வெள்ளி, 18 நவம்பர், 2016

நடிகர் எம். என். நம்பியார் நினைவு தினம் நவம்பர் 19,

நடிகர் எம். என். நம்பியார் நினைவு தினம் நவம்பர் 19,

மாஞ்சேரி நாராயணன்
நம்பியார் அல்லது சுருக்கமாக
எம். என். நம்பியார் ( மே 21. 1919 -நவம்பர் 19, 2008 ) தமிழ்த்
திரையுலகில் ஒரு பழம்பெரும்
நடிகர் ஆவார். ஏறக்குறைய 60
ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த்
திரையுலகின் தலைசிறந்த
நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.
குணச்சித்திரம் மற்றும் எதிர்
நாயகனாக (வில்லன்) எண்ணற்ற
திரைப்படங்களில் நடித்தார்.
வேலன் போன்ற சில
தொலைக்காட்சித் தொடர்களிலும்
நடித்துள்ளார்.
தனிப்பட்ட
வாழ்க்கை
இளமை
கேரள மாநிலம் பிரித்தானிய
இந்தியாவின் மலபார் மாவட்டம்,
தற்போதய கண்ணூர் மாவட்டம் ,
சிரக்கல் வட்டத்தில் பெருவமூர்
என்ற ஊரில் கேளு நம்பியார்
என்பவருக்கு கடைசிக்
குழந்தையாக பிறந்தார் நம்பியார்.
இவருக்கு ஒரு தமையனாரும்
ஒரு தமக்கையாரும் உள்ளனர்.
நம்பியாரின் எட்டாவது வயதில்
தந்தை இறக்கவே தமையனார்
வசித்து வந்த உதகமண்டலத்துக்குக்
குடி பெயர்ந்து அங்குள்ள
நகராட்சி உயர் பள்ளியில்
மூன்றாம் பாரம் வரை படித்தார்.
இல்லறம்
1946 ஆம் ஆண்டில் தனது
உறவினரான ருக்மணி என்பவரைத்
திருமணம் புரிந்தார். பா. ஜ.
கவின் முக்கிய தலைவராக
இருக்கும் சுகுமாரன் நம்பியார்
இவரது மகன். மோகன், சினேகா
என்போர் இவரின் மற்ற குழந்தைகள்
ஆவர்.
ஆன்மிக ஈடுபாடு
திரைப்படங்களில் எதிர் நாயகனாக
நடித்த போதும், தன்னுடைய
வாழ்க்கையில் சிறந்த
ஒழுக்கங்களை
கடைபிடித்துவந்தார்.
திரையுலகில் சிறந்த
ஆன்மீகவாதியாகவும்,
ஒழுக்கத்தில் சிறந்தவராகவும்
அறியப்பட்டார்.  நம்பியார்
தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி
மலைக்குச் சென்று வந்தார்.
நாடகத்துறை
பங்களிப்புகள்
தொடர்ந்து படிக்க அவரது
பொருளாதாரம் இடம்
கொடாமையால், தனது 13
வயதிலேயே சென்னை நவாப்
ராசமாணிக்கம் நாடகக் குழுவில்
சேர்ந்து சேலம் , மைசூர் எனச்
சுற்றினார். ஆனாலும்
நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம்
வரவில்லை. நாடகக் கம்பனியின்
சமையலறையில்
உதவியாளராகவே இருந்தார்.
வேடம் போட்டால் தான் சம்பளம்.
இலவசச் சாப்பாடும், படுக்க
இடமும் கிடைத்தது.
திரைத்துறை
பங்களிப்புகள்
முதன்மைக் கட்டுரை: மா. நா.
நம்பியார் நடித்த திரைப்படங்களின்
பட்டியல்
நவாப் கம்பனியின் ராம்தாஸ் என்ற
நாடகத்தை 1935 ஆம் ஆண்டு பக்த
ராம்தாசு என்ற பெயரில்
திரைப்படமாக எடுத்தார்கள். இதன்
படப்பிடிப்புக்காக பம்பாய்
சென்றார்கள். நம்பியாரும்
கூடவே சென்றார். இப்படத்தில்
அக்கண்ணா, மாதண்ணா என்ற
நகைச்சுவை வேடங்களில்
மாதண்ணா வேடத்தில் நம்பியார்
நடித்தார். இதுவே இவர் நடித்த
முதல் திரைப்படமாகும்.
அக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி
நடித்தார். இப்படத்தில்
நடித்ததற்காக நம்பியாருக்கு
நாற்பது ரூபாய்
கொடுக்கப்பட்டது.
வித்யாபதி ( 1946
) திரைப்படத்தில்
நாராயண பாகவதராக
நம்பியார்,
எம்.எஸ்.எஸ்.பாக்கியத்துடன்
பல இடங்களிலும் சுற்றிவிட்டு
தஞ்சாவூர் வந்தது நவாப்பின்
நாடகக் குழு. தஞ்சையில் நடந்த
ஏசுநாதர் , ராஜாம்பாள் போன்ற
நாடகங்களில் சிறிய வேடங்களில்
நடித்தார். அப்போது அவருக்குக்
கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம்
மூன்று ரூபாய். அவ்வேளையில்
கிருஷ்ணலீலா நாடகத்தில்
நடித்து வந்த கே.
சாரங்கபாணிக்குக் கையில் ஏதோ
கோளாறு ஏற்படவே
சாரங்கபாணியின் வேடங்கள்
அனைத்து நம்பியாருக்குக்
கிடைத்தது. 1939 இல் இருந்து
பெரிய நடிகர்கள் வாங்கக்கூடிய
பதினைந்து ரூபாய் சம்பளம்
வாங்கினார்.
1944 இல் நவாப்பின் குழுவில்
இருந்து விலகி டி. கே.
கிருஷ்ணசாமியின் நாடகக்
குழுவில் சேர்ந்து எஸ். டி.
சுந்தரம் எழுதிய கவியின் கனவு
நாடகத்தில் ராஜகுருவாக
நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில்
நடித்ததன் மூலம் நம்பியாரும் எஸ்.
வி. சுப்பையாவும் பெரும்
புகழடைந்தனர்.
இதனையடுத்து ஜுபிட்டர்
பிக்சர்சின் நான்கு படங்களுக்கு
நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
வித்யாபதி ( 1946 ), ராஜகுமாரி
ஆகியவற்றில் நகைச்சுவை
வேடங்களில் நடித்தார். கஞ்சன்
( 1947 ) என்ற படத்தில் கதாநாயகன்
வேடம் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அபிமன்யு,
மோகினி போன்ற படங்களிலும்
நடித்தார். அறிஞர் அண்ணாவின்
வேலைக்காரி படத்தில்
கதாநாயகன் மூர்த்தியாக நடித்து
பெயர் பெற்றார். கல்யாணி (1952),
கவிதா (1962) ஆகியவற்றிலும்
கதாநாயகனாக நடித்திருந்தார்.

முன்னாள் தமிழக
முதல்வர், நடிகர்
எம்.ஜி.ஆருடன்
நம்பியார்
அதன் பின்னர் அவர் பல படங்களில்
வில்லன் பாத்திரங்களில் நடித்துப்
புகழ் பெற்றார். எம்ஜிஆர் ,
சிவாஜி கணேசன் இருவர்
படங்களிலுமே நிரந்தர வில்லன்
நடிகராக இடம் பெற்றிருந்தவர்
நம்பியார். எம். ஜி.
இராமச்சந்திரனின் மிக
நெருங்கிய நண்பராகவும்
திகழ்ந்தார்.
வேட்டைக்காரன் , ஆயிரத்தில்
ஒருவன் , எங்க வீட்டுப் பிள்ளை
போன்ற பல படங்களில்
இராமச்சந்திரனுடன் சேர்ந்து
நடித்தார்.
எண்பதுகளில் , வில்லன் என்ற
நிலையிலிருந்து நம்பியாரை
குணச்சித்திர நடிகராக
மாற்றியவர் இயக்குநர் கே.
பாக்யராஜ் . அவர் நடித்த தூறல்
நின்னு போச்சு படத்தில்
நம்பியார் குணச்சித்திர
வேடமேற்றார். ரஜினிகாந்த்தின்
பெரும்பாலான படங்களில்
முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
நம்பியார். நம்பியார்
விஜய்காந்தின் சுதேசி
படத்தில்லேயே கடைசியாக
நடித்தார்.
தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப்
படத்திலும், கணவனே கண்கண்ட
தெய்வம் படத்தின் இந்திப்
பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார்
1000 படங்களுக்கு மேல் நடித்தவர்.
தனது 'நம்பியார் நாடக மன்றம்'
மூலம் இரு நாடகங்களை பல
முறை அரங்கேற்றியுள்ளார்.
திகம்பரசாமியார் எனும் பெரு
வெற்றிப் படத்தில் 11 வேடங்களில்
நடித்து சாதனை செய்தவர்
நம்பியார்.
மறைவு
உடல் நலக்குறைவால் சென்னை
தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்த இவர் 2008 ,
நவம்பர் 19 பிற்பகல் 12:30
மணியளவில் காலமானார்.

*********************************
வில்லாதி வில்லன்
1950,60-களில் அசோகன், வீரப்பா,
மனோகர் போன்ற பல வில்லன்
நடிகர்கள் இருந்தாலும் கூட,
வில்லன்களுக்கு எல்லாம்
வில்லனாக திகந்தவர் நம்பியார்.
இதற்கு இவரது தனி பாணி தான்
காரணம். புருவத்தை ஏற்றிக்
கொண்டு, கைகளை பிசைந்தப்படி
இவர் வசனம் பேசும் போது
அஞ்சாத நபர்களே இல்லை.
நம்பியார் ஆரம்பக் காலம்...
மஞ்சேரி எனும் ஊரில் பிறந்த
நாராயணன் தான் எம்.என்.
நம்பியார். இவரது தந்தையின்
மறைவுக்கு பிறகு ஊட்டியில்
இருந்த தனது அக்காவின் கணவர்
வீட்டுக்கு சென்றுவிட்டார். 5-ம்
வகுப்பு வரை மட்டுமே படித்த
நம்பியார், குடும்பத்திற்கு
பாரமாக இருக்க விரும்பாமல்,
தனது 13 வயதில் சென்னை
கிளம்பிவிட்டார்.
நாடக குழுவில் சேர்ந்தார்
சென்னை வந்தவுடன் நடிப்பில்
ஆர்வம் கொண்ட நம்பியார், நவாப்
ராஜமாணிக்கம் அவர்களது நாடக
குழுவில் சேர்ந்தார். ஆரம்பத்தில்
சின்ன சின்ன வேடம் ஏற்று நடித்து
வந்த நம்பியார் பக்த ராமதாஸ்
எனும் திரைப்படத்தில் ஓர்
நகைச்சுவை நடிகராக தனது
திரையுலக பயணத்தை 1935-ல்
துவக்கினார்.
நாடகம் டூ சினிமா
முதன் முதலில் நம்பியார்
வாங்கிய சம்பளம் 40 ரூபாய் என்று
கூறப்படுகிறது. சின்ன சின்ன
வேடங்களில் நடித்த போதிலும்,
ஆரம்பக் காலகட்டத்தில்
நம்பியாருக்கு ஹீரோ
வாய்ப்புகளும் கிடைத்தன.
ஆனாலும், வில்லன் வேடத்தில்
தான் அவர் அபரிமிதமான நடிப்பு
திறனை வெளிப்படுத்தினர்.
பிறகு காலத்தின் போக்கில் அவர்
முன்னணி வில்லன் நடிகராக
உருவெடுத்தார்.
எம்.ஜி.ஆரின் ஆஸ்தான வில்லன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின்
பெரும்பாலான படத்தில் வில்லன்
வேடம் ஏற்று நடித்தது எம்.என்.
நம்பியார் அவர்கள் தான். தலைவர்
படம் என்றாலே கூப்பிடு
நம்பியார... என்பது போல தான்
இருக்கும்.
சர்வாதிகாரி
சர்வாதிகாரி எனும் படத்தில்
நம்பியாரின் வி்ல்லத்தனம் மிகவும்
பாராட்டப்பட்டது. எம்.ஜி.ஆரும்
நம்பியாரும் மோதிக் கொண்ட
கத்திச் சண்டை காட்சியை பலரும்
ரசித்து பார்த்தனர். இதை
தொடர்ந்து, தாய் சொல்லைத்
தட்டாதே, படகோட்டி, எங்க வீட்டுப்
பிள்ளை, விவசாயி, உலகம்
சுற்றும் வாலிபன், எங்கள் தங்கம்
என இருவரும் இணைந்து பல
படங்களில் நடித்தனர்.
மக்களின் அச்சமும், சாபமும்
தொடர்ந்து எம்.ஜி.ஆருடன்
சண்டையிட்டுக் கொண்டே
இருந்ததால் (திரையில்) மக்கள்
நம்பியாரின் மீது நிஜமாகவே
கோபம் கொண்டனர். அந்த
காலத்தில் திரைப்படத்தோடு
மிகவும் ஒன்றி போய் அனைத்தும்
உண்மை என்று நம்பினர்.
எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில்
நல்ல பெயர் இருந்தது. அவரை
எதிர்த்து நடிப்பதால்,
நம்பியாருக்கு மக்கள் சாபம்
எல்லாம் விட்டுள்ளனர்.
நீங்களும் ஹீரோதான்
இந்த சம்பவத்தை தான் இயக்குநர்
வி.சேகர் தான் தயாரித்த 'நீங்களும்
ஹீரோதான்' என்ற படத்தில் ஒரு
காட்சியாகவே வைத்தார். அதில்,
நம்பியாரும், பி.எஸ்.வீரப்பாவும்
ஒரு படப்பிடிப்புக்காக
கிராமத்திற்கு வருவார்கள்.
அவர்களுக்கு மக்கள் தங்க வீடு
தராமல் விரட்டுவது போல காட்சி
அமைக்கப்பட்டிருந்தது.
மும்மூர்த்திகளுடன் வில்லன்
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என
அன்றைய மும்மூர்த்திகளாக
திரையுலகில் ஜொலித்த
மூவர்களுடனும் வில்லன் வேடம்
ஏற்று புகழ் பெற்றவர் நம்பியார்.
எம்.ஜி.ஆருடன் 75க்கும் மேற்பட்ட
படங்களில் இவர் நடித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை சிவாஜிக்கு
தம்பியாகவும் நம்பியார்
நடித்திருந்தார்.
7 தலைமுறை நடிகர்களுடன்
நடித்த பெருமை பெற்றவர்
எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடங்கி,
ரஜினி, கமல், சத்யராஜ்,
விஜயகாந்த், விஜய் வரை 7
தலைமுறை நடிகர்களுடன்
நம்பியார் நடித்துள்ளார்.
திரையுலகில் இதுவொரு
சாதனையாகவே
கருதப்படுகிறது. இவர் 1935-ல்
தொடங்கி 2006-ம் வரை நடித்தார்.
குணச்சித்திர நடிகர்
80-களில் இருந்து இவர்
வில்லத்தனம் மட்டுமின்றி,
நகைச்சுவை, குணச்சித்திர
வேடங்களிலும் நடித்து மக்களை
கவர்ந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
குருசாமிக்கு எல்லாம்
குருசாமி
ஏறத்தாழ 65 ஆண்டுகள் தொடர்ந்து
சபரி மலைக்கு மாலை அணிந்து
சென்றவர் எம்.என். நம்பியார்.
அதனாலேயே குரு சாமிக்கு
எல்லாம் குரு சாமி என்று
ஐயப்பனுக்கு மாலைப்
போடுவோர் நம்பியாரை
புகழோடு அழைத்தனர்.
எம்.ஜி.ஆர் தரும் மாலை
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
உயிருடன் இருந்தவரை, நம்பியார்
அவர்கள் இருமுடி கட்டிச்
செல்லும்போது அவர் அனுப்பி
வைக்கும் மாலையை தான்,
அணிவிக்கப்படுமாம். மேலும்,
பெரும்பாலும் திரையுலகில்
இருந்து மாலை போடுபவர்கள்
நம்பியாருடன் தான் மலைக்கு
செல்வார்கள்.
ஐயப்பன் திருவடி சேர்ந்தார்
ஆரம்பம் முதலே ஐயப்பன் பக்தராக
இருந்த எம்.என். நம்பியார். ஐயப்பன்
கோவிலுக்கு செல்லும்
காலத்திலேயே மரணமடைந்தார்.
இன்று (நவம்பர் 19) அவரது
நினைவு நாள் ஆகும். இவரது
சீடர்கள், நம்பியார் ஐயப்பன்
திருவடியே சேர்ந்துவிட்டார்
என்று கருதுகிறார்கள்.
**********************************

அபூர்வ தகவல்கள்-18
எம்.என்.நம்பியார்
திரைப்படங்களில் கெட்டவராக
நடித்தவர் சொந்த வாழ்க்கையில்
நல்லவராக விளங்கினார். அவர்தான்
மஞ்சேரி நாராயணன் நம்பியார்
என்கிற எம்.என்.நம்பியார்.
நம்பியாருடைய பள்ளிப் பருவத்தில்,
அவரது மாமா(தமக்கையின் கணவர்)
ஊட்டியில் தேநீர் கடை நடத்தி
வந்தார். அங்கு சென்ற நம்பியார்
ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.
தேநீர் கடையில் வியாபாரம்
குறைந்ததால், சகோதரி
குடும்பத்திற்கு சுமையாக இருக்க
விரும்பாத நம்பியார்
குடும்பத்திலிருந்து
வெளியேறினார். ராணுவத்தில்
சேர்வதற்காக மனு செய்தார்.
ராணுவத்தில் மாமிசம் சாப்பிட
வேண்டும் என்ற காரணத்தினால்,
தாவர உணவாளரான இவர்
ராணுவத்தில் சேரும் எண்ணத்தைக்
கைவிட்டார்.
நான்காவது பாரம் (9 ஆம் வகுப்பு)
படித்துக் கொண்டிருந்தபோது
நாடகங்களில் இவருக்கு ஆர்வம்
ஏற்பட்டு நாடகங்களில் நடிக்கத்
தொடங்கினார். நவாப்
ராஜமாணிக்கம் நடத்திய ஸ்ரீ மதுரை
தேவி வினோத பாலகான சபாவில்
சேர்ந்து நடிக்கத் தொடங்கினார்
நம்பியார்.
தனது 16ஆவது வயதில், நம்பியார்
முதன் முதலில் பக்த ராமதாஸ் (1935)
படத்தில் நடித்தார். நவாப்
ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில்
நடிக்கப்பட்டு வந்த பக்த ராமதாஸ்
நாடகம் அதே பெயரில்
படமாக்கப்பட்டபோது, இப்படத்தின்
மூலம் மந்திரி மாதண்ணா என்ற
வேடத்தில் நடித்து திரையுலகில்
நுழைந்தார் நம்பியார். இப்படத்தில்
இவரின் சம்பளம் 40 ரூபாய்.
இரண்டாவதாக நவாப்
ராஜமாணிக்கம் நாடக கம்பெனியின்
இன்பசாகரன் நாடகமும் அதே
பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது.
படம் முழுவதும் தயாரிக்கப்பட்ட
நிலையில், ஸ்டுடியோவில் ஏற்பட்ட
தீவிபத்தினால் திரைக்கு வராமல்
தீக்குள் போனது இப்படம்.
10 ஆண்டுகள் கடந்து ஜுபிடர்
ஃபிலிம்ஸ் தயாரித்த வித்யாபதி
படத்தில், நாராயண பாகவதர் என்ற
வேடத்தில் நடித்தார். இப்படத்தில்
இவரது மனைவியாக எம்.எஸ்.எஸ்.
பாக்கியம் நடித்தார். இந்த
நகைச்சுவை ஜோடி பலபடங்களில்
தொடர்ந்து நடித்தது. ஜுபிடர்
ஃபிலிம்ஸ் தயாரித்த ராஜகுமாரி,
கஞ்சன், அபிமன்யூ, மோகினி,
வேலைக்காரி ஆகிய படங்களில்
தொடர்ந்து நடித்தார் நம்பியார்.
1944 இல் நவாப் ராஜமாணிக்கம் நாடக
கம்பனி நடத்திய ஐயப்பன் நாடகத்தில்
நம்பியார் நடித்தார். 12 ஆண்டுகள்
நவாப் கம்பனியிலிருந்த இவர்,
பின்பு சக்தி கிருஷ்ணசாமியின்
சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். சக்தி
நாடக சபாவில் நடிக்கும்போது,
கவியின் கனவு நாடகம் இவருக்குப்
பெரும் புகழை அளித்தது.
இவர் தெலுங்கு, கன்னடம்,
மலையாளம், இந்தி ஆகிய
மொழிகளிலும் சில படங்களில்
நடித்துள்ளார். மாடர்ன் தியேட்டர்ஸ்
தயாரித்த தி ஜங்கிள் என்ற ஆங்கிலப்
படத்திலும், தேவதா என்ற இந்திப்
படத்திலும் நடித்துள்ளார். சமூக
கதைகள், சரித்திர கதைகள் என
அனைத்து படங்களிலும் இவர்
நடிப்பு நன்றாக இருந்தது.
2006 இல் விஜயகாந்த்துடன் சுதேசி
படம்வரை இவர் நடித்துள்ளார். தான்
750 படங்களில் நடித்திருப்பதாக ஒரு
பேட்டியில் நம்பியார்
கூறியுள்ளார்.
நல்லதங்கை படத்தில் பெண்
வேடத்தில் நடித்துள்ளார்
எம்.என்.நம்பியார். ரகசிய போலீஸ் 115
படத்தில் ஒரே உருவத்தைக் கொண்ட
வில்லன், போலீஸ் ஆகிய இரு
வேடங்களில் நடித்துள்ளார்.
வேலைக்காரி படத்தில் செல்வந்தர்
வீட்டுப் பையன் மூர்த்தி, போலிச்
சாமியார் ஹரிஹரதாஸ் ஆகிய இரு
வேடங்களில் நடித்துள்ளார் இவர்.
கதாநாயகன், கதாநாயகனின் நண்பன்,
காமெடியன், வில்லன் என்று பலவித
வேடங்களில் நடித்தவர் நம்பியார்.
பிற்காலப் படங்களில் கெட்டவனை
நம்பியார் என்று குறிப்பிடும்
அளவிற்கு, நம்பியாரின் வில்லன்
நடிப்பு தமிழ்த் திரை வரலாற்றில்
பதிவு செய்யப்பட்டு விட்டது.
(போக்கிரி படத்தில் விஜய் பாடும்
ஒரு பாடல். நம்பியாரைப் போல
இருந்தேனே, இப்ப எம்ஜிஆரைப்
போல மாத்திட்டா).
திகம்பரசாமியார் படத்தின்
நாயகனான எம்.என்.நம்பியார்
திகம்பரசாமியார், செவிட்டு
மந்திரவாதி, முகமதிய தனவந்தர்,
வெற்றிலை வியாபாரி, நாதஸ்வர
வித்வான், மைனர், போஸ்ட்மேன்,
குடுகுடுப்பைக்காரன் போன்ற
இன்னும் சில வேடங்களுடன்
மொத்தம் 11 வேடங்களில்(!)
நடித்துள்ளார்.
நல்லதங்கை படத்தில் நாயகன்
மூர்த்தியாக நம்பியாரும்
நாயகனின் மனைவி மோகனாவாக
மாதுரிதேவியும் நடித்துள்ளனர்.
கஞ்சன் படத்தில் நாயகன் வேலப்பனாக
நம்பியாரும் நாயகி அமராவதியாக
டி.ஜி.கமலாதேவியும்
நடித்துள்ளனர். நாயகனின்
மாமனாராகவும் கஞ்சனாகவும்
நடித்தவர் எஸ்.வி.சுப்பையா.
பாக்ய தேவதை படத்தில்
ஜெமினிக்கு ஜோடி
ராஜசுலோச்சனா.
எம்.என்.நம்பியாருக்கு ஜோடி
சாவித்திரி. ஜெமினியும்
நம்பியாரும் இப்படத்தில்
சகலைகளாக நடித்தனர்.
நல்லவன் படத்தில் நாயகனாக
ஆர்.எஸ்.மனோகரும், துணை
நாயகனாக அரைப் பைத்தியம்
வேடத்தில் நம்பியாரும்
நடித்துள்ளனர்.
ராஜகுமாரி படத்தில் நாயகன்
சுகுமாரனை (எம்.ஜி.ஆர்) ஒரு
ஆபத்திலிருந்து காப்பாற்றும்
வேடத்தில் பகுவும்
(எம்.என்.நம்பியார்) பகுனியும்
(எம்.எஸ்.எஸ். பாக்கியம்)
நடித்திருந்தனர்.
சர்வாதிகாரி படத்தில்
எம்.என்.நம்பியார்தான் சர்வாதிகாரி.
இந்த சர்வாதிகாரி மகாவர்மனை
அடக்கும் நாயகன் பிரதாபனாக
எம்.ஜி.ஆர் நடித்தார். எம்.ஜி.ஆரும்
நம்பியாரும் வாள்வீச்சு
சண்டைக்கலை அறிந்தவர்கள்.
இப்படத்தின் ஒரு சண்டைக்
காட்சியின்போது எம்.ஜி.ஆர். வீசிய
கத்தியின் நுனி நம்பியாரின்
விரலில் பாய்ந்து விட்டது.
அதன்பின் இருவரும் கவனமாக
வாள்களைக் கையாண்டார்கள்.
தேவதாûஸ தீய வழியில் இழுத்துச்
செல்லும் நண்பனாக நம்பியார்
நடித்த படம் தேவதாஸ்.
மிஸ்ஸியம்மா படத்தில், நாயகியின்
(சாவித்திரி) தந்தைக்கு கடன்
கொடுத்துவிட்டு நாயகியை
பெண் கேட்கும், டேவிட் என்ற
ஆங்கிலோ இந்திய காமெடி
வில்லன் வேடம் நம்பியாருக்கு.
அம்பிகாபதி படத்தில் புலவர்
ஒட்டக்கூத்தராகவும், ஹரிச்சந்திரா
படத்தில் விஸ்வாமித்திரராகவும்
நம்பியார் நடித்தார்.
ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை
படத்தில் 106 வயதுடைய
பூர்வஜென்ம வில்லன் வேடத்தில்
அருமையாக நடித்திருப்பார் இவர்.
திருடாதே படத்தில்
தீக்காயத்துடனான கோர
முகத்துடனும், உலகம் சுற்றும்
வாலிபன் படத்தில் கோர
பற்களுடனான வெற்றுடம்புடனும்
எம்.ஜி.ஆருடன் மோதுவார்
நம்பியார்.
சரித்திரப் படங்களில் சண்டைக்
காட்சிகளில் நடிப்பவர்கள், கால்களின்
எளிதான நடமாட்டத்திற்காக
முழுக்கால்சராய் அணிந்து
நடிப்பார்கள் அல்லது கால்களை
ஒட்டியபடி
உடையணிந்திருப்பார்கள். ஆனால்
ஆயிரத்தில் ஒருவன் படத்தில்
நம்பியார் இரு கால்களையும்
சாக்கினுள் விட்டதுபோல்
லுங்கியணிந்து
தடுமாற்றமில்லாமல் சண்டை
காட்சியில் திறம்பட நடித்திருப்பார்.
படத்தின் கதையோட்டத்திற்கும்
வெற்றிக்கும் ஆதாரமாக இவர் நடித்த
கொடுமையான வில்லன்
வேடங்களுக்காக,
பெண்களிடமிருந்து கிடைத்த
வசவுகளும் திட்டுகளுமே,
இவருக்கு கிடைத்த விருதுகளும்
பட்டங்களுமாக விளங்குகின்றன.
எம்.ஜி.ஆர். படங்களில் அதிக அளவில்
வில்லனாக நடித்தவர் இவர்.
எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த முதல்
படமான ராஜகுமாரி முதல்,
எம்.ஜி.ஆர். இறுதியாக நடித்த
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
படம் வரை, எம்.ஜி.ஆரின்
பெரும்பாலான படங்களில்
வில்லனாக நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆரும் நம்பியாரும்
இணக்கமாக இருந்தாலும் ஓரிரு
சமயங்களில் இருவருக்கும் பிணக்கு
வந்ததும் உண்டு. என் அண்ணன்
படப்பிடிப்பில் இருவருக்கும் சிறு
மனஸ்தாபம் உண்டானது.
இப்படத்திற்கு பின்பு திரைக்கு
வந்த மாட்டுக்கார வேலன், எங்கள்
தங்கம், தேடிவந்த மாப்பிள்ளை,
குமரிக் கோட்டம், ரிக்ஷாக்காரன் -
ஆகிய படங்களில் நம்பியார்
நடிக்கவில்லை.
சிவாஜியுடனும் பல படங்களில்
வில்லனாக நடித்துள்ளார். தங்கப்
பதுமை, ராஜபக்தி, அன்னை இல்லம்,
தில்லானா மோகனாம்பாள், தெய்வ
மகன், சவாலே சமாளி, திரிசூலம்,
குலமா குணமா, ராஜபார்ட்
ரங்கதுரை போன்ற பல படங்களில்
சிவாஜியுடன் வில்லனாக நடித்தார்
நம்பியார்.
எம்.என்.நம்பியாரைப் போலவே
தமிழ்த் திரையில் பி.எஸ்.வீரப்பா,
ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன்
ஆகியோரும் சிறந்த வில்லன்
நடிகர்களாக விளங்கி வந்தார்கள்.
இந்த நால்வரும் ஒரு படத்தில்
சேர்ந்து நடித்துள்ளனர். அப்படம்
அரசகட்டளை.
எம்.ஜி.ஆரை விட (1917) குறைந்த
வயதுடையவர் நம்பியார் (1919).
ஆனால் படவுலக அனுபவத்தில்
எம்.ஜி.ஆரை விட (சதிலீலாவதி 1936)
ஓராண்டு மூப்புடையவர் நம்பியார்
(பக்த ராமதாஸ் 1935).
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர்,
ரவிச்சந்திரன், ரஜினி, கமல்,
விஜயகாந்த், சரத்குமார் என
பலதலைமுறை நாயகர்களுடனும்
வில்லனாக மோதியவர் நம்பியார்.
நடைமுறையில்
நகைச்சுவையுணர்வு உள்ள
இவரை, காலம் வில்லனாக நடிக்க
வைத்ததும் ஒரு விந்தைதான்.
---------------------------------------------
கேரளா மாநிலம் கண்ணனூர்
தாலுக்கா மஞ்சேரி என்ற
சிற்றூரில் 05.03.1919 இல் பிறந்தார்
எம்.என்.நம்பியார்.
தந்தையின் பெயர் கேளு நம்பியார்
என்பதாகும். மஞ்சேரி நாராயணன்
நம்பியார் என்பதில் உள்ள
மஞ்சேரியும் நாராயணனும் எம்.என்.
என்று இனிஷியலாக சுருங்கி,
அவரின் நம்பியார் என்ற குடும்பப்
பெயருடன் சேர்ந்து எம்.என்.நம்பியார்
என்று நிலைத்து விட்டது.
1946 இல் இவருடைய திருமணம்
நடைபெற்றது. இவர் துணைவியின்
பெயர் ருக்மணி என்பதாகும்.
வெளியூர்களுக்கு நம்பியார்
செல்லும்போது, தனது
துணைவியையும் உடன்
அழைத்துச் சென்று அங்கும்
துணைவி சமைக்கும்
உணவைத்தான் உண்பார்.
1982 இல் நடிகர்கள் சிலருடன் சேர்ந்து
கைலாய ஆன்மீக யாத்திரை
சென்று, அரனின் அருள்பெற்று
வந்தார் நம்பியார்.
தமிழக அரசு இவருக்கு 1967 இல்
கலைமாமணி விருதும், 1990 இல்
எம்.ஜி.ஆர். விருதும், 1992 இல்
ஜெயலலிதா விருதும் அளித்தது.
மிகச்சிறந்த ஐயப்ப பக்தரான இவர்,
அனைவராலும் பக்தி கலந்த
மரியாதையுடன் குருசாமி என்று
அழைக்கப்பட்டார். 60
ஆண்டுகளுக்கும் மேலாக
சபரிமலை புனித பயணம்
மேற்கொண்டார்.
அமிதாப்பச்சன், சிவாஜி கணேசன்,
ரஜினிகாந்த் போன்ற பிரபல
நடிகர்களான கன்னிசாமிகளுக்கு
நம்பியார்தான் குருசாமியாக
இருந்தார்.
19.11.2008 இல் இவர் ஐயப்பன்
திருவடிகளில் ஐக்கியமானார்.
நம்பியாருக்கு சுகுமாரன், மோகன்
என்ற இரு மகன்களும் சிநேகலதா
என்ற ஒரு மகளும் உள்ளனர்.
சுகுமாரன் நம்பியார் பாரதீய
ஜனதா கட்சியில் முக்கியப்
பொறுப்பில் இருந்தார்.
நம்பியார் நாயகனாக நடித்த
படங்கள்...
திகம்பரசாமியார், கல்யாணி, கஞ்சன்,
நல்ல தங்கை.
நகைச்சுவை வேடங்களில் நடித்த சில படங்கள்...
கவிதா, வித்யாபதி, ராஜகுமாரி,
மர்மயோகி, மோகினி, தூறல்
நின்னு போச்சு.
நம்பியார் நல்லவராக நடித்த சில
படங்கள்...
ரகசிய போலீஸ் 115, கண்ணே பாப்பா,
சுபதினம், வருவான் வடிவேலன்,
சுவாமி ஐயப்பன்.
அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்.,
வி.என்.ஜானகி, மு.கருணாநிதி,
ஜெயலலிதா, என்.டி.ராமாராவ்
ஆகிய 6 முதலமைச்சர்களுடன் கலைப்
பணி ஆற்றியுள்ள ஒரே நடிகர்
எம்.என்.நம்பியார் மட்டுமே. அண்ணா
கதை திரைக்கதை வசனம் எழுதிய
வேலைக்காரி படத்திலும்,
திரைக்கதை வசனம் எழுதிய
நல்லவன் வாழ்வான் படத்திலும்
நம்பியார் நடித்துள்ளார்.
மு.கருணாநிதி வசனம் எழுதிய
அபிமன்யூ, அரசிளங்குமரி,
ராஜகுமாரி போன்ற படங்களிலும்,
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பல
படங்களிலும் நம்பியார்
நடித்துள்ளார். (புதிய பூமி
படத்தில் நம்பியார்
ஜெயலலிதாவுக்கு தந்தையாக
நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது).
வி.என்.ஜானகியுடன்
வேலைக்காரி, மோகினி, தேவகி
ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சர்
என்.டி.ராமாராவுடன்
எம்.என்.நம்பியார் நடித்துள்ளார்.
மாயாபஜார் படத்தில்
பாண்டவர்களின் ஆலோசகர் கண்ண
பரமாத்மாவாக என்.டி.ராமாராவும்,
கெüரவர்களின் ஆலோசகர் சகுனி
மாமாவாக எம்.என். நம்பியாரும்
நடித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக