வெள்ளி, 30 செப்டம்பர், 2016

இசையமைப்பாளர் பாபநாசம் சிவன் நினைவு தினம் அக்டோபர் 01,

இசையமைப்பாளர் பாபநாசம் சிவன் நினைவு தினம் அக்டோபர் 01,

பாபநாசம் சிவன்  (செப்டம்பர் 26,
1890 - அக்டோபர் 1, 1973) கருநாடக இசையில்
பல இராகங்களில் 2500 க்கும்
அதிகமான கிருதிகளை இயற்றிய இசை
அறிஞர் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
இவர் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள்
அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது
மகனாகப் பிறந்தார். இவர்
தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள
போலகம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது
இயற்பெயர் ராமசர்மன்.
பெற்றோர் இவரை ராமய்யா என
அழைத்தனர். ராமய்யா பிற்காலத்தில்
பாபநாசம் சிவன் என்ற பெயருடன்
20 ஆம் நூற்றாண்டின் சிறந்த தமிழ்
வாக்கேயக்காரராக விளங்கினார்.
இவர் அதிகாலையில் சிவன் கோயிலின் முன்
நின்று உருகி நாள்தோறும் பாடியதால்
சிவபெருமானே கைலாசத்தில் இருந்து
இளைஞர் வடிவம் கொண்டு
இறங்கிவந்ததாகப் புகழ்ந்து
தஞ்சாவூரில் உள்ள கணபதி
அக்கிரகாரத்தில் உள்ளவர்கள்
பாபநாசம் சிவன் என்று அழைத்தனர்.
தனது ஏழாம் வயதில் தந்தையை
இழந்ததினால் வறுமை காரணமாக,
தாயுடன் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த
தன் மூத்த தமையனார் ராஜகோபாலனிடம்
வந்து சேர்ந்தார். மற்றவர்கள்
கொடுக்கும் அன்னதானத்தின்
மூலம் உணவுண்டு தமது இள வயது
வாழ்க்கையைக் கழித்தார். அங்கு
தங்கியிருந்த வேளையில் இவர் மலையாளம்
பயின்று மகராஜ சமசுகிருதக் கல்லூரியில்
சேர்ந்து 1910 இல் வையகர்ண பட்டதாரி
ஆனார்.
சிறந்த குரல்வளத்தையும், இசை உள்ளறிவையும்
கொண்டிருந்ததால் இசையின்
ஆரம்பப் பயிற்சிகளை ஆஸ்தான
வித்துவான் நூரணி மகாதேவ
ஐயர்,சம்பபாகவதர் ஆகியோரிடமிருந்து
பெற்றார். பஜனை செய்வதின்
மூலம் இவரது இசைப்புலமை மெருகேறியது.
ஒருநாள் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத
ஐயரின் கச்சேரியைக் கேட்டபின், அவரை அணுகி
தன்னை அவரின் மாணவனாக ஏற்கும்படி
கேட்டுக் கொண்டார். அவர்
சம்மதிக்கவே அவருடன் 7 வருடம் தங்கி இசை
நிகழ்ச்சிகளுக்குச் சென்றார். இதன்
பின் தனது குருவின் பாணியிலே ஆலாபனை,
நிரவல், ஸ்வரப் பிரஸ்தாரம் என்பவற்றைப்
பாடத் தொடங்கினார்.
1917இல் சுப்பரமணிய ஐயரின்
முயற்சியினால் இவரது திருமணம் நடந்தது.
நீலா ராமமூர்த்தி, ருக்மணி ரமணி என்ற
இரு பெண் குழந்தைகள் இவருக்குப்
பிறந்தனர்.
1918 ஆம் ஆண்டு திருவையாற்றில் நடந்த
தியாகராஜர் ஆராதனையில் சிவன்
தனது முதற் கச்சேரியை நிகழ்த்தினார். இதன்
பின்னர் பாபநாசம் சிவன்
தென்னிந்தியா முழுவதிலும் வட
இந்தியாவின் சில பகுதிகளிலும் தனது
கச்சேரிகளை நடத்தினார்.
இசைப் பணி
பாபநாசம் சிவன் தனது முத்திரையாக
"ராமதாஸ" என்பதை வைத்து கிருதி,
வர்ணம்,பதம், இசைநாடகங்கள், ஜாவளி
ஆகிய பல இசை வடிவங்களை
இயற்றியுள்ளார். கோயில்களின் முன்னின்று
பல பாடல்களை இயற்றினார்.
இப்படியாக இவர் இயற்றிய பாடல்களை,
புகழ்பெற்ற கருநாடக பாடகர்கள்
பலரும் தங்கள் இசை நிகழ்ச்சிகளில்
பாடியுள்ளனர். கருநாடக
மும்மூர்த்திகளுக்குப் பிறகு வந்த
இசைப்பாடல்கள் இயற்றியவர்களில்
முக்கியமானவர் பாபநாசம் சிவன்.
1921 இல் சிவன் சென்னைக்கு வந்து
தங்கிவிட்டார். இவருடைய ஆக்கங்களை ஆறு
தொகுப்புகளாக இவருடைய மகள்
ருக்மணி ரமணி வெளியிட்டுள்ளார்.
இயற்றிய நூல்கள்
1934 இல் 100 கிருதிகளைக்
கொண்ட இவரது முதல் நூலான
கீர்த்தன மாலை வெளியிடப்பட்டது.
இதன் பின் 31 ஆண்டிகளுக்குப் பிறகு 100
பாடல்களைக் கொண்ட
இரண்டாவது நூலை வெளியிட்டார்.
பிறகு 101 பாடல்களைக் கொண்ட
மூன்றாவது தொகுதியை சிவனின் 2
ஆவது மகள் ருக்மணி ரமணி
வெளியிட்டார்.
10 ஆண்டுகள் உழைத்து 1952 இல்
வடமொழி சொற்கடல்
(சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா)
என்னும் நூலை ஆக்கினார்.
இராமாயணத்தைச் சுருக்கி 24
இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ
ராம சரித கீதம் என்னும் நூலை
ஆக்கினார்.
காரைக்கால் அம்மையார் சரிதம்
என்னும் இசை நாடக நூலை எழுதினார்.
திரைப்படத் துறை
பங்களிப்புகள்
பாடலாசிரியராக,
இசையமைப்பாளராக, ஒரு நடிகராகவும்
தமிழ்த் திரையுலகிற்கு தனது பங்களிப்பினைத்
தந்துள்ளார் சிவன். ஏறத்தாழ 70
திரைப்படங்களுக்கு மொத்தமாக
800 பாடல்களை எழுதியுள்ளார்.
இசையமைத்த திரைப்படங்கள்
சீதா கல்யாணம்
பக்த குசேலா (1936)
அம்பிகாபதி (1937)
சிந்தாமணி (1937)
சேவாசதனம் (1938)
திருநீலகண்டர் (1939)
தியாக பூமி (1939)
அசோக் குமார் (1941)
சிவகவி (1943)
கன்னிகா (1947)
திரைப்படங்களுக்கென
எழுதப்பட்ட பாடல்கள் விவரம்
சீதா கல்யாணம் - 22 பாடல்கள்
பவளக்கொடி - 60 பாடல்கள்
அசோக் குமார் - 19 பாடல்கள்
சிவகவி - 29 பாடல்கள்
மீரா
திரைப்படங்களுக்காக எழுதிய
பாடல்களில்
புகழ்பெற்றவை
மன்மதலீலையை வென்றார் உண்டோ...
ராதே உனக்கு கோபம்... ( சிந்தாமணி
1937 )
அம்பா மனங்கனிந்து... ( சிவகவி 1943 )
நடித்த திரைப்படங்கள்
பக்த குசேலா - இந்தப் படத்தில் பாடி
நடித்திருந்தார்.
தியாகபூமி
சேவாசதனம்
குபேரகுசேல
மறைவு
1973 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 அன்று
அதிகாலை நான்கு மணியளவில்
காலமானார்.
பட்டங்களும் விருதுகளும்
சங்கீத சாகித்ய கலா சிகாமணி,
1950; வழங்கியது:இந்திய பைன் ஆர்ட்ஸ்
சொசைட்டி
சிவ புண்ய கான மணி, 1951, காஞ்சி
காமகோடி சங்கராச்சாரியார்
வழங்கியது
சங்கீத கலாசிகாமணி விருது, 1950 &
1969, வழங்கியது: தி ஃபைன் ஆர்ட்ஸ்
சொசைட்டி[2]
சங்கீத கலாநிதி விருது, 1971;
வழங்கியது: மியூசிக் அகாதெமி ,
சென்னை
இசைப்பேரறிஞர் விருது [3] , 1965; வழங்கியது:
தமிழ் இசைச் சங்கம்
பத்ம பூஷன் விருது; வழங்கியது: இந்திய
அரசு
இயற்றிய
கீர்த்தனைகளின்
பட்டியல்
கருணாகரனே...சிவசங்கரானே...!
குருவாயூரப்பா...குழந்தாய்...
முகுந்தா...
ஏறெடுத்தும் பாராத காரணம்
என்னவோ?...
கற்பகமே கண் பாராயும்...
கணபதே, மகாமதே...
காணக்கண் கோடி வேண்டும்... - காம்போதி
கா வாவா கந்தா வாவா... -
வராளி
ஸ்ரீ வள்ளி தேவ சேனாதிபதே... - நடபைரவி
தாமதமேன்... - தோடி
கடைக்கண்... - தோடி
கார்த்திகேயா காங்கேயா... - தோட
..............

கர்னாடக இசை மேதை, திரைப்படப் பாடல்
ஆசிரியர், இசையமைப்பாளர் என்று
பன்முகத் திறன் கொண்ட
பாபநாசம் சிவன் (Papanasam
Sivan) பிறந்த தினம் இன்று
(செப்டம்பர் 26). அவரைப் பற்றிய
அரிய முத்துக்கள் பத்து:
l அன்றைய தஞ்சை மாவட்டம் போலகம்
கிராமத்தில் (1890) பிறந்தார்.
இயற்பெயர் ராமசர்மா. 7
வயதில் தந்தையை இழந்தார்.
இதையடுத்து, பிள்ளைகளுடன்
திருவனந்தபுரத்தில் குடியேறினார்
தாய். மஹாராஜாவின்
ஏற்பாட்டால் இலவச உணவுடன்,
கல்வியும் கிடைத்தது.
l மலையாளம், சமஸ்கிருதமும்
பயின்றார். இளம் வயதிலேயே இசையில்
ஆர்வமும் திறமையும்
கொண்டிருந்தார்.
மஹாராஜா சமஸ்கிருதக்
கல்லூரியில் சேர்ந்து பட்டம்
பெற்றார்.
l தாய் மறைவுக்குப் பிறகு,
அண்ணனுடன் தஞ்சை மாவட்டம்
பாபநாசம் வந்தார். நெற்றி
நிறைய திருநீறு பூசியபடி சிவன் கோயில்
முன்பு மனமுருகிப் பாடுவார்.
பரமசிவனே பாடுவதாக கருதிய
மக்கள் ‘பாபநாசம் சிவன்’
என்றனர். அதுவே பெயராக
நிலைத்தது.
l வித்வான் நூரணி மகாதேவ ஐயர்,
சாம்ப பாகவதரிடம் முறைப்படி இசை
பயின்றார். கோனேரிராஜபுரம்
வைத்தியநாத ஐயரிடம்
மாணவனாகச் சேர்ந்தார். 7
ஆண்டுகள் அவருடன் தங்கி, பல இசை
நிகழ்ச்சிகளுக்குச் சென்றார்.
திருவையாறு தியாகராஜர்
ஆராதனையில் 1918-ல் இவரது முதல்
கச்சேரி நடைபெற்றது.
தொடர்ந்து பல இடங்களில்
கச்சேரிகள் நடத்தினார்.
l கிருதி, வர்ணம், பதம், ஜாவளி என
பல இசை வடிவங்களை இயற்றியுள்ளார்.
‘என்ன தவம் செய்தனை’, ‘கற்பகமே
கண் பாராய்’, ‘நான் ஒரு
விளையாட்டு பொம்மையா’
போன்றவை இவரது புகழ்பெற்ற
கீர்த்தனைகள். இசைக் கலைஞர்களால்
‘தமிழ் தியாகய்யர்’ என்று
போற்றப்பட்டார்.
l வீணை எஸ்.பாலச்சந்தரின் தந்தை
சுந்தரம் மூலம், 1934-ல் ‘சீதா
கல்யாணம்’ என்ற திரைப்படத்துக்கு
பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது.
தொடர்ந்து அசோக்குமார்,
சாவித்திரி, நந்தனார், சிவகவி,
ஜகதலப்பிரதாபன், அம்பிகாபதி
உள்ளிட்ட பல திரைப்படங்களில்
பாடல்கள் எழுதினார்.
l காலத்தால் அழியாத
பாடல்களான ‘மன்மத லீலையை’,
‘ராதே உனக்கு’, ‘அம்பா
மனங்கனிந்து’ ஆகியவை இவர்
இயற்றியவை. பாடல் எழுதும்போதே
மெட்டும் அமைத்துவிடும் திறன்
பெற்றவர்.
l ‘பக்த குசேலா’, ‘அம்பிகாபதி’ உட்பட
பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
பல படங்களில் பாடி நடித்துள்ளார்.
70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்காக
800 பாடல்களை எழுதியுள்ளார். 100
கிருதிகளைக் கொண்ட இவரது
முதல் நூலான ‘கீர்த்தன மாலை’ 1934-
ல் வெளிவந்தது.
l 10 ஆண்டுகள் பாடுபட்டு 1952-ல்
‘சமஸ்கிருத பாஷா ஷப்த சமுத்ரா’
என்ற நூலை எழுதினார்.
ராமாயணத்தை சுருக்கி, 24
ராகங்களில் 24 பாடல்களாக
‘ராமசரித கீதம்’ என்னும் நூலை
படைத்தார். 75 வயதிலும் மார்கழி
மாதக் குளிரில் அதிகாலை நேரத்தில்
வீதிகளில் பஜனை பாடிச்
செல்வார். மிக எளிமையானவர்.
இவரது சகோதரர் ராஜகோபால்
ஐயரின் மகள்தான் எம்ஜிஆரின்
மனைவி வி.என்.ஜானகி.
l பத்மபூஷண், சங்கீத கலாநிதி, இசைப்
பேரறிஞர், சங்கீத சாகித்ய கலா
சிகாமணி, சிவபுண்ய கானமணி,
சங்கீத கலாரசிகமணி என பல்வேறு
விருதுகளைப் பெற்ற பாபநாசம்
சிவன் 83-வது வயதில் (1973)
மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக