திங்கள், 17 ஜூலை, 2017

கவிஞர் வாலி நினைவு தினம் ஜூலை 18 . 2013.



கவிஞர் வாலி நினைவு தினம் ஜூலை 18 . 2013.

கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய
பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.
ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா , ஹேராம்,
பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின்
பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பிறப்பும் வளர்ப்பும்

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்தது திருப்பராய்துறையில், வளர்ந்தது திருவரங்கத்தில் . ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி . அன்று
திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால்
வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது. [3][4]
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா .

வாலி இறப்பு

மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார்.

வாலி பெயர்க்காரணம்

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த
மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.


எழுதிய நூல்கள்

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார் [1] .அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில்
கமல்ஹாசன் , இயக்குநர் ஷங்கர் , சூர்யா , பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

1967ல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள்.
சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில் கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறையில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள்  .
தளபதி என்ற பெயருக்கும் வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!
குறிப்பிடத்தக்க பாடல்களில் சில
பாடல் படம் வரு
" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... "
ஆயிரத்தில் ஒருவன் 1968
" மல்லிகை என் மன்னன் மயங்கும்... "
தீர்க்க சுமங்கலி 1974
" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... "
இரு மலர்கள் 1967
நான் ஆணையிட்டால்
எங்க வீட்டு பிள்ளை (1965
காற்று வாங்க போனேன் -
கலங்கரை விளக்கம் (1965
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- சந்திரோதயம் (1966
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - எதிர்நீச்சல் (1968
இறைவா உன் மாளிகையில்- ஒளிவிளக்கு (1968
அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- இருகோடுகள் (1969
ஆண்டுக்கு தேதி சுபதினம் (1969
மதுரையில் பறந்த மீன்கொடியை-
பூவா தலையா (1969


விருதுகள்
பத்மஸ்ரீ விருது-2007
1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.
வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர் [13] .
1970 – எங்கள் தங்கம்
1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள்
1989 – வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள்
1990 – கேளடி கண்மணி
2008 – தசாவதாரம்
எழுதிய திரைப்பாடல்கள்
கீழே காண்பது வாலி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இது முழுமையான பட்டியல் அல்ல.
ஆண்டு திரைப்படம் பாடல்(கள்)
2014
காவியத் தலைவன் "அல்லி அர்ச்சு
திருடன் போலீஸ் "மூடு பனிக்க
யான் "ஏ லம்பா லம்பா"
ராமானுஜன் "நாராயணா"
நான் தான் பாலா "திரு வாய்"
கோச்சடையான் "மெதுவாகத்த
பண்ணையாரும் பத்மினியும்
"எனக்காக பிறந்தாயோ"
"பேசுறேன் பேசுறேன்"
"உனக்காக பிறந்தேனோ"
2013
என்றென்றும் புன்னகை "கடல் நான்தான்
பிரியாணி "நானா நானா
"மிஸ்சிப்பி"
மரியான் "சொனாபரிய
"நேற்று அவள்"
தில்லு முல்லு 2014 "கை பேசி"
எதிர்நீச்சல்
"எதிர்நீச்சல்"
"வெளிச்சப் பூவே"
உதயம் தே நெ 4 " இன்றோடு தடைகள்"
அலெக்ஸ் பாண்டியன் "ஒன்னாம் கிள
கண்ணா லட்டு தின்ன ஆசையா
"ஏ உன்னைத்தா
"பர்த் டே"
"டூயட் சாங்"
2012
போடா போடி "அப்பன் மவனே வாடா"
மிரட்டல்
தடையறத் தாக்க
ஆதலால் காதல் செய்வீர் "தப்புத் தண்டா"
2011
ஒஸ்தி "கலாசலா"
"ஒஸ்தி மாமே"
மங்காத்தா
"மச்சி ஓப்பன் தி பாட்டில்"
"நண்பனே"
வெடி "காதலிக்க பெ ஒருத்தி"
சட்டப்படி குற்றம்
ஆடு புலி
உயர்திரு 420
அய்யன் "விடுதலைக் குயில் நான்"
மாவீரன்
"பொன்னான கோழிப் பொண்ணு"
"வண்டினத்தை சும்மா சும்மா
"ஆசை ஆசை"
கண்டேன் "யாவருக்கும் தலைவன்"
எங்கேயும் காதல்
"தீ இல்லை"
"நங்கை நீதான செங்கை"
பொன்னர் சங்கர்
2010
பாணா காத்தாடி
"தாக்குதே க தாக்குதே"
நினைவில் நின்றவள்
அனைத்து பாடல்களும்
சுறா "வெற்றிக்கொட ஏத்து"
தீராத விளையாட்டுப் பிள்ளை
"தீராத விளையாட்டு பிள்ளை"
அகராதி
வாலிபன் சுற்றும் உலகம்
லீலை
தொட்டுப்பார்
கோவா
"ஊரு நல்ல ஊர
"அடிடா நையாண்டிய"
"கோவா"
"இடை விழி"
குரு சிஷ்யன் (2010)


திரைப்படப் பட்டியல்
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
1950களில்
1. 1958- அழகர் மலைக் கள்ளன் (முதல் திரைப்படம்)
1960களில்
1. 1961- "சந்தரகாந்த்"
2. 1961- "நல்லவன் வாழ்வான்"
3. 1963- "இதயத்தில் நீ"
4. 1963- "கற்பகம்"
5. 1963- "எதையும் தாங்கும் இதயம் "
6. 1964- "தாயின் மடியில் "
7. 1964- "தெய்வத்தாய் "
8. 1964- "படகோட்டி "
9. 1965- "பஞ்சவர்ணக்கிளி "
10. 1965- " வெண்ணிற ஆடை "
11. 1965- " பணம் படைத்தவன்"
12. 1965- " தாழம்பூ "
13. 1965- " அன்புக்கரங்கள் "
14. 1965- " கலங்கரை விளக்கம் "
15. 1965- " ஆயிரத்தில் ஒருவன் "
16. 1965- " ஆசை முகம் "
17. 1965- " நீ"
18. 1965- " எங்கள் வீட்டு பிள்ளை"
19. 1965- " காக்கும் கரங்கள் "
20. 1965- " குழந்தையும் தெய்வமும் "
21. 1966- " சின்னஞ்சிறு உலகம்"
22. 1966- " மோட்டார் சுந்தரம் பிள்ளை"
23. 1966- " நாடோடி "
24. 1966- " அன்பே வா "
25. 1966- " சந்தரோதயம் "
26. 1966- " மேஜர் சந்தரகாந்த்"
27. 1966- " தாலி பாக்கியம் "
28. 1966- " நான் ஆணையிட்டால்"
29. 1966- " பெற்றால்தான் பிள்ளையா"
30. 1967- " பேசும் தெய்வம் "
31. 1967- " அவள்"
32. 1967- " செல்வமகள் "
33. 1967- " அதே கண்கள் "
34. 1967- " அரச கட்டளை "
35. 1967- " காவல்காரன் "
36. 1967- " நெஞ்சிருக்கும் வரை "
37. 1967- " இருமலர்கள் "
38. 1968- " உயர்ந்த மனிதன் "
39. 1968- " ஒளி விளக்கு "
40. 1968- " எதிர்நீச்சல் "
41. 1968- " ஜீவனாம்சம்"
42. 1968- " கல்லும் கனியாகும் "
43. 1968- " கண்ணன் என் காதலன்"
44. 1968- " கலாட்டா கல்யாணம்"
45. 1968- " குடியிருந்த கோயில்"
46. 1969- " நம் நாடு (1969 திரைப்படம்) "
47. 1969- " மன்னிப்பு "
48. 1969- " நில் கவனி காதலி "
49. 1969- " சுபதினம் "
50. 1969- " இருகோடுகள்"
51. 1969- " அடிமைப்பெண்"
52. 1969- " கன்னிப்பெண் "
53. 1969- " பூவா தலையா "


1970-1974
1. 1970- "மாணவன் "
2. 1970- "தலைவன்"
3. 1970- "என் அண்ணன் "
4. 1970- "தேடிவந்த மாப்பிள்ளை "
5. 1970- "மாட்டுக்கார வேலன் "
6. 1970- "எங்கள் தங்கம்"
7. 1971- "நூற்றுக்கு நூறு "
8. 1971- "தேனும் பாலும் "
9. 1971- "குமரிக்கோட்டம் "
10. 1971- " ஒரு தாய் மக்கள் "
11. 1971- " ரிக்ஷாக்காரன் "
12. 1971- " நீரும் நெருப்பும் "
13. 1971- " முகமது பின் துக்ளக் "
14. 1971- " பாபு "
15. 1972- " ராமன் தேடிய சீதை "
16. 1972- " வெள்ளி விழா"
17. 1972- " இதய வீணை "
18. 1972- " நான் ஏன் பிறந்தேன் "
19. 1972- " அன்னமிட்ட கை "
20. 1972- " பிள்ளையோ பிள்ளை"
21. 1973- " சொல்லத்தான் நினைக்கிறேன் "
22. 1973- " சூரியகாந்தி "
23. 1973- " உலகம் சுற்றும் வாலிபன் "
24. 1973- " அரங்கேற்றம்"
25. 1973- " பாரத விலாஸ் "
26. 1974- " தீர்க்க சுமங்கலி"
27. 1974- " சிரித்து வாழ வேண்டும் "
28. 1974- " உரிமைக்குரல் "
29. 1974- " நேற்று இன்று நாளை "
30. 1974- " சிவகாமியின் செல்வன் "
31. 1974- " அத்தையா மாமியா "
32. 1974- கலியுகக் கண்ணன்


1975-1979
1. 1975- "புதுவெள்ளம் "
2. 1975- "அவளும் பெண்தானே "
3. 1975- "பட்டிக்காட்டு ராஜா "
4. 1975- "அன்பே ஆருயிரே "
5. 1975- "அபூர்வ ராகங்கள் "
6. 1975- "இதயக்கனி "
7. 1975- "டாக்டர் சிவா "
8. 1975- "நினைத்ததை முடிப்பவன் "
9. 1975- "தேன்சிந்துதே வானம் "
10. 1976- " ஒரு கொடியில் இரு மலர்கள் "
11. 1976- " ஊருக்கு உழைப்பவன் "
12. 1976- " நீதிக்கு தலைவணங்கு "
13. 1976- " நாளை நமதே "
14. 1976- " பத்ரகாளி "
15. 1977- " பெண் ஜென்மம்
16. 1977- " இன்று போல் என்றும் வாழ்க"
17. 1977- " நவரத்தினம் "
18. 1977- " மீனவ நண்பன்"
19. 1977- " ஆறு புஷ்பங்கள்"
20. 1978- " மாங்குடி மைனர் "
21. 1978- " வணக்கத்திற்குரிய காதலியே"
22. 1978- " பைலட் பிரமநாத்"
23. 1978- " சிகப்பு ரோஜாக்கள் "
24. 1978- " அச்சாணி"
25. 1978- " அவள் ஒரு அதிசயம்
26. 1978- " ஜஸ்டிஸ் கோபிநாத் "
27. 1978- " சதுரங்கம் "
28. 1978- " இளமை ஊஞ்சலாடுகிறது "
29. 1978- " சிட்டுக்குருவி "
30. 1978- மச்சானை பாத்தீங்களா
31. 1978- " வண்டிக்காரன் மகன் "
32. 1978- " அன்னப்பூரணி "
33. 1979- " லட்சுமி
34. 1979- " அன்னை ஒரு ஆலயம்"
35. 1979- " நான் வாழவைப்பேன் "
36. 1979- " அன்பே சங்கீதா "
37. 1979- " தர்மயுத்தம் "
38. 1979- " கடவுள் அமைத்த மேடை "
39. 1979- " அலாவுதீனும் அற்புதவிளக்கும் "
40. 1979- " நீயா"
41. 1979- " பட்டாகத்தி பைரவன் "
42. 1979- " இவர்கள் வித்தியாசமானவர்கள் "
43. 1979- " அழகே உன்னை ஆராதிக்கிறேன் "
1980-1984
1. 1980- "கண்ணில் தெரியும் கதைகள் "
2. 1980- "நிழல்கள் "
3. 1980- "ஒத்தையடி பாதையிலே "
4. 1980- "நட்சத்திரம் "
5. 1981- "மௌன கீதங்கள்"
6. 1981- "குடும்பம் ஒரு கதம்பம் "
7. 1981- "ஆணிவேர் "
8. 1981- "அக்னி சாட்சி "
9. 1981- "மணல்கயிறு"
10. 1982- " சிம்லா ஸ்பெஷல் "
11. 1982- " மூன்று முகம் "
12. 1982- " தூறல் நின்னு போச்சு "
13. 1982- " தனிக்காட்டு ராஜா "
14. 1982- " வாழ்வே மாயம் "
15. 1982- " பட்டணத்து ராஜாக்கள்"
16. 1982- " வா கண்ணா வா "
17. 1982- " தாய் முகாம்பிகை "
18. 1982- " சகலகலா வல்லவன் "
19. 1982- " துணை "
20. 1982- " கண்ணே ராதா "
21. 1982- " பரிட்சைக்கு நேரமாச்சு "
22. 1982- " நெஞ்சங்கள் "
23. 1982- " எங்கேயோ கேட்ட குரல் "
24. 1982- " கோபுரங்கள் சாய்வதில்லை "
25. 1982- " ரங்கா "
26. 1982- " தீர்ப்பு "
27. 1982- " வடமாலை "
28. 1983- " அந்த சில நாட்கள் "
29. 1983- " வெள்ளை ரோஜா"
30. 1983- " அடுத்த வாரிசு"
31. 1983- " சிவப்பு சூரியன் "
32. 1983- " தங்கமகன் "
33. 1983- " சந்திப்பு "
34. 1983- " சூரக்கோட்டை சிங்கக்குட்டி "
35. 1983- " நீதிபதி "
36. 1983- " சரணாலயம் "
37. 1983- " கோழி கூவுது "
38. 1983- " பாயும் புலி "
39. 1983- " தாய்வீடு "
40. 1983- " சுமங்கலி"
41. 1983- " தூங்காதே தம்பி தூங்காதே"
42. 1983- " மிருதங்க சக்கரவர்த்தி "
43. 1983- " சட்டம்"
44. 1984- " அன்பே ஓடி வா "
45. 1984- " வம்சா விளக்கு "
46. 1984- " மதுரை சூரன் "
47. 1984- " தாவணிக் கனவுகள்"
48. 1984- " தீர்ப்பு என் கையில் "
49. 1984- " கை கொடுக்கும் கை "
50. 1984- " வெள்ளை புறா ஒன்று "
51. 1984- " வீட்டுக்கொரு கண்ணகி "
52. 1984- " சத்தியம் நீயே "
53. 1984- " வைதேகி காத்திருந்தாள் "
54. 1984- " ஓசை "
55. 1984- " இரு மேதைகள்"
56. 1984- " விதி "
57. 1984- " சிம்ம சொப்பனம் "
58. 1984- " மெட்ராஸ் வாத்தியார்"
59. 1984- " அன்புள்ள ரஜினிகாந்த்"
60. 1984- " குழந்தை யேசு"
61. 1984- " நல்லவனுக்கு நல்லவன் "
62. 1984- " நல்ல நாள் "
63. 1984- " நாளை உனது நாள் "
64. 1984- " இது எங்க பூமி "
65. 1984- " குடும்பம் "

1985-1989
1. 1985- "ஆண்பாவம் "
2. 1985- "தென்றலே என்னை தொடு"
3. 1985- "ஸ்ரீ ராகவேந்திரா"
4. 1985- "ஒரு நல்லவன் ஒரு வல்லவன் "
5. 1985- "மனக்கணக்கு "
6. 1985- "குங்குமச்சிமிழ்"
7. 1985- "கீதாஞ்சலி"
8. 1985- "மங்கம்மா சபதம்"
9. 1985- "ஜப்பானில் கல்யாண ராமன் "
10. 1985- " படிக்காதவன் "
11. 1985- " கன்னிராசி"
12. 1985- " நீதியின் நிழல் "
13. 1985- " ராஜ ரிஷி "
14. 1985- " கெட்டி மேளம் "
15. 1985- " நான் சிவப்பு மனிதன் "
16. 1985- " பந்தம்"
17. 1985- " வேஷம்
18. 1985- " படிக்காத பண்ணையார் "
19. 1985- " நல்ல தம்பி "
20. 1985- " உயர்ந்த உள்ளம்"
21. 1985- " உதயகீதம் "
22. 1985- " இதய கோவில் "
23. 1985- " நாம் இருவர் "
24. 1985- " காக்கிசட்டை "
25. 1985- " கரையை தொடாத அலை௧ள் "
26. 1986- " மீண்டும் பல்லவி"
27. 1986- " கண்மணியே பேசு "
28. 1986- "கரிமேடு கருவாயன்
29. 1986- " நான் அடிமை இல்லை"
30. 1986- " எனக்கு நானே நீதிபதி "
31. 1986- " விடுதலை "
32. 1986- " அன்னை என் தெய்வம் "
33. 1986- " ஒரு இனிய உதயம்"
34. 1986- " சாதனை "
35. 1986- " மௌன ராகம்"
36. 1986- " மௌனம் கலைகிறது "
37. 1986- " ஆனந்த கண்ணீர் "
38. 1986- " நம்பினோர் கெடுவதில்லை "
39. 1986- " வசந்தராகம்"
40. 1986- " தர்மதேவதை "
41. 1986- " தர்ம பத்தினி "
42. 1986- " லட்சுமி வந்தாச்சு "
43. 1986- " உயிரே உனக்காக "
44. 1986- " சம்சாரம் அது மின்சாரம்"
45. 1986- " மருமகள்"
46. 1986- " மெல்லத் திறந்தது கதவு"
47. 1986- " நானும் ஒரு தொழிலாளி "
48. 1987- " முப்பெருந் தேவியர் "
49. 1987- " எங்க சின்ன ராசா "
50. 1987- " பாடு நிலாவே "
51. 1987- " பூமழை பொழியுது "
52. 1987- " குடும்பம் ஒரு கோயில் "
53. 1987- " ஊர்க்காவலன் "
54. 1987- நல்ல பாம்பு
55. 1987- " காவலன் அவன் கோவலன் "
56. 1987- " சிறைப்பறவை "
57. 1987- " அஞ்சாத சிங்கம்"
58. 1987- " வீர பாண்டியன்"
59. 1987- " இனிய உறவு பூத்தது "
60. 1988- " பூவுக்குள் பூகம்பம் "
61. 1988- " பெண்மணி அவள் கண்மணி "
62. 1988- " என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு "
63. 1988- " அண்ணா நகர் முதல் தெரு "
64. 1988- " குரு சிஷ்யன்"
65. 1988- " பொறுத்தது போதும் "
66. 1988- " இது நம்ம ஆளு "
67. 1988- " சத்யா "
68. 1988- " கலியுகம்"
69. 1988- " சொல்ல துடிக்குது மனசு "
70. 1988- " தர்மத்தின் தலைவன்"
71. 1988- " என் தமிழ் என் மக்கள் "
72. 1988- " தம்பி தங்க கம்பி "
73. 1988- " மணமகளே "
74. 1988- " சகாதேவன் மகாதேவன் "
75. 1988- " அக்னி நட்சத்திரம் "
76. 1988- " தாய்ப்பாசம்"
77. 1989- " புதுப்புது அர்த்தங்கள்"
78. 1989- " ஆராரோ ஆரிரரோ "
79. 1989- " ராஜநடை "
80. 1989- " ராஜாதி ராஜா "
81. 1989- " என்ன பெத்த ராசா "
82. 1989- " தர்மம் வெல்லும் "
83. 1989- " வருஷம் 16 "
84. 1989- " அபூர்வ சகோதரர்கள் "
85. 1989- " சிவா "
86. 1989- " வெற்றி விழா"
87. 1989- " பொன்மன செல்வன் "
88. 1989- " சோலை குயில் "
89. 1989- " ஒரே ஒரு கிராமத்திலே "
90. 1989- " வாத்தியார் வீட்டுப்பிள்ளை "
91. 1989- " எம்புருஷந்தான் எனக்கு மட்டுந்தான் "

1990-1994
1. 1990- "கேளடி கண்மணி "
2. 1990- "புது வசந்தம் "
3. 1990- "துர்கா"
4. 1990- "ஆரத்தி எடுங்கடி"
5. 1990- "தாலாட்டுப் பாடவா "
6. 1990- "அதிசயப் பிறவி "
7. 1990- "மைக்கேல் மதன காமராஜன் "
8. 1990- "புரியாத புதிர்"
9. 1990- "வாழ்க்கைச் சக்கரம் "
10. 1990- " புதுப்பாட்டு "
11. 1990- " நடிகன்"
12. 1990- " வேலை கிடச்சுடுச்சு "
13. 1990- " உன்னை சொல்லி குற்றமில்லை "
14. 1990- " சிறையில் பூத்த சின்ன மலர் "
15. 1990- " மை டியர் மார்த்தாண்டன் "
16. 1990- " எதிர்காற்று "
17. 1990- " அஞ்சலி "
18. 1990- " ராஜா கைய வச்சா "
19. 1990- " சந்தன காற்று "
20. 1990- " கிழக்கு வாசல் "
21. 1990- " சத்ரியன்"
22. 1990- " அரங்கேற்ற வேளை "
23. 1990- " தைமாசம் பூவாசம் "
24. 1991- " வாசலில் ஒரு வெண்ணிலா "
25. 1991- " ஞான பறவை "
26. 1991- " தைப்பூசம் "
27. 1991- " ருத்ரா "
28. 1991- " பிரம்மா "
29. 1991- " ஈரமான ரோஜாவே "
30. 1991- " இதயம்"
31. 1991- " ஆயுள் கைதி "
32. 1991- " சின்ன தம்பி "
33. 1991- " கோபுர வாசலிலே "
34. 1991- " நீ பாதி நான் பாதி"
35. 1991- " தாலாட்டு கேக்குதம்மா "
36. 1991- " கிழக்குக்கரை"
37. 1991- "மரிக்கொழுந்து"
38. 1991- " மாநகரக்காவல்"
39. 1991- "தையல்காரன்"
40. 1991- " தளபதி "
41. 1991- " குணா "
42. 1991- " வசந்தகால பறவை "
43. 1992- " திருமதி பழனிச்சாமி "
44. 1992- " உன்னை வாழ்த்தி பாடுகிறேன் "
45. 1992- " அம்மா வந்தாச்சு "
46. 1992- " வில்லுப்பாட்டுக்காரன் "
47. 1992- " செம்பருத்தி "
48. 1992- " பாண்டியன்"
49. 1992- " தேவர் வீட்டுப் பொண்ணு "
50. 1992- " மீரா "
51. 1992- " மன்னன் "
52. 1992- " உன்ன நினச்ச பாட்டு படிச்சு "
53. 1992- " செந்தமிழ் பாட்டு "
54. 1992- " தெய்வவாக்கு"
55. 1992- " சின்ன மருமகள்"
56. 1992- " நாடோடி பாட்டுக்காரன்"
57. 1992- " ஊர்பஞ்சாயத்து "
58. 1992- " சிங்கார வேலன்"
59. 1992- " சூரியன் "
60. 1992- " நாங்கள் "
61. 1992- " தேவர்மகன்"
62. 1992- " தாலிகட்டிய ராசா "
63. 1992- " வண்ண வண்ண பூக்கள்"
64. 1993- " ஐ லவ் இந்தியா "
65. 1993- " சின்ன ஜமீன்"
66. 1993- " வள்ளி "
67. 1993- " வால்டர் வெற்றிவேல்"
68. 1993- " உள்ளே வெளியே "
69. 1993- " மணிசித்திரத்தழு " (மலையாளம்)
70. 1993- " தர்மசீலன்"
71. 1993- " சின்ன கண்ணம்மா"
72. 1993- " உழைப்பாளி"
73. 1993- " உழவன் "
74. 1993- " எஜமான்"
75. 1993- " சின்ன மாப்பிள்ளை"
76. 1993- " மகாராசன்"
77. 1993- " கலைஞன் "
78. 1993- " காத்திருக்க நேரமில்லை "
79. 1993- " கற்பகம் வந்தாச்சு "
80. 1993- " ஜென்டுல்மேன்"
81. 1993- " செந்தூரப் பாண்டி "
82. 1994- " சீமான் "
83. 1994- " இந்து "
84. 1994- " என் ஆசை மச்சான் "
85. 1994- " வீட்ல விசேஷங்க"
86. 1994- " வாட்ச்மேன் வடிவேல் "
87. 1994- " ரசிகன்"
88. 1994- " மோகமுள்"
89. 1994- " காதலன்"
90. 1994- " செந்தமிழ் செல்வன் "
91. 1994- " ராசாமகன்"
92. 1994- " கண்மணி "
93. 1994- " மகாநதி"
94. 1994- " வீரா "
95. 1994- " நம்ம அண்ணாச்சி "
96. 1994- " பிரியங்கா "
97. 1994- " மிஸ்டர் ரோமியோ "
98. 1994- " அமைதிப்படை

1995-1999
1. 1995- "ராசய்யா "
2. 1995- "நான் பெத்த மகனே
3. 1995- "கட்டுமரக்காரன் "
4. 1995- "சின்ன வாத்தியார் "
5. 1995- "தொட்டா சிணுங்கி "
6. 1995- "தேவா"
7. 1995- "பாட்டு பாட வா "
8. 1995- "பெரிய குடும்பம் "
9. 1995- "முத்துக்காளை"
10. 1995- " ஆணழகன் "
11. 1995- " ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி "
12. 1995- " ஆசை "
13. 1995- " மிஸ்டர் மெட்ராஸ்"
14. 1995- " ராஜாவின் பார்வையிலே "
15. 1995- " ரகசிய போலீஸ் (1995) "
16. 1995- " திருமூர்த்தி "
17. 1995- " ஆயுத பூஜை "
18. 1996- " இந்தியன்"
19. 1996- " அவதார புருஷன்"
20. 1996- " அவ்வை சண்முகி
21. 1996- " வான்மதி"
22. 1996- " நேதாஜி "
23. 1996- " காதல் தேசம்"
24. 1996- " பூவே உனக்காக "
25. 1996- " பூவரசன்"
26. 1996- " இரட்டை ரோஜா"
27. 1996- " கல்லூரி வாசல் "
28. 1996- " டாடா பிர்லா "
29. 1996- " கோயமுத்தூர் மாப்ளே"
30. 1997- " தம்பிதுரை"
31. 1997- " வாய்மையே வெல்லும் "
32. 1997- " பாரதி கண்ணம்மா "
33. 1997- " பெரிய மனுஷன் "
34. 1997- " பொங்கலோ பொங்கல் "
35. 1997- " பாசமுள்ள பாண்டியரே "
36. 1997- " மன்னவா "
37. 1998- " கலர் கனவுகள்
38. 1998- " காதலா காதலா "
39. 1998- " மறுமலர்ச்சி"
40. 1998- " நினைத்தேன் வந்தாய் "
41. 1999- " காதலர் தினம் "
42. 1999- " மன்னவரு சின்னவரு"
43. 1999- " மனம் விரும்புதே உன்னை "
44. 1999- " விரலுக்கேத்த வீக்கம் "
45. 1999- " பூவாசம் "
2000-2004
1. 2000- "வண்ண தமிழ் பாட்டு "
2. 2000- "ஹேராம்"
3. 2000- "கண்ணுக்கு கண்ணாக"
4. 2000- "பாளையத்து அம்மன் "
5. 2000- "பிரியமானவளே "
6. 2000- "சிம்மாசனம் "
7. 2000- "நாகலிங்கம்"
8. 2000- "பெண்ணின் மனதை தொட்டு "
9. 2001- "டும் டும் டும் "
10. 2001- " மிடில் கிளாஸ் மாதவன் "
11. 2001- " மின்னலே "
12. 2001- " பார்த்தாலே பரவசம்"
13. 2001- " தீனா "
14. 2001- " லூட்டி "
15. 2001- " சாக்லெட்"
16. 2001- " தோஸ்த் "
17. 2001- " நரசிம்மா"
18. 2002- " யூத்"
19. 2002- " பகவதி"
20. 2002- " தென்காசி பட்டணம் "
21. 2002- " புன்னகை தேசம்"
22. 2002- " ஸ்ரீ "
23. 2002- " காதல் வைரஸ்"
24. 2002- " மௌனம் பேசியதே "
25. 2002- " இவன்"
26. 2002- " பாபா "
27. 2003- " புதிய கீதை "
28. 2003- " லேசா லேசா "
29. 2003- " சிம்ஹகிரி " (தெலுங்கு)
30. 2003- " பாய்ஸ் "
31. 2004- " மன்மதன் "
32. 2004- " குத்து "
33. 2004- " நியூ"
2005-2009
1. 2005- "மண்ணின் மைந்தன் "
2. 2005- "கஜினி "
3. 2005- "சந்திரமுகி"
4. 2005- "மும்பை எக்ஸ்பிரஸ் "
5. 2005- "ஒருநாள் ஒருகனவு"
6. 2005- "அன்பே ஆருயிரே "
7. 2005- "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி "
8. 2006- "கள்வனின் காதலி "
9. 2006- "சில்லுனு ஒரு காதல் "
10. 2006- " தலைமகன் "
11. 2006- " வல்லவன் "
12. 2007- " இனிமே நாங்கதான் "
13. 2007- " சிவாஜி "
14. 2007- " சென்னை 600028 "
15. 2007- " ஆழ்வார் "
16. 2007- " என் உயிரினும் மேலான "
17. 2007- " பில்லா "
18. 2007- " தொட்டால் பூமலரும் "
19. 2007- " உன்னாலே உன்னாலே "
20. 2007- " அழகிய தமிழ் மகன் "
21. 2008- " சரோஜா"
22. 2008- " ஜெயம் கொண்டான் "
23. 2008- " பீமா "
24. 2008- " தசாவதாரம் "
25. 2008- " சரோஜா" (தெலுங்கு)
26. 2008- " சக்கரகட்டி"
27. 2008- " தனம் "
28. 2008- " குசேலன் "
29. 2008- " பொம்மலாட்டம் "
30. 2008- " சிங்ககுட்டி "
31. 2008- " சிலம்பாட்டம்"
32. 2008- "உளியின் ஓசை"
33. 2009- " பஞ்சாமிர்தம் "
34. 2009- " அருந்ததி "
35. 2009- " மலை மலை "
36. 2009- " நாடோடிகள் "
37. 2009- " மத்திய சென்னை "
38. 2009- " நான் கடவுள் "
39. 2009- " குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்"
40. 2009- " ஆதவன் "
41. 2009- " வால்மீகி"
42. 2009- " அய்யன்"
43. 2009- " ஜெகன் மோகினி "
44. 2009- பழசிராஜா.


2010
1. 2010- "ஜிக்கு புக்கு "
2. 2010- "பெண் சிங்கம் "
3. 2010- "மாஞ்சா வேலு "
4. 2010- "நந்தா நந்திதா "
5. 2010- "காதலுக்கு மரணமில்லை"
6. 2010- "விருதகிரி"
7. 2010- "குரு சிஷ்யன்"
8. 2010- "கோவா "
9. 2010- "தொட்டுப்பார் "
10. 2010- " வாலிபன் சுற்றும் உலகம் "
11. 2010- " தில்லாலங்கடி "
12. 2010- " லீலை"
13. 2010- " தீராத விளையாட்டு பிள்ளை "
14. 2010- " அகராதி"
15. 2010- " சுறா "
16. 2010- " நினைவில் நின்றவள்"
17. 2010- " பாணா காத்தாடி "
18. 2011- " பொன்னர் சங்கர் "
19. 2011- " எங்கேயும் காதல் "
20. 2011- " கண்டேன் "
21. 2011- " மாவீரன் "
22. 2011- " உயர்திரு 420 "
23. 2011- " ஒஸ்தி"
24. 2011- " வெடி "
25. 2011- " மங்காத்தா "
26. 2011- " சட்டப்படி குற்றம் "
27. 2011- " ஆடுபுலி "
28. 2011- " அய்யன்"
29. 2012- " ஆதலால் காதல் செய்வீர் "
30. 2012- " தடையறத் தாக்க "
31. 2012- " மிரட்டல்"
32. 2012- " போடா போடி "
33. 2013- " தில்லு முல்லு "
34. 2013- " எதிர்நீச்சல் "
35. 2013- " என்றென்றும் புன்னகை "
36. 2013- " அலெக்ஸ் பாண்டியன்"
37. 2013- " பிரியாணி "
38. 2013- " கண்ணா லட்டு திண்ண ஆசையா "
39. 2013- " உதயம் NH4 "
40. 2013- " மரியான் "
41. 2014- " யான்"
42. 2014- " திருடன் போலீஸ் "
43. 2014- " கோச்சடையான் "
44. 2014- " ராமானுஜன் "
45. 2014- " பண்ணையாரும் பத்மினியும்"
46. 2014- " நான்தான் பாலா "
47. 2014- " காவியத்தலைவன் " (கடைசி திரைப்படம்)
திரைக்கதை வசனம்
1. 1974- கலியுகக் கண்ணன்
2. 1975- காரோட்டிக் கண்ணன்
3. 1976- ஒரு கொடியில் இரு மலர்கள்
4. 1978- சிட்டுக்குருவி
5. 1979- கடவுள் அமைத்த மேடை
6. 1989- ஒரே ஒரு கிராமத்திலே...



தளபதியும் வாலியும்! - கவிஞர் வாலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

தமிழ்த் திரைப்பட இசைத் துறையில், பீஷ்மரைப் போல் சகல நுட்பங்களையும் அறிந்தவர். கட்சி மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் இனியவராய் அவர் தனது தமிழ்க் கவிதைப் பயணத்தை மேற்கொண்டார். தமிழும், ஆன்மிகமும் கலந்த கவிச்சிற்பி வாலி. அவரது பிறந்த நாள் அக்டோபர், 29. நெருப்பாய் சிவந்த மேனியும் நெற்றிக் குங்குமமும், நித்தம் முத்தமிடும் வெற்றிலைச் சிவப்பும், எளிதில் எதிராளியின் பலத்தையும் தன்னகத்தே பெற்றிடும் ஆற்றல்மிக்கவர்.
* கடல்களில் தீவுகளும், தீபகற்பங்களும் சகஜம். நதிகளில் அப்படி வாய்ப்பது அபூர்வம். ஆனால், காவிரியை தென்கரையாகவும், கொள்ளிடத்தை வடகரையாகவும் கொண்ட திருவரங்கம்தான் கவிஞர் வாலியின் சொந்த ஊர்.
* திருவரங்கம் இரண்டு ரங்கராஜன்களைத் தந்தது. அந்த இருவருமே அந்தப் பெயர்களை பெருமாளுக்கே கொடுத்துவிட்டு, வேறு பெயர்களில், பார் புகழ உயர்ந்தார்கள். ஒருவர் எழுத்தாளர் சுஜாதா. இன்னொருவர் கவிஞர் வாலி. ஆம். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.

* ரங்கராஜன், வாலி ஆன கதையை அவரது வாக்கியங்களிலேயே வாசியுங்கள். 'நானும் இந்த நூற்றாண்டும்' என்னும் அவரது நூலிலிருந்து...
'எட்டாம் வகுப்பு படிக்கும்போதே நான் ஓவியங்கள் வரையத் தலைப்பட்டேன். எவரைப் பார்த்தாலும்... அவரைப் போலவே படம் வரையும் ஆற்றல் என்னுள் இயல்பாக ஏற்பட்டிருந்தது. புகழ் வாய்ந்த ஓவியர்களான மணியம் சந்திரா இவர்களது படங்களை 'கல்கி' பத்திரிகையில் கண்டு நான் பித்தாகிப் போன நாட்கள் உண்டு. அதேப்போல் ஆனந்தவிகடனில் பணிபுரிந்த மாலி என்னும் மகத்தான ஓவியன் மேல் எனக்கு மாளா காதல்.
நான் சின்னச் சின்ன சித்திரங்கள் வரையும்போதெல்லாம், பாபு என்னும் பள்ளித்தோழன் பக்கத்திலிருந்து பரவசப்படுவான். இருப்பினும் என்றென்றும் நான் அவனை மறக்க இயலாதவாறு அவன் ஒரு காரியத்தை செய்து வைத்தான். மாலியைப் போல நான் ஒரு சிறந்த சித்திரக்காரனாக விளங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அவன்தான் எனக்கு 'வாலி' என்று பெயர் சூட்டினான். அதன்பிறகு, எங்கள் ஊரில் உள்ள ஆட்டுக்குட்டிகூட என்னை வாலி என்றே அழைக்கத் தொடங்கியது.

பேசும் சினிமாவும், நானும் பிறந்தது ஒரே ஆண்டில்தான் (1932) இதனால்தானோ என்னவோ ஒருவித சகோதரத்துவத்தோடு சினிமா என்னை சுவீகரித்துக் கொண்டது. பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும் பட உலகில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது நான் பாட்டெழுதப் புகுந்தேன். அவர்களோடு போட்டியிட்டு வெற்றி பெறுவது அசாத்தியம் என்று எனக்குத் தெரிந்தது. எத்தனையோ கவிஞர்கள் கோடம்பாக்கத்தில் கடைவிரித்தால், கொள்முதலுக்கே கட்டுப்படியாகாது என்று ஊர் திரும்பி விட்டார்கள். நான் ஒருவன் மட்டுமே கப்பல்களுக்கு நடுவே கட்டுமரத்தோடு கடலில் இறங்கினேன்.
கதைப்பித்தும், ஓவியப்பித்தும் என்னை ஆட்டிப் படைத்த இளம்பிராயத்திலேயே நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினேன். அதன் பெயர் 'நேதாஜி' என்றும் குறிப்பிடுகின்றார்’
* கரூருக்கு அருகே உள்ள வாங்கல் என்னும் குக்கிராமம்தான் வாலி அவர்களின் தந்தையின் பூர்வீகம். வாங்கல் ஶ்ரீனிவாச அய்யங்கார் என்று அழைக்கப்பட்டார். தாயாரின் பெயர் பொன்னம்மாள்.
* பள்ளி நாட்களில் வாலியின் கவித்துணுக்கு ஒன்றை வாசித்து விட்டு, ''தமிழ்தான் உனக்கு சோறு போடும். ஆனா, அது எப்போ போடும்னு சொல்ல முடியாது எழுதுவதை நிறுத்தாதே" என்று புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தியிடம் வாழ்த்து பெற்ற பெருமை இவருக்குண்டு.
* கொள்ளிடக்கரையில் 'கழுதை மண்டபம்' என்று ஒரு பழங்கால கட்டடம் உண்டு. தனது விடுமுறைகளில், கவிதை எழுதுவதற்கு அந்த இடத்தையே தேர்வு செய்துபோய் கவிதைகள் எழுதுவார். அப்போது எழுதப்பட்ட பாடல்கள் பின்னாளில் புகழ்பெற்றன. அவற்றில் ஒன்றுதான் ''கற்பனையென்றாலும், கற்சிலையென்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பக்தி ரசம் சொட்டும் பாடல்.
* திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதற்கு, வருவதற்குமுன் திருச்சி வானொலி நிலையத்தில் 1950-களில் கவிஞர் வாலி பணியாற்றி இருக்கின்றார். ''எருமை மாட்டை தண்ணியிலே போட்டா விலை பேச முடியும். முதல்ல புறப்பட்டு மெட்ராஸ் வாருமய்யா" என்று அன்புக் கட்டளையிட்டவர் டி.எம்.எஸ்.
* தமிழின் பால் மாறாத காதலும், பல ஆயிரம் தமிழ்க் கவிதைகளும் எழுதிக் குவித்த கவிஞர் வாலி, பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் மற்றும் வடமொழியையே கற்றவர். கவிதையின் பாலும் தமிழின் மீதும் இருந்த பற்றுதலால் கவிஞரானார்.

* கவிஞர் வாலியை தனது ஸ்கூட்டரில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு படக்கம்பெனியாக அலைந்து திரிந்து வாய்ப்புத் தேடித் தந்தவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். இவரை 'கோபி' என்றே செல்லமாய் அழைப்பார். திரைப்பட பாடல் எழுத கவிஞர் வாலி எடுத்த முயற்சிகள் ஏராளம். சென்னைக்கும், ஶ்ரீரங்கத்துக்கும் அலைந்த அலைச்சல் அநேகம்.
* 1958 ல் கெம்பராஜ் அரஸ் இயக்கிய 'அழகர் மலைக்கள்ளன்' படத்தில் 'நிலவும் தாரையும் நீயம்மா. உலகம் ஒரு நாள் உனதம்மா" என்ற பாடல்தான் கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல். பாடலைப் பாடியவர் பி.சுசீலா.
* தளபதி என்ற பெயருக்கும் வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!
* ''பேராசை பிடித்த பெரியார்" என்று பெரியாரைப் பாராட்டி அவரது புகழ் பாடும் நாடகத்தையும் அரங்கேற்றி, பெரியாரிடம் பாராட்டு பெற்றவர். இந்த நாடகத்தில் நாம் தமிழர் இயக்கத்தை நடத்திய ஆதித்தனாரும் ஒரு பாத்திரமாகப் படைக்கப்பட்டிருந்தார். இவர் தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்" என்று வாலி அவர்கள் எழுதிய பாடலை தந்தை பெரியார் பெரிதும் பாராட்டினார்.
* ''வாலி! நீ நினைக்கிற மாதிரி சினிமா பிரவேசம் அவ்வளவு சுலபமானது இல்லே..." என்று அறிவுரை கூறியவர் ஜாவர் சீத்தாராமன். பின்னாளில் அவர் கதை வசனம் எழுத, வாலி பாடல்கள் எழுத ஏ.வி.எம். தயாரித்த படம் உயர்ந்த மனிதன்.
* கண்ணதாசன் தமிழ்த்திரை இசையில் சாதனை படைத்தவர். ஆனால் அவருக்கு மிகச் சரியான இணைகோடாகத் திகழ்ந்தவர் கவிஞர் வாலி. இந்த இரண்டு தண்டவாளங்களின் மேல்தான் திரை இசை என்னும் ரெயில், பயணம் செய்தது.
* 1967ல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய ''நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்'' என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள்.
* சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில் கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறையில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள்.
* கவிஞர் வாலி முதன்முதலாக எழுதி, 'நன்றாக இல்லை' என்று நிராகரிக்கப்பட்ட பாடல்தான், பின்னாளில் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. அந்த பாடல்தான். படகோட்டியில் இடம் பெற்ற 'கொடுத்ததெல்லாம் கொடுத்தார்' பாடல். படகோட்டி படத்தின் தலைப்பே வாலி அவர்கள் கூறியதுதான். அடிமைப் பெண்ணில் இடம் பெற்று ஜெயலலிதா பாடிய 'அம்மா என்றால் அன்பு' பாடலை இயற்றியவர் வாலி.
* வாலி எழுதிய அநேகப் பாடல்களை கண்ணதாசன் எழுதியதாகவே எண்ணிடும் தவறான நிலை அடிக்கடி நிலவும். ''அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே!'' பாடலை எழுதியவர் கண்ணதாசன் அல்ல. வாலியே. இப்படி அநேகம் உண்டு.
* கவிஞர் வாலி அவர்கள், தனது நாடகமொன்றில் கதாநாயகியாக நடித்த திலகம் என்பவரை, கீழ்த்திருப்பதி கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டவர். ஆச்சாரமான வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், எந்த மூடநம்பிக்கையும் இல்லாதவர். கந்தவேள் முருகனையும், அம்மனையும் தனது இஷ்டதெய்வமாக வழிபட்டார்.
* 'நானும் இந்த நூற்றாண்டும்' என்னும் நூலில் தன் வாழ்வின் சரிதத்தை எந்தவித சமரசமும் இல்லாமல், சத்ய சோதனையைப் போல், உள்ளது உள்ளபடி எழுதினார். அதில் அவர் கையாண்டுள்ள எழுத்துநடையும், சுவாரசியமான, பிரமிக்கத்தக்க சம்பவங்களும், ஒரு நாவலைப் போல் சுவையானவை.
* மெல்லிசை மன்னரையும் முக்தா சீனிவாசனையும் எப்போதும் நன்றியோடு தனது நூலில் நினைவு கூறுகின்றார். நூல் முழுவதும் அவருக்கு சிறு உதவி செய்தவர்களைக் கூட நன்றி பாராட்டி எழுதுகின்றார்.
* திரைப்படத் துறையில் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என்று பல தலைமுறையைப் பார்த்தவர். அரசியலிலும், பெரியார், அண்ணா காமராஜர், எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா என்று சகலருடன் நல்லிணக்கமான உறவை வளர்த்தவர். குழந்தையைப் போல் எல்லோருடனும் இனிமையாகப் பழகியதால்தான், திரை இசையில் வியக்கவைக்கும் சாதனைகளை ஆற்ற முடிந்தது.
* கவிஞர் வாலி எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ்பெற்றவை. ஆனந்த விகடன் இதழில், தான் பழகிய ஆளுமைகள் பற்றி வாலி எழுதிய 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெரும் புகழ்பெற்றது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.



த மிழ் சினிமாவின் எவர்க்ரீன் வாலிபன். பக்தி இலக்கியம் எழுதினால் ஸ்ரீராமன். பாட்டெழுத வந்துவிட்டால் மாயக் கண்ணன். ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச் சுரங்கம் வாலியின் சீக்ரெட் சாக்லேட்ஸ்...

I திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்கு வந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் - பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!
I வாலி எப்பவும் உடுத்துவது நூலாடையாக இருந்தால் வெள்ளை. சில்க்காக இருந்தால் சந்தன நிறம். இவை தவிர வேறு விருப்பம் இல்லை!
I 'பொய்க்கால் குதிரை', 'சத்யா', 'பார்த்தாலே பரவசம்', 'ஹே ராம்' என நான்கு படங்களில் நடித்து இருக்கிறார் வாலி!
I 'எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்' - கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
I அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜகோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என 15 புத்தகங்கள் எழுதிஇருக்கிறார். சிறுகதை, கவிதை, உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!
I எவ்வளவோ அழைப்புகள் வந்தும் எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை கவிஞர் வாலி. பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரர்!
I வாலியின் காதல் மனைவி ரமணத்திலகம். இந்தக் காதலை ஊக்குவித்துத் திருமணம் செய்யத் தூண்டியவர்கள், நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா இருவரும். ரமணத் திலகம், பத்மினி, ஈ.வி.சரோஜா மூன்று பேரும் வழுவூர் ராமையாப் பிள்ளையின் மாணவிகள். சமீபத்திய வாலியின் பெரும் துயர் மனைவியின் மறைவு!
I வாலி வீட்டில் தயாராகும் தோசை, மிளகாய்ப்பொடி ரொம்பப் பிரபலம். 'இன்று தோசை, மிளகாய்ப்பொடிக்கு வழியிருக்கா' என்று அடிக்கடி எம்.ஜி.ஆர். வந்துவிடுவாராம்!
I வாலி இதுவரை திரையிசைப் பாடல்களாக 15,000-க்கு மேல் எழுதி இருக்கிறார். தனிப் பாடல்கள் கணக் கில் அடங்காது. இன்றும் எழுதிக் கொண்டே இருப்பதால், கணக்கு இன்னும் மேலே போகும்!
I 1966-ல் வாங்கிய MSQ 1248 பியட் இன்னும் ஞாபகங்களைச் சுமந்துகொண்டு நிற்கிறது. மறக்க முடியாமல், புதிதாக மாற்றிக்கொள்ளத் துணியாமல் வாசலில் நிறுத்திவைத்திருக்கிறார் வாலி!
I சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்து வந்தவர் டி.எம்.சௌந்தர்ராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போதே போஸ்ட்கார்டில் டி.எம்.எஸ்சுக்கு எழுதி அனுப்பியதுதான் மிகவும் வெற்றிபெற்ற 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்' பாடல். இதைஅனு பவித்துப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!
I ஆரம்பத்தில் தங்கச் சங்கிலி, மோதிரம், ரோலக்ஸ் வாட்ச் சகிதம் இருப்பார். இப்போது எல்லாம் தவிர்த்துவிட்டு, எளிமையை அணிந் திருக்கிறார்!
I 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் வாலி. அவற்றில் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு கொடியில் இரு மலர்கள், சிட்டுக் குருவி, ஒரே ஒரு கிராமத்திலே இப்படி எழுதிக்கொண்டே போகலாம். மாருதிராவோடு சேர்ந்து டைரக்ட் செய்த ஒரே படம் வடை மாலை!
I 1966-ல் 'மணிமகுடம்' படப்பிடிப்பின்போது எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்திய கலைஞர் நட்பு 44 வருடங்கள் தாண்டியும் தொடர்கிறது. 'அவதார புருஷன்' விகடனில் வெளிவந்த காலங்களில் அதிகாலைகளின் முதல் தொலைபேசி அழைப்பு கலைஞருடையது!
I எம்.ஜி.ஆர்-சிவாஜி இருவ ருக்கும் விருப்பமான கவிஞர். எம்.ஜி.ஆர் எப்பவும் 'என்ன ஆண்டவனே' என்று அழைப்பார். சிவாஜிக்கு வாலி 'என்ன வாத்தியாரே'!
I பத்மஸ்ரீ, பாரதி விருது, முரசொலி அறக்கட்டளை விருது, கலைமாமணி விருது எனப் பல சிறப்புக்களைப் பெற்றிருக்கிறார் வாலி. செம்மொழி, உலகத் தமிழ் மாநாடு போன்றவற்றில் இவரது பங்கும் உண்டு!
I ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது நெருங்கிய நண்பர்கள் பட்டாளத்தில் அகிலன், சுகி, திருலோக சீதாராம், ஏ.எல்.ராகவன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், ராமகிருஷ்ணன், பின்னாளில் சுஜாதாவான ரங்கராஜனும் அடக்கம்!
I வாலி தனிமை விரும்பி அல்ல. எவ்வளவு கூட்டத்தில் நண்பர்களோடு இருந்தாலும் ஒரு தாளை உருவிக்கொடுத்தால் கவிதை வந்து விடும்!
I வெற்றிலை பாக்கு போடுவதை 15 வயதில் ஆரம்பித்து 76 வயது வரை தொடர்ந்தார். பிறகு, திடீரென நிறுத்திவிட்டார். பல வருட வெற்றிலைப் பழக்கத்தைவிட்டதை இன்றைக்கும் ஆச்சர்யமாகச் சொல்வார்கள்!
I வாலியின் இஷ்ட தெய்வம் முருகன். எப்பவும் அவரின் உதடுகள் 'முருகா' என்றுதான் உச்சரிக்கும். முருகன் பாடல்கள் என்றால் எழுது வதற்கு முதலிடம் தரத் துடிப்பார்!
I வாலி கவிதை அளவுக்கு கிரிக்கெட் பிரியர். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வரலாறு, அவர்களின் திறன், ஸ்டைல் எல்லாவற்றைப்பற்றியும் விலாவாரியாகப் பேசுவார். போட்டியின் முடிவைத் தீர்மானிக்கிற வரைகூட அவரால் முடியும்!
I எங்கேயிருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டன்று வாலியைத் தேடிக் கண்டுபிடித்து, ஆசி பெற்றுவிடுவார் ஏ.ஆர்.ரஹ்மான். இன்னும் பழநி பாரதி, நா.முத்துக்குமார், பா.விஜய் நெல்லை ஜெயந்தா, என எல்லாக் கவிஞர்களும் சங்கமமாகும் இடம் வாலியின் இல்லம்!
I 2005-ல் ராஜ் டி.வி. வாலி 12,000 பாடல்கள் எழுதியதற்காக 'என்றென்றும் வாலி' என விழா எடுத்தது. 100 சவரன் தங்கம் பரிசு அளித்தார்கள். வராத நட்சத்திரங்களை, டைரக்டர்களை எண்ணிவிடலாம். திரையுலகின் பெரிய நிகழ்வு அது!
I வாலியின் 50 ஆண்டு கால நண்பர் ஜெயகாந்தன். இருவருக்கும் உள்ள நெருக்கத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படுவார்கள்!
I ஸ்ரீரங்கத்தில் 'பேராசை பிடித்த பெரியார்' என்னும் சமூக நாடகத்துக்கு 'இவர்தான் பெரியார்! இவரை எவர்தான் அறியார்?' என்ற பாடல் எழுதி பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் வாலிக்கு உண்டு!
நன்றி விக்கீப்பீடியா.விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக