வெள்ளி, 16 மார்ச், 2018

இயக்குநர் கே. சங்கர் பிறந்த தினம் மார்ச் 17


இயக்குநர் கே. சங்கர் பிறந்த தினம் மார்ச் 17

கே. சங்கர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர் , திரைக்கதை ஆசிரியர் மற்றும்
திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று மலபாரில் (தற்போதைய கேரளம் ) பிறந்த இவர் 80க்கும் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

திரை வாழ்க்கை
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான
ஏவிஎம் தயாரிப்பகத்தில்
படத்தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் டாக்டர் என்னும் சிங்கள மொழித் திரைப்படமாகும். [2] இவர், எம். ஜி. இராமச்சந்திரன் நடித்த குடியிருந்த கோயில், அடிமைப் பெண் , என். டி. ராமராவ் நடித்த பூகைலாஷ் ,
ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக தென்னிந்தியாவின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.
பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் தாய் மூகாம்பிகை , வருவான் வடிவேலன் உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார். இவர்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம்
தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப் பெற்றுள்ளார்.

திரைப்பட விபரம்

இது முழுமையான பட்டியல் அல்ல.
ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள் இயக்கம் படத்தொகுப்பு
1953 லட்கி இந்தி
1954 சங்கம் இந்தி
1954 பெண் தமிழ்
1954
சிறீ காளகசுதீசுவரா மகாத்யம்
தெலுங்கு
1956 நாக தேவதை தமிழ்
1958 பூகைலாஷ் தெலுங்கு
பக்த ராவணா என
தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
1958 பூகைலாஷ் கன்னடம்
1959 சிவகங்கை சீமை தமிழ்
1960 கவலை இல்லாத மனிதன் தமிழ்
1960 கைராசி தமிழ்
1961 அரப்பவன் மலையாளம்
1962 சூலா இந்தி
1962 பாத காணிக்கை தமிழ்
1962 ஆலயமணி தமிழ்
1962 ஆடிப்பெருக்கு தமிழ்
1963 ஏழை பங்காளன் தமிழ்
1963 பணத்தோட்டம் தமிழ்
1963 பரோசா இந்தி
1963 இது சத்தியம் தமிழ்
1964 ராஜ்குமார் இந்தி
1964 ஆண்டவன் கட்டளை தமிழ்
1964 வீரக்கனல் தமிழ்
1965 பஞ்சவர்ணக் கிளி தமிழ்
1965 கலங்கரை விளக்கம் தமிழ்
1965 அன்புக்கரங்கள் தமிழ்
1966 சந்திரோதயம் தமிழ்
1966 கௌரி கல்யாணம் தமிழ்
1968 குடியிருந்த கோயில் தமிழ்
மறைவு
தனது மனைவி மற்றும் 8 குழந்தைகளுடன் வசித்து வந்த சங்கர், மாரடைப்பின் காரணமாக 2006 மார்ச்சு 5 அன்று இரவு 7 மணியளவில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.


கே.சங்கர் – பழம்பெரும் இயக்குநர்
கே.சங்கரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு. தந்தை கண்ணன், தாயார் ருக்மணி அம்மாள். சங்கருக்கு இரண்டு வயது ஆனபோது, அவரது குடும்பத்தினர் கோவைக்கு வந்தனர்.
சினிமா ஸ்டூடியோவில் எடிட்டிங் உதவியாளராகச் சேர்ந்த கே.சங்கர், திறமையினாலும், கடும் உழைப்பினாலும் டைரக்டராக உயர்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகியோரின் புகழ் பெற்ற படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
கோவையில் படிப்பைத் தொடங்கிய சங்கர் 7-ம் வகுப்பு வரை படித்தார். அந்த சமயத்தில் அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
1939-ம் ஆண்டு கோவை சென்டிரல் ஸ்டூடியோவில் எடிட்டராக இருந்த சூரியாவிடம், எடிட்டிங் உதவியாளராக சேர்ந்தார். நெகட்டிவ்களை சுத்தப்படுத்துவது அவர் வேலை. அதன்பின்னர் கோவை பட்சிராஜா ஸ்டூடியோவில் சேர்ந்தார்.
அந்த சமயத்தில் காரைக்குடியில் இயங்கி வந்த ஏவி.எம். ஸ்டூடியோவினர் பட எடிட்டிங்கிற்காக கோவை பட்சிராஜா ஸ்டூடியோவிற்கு வந்தனர். அங்கு சங்கரின் சுறுசுறுப்பை பார்த்த துணை டைரக்டர் எம்.வி.ராமன் சங்கரை தன்னுடன் ஏவி.எம்.மிற்கு அழைத்துச் சென்றார்.
பட்சிராஜா ஸ்டூடியோவில் சங்கருக்கு குருவாக இருந்த சூரியா ஏவி.எம்.மிற்கு சென்றால் நீ இயக்குனர் ஆனாலும் ஆகலாம். தைரியமாகப் போய் வா’ என்று கூறி, வழியனுப்பி வைத்தார்.
காரைக்குடியில் ஏவி.எம். ஸ்டூடியோவில் வேதாள உலகம் என்ற படம் தயாராகி வந்தது. அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ எரிந்து கொண்டு இருக்கும்போதே, சங்கர் எடிட்டிங் அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே குதித்தார்.
அங்கு வைக்கப்பட்டு இருந்த வேதாள உலகம் படத்தின் ‘நெகட்டிவ்’களை வெளியே கொண்டு வந்து, அவற்றை பத்திரமாக ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கொண்டு போய் சேர்த்தார். இதனால், சங்கர் மீது ஏவி.எம். செட்டியாருக்கு அன்பும், மதிப்பும் ஏற்பட்டன.
ஏவி.எம். ஸ்டூடியோ சென்னைக்கு மாறியபோது, சங்கரையும் உடன் அழைத்து வந்தனர். சங்கர் எடிட்டராக உயர்ந்தார். 1953-ம் ஆண்டு ஏவி.எம்.ஸ்டூடியோ சிங்கள மொழியில் தயாரித்த டாக்டர்’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு சங்கருக்கு கிடைத்தது. அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து 1954-ம் ஆண்டு ‘சிவபக்தா’ என்ற இந்திப் படத்தை சங்கர் டைரக்ட் செய்தார். 1955-ம் ஆண்டு ‘பூ கைலாஷ்’ என்ற தெலுங்கு படத்தை சங்கர் டைரக்ட் செய்தார். ராவணனுக்கும், நாரதருக்கும் இடையேயான கதையைக் கொண்ட புராணப் படம் அது. படத்தில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ரங்காராவ் ஆகியோர் நடித்தனர்.
அப்போது, சங்கர் மிகவும் இளைஞர். ‘என்ன சின்னப்பையா! என்னை டைரக்ட் செய்கிறாயா?’ என்று நாகேஸ்வரராவ் கிண்டல் செய்வார். இதுபற்றி ஏவி.மெய்யப்ப செட்டியாருக்குத் தெரிந்தது. ‘இவர் வயதில் சிறியவராக இருந்தாலும், மிக்க திறமைசாலி. படத்தை வெற்றிகரமாக முடிப்பார், பாருங்கள்’ என்று நாகேஸ்வரராவிடம் தெரிவித்தார்.
அவர் சொன்னதுபோலவே, ‘பூகைலாஷ்’ பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
ஏவி.எம்.மில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு வெளியே வந்த சங்கர், வெளிப்படங்களை டைரக்ட் செய்யத் தொடங்கினார். 1959-ம் ஆண்டு வாசுமேனன் தயாரித்த ‘ஒரே வழி’ என்ற படத்தை சங்கர் டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்தார். 1960-ம் ஆண்டு ‘கைராசி‘, ‘கவலை இல்லாத மனிதன்‘ ஆகிய படங்களை இயக்கினார். ஆலயமணி 1962-ம் ஆண்டு ‘ஆலயமணி‘, ‘பாதகாணிக்கை‘ ஆகிய படங்களை டைரக்ட் செய்தார். ‘ஆலயமணி‘யில் சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜாதேவி ஆகியோர் நடித்தனர். நடிகர் பி.எஸ்.வீரப்பா தயாரித்த படம் இது.
படத்தில் இடம் பெற்ற ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா‘, ‘பொன்னை விரும்பும் பூமியிலே‘ உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன. படமும் வெற்றி வாகை சூடியது.
‘பாத காணிக்கை‘யும் வெற்றிப்படம். இதில் ஜெமினிகணேசன், சாவித்திரி, அசோகன் ஆகியோர் நடித்தனர். அசோகனுக்கு நல்ல குணச்சித்திர வேடம். ‘வீடு வரை உறவு; வீதிவரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ!’ என்று அசோகன் பாடுவதுபோல அமைந்த டி.எம்.சவுந்தரராஜனின் பாடல், அற்புதமாக அமைந்தது.
1964-ம் ஆண்டு ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்தை சங்கர் டைரக்ட் செய்தார். இதில் சிவாஜி, தேவிகா ஆகியோர் நடித்தனர். பிரம்மச்சரியத்தை கடைபிடித்து வரும் ஒரு கல்லூரி பேராசிரியரின் வாழ்வில் ஒரு மாணவியின் காதல் குறுக்கிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை. இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஆறு மனமே ஆறு‘, ‘அமைதியான நதியினிலே ஓடம்’ போன்ற பாடல்கள் மிகவும் பிரபலம். தொடர்ந்து,
சிவாஜி நடித்த ‘அன்புக்கரங்கள்‘, ‘ராஜரிஷி’, ‘மிருதங்க சக்கரவர்த்தி’ உள்பட மொத்தம் 10 படங்களை சங்கர் டைரக்ட் செய்தார். சிவாஜியை டைரக்ட் செய்தது பற்றி கே.சங்கர் கூறியதாவது:-
‘பராசக்தி’ படத்தில் நடிக்க சிவாஜி ஒப்பந்தமான நேரத்தில், அஞ்சலிதேவி – முக்கமலா கிருஷ்ணமூர்த்தி நடித்த தெலுங்குப்படம் ஒன்று ‘நிரபராதி’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது.
அந்தப் படத்தில் கதாநாயகனுக்கு சிவாஜிதான் தமிழில் குரல் கொடுத்தார். அப்போதுதான் ஏவி.எம்.மில் எடிட்டராக இருந்தேன். ‘பராசக்தி’ ஏவி.எம். ஸ்டூடியோவில் தயாரானதால், அந்த நேரத்திலேயே சிவாஜியும், நானும் நெருங்கிய நண்பர்களானோம். அவர் மிகச்சிறந்த நடிகர்.
‘ஆலயமணி’ படத்தில் சிவாஜியை வைத்து டைரக்ட் செய்தேன். சிவாஜியைவிட ஒரு வயது மூத்தவன் நான். இருந்தாலும் என்னிடம் சிவாஜி, ‘வாடா, போடா’ என்றுதான் பேசுவார். அவ்வளவு நெருக்கம்.
ஆலயமணியில் சிவாஜியையும், பணத்தோட்டத்தில் எம்.ஜி.ஆரையும் வைத்து ஒரே நேரத்தில் டைரக்ட் செய்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.
இவ்வாறு சங்கர் கூறினார்.
டைரக்டர் கே.சங்கர் மாரடைப்பின் காரணமாக தனது 80-ஆவது வயதில் சென்னையில் வைத்து காலமானார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக