வியாழன், 24 ஆகஸ்ட், 2017

நடிகை அஞ்சலிதேவி பிறந்த நாள் ஆகஸ்ட் 24 , 1927 .



நடிகை அஞ்சலிதேவி பிறந்த நாள் ஆகஸ்ட் 24 , 1927 .

அஞ்சலிதேவி ( Anjali Devi , தெலுங்கு :అంజలీదేవి, 24 ஆகத்து 1927 - 13 சனவரி 2014) பழம்பெரும் தெலுங்கு , மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

அஞ்சனி குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம்
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி நடிப்புத் தொழிலுக்காக
சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.
1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல். வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அத்திரைப்படம் முழுமை பெறாமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குனர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான
கொல்லபாமா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாவே அஞ்சனி குமாரி என்ற பெயரை அஞ்சலிதேவி என்ற பெயரைச் சூட்டினார். அந்த படத்தின் மூலம் இவர் பெரும் புகழ் பெற்றார். ஏறத்தாழ 350 தெலுங்குத் திரைப்படங்களிலும், சில தமிழ், கன்னடப் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

1. லவகுசா (1963)
2. சுவர்ண சுந்தரி
3. அனார்க்கலி
4. மணாளனே மங்கையின் பாக்கியம்
5. கணவனே கண்கண்ட தெய்வம்.


தவிர்க்க முடியாத நாயகி
50 களில் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்த அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலி தேவியின் நிஜப்பெயர் அஞ்சனி குமார். நடிப்புத்தொழிலில் ஈடுபட சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.
1936 ல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவரை எல்.வி பிரசாத் தனது 'கஷ்ட ஜீவி' என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் சில பிரச்னைகளால் முழுமை பெறவில்லை. பின்னரே நாடகங்களில் அவரது நடிப்பை பார்த்து வியந்த பிரபல இயக்குனர் புல்லையா, தன் இயக்கத்தில் வெளியான 'கொல்ல பாமா' படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு தந்தார். அவரே அஞ்சலிதேவிக்கு அந்தப்பெயரை சூட்டினார். அந்த படத்தின் புகழால் தொடர்ந்து பல படங்களில் நடித்த அஞ்சலிதேவி 50களில் திரையுலகின் தவிர்க்கமுடியாத நாயகியானார்.
முதல் கலர் படத்தில் நடித்தவர்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அஞ்சலிதேவி, தெலுங்கில் மட்டுமே 350 படங்கள் நடித்திருக்கிறார். குறும்பு, உணர்ச்சிவயமான நடிப்பு, நடனம், வீரமங்கை...-இதுதான் ரசிகர்களை கட்டிப்போட காரணமான அஞ்சலிதேவியின் பன்முக சிறப்பு அம்சங்கள்.
1940 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பி. ஆதிநாராயணராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஞ்சலிதேவிக்கு, 2 மகன்கள். தன் கணவருடன் இணைந்து அஞ்சலி தேவி பிக்சர்ஸ் என்ற பெயரில் பல வெற்றிகரமான தெலுங்கு படங்களை தயாரித்தார். தெலுங்கு திரையுலகின் முதல் கலர் படமான 'லவகுசா'வில் நடித்த பெருமைக்குரியவர் அஞ்சலிதேவி.


கனவுக்கன்னி

50 களில் நளிமான நடனம், நடிப்பு, நாகரிகமான உடையலங்காரம் என பன்முக திறைமையுடன் கலக்கிய அஞ்சலி தேவி, ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். அடுத்த வீட்டுப்பெண், கனணே கண்கண்ட தெய்வம் உள்ளிட்ட இவரது தமிழ்ப்படங்களில் இவரது நடிப்பு அந்த கால இளைஞர்களை அசத்திப்போட்டது என்றால் அதில் மிகையில்லை.
அவர் தன் வாழ்நாளில் சிறந்த படங்களாக குறிப்பிட்டவை 'ஸவர்ண சுந்தரி' மற்றும் 'அனார்கலி' போன்றவை. இதில் 'அனார்கலி' அவரது சொந்தப்படம். அதில் ஏ. நாகேஸ்வரராவுடன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த 2 திரைப்படங்களும் அஞ்சலிதேவிக்கு ரசிகர்களிடம் நிலையான இடத்தை கொடுத்த படங்கள்.
ஒரு பக்கம் சொந்த தயாரிப்புகள், இன்னொரு பக்கம் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்த அஞ்சலி, 50 மற்றும் 60 களில் திரையுலகின் அத்தனை பிரபலங்களுடன் நடித்தவர் .



பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி

அஞ்சலிதேவியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள பெத்தாபுரம்.அவருக்கு 5 வயது ஆனபோது, குடும்பம் காக்கிநாடாவில், குடியேறியது. பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு நடைபெற்ற நாடகங்களில் பங்கு கொண்டார். காக்கிநாடாவில், இசை அமைப்பாளராகவும், நடன இயக்குனராகவும் இருந்த ஆதிநாராயணராவ் என்ற இளைஞர், நடன நாடகத்தைப் பார்த்தார். அஞ்சலிதேவியின் அழகும் நடனமும், அவரைக் கவர்ந்தன. தன் நாடகங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.
அஞ்சலிதேவி நடித்த “தெருப்பாடகன்”, “லோபி” ஆகிய நாடகங்கள், ரசிகர்களிடம் அமோக ஆதரவைப் பெற்றன. இந்த நிலையில், அஞ்சலிதேவிக்கும், ஆதிநாராயணராவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 1945-ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் சி.புல்லய்யா, “தெருப்பாடகன்” நாடகத்தைப் பார்த்தார். அஞ்சலிதேவி சிறப்பாக நடனம் ஆடியதை பார்த்து மகிழ்ந்து, தன்னுடைய “கொல்லபாமா” என்ற தெலுங்கு படத்தில் மோகினி வேடத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் ஆந்திராவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் வெளியாகி வெற்றிவாகை சூடியது. அதனால் அஞ்சலிதேவிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.
தெலுங்கில், ஏ.நாகேஸ்வரராவுடன் அஞ்சலிதேவி நடித்த “தீலுகுர்ரம்” என்ற படம், “மாயக்குதிரை” என்ற பெயரில் தமிழில் “டப்” செய்யப்பட்டு திரையிடப்பட்டது. மாயா ஜாலங்கள் நிறைந்த இந்தப் படம், ஓகோ என்று ஓடியது. அஞ்சலிதேவி தமிழ்நாட்டிலும் புகழ் பெற்றார். தமிழ்ப்பட வாய்ப்புகள் வந்தன. “மகாத்மா உதங்கர்” என்ற தமிழ்ப் படத்தில் நடித்தார். 1949-ல் நடிக மன்னன் பி.ï. சின்னப்பாவுடன் “மங்கையர்க்கரசி” என்ற படத்தில் நடித்தார். 1949-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “மாயாவதி” என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து நடித்தார்.
1954-ல் ஏவி.எம். தயாரிப்பான பெண் படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா ஆகியோருடன் இணைந்து நடித்தார். தமிழ்ப்படங்களில், அவர் சொந்தக்குரலில் பேசி நடித்தது குறிப்பிடத்தக்கது. 1955-ல் நாராயணன் கம்பெனி தயாரித்த “கணவனே கண்கண்ட தெய்வம்” என்ற மெகாஹிட் படத்தில், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில், அஞ்சலிதேவியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. இந்தப்படம், அவர் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் ஏற்கவே பிரபலமாகியிருந்தவர், தமிழ்ப்பட உலகிலும் பானுமதி, பத்மினி வரிசையில் இடம் பெற்றார். ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்தார். சிவாஜியுடன் “முதல் தேதி”, “நான் சொல்லும் ரகசியம்” படங்களிலும், எம்.ஜி.ஆருடன் “சக்ரவர்த்தி திருமகள்”, “மன்னாதி மன்னன்” ஆகிய படங்களிலும் நடித்தார். ஜெமினி கணேசனுடன் இவர் நடித்த “காலம் மாறிப்போச்சு” சிறந்த படம் என்ற பெயருடன் வசூலையும் குவித்தது. மற்றும் “இல்லறமே நல்லறம்”, “பூலோக ரம்பை”, “வீரக்கனல்” முதலான படங்களில் ஜெமினிகணேசனுடன் நடித்தார்.
தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார். அஞ்சலிதேவி, சொந்தப்படங்களைத் தயாரிப்பதிலும் வெற்றி பெற்றார். ஜெமினி கணேசனுடன் “மணாளனே மங்கையின் பாக்கியம்” படத்திலும், நாகேஸ்வரராவுடன் “அனார்கலி”யிலும் நடித்தார். இந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள், மிகவும் பிரபலமாயின. இசை அமைத்தவர் அஞ்சலிதேவியின் கணவர் ஆதிநாராயணராவ். அஞ்சலிதேவி தயாரித்த மற்றொரு படம் “அடுத்த வீட்டுப் பெண்”. இது நகைச்சுவைப் படம். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி டி.ஆர்.ராமச்சந்திரன். தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது “லவகுசா”. இப்படம் தமிழிலும் வெளிவந்தது. ராமராவ் ராமராகவும், அஞ்சலிதேவி சீதையாகவும் அற்புதமாக நடித்தனர். பிற்காலத்தில், அண்ணி, அம்மா வேடங்களிலும் அஞ்சலிதேவி நடித்தார்.
ஸ்ரீதர் தயாரித்த “உரிமைக்குரல்” படத்தில், எம்.ஜி.ஆருக்கு அண்ணியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. “அன்னை ஓர் ஆலயம்” படத்தில், ரஜினிகாந்துக்கு அம்மாவாக நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் அஞ்சலிதேவி நடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக