சனி, 13 ஆகஸ்ட், 2016

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று ஆகஸ்ட் 14 காலமானார்.

பாடலாசிரியர் நா.முத்துக்குமார்
சென்னையில் இன்று ஆகஸ்ட் 14 காலமானார்.

மஞ்சள் காமாலையால்
அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப்
பாடலாசிரியர் நா.முத்துக்குமார்
சென்னையில் இன்று
மரணமடைந்தார். அவருக்கு வயது 41.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச்
சார்ந்தவர் நா.முத்துக்குமார்.
இயக்குநராக வேண்டும் என்ற
முனைப்பில் பாலுமகேந்திராவிடம்
உதவியாளராகப்
பணியாற்றினார். சீமான்
இயக்கிய வீரநடை படத்தின் மூலம்
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்
ஆனார்.
'காதல் கொண்டேன்',
'பிதாமகன்', 'கில்லி', 'கஜினி',
'நந்தா', 'புதுப்பேட்டை', 'காதல்',
'சந்திரமுகி', 'சிவாஜி', 'கற்றது தமிழ்',
'7 ஜி ரெயின்போ காலனி',
'காக்காமுட்டை', 'தெறி'
உள்ளிட்ட பல படங்களில்
நா.முத்துக்குமார் எழுதிய
பாடலகள் பெரிய வரவேற்பைப்
பெற்றவை.
தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட
படங்களில் 1500க்கும் மேற்பட்ட
பாடல்களை எழுதியுள்ளார்.
'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய
ஆனந்த யாழை மீட்டுகிறாள்
பாடலுக்கும், 'சைவம்' படத்தில் எழுதிய
அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது
கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
மஞ்சள் காமாலையால்
பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார்
சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி
நா.முத்துக்குமார் உயிரிழந்தார்.
நா.முத்துக்குமார் - தீபலஷ்மி
தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும்,
யோகலஷ்மி (8 மாதங்கள்) என்ற
மகளும் உள்ளனர்.

நா.முத்துக்குமார் , தமிழகத்தைச் சேர்ந்த
தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும்
கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என்
காதல் சொல்ல, ஒரு கல் ஒரு
கண்ணாடி ஆகியவை இவரின்
பாடல்களுள் சில.
வாழ்க்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள
கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர்.
நான்கு வயதில் தாயை இழந்தவர். [1]
சிறு வயதில் இருந்தே புத்தகங்களை
உலகமாகக் கொண்டார்.
தொடக்கத்தில் இயக்குனராகப்
பணியாற்ற விரும்பி இயக்குனர்
பாலுமகேந்திராவிடம் நான்கு
ஆண்டுகள் பணி செய்தார். இதுவரை
கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல்
எழுதியுள்ள இவர், தற்போதைய தமிழ்த்
திரையுலகின் முன்னணி
பாடலாசிரியராவார்.
படைப்புகள்
இவர் பாடலெழுதிய படங்களின்
பெயர்கள் கீழே:
மாற்றான் 7ஜி ரெயின்போ காலனி
நந்தா
வெயில் (சிறந்த
பாடலாசிரியருக்கான விருது)
புதுப்பேட்டை சந்திரமுகி
சிவாஜி த பாஸ் (சிறந்த
பாடலாசிரியருக்கான விருது)
கற்றது தமிழ்
கஜினி (சிறந்த பாடலாசிரியருக்கான
விருது)
அழகாய் இருக்கிறாய் பயமாய்
இருக்கிறது
தம்பி காதல் கொண்டேன்
காதல் மன்மதன் சண்டக்கோழி
தீபாவளி போக்கிரி பீமா வாழ்த்துகள்
அழகிய தமிழ் மகன் சத்தம் போடாதே
கல்லூரி வேல் சக்கரக்கட்டி
சந்தோஷ் சுப்பிரமணியம் ஆறு
வாரணம் ஆயிரம்
சிவா மனசுல சக்தி (சிறந்த
பாடலாசிரியருக்கான விருது)
அயன் (சிறந்த பாடலாசிரியருக்கான
விருது)
நாடோடிகள் வாமனன் ஆதவன் சுறா
யாரடி நீ மோகினி பையா
அங்காடித் தெரு சிங்கம்
களவாணி மதராசப்பட்டினம்
நான் மகான் அல்ல வானம்
ரத்த சரித்திரம் போராளி எத்தன் வேட்டை
எங்கேயும் காதல் அவன் இவன்
பொய் சொல்லப் போறோம்
நர்த்தகி தெய்வத் திருமகள்
வந்தான் வென்றான் நண்பன்
அரவான் மன்னா வழக்கு எண் 18/9
பில்லா 2
நீதானே எந்தன் பொன்வசந்தம்
இவரது நூல்கள்
நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத்
தொகுப்பு)
கிராமம் நகரம் மாநகரம்
பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத்
தொகுப்பு)
ஆணா ஆவண்ணா
என்னை சந்திக்க கனவில் வராதே
சில்க் சிட்டி பால காண்டம்
குழந்தைகள் நிறைந்த வீடு
வேடிக்கை பார்ப்பவன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக