திங்கள், 3 ஜூலை, 2017

இசையமைப்பாளர் மரகதமணி கீரவாணி பிறந்த நாள் ஜூலை 04.




இசையமைப்பாளர் மரகதமணி கீரவாணி பிறந்த நாள் ஜூலை 04.

கொடுரி மரகதமணி கீரவாணி , இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும்
பாடகர் ஆவார். இவர் எம். எம். கீரவாணி என்று பரவலாக அறியப்படுகிறார். இவர்
தெலுங்கு , தமிழ் , கன்னட, மலையாள மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா அவர்களால் பாடப்பெற்றது. 1997ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியார் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும்
தமிழக அரசு திரைப்பட விருதுகள் , ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார்
இவர் தமிழ் சினிமாவில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.
படங்கள்
இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் ' அழகன் ', ' நீ பாதி நான் பாதி' , ' வானமே எல்லை' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
விருதுகள்
கீரவாணி 1997 ஆம் ஆண்டு ' அன்னமையா ' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் ஆந்திராவில் வழங்கப்படும்
நந்தி விருதுகளை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதை பெற்றார். இவர் பல்வேறு பிலிம் ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார்.



எல்லாப்புகழும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே : பாகுபலி இசையமைப்பாளர்!

மரகதமணி என்று தமிழ் படங்களில் அழைக்கப்படும் கீரவாணி, இவர் தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம்.எம்.க்ரிம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன.இவருடைய பல பாடல்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சித்ரா அவர்களால் பாடப்பெற்றது. 1997ல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது 'அன்னமாச்சாரியா' திரைப்படத்திற்காக கிடைத்தது.
மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள், ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார்.
இவர் இசையமைத்ததில் தமிழில் மிக முக்கியமான திரைப்படங்கள் 'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , ' வானமே எல்லை' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுக்கும் இவர் தான் இசையமைத்துள்ளார். ராஜமௌலிக்கு நெருங்கிய உறவினரும் ஆவார்.
இந்த வகையில் இந்திய திரைப்பட சரித்திரத்தில் இடம்பெற்ற 'பாகுபலி 2' படத்தின் வெற்றிக்கு அந்த படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் காரணம் என்றாலும், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் பங்கு கொஞ்சம் அதிகம்தான். இயக்கு எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான காட்சிகளுக்கு பொருத்தமான பின்னணி அமைத்து ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர் கொடுத்தவர் எம்.எம்.கீரவாணி என்றால் அது மிகையாகாது.
இருப்பினும் இந்த படத்தின் பாடல்களில் தென்னிந்தியாவின் முன்னணி பாடகர், பாடகிகளை அவர் பயன்படுத்தாதது ஏன்? என்று சமூக வலைத்தளத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் கூறிய எம்.எம்.கீரவாணி, இதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்றும், அவர்தான் சின்ன சின்ன பாடகர்களை பெரிய ஆளாக்கியவர் என்றும், அவருடைய வழியை தானும் கடைபிடித்ததாகவும் கூறியுள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மானை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவரான எம்.எம்.கீரவாணி, அவர் வழியை பின்பற்றுவதாக கூறுவது அவர், ரஹ்மான் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கின்றார் என்பதை தெளிவாக காட்டுகிறது.
கடந்த 90ஆம் ஆண்டுகளில் இருந்தே ஏ.ஆர்.ரஹ்மான் ஏராளமான புதிய பாடகர், பாடகிகளை அறிமுகப்படுத்தியவர் என்றும், அவரால் அறிமுகம் செய்யப்பட்ட பலர் இன்று உலக அளவில் பிரபலம் என்பதும் அனைவரும் அறிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக