புதன், 12 ஜூலை, 2017

கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் ஜூலை 13.



கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் ஜூலை 13.

ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் பாடல்கள் என்றாலோ, கவிதைகள் என்றாலோ, ஹைக்கூ என்றாலோ நினைவுக்கு வருபவர் ‘கவியரசு வைரமுத்து’ அவர்களே. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் அவர், சிறந்த பாடலாசிரியருக்காக ‘ஆறு முறை தேசிய விருதும்’, ‘கலைமாமணி விருதும்’, ‘பத்மஸ்ரீ விருதும்’ பெற்ற இந்திய தமிழ்க் கவிஞர். ‘கவியரசு’ என்றும், ‘கவிப்பேரரசு’ என்றும், ‘காப்பியப்பேரறிஞர்’ என்றும், ‘காப்பியசாம்ராட்’ என்றும் பட்டங்கள் பெற்ற வைரமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: ஜூலை 13, 1953
பிறந்த இடம்: வடுகபட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தொழில்: கவிஞர், பாடலாசிரியர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
வைரமுத்து அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் (பெரியகுளம் அருகில் உள்ளது) ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் ராமசாமி தேவருக்கும், அங்கம்மாளுக்கும் மகனாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்
தன்னுடைய இளமைப் பருவத்தில் அண்ணாவின் இனிமையான தமிழ் நடையாலும், பெரியாரின் சிந்தனைகளாலும், கருணாநிதியின் இலக்கியத் தமிழாலும் கவரப்பட்டு, பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் அவர்களின் கவிதை நடையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், மேலும் தனது கிராமத்தின் சுற்றுப்புறச்சூழலும் அவரைத் தனது பன்னிரெண்டாவது வயதிலேயே கவிதை எழுத ஊக்குவித்தது. திருவள்ளுவரின் திருக்குறளால் கவரப்பட்ட அவர், தனது பதினான்காவது வயதிலேயே, தமிழ் செய்யுளின் யாப்பின் சொல் இலக்கண விதிகளைக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிலும் சிறந்து விளங்கிய அவர், தனது உயர்கல்விப் படிப்பில் மதுரை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, அதற்காக வெள்ளிப்பதக்கமும் வென்றார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், தமிழில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெறுவதற்காக, அவர் சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி நாட்களில், அவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு, சிறந்த பேச்சாளர் மற்றும் கவிஞருக்காக 20க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றார். கல்லூரியின் இரண்டாவது ஆண்டில், அவருக்கு பத்தொன்பது வயதிருக்கும் போது, ‘வைகறை மேகங்கள்’ என்ற முதல் பாடல் திரட்டை வெளியிட்டார். அவரது இந்தப் படைப்பானது, சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது படைப்பு பாடத்திட்டத்தில் வந்ததால், ஒரு மாணவக் கவிஞராக அவர் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். பின்னர், முதுகலைத் (எம்.ஏ) தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றார். 1979ல், அவரது இரண்டாவது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ என்ற படைப்பை வெளியிட்டார்.
திரையுலக வாழ்க்கை
1978 ஆம் ஆண்டு பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடலாகும். பின்னர், அவர் ‘நினைவெல்லாம் நித்யா’ (1982), ‘முதல் மரியாதை’ (1985), ‘புன்னகை மன்னன்’ (1986), ‘வேதம் புதிது’ (1987), ‘கொடி பறக்குது’ (1989), ‘புதிய முகம்’ (1993), ‘ஜென்டில்மேன்’ (1993), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), ‘கருத்தம்மா’ (1994), ‘காதலன்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘டூயட்’ (1994), ‘முத்து’ (1995), ‘இந்திரா’ (1995), ‘பாட்ஷா’ (1995), ‘இந்தியன்’ (1996), ‘இருவர்’ (1997), ‘நிலாவே வா’ (1998), ‘காதல் மன்னன்’ (1998), ‘ஜீன்ஸ்’ (1998), ‘துள்ளாத மனமும் துள்ளும்’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆடுகளம்’ (1999), ‘முதல்வன்’ (1999), ‘படையப்பா’ (1999), ‘சங்கமம்’ (1999), ‘ஜோடி’ (1999), ‘குஷி’ (2000), ‘ரிதம்’ (2000), ‘ஆளவந்தான்’ (2000), ‘முகவரி’ (2000), ‘அலைபாயுதே’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘பார்த்தேன் ரசித்தேன்’ (2000), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘மஜ்னு’ (2001), ‘ஷாஜகான்’ (2001), ‘சிடிசன்’ (2001), ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002), ‘வில்லன்’ (2002), ‘ஜெமினி’ (2002), ‘அன்பே சிவம்’ (2003), ‘இயற்கை’ (2003), ‘செல்லமே’ (2004), ‘அட்டஹாசம்’ (2004), ‘ஆயுத எழுத்து’ (2004), ‘வசூல் ராஜா MBBS’ (2004), ‘உள்ளம் கேட்குமே’ (2005), ‘வரலாறு (2006), ‘அந்நியன்’ (2006), ‘சிவாஜி: தி பாஸ்’ (2007), ‘மொழி’ (2007), ‘குரு’ (2007), ‘தசாவதாரம்’ (2008), ‘அசல்’ (2009), ‘மோதி விளையாடு’ (2009), ‘சிவப்பு மழை’ (2009), ‘ஆனந்த தாண்டவம்’ (2009), ‘அயன் (2009)’, ‘எந்திரன் (2010)’, ‘ராவணன்’ (2010), ‘வாகை சூட வா’ (2011), ‘யமுனா’ (2012), ‘நீர்ப்பறவை’ (2012),  மற்றும் ‘கடல்’ (2013).
அவர் எழுதிய பல பாடல்கள் அவருக்குப் புகழ் பெற்றுத்தந்தாலும், ‘பூங்காற்று திரும்புமா’ – ‘முதல் மரியாதை’ (1985), ‘சின்ன சின்ன ஆசை’ – ‘ரோஜா’ (1993), ‘போறாளே பொன்னுத்தாயி’ – ‘கருத்தம்மா’ (1995), ‘முதல் முறையே கில்லி பார்த்தேன்’ – ‘சங்கமம்’ (2000), ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ – ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) மற்றும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ – ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) போன்ற பாடல்கள் அவருக்கு தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல், அவருக்குப் பெரும் புகழையும் தேடித்தந்தது.
வைரமுத்துவின் படைப்புகள்
தமிழ்மொழியின் மீது அளவற்றப் பற்றுக் கொண்ட அவர், திரைப்படங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். அவரது படைப்புகளில் சில
நாவல்கள் – ‘வில்லோடு வா நிலவே’, ‘தண்ணீர் தேசம்’, ‘வானம் தொட்டுவிடும்’, ‘தூரம்தான்’, ‘கருவாச்சி காவியம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, மற்றும் ‘மூன்றாம் உலகப் போர்’
கவிப் பேரரசு அவர்களின் உலகப் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள் – ‘வைகறை மேகங்கள்’, ‘சிகரங்களை நோக்கி’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘தமிழுக்கு நிறமுண்டு’, ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’, ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’, ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’, ‘இதனால் சகலமானவர்களுக்கும், ‘இதுவரை நான்’, ‘கொஞ்சம் தேனீர் நிறைய வானம்’, ‘பெய்யென பெய்யும் மழை’, ‘நேற்று போட்ட கோலம்’, ‘’ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்’, மற்றும் ‘ஒரு மெளனத்தின் சப்தங்கள்’.
நூல்கள் – ‘கள்ளிகாட்டு இதிகாசம்’, ‘இதனால் சகலமானவர்களுக்கும்’, ‘இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல’, ‘இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்’, ‘ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’, ‘காவி நிறத்தில் ஒரு காதல்’, ‘என் பழைய பனை ஓலைகள்’, ‘இன்னொரு தேசிய கீதம்’, ‘வைகறை மேகங்கள்’, ‘ரத்ததானம்’, ‘சிற்பியே உன்னை செதுக்குகிறேன்’, ‘எல்லா நதியுளும் என் ஓடம்’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘கவிராஜன் கதை’, ‘வானம் தொட்டுவிடும் தூரம்தான்’, ‘தண்ணீர் தேசம்’, ‘நேற்று போட்ட கோலம்’, ‘தமிழுக்கு நிறம் உண்டு’, ‘மீண்டும் என் தொட்டிலுக்கு’, ‘கொடிமரத்தின் வேர்கள்’, ‘வில்லோடு வா நிலவே’, ‘என் ஜன்னலின் வழியே’, ‘ஒரு மௌனத்தின் சப்தங்கள்’, ‘கல்வெட்டுகள்’, ‘கேள்விகளால் ஒரு வேள்வி’, ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’, ‘வடுகபட்டி முதல் வல்கா வரை’, ‘பெய்யென பெய்யும் மழை’, ‘இதுவரை நான்’, ‘ஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும்’, ‘பாற்கடல்’ மற்றும் ‘கருவாச்சி காவியம்’.
விருதுகளும், அங்கீகாரங்களும்
1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1995ல் ‘கருத்தம்மா’ படத்திற்காகவும், 1996ல் ‘முத்து’ மற்றும் ‘பம்பாய்’ படங்களுக்காகவும், 2000ல் ‘சங்கமம்’ படத்திற்காகவும், 2006ல் ‘அந்நியன்’ படத்திற்காகவும், 2008ல் ‘பெரியார்’ படத்திற்காகவும் தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றார்.
1986ல் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டது.
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
1986 ல் ‘முதல் மரியாதை’ (1985) படத்திலிருந்து வரும் ‘பூங்காற்று திரும்புமா’ என்ற பாடலுக்காகவும், 1993ல் ‘ரோஜா’ (1993) படத்திலிருந்து வரும் ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலுக்காகவும், 1995ல், ‘கருத்தம்மா’ (1995) படத்திலிருந்து வரும் ‘போறாளே பொன்னுத்தாயி’ என்ற பாடலுக்காகவும், ‘பவித்ரா’ படத்திலிருந்து வரும் ‘உயிரும் நீயே’ என்ற பாடலுக்காகவும், 2000ல், ‘சங்கமம்’ (2000) படத்திலிருந்து வரும் ‘முதல் முறையே கில்லி பார்த்தேன்’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) படத்திலிருந்து வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடலுக்காகவும், 2011ல், ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) படத்திலிருந்து வரும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்ற பாடலுக்காகவும் ஆறு முறை தேசிய விருதுகளை வென்றார்.
காலவரிசை
1953: தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் பிறந்தார்.
1979: அவரது இரண்டாவது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ வெளியிடப்பட்டது.
1978: பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
1986ல் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டது.
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.


வாழ்க்கைக் குறிப்பு
தமிழ் நாடு மாநிலம் தேனி மாவட்டம் ,
பெரியகுளம் அருகில் உள்ள
வடுகபட்டியில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980ல் "நிழல்கள் " திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி , கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.

படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்
வைகறை மேகங்கள்
திருத்தி எழுதிய தீர்ப்புகள்
இன்னொரு தேசியகீதம்
எனது பழைய பனையோலைகள்
கவிராஜன் கதை
இரத்த தானம்
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
தமிழுக்கு நிறமுண்டு
பெய்யெனப் பெய்யும் மழை
"எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்"
தன்வரலாறு
இதுவரை நான்
கட்டுரைகள்
கல்வெட்டுக்கள்
என் ஜன்னலின் வழியே
நேற்று போட்ட கோலம்
ஒரு மெளனத்தின் சப்தங்கள்
சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
வடுகபட்டி முதல் வால்கா வரை
இதனால் சகலமானவர்களுக்கும்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
நாவல்
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
மீண்டும் என் தொட்டிலுக்கு
வில்லோடு வா நிலவே
சிகரங்களை நோக்கி
ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
காவி நிறத்தில் ஒரு காதல்
தண்ணீர் தேசம்
கள்ளிக்காட்டு இதிகாசம் ( ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
கருவாச்சி காவியம் ( ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
வைரமுத்துவும் ஜெயகாந்தனும்
மூன்றாம் உலகப்போர் ( ஆனந்த விகடனில்
தொடராக வெளிவந்தது)
ஒலி நாடாகள்
கவிதை கேளுங்கள்
தேன் வந்து பாயுது.

விருதுகள்
கலைமாமணி விருது - 1990.
சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்)
பத்ம பூசன் விருது (2014)
சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை).
விருது பெற்ற பாடல்கள்
1. அனைத்துப் பாடல்களுக்கும் (திரைப்படம்: முதல் மரியாதை ) - 1985.
2. சின்னச்சின்ன ஆசை (திரைப்படம்:
ரோஜா) - 1992.
3. போறாளே பொன்னுத்தாயி (திரைப்படம்: கருத்தம்மா), உயிரும் நீயே (திரைப்படம்: பவித்ரா) - 1994
4. முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (திரைப்படம்: சங்கமம் ) - 1999.
5. நெஞ்சில் ஜில் ஜில் ஜில் (திரைப்படம்:
கன்னத்தில் முத்தமிட்டால் ) - 2002.
6. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (திரைப்படம்: தென்மேற்கு பருவக்காற்று ) - 2010.
7. எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று (திரைப்படம்: தர்மதுரை) - 2016
வருடம் விருது படைப்
1981
தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது
1986
சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது
அனைத்து பாடல்களு
1990 கலைமாமணி விருது —
1993
சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது
"சின்ன சி ஆசை "
1995
சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது
"போறாள பொண்ணு ", "உயிரும்
1995
தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது
1996
தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது
2000
சிறந்தப் பாடலாசிரியர்க்கான தேசிய விருது
"முதல் முற கிள்ளிப்பா
2000
தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது
2003 பத்மசிறீ —
2003
சிறந்த பாடலாசிரியர்க்கான தேசிய விருது
நெஞ்சில் ஜ ஜில்
2006
தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது
2008
தமிழக அரசின் சிறந்தப் பாடலாசிரியர் விருது
2011
சிறந்த பாடலாசிரியர்க்கான தேசிய விருது
"கள்ளிக் கா
சிறப்புகள்
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.

திரைப்படப் பட்டியல்
1980களில்
1. 1980- நிழல்கள்
2. 1980- காளி
3. 1981- அந்த ஏழு நாட்கள்
4. 1981- ராஜபார்வை
5. 1981- அலைகள் ஓய்வதில்லை
6. 1981- டிக் டிக் டிக்
7. 1981- நெஞ்சினிலே துணிவிருந்தால்
8. 1981- பாலைவனச் சோலை
9. 1982- அம்மா
10. 1982- கருடா சௌக்கியமா
11. 1982- பார்வையின் மறுபக்கம்
12. 1982- வாலிபமே வா வா
13. 1982- கண்ணே ராதா
14. 1982- புதுக்கவிதை
15. 1982- கோபுரங்கள் சாய்வதில்லை
16. 1982- ஊரும் உறவும்
17. 1982- நினைவெல்லாம் நித்யா
18. 1982- ராணி தேனி
19. 1982- ஆகாய கங்கை
20. 1982- மூன்று முகம்
21. 1982- பயணங்கள் முடிவதில்லை
22. 1982- மூன்றாம் பிறை
23. 1982- மூன்றுமுகம்
24. 1982- தூறல் நின்னு போச்சு
25. 1982- " காதல் ஓவியம்"
26. 1983- " மண்வாசனை "
27. 1983- " கொக்கரக்கோ "
28. 1983- " ஒரு ஓடை நதியாகிறது "
29. 1983- ஆனந்தக் கும்மி
30. 1983- கோழி கூவுது
31. 1983- உருவங்கள் மாறலாம்
32. 1983- ஆயிரம் நிலவே வா
33. 1983- தங்கமகன்
34. 1983- சாட்சி
35. 1983- சலங்கை ஒலி
36. 1983- இன்று நீ நாளை நான்
37. 1984- " அச்சமில்லை அச்சமில்லை "
38. 1984- " வாழ்க்கை "
39. 1984- நீங்கள் கேட்டவை
40. 1984- அன்பே ஓடி வா
41. 1984- திருப்பம்
42. 1984- வெற்றி
43. 1984- குழந்தை யேசு
44. 1984- நாளை உனது நாள்
45. 1984- தாவணிக் கனவுகள்
46. 1984- நூறாவது நாள்
47. 1984- வீட்டுக்கொரு கண்ணகி
48. 1984- நல்லவனுக்கு நல்லவன்
49. 1984- ஜனவரி 1
50. 1985- " பாடும் வானம்பாடி "
51. 1985- ஆண்பாவம்
52. 1985- அந்த ஒரு நிமிடம்
53. 1985- கீதாஞ்சலி
54. 1985- ஒரு கைதியின் டைரி
55. 1985- இதயகோவில்
56. 1985- முதல் மரியாதை
57. 1985- நான் சிகப்பு மனிதன்
58. 1985- ஜப்பானில் கல்யாண ராமன்
59. 1985- அடுத்தாத்து ஆல்பர்ட்
60. 1985- உன் கண்ணில் நீர் வழிந்தால்
61. 1985- கன்னிராசி
62. 1985- படிக்காதவன்
63. 1985- நல்ல தம்பி
64. 1985- " சின்ன வீடு "
65. 1985- பூவே பூச்சூடவா
66. 1986- நீதானா அந்தக் குயில்
67. 1986- உனக்காகவே வாழ்கிறேன்
68. 1986- நான் அடிமை இல்லை
69. 1986- சாதனை
70. 1986- புன்னகை மன்னன்
71. 1986- லட்சுமி வந்தாச்சு
72. 1986- ஒரு இனிய உதயம்
73. 1986- நட்பு
74. 1986- உயிரே உனக்காக
75. 1986- மனிதனின் மறுபக்கம்
76. 1986- தாய்க்கு ஒரு தாலாட்டு
77. 1986- மண்ணுக்குள் வைரம்
78. 1986- விக்ரம்
79. 1986- தர்ம பத்தினி
80. 1986- கண்மணியே பேசு
81. 1986- கடலோரக் கவிதைகள்
82. 1986- கரிமேடு கருவாயன்
83. 1987- காதல் பரிசு
84. 1987- " சின்னதம்பி பெரியதம்பி "
85. 1987- மனிதன்
86. 1987- வீர பாண்டியன்
87. 1987- சொல்வதெல்லாம் உண்மை
88. 1987- ஊர்க்காவலன்
89. 1987- " ஊர்க்குருவி"
90. 1987- வைராக்கியம்
91. 1987- ராஜ மரியாதை
92. 1987- சிறைப்பறவை
93. 1987- அன்புள்ள அப்பா
94. 1987- வேதம் புதிது
95. 1987- சங்கர் குரு
96. 1988- " வசந்தி "
97. 1988- " பூவுக்குள் பூகம்பம் "
98. 1988- கலியுகம்
99. 1988- உழைத்து வாழ வேண்டும்
100. 1988- செந்தூரப்பூவே
101. 1988- கொடி பறக்குது
102. 1989- அன்று பெய்த மழை
103. 1989- ஆராரோ ஆரிரரோ
104. 1989- ராஜா சின்ன ரோஜா
1990களில்
1. 1990- இதய தாமரை
2. 1990- உலகம் பிறந்தது எனக்காக
3. 1990- என் காதல் கண்மணி
4. 1991- சிகரம்
5. 1991- நாட்டுக்கொரு நல்லவன்
6. 1992- ரோஜா
7. 1992- வானமே எல்லை
8. 1992- அண்ணாமலை
9. 1992- அமரன்
10. 1992- " சேவகன் "
11. 1993- ஜென்டில் மேன்
12. 1993- உழவன்
13. 1993- புதிய முகம்
14. 1993- திருடா திருடா
15. 1993- வேடன்
16. 1993- அமராவதி
17. 1993- கிழக்குச் சீமையிலே
18. 1994- டூயட்
19. 1994- கேப்டன்
20. 1994- சின்னமுத்து
21. 1994- சின்னமேடம்
22. 1994- கருத்தம்மா
23. 1994- பவித்ரா
24. 1994- காதலன்
25. 1994- சிந்துநதிப்பூ
26. 1994- மே மாதம்
27. 1994- தாய்மாமன்
28. 1994- ஜெய்ஹிந்த்
29. 1994- பாசமலர்கள்
30. 1995- " கர்ணா "
31. 1995- பம்பாய்
32. 1995- இந்திரா
33. 1995- பாம்பே
34. 1995- பாட்ஷா
35. 1995- முத்து
36. 1995- பசும்பொன்
37. 1995- " ஆசை "
38. 1995- மருமகன்
39. 1995- வில்லாதி வில்லன்
40. 1996- லவ் பேர்ட்ஸ்
41. 1996- இந்தியன்
42. 1996- பாஞ்சாலங்குறிச்சி
43. 1996- அந்திமந்தாமரை
44. 1996- கிழக்குமுகம்
45. 1997- மின்சாரக் கனவு
46. 1997- " பாசமுள்ள பாண்டியரே "
47. 1997- " புதையல்"
48. 1997- கோபுர தீபம்
49. 1997- இருவர்
50. 1997- சக்தி
51. 1997- உல்லாசம்
52. 1997- அருணாச்சலம்
53. 1998- உளவுத் துறை
54. 1998- உன்னுடன்
55. 1998- நிலாவே வா
56. 1998- கண்ணெதிரே தோன்றினாள்
57. 1998- பூவேலி
58. 1998- சந்திப்போமா
59. 1998- ஜீன்ஸ்
60. 1998- உயிரோடு உயிராக
61. 1998- காதல் மன்னன்
62. 1999- துள்ளாத மனமும் துள்ளும்
63. 1999- அமர்க்களம்
64. 1999- முதல்வன்
65. 1999- சங்கமம்
66. 1999- ஹெலோ
67. 1999- திருப்பதி ஏழுமலை வெங்கடேஷா
68. 1999- தாஜ்மஹால்
69. 1999- கள்ளழகர்
70. 1999- ஜோடி
71. 1999- ஆனந்த பூங்காற்றே
72. 1999- ரோஜாவனம்
73. 1999- படையப்பா
74. 1999- வாலி
2000த்தில்
1. 2000- குஷி
2. 2000- வல்லரசு
3. 2000- ரிதம்
4. 2000- வானவில்
5. 2000- உயிரிலே கலந்தது
6. 2000- சிநேகிதியே
7. 2000- சிம்மாசனம்
8. 2000- அப்பு
9. 2000- ஆண்டவன்
10. 2000- அலைபாயுதே
11. 2000- பட்ஜெட் பத்மநாதன்
12. 2000- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
13. 2000- என்னவளே
14. 2000- முகவரி
15. 2000- சந்தித்த வேளை
16. 2001- ஆழவந்தான்
17. 2001- 12பி
18. 2001- பூவெல்லாம் உன் வாசம்
19. 2001- மிட்டா மிராசு
20. 2001- பார்த்தாலே பரவசம்
21. 2001- சிட்டிசன்
22. 2001- ஷாஜகான்
23. 2001- ஸ்டார்
24. 2002- பாபா
25. 2002- ரெட்
26. 2002- யூத்
27. 2002- தமிழன்
28. 2002- அல்லி அர்ச்சுனா
29. 2002- ஜெமினி
30. 2002- சாமுராய்
31. 2002- வில்லன்
32. 2002- கிங்
33. 2002- கன்னத்தில் முத்தமிட்டால்
34. 2002- ஐ லவ் யூ டா
35. 2002- பஞ்சதந்திரம்
36. 2003- தித்திக்குதே
37. 2003- ஆசை ஆசையாய்
38. 2003- அன்பே சிவம்
39. 2003- இயற்கை
40. 2004- தென்றல்
41. 2004- வானம் வசப்படும்
42. 2004- ஆயுத எழுத்து
43. 2004- செல்லமே
44. 2004- ஜெய்
45. 2004- அட்டகாசம்
46. 2004- வசூல்ராஜா எம் பி பி எஸ்
47. 2005- இதயத் திருடன்
48. 2005- மண்ணின் மைந்தன்
49. 2005- அந்நியன்
50. 2005- மழை
51. 2005- உள்ளம் கேட்குமே
52. 2006- பொய்
53. 2006- இது காதல் பருவம்
54. 2006- வட்டாரம்
55. 2006- திருட்டுப் பயலே
56. 2006- வரலாறு
57. 2006- கை வந்த கலை
58. 2006- தம்பி
59. 2006- பரமசிவன்
60. 2006- இதயத்திருடன்
61. 2006- தலைமகன்
62. 2007- பொல்லாதவன்
63. 2007- மொழி
64. 2007- உற்சாகம்
65. 2007- சிவாஜி
66. 2007- ஒன்பது ரூபாய் நோட்டு
67. 2007- பெரியார்
68. 2007- ஆக்ரா
69. 2007- திருமகன்
70. 2007- குரு
71. 2008- தசாவதாரம்
72. 2008- அபியும் நானும்
73. 2008- கண்ணும் கண்ணும்
74. 2008- சில நேரங்களில்
75. 2008- தசாவதாரம் (தெலுங்கு)
76. 2008- முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
77. 2008- இருவர் மட்டும்
78. 2009- ஏன் இந்த மௌனம்
79. 2009- ஆனந்த தாண்டவம்
80. 2009- அயன்
81. 2009- பாலைவன சோலை
82. 2009- இந்திர விழா
83. 2009- கந்தசாமி
2010களில்
1. 2010- தென்மேற்கு பருவக்காற்று
2. 2010- மகிழ்ச்சி
3. 2010- நகரம் மறுபக்கம்
4. 2010- அம்பாசமுத்திரம் அம்பானி
5. 2010- எந்திரன்
6. 2010- சிவப்பு மலை
7. 2010- வந்தே மாதரம்
8. 2010- ஆயிரத்தில் ஒருவன்
9. 2010- காந்தி புரம்
10. 2010- பெண் சிங்கம்
11. 2010- இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்
12. 2010- மாஸ்கோவின் காவேரி
13. 2010- ராவணன்
14. 2010- ஆனந்தப்புறத்து வீடு
15. 2010- அசல்
16. 2010- இனிது இனிது
17. 2011- வாகை சூட வா
18. 2011- அரும்பு மீசை குரும்பு பார்வை
19. 2011- ஆயிரம் விளக்கு
20. 2011- ரா ஒன்
21. 2011- மம்பட்டியான்
22. 2011- குலசேகரனும் கூலிப்படையும்
23. 2011- காதலுக்கு மரணமில்லை
24. 2011- அப்பாவி
25. 2011- எதிர்மறை
26. 2011- தம்பி வெட்டோத்தி சுந்தரம்
27. 2012- கொள்ளைக்காரன்
28. 2012- சிவாஜி 3டி
29. 2012- சேவர் கொடி
30. 2012- சூரிய நரகம்
31. 2012- நீர்ப்பறவை
32. 2012- உருமி
33. 2012- யமுனா
34. 2012- ஆணமலை கந்தன்
35. 2012- கிருஷ்ணவேணி பஞ்சாலை
36. 2012- கடல் (மலையாளம்)
37. 2013- பாண்டிய நாடு
38. 2013- விஸ்வரூபம்
39. 2013- அன்னக்கொடி
40. 2013- கடல்
41. 2013- யமுனா
42. 2013- ரகளைபுரம்
43. 2013- இரண்டாம் உலகம்
44. 2013- ஆரம்பம்
45. 2013- சந்தமாமா
46. 2013- நவீன சரஸ்வதி சபதம்
47. 2013- பரதேசி
48. 2013- வேடிக்கை
49. 2013- அம்பிகாபதி
50. 2014- ஜில்லா
51. 2014- பொறியாளன்
52. 2014- லிங்கா
53. 2014- ஜெய் ஹிந்த்-2
54. 2014- ஜீவா
55. 2014- சதுரங்க வேட்டை
56. 2014- புலிவால்
57. 2014- கோச்சடையான்
58. 2014- ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
59. 2014- திருடன்
60. 2014- அசோகமித்ரன்
61. 2014- வெள்ளைக்கார துரை
62. 2014- வெண்ணிலா வீடு
63. 2014- நான் தான் பாலா
64. 2014- பனிவிழும் மலர்வனம்
65. 2015- ஓ காதல் கண்மணி
66. 2015- புலி
67. 2015- பாம்புச்சட்டை
68. 2015- அநேகன்
69. 2015- கங்காரு
70. 2015- என்வழி தனிவழி
71. 2015- வாய்மை
72. 2015- நண்பேன்டா
73. 2015- விஸ்வரூபம்-2
74. 2015- அகிலாபுரம்
75. 2015- இடம் பொருள் ஏவல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக