புதன், 21 செப்டம்பர், 2016

பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம் செப்டம்பர் 25 ,

பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்
செப்டம்பர் 25 ,

உடுமலை நாராயணகவி
( செப்டம்பர் 25 , 1899 - மே 23, 1981 )
என்கிற நாராயணசாமி முன்னாள்
தமிழ்த் திரைப் பாடலாசிரியரும்,
நாடக எழுத்தாளரும்
ஆவார்.விடுதலைப்
போராட்டத்தின் போது தேசிய
உணர்வு மிக்க பாடல்களை எழுதி
மேடை தோறும் முழங்கியவர்;
முத்துசாமிக்கவிராயரின்
மாணவர்; ஆரம்பக் காலத்தில்
நாடகங்களுக்கு பாடல்
எழுதினார். இவருடைய
பாட்டுகள் நாட்டுப்புற இயலின்
எளிமையையும், தமிழ் இலக்கியச்
செழுமையையும்
கொண்டிருந்தன. 1933-ல்
திரைப்படங்களுக்கு பாடல் எழுத
ஆரம்பித்தவர். நாராயணகவி என்று
பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர்
இனமென்று தன்னை அடையாளம்
காட்டிக் கொண்டவர்.
ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை
எழுதிய நாராயணகவி, மகாகவி
பாரதியாரின் நட்புக்குப்பின்
பாமர மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் சமுதாயப் பாடல்களை
எழுதி அதன் மூலம் சீர்திருத்தக்
கருத்துக்களைப் பரப்பியவர்.
கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணனுக்கு
`கிந்தனார்’ கதாகாலட்சேபம்
எழுதியதால் கலைவாணரின்
குருவாக விளங்கியவர்.
அண்ணாத்துரை எழுதிய
வேலைக்காரி , ஓர் இரவு ,
நல்லதம்பி போன்ற படங்களுக்கும்
மு. கருணாநிதி கதை வசனம்
எழுதிய பராசக்தி , மனோகரா
திரைப்படங்களுக்கும், பிரபாவதி,
காவேரி , சொர்க்கவாசல்,
தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி,
மாங்கல்யபாக்கியம் , சித்தி, எங்கள்
வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர் ,
ஆதிபராசக்தி , தேவதாஸ் போன்ற
படங்களுக்குப் பாடல்கள்
எழுதியவர்.
ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை
எழுதியுள்ள நாராயணகவி
இயல்பாகவே இனிமையான
சுபாவம் கொண்டவர்.
நேர்மையும், சொல்திறமையும்
மிக்கவர். எவ்வகையிலும் தலை
வணங்காத உறுதி உடையவர்.
பிறருக்கு உதவுகின்ற மனம்
படைத்தவர். திரையுலகில்
தமக்கென ஒரு மதிப்பையும்
புகழையும் வைத்திருந்தவர்.
இளமை
1899ஆம் ஆண்டில் கோயம்புத்தூர்
மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை
வட்டத்தில் உள்ள பூவிளைவாடி
என்னும் பூளைவாடிச்
சிற்றூரில் 24 மனைத் தெலுங்கு
செட்டியார் இனத்தைச் சேர்ந்த
கிருஷ்ணசாமி முத்தம்மாள்
இணையருக்கு மகனாகப்
பிறந்தார். இவருக்குப் பெற்றோர்
இட்ட பெயர் நாராயணசாமி
என்பதாகும்.
இளம் வயதிலேயே தம் தாய்
தந்தையரை இழந்த நாராயணசாமி
வறுமையில் உழன்றார். தனது
தமையனார் தனுஷ்கோடியின்
ஆதரவில் வாழ்ந்தார்.
சுற்றுப்புறச் சிற்றூர்களுக்கு
தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று
விற்றார். இதனால் ஒரு
நாளைக்கு 25 பைசா வருமானம்
கிடைத்தது. நான்காம்
வகுப்போடு தனது
பள்ளிப்படிப்பை முடித்துக்
கொண்ட நாராயணசாமி,
கிராமியக் கலைகளான
புரவியாட்டம், சிக்குமேளம்,
தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு,
ஒயில்கும்மி போன்ற கொங்கு
மண்ணின் கலைகளில் மிகுந்த
ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன்
பங்கேற்றார்.
நாடக ஈடுபாடு
பூளைவாடியில் நிகழும்
மாரியம்மன் திருவிழாவில்
ஆண்டுதோறும் நடைபெறும்
'இராமநாடகம்' என்ற நாடகத்தில்
இலக்குவன் வேடம் பூண்டவர்
இவரே. இளமைப் பருவத்தில்
இவருக்கிருந்த கலை ஈடுபாடே
பின்னர்த் திரைத் துறையில்
ஈடுபட வழிகாட்டியாய்
அமைந்தது. அக்காலத்தே
நாடகத்துறையில் புகழ்பெற்றுச்
சிறந்த மதுரை சங்கரதாஸ்
சுவாமிகளின் நெருங்கிய
நண்பராக இருந்தவர் உடுமலைச்
சரபம் முத்துசாமிக் கவிராயர்
என்பவர்.இவர் 'ஆரிய கான சபா'
என்னும் நாடக மன்றத்தின்
ஆசிரியராகவும் இருந்தார். இவர்
ஒரு முறை பூளைவாடித்
திருவிழாவில் நாராயணசாமி
பங்கு பெற்ற நாடகக் காட்சிகளைக்
கண்டு அவரைத் தம்முடன்
அழைத்துச்
சென்றார்.பன்னிரண்டாம் வயது
முதல் இருபத்தைந்தாம் வயது
வரை முத்துசாமிக் கவிராயர்
செல்லுமிடம் எல்லாம்
உடன்சென்று நாடகம் நடித்தும்,
எழுதியும், பாடியும் அதன்
நுட்பங்கள் அனைத்தையும்
அறிந்தார்.
இருபத்தைந்தாம் வயதில் ஊர்
திரும்பிய கவி தேசிய எழுச்சி
மிகுந்திருந்த அக்காலத்தில்
கதர்க்கடை ஒன்றைத்
தொடங்கினார். கதர்ப்பாட்டுப்
பாடி ஊர் ஊராகச் சென்று கதர்
விற்றார். அப்போதுதான்
பேச்சியம்மாள் என்பவரை
மணந்தார். இவர்களுக்கு நான்கு
ஆண்மக்கள் பிறந்தனர்.
வாணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தால்
கடன் தொல்லை ஏற்பட்டது.'இந்தக்
கடனை எல்லாம் திருப்பித் தரும்
வரை இந்த ஊர் மண்ணை மிதிக்க
மாட்டேன் எனச் சூளுரை செய்து
கையில் நூறு ரூபாயோடு
பிறந்த ஊரை விட்டுப்
புறப்பட்டார். தன்மானம் ஒன்றையே
துணையாகக் கொண்டு மதுரை
சங்கரதாஸ் சுவாமிகளைச்
சென்றடைந்தார். அவரிடம்
முறையாக யாப்பிலக்கணம்
முழுதும் ஐயந்திரிபறக்
கற்றுணர்ந்தார். நாடக மன்றங்கள்
நிறைந்த மதுரை இவருக்கு
உதவியாய் இருந்தது.
விடுதலைப்
போரில் ஈடுபாடு
மதுரையில் நாராயணசாமி பல
நாடகங்களுக்கு உரையாடல்களும்
பாடல்களும் எழுதினார். அதே
சமயத்தில் தேசத்தில் சுதந்திர
வேள்வித்தீ கொழுந்துவிட்டு
எரியத் தொடங்கியிருந்தது. தன்
பங்காக ஏராளமான தேசிய
உணர்வுப் பாடல்களை எழுதி
அன்றைய மேடைகள் தோறும்
முழங்க வைத்தார்.
சொந்த மண்ணை
அடைதல்
ஒருமுறை மதுரை நாடக
சங்கத்தார் இவரின்
கலைத்திறத்தைப் பாராட்டி
வழங்கிய ஆயிரம் ரூபாய்க்கும்
புத்தகங்களாகவே வாங்கினார்.
அப்போது ஊரில் உள்ள கடன்
நினைவுக்கு வரவே மீண்டும்
பொருளீட்டினார். ஈட்டிய
பணத்துடன் சென்று தன்
ஊருக்குப் புறத்தே நின்று
கடனையெல்லாம் அடைத்த பிறகே
ஊருக்குள் நுழைந்தார்.
திராவிட இயக்கத்
தொடர்பு
மதுரையில் வாழ்ந்த போது
அங்கு முகாமிட்டிருந்த
டி.கே.எஸ்
நாடகக்குழுவினரோடு ஏற்பட்ட
தொடர்பால் என்.எஸ்
கிருஷ்ணனுடன் நெருங்கிய
தொடர்பு ஏற்பட்டது.கலைவாணர்
தொடர்பால் பெரியார், அண்ணா,
கலைஞர், பாவேந்தர் முதலிய
திராவிட இயக்கத் தலைவர்களின்
நட்பு கிடைத்தது. அதனால்
திராவிடர் இயக்கப்பற்றும்,
பகுத்தறிவுப் பார்வையும்
கவிக்குக் கிடைத்தன.
திரையுலகத்
தொடர்பு
நாராயணகவியை கிராமபோன்
கம்பெனிக்கு பாட்டெழுதித் தர
வருமாறு இயக்குநர்
ஏ.நாராயணன் சென்னைக்கு
அழைத்தார். அப்படியே திரைப்படப்
பாடல் உலகிலும் கவிராயர்
நுழைந்தார். முதன்முதலாக
கவிதை எழுதிய திரைப்படம்
"சந்திர மோகனா அல்லது
சமூகத்தொண்டு" ஆகும்.
"கவிராயர்" எனத்
திரையுலகத்தினரால்
அழைக்கப்பட்ட இவரிடம்
பாடல்களைப்பெற அந்நாளில்
திரைப்படத் தயாரிப்பாளர்கள்
நடையாய் நடந்தார்கள். அந்நாளில்
புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம்
சிவனைவிட அதிகமாகப்
பாடல்களை எழுதியவர்
நாராயணகவியாவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
கவிஞர் கண்ணதாசன் போன்றோர்
இவருக்குப் பின்னர் வந்தவர்கள்.
அன்றைக்கு இவரால் எழுதப்பட்ட
பாடல்கள் கருத்துக்
கருவூலங்களாக இருந்தன.
புதிய உத்திகளைக் கையாண்ட
நாராயணகவி,
உழைப்பாளர்களைப் பற்றியும்
ஏராளமான பாடல்களை
எழுதியுள்ளார். தமிழ்த்
திரைப்படத்தில் அறிவைப்
புகுத்தி மக்களைப் பண்பட வைத்த
கவிஞர், நல்ல செய்திகளை
மட்டுமே நாட்டுக்குச் சொல்லி
உலகை உயர்த்தப் பாடுபட்டார்.
இயற்றிய சில
பாடல்கள்
கா...கா...கா... ( பராசக்தி)
அந்தக்காலம் ( நல்லதம்பி , 1949,
பாடியவர்: என். எஸ். கிருஷ்ணன்)
நல்ல, நல்ல நிலம் பார்த்து
நாளும் விதை விதைக்கணும்
விவசாயி, 1967
1954ஆம் ஆண்டில் "இரத்தக்கண்ணீர்"
படத்தில் இவர் எழுதிய "குற்றம்
புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது?"
ஒன்னுலயிருந்து இருபது
( முதல்தேதி, 1955, இசை: ஜி.
ராமநாதன், பாடியவர்: என். எஸ்.
கிருஷ்ணன் )
1956ஆம் ஆண்டு வெளியான
"மதுரை வீரன்" படத்தில்
உழைப்பவர்களுக்கெனப் பாடிய
"சும்மா இருந்தா சோத்துக்கு
நட்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும்
கஷ்டம்" போன்ற பாடல்கள் தமிழ்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்
பெற்றன.
பாடல் எழுதிய
திரைப்படங்கள்
வேலைக்காரி
ஓர் இரவு
ராஜகுமாரி
நல்லதம்பி
பராசக்தி
மனோகரா
பிரபாவதி
காவேரி
சொர்க்க வாசல்
தூக்குத் தூக்கி
தெய்வப்பிறவி
மாங்கல்ய பாக்கியம்
சித்தி
எங்கள் வீட்டு மகாலட்சுமி
ரத்தக்கண்ணீர்
ஆதி பராசக்தி
தேவதாஸ்
சிறப்புகள்
கவிராயரின் பாடல்கள் மக்கள்
மனங்களை ஈர்த்து அவர்களின்
உள்ளங்களில் தனியிடத்தைப்
பெற்றன. 'கலைமாமணி' என்னும்
பட்டம் பெற்றார். தமிழும்
இசையும் உள்ளவரை சாகாவரம்
பெற்ற பாடல்களை எழுதிய
உடுமலை நாராயணகவி தம்
82வது வயதில், 23.5.1981 இல்
மறைந்தார். இந்திய அரசு
உடுமலை நாராயணகவி
நினைவை போற்றும் வகையில்
31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை
அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது .
மணி மண்டபம்
தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த
கோயம்புத்தூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டையில்
உடுமலை நாராயணகவி
நினைவைப் போற்றும் வகையில்
மணிமண்டபம் அமைத்துள்ளது  .
இங்கு உடுமலை
நாராயணகவியின் மார்பளவு
சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அவரது வாழ்க்கை வரலாறு
தொடர்பான புகைப்படங்கள்
கண்காட்சியாக
வைக்கப்பட்டுள்ளது.

*******************************
தமிழ்நாட்டில் பேசும்படம்
பிறந்து சற்று வளர்ந்த காலம்
1931. அதையொட்டி 1934-ஆம்
ஆண்டு முதல் சினிமா பாடல்
எழுதத்தொடங்கி விட்டவர்
நாராயணகவி. திரைப்படப்
பாடலாசிரியராகவும், நாடக
எழுத்தாளராவும்
விளங்கியவர். அற்புதமான
சீர்திருத்தப் பாடல்கள் எழுதிப்
புகழ் பெற்றவர்.
÷நாடக உலகின் தந்தை
சங்கரதாஸ் சுவாமிகள்
என்றால், "திரைப்படப் பாடலின்
தந்தை' உடுமலை
நாராயணகவி எனத்
துணிந்து சொல்லலாம்.
கவிஞர் கம்பதாசனுக்கு
முன்னாலேயே சமதர்மக்
கொள்கைகளைத் தம்
பாடல்வழி பரப்பியவர். நீண்ட
காலம் திரைத்துறையைத் தம்
கைக்குள் அடக்கி
வைத்திருந்தவரும் இவரே.
÷கோவை மாவட்டம்
உடுமலைப்பேட்டை வட்டம்-
பூளாவாடி கிராமத்தில் 1899-
ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம்
தேதி பிறந்தார்.
÷இவருடைய தாய்-தந்தையர்
இளமையிலேயே
இறந்துவிட்டதால், இவர்தம்
சகோதரரால் வளர்த்து
ஆளாக்கப்பட்டார். இளமையில்
மிகுந்த வறுமையில் வாடிய
இவர், தீப்பெட்டி விற்றுக்
குடும்பத்தைக்
காப்பாற்றினார்.
÷ திரையுலகுக்கு வரும்
முன்னர், இவர் இந்திய
விடுதலைப்
போராட்டத்துக்கு ஆதரவாக
கவிதைகளை எழுதி
வெளியிட்டார். இளம்
வயதிலேயே கவிதைகள்
எழுதியதோடு
நாடகங்களிலும் நடித்து
வந்தார்.
÷உள்ளூர் கோயில்
திருவிழாவின்போது
மேடை நாடகங்கள் நடத்தி
நடித்தும் இருக்கிறார்.
நாடகக்குழு ஒன்றில் சேர்ந்து
நடித்ததோடு பாடவும்
செய்தார்.
÷"கவிராயர்' எனத்
திரையுலகத்தினரால்
அழைக்கப்பட்ட இவரிடம்
பாடல்களைப்பெற அந்நாளில்
திரைப்படத் தயாரிப்பாளர்கள்
நடையாய் நடந்தார்கள் என்பது
ஒன்றே இவரது புகழுக்குச்
சிறந்த சான்றாகும்.
அந்நாளில் புகழ்பெற்ற
கவிஞர் பாபநாசம்
சிவனைவிட அதிகமாகப்
பாடல்களை எழுதியவர் இவர்.
÷வேலைக்காரி, ஓர் இரவு,
நல்லதம்பி, பராசக்தி,
மனோகரா ஆகிய
திரைப்படங்களுக்குப்
பாடல்கள் எழுதிய இவர்,
பிரபாவதி, காவேரி,
சொர்க்கவாசல், தூக்குத்
தூக்கி, தெய்வப்பிறவி,
மாங்கல்ய பாக்கியம், சித்தி,
எங்கள் வீட்டு மகாலட்சுமி,
ரத்தக் கண்ணீர், ஆதி பராசக்தி,
தேவதாஸ் ஆகிய
திரைப்படங்களுக்கும்
பாடல்கள் எழுதியுள்ளார்.
÷தொடக்க காலத்தில் ஆன்மிகப்
பாடல்களை எழுதிய இவர்,
பின்னர் பாமர மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் சமுதாயப்
பாடல்களை எழுதி, அதன்
மூலம் சீர்திருத்தக்
கருத்துகளைப் பரப்பினார்.
÷கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணனுக்கு,
"கிந்தனார்' கதாகாலட்சேபம்
எழுதியவர். ஏறத்தாழ 10,000
பாடல்கள் எழுதியுள்ளார்.
இயல்பாகவே இனிமையான
சுபாவம் கொண்டவர்.
எதையும் தாங்கும் இதயம்
படைத்தவர், பிறருக்கு
உதவுகின்ற நல்ல மனம்
படைத்தவர். திரையுலகில்
தனக்கென ஒரு தனி
மதிப்பையும் புகழையும்
உண்டாக்கிக் கொண்டவர்.
÷அன்றைய காலகட்டத்தில்
திரைப்படம் பிறந்து வளர்ந்து
வரும் நிலையில் அதை வளரச்
செய்த பெருந்தகையாளர்.
இவரைப் பண்பின் சிகரம்
என்றே சொல்லலாம்.
÷அந்நாளில், மாடர்ன்
தியேட்டர்ஸýக்கும் நிறையப்
பாடல்களை எழுதித்தந்தார்.
÷இப்போதெல்லாம் பாடல்களே
இல்லை; இசைதான்
இருக்கிறது. அதுவும்
மேலைநாட்டுக் கணினியில்.
ஆனால், அன்று பாடல்கள்
இருந்தன; இசை இருந்தது;
இனிமையாக இருந்தது.
அதனால்தான் அன்றைக்கு
எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக்
கருவூலங்களாக இருந்தன.
÷1954-ஆம் ஆண்டில்
"இரத்தக்கண்ணீர்' படத்தில் இவர்
எழுதிய "குற்றம் புரிந்தவன்
வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது?' என்ற
பாடலை
முணுமுணுக்காதவர்களே
கிடையாது. 1956-ஆம் ஆண்டு
வெளியான "மதுரை வீரன்'
படத்தில்
உழைப்பவர்களுக்கெனப்
பாடிய "சும்மா இருந்தா
சோத்துக்கு நட்டம்; சோம்பல்
வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்' என்ற
பாடல் தமிழ் மக்கள் மத்தியில்
நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஒரு மாபெரும் புரட்சி செய்த
பாடலாசிரியர்களுள் இவரே
முதன்மையானவர்.
பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம், கவிஞர்
கண்ணதாசன் போன்றோர்
இவருக்குப் பின்னர்
வந்தவர்களே!
÷கவிஞர் உடுமலை
நாராயணகவி 1952-ஆம்
ஆண்டில் "விவசாயி' படத்தில்,
""நல்ல நல்ல நிலம் பார்த்து
நாளும் விதை
விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்''
என்னும் பாடலில்,
""பார்முழுதும் மனிதகுலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து
போர் முறையைக்
கொண்டவர்க்கு
நேர் முறையை விதைத்து''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக