செவ்வாய், 27 மார்ச், 2018

நடிகை ஜெயந்தி இன்று காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகை ஜெயந்தி இன்று காலமானார்! அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகை ஜெயந்தி.

பிரபல நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகை ஜெயந்தி.
இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து ‘படகோட்டி’, ‘முகராசி’ ஆகிய படங்களிலும், சிவாஜி கணேசனுடன் இணைந்து ‘கர்ணன்’, ‘இருவர் உள்ளம்’ உள்ளிட்ட சில படங்களிலும், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் ஆகிய ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் 1945-ம் ஆண்டு பிறந்த நடிகை ஜெயந்தி கமலாகுமாரி ஜெயந்தி என்ற பெயருடன் சினிமாவில் நுழைந்தார். தனது முதல் கன்னட படமான ஜூனு கூடு என்ற படத்தை இயக்கிய பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார்.
‘மிஸ் மாலினி’ என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கையால் தேசிய விருதும், கர்நாடகா மாநில அரசின் தேசிய விருதும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், திடீர் மூச்சுத்திணறல் காரணமாக நடிகை ஜெயந்தி, பெங்களூரில் இருக்கும் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார், இச்சம்பவம் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயந்தி என்ற கமலாகுமாரி 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 11 இல் பிறந்தார் . இவர் ஒரு இந்திய நடிகை. கன்னடம் ,
தெலுங்கு , தமிழ் , மலையாளம் , ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் உள்ளிட்ட படங்களில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரைப்படத் துறை ஜெயந்தியை அபினயா சாரதேஎன்ற அடைமொழியுடன் கௌரவித்தது. தமிழில் அபிநய சரஸ்வதி என்று சரோஜா தேவி என்ற கன்னட நடிகை அன்புடன் அழைக்கப்பட்டார் .
பிறப்பும் ,இளமை பருவ ஏழ்மையும்
கமலாகுமாரி பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் ராஜதானியில் பெல்லாரியில் 1945 ,அக்டோபர் 11 இல் பிறந்தார் . அவரது தந்தை பாலசுப்ரமணியம் பெங்களூரில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கிலம் பேராசிரியராக பணிபுரிந்தார். அவரது தாயார் பெயர் சந்தான லட்சுமி . இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளின் மூத்தவராய் கமலா குமாரி இருந்தார் . மிக சிறிய வயதில் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என் .டி .ராமாராவின் மடிமேல் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் கமலா குமாரிமூன்று மூத்த உடன்பிறந்த பெண்களில் மூத்தவர், இது போக இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர். கமலா குமாரியின் இளம் வயது வாழ்வு மிகவும் சிரமம் ஆக இருந்தது .தகப்பனார், தாயார் மற்றும் ஐந்து பிள்ளைகளையும் தவிக்கவிட்டு பிரிந்து சென்றார் .எனவே புது வாழ்க்கையை தேடி தாயார் சென்னைக்கு குடி பெயர்ந்தார். கமல குமாரி யின் தாயார் தன் மகளை ஒரு பாரத நாட்டிய நடனக் கலைஞராக ஆக்குவதில் ஆர்வம் கொண்டிருந்ததால் சந்திரகலா நடன பள்ளியில் சேர்ந்தார் .அப்போது கோபி சந்தா என்ற மாணவியை அங்கு சந்தித்தார் .அவர் பின்னாளில் மனோரமா என்ற பெயரில் சிரிப்பு நடிகை ஆனார் கமலகுமாரி சற்று பருமனாக இருந்ததால் அவருக்கு நடனம் ஆடுவதில் தேர்ச்சி பெறவில்லை . எனவே மனத்தளவில் நொறுங்கி போனார் .
தெலுங்கு சினிமா வாழ்கை
மிக சிறிய வயதில் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என் .டி .ராமாராவின் மடிமேல் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் .பின்னாளில் ஜெகதேகவீருணி கதா ,குலா கெளரவம் ,கொண்டவீதி சிம்மம் ,ஜஸ்டிஸ் சவுத்ரி படங்களில் கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது . இளம் பருவ வயதிலேயே சிலதமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே நடிப்பை நன்றாக கற்று தேர்ந்து மதிப்பிற்குரியவர் ஆனார் .


கன்னட திரைப்படத் துறையும்,பெயர் மாற்றமும்
கன்னட திரைப்படத் துறையில் கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் சுமார் முப்பது படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் . கன்னட இயக்குநரான ஒய் .ஆர். ஸ்வாமி அவரை ஓர் நடன ஒத்திகையில் கண்டார் .அவர் ஜெனு குடு படத்தில் அறிமுகம் செய்ததோடு கமல குமாரி என்ற பெயரை
ஜெயந்தி என்று மாற்றினார் . ஜெயந்தி அன்றைய புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளார் . கே .எஸ் .அஸ்வத் ,பண்டாரி பாய் ,ஜெயஸ்ரீ ,உதயகுமார் ,கல்யாண்குமார் மாறும் ராஜ்குமாருடன் மட்டும் 45 படங்கள் கதாநாயகியாக நடித்துள்ளார் . இவர் நடித்த படங்களில் மிஸ் லீலாவதி மிகவும் சிறப்பு வாய்ந்தது .இந்த படத்தில் சிறு வயது பெண்ணாக நடித்தார் .இது தேசிய விருது பெற்ற திரைப்படம் ஆகும் .
ஆடை ,ஸ்டைல் ,கவர்ச்சியின் முன்னோடி
மிஸ் லீலாவதி கன்னட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஜெயந்தி (நடிகை) , ஸ்கர்ட் , டி-ஷர்ட்ஸ் மற்றும் இரவு நேர உடைகளை அறிமுக படுத்தினார் .கன்னடத் திரையில் முதன்முதலாக நவீன காலணிகளை மிகவும் அறிமுகப்படுத்தியதற்காக அவர் பாராட்டப்பட்டார். அவர் தான் கன்னடத்தில் முதன் முதலாக நீச்சலுடைஅணிந்து நடித்தார் .தமிழ் சினிமாவில் பட்டினத்தில் பூதம் என்ற படத்தில் கே. ஆர். விஜயா முதன் முதலில் நீச்சல் உடையில் தோன்றினார் .
தமிழ் சினிமாவில் இவரது பங்கு
இவர் இயக்குனர் கே .பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகி ஆனார் . எதிர் நீச்சல் ,இரு கோடுகள் ,பாமாவிஜயம் ,புன்னகை ,
வெள்ளிவிழா , கண்ணா நலமா போன்ற படங்களிலும் ,ம. கோ. இராமச்சந்திரன் உடன்
படகோட்டி (திரைப்படம்) மற்றும் முகராசி யிலும் நடித்தார் .அதிக படங்களில்
ஜெமினி கணேசன் உடனும் , முத்துராமன் ,ஜெய்சங்கர் படத்திலும் நடித்துள்ளார் .
சொந்த வாழ்க்கை
இவரது முதல் கன்னட படம் ஜீனு கூடு .இந்த படத்தின் இயக்குனர் பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற ஒரு மகன் இருக்கிறார்
மறக்க முடியாத சம்பவம்
மிஸ் லீலாவதி வெற்றி பெற்று ,டில்லியில் அதற்காக தேசிய விருது வாங்க சென்றார் . இந்திரா காந்தியின் கையால் அதனை பெற்று கொண்டார் . பரிசு வாங்கி செல்கையில் மறுபடியும் திரும்ப அழைத்து இவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக