புதன், 16 நவம்பர், 2016

பாடகர் திருச்சி லோகநாதன் நினைவு தினம் நவம்பர் 17,


பாடகர் திருச்சி லோகநாதன் நினைவு  தினம் நவம்பர் 17,

திருச்சி லோகநாதன் (பிறப்பு  ஜூலை 25.இறப்பு: நவம்பர் 17, 1989) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். பல திரையிசைப் பாடல்களைப் பாடியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்
திருச்சி மலைக் கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியைக் குறிப்பதாகும்.

நடராஜன் என்பவரிடம் முறையாக இசை பயின்றார். சிறுவயதில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.

திரைப்படங்களில்
இவர் பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.

இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல்.

திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்
கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)
அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி)
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (கப்பலோட்டிய தமிழன்)
உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)
வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபகாவலி)
பொன்னான வாழ்வு (டவுன்பஸ்)
பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்[தொகு]
பட்டினத்தார் (1962 திரைப்படம்)
குடும்பம்
லோகநாதன் நகைச்சுவை நடிகை சி. டி. ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி என்பவரை மணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு டி. எல். மகராஜன், தீபன் சக்கரவர்த்தி ('பூங்கதவே தாள் திறவாய்' என நிழல்கள் படத்தில் பாடியவர்), தியாகராஜன் என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

குறிப்பிட தகுந்த இரண்டு நிகழ்வுகள்
நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலைப் பெட்டியைப் பரிசளித்தார்.
சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார், தயாரிப்பாளர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்ல மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார், அவரை பாடச் சொல்லுங்க என்று கூறிவிட்டார். திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடினார், அவர் டி. எம். செளந்தரராஜன்.

திருச்சி லோகநாதன் பாடல்கள்

* ஆசையே அலைபோலே
* சின்ன அரும்பு மலரும்
* சின்னக் குட்டி நாத்தனா
* அடிக்கிற கைதான் அணைக்கும்
* உண்மை ஒரு நாள் வெளியாகும்
* மண்மீது மானம் ஒன்றே ப்ரதானம்
* நிலவே நீதான் தூது செல்லாயோ?
* இந்த வாழ்வே சொந்தமானால்
* இனிதாய் நாமே இணைந்திருப்போமே
* வெள்ளிப் பனி மலையின்
* கண்களும் கவி பாடுதே
* வாராய் நீ வாராய்
* வஞ்சமிதோ வாஞ்சையிதோ?
* வான மீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே
* வாழ்க்கையின் பாடம்
* உலவும் தென்றல் காற்றினிலே
* திருவெண்காடா
* சாட்டையில்லா பம்பரம் போல்
* சகாயம் யாருமல்லடா
* புருஷ்ன் வீட்டில் வாழப்போகும்
* பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
* பறந்து வந்த பைங்கிளியே
* மாநிலமேல் சில மானிடரால்
* கூவாமல் கூவும் கோகிலம்
* கன்னிப் பருவம் துள்ளுதுங்க
* மாயாபஜார்
* கையில வாங்கினேன் பையிலே போடல்லே
* இன்பம் எங்கும் இங்கே
* இளந்தமிழா உனைக் காண

திருச்சி லோக­நாதன் - தமிழ் திரையில் முதல் பின்­ன­ணிப்­பா­டகர். நட­ராஜன் என்­ப­வ­ரிடம் முறை­யாக சங்­கீதம் பயின்­றவர். ஆனால் சம்­பள விட­யத்தில் கறார் பேர்­வழி. இவ­ரைப்­பற்­றிய இரண்டு விட­யங்கள் சுவ­ராஸ்­ய­மா­னவை.
அவை :
1) நகைச்­சுவை நடிகர் தங்­க­வேலு வீட்டு நவ­ராத்­திரி கொலுவில் மதுரை சோமு பாடிய பாடலை இர­சித்து தான் கையில் வைத்­தி­ருந்த வெள்ளி வெற்­றிலை பெட்­டியை திருச்சி லோக­நாதன்  பரி­ச­ளித்தார்.

2) சம்­பள விஷ­யத்தில் கறார் பேர்­வ­ழி, நடி­கர்­தி­லகம் சிவா­ஜி­க­ணேசன் நடித்த தூக்குத் தூக்கி திரைப்­ப­டத்தில் இடம்­பெற்ற 8 பாடல்­க­ளையும் வாய்ப்பு வந்­த­போது ஒரு பாட­லுக்கு ரூபா 500 சம்­பளம் கேட்­டார், தயா­ரிப்­பா­ளர்கள் சம்­ப­ளத்தை குறைக்கச் சொல்ல மது­ரை­யி­லி­ருந்து புதுசா ஒருத்தர் வந்­தி­ருக்­கார், அவரை பாடச் சொல்­லுங்கள் என்று கூறி­விட்டார்.

திருச்சி லோக­நாதன் சுட்­டிக்­காட்­டிய அந்த மது­ரைக்­கா­ரர்தான் தூக்குத் தூக்கி படத்தில் பாடி­னார், அவர் டி. எம். செளந்­த­ர­ராஜன். ( நன்றி விக்­கி­பி­டியா )
அவர் சுட்­டிக்­காட்­டிய டி.எம்.எஸ். இன் பிர­மாண்ட எழுச்சி அதற்­குப்பின் பல தசாப்­தங்­க­ளாக இசை­ஞா­னியின் வருகை வரை, மிகத்­தி­ற­மை­சா­லி­யான அவ­ரைத்­தாண்­டி, எவ­ராலும் முன்­னே­வர முடி­யாத ஒரு நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இந்தத் திருச்சி லோக­நா­த­னுக்கு மூன்று மகன்கள். ..அவர்­களும் பாட­கர்­களே. அவர்­களில் மூத்­த­வர்கள் இரு­வ­ரான ரி.எல். மகா­ரா­ஜ­னையும் அடுத்­த­வ­ரான தீபன் ச­க­ர­வர்த்­தி­யையும் ஓர­ள­வுக்கு இசை ரசி­கர்­க­ளுக்குத் தெரியும் ஆனால் மூன்­றா­ம­வ­ரான தியா­க­ராஜன் என்­றொ­ருவர் இருக்­கிறார்.. அவரைப் பற்றி எவ­ருக்­கா­வது தெரி­யுமா? அவர் பாடிய பாட­லொன்றைப் பற்­றித்­தெ­ரி­யுமா ? அதைப்­பற்­றிய பதி­வுதான் இது.

சில பாடல்கள் திடீ­ரென எதிர்­பா­ராத இசை­ய­மைப்­பா­ளர்­க­ளி­டத்­தி­லி­ருந்து எதிர்­பா­ராத பாடகர் பாடி வெளி­வரும்.. சில நாட்­களில் மிக. மிகப்­பி­ர­ப­ல­மா­கும், ஆனால் அந்தப் பாடல் இடம்­பெற்ற படம் வெளி­வ­ரா­மலோ வெற்­றி­ய­டை­யா­மலோ போய் அல்­லது இசை அறிவில் வறட்­சி­யான இயக்­கு­னரின் பட­மாக்­கலால் அந்­தப்­பாடல் அநி­யா­ய­மாக இருந்த இடம் தெரி­யா­ம­லேயெ மறைந்­து­விடும். என் ­பார்­வையில் அப்­ப­டிப்­பட்ட பாடல்­களை சபிக்­கப்­பட்ட பாடல்­க­ளா­கவே பார்க்­கிறேன்.

ஒரு இசை­ய­மைப்­பா­ள­ரா­னவர் தான் ஆசை­யாக உரு­வாக்­கிய மெட்­டுக்குள் ரசித்து ரசித்துச் இசை அரெஞ்மெண்ட் செய்­வது ஒர் சிற்­பி­யா­னவன் தனது சிற்­பத்தை ரசித்து ரச்­சித்துச் செதுக்­கு­வ­தற்கு ஒப்­பா­னது.

அப்­படி ஆசை­யாக செதுக்­கிய ஒரு பாடல் அதன் தாற்­ப­ரியம் தெரி­யாத ஒரு இயக்­குநரால் பட­மாக்­கப்­பட்டு சிதைக்­கப்­ப­டு­வ­தால், அல்­லது பொருத்­த­மற்ற நடி­கர்­களின் தர­மற்ற நடிப்­பால், அல்­லது தர­மற்­ற, வெளி­வ­ராத படத்தில் இடம்­பெற்­றதால் குரங்குக் கை பூமா­லை­யா­கி­றது. அவற்றில் ஒரு பாடல்தான் அமுத மழை பொழியும் முழு நில­விலே..

80 களின் நடுப்­ப­கு­தியில் வெளி­வந்து பிர­ப­ல­மா­கி­யி­ருந்­தது இப்­பாடல். இந்­தப்­பா­டலை யார் பாடி­யது என்­பது நீண்­ட­கா­ல­மாக ஒரு புரி­யாத புதி­ரா­கவே இருந்­தது.

சமீ­பத்­தில்தான் இந்­தப்­பா­டலைப் பாடிய பாடகர் தியா­க­ராஜன் என்றும் இவர் திருச்சி லோக­நா­தனின் மகன்­களில் ஒருவர் என்றும் கேள்­விப்­பட்­டி­ருந்தேன்.

 இவரின் அண்­னன்­க­ளான ரீ.எல்.மக­ரா­ஜ­னும், தீபன் சக்­க­ர­வர்த்­தியும் ஏற்­க­னவே தமிழ்த் திரைப்­பா­டல்­க­ளைப்­பா­டி­யி­ருந்தும் அவர்­க­ளாலும் நிலை­யான ஒரு இடத்தைப் பிடிக்க முடி­ய­வில்லை. அதிலும் தீபன் சக்­க­ர­வர்த்தி திரு­மதி உமா ரமணன் அவர்­க­ளுடன் பாடிய செவ்­வந்­திப்­பூக்­களில் செய்த வீடு, மற்றும் பூங்­க­தவே தாழ் திற­வாய், சுசீலா அம்­மா­வுடன் பாடிய அரும்­பாகி மொட்­டாகி பூவாகி .. போன்ற பாடல்கள் அற்­பு­த­மான பாடல்கள். இருந்தும் அவ­ராலும் ஒரு இடத்­தைப்­பி­டிக்க முடி­ய­வில்லை. அதே­நி­லைதான் தம்­பிக்கும்.

இந்தப் பாடல் பட­மாக்­கப்­பட்­டி­ருக்­க­வில்­லை­யென்றே படு­கின்­றது. இதன் இசை­ய­மைப்­பாளர் யார் என்­பதும் தெரி­ய­வில்லை. எந்த நடி­கர்க்­காக உருவாக்கப்பட்டது என்பதும் புரியவில்லை.

சில காலங்களின் பின் அநியாயமாகக் காணாமலேயே போய்விட்டது.
எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் தூக்குத் தூக்கியில் சம்பளத்தில் கறாராக இருந்ததால் தமிழ் திரை இசைக்கு டி.எம்.எஸ். உருவாகுவதற்கு விரும்பியோ விரும்பாமலோ காரணமாக இருந்தார் திருச்சி லோகநாதன். இன்று அவரது மகன்கள் திறமைசாலிகளாக இருந்தும் எவ்வளவுதான் முயன்றாலும் அந்தச் சந்தர்ப்பம் நழுவிக் கொண்டே செல்கின்றது.

நன்றி-விக்கிபீடியா ,மெட்ரோ நியூஸ் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக