செவ்வாய், 22 நவம்பர், 2016

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ. எல். சீனிவாசன் பிறந்த தினம் நவம்பர் 23.

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ. எல். சீனிவாசன் பிறந்த தினம் நவம்பர்23.

ஏ. எல். சீனிவாசன் புகழ் பெற்ற
தமிழ்த் திரைப்படத்
தயாரிப்பாளர்களுள் ஒருவர்.
கவிஞர் கண்ணதாசனின் மூத்த
சகோதரரான இவர் ஏ.எல்.எஸ்.
தயாரிப்பகம் என்ற பெயரில்
திரைப்படங்களைத் தயாரித்து
வந்தார்.
இளமைக் காலம்
ஏ.எல்.சீனிவாசன் அன்றைய
ராமநாதபுரம் மாவட்டத்தில்
(இன்றைய சிவகங்கை மாவட்டம்)
சிறுகூடல்பட்டியில் 1923 நவம்பர்
23-ந்தேதி பிறந்தார். இவரது
பெற்றோர் சாத்தப்பன் செட்டியார்
விசாலாட்சி ஆவர். இந்தத்
தம்பதிகளுக்கு மொத்தம் 9
பிள்ளைகள். அவர்களில் 6-வதாகப்
பிறந்தவர் ஏ.எல்.எஸ். இவருடைய
தம்பி கவிஞர் கண்ணதாசன்.
சிறுகூடல்பட்டியில் உள்ள
கலைமகள் வித்யாசாலையில்
எட்டாம் வகுப்பு வரை ஏ.எல்.எஸ்.
படித்தார். சிறுவயதிலேயே,
சினிமா மீது ஏ.எல்.எஸ்.சுக்கு
மிகுந்த ஆர்வம். காரைக்குடியில்
உள்ள சினிமா தியேட்டருக்கு (8
மைல் தூரம்) சைக்கிளில்
சென்று, தொடர்ந்து மூன்று
காட்சிகளையும் பார்த்து
விட்டுத் திரும்புவார்.
பணி
1941-ல் சென்னையில் ஒரு
கம்பெனியில் 40 ரூபாய்
சம்பளத்தில் வேலைக்குச்
சேர்ந்தார். சில மாதங்களே அங்கு
வேலை பார்த்தார். பின்னர்
கோவை சென்று, சினிமா
விநியோகஸ்தரின் பிரதி
நிதியாக பணியாற்றினார்.
அப்போது டி.ஆர்.மகாலிங்கம், என்.
எஸ்.கிருஷ்ணன் ஆகியோருடன்
பழகும் வாய்ப்பு கிடைத்தது. 1942-
ல் வேட்டைக்காரன்புதூரைச்
சேர்ந்த திருமலைச்சாமி
கவுண்டர், முத்துமாணிக்கம்,
துரைசாமி கவுண்டர்
ஆகியோருடன் சேர்ந்து
'கோயமுத்தூர் பிக்சர்ஸ்' என்ற
படக்கம்பெனியைத் தொடங்கினார்.
சினிமா படங்களை வாங்கி
விநியோகம் செய்யும் கம்பெனி
இது. அறிஞர் அண்ணா கதை-
வசனம் எழுதிய ' வேலைக்காரி'
படத்தின் விநியோக உரிமையை
ஏ.எல்.எஸ். வாங்கினார். படம் மிக
வெற்றிகரமாக ஓடவே, நல்ல லாபம்
கிடைத்தது. 1951-ல் சென்னையில்
'மதராஸ் பிக்சர்ஸ்' என்ற
படத்தயாரிப்பு நிறுவனத்தை
தொடங்கினார். முதல் படம் 'பணம்.'
இதை கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ட்
செய்தார். 'மதராஸ் பிக்சர்ஸ்' என்ற
பெயர் பின்னர் 'ஏ.எல்.எஸ்.
புரொடக்சன்ஸ்' என்று மாறியது.
தயாரித்த
திரைப்படங்கள்
ஆனந்தி
சினிமா பைத்தியம்
(திரைப்படம்)
நியாயம் கேட்கிறோம்
பணம் (திரைப்படம்)
கன்னியின் சபதம்
சங்கிலித்தேவன்
செந்தாமரை (திரைப்படம்)
சாந்தி (திரைப்படம்)
அம்பிகாபதி (திரைப்படம்)
திருடாதே
சாரதா (திரைப்படம்)
மணியோசை
சாந்தி (திரைப்படம்)
பிற
பி. மாதவன், பிரபல கன்னட
டைரக்டர் புட்டண்ணாவை
ஆகியோரையும் அறிமுகப்
படுத்தியவர், ஏ.எல்.எஸ்.
சாரதா ஸ்டூடியோ 1960-ம்
ஆண்டில் பரணி ஸ்டூடியோவை
குத்தகைக்கு எடுத்து
நடத்தினார். பிறகு 1961-ல்
மெஜஸ்டிக் ஸ்டூடியோவை நீண்ட
கால குத்தகைக்கு எடுத்து
'சாரதா ஸ்டூடியோ' என்ற
பெயரில் நடத்தினார். விநியோக
உரிமையில், 'நெகடிவ் ரைட்ஸ்'
என்ற முறையை
அறிமுகப்படுத்தியவர்
ஏ.எல்.எஸ்.தான். ('நெகடிவ் ரைட்ஸ்'
என்பது சினிமா படத்தை முழு
விலை கொடுத்து வாங்கி, அதை
விநியோகஸ்தர்களுக்கு
பிரித்துக் கொடுப்பது, அல்லது
நேரடியாக ரிலீஸ் செய்வது
ஆகும்.) பி.ஆர்.பந்துலு தயாரித்த
'கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி', 'முதல் தேதி',
'சபாஷ் மீனா', டி.ஆர்.ராமச்சந்திரன்
தயா ரித்த 'பொன் வயல்', எம்.ஜி.ஆர்.
நடித்த 'சக்ரவர்த்தித்திருமகள்'
முதலிய படங்களை இப்படி
'நெகடிவ் ரைட்ஸ்' முறையில்தான்
வாங்கி விநியோகித்தார்.
ஏ.எல்.எஸ். வெறும் பட அதிபர்
மட்டுமல்ல. படத்தொழிலில் சகல
அம்சங்களையும் அறிந்து
வைத்திருந்தார்.
தென்னிந்திய பிலிம் வர்த்தகசபை
அகில இந்திய பட அதிபர்கள்
கூட்டமைப்பு, ஸ்டூடியோ
அதிபர்கள் சங்கம், மற்றும் பல
திரைப்பட அமைப்புகளின்
தலைவர் பதவி அவரைத் தேடி
வந்தது. குறிப்பாக, தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம்
ஆகிய 4 மொழிகளின் பட
அதிபர்கள் அங்கம் வகித்த தென்
னிந்திய பிலிம் வர்த்தக சபையின்
தலைவராக அவர் 13 ஆண்டுகள்
பதவி வகித்தது
குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்துறைக்கு மத்திய
அரசு எந்த குழுவை
அமைத்தாலும், அதில் ஏ.எல்.எஸ்.
நிச்சயம் இடம் பெறுவார்.
வெளிநாடு களுக்கு மத்திய
அரசு அனுப்பிய பல
தூதுக்குழுக்களிலும் அவர் இடம்
பெற்றார். ஊட்டியில் பிரான்சு
நாட்டு கூட்டுறவுடன் பிலிம்
தொழிற் சாலை அமைக்க
முடிவு எடுக்கப்பட்டபோது,
மத்திய அரசின் பிரதிநிதியாக
பிரான்சு நாட்டுக்குச் சென்று
பேச்சு நடத்தினார்.
இந்தோனேஷியா நாட்டின்
தலைநகர் ஜாகர்த்தாவில் இந்திய
திரைப்பட விழா நடந்தபோது,
இந்திய தூதுக்குழுவுக்கு
தலைமை தாங்கிச் சென்றார். 1965-
ல் இந்தியா மீது பாகிஸ்தான்
படையெடுத்தது. அப்போது,
நடிகர்-நடிகைகளை பிரதமர்
சாஸ்திரியிடம் ஏ.எல்.எஸ்.
அழைத்துச்சென்று நிதி
வழங்கினார். அதுமட்டுமல்ல,
நட்சத்திரங்களை போர் முனைக்கு
அழைத் துச்சென்று, கலை
நிகழ்ச்சிகள் நடத்தி, போர்
வீரர்களை உற்சாகப் படுத்தினார்.
தமிழ்நாட்டில் பல ஊர்களில்
நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி
17 லட்ச ரூபாயும், 350 பவுன்
நகைகளையும் திரட்டி அரசுக்கு
கொடுத்தார். நட்சத்திரக்
கிரிக்கெட் நடத்தியும் நிதி
திரட்டி உதவினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக