வெள்ளி, 23 செப்டம்பர், 2016

நடிகை சில்க் ஸ்மிதா நினைவு தினம் செப்டம்பர் 23.

நடிகை சில்க் ஸ்மிதா நினைவு தினம் செப்டம்பர் 23.

சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும்
விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை
ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி
அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற
திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற
சாராயக்கடையில் பணிபுரியும் பெண்
கதாபாத்திரத்தில் முதன் முதலாக
நடித்தார். தமிழ், தெலுங்கு,
மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல
மொழித் திரைப்படங்களில் 450க்கும்
மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர்,
தென்னிந்திய திரையுலகின் ‘கனவு
கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக்
கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத்
தொடங்கி, சுமார் 17 வருடங்கள்
இந்திய சினிமாத் துறையில் முத்திரைப் பதித்த
அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும்
சினிமா பயணத்தை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 02, 1960
பிறப்பிடம்: ஏலூரு, ஆந்திரபிரதேசம்
மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகை
இறப்பு: செப்டம்பர் 23, 1996
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘விஜயலட்சுமி’ என்ற
இயற்பெயர்கொண்ட அவர்,
1960 ஆம் ஆண்டு டிசம்பர் 02 தேதி
இந்தியாவின் ஆந்திரபிரதேசம்
மாநிலத்திலுள்ள “ஏலூரு” என்ற இடத்தில்
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால்,
தன்னுடைய பள்ளிப்படிப்பை வறுமையின்
காரணமாக நான்காம் வகுப்போடு
நிறுத்திக்கொள்ள
வேண்டியதாயிற்று. இளமையில் இவருடைய
வசீகரத் தோற்றத்தினால் பலருடைய
தொல்லைக்கு ஆளானார்.
இதனால், இவருடைய பெற்றோர்கள்
இவருக்கு சிறுவயதிலேயே திருமணம்
முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில்
ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக
சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு
உறவினர் வீட்டில் தங்கி வேலைத்தேடினார்.
திரைப்பட வாழ்க்கை
திரைப்படத் துறையில் ஒரு ஒப்பனைக்
கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத்
தொடங்கிய ‘விஜயலட்சுமி’, தமிழ்
திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி
அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற
தமிழ் திரைப்படத்தில் சிலுக்கு என்கின்ற
சாராயக்கடையில் பணிபுரியும் பெண்
கதாபாத்திரத்தில் முதன் முதலாக
நடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே
ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அவர், தமிழ்
திரைப்படத்துறையில் புகழையும்
தேடிக்கொண்டார். அன்று வரை
‘விஜயலட்சுமி’ எனப்பட்ட இவர்,
இத்திரைப்படத்திற்கு பிறகு, ‘சில்க் ஸ்மிதா’
என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.
பிறகு 1979 ஆம் ஆண்டு “இணையே தேடி” என்ற
திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்பட
உலகில் அறிமுகமானார். தன்னுடைய
முதல் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட
தாக்கத்தின் விளைவாக இறுதிவரை
அவருக்கு ஒரே மாதிரியான
காதாபாத்திரங்கள் மட்டுமே தேடிவந்தது.
கவர்ச்சியானத் தோற்றத்தாலும்,
நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்த அவர்,
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு,
மலையாளம், கன்னடம் போன்ற பிற
மொழிப்படங்களில் நடித்து,
தென்னிந்தியத் திரைப்பட உலகின்
‘கனவுக்கன்னியாக’ வலம்வந்தார்.
வெற்றிப் பயணம்
‘மூன்று முகம்’, ‘அமரன்’, ‘சகலகலா
வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய
வசீகரமான தோற்றத்தினாலும்,
கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ்
ரசிகர்களின் நெஞ்சில்
கவர்ச்சிப்புயலாக வலம்வந்தார். இவர்
நடிப்பில் பல கதாபத்திரத்தினை ஏற்று
நடித்திருந்தாலும், நாளிதழ்களும்,
திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே
அடையாளப்படுத்தின. இருப்பினும், ‘அலைகள்
ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு
கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை’, ‘லயனம்’
போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய
வித்தியாசமான நடிப்பை
வெளிப்படுத்தி தனக்குக் கவர்ச்சி
மட்டுமின்றி, அனைத்து விதமான நடிப்பின்
பரிணாமங்களும் வரும் என்பதனை
நிரூபித்தார்.
அவரின் சில குறிப்பிடத்தக்கத்
திரைப்படங்கள்
‘வண்டிச்சக்கரம்’ (தமிழ் 1979), ‘இணையே
தேடி’ (மலையாளம் 1979), ‘அலைகள்
ஓய்வதில்லை’ (தமிழ் 1981),
‘சீதகொக சிலுக’ (தெலுங்கு
1981), ‘எமகின்கருது’ (தெலுங்கு 1982),
‘மூன்றாம் பிறை’ (தமிழ் 1982), ‘சகலகலா
வல்லவன்’ (தமிழ் 1982), ‘பட்டணத்து
ராஜாக்கள்’ (தமிழ் 1982), ‘தீர்ப்பு’ (தமிழ்
1982), ‘தனிக்காட்டு ராஜா’ (தமிழ் 1982),
‘ரங்கா’ (தமிழ் 1982), ‘சிவந்த
கண்கள்’ (தமிழ் 1982), ‘பார்வையின்
மறுபக்கம்’ (தமிழ் 1982), ‘மூன்று முகம்’ (தமிழ்
1983), ‘பாயும் புலி’ (தமிழ் 1983), ‘துடிக்கும்
கரங்கள்’ (தமிழ் 1983), ‘சத்யா’ (தமிழ்
1983), ‘தாய்வீடு’ (தமிழ் 1983),
‘பிரதிக்னா’ (மலையாளம் 1983),
‘தங்கமகன்’ (தமிழ் 1983),
‘கைதி’ (தெலுங்கு 1983), ‘ஜீத்
ஹமாரி’ (இந்தி 1983), ‘ஜானி
தோஸ்த்’ (இந்தி 1983),
‘ஆட்டக்கலசம்’ (மலையாளம் 1983),
‘ஈட்டப்புளி’ (மலையாளம் 1983), ‘சில்க் சில்க்
சில்க்’ (தமிழ் 1983), ‘சூரக்கோட்டை
சிங்கக்குட்டி’ (தமிழ் 1983), ‘குடசாரி நம்பர்
ஒன்’ (தெலுங்கு 1983),
‘ரோஷகாடு’ (தெலுங்கு 1983),
‘சேலஞ்ச்’ (தெலுங்கு 1984),
‘ருஸ்தும்’ (தெலுங்கு 1984), ‘நீங்கள்
கேட்டவை’ (தமிழ் 1984), ‘வாழ்க்கை’ (தமிழ்
1984), ‘பிரசண்ட குள்ள’ (கன்னடம் 1984),
‘ஓட்டயம்’ (மலையாளம் 1985),
‘ரிவேஞ்ச்’ (மலையாளம் 1985), ‘சட்டம்தோ
போராட்டம்’ (தெலுங்கு 1985),
‘லயனம்’ (மலையாளம் 1989),
‘அதர்வம்’ (மலையாளம் 1989), ‘பிக்
பாக்கெட்’ (தமிழ் 1989), ‘அவசர
போலிஸ்’ 100 (தமிழ் 1990), ‘சண்டே
7PM’ (மலையாளம் 1990), ‘ஆதித்யா
369’ (தெலுங்கு 1991), ‘தாலாட்டு
கேட்குதம்மா’ (தமிழ் 1991), ‘இதயம்’ (தமிழ்
1991), ‘நாடோடி’ (மலையாளம் 1992), ‘ஹள்ளி
மேஷ்ற்று’ (கன்னடம் 1992),
‘அந்தம்’ (தெலுங்கு 1992), ‘சபாஷ்
பாபு’ (தமிழ் 1993),
‘மாஃபியா’ (மலையாளம் 1993), ‘உள்ளே
வெளியே’ (தமிழ் 1993),
‘அளிமைய’ (கன்னடம் 1993), ‘முட
மேஸ்திரி’ (தெலுங்கு 1993), ‘ஒரு வசந்த
கீதம்’ (தமிழ் 1994), ‘விஜய்பாத்’ (இந்தி
1994), ‘மரோ கூட் இந்தியா’ (இந்தி 1994),
‘ஸ்படிகம்’ (மலையாளம் 1995), ‘தும்போலி
கடப்புரம்’ (மலையாளம் 1995), ‘லக்கி
மேன்’ (தமிழ் 1996), ‘கோயம்புத்தூர்
மாப்பிள்ளை’ (தமிழ் 1996).
இறப்பு
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள்
சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில்
நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி
தன்னுடைய 35 வது வயதில் சென்னையில்
அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார்.
காதல் தோல்வி என மேலும் பல சூழ்நிலைகள்
இவருடைய இறப்பிற்குக் காரணமாக
சொல்லப்படுகிறது.
இவருடைய மறைவிற்குப் பிறகு “தி டர்டி பிக்சர்”
என்ற பெயரில் அவரின் வாழ்க்கை
வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா
இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு
திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில்
வித்யா பாலன் நடித்திருப்பார். 2011
ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
இத்திரைப்படம் மாபெரும் வெற்றி
பெற்றதோடு மட்டுமல்லாமல்,
இந்தியாவில் பல மொழிகளில்
மொழிமாற்றமும்
செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இத்தகையை சிறப்புமிக்க சில்க் ஸ்மிதாவின்
அபார நடனத்திறமையும், கண்களின்
வசீகரமும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம்,
இந்தி போன்ற பல மொழித் திரைப்பட
உலகிலும் ஒரு அழியாத சுவடை
விட்டுச்சென்றுள்ளது என்பதை
யாராலும் மறுக்க இயலாது.
\\\\\\\\\\\\\\\\\\*\

ஆந்திரா பிரதேசத்தில் விஜயலட்சுமி
என்ற பெயரில் டிசம்பர் 2 ஆம் தேதி
ஒரு பெண் குழந்தை பிறந்தது. சிறு
வயதில் குடும்ப சுழல் காரணமாக
பெற்றோரால் படிப்பை நிறுத்தப் பட்டு,
அறியாத வயதில் திருமணமும்
செய்து வைத்தனர், கணவன்
மற்றும் மாமியார்
கொடுமையால், அங்கிருந்து
தப்பித்து சென்னைக்கு புறப்பட்டு
வந்தார் விஜயலட்சுமி. அன்றிலிருந்து
அவர் வாழ்கையில் ஒரு திருப்பு முனை
ஏற்பட்டது. , தமிழகத்தை தன்
கவர்ச்சியாலும், காந்த
கண்களினாலும் சுண்டி இழுத்தவர் ,
அவர் தான் விஜயலட்சுமி என்கின்ற
சில்க் சுமிதா.
ஆனால் இவரின் கவர்ச்சியான
தோற்றத்திற்கும், கவர்ச்சியான
நடிப்பிற்கும் முகம் சுழித்தவர்களும்
இருந்தனர், ஐடம் கேர்ள் நடனம் மட்டும்
ஆடும் பெண்களிடையே சில்க் தான்
என்றும் டாப், அதோடு மட்டும்
அல்லாமல் சில்க் பல படங்களில்
நடித்தும் உள்ளார், அற்புதமான
நடிகையும் கூட அவர்...
சுமித்தாவின் வாழ்க்கை புரியாத
புதிராகவே இருந்து வந்தது, அவரின்
தனிப் பட்ட வாழ்க்கை இன்று வரை மர்ம
முடிச்சுகள் அவிழப் படாமல்
இருகின்றது , அவர் தற்கொலை
செய்துக் கொண்ட பின்,
ஏற தாழ அவரைப் பற்றி தமிழ் மக்களும்
சினிமா துறையும் மறந்து போனது,
தீடிரென பாலிவுட்டில் அவரின்
சுய சரிதை படமாக்கப்படுவதாகவும்,
படத்தில் சோகம் தோய்ந்த முகத்துடன், ஒரு
குடும்ப பெண்ணாக ( பரிநீதா )
போன்ற படங்களில் நடித்த வித்யா
பாலன் நடிப்பதாகவும்
சொன்னார்கள் , இது ஒரு
நல்ல தேர்வே இல்லை, சில்கு எவ்வளவு
அழகு, சில்கின் நடை, உடை, அவளின்
தோற்றம், நிறம் எல்லாமே ஒரு அழகு,
என்று பல பேர் தங்களின் கருத்தை முன்
வைத்தார்கள்,
இது ஒரு புறம் இருக்கட்டும், இன்றைய
நவீன காலத்து பெண்கள் "
Dusky " என்று கூறப் படும் மாநிறத்தை
விரும்புகின்றனர், தீபிகா படுகோனே,
கஜோல், ராணி முகர்ஜி போன்றவர்கள் "
Dusky beauty " என்றும் சிலரால்
அழைக்கப் படுவது உண்டு. ஆனால்,
நம் தமிழ் சினிமா, இதை ஒரு தலை முறைக்கு
முன்பாகவே அறிமுகப் படுத்திவிட்டது.
சில்க் சுண்டி இழக்கும் நிறம் இல்லை,
மாநிறம் தான்,
இப்பொழுதுக்கான
சொல்லாடல்களில்
சொல்லபோனால் " Dusky
Beauty :, இன்றைய நவீன
பெண்கள் தங்களின் நாரிகம்,
உடை ஆகிய அனைத்தையும் தாங்கள் தேர்வு
செய்வதற்கான சுதந்திரத்தைப்
பெற்று இருகின்றனர், அதை அன்றே
பெற்று இருந்தார் சில்கு, சில்கின்
வாழ்க்கையிலிருந்து அறிவது என்ன
வென்றால் அவர் நிச்சயமாக
ஒரு தைரியமான, சுயமாக
முடிவெடுக்கும் ,பெண்ணாக
இருந்து இருத்தல் வேண்டும், மிக
அழுத்தமான பெண்ணாகவும்
இருந்திருத்தல் வேண்டும்.
யாரும் எளிதாக செய்ய
தயங்கும் கவர்ச்சி வேடங்களில் சில்க்
செய்தார் என்பதால் பல பேர்
அவரை வெக்கம் இல்லாதவள் ,
மானம் கேட்டவள் என்றும்
பட்டமளித்தனர், ஆனால் அப்படி
அவர் செய்வதற்கு அவர் எத்தகைய
துணிச்சலான பெண்ணாக
இருந்து இருப்பார் என்பது வியப்பை
அளிக்கின்றது. இதிலென்ன
துணிச்சல் வேண்டும் ? என்பவர்களுக்கு,
சில்க் சிறிய வயதில் பல்வேறு
துன்பங்கள் அனுபவித்து அந்த
அனுபவங்களின் தாக்கம் கலைத்
துறையில் அவர் எந்த கதாப்
பாத்திரத்தையும் ஏற்று
நடிப்பதற்கான மன உறுதியை
வெளிப்படுத்தியது,
இன்றைய சுழலில் நடிகைகளின் வாழ்க்கை
வேறுவிதமாக அமைந்துள்ளது.
பெற்றோர்களே அவர்களை
ஊக்குவிக்கிறார்கள் , வித்யா
பாலன் சில்கைப் போல் நடித்ததற்கு அவரை
முதலில் பாராட்டியது வித்யா
பலானின் தந்தை, ஆனால் சில்கிற்கு
மிஞ்சியது வெறும் மரணம் என்னும்
கோர பிடித்தான்.
அன்றைய காலகட்டத்தில் சில்க்
சுமிதா அருவெறுப்புடனும் , சில்க்
சுமிதாவை ரசிப்பவர்கள் எல்லாம்
கெட்டவர்கள் என்றும் இருந்தது,
அது இன்று வரை தொடர்கிறது,
ஆனால் சில்க் சுமிதாவின்
கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த ஒரு
பெண்ணுக்கு பரிசும் பாராட்டும்,
பட்டங்களும், கோடிகளும்... பல பேர்
வித்யா பாலனின் இந்த முயற்சிக்கு ,
" She is courageous to take up this stand
", என்றனர் , நான் மறுக்கவில்லை,
ஆனால் ஒருவராக நடிக்கும்
ஒருவருக்கு இத்தனை புகழ் என்றால்,
வாழ்ந்தவருக்கு ஏன் அப்படி இல்லை?
ஏன் சில்க்கை பார்க்கும் போது
எல்லோருக்கும் பாலியல் குறித்த
எண்ணமும், கேவலமான சிந்தனையும்
மட்டும் தோன்றுகிறது ? என்றால் நாம்
எதையும் எப்படி சொல்லப்
பட்டதோ அப்படியே ஏற்கும் மனப்
பான்மையில் உள்ளோம் என்பதற்கான
அறிகுறியே ..

மெர்லின் மன்றோவிற்கும்
..சுமித்தாவின் வாழ்க்கையும் ஏற
தாழ ஒரே சூழ்நிலைகள் தான். சிறு
வயதில் வறுமை, புறக்கணிப்பு,
திருமணம், திருப்புமுனை, மரணம்.
ஆனால் இடைப்பட்ட வாழ்க்கையில்
மெர்லின் மன்றோவிற்கும்
சில்க்குக்கும் நிறைய வித்தியாசங்கள்
உள்ளன,
மெர்லின் மன்றோ
அமெரிக்காவின் ஒரு அழகு
தேவதையாகவும், கவர்ச்சி
கண்ணியாகவும் கருதப்பட்டார் ,
இன்றளவும் அவருக்கு பல கோடி பேர்
ரசிகர்கள், ஆனால் சில்க் இன்று
நம்மிடையே மறைந்து போய் விட்டார்...
அவரின் ரசிகர் என்று
சொல்வதற்கு கூட
தயங்குகிறார்கள்....
சில்க் 1996 , தூக்கில் இட்டு
தற்கொலை செய்துக்
கொண்டார், இவர்
மரணத்தில் மர்மங்களின் முடிச்சுகள்
அவிழப்படாமல் உள்ளது, பலர்
காதல் தோல்வியென்றும்,
பாலியில் கொடுமையால்
தற்கொலை செய்து
கொண்டார் என்றும்
கூறுகின்றனர் , எது எப்படி இருந்தாலும்
. ஆந்திராவில் பிறந்து தமிழகம்
கண்டெடுத்த சில்க் சுமிதா தமிழ்
நாட்டின் மெர்லின் மன்றோ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக