செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நடிகை அஞ்சலிதேவி பிறந்த தினம் ஆகஸ்ட் 24.


நடிகை அஞ்சலிதேவி பிறந்த தினம் ஆகஸ்ட் 24.
அஞ்சலிதேவி (Anjali Devi, தெலுங்கு: అంజలీదేవి, 24 ஆகத்து 1927 - 13 சனவரி 2014) பழம்பெரும் தெலுங்கு, மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றவர்.

வாழ்க்கைச் சுருக்கம்
அஞ்சனி குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி நடிப்புத் தொழிலுக்காக சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.

1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல். வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அத்திரைப்படம் முழுமை பெறாமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குனர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான கொல்லபாமா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாவே அஞ்சனி குமாரி என்ற பெயரை அஞ்சலிதேவி என்ற பெயரைச் சூட்டினார். அந்த படத்தின் மூலம் இவர் பெரும் புகழ் பெற்றார். ஏறத்தாழ 350 தெலுங்குத் திரைப்படங்களிலும், சில தமிழ், கன்னடப் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
சுவர்ண சுந்தரி
அனார்க்கலி
மணாளனே மங்கையின் பாக்கியம்
கணவனே கண்கண்ட தெய்வம்.




50 வயதை எட்டிய அத்தனை பேரிடமும் அஞ்சலிதேவி என்ற பெயரைச் சொன்னால் உற்சாகம் பொங்கி வழியும். அஞ்சலிதேவியின் தேனினும் இனிய குரலும் அவரது நளினம் நிறைந்த நடனமும், பாந்தம் குறையாத நடிப்பும் என்றைக்குமே மறக்க முடியாதவை. கடந்த ஆண்டு தனது 87 வயதில் காலமான அஞ்சலி தேவிக்கு இது முதலாண்டு நினைவு. அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்கு மகளாகப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி தெலுங்கு திரையுலகில் புகழின் உச்சத்தில் இருந்தாலும் சென்னை அவருக்குப் பிடித்துப் போனதால் 40களில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தார். 'அன்று டி.ஆர்.மகாலிங்கம் மெல்ல புகழ்பெற்று வந்த காலம், கிட்டத்திட்ட வளரும் நாயகன்தான். ஆனால் அஞ்சலிதேவி அதற்கு முன்பே பிரபலமாகிவிட்டார். என்றாலும் ஆதித்தன் கனவு’ படத்தின் மூலம் டி.ஆர் மகாலிங்கம் ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பிறகு தமிழ்ரசிகர்களும் அஞ்சலிதேவியின் நவரச நடிப்புப் பிரசன்னத்திற்கு காத்திருக்க ஆரம்பித்த பொற்காலம் தொடங்கியது. லவகுசா படத்தின் சீதா தேவியாக நடத்தபிறகு கருப்பு வெள்ளை காலத்தின் 'ஐகானாக'வும் மாறினார் அஞ்சலிதேவி. இவர் ஏற்று நடித்த வரலாற்றுக் கதாபாத்திரங்களில் 'சாவித்திரி'யும் சாகா வரம்பெற்றது. மூத்த தெலுங்கு ரசிகர்கள் பலரது வீடுகளில் இன்னும் இவரது படங்களை பாதுகாக்கும் அளவுக்கு தனது சொந்த மாநில ஆந்திரத்தில் மங்காப் புகழ்பெற்றிருக்கும் அஞ்சலிதேவி, தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்து வந்துவிட்ட காரணத்தாலோ என்னவோ, அவரை 1959இல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக்கி அழகு பார்த்தார்கள் தமிழர்கள். தமிழில் ரஜினியின் அம்மாவாக 'அன்னை ஓர் ஆலயம்' நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம். நடிப்போடு நின்றுவிடாமல் அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி 30 படங்களைத் தயாரித்திருக்கிறார். இன்னொரு ஆச்சர்யமும் இதுவரை வெளிவராத தகவலாகக் கிடைக்கிறது. சிவாஜி நாயகனாக அறிமுகமாக இருந்த 'பூங்கோதை' படத்தை அஞ்சலி தேவி தயாரித்தார். ஆனால், அந்தப் படத்துக்கு பிறகு தொடங்கப்பட்ட 'பராசக்தி' முதலில் வெளியாகிவிட்டது. சாய்பாபாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்கும் அளவுக்கு அஞ்சலிதேவின் ஆன்மிகப் பக்கமும் அர்த்தம் பொதிந்தது. சாய்பாபாவின் தீவிர பக்தையான இவர், சென்னையிலுள்ள தன் வீட்டை சாய்பாபா அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்துவிட்டார். 1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல்.வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அந்தப் படம் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குநர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான 'கொல்லபாமா’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாதான் அஞ்சனிதேவியின் பெயரைக் கொஞ்சம் மாற்றி அஞ்சலிதேவியாக ஆக்கினார். அந்த படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்ற அஞ்சலிதேவி இதுவரை 350 தெலுங்கு, தமிழ், கன்னட, இந்தி படங்களிலும் நடித்து சாதனைத் தடம் பதித்திருக்கும் அஞ்சலிதேவியை ஒரு ஆச்சரிய ஆளுமை என்றால் மிகையில்லை.

தவிர்க்க முடியாத நாயகி

50 களில் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்த அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலி தேவியின் நிஜப்பெயர் அஞ்சனி குமார். நடிப்புத்தொழிலில் ஈடுபட சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.

1936 ல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவரை எல்.வி பிரசாத் தனது 'கஷ்ட ஜீவி' என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் சில பிரச்னைகளால் முழுமை பெறவில்லை. பின்னரே நாடகங்களில் அவரது நடிப்பை பார்த்து வியந்த பிரபல இயக்குனர் புல்லையா, தன் இயக்கத்தில் வெளியான 'கொல்ல பாமா' படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு தந்தார். அவரே அஞ்சலிதேவிக்கு அந்தப்பெயரை சூட்டினார். அந்த படத்தின் புகழால் தொடர்ந்து பல படங்களில் நடித்த அஞ்சலிதேவி 50களில் திரையுலகின் தவிர்க்கமுடியாத நாயகியானார்.

முதல் கலர் படத்தில் நடித்தவர்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அஞ்சலிதேவி, தெலுங்கில் மட்டுமே 350 படங்கள் நடித்திருக்கிறார். குறும்பு, உணர்ச்சிவயமான நடிப்பு, நடனம், வீரமங்கை...-இதுதான் ரசிகர்களை கட்டிப்போட காரணமான அஞ்சலிதேவியின் பன்முக சிறப்பு அம்சங்கள்.

1940 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பி. ஆதிநாராயணராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஞ்சலிதேவிக்கு, 2 மகன்கள். தன் கணவருடன் இணைந்து அஞ்சலி தேவி பிக்சர்ஸ் என்ற பெயரில் பல வெற்றிகரமான தெலுங்கு படங்களை தயாரித்தார். தெலுங்கு திரையுலகின் முதல் கலர் படமான 'லவகுசா'வில் நடித்த பெருமைக்குரியவர் அஞ்சலிதேவி.

கனவுக்கன்னி

50 களில் நளிமான நடனம், நடிப்பு, நாகரிகமான உடையலங்காரம் என பன்முக திறைமையுடன் கலக்கிய அஞ்சலி தேவி, ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். அடுத்த வீட்டுப்பெண், கனணே கண்கண்ட தெய்வம் உள்ளிட்ட இவரது தமிழ்ப்படங்களில் இவரது நடிப்பு அந்த கால இளைஞர்களை அசத்திப்போட்டது என்றால் அதில் மிகையில்லை.

அவர் தன் வாழ்நாளில் சிறந்த படங்களாக குறிப்பிட்டவை 'ஸவர்ண சுந்தரி' மற்றும் 'அனார்கலி' போன்றவை. இதில் 'அனார்கலி' அவரது சொந்தப்படம். அதில் ஏ. நாகேஸ்வரராவுடன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த 2 திரைப்படங்களும் அஞ்சலிதேவிக்கு ரசிகர்களிடம் நிலையான இடத்தை கொடுத்த படங்கள்.

ஒரு பக்கம் சொந்த தயாரிப்புகள், இன்னொரு பக்கம் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்த அஞ்சலி, 50 மற்றும் 60 களில் திரையுலகின் அத்தனை பிரபலங்களுடன் நடித்தவர் .

மூத்த கலைஞரான அஞ்சலிதேவியின் மறைவு ரசிகர்களுக்கு பேரிழப்பு என்றால் மிகையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக