திங்கள், 26 செப்டம்பர், 2016

நடிகர் டணால் தங்கவேலு @ கே. ஏ. தங்கவேலு நினைவு தினம் செப்டம்பர் 28.

நடிகர் டணால் தங்கவேலு  @ கே. ஏ. தங்கவேலு நினைவு தினம் செப்டம்பர் 28.

கே. ஏ. தங்கவேலு  (இறப்பு: 28
செப்டம்பர் , 1994  ) 1950 முதல் 1970
வரை தமிழ் திரைப்படங்களில்
நகைச்சுவை வேடத்தில் நடித்த
நடிகராவார். டணால் தங்கவேலு
என்று பரவலாக அழைக்கப்படுபவர்.
இவருடைய துணைவியார், எம்.
சரோஜாவுடன் இணைந்து நடித்த
கல்யாண பரிசு திரைப்படம்
புகழ்பெற்றது. இவர் சிவாஜி
கணேசன் மற்றும் பத்மினியுடன்
இணைந்து நடித்த தில்லானா
மோகனாம்பாள் , இவரை மேலும்
புகழ் பெறச் செய்தது.
இல்வாழ்க்கை
நடிகர் கே. ஏ. தங்கவேலுவும், எம்.
சரோஜாவும் இணையராக 50
படங்களுக்கு மேல் நடித்த பிறகு,
1958-ம் ஆண்டு காதல் திருமணம்
புரிந்தனர்.
திரைப்படங்கள்
சிங்காரி (1951)
அமரகவி (1952)
கலியுகம் (1952)
பணம் (1952)
அன்பு (1952)
திரும்பிப் பார் (1952)
பணக்காரி (1953)
இல்லற ஜோதி (1954)
சுகம் எங்கே (1954)
நண்பன் (1954)
பணம் படுத்தும் பாடு (1954)
பொன் வயல் (1954)
போன மச்சான் திரும்பி வந்தான்
(1954)
விளையாட்டு பிள்ளை (1954)
வைர மாலை (1954)
உலகம் பலவிதம் (1955)
எல்லாம் இன்பமயம் (1955)
கதாநாயகி (1955)
குலேபகாவலி (1955)
கோடீஸ்வரன் (1955)
கோமதியின் காதலன் (1955)
செல்ல பிள்ளை (1955)
மகேஸ்வரி (1955)
மங்கையர் திலகம் (1955)
மேதாவிகள் (1955)
மிஸ்ஸியம்மா (1955)
அலிபாபாவும் நாற்பது
திருடர்களும் (1955)
அமர தீபம் (1956)
காலம் மாறிப்போச்சு (1956)
குடும்ப விளக்கு (1956)
நல்ல வீடு (1956)
நாக பஞ்சமி (1956)
மர்ம வீரன் (1956)
மாதர்குல மாணிக்கம் (1956)
அலாவுதீனும் அற்புத
விளக்கும் (1957)
அம்பிகாபதி (1957)
எங்க வீட்டு மகாலக்ஷ்மி (1957)
கற்புக்கரசி (1957)
சக்ரவர்த்தி திருமகள் (1957)
சௌபாக்கியவதி (1957)
நீலமலை திருடன் (1957)
பக்த மார்க்கண்டேயா (1957)
பாக்யவதி (1957)
மல்லிகா (1957)
மாயா பஜார் (1957)
வணங்காமுடி (1957)
உத்தம புத்திரன் (1958)
கடன் வாங்கி கல்யாணம் (1958)
கன்னியின் சபதம் (1958)
காத்தவராயன் (1958)
செஞ்சுலக்ஷ்மி (1958)
நீலாவுக்கு நெறஞ்ச மனசு
(1958)
பூலோக ரம்பை (1958)
மனமுள்ள மறுதரம் (1958)
மாங்கல்ய பாக்கியம் (1958)
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
கல்யாண பரிசு (1959)
தாய் மகளுக்கு கட்டிய தாலி
(1959)
நான் சொல்லும் ரகசியம் (1959)
மஞ்சள் மகிமை (1959)
அடுத்த வீட்டுப் பெண் (1960)
அன்பிற்கோர் அண்ணி (1960)
இரும்புத்திரை (1960)
கடவுளின் குழந்தை (1960)
கைதி கண்ணாயிரம் (1960)
கைராசி (1960)
தங்கம் மனசு தங்கம் (1960)
தங்கரத்தினம் (1960)
தெய்வ பிறவி (1960)
நான் கண்ட சொர்க்கம் (1960)
பாட்டாளியின் வெற்றி (1960)
புதிய பாதை (1960)
மீண்ட சொர்க்கம் (1960)
அரசிளங்குமரி (1961)
திருடாதே (1961)
பாசமலர் (1961)
எங்க வீட்டுப் பெண் (1965)
Konte pilla (1967)
உயிர் மேல் ஆசை (1967)
ராஜாத்தி (1967)
தில்லானா மோகனாம்பாள்
(1968)
நம் நாடு (1969)
வியட்நாம் வீடு (1970)

*****************************
சந்திரபாபுவைப் போலவே
1950-களில் நல்ல மார்க்கெட்டில்
இருந்த காலம் தொடங்கி,
பின்னால் நாகேஷ் காலம்,
சோ, தேங்காய்
சீனிவாசன்,சுருளி ராஜன்
காலங்களையும் தாண்டிக்
கொஞ்சமும் சலிப்பு
ஏற்படுத்தாத, பொறி சற்றும்
குறையாத நடிப்பு
இவருடையது.
‘கல்யாண பரிசு’ பைரவன்
மட்டுமல்ல. ‘அறிவாளி’
படத்தில் முத்துலட்சுமியுடன்
பூரி சுடும் காட்சி,
தெய்வப்பிறவியில் “அடியே, நீ
என்ன சோப்பு போட்டாலும்
வெள்ளையாக மாட்டே”,
“பார்த்தியா, இதெல்லாம்
எடுத்தா அதெல்லாம் வரும்னு
சொன்னனேக் கேட்டியா”
போன்ற பல வசனங்கள் பிரபலம்.
வீரக்கனல்’ படத்தில்
“தப்பித்தவறி அடி ஒங்க மேல
பட்டுருச்சின்னு
வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று
தங்கவேலு பேசும் வசனம்!
“தங்கவேலு சுவாமியாக
வந்ததும் நாங்களே!
வேலுத்தங்கமாக வந்ததும்
நாங்களே! காதலர்ர்ர்ரா...க
வந்ததும் நாங்களே!” என
‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில்
பேசுவதும் மறக்க
முடியாதது.
‘மிஸ்ஸியம்மா’வில் பாட்டு
கற்றுக்கொள்ளும் தங்கவேலு.
அப்போது ஜெமினி அந்த
அறைக்குள் வந்தவுடன்
வெட்கப்பட்டுத் தவிக்கிற
காட்சி!
‘திருடாதே’ படத்தில் “
பிசாசு ஏன் புரோட்டா
கடைக்கு வருது? ஒரு
வேளை குஞ்சு
பொரிச்சிரிக்குமோ?’’
‘நம் நாடு’ படத்தில் “ ஆஹா
ஓஹோ பேஷ் பேஷ்” “கொல
பண்ணது கூட லேட்டுங்க.
நான் அமுக்குனதுலதான்
செத்தான்!’’ என்ற வசனம்.
இவையெல்லாம் அந்தக் கால
திரைப்பட நகைச்சுவையில்
முத்திரை வசனங்கள்!
வடிவேலுவின்
வசனங்களையும்
கவுண்டமணியின்
கவுன்டர்களையும் வைத்து
இன்று இணைய உலகின்
‘நையாண்டி’ பதிவுகளும்
பின்னூட்டங்களும் பிழைப்பு
நடத்துவதுபோல் அன்றைய
திண்ணைப் பேச்சுப்
பெரிசுகளுக்குத்
தங்கவேலுவின் வசனங்கள்தான்
வாய்ச்சரக்கு.
சந்தானம் தனக்குப் பிடித்த
காமெடியன்களாக
தங்கவேலுவையும்
கவுண்டமணியையும்
அடிக்கடி குறிப்பிடுகிறார்.
சந்தானத்தின் நடிப்பில்
கவுண்டமணி தெரியும்
அளவுக்கு தங்கவேலு
தெரிவதில்லை. இதற்கு
முக்கியமான காரணம்
தங்கவேலுவின் நாசூக்கான
நடிப்புதான். தங்கவேலு எந்தப்
படத்திலும் கல்யாணப் பெண்-
மாப்பிள்ளையைப் பார்த்து
“இவ என்ன யாரோடயாவது
ஓடிப் போயிட்டாளா? இல்ல
இவன்தான் செத்துப்
போயிட்டானா?” என்று
கேட்கவே மாட்டார்.
தொந்தரவான வில்லனைக்
கூட “அட நீ நல்லாருக்க”
என்பார்.
‘பணம்’(1952) படத்தில்
வயதானவராக நடித்த
பின்தான் தங்கவேலு
பிசியான நடிகரானார். ‘பணம்’
படத்தில் நடித்ததற்காகப்
படத்தின் தயாரிப்பாளர்
கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன் அந்தக்
காலத்தில் தங்கவேலுவுக்கு
5,000 ரூபாய் கொடுத்தாராம்.
இவரும் அந்தப் பணத்தை
வீட்டுக்குக் கொண்டுபோய்
காட்ட, இவருடைய பெரியப்பா
“அடப் பாவி . அன்னமிட்ட வீட்டுல
கன்னமிடலாமாடா?
கலைவாணர்கிட்ட திருடுனா
நீ விளங்கவே மாட்ட”ன்னு
திட்டி அடித்து
இழுத்துக்கொண்டு
என்.எஸ்.கேயிடம்
அழைத்துக்கொண்டு
போனார். என்.எஸ்.கே “அந்த
பணம் தங்கவேலுவுக்கு நான்
கொடுத்த சம்பளம்” என்று
சொன்னபோதுதான்
சமாதானம் ஆனாராம்.
எம்.ஜி.ஆர் அறிமுகமான ‘சதி
லீலாவதி’ (1936)
திரைப்படத்தில்
தங்கவேலுவுக்கு ஒரு சின்ன
பாத்திரம். அதே படத்தில்
என்.எஸ்.கே, டி.எஸ் பாலையா
போன்றோரும் நடித்தார்கள்.
“இன்னைக்கு உன்னை ஷூட்
பண்ணப் போறோம்”னு
இயக்குநர் தங்கவேலுவிடம்
சொன்னதும் இவர் பதறிப்
பயந்து என்.எஸ்.கே-விடம் போய்
“அண்ணே, என்னை சுடப்
போறாங்களா?” என்று
அழுதாராம். “
பைத்தியக்காரா! ஒன்னைப்
படம் பிடிக்கப் போறாங்கடா!”
என்று என்.எஸ்.கே விளக்கம்
சொன்னாராம்.
தங்கவேலுவுக்கு பின்னணிப்
பாடல்கள் பலவற்றைப் பாடியவர்
எஸ்.சி.கிருஷ்ணன்.
‘கண்ணே நல்வாக்கு நீ கூறடி,
நான் நாலு நாளில்
திரும்பிடுவேன். என் செல்வக்
களஞ்சியமே! என்
சின்னக்கண்ணு மோகனமே!’
சீர்காழி சில பாடல்கள்
பாடினார். பிரபலமான
‘ரம்பையின் காதல்’(1956) படப்
பாடல். ‘சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா சமரசம்
உலாவும் இடமே’சுடுகாட்டில்
தங்கவேலு பாடுவதாகக்
காட்சி.
பி.பி.ஸ்ரீனிவாஸும்
பாடியிருக்கிறார். ‘அடுத்த
வீட்டுப் பெண்’ படத்தில்
‘கண்ணாலே பேசிப் பேசிக்
கொல்லாதே!’ ரொம்பப்
பிரபலம். கண்களை நன்கு
உருட்டி நடிக்கத் தெரிந்த
நடிகர்களில் தங்கவேலு
டாப்கிளாஸ் நடிகர்.
தங்கவேலு 10/10
1.புதுச்சேரி மாநிலம்
காரைக்கால்தான் தங்க
வேலுவின் சொந்த ஊர்.
2.பத்து வயதுமுதல்
நாடகங்களில் நடிக்கத்
தொடங்கிய தங்கவேலு 20
வயதில் ‘யதார்த்தம்’
பொன்னுசாமி நாடகக்
குழுவில் பிரபலமான
நகைச்சுவை நடிகராக
மாறினார். அப்போது
கலைவாணர் என்.எஸ்.
கிருஷ்ணன் புதிதாகத்
தொடங்கிய தனது நாடகக்
குழுவுக்குத் தன் நண்பரான
தங்கவேலுவை
இழுத்துக்கொண்டார்.
3. என்.எஸ்.கிருஷ்ணனும்
தங்கவேலுவும் கந்தசாமி
முதலியாரின் நாடகக்
குழுவில் அண்ணன் தம்பியாக
பழகியவர்கள். கந்தசாமி
முதலியாரின் ‘பதிபக்தி’
நாடகம்தான் பின்னாளில் ‘சதி
லீலாவதி(1936)’ என்ற படமாகத்
தயாரிக்கப்பட்டது. அதில்தான்
அறிமுகமானார் தங்கவேலு.
4. சொந்த நாடகக் குழுவைத்
தொடங்கி, பல நாடகங்களை
நடத்திய தங்கவேலு
சினிமாவில் வாய்ப்புகள்
இல்லாமல் போனதும் 1994-வரை
தொடர்ந்து நாடகங்களில்
நடித்திருக்கிறார்.
5. தங்கவேலு 20 வயதில்
மிகவும் ஒல்லியாக இருப்பார்.
அதனால் தனக்கு வசதியாக
இருக்குமென்று கருதி
வயதான வேடங்களையே ஏற்று
நடித்தார். பணம், திரும்பிப்பா
இல்லற ஜோதி, சுகம் எங்கே
உள்படப் பல படங்களில் 60 வயது
வேடங்களில் நடித்தார்.
6. ‘சிங்காரி’ என்ற படத்தில்
டணால்... டணால்... என்று
அடிக்கடி வசனம் பேசியதால்
தங்கவேலுவின் பெயர்
முன்னால் டணால் என்ற
வார்த்தை ஒட்டிக்கொண்டது.
7. கலைவாணர்,
எம்.கே.தியாகராஜ பாகவதர்
தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி,
ஜெமினி கணேசன் வரை
சுமார் 1,000 படங்களில்
நடித்திருக்கிறார்.
8. நகைச்சுவை ஜோடிகளில்
கலைவாணர் என்.எஸ்.
கிருஷ்ணன் மதுரம்
ஜோடிக்குப் பிறகு தங்கவேல
- எம்.சரோஜா ஜோடி சுமார் 50
படங்களில் இணைந்து நடித்து
புகழ்பெற்றபின் காதல்
திருமணம் செய்துகொண்டனர்.
9. கடந்த 1994-ம் ஆண்டு தமது 77-
வது வயதில் மறைந்த
தங்கவேலு தி.மு.கவின் தீவிர
உறுப்பினராக இருந்தார். அவர்
மறைந்தபோது தி.மு.கவின்
கொடிகள் அரைக் கம்பத்தில்
பறக்க விடப்பட்டன.
10. தங்கவேலுவின் முதல்
மனைவி ராஜாமணி அம்மாள்.
அவருக்கு இரண்டு மகள்கள்.
இரண்டாவது மனைவி நடிகை
எம்.சரோஜாவுக்கு ஒரே மகள்.
########################

வரலாறு படைத்த தமிழ்க்
கலைஞர்கள் : கட்டுரை 12
கதாநாயகர்களுக்கு இணையான
கலகலப்பு நாயகர்கள்!
ஆ ரம்பகால
படங்களில் தமிழும் சமஸ்கிருதமும்
கலந்த மணிப்பிரவாள நடையிலான
வசனமாக இருந்தாலும், அதனைத்
தொடர்ந்து தெள்ளுத் தமிழில்
துள்ளி விளையாடிய வசனங்களாக
இருந்தாலும் இரண்டையுமே நாடக
பாணியில் பேசுவதுதான் நாயக-
நாயகிகளின் வழக்கம். ஆனால், மக்கள்
பேசும் நடையில் இயல்பாக வசனம்
பேசியவர்கள் நகைச்சுவை
நடிகர்கள்தான். கதாநாயகர்களுக்கு
எந்தவிதத்திலும் திறமையில்
குறைவில்லாத நகைச்சுவை
நடிகர்களின் பங்கு தமிழ்த்திரை
வரலாற்றில் தனி முத்திரை
பதித்துள்ளது.
டி.எஸ்.பாலையா :
வ சனத்தை
காட்சிக்கேற்ற ஏற்றத்தாழ்வுடன்
உச்சரிப்பதில் மட்டுமின்றி,
அதற்கேற்ற உடலசைவுகளாலும்
ரசிகர்களைக் குலுங்கக் குலுங்கச்
சிரிக்க வைத்தவர்
திருநெல்வேலிக்காரரான
டி.எஸ்.பாலையா.
அமெரிக்காவிலிருந்து இங்கு
வந்து தமிழ்ப்படங்களைத் தந்த எல்லீஸ்
ஆர் டங்கனின் இயக்கத்தில் மக்கள்
திலகம் எம்.ஜி.ஆர், கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர்
அறிமுகமான ‘சதி லீலாவதி’தான்
பாலைய்யாவுக்கும் முதல் படம்.
குணசித்திர வேடம், வில்லன்
பாத்திரம், நகைச்சுவை நடிகர் என
பன்முகத்தன்மை கொண்ட நடிகராகத்
தமிழ்த் திரையில் தன் தடத்தை
அழுத்தமாகவே பதித்தார்
பாலைய்யா.
ஏழை படும்பாடு, ஓர் இரவு,
அம்பிகாபதி, மதுரைவீரன், ஹலோ
மிஸ்டர் ஜமீன்தார் எனப் பல படங்களில்
தன் நடிப்பின் பன்முகத்தைக் காட்டிய
பாலைய்யாவின் நகைச்சுவை
நடிப்பை ‘தில்லானா
மோகனாம்பாள்’, ‘காதலிக்க
நேரமில்லை’, ‘பாமா விஜயம்’
உள்ளிட்ட பல படங்களில் தமிழக மக்கள்
ரசித்தனர். தில்லானா
மோகனாம்பாள் படத்தில், அச்சுஅசல்
நாதசுரக் கலைஞராக நடிகர் திலகம்
சிவாஜி எந்தளவுக்கு சிறப்பாக
நடித்திருந்தாரோ அதே அளவிற்கு
ஒரு தவில் வித்வானாகத் தன்
திறமையான நடிப்பை
வெளிப்படுத்தியிருப்பார்
பாலையா. அத்துடன்
நகைச்சுவையிலும்
அசத்தியிருப்பார்.
படத்தில் இடம்பெறும் ரயில் பயணக்
காட்சியில், ”ஆட்டம் ரொம்ப
ஜாஸ்தியா இருக்கே” என்றபடி
பாலைய்யா செய்யும் ரகளைகள்
ரயில் பெட்டியைப் போலவே
ரசிகர்களையும் குலுங்கக்
குலுங்க சிரிக்க வைத்தது.
பத்மினியுடன் நேரத்தை
செலவிடவேண்டும் என்பதற்காக,
சிவாஜி, “நான் திருவாரூரில்
இறங்கிக்குறேன்” என்பார்.
ஏனென்று சக கலைஞர்கள் கேட்க,
“அங்கே ஒரு சோடா கடைக்காரனைப்
பார்க்கணும்” என்பார் சிவாஜி
எரிச்சலாக. உடனே பாலைய்யா,
“நானும் அங்கேயே
இறங்கிக்குறேன். நான் ஒரு பீடா
கடைக்காரனைப் பார்க்கணும்” என்று
பதிலடி கொடுப்பார்.
காதலிக்க நேரமில்லை படத்தில்
நாகேஷ், தான் எடுக்கப் போகும்
சினிமாவின் கதையை
விளக்கும்போது அதற்கு
பாலைய்யா கொடுக்கும் உணர்ச்சி
பாவங்களும், வெளிப்படுத்தும்
உடல்மொழியும் மாஸ்டர் பீஸ். அந்தப்
படத்தின் கதாநாயகன் பெயர்
அசோகன் (ரவிச்சந்திரன்). அவர்
சாதாரண ஆள் என அலட்சியப்படுத்தி
ஒருமையில் பேசுவார்
பாலைய்யா. அந்த அசோகனுக்குத்
தான்தான் அப்பா என ஒரு பெரிய
பணக்காரர் வந்து சொன்னதும்
“அசோகர் உங்க மகரா?” என்று
மகனுக்குக்கூட ‘ர்’ விகுதி போட்டு
மரியாதையுடன் பாலைய்யா
உச்சரிக்கும் இடம் டாப் க்ளாஸ்.
திருவிளையாடல் படத்தில்
ஹேமநாத பாகவதர் எனும் இசை
வித்வானாக அவர் காட்டிய
ஜபர்தஸ்ஸூம், பாண்டிய மன்னன்
அவையில் போட்டி போட
முடியாது எனப் புரிந்துகொண்டு
மூட்டை கட்டுவதும் அபாரம். பாமா
விஜயம் படத்தில் நடுத்தர வர்க்கத்து
வீட்டை நிர்வாகிக்கும் பெரியவராக
நகைச்சுவையும்
பொறுப்புணர்வும் கலந்த
பாலைய்யாவின் நடிப்பும், அந்தப்
படத்தில் அவர் இடம்பெற்ற ‘வரவு
எட்டணா, செலவு பத்தணா’ பாடல்
காட்சியும் இன்றளவும் நடுத்தர
வர்க்கத்தினருக்கு நகைச்சுவை
கலந்த பாடம்.
ஜே.பி. சந்திரபாபு :
தமிழில் ஓர்
ஆங்கில பாணி நடிகர் என்று
சொல்லக்கூடிய அளவிற்கு
அசாத்திய திறமையுடன் மக்களை
சிரிக்கவைத்து படங்களை ரசிக்க
வைத்தவர் சந்திரபாபு.
தூத்துக்குடியில் பிறந்தவர்.
இவருடைய அப்பா இந்திய சுதந்திரப்
போராட்டத்தில் பங்கேற்று சிறை
சென்றவர்.
சொத்துகளை பிரிட்டிஷ் அரசாங்கம்
பறிமுதல் செய்தது.
சந்திரபாபுவின் அப்பா நடத்திய
‘சுதந்திர வீரன்’ என்ற பத்திரிகையும்
முடக்கப்பட்டது. இதனால்
சந்திரபாபுவின் குடும்பம்
கொழும்புக்குச் சென்றது. அவரது
தந்தையாரின்
விடுதலைக்குப்பிறகு
சென்னையில் குடியேறியதால்,
கலையார்வம் மிக்க சந்திரபாபு
சினிமாவில் நடிப்பதற்கான
வாய்ப்புகளைத் தேடியலைந்தார்.
அவருடைய நண்பர் கணபதி
என்பவர்தான் ஆதரவாக இருந்தார்.
சரியான வாய்ப்புக் கிடைக்காமல்
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு
கைதாகி நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்ட சந்திரபாபு, அங்கே
ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களைப்
பேசி நீதிபதியை அசத்தி,
சிறைக்குப் போகாமல்
விடுதலையானாராம்.
ஆங்கில பாணி நடிப்பினால்
முன்னணி இயக்குநர்களிடம் தன்
திறமையை வெளிப்படுத்திக்
காட்டிய சந்திரபாபுவுக்கு 1947ல்
‘தன அமராவதி’ என்ற படத்தில்
சிறுவேடத்தில் அறிமுகம்
கிடைத்தது. அதன்பிறகும்
அவருக்கு கலையுலகில்
போராட்டம்தான். ஜெமினி பட
நிறுவன அதிபர் எஸ்.எஸ்.வாசன்
இவரது திறமையை அறிந்து 1952ல்
‘மூன்று பிள்ளைகள்’ என்ற படத்தில்
வாய்ப்பளித்தார். தொடர்ந்து
டி.ஆர்.மகாலிங்கத்துடன்
‘சின்னதுரை’ என்ற படத்தில் நடித்து,
‘போடா ராஜா பொடி நடையா’ என்ற
பாடலையும் பாடினார்.
நடிப்பிலும் பாட்டிலும் மேற்கத்திய
பாணியைக் கையாண்டார்
சந்திரபாபு. மோகனசுந்தரம் என்ற
படத்தில் நடிக்கவும் அவருக்கு
வாய்ப்பு கிடைத்தது. சம்பளம் 200
ரூபாய்.
சென்னைத் தமிழை திரையில்
அழகாகப் பேசி மக்களைக் கவர்ந்த
முதல் நடிகரும் சந்திரபாபுதான்.
ஏ.வி.எம்மின் ‘சகோதரி’ படம்தான்
சந்திரபாபுவைத் திரையுலகில்
நிலைநிறுத்தியது. படம் தயாரான
பிறகு, சந்திரபாபுவின்
நகைச்சுவையும் ‘நான் ஒரு
முட்டாளுங்க’ என்று அவர் பாடிய
பாடலும் சேர்க்கப்பட்டு,
அவற்றாலேயே அந்தப் படம் பெரிய
வெற்றிப்படமானது.
நடிகர்திலகம் சிவாஜியுடன் ‘சபாஷ்
மீனா’ படத்தில் நடித்த
சந்திரபாபுவின் நகைச்சுவை பலத்த
வரவேற்பைப் பெற்றது. மக்கள் திலகம்
எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் படமான
‘நாடோடி மன்னன்’ படத்திலும்
சந்திரபாபுவின் நடிப்பு பலரையும்
கவர்ந்தது. 200 ரூபாய் சம்பளம்
வாங்குவதற்கே போராடிய
சந்திரபாபு ஒரு கட்டத்தில் 1 லட்ச
ரூபாய் சம்பளம் கேட்டுப் பெறும்
நிலைக்கு வளர்ந்தார்.
மகாதேவி, பெண், கல்யாணம்
பண்ணியும் பிரம்மச்சாரி,
புதையல், குலேபகாவலி, அன்னை,
பதிபக்தி, போலீஸ்காரன் மகள்,
மணமகன் தேவை, பாத காணிக்கை,
ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட
படங்களில் அவர் பாடிய பாடல்கள்
அனைவராலும் ரசிக்கப்பட்டன.
‘புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை’, ‘உனக்காக
எல்லாம் உனக்காக’, பம்பரக்
கண்ணாலே காதல் சங்கதி
சொன்னாலே’, ‘பொறந்தாலும்
ஆம்பளையா பொறக்கக்கூடாது’,
‘சிரிப்பு வருது. சிரிப்பு வருது’
என சந்திரபாபு பாடிய பாடல்களில்
நகைச்சுவை உணர்வுடன்
வாழ்க்கைத் தத்துவங்களும்
வெளிப்பட்டன. பெரும்பாலான
பாடல்கள் கவியரசர் கண்ணதாசன்
எழுதியவை.
திரை வாழ்ககையிலும் சொந்த
வாழ்க்கையிலும் பல கசப்பான
அனுபவங்களை சந்தித்தவர்
சந்திரபாபு. ஆனால், அந்த சோகங்கள்
எதுவும் இன்றைய
தலைமுறைக்குத் தெரியாதபடி
இன்றும் சின்னத்திரையில்
ஒளிபரப்பாகும் பழைய
பாடல்களிலும் நகைச்சுவை
காட்சிகளிலும் சிரிக்க
வைத்துக்கொண்டிருக்கிறார் அவர்.
டணால் கே.ஏ. தங்கவேலு :
“எழுத்தாளர் பைரவன் நீங்கதானே?”
“சாட்சாத் நான்தான்”
“போராட்டம்னு ஒரு கதை
எழுதுனீங்களே?”
”ஆமா.. அது பெரிய
போராட்டமாச்சே.”
“அதிலே ஏன் சார் கடைசியா
கதாநாயகி செத்துப்போனா?”
“கடைசியாத்தானே செத்தா.. அவ
தலைவிதி செத்தா. ஆளை விடுங்க”
நாடக மேடையிலிருந்து
திரைக்கு வந்த நகைச்சுவை
நடிகர்களில் கே.ஏ.தங்கவேலு வசன
உச்சரிப்பாலும் விழி
அசைவுகளாலும் ரசிகர்களைக்
கவர்ந்தவர். ‘டணால்’ தங்கவேலு என
அழைக்கப்பட் இவர் இன்றைய
புதுச்சேரி யூனியன்
பிரதேசத்தின் காரைக்கால்
பகுதியைச் சேர்ந்தவர். சந்திரபாபு
புகழ்பெற்றிருந்த காலத்திலும்
பின்னர் நாகேஷ் கோலோச்சிய
காலத்திலும் தனது
நகைச்சுவைக்கெனத் தனி ரசிகர்
பட்டாளத்தைக் கொண்டிருந்தவர்
தங்கவேலு.
‘கல்யாணப் பரிசு’ படத்தில் மன்னார்
அண்ட் கம்பெனி மேனேஜர்,
எழுத்தாளர் பைரவன் என்று ப்ளாக்
அண்ட் ஒயிட் காலத்திலேயே கலர்
கலராக நகைச்சுவை ரீல் விட்டு
கலக்கியவர். ‘அறிவாளி’, ‘கைதி
கண்ணாயிரம்’ ‘எங்க வீட்டுப் பிள்ளை’
போன்ற படங்களிலும்
தங்கவேலுவின் நகைச்சுவை
பெரிதும் கவர்ந்தது.
தில்லானா மோகனாம்பாள் படத்தில்
நட்டுவாங்கக்காரராக
நடித்திருப்பார். சிவாஜி ட்ரூப்பில்
பாலைய்யாவின் கலக்கல் என்றால்,
பத்மினி ட்ரூப்பில் தங்கவேலு
கலக்குவார். தங்கவேலும் அவர்
மனைவியும் நடிகையுமான
எம்.சரோஜாவும் பல படங்களில்
இணைந்து நடித்து
கலகலப்பாக்கினர். திராவிட இயக்கக்
கொள்கைகளில் பற்றுள்ளவரான
தங்கவேலு, கடைசிவரை
தி.மு.ககாரராக இருந்தார். அவர்
இறந்தபோது தி.மு.க கொடிகள்
அரைக்கம்பத்தில் பறந்து அவருக்கு
அஞ்சலி செலுத்தின.
தமிழ்த்திரைப்பட வரலாற்றின்
தொடக்கத்திலிருந்தே
நகைச்சுவைக்குத் தனி இடம்
உண்டு. புளிமூட்டை ராமசாமி,
ஏ.கருணாநிதி, குலதெய்வம்
ராஜகோபால் உள்ளிட்ட பலரும்
ரசிகர்களைக் கவர்ந்தனர்.
கலைவாணர், சந்திரபாபு, நாகேஷ்,
சுருளிராஜன், கவுண்டமணி,
விவேக், வடிவேல், சந்தானம் என
ஒவ்வொரு கட்டத்திலும் தனி
முத்திரை பதித்த நகைச்சுவை
நடிகர்கள் ஹீரோக்களுக்கு
இணையாக வலம் வந்த
பெருமையும் தமிழ்த்திரைக்கே
உரியது. அவர்களின் காமெடி
தர்பாருடன் இணைந்து கலக்கிய
சோ, தேங்காய் சீனிவாசன்,
எஸ்.எஸ்.சந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன்,
எஸ்.வி.சேகர், செந்தில், சார்லி,
தாமு, வையாபுரி, தம்பி
ராமைய்யா உள்ளிட்ட ஒரு துணைப்
பட்டாளமும் தமிழ்த் திரையை
ரசிக்கவைத்துக்கொண்டே
இருக்கிறது.
Thanks-tamil The Hindu.,Nakeeran. Wikipedia.

1 கருத்து:

  1. எங்கள் விட்டுப்பிள்ளை
    படத்தை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே...அதுவும் சிறந்த பாத்திரமாயிற்றே..

    பதிலளிநீக்கு