ஞாயிறு, 11 டிசம்பர், 2016

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த டிசம்பர் 12 , 1950 .

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த டிசம்பர் 12 , 1950 .

ரஜினிகாந்த் என்று அனைவராலும்
அறியப்படும் சிவாஜி ராவ் கைக்வாட்
(பிறப்பு: டிசம்பர் 12 , 1950 ), மராட்டியில் :
रजनीकांत/शिवाजीराव गायकवाड,
சிவாஜீராவ் காயகவாட்) ஒரு
புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட
நடிகராவார்.  இவருடைய ரசிகர்கள்
இவரை தலைவர் என்றும் மக்கள் அனைவரும்
சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.
ஆசியாவில் நடிகர் ஜாக்கி சான் -னுக்கு
அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம்
வாங்கும் நடிகர் இவர்.
2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய குடிமை
விருதுகளில் இரண்டாவதான பத்ம
விபூசண் விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டார். [3]
தனிப்பட்ட வாழ்க்கை
இளமை
ரசினிகாந்த், டிசம்பர் 12 1950 அன்று
இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோசி
ராவ் காயக்வாடுக்கும்
ரமாபாய்க்கும் நான்காவது
குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு ஐந்து
வயதான போது தன் தாயை இழந்தார்.
பெங்களூரில் உள்ள ஆசாரிய
பாடசாலை, மற்றும் விவேகானந்த
பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி
கற்றார். படித்து முடித்தவுடன்
பெங்களூரில் பேருந்து நடத்துனராக
பணியாற்றினார். இந்த காலகட்டத்தில்
பல மேடை நாடகங்களில் பங்கு
கொண்ட ரசினிகாந்தின் மனதில்
நடிக்கும் ஆவல் வளர்ந்தது.
குடும்பம்
16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை
மணந்தார். ஐசுவர்யா ,
செளந்தர்யா ஆகியோர் இரு மகள்கள்
ஆவார். இவருடைய மூத்த மகள்
ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ்
திரைப்பட நடிகரான தனுசை மணந்தார்.
செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம்
ஆண்டு அன்று சௌந்தர்யா, அஸ்வின்
ராம்குமார் என்ற தொழிலதிபரை
மணந்தார்.
திரைப்படத்துறை
திரைப்படங்களில்
நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த
ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன்
சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து
பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே.
பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ
ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய
வேடத்தில் நடித்தார். ஒரு
பெண்ணாசை பிடித்தவராக அவர்
நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு
சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.
அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற
படங்களில் வில்லனாக நடித்தார்.
பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி , முள்ளும்
மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற
திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத்
தொடங்கினார். பில்லா , போக்கிரி
ராசா, முரட்டுக் காளை போன்ற
திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி
நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு
திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல
நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த்
நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த
திரைப்படங்களில் மிகவும்
வித்தியாசமானது அவருடைய நூறாவது
படமான ஸ்ரீ ராகவேந்திரா . இப்படம்
இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர
சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை
பற்றியது.
1980களில் ரஜினிகாந்த் நடித்து
வெளிவந்த வேலைக்காரன் , மனிதன் ,
தர்மத்தின் தலைவன் போன்றவை
பொழுதுபோக்கு அம்சங்கள்
நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர்
நாயகனாக நடித்த அண்ணாமலை ,
பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள்
மாபெரும் வெற்றி
பெற்றன. 2002 ஆம் ஆண்டு
வெளிவந்த பாபா (திரைப்படம்) சில
இடங்களில் வெற்றி பெறவில்லை.
எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு
வெளிவந்த சந்திரமுகிக்கும் 2007 ஆம்
ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும்
நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010ஆம் ஆண்டு
வெளியாகிய எந்திரன் படம்
பெரு வெற்றியைப் பெற்றது.
ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும்,
நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத்
திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை ரசித்துப்
பார்ப்பதாக இருக்கும். தமிழ்
மொழியிலும், தெலுங்கு, இந்தி ,
கன்னடம் , மலையாளம் , வங்காள
மொழி , ஆங்கிலம் ஆகிய
மொழிகளிலும் 160 திரைப்படங்களில்
ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
ரசிகர்களிடம் வரவேற்பு
ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு
தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு
கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள்
தயாரிப்பாளர்களுக்கும்,
வெளியீட்டாளர்களுக்கும் நல்ல
லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது.
ரசினிகாந்துக்கு தமிழகத்தில்
பல்லாயிரக்கணக்கான ரசிகர்
மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு
ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
அரசியல்
தொடர்பு
1990களில் ரசினிகாந்து நடித்த சில
திரைப்படங்களின் வசனங்களிலும்
பாடல்களிலும் அரசியல் நெடி சற்று
இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத்
தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக
இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக
இவர் தொலைக்காட்சியிலும்
பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி
தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக
பரவலாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த
தேர்தல்களில், ரசினிகாந்து எக்கட்சிக்கும்
வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க
வேண்டாம் என்றோ
வெளிப்படையாகவும்
திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ
பொது மக்களையோ
கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய
நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க
தலைமையிலான கூட்டணிக்கு தான்
வாக்களித்ததாக வெளிப்படையாக
அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில்
ஈடுபடப் போவதாக சில வருடங்களாக
வதந்திகள் சுற்றினாலும், ரசினிகாந்து
அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார்.
ரசினி 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை
சந்தித்து பேசினார். ரசிகர்களின்
கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின்
அரசியல் வருகை குறித்து ஆலோசனை
செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு
பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார்.
லிங்கா பட இசை வெளியீட்டின் போது
"அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால்
வருவேன்" எனக் கூறினார்
புத்தகங்கள்
ரஜினியின் பஞ்ச் தந்திரம் என்ற தலைப்பில்
இவரது படங்களில் உள்ள 30 முத்திரை
வசனங்கள் மூலம் மேலாண்மை
தத்துவங்களை எடுத்துக்கூறும் புத்தகம்.
இப்புத்தகம் ஆங்கிலத்திலும்
மொழிபெயர்ப்பு
செய்யப்பட்டது.
பாட்சாவும் நானும் எனும் நூலில்
ரஜினியை சந்தித்தது முதல் ரஜினியுடனான
சம்பவங்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா
எழுதியுள்ளார்.
ரஜினி இதில் அபூர்வராகங்கள் முதல்
எந்திரன் வரையான ரஜினியின் திரைப்பட
விமர்சனங்கள் பைம்பொழில்
மீரான் என்பவரால்
எழுதப்பெற்றுள்ளன
நடித்த திரைப்படங்கள்
எண் திரைப்படத்தின்
பெயர் ம
1 அபூர்வ ராகங்கள் த
2 கதா சங்கமா கன்
3 அந்துலேனி கதா த
4 மூன்று முடிச்சு த
5 பாலு ஜீனு கன்
6 அவர்கள் த
7 கவிக்குயில் த
8 ரகுபதி ராகவன்
ராஜாராம் த
9 சிலாக்கம்மா
செப்பண்டி த
10 புவனா ஒரு கேள்விக்குறி த
11 ஒண்டு ப்ரேமடா கதே கன்
12 16 வயதினிலே த
13 சகோதர சவால் கன்
14 ஆடு புலி ஆட்டம் த
15 காயத்ரி த
16 குங்கும ரக்ஷே கன்
17 ஆறு புஷ்பங்கள் த
18 தொலிரேயி
காலிசண்டி த
19 அம்மே கதா த
20 கலாட்டா சம்சாரா கன்
21 சங்கர் சலீம் சைமன் த
22 கில்லாடு கிட்டு கன்
23 அண்ணாடாமுல
சவால் த
24 ஆயிரம்
ஜென்மங்கள் த
25 மாது தப்பட மகா கன்
26 மாங்குடி மைனர் த
27 பைரவி த
28 இளமை
ஊஞ்சலாடுகிறது த
29 சதுரங்கம் த
30 வணக்கத்துக்குரிய
காதலியே த
31 வயசு பிலிசிண்டி த
32 முள்ளும் மலரும் த
33 இறைவன்
கொடுத்த வரம் த
34 தப்பிடா தாலா கன்
35 தப்பு தாளங்கள் த
36 அவள் அப்படித்தான் த
37 தாய் மீது சத்தியம் த
பாவத்தின் சம்பளம் த
38 என் கேள்விக்கு என்ன
பதில் த
39 ஜஸ்டிஸ் கோபிநாத் த
40 ப்ரியா த
41 ப்ரியா கன்
42 குப்பத்து ராஜா த
43 இத்தரு ஆசத்யுலே த
44 அலாவுதீனும்
அற்புதவிளக்கும் மலைய
45 நினைத்தாலே இனிக்கும் த
தாயில்லாமல்
நானில்லை த
46 அந்தமைனா அனுபவம் த
47 அலாவுதீனும்
அற்புதவிளக்கும் த
48 தர்ம யுத்தம் த
49 நான் வாழவைப்பேன் த
50 டைகர் த
51 ஆறிலிருந்து அறுபது வரை த
52 அன்னை ஓர் ஆலயம் த
53 அம்மா எவரிகைனா
அம்மா த
54 பில்லா த
நட்சத்திரம் த
55 ராம் ராபர்ட் ரஹிம் த
56 அன்புக்கு நான் அடிமை த
57 காளி த
58 மயாதரி கிரிஷ்னுடு த
59 நான் போட்ட சவால் த
60 ஜானி த
61 காளி த
62 எல்லாம் உன் கைராசி த
63 பொல்லாதவன் த
64 முரட்டுக்காளை த
65 தீ த
66 கழுகு த
67 தில்லுமுல்லு த
68 கர்ஜனை த
69 கர்ஜனம் மலைய
70 நெற்றிக்கண் த
71 கர்ஜனே கன்
72 ராணுவ வீரன் த
73 போக்கிரி ராஜா த
74 தனிக்காட்டு ராஜா த
75 ரங்கா த
76 புதுக்கவிதை த
நன்றி மீண்டும் வருக த
77 எங்கேயோ கேட்ட குரல் த
78 மூன்று முகம் த
79 பாயும் புலி த
உருவங்கள் மாறலாம் த
80 துடிக்கும் கரங்கள் த
81 அந்த கனூன் இ
82 தாய் வீடு த
83 சிவப்பு சூரியன் த
84 ஜீத் கமாரி இ
85 அடுத்த வாரிசு த
86 தங்க மகன் த
87 மெரி அடாலத் இ
88 நான் மகான் அல்ல த
89 தம்பிக்கு எந்த ஊரு த
90 கை கொடுக்கும் கை த
91 இதே நாசாவால் த
92 அன்புள்ள ரஜினிகாந்த் த
93 கங்க்வா இ
94 நல்லவனுக்கு
நல்லவன் த
95 ஜான் ஜானி
ஜனார்தன் இ
ஞாயம் மீரே சேப்பலி த
96 நான் சிவப்பு மனிதன் த
97 மகாகுரு இ
98 உன் கண்ணில் நீர்
வழிந்தால் த
99 வஃபாதார் இ
100 ஸ்ரீ ராகவேந்திரா த
101 பெவாஃபய் இ
102 படிக்காதவன் த
103 மிஸ்டர் பாரத் த
104 நான் அடிமை இல்லை த
105 ஜீவனா போராட்டம் த
106 விடுதலை த
107 பகவான் தாதா இ
கோடை மழை த
108 அஸ்லி நக்லி இ
109 தோஷ்தி துஷ்மன் இ
110 மாவீரன் த
தகு ஹசின இ
111 வேலைக்காரன் த
112 இன்சப் கான் கரேகா இ
113 ஊர்க்காவலன் த
114 மனிதன் த
மனதில் உறுதி வேண்டும் த
115 உத்தர் டக்சன் இ
116 தமச்சா இ
117 குரு சிஷ்யன் த
118 தர்மத்தின் தலைவன் த
119 ப்ளட்ஸ்டோன் ஆங்
120 கொடி பறக்குது த
பிகாரி குன்டா இ
121 ராஜாதி ராஜா த
122 சிவா த
123 ராஜா சின்ன ரோஜா த
124 மாப்பிள்ளை த
125 பரஷ்டச்சார் இ
126 சால்பாஷ் இ
127 பணக்காரன் த
128 அதிசய பிறவி த
129 தர்மதுரை த
130 ஹம் இ
131 ஃபரிஷ்டாய் இ
132 கூன் கா கர்ஷ் இ
133 ஃபூல் பனே அங்காரய் இ
134 நாட்டுக்கு ஒரு நல்லவன் த
135 தளபதி த
136 மன்னன் த
137 தியாகி இ
138 அண்ணாமலை த
139 பாண்டியன் த
140 இன்சனியாத் கே தேவ்தா இ
141 எஜமான் த
142 உழைப்பாளி த
143 வள்ளி த
144 வீரா த
145 பாட்ஷா த
146 பெத்தராயுடு த
147 அடாங் கி அடாங் இ
148 முத்து த
149 பாக்ய தேபதா பெ
150 அருணாசலம் த
151 படையப்பா த
152 புலாண்டி இ
153 பாபா த
154 சந்திரமுகி த
155 சிவாஜி த
156 குசேலன் த
157 எந்திரன் த
158 கோச்சடையான் த
159 லிங்கா த
160 கபாலி த
161 எந்திரன் 2 தமிழ் ,
விருதுகள்
இந்திய நடுவண் அரசின்
விருதுகள்
பத்ம பூஷன் விருது, 2000
பத்ம விபூசன் விருது, 2016
தமிழக அரசின் விருதுகள்
1984 ஆம் ஆண்டு கலைமாமணி விருது
1989 ஆம் ஆண்டு எம்.ஜி. ஆர் விருது
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
1978 முள்ளும்
மலரும் காளி
1982 மூன்று முகம் அலெக்ஸ்
பாண்டியன்,
அருண்,
ஜான்
1984 நல்லவனுக்கு
நல்லவன் மாணிக்கம்
1994 முத்து முத்து,
எஜமான்
1999 படையப்பா ஆறுபடையப்பன்
2005 சந்திரமுகி
டாக்டர்.
சரவணன் ,
கிங் வேட்டையன்
2007 சிவாஜி சிவாஜி
ஆறுமுகம்
2010 எந்திரன் டாக்டர்.
வசீகரன்,
சிட்டி
பிலிம்பேர் விருதுகள்
வருடம் படங்கள் வகை ப
1977 புவனா ஒரு
கேள்விக்குறி
சிறந்த
திரைப்படம் வ
1978 முள்ளும் மலரும் சிறந்த
திரைப்படம் வ
1979 ஆறிலிருந்து
அறுபது வரை
சிறந்த
திரைப்படம் வ
1982 எங்கேயோ கேட்ட
குரல்
சிறந்த
திரைப்படம் வ
1984 நல்லவனுக்கு
நல்லவன்
சிறந்த
நடிகர் வ
1985 ஸ்ரீ
ராகவேந்திரா
சிறந்த
திரைப்படம் வ
1991 தளபதி சிறந்த
நடிகர் வ
1992 அண்ணாமலை சிறந்த
நடிகர் வ
1993 வள்ளி சிறந்த
கதாசிரியர் வ
1995 பாட்ஷா ,
முத்து
சிறந்த
நடிகர் வ

**********************************
தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்”
என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவரகள்,
இந்திய திரைப்படத் துறையில் ஒரு
புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ்,
தெலுங்கு, இந்தி, கன்னடம்,
மலையாளம், வங்காளம் மற்றும்
ஆங்கிலம் போன்ற மொழிகளில்
சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்
நடித்துள்ளார். முள்ளும் மலரும்’,
‘ஆறிலிருந்து அறுபது வரை’ ‘பில்லா’,
‘போக்கிரிராஜா’, ‘முரட்டுக்காளை’, ‘தில்லு
முல்லு’ ‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’,
‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’,
‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’,
‘நல்லவனுக்கு நல்லவன்’ ‘நான் சிவப்பு
மனிதன்’, ‘ஸ்ரீராகவேந்திரா’
படிக்காதவன்’, ‘மாவீரன்’,
‘ஊர்காவலன்’, ‘மனிதன்’, ‘குரு சிஷ்யன்’,
‘மாப்பிள்ளை’ ‘தளபதி’, ‘மன்னன்’,
‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’,
‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’,
‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’,
‘படையப்பா’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’,
‘எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின்
நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத
திரைபடங்கலாகும். இந்தியாவில்
மட்டுமல்லாமல், ஜப்பான் போன்ற
வெளிநாடுகளிலும், தனக்கென
ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகன்.
ஒரு கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையைத்
தொடங்கி, பிறகு திரைப்படத்துறையில்
மாபெரும் கதாநாயகனாக
சாதனைப் படைத்த ரஜினிகாந்தின்
வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை
விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 12, 1949
இடம்: கர்நாடக மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்,
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘சிவாஜி ராவ் கைக்வாட்’ என்ற
இயற்பெயர் கொண்ட
ரஜினிகாந்த் அவர்கள், 1949 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் 12 ஆம் நாள்
இந்தியாவின் கர்நாடக
மாநிலத்திலுள்ள பெங்களூரில் ராமோசி
ராவ் காயக்வடுக்கும், ரமாபாயிக்கும்
நான்காவது மகனாக ஒரு “மராத்தி”
குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு இரண்டு
சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும்
உள்ளனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய ஐந்தாவது வயதில், தாயை
இழந்த ரஜினிகாந்த் அவர்கள்,
பெங்களூரில் உள்ள “ஆச்சாரியா
பாடசாலை” மற்றும் “விவேகானந்த
பாலக சங்கத்தில்” பள்ளிப்படிப்பை
முடித்தார். சிறு வயதிலேயே பயம்
இல்லாதவாராகவும், துணிச்சல்
மிக்கவராகவும் இருந்தார். பள்ளிப்படிப்பை
முடித்தப் பிறகு, ஒரு நடத்துனராக தன்னுடைய
வாழ்க்கையை தொடங்கிய அவர், பல
மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
காலப்போக்கில், நடிப்பின் மீது ஏற்பட்ட
ஆவலால், நடிகராகும் நோக்கத்தோடு
சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
திரைப்படத்துறையில் நடிகனாக
ரஜினிகாந்த்
ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த
ரஜினிகாந்த் அவர்கள் ஒரு நண்பனின்
உதவியால் “சென்னை திரைப்படக்
கல்லூரியில்” சேர்ந்தார். 1975 ஆம் ஆண்டு,
கே. பாலச்சந்தர் இயக்கத்தில்
வெளிவந்த “அபூர்வ ராகங்கள்”
என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில்
திரையுலக வாழ்க்கையை தொடங்கிய
அவர், 1976ல் “கதா சங்கமா” என்ற
கன்னட திரைப்படத்தில் நடித்தார். பிறகு, அதே
ஆண்டில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில்
வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம்
அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம்
காட்டியது. இந்த திரைப்படத்தில் ஒரு
பெண்ணாசை பிடித்த நடிகராக
சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறமையை
வெளிப்படுத்தியிருந்தார்.
சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாய்க்கு
கொண்டுவரும் ஸ்டைலினை, இந்த
படத்தில் அற்புதமாக செய்திருப்பார்.
அதனை தொடர்ந்து
‘அவர்கள்’ (1977), ‘16 வயதினிலே’ (1977),
‘காயத்ரி’ போன்ற திரைப்படங்களில்
வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.
கதாநாயகனாக ரஜினிகாந்தின்
வெற்றிப் பயணம்
1977 ஆம் ஆண்டு நடித்த ‘புவனா ஒரு
கேள்விக்குறி’ திரைப்படம் ரஜினிகாந்த்
அவர்களுக்கு பெரும் திருப்பத்தை
ஏற்படுத்திய படமாக இருந்தது. இந்த
வெற்றியைத் தொடர்ந்து,
‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’
போன்ற படங்களில் கதாநாயகனாக
நடித்து மிகப்பெரிய வெற்றியை
அவர் பெற்றார்.
‘பில்லா’, ‘போக்கிரிராஜா’, ‘தனிக்காட்டு
ராஜா’, ‘முரட்டுக்காளை’, போன்ற
திரைப்படங்களில் ஒரு அதிரடி நாயகனாக
நடித்து புகழ் பெற்றார். 1981 ஆம்
ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில்
வெளிவந்த “தில்லு முல்லு”
திரைப்படத்தின் மூலம், தன்னை ஒரு சிறந்த
நகைச்சுவை நடிகராக
வெளிப்படுத்தியிருப்பார்.
‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’, ‘மிஸ்டர்
பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘எங்கேயோ
கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு
நல்லவன்’ மற்றும் ‘நான் சிவப்பு மனிதன்’
போன்ற திரைப்படங்கள் இவருக்கு மேலும் பல
வெற்றிகளை பெற்றுத்தந்தது.
ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில், 1985
ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமன்
இயக்கத்தில் வெளிவந்த அவருடைய 100
வது படமான “ஸ்ரீராகவேந்திரா”
திரைப்படம் அவருக்கு வித்தியாசமான
நடிப்பு அனுபவத்தைப் பெற்றுத்தந்தது
எனலாம். இப்படத்தில், இந்து சமயப்
புனிதரான “ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்”
வாழ்க்கையை, ஒரு நடிகராக வாழ்ந்து
காட்டியிருப்பார். இதனைத்
தொடர்ந்து, ‘படிக்காதவன்’,
‘மாவீரன்’, ‘ஊர்காவலன்’, ‘மனிதன்’,
‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’,
‘ராஜாதி ராஜா’, ‘ராஜா சின்ன
ரோஜா’, மற்றும் ‘மாப்பிள்ளை’ போன்ற
திரைப்படங்கள் பொழுதுபோக்கு
அம்சங்கள் நிறைந்த படங்களாக இருந்தது.
1990 ஆம் ஆண்டுகளில் நடித்த
‘பணக்காரன்’, ‘அதிசயப்பிறவி’, ‘தர்மதுரை’,
‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’,
‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’,
‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’,
‘அருணாசலம்’, ‘படையப்பா போன்ற
திரைப்படங்கள் மாபெரும் வெற்றி
பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல்,
இவருக்கு இந்தியாவில் ‘சூப்பர்ஸ்டார்’
என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத்தந்தது
எனலாம். 1995 ஆம் ஆண்டு
வெளிவந்த “முத்து” திரைப்படம்,
இந்தியாவை தாண்டி
வெளிநாட்டிலும் முத்திரை பதித்தது.
குறிப்பாக ஜப்பானிய மொழியில்
மொழிமாற்றம் செய்யப்பட்டு,
வெளியிடப்பட்ட இத்திரைப்படம்
ஜப்பானிலும் பெரும் வெற்றியைப்
பெற்றது மட்டுமல்லாமல்
அம்மொழியில்
மொழிமாற்றம் செய்யப்பட்ட
முதல் இந்திய திரைப்படம் என்ற தகுதியையும்
பெற்றது.
மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட
இடைவேளைக்குப் பிறகு, 2002 ஆம் ஆண்டு சுரேஷ்
கிருஷ்ணா இயக்கத்திலும்,
ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளிவந்த
“பாபா” திரைப்படம் எதிர்பார்த்த அளவில்
வெற்றியைத் தரவில்லை என்றாலும்,
2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில்
வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம்
மற்றும் 2007 ஆம் ஆண்டு ஷங்கர்
இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி”
திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது.
மீண்டும் ஷங்கருடன் இணைந்து, அதிக
பொருட்செலவில் எடுக்கப்பட்ட
“எந்திரன்’ திரைப்படம் 2010 ஆம் ஆண்டு
வெளியிடப்பட்டு, பல சாதனைகளை
படைத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா
வரலாற்றில் புதிய திருப்பத்தையும்
ஏற்படுத்தியது.
ரஜினிகாந்தின் பிறமொழி
திரைப்படங்கள்
ரஜினிகாந்த் அவர்கள்,
தமிழ்மொழி திரைப்படங்கள்
மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம்,
தெலுங்கு, இந்தி, பெங்காலி
மற்றும் ஆங்கிலம் போன்ற
மொழிகளில் சுமார் 50 க்கும்
மேற்பட்ட திரைப்படங்களில்
நடித்துள்ளார். ‘கதா
சங்கமா’ (1976), ‘பாலு ஜேனு’ (1976),
‘ஒண்டு பிரேமதா கதா’ (1977), ‘சகோதர
சவல்’ (1977), ‘குங்கும ரக்சே’ (1977),
‘கலாட்டா சம்சாரா’ (1977),
‘கில்லாட் கிட்டு’ (1978), ‘மாது
தப்படமகா’ (1978), ‘தப்பிட தலா’ (1978),
‘ப்ரியா’ (1979), ‘கர்ஜனே’ (1981) போன்ற
கன்னட மொழித் திரைப்படங்களிலும்,
‘அந்துலேனி கதா’ (1976), ‘சிலக்கம்மா
செப்பண்டி’ (1977), ‘தொலிரேயி
கடிட்சண்டி’ ‘(1977), ‘ஆமே கதா’ (1977),
‘அன்னடம்முளு சவால்’ (1978), ‘வயசு
பிலிசிண்டி’(1978), ‘இதாரு
அசாத்யுலே’ (1979), ‘அந்தமைனா
அனுபவம்’ (1979), ‘டைகர்’ (1979), ‘அம்மா
எவரிக்கைன அம்மா’ (1979), ‘ராம்
ராபர்ட் ரஹீம்’ (1980), ‘மாயதாரி
கிருஷ்ணடு’ (1980), ‘காளி’ (1980), ‘ஏதே
நாசவல்’ (1984), ‘ஜீவன
போராட்டம்’ (1986),
‘பெத்தராயிடு’ (1995) போன்ற
தெலுங்கு திரைப்படங்களிலும்,
‘அலாவுதினும் அற்புத விளக்கும்’ (1979),
‘கர்ஜனம்’ (1981) போன்ற மலையாள
மொழித் திரைப்படங்களிலும்,
‘அந்தா கானூன்’ (1983), ‘ஜீத் ஹமாரி
(1983), மேரி அதாலத்(1984), கங்குவா
(1984), ஜான் ஜானி ஜனார்தன்(1984),
மஹா குரு’ (1985), ‘வஃபாதர்’ (1985),
‘பேவஃபாய்’ (1985), ‘பவான்
தாதா’ (1986), ‘அசலி நகலி’ (1986),
‘தோஸ்தி துஸ்மன்’ (1986), ‘இன்சாப் கோன்
கரேகா’ (1987), ‘உத்தர் தஷின்’ (1987),
‘தமாசா’ (1988), ‘பிரஸ்டார்ச்சர்’ (1989),
‘சால்பாஸ்’ (1989), ‘ஹம்’ (1991),
‘ஃபரிஸ்தே’ (1991), ‘கூன் கா கர்ஜ்’ (1991),
‘பூல் பனே அங்காரே’ ‘(1991),
‘தியாகி’ (1992), ‘இன்சானியத் கே
தேவதா’ (1993), ‘ஆதங்க் ஹீ
ஆதங்க்’ (1995) போன்ற இந்தி
மொழித் திரைப்படங்களிலும்,
‘பாக்கியதேவ்தா’ என்ற பெங்காலி
மொழித் திரைப்படத்திலும் மற்றும்
‘பிளட் ஸ்டோன்’ (1988) என்ற ஆங்கில
திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அரசியல் தொடர்பு
1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை
தேர்தலின் போது ஆளுங்கட்சியாக இருந்த
அ.இ.ஆ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர்
தொலைக்காட்சிகளிலும்
பத்திரிக்கைகளிலும் கருத்து கூறியதால்
அக்கட்சி தோற்றதற்கு முக்கிய காரணமாக
கூறப்படுகிறது. அதன் பிறகு, ரஜினிகாந்த்
அரசியலில் ஈடுபடப்போவதாக பல கேள்விகள்
எழுப்பபட்டாலும், இன்றுவரை அவரிடம்
மௌனம் மட்டுமே பதிலாக இருந்து வருகிறது.
ரஜினியின் இமயமலைப் பயணம்
ரஜினிகாந்த் அவர்கள், ஒவ்வொரு
படம் முடித்து அந்த படம் திரைக்கு வந்ததும்,
இமயமலைக்குச் செல்வதையும், அங்குள்ள
ஆசிரமத்தில் தங்கி தியானம்
செய்வதையும் வழக்கமாக
கொண்டுள்ளார். சினிமா,
பணம், புகழ் என பல சிகரத்தை
தொட்டுப்பார்த்தாலும்,
அவருக்கான தேடல் ‘இமயமலை பயணம்’
எனக் கூறப்படுகிறது.
ரஜினியின் பஞ்ச் டயலாக்ஸ்
தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல்,
உலக திரைப்படத்துறையில் பஞ்ச் டயலாக்ஸ்
என்றால், அனைவரின் மனத்திலும்
நினைவுக்கு வருபவர், ரஜினிகாந்த் மட்டுமே.
ஒவ்வொரு திரைப்படத்திலும்
தன்னுடைய ஸ்டைலான நடிப்பிலும், பஞ்ச்
டயலாக்குகள் மூலமும் ரசிகர்களை
கவர்ந்துள்ளார் என்று கூறினால் அது
மிகையாகாது. அவர் வெளிபடுத்திய
ஒவ்வொரு டயலாக்கும் இன்றும்
மக்கள் மனதில் நீங்காமல் இடம்
பெற்றுள்ளது.
16 வயதினிலே திரைப்படத்தில், “இது
எப்படி இருக்கு?”
“மூன்று முகம்” திரைப்படத்தில்,
“வத்திக்குச்சிக்கு இரண்டு பக்கம்
உரசினாதான் தீ பிடிக்கும்.
ஆனா, இந்த அலெக்ஸ்
பாண்டியனுக்கு எந்த பக்கம்
உரசினாலும் தீப்பிடிக்கும்”
“முத்து” திரைப்படத்தில், “எப்ப வருவேன்?
எப்படி வருவேன்னு யாருக்கும்
தெரியாது, ஆனா
வரவேண்டிய நேரத்துல கரக்டா
வருவேன்.”    அண்ணாமலை
திரைப்படத்தில், “கஷ்டப் படாம
எதுவும் கிடைக்காது, கஷ்டபடாம
கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது”
மற்றும் “சொல்றதை தான்
செய்வேன், செய்றதைதான்
சொல்லுவேன்”
“பாட்ஷா” திரைப்படத்தில் “நான்
ஒரு தடவை சொன்னா, நூறு
தடவை சொன்ன மாதிரி”
“பாபா” திரைப்படத்தில் “நா
லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா
வருவேன்” மற்றும் “அசந்தா
அடிக்கிறது உங்க ஸ்டைல், அசராம
அடிக்கிறது என் ஸ்டைல்”
“படையப்பா” திரைப்படத்தில், “என் வழி
தனி வழி” மற்றும் “அதிகமா
கோபப்படற பொம்பளையும்,
அதிகமா ஆசப்படற ஆம்பளையும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே
இல்ல”
“சிவாஜி” திரைப்படத்தில், “பேரை
கேட்டாலே சும்மா அதிருதுல்ல”
மற்றும் “பண்ணிங்க தான்
கூட்டமா வரும், சிங்கம்
சிங்கலாதான் வரும்”
குடும்ப வாழ்க்கை
“தில்லு முல்லு” திரைப்படத்தின் படப்பிடிப்பு
நடைபெற்றுக்
கொண்டிருந்தபொழுது,
லதா ரங்காச்சாரியை முதன் முதலாக
சந்தித்தார். சென்னையிலுள்ள
“எத்திராஜ் கல்லூரியில்” படித்துக்
கொண்டிருந்தபொழுது,
ரஜினியை பேட்டி எடுக்க லதா அவர்கள்
சென்றிருந்தார். அந்த பேட்டியின்போதே
“தன்னை மணக்க விருப்பமா?” என்று
ரஜினிகாந்த் கேட்க, “வெட்கத்தோடு
பெற்றோரிடம் கேளுங்கள்!” என்று லதா
சொல்லிவிட்டார். பிறகு, ஒய்.ஜி
மகேந்திரனின் உதவியுடன் (லதாவின்
சகோதரி சுதாவை இவர் மணந்துள்ளார்)
லதாவின் பெற்றோரிடம் சம்மதம்
பெற்ற அவர்கள், 1981 ஆம் ஆண்டு
திருமணம்
செய்துகொண்டார்கள்.
இவருக்கு ஐசுவர்யா மற்றும் சௌந்தர்யா
என்ற இருமகள்கள் உள்ளனர்.
விருதுகள்
1978 ஆம் ஆண்டு “முள்ளும் மலரும்”
திரைப்படத்திற்காக “தமிழக அரசு
திரைப்பட விருது” வழங்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டு “ஆறிலிருந்து
அறுபது வரை” திரைப்படத்திற்காக
“தேவர் விருது” வழங்கப்பட்டது.
1984 ஆம் ஆண்டு “நல்லவனுக்கு
நல்லவன்” திரைப்படத்திற்காக
“ஃபிலிம்பேர் விருது” வழங்கப்பட்டது.
1985 ஆம் ஆண்டு தமிழக அரசின்
“கலைமாமணி விருது”
வழங்கப்பட்டது.
1989 ஆம் ஆண்டு “எம்.ஜி.ஆர் விருது”
வழங்கப்பட்டது.
1992 ஆம் ஆண்டு “அண்ணாமலை”
திரைப்படத்திற்காக “அம்பிகா விருது”
வழங்கப்பட்டது.
“16 வயதினிலே” மற்றும் “முள்ளும்
மலரும்” திரைப்படத்திற்காக “அரிமா
சங்கம் விருது” வழங்கப்பட்டது.
“நல்லவனுக்கு நல்லவன்”, “ஸ்ரீ
ராகவேந்தரா”, “பிளட் ஸ்டோன்”,
“தளபதி”, “அண்ணாமலை”, “வள்ளி”,
“பாட்ஷா”, “முத்து” போன்ற
திரைப்படங்களுக்காக சினிமா
எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்பட்டது.
“முள்ளும் மலரும்”, “மூன்று முகம்”,
“முத்து”, “படையப்பா”, “சந்திரமுகி”,
“சிவாஜி” போன்ற திரைப்படத்திற்காக
‘தமிழ்நாடு மாநில திரைப்பட
விருதுகள்’ வழங்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு இந்தியாவின்
உயரிய விருதுகளில் ஒன்றான
“பத்ம பூஷன்” விருது வழங்கப்பட்டது.
தனக்கென ஒரு பாதையில் ஸ்டைலான
நடிப்பில் அசைக்கமுடியாத ராஜாவாக
நடைபோட்டு வரும் ரஜினிகாந்த் அவர்கள்,
திரையுலகில் மட்டும் ‘சூப்பர்ஸ்டார்’ என
இல்லாமல், நிஜ வாழ்க்கையிலும்
சூப்பர்ஸ்டாராக வாழ்ந்து வருகிறார்.
பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும்
நிறைவைப் பெற்றுவிட்டாலும், இன்று வரை
அவர் சாதாரண மனிதராக ஒரு
எளிமையான வாழ்க்கையயை மட்டுமே வாழ
விரும்புகிறார். தன்னம்பிக்கையும், சாதிக்க
வேண்டும் என்ற விடாமுயற்சியையும்
கொண்டு கடுமையாக உழைத்தால்,
வாழ்கையில் முன்னேறலாம் என்ற
பாடத்தை கற்றுத்தந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக