திங்கள், 1 ஜனவரி, 2018

நடிகர் வி.எஸ்.ராகவன் V. S. Raghavan, பிறந்த தினம் 1,1925 .



நடிகர் வி.எஸ்.ராகவன்  V. S. Raghavan, பிறந்த தினம்  1,1925 .

வி.எஸ்.ராகவன் ( V. S. Raghavan, 1 சனவரி 1925 - 24 சனவரி 2015) பழம்பெரும் தமிழ் நாடக மற்றும் திரைப்பட , தொலைக்காட்சி நடிகர். 1954 ஆம் ஆண்டில் வைரமாலை எனும் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமாகி, 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களையும் இவர் இயக்கி உள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை
தமிழ்நாடு காஞ்சிபுரம் அருகேயுள்ள வெம்பாக்கம் என்ற ஊரில் பிறந்த இராகவன், பி. எஸ். உயர்நிலைப் பள்ளியிலும்,
செங்கல்பட்டு புனித கொலம்பசு பள்ளியிலும் கல்வி கற்று, சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் இரண்டாண்டுகள் கற்றார். கல்லூரிப் படிப்பை முடிக்கும் போது, தந்தை இறந்து விடவே, இராகவன் தாயாருடன்
புரசைவாக்கத்தில் உள்ள சகோதரியுடன் சென்று வசித்து வந்தார்.
நாடகத்துறையில்
வி. எஸ். ராகவன், துவக்கத்தில் கே. பாலசந்தர் இயக்கிய பல மேடை நாடகங்களில் நடித்தார். நகையே உனக்கு நமஸ்காரம் என்ற பெயரில் நடித்த நாடகம் அந்த நாட்களில் மிகவும் பிரபலமானது
குடும்பம்
வி.எஸ். ராகவனுக்கு கே.ஆர்.சீனிவாசன், கே.ஆர்.கிருஷ்ணன் என்ற இரு மகன்கள் உள்ளனர். மனைவி தங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இயக்கிய மற்றும் நடித்த திரைப்படங்களில் சில
சந்திரிகா (1951) - இயக்குனர்
வைரமாலை (1954)
பொம்மை
நெஞ்சில் ஓர் ஆலயம்
கள்வனின் காதலி 1955
காலம் மாறிப்போச்சு (1956 திரைப்படம்) (1956)
சமய சஞ்சீவி (1957) – நடிகர் & இயக்குனர்
சாரங்கதாரா (1958)
மனைவியே மனிதனின் மாணிக்கம் (1959)
காத்திருந்த கண்கள் (1962)
காதலிக்க நேரமில்லை (1964)
கர்ணன் (திரைப்படம்) (1964)
சங்கே முழங்கு
சவாலே சமாளி
வசந்த மாளிகை
பட்டணத்தில் பூதம் (1967)
கல்லும் கனியாகும் (1968)
இரு கோடுகள் (1969)
பாலன் (1970)
உயிர் (1971)
புன்னகை (1971)
குறத்தி மகன் (1972)
உரிமைக்குரல் (1974)
குமாஸ்தாவின் மகள் (1974)
எல்லோரும் நல்லவர்களே (1975)
ஆயிரம் ஜென்மங்கள் (1978)
கல்யாணராமன் (1979)
தம்பிக்கு எந்த ஊரு
குரோதம் (1982)
ருசி (1984)
சுமை தாங்கி
நல்ல தம்பி (1985)
ஸ்ரீ ராகவேந்திரர் (1985)
நானும் ஒரு தொழிலாளி (1986)
உன்னால் முடியும் தம்பி (1988)
அவசர போலீஸ் 100 (திரைப்படம்) (1990)
ஹே ராம் (2000)
பூவெல்லாம் உன் வாசம் (2001)
காமராசர் (திரைப்படம்) (2004)
இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்) (2006) – அரண்மனை சோதிடர்
அறை எண் 305ல் கடவுள் (2008)
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் (2010) (cameo)
மகிழ்ச்சி (2010)
நகரம் மறுபக்கம் (2010)
கலகலப்பு (திரைப்படம்) (2012) -
சகுனி (தமிழ்த் திரைப்படம்) (2012)
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்) (2013)
ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் (2014)
ஆல் இன் ஆல் அழகு ராஜா
நடித்த தொலைக்காட்சித் தொடர்கள்
ரேகா ஐபிஎஸ் {2008 - 2009}
பைரவி (2012)
வள்ளி _ சுவாமி நாதன்.


பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகர் வி.எஸ்.ராகவன் (V.S.Raghavan) பிறந்த தினம் இன்று (ஜனவரி 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கத்தில் (1925) பிறந்தவர். மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு புனித கொலம்பஸ் பள்ளி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பயின்றார். தந்தை மறைவுக்குப் பிறகு, தாயுடன் புரசைவாக்கத்தில் அக்கா வீட்டில் வசித்தார்.


l சிறு வயது முதலே நாடகங்கள் மீது அதிக ஈர்ப்பு கொண்டிருந்தார். காஞ்சிபுரம் பகுதியில் இயங்கிய நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்தார். பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் கொண்டவர். துமிலன் நடத்திய ‘மாலதி’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

l ஓர் அச்சகத்தில் வேலை செய்தபோது, சக ஊழியர்கள் நடத்திய நாடகங்களில் நடித்தார். அப்போதுதான் மாலி, வாடிராஜ், நடராஜ், கே.பாலசந்தர் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து ‘இந்தியன் நேஷனல் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பெயரில் நாடக கம்பெனி தொடங்கினார். சென்னையில் பல இடங்களில் நாடகங்களை இந்த கம்பெனி நடத்தியது.

l கம்பெனி மூடப்பட்ட பிறகு கே.பாலசந்தரின் மேடை நாடகங்களில் நடித்தார். ‘நகையே உனக்கு நமஸ்காரம்’ என்ற நாடகம் மிகவும் பிரபலம். சினிமாவில் நடிப்பதற்கும் தொடர்ந்து முயற்சி செய்தார். இவர் நடித்த ‘வைரமாலை’ என்ற மேடை நாடகம் 1954-ல் திரைப்படமாகத் தயாரானது. நாடகத்தில் ஏற்ற அதே கதாபாத்திரத்தில் திரையிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் இவரது முதல் திரைப்படம்.

l தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்தார். வானொலி நாடகங்களிலும் நடித்தார். குணச்சித்திர வேடங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். ‘சங்கே முழங்கு’, ‘உரிமைக் குரல்’, ‘சவாலே சமாளி’, ‘வசந்த மாளிகை’, ‘சுமை தாங்கி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும் வரை’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

l 30-35 வயது இருக்கும்போது, ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு தந்தையாக பல படங்களில் நடித்துள்ளார். ‘உலக அளவில் தலைசிறந்த நடிகர் சிவாஜி கணேசன்’ என்று அடிக்கடி கூறுவார்.

l நாகேஷ் இவரது நெருங்கிய நண்பர். வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, ‘எனக்கு ஒரு ஸ்ட்ராங் ஃபில்டர் காபி’ என்றவாறே நுழைவாராம். ‘‘அவரைப் போன்ற அபாரமான நடிகர், அற்புதமான மனிதரைக் காண்பது அரிது’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார். நாடக மேடையில் இருந்து என்னை சினிமாவுக்கு கொண்டுவந்தது நாகேஷ்தான் என்றும் சொல்வார்.

l திரைத்துறையில் 60 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். எம்ஜிஆர், சிவாஜி, பின்னர் ரஜினி, கமல் மட்டுமல்லாது, அஜித், விஜய், விமல் என 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

l சாகும் வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பியவர். அவ்வாறே, கடைசிவரை நடித்து, சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்தார். பல தொலைக்காட்சித் தொடர்கள், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

l அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகக்கூடியவர். நினைவாற்றல் மிக்கவர். 1000-க்கும் அதிகமான படங்கள், ஏராளமான நாடகங்கள் என வெற்றிகரமான நடிகராக வலம் வந்து நடிப்புத் துறையில் முத்திரை பதித்த வி.எஸ்.ராகவன் 2015-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி 90-வது வயதில் காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக