனைவி நல்ல பிள்ளை ...
15
பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா ...
16
கண்ணான கண்மணிக்கு அவசரமா ...
17 கண்ணன் வந்தான் ...
பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில
பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு
மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு )
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.
நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)
எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)
வண்டு ஆடாத சோலையில் , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)
சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)
ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) - ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்
யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்
கண்ணன் வந்தான் (படம்: ராமு)(உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
தேவன் வந்தான் (படம்: குழந்தைக்காக) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்)
வெள்ளிப் பனிமலையின் (படம்: கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர்: திருச்சி லோகநாதன்)
இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)
ஆயிரம் கரங்கள் நீட்டி (படம்: கர்ணன்) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)

விருதுகள்

சங்கீத நாடக அகாதமி விருது , 1980
இசைப்பேரறிஞர் விருது , 1984


பிளாஷ் ஃபேக்:சீர்காழி கோவிந்தராஜன் பாட மறுத்த பாடல்

கணீர் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் ஒரு பக்தி பழம், சிறந்த பாடகர் என்பதுதான் அதிகம் பேருக்கு தெரியும். ஆனால் அவர் சுயமரியாதை மிக்கவர் என்பது பலர் அறிந்திராத அவரின் மறுபக்கம். அதற்கு இரண்டு உதாரணங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.சிவாஜி நடித்த குங்குமம் படத்தில் இடம் பெற்ற பாடல் “சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தை சொன்னதம்மா...” பலவித பிருகா பிரயோகங்களை வைத்து இசை அமைப்பாளர் மகாதேவன் இந்த பாடலை உருவாக்கி இதனை சீர்காழி கோவிந்தராஜ்தான் இதற்கு பொருத்தமானவர் என்று அவரை பாடவைத்து பாடலை பதிவு செய்துவிட்டார்.
இதை கேள்விப்பட்ட சிவாஜி கொதித்துப்போனார். காரணம் அப்போது சிவாஜிக்கு அனைத்து பாடல்களையும் டி.எம்.சவுந்தர்ராஜன்தான் பாடிக் கொண்டிருந்தார். அதனால் இந்தப் பாடலையும் டி.எம்.எஸ்தான் பாடவேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் மகாதேவனும் சீர்காழிக்கு பதிலாக டி.எம்.எஸ்சை பாட வைத்தார். விஷயத்தை கேள்விப்பட்ட சீர்காழி கோவிந்தராஜன். சிவாஜிக்கு போன் பண்ணி “அண்ணே மற்றவங்களுக்கு சாப்பாடு போடுங்க வேணாம்னு சொல்லலை. ஆனால் எச்சில் இலையில் போடாதீங்க” என்றார். சிவாஜியையே எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியமும், தன்மானமும் அவருக்கு இருந்தது.
திருவிளையாடல் படத்தில் “ஒரு நாள் போதுமா இன்னொரு நாள் போதுமா...” என்ற பாடல் இடம்பெற்றது. இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன்தான் பாட வேண்டும் என்று இயக்குனர் ஏ.பி.நாகராஜன் கேட்டார். அதற்கு சீர்காழி “என் பாட்டு எப்போதும் தோற்காது. தோற்கிற மாதிரியான பாடலை நான் பாட மாட்டேன்” என்று மறுத்துவிட்டார் பின்னர் அந்தப் பாடலை பாலமுரளி கிருஷ்ணா பாடினார். சீர்காழியை எப்படியாவது படத்தில் பாட வைக்க வேண்டும் என்று கருதிய ஏ.பி.நாகராஜன் அவரை படத்தின் முதல் பாடலான “தேவா சம்போ மகாதேவா...” பாடலை பாட வைத்தார்.


வெண்கலக் குரலோன் புகழ்பெற்ற பிரபல கர்னாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (Sirkazhi S.Govindarajan) பிறந்த தினம் இன்று (ஜனவரி 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l நாகை மாவட்டம் சீர்காழியில் (1933) பிறந்தவர். தந்தை நடத்தும் ராமாயண இசை நாடகத் தில் சிறு வயது ராமனாக நடித்து பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்தார் குழந்தையாக இருந்த கோவிந்தராஜன்.
l சீர்காழி வாணிவிலாஸ் பாட சாலையில் பயின்றார். இளம் வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கிட்டப் பாவின் பாடல்களை விரும்பிக் கேட்டு தானும் பாடுவார். தேவி நாடகக் குழு, பாய்ஸ் நாடக கம்பெனியில் இணைந்து நடிப்புத் திறன், இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.
l ‘சினிமா உலகம்’ என்ற பத்திரிகையை நடத்திவந்த பி.எஸ்.செட்டியார், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் துணை நடிகராக இவரை சேர்த்துவிட்டார். ஓய்வு நேரத்தில் இவர் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும், இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று வாழ்த்தினார்கள்.
l பி.எஸ்.செட்டியார் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 1949-ல் இசைமாமணி பட்டம், 1951-ல் சங்கீத வித்வான் பட்டம் பெற்றார். சிறந்த புல்லாங்குழல் கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் பயிற்சி பெற்று இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.
l கச்சேரிகளுக்கு இவரையும் உடன் அழைத்துச் செல்லும் சுவாமிநாத பிள்ளை, இவரை தன் மகன் என்றே மற்றவர்களிடம் அறிமுகம் செய்வாராம். கடும் உழைப்பாளியான சீர்காழி, அயராத சாதகம் மூலம் இசை உலகில் நிலைத்த இடம் பெற்றார். சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.
l 1953-ல் பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் ‘சிரிப்புத்தான் வருதையா’ என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஔவையார் திரைப்படத்துக்காக ‘ஆத்திச்சூடி’ பாடியிருந்தார்.
l ‘பட்டணந்தான் போகலாமடி’, ‘அமுதும் தேனும் எதற்கு’, ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’, ‘கண்ணன் வந்தான்’, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’, ‘தேவன் கோவில் மணியோசை’ போன்ற பாடல்கள் இவருக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுத் தந்தன. ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
l சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்ம உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983-ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.
l இசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்களையே பாடியவர். இலங்கை, லண்டன், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
l 30 ஆண்டுகளுக்கு மேல் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் மாரடைப்பால் (1988) காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக