ஞாயிறு, 6 நவம்பர், 2016

நடிகை என். சி. வசந்தகோகிலம் நினைவு தினம் நவம்பர் 7.

நடிகை என். சி. வசந்தகோகிலம் நினைவு தினம் நவம்பர் 7.

என். சி. வசந்தகோகிலம் என அழைக்கப்படும்
நாகப்பட்டினம் சந்திரசேகர
வசந்தகோகிலம் (1919 - 7 நவம்பர் 1951)
கருநாடக இசைக் கலைஞரும், பாடகியும்,
நடிகையும் ஆவார். இந்திய விடுதலைக்குப்
பின்னர் கவியோகி சுத்தானந்த
பாரதியாரின் பாடல்களைப்
பிரபலமாக்கியவர். இவர் 1951 இல் காச
நோய் வாய்ப்பட்டு இறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
வசந்தகோகிலம் கொச்சியில்
இரிஞ்ஞாலகுடா (இன்றைய கேரளாவில்)
சந்திரசேகர ஐயர் என்பவருக்குப் பிறந்தார்.
இவரது இயற்பெயர் காமாக்சி
ஆகும். இவரது குடும்பம்
நாகப்பட்டினத்திற்குக் குடிபெயர்ந்தது.
நாகப்பட்டினம் 'ஜால்ரா' கோபால
ஐயர் என்பவரிடம் இசைப் பயிற்சி
பெற்றார். 1936 இல் இவரது குடும்பம்
சென்னைக்கு இடம் பெயர்ந்தது.
சென்னையில் கச்சேரிகளில் பாடத்
தொடங்கினார். சென்னை
இசைக் கல்லூரியில் 1938 இல் அரியக்குடி
இராமானுஜ ஐயங்கார் தலைமையில்
நடந்த ஆண்டு விழாவில் பாடி முதல்
பரிசைப் பெற்றார்.
இசையுலகில்
வசந்தகோகிலம் பல தமிழ்ப் பாடல்களைப்
பாடிப் புகழ் பெற்றார்.
சென்னையில் தமிழ் இசைச் சங்கம்,
நெல்லை சங்கீத சபை ஆகியவற்றில்
தொடர்ச்சியாகப் பாடி
வந்தார். இவரது கருநாடக,
மெல்லிசைப் பாடல்கள் பல
இசைத்தட்டுகளாக வெளிவந்துள்ளன.
பிரபல பாடகர் டைகர் வரதாச்சாரியார்
இவருக்கு "மதுரகீத வாணி" என்ற பட்டம்
சூட்டினார்.
திரைப்படங்களில்
வசந்தகோகிலம் தமிழ்த் திரைப்படங்களில்
பாடியும், நடித்தும் உள்ளார். 1940 இல் சி.
கே. சக்தியில் இயக்கத்தில் வெளிவந்த
சந்திரகுப்த சாணக்யா படத்தில்
சாயா இளவரசியாக நடித்தார்.
தொடர்ந்து வேணுகானம் (1941),
கங்காவதார் (1942), ஹரிதாஸ் (1944),
வால்மீகி (1946), குண்டலகேசி (1946),
கிருஷ்ண விஜயம் (1950) ஆகிய
திரைப்படங்களில் நடித்தார்.
ஆண்டு திரைப்படம் ப
1940 வேணுகானம்
1. புண்ணிய தி
கண்ணன் பிறந்
2. எப்போ வருவா
3. இன்பம் இன்
ஜகமெங்கு
1942 கங்காவதார்
1. பாங்கான
2. கலைவாணி
3. ஆனந்த அள்
ஆனந்தம்
4. இதுவெ
5. ஆனந்த மா
6. காவின் மனோ
மாண்பே
1944 அரிதாஸ்
1. கதிரவன் உத
கமலங்கள் முக
2. கண்ணா வ
வண்ணா வ
3. எனது மனம்
4. எனது உயிர்
5.
தொட்ட
தப்பெடுத்த
( பாகவதருடன்
1946 வால்மீகி
1. சுந்தரானந்
முகுந்தா
2. புவி மீது தவ
3. ஜெய ஜ
4. பொ
மாயப்புவி
1947 குண்டலகேசி
1950 கிருஷ்ண
விஜயம்
1. நவநீத கண்
2. கருணாநிதே
3. பொ
பூமாதேவி
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா
தந்தை தாய் இருந்தால் உமக்கிந்த
நித்திரையில் வந்து நெஞ்சில் இடம்
ஆனந்த நடனம் ஆடினாள்
ஆசை கொண்டேன் வண்டே
அந்த நாள் இனி வருமோ
பொழுது புலர்ந்தது யாம்
செய்த தவத்தால்
குடும்பம்
இவரது தனிப்பட்ட வாழ்க்கை
மகிழ்ச்சியாக இருக்கவில்லை. இவரது இசை
வாழ்க்கையை விரும்பாத கணவர் இவரை
விட்டுப் பிரிந்து விட்டார்.  கடைசிக்
காலத்தில் இவர் வழக்கறிஞரும், திரைப்படத்
தயாரிப்பாளருமான சி. கே. சதாசிவன்
(சி. கே. சச்சி) என்பவருடன் குடும்பம்
நடத்தினார். தனது 32வது அகவையில்
காச நோயால் பாதிக்கப்பட்டு
சென்னை கோபாலபுரத்தில் இருந்த
அவரது வீட்டில் 1951 ஆம் ஆண்டில்
காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக