செவ்வாய், 29 நவம்பர், 2016

நடிகர் டி. ஆர். இராமச்சந்திரன் நவம்பர் 30, 1990 .

நடிகர் டி. ஆர். இராமச்சந்திரன்  நவம்பர் 30, 1990 .

டி. ஆர். இராமச்சந்திரன் ( சனவரி 9 ,
1917 - நவம்பர் 30, 1990 ) பழம்பெரும்
தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
கிட்டத்தட்ட 150 திரைப்படங்களில்
கதாநாயகனாகவும், பிற முக்கிய
வேடங்களிலும், துணை வேடங்களிலும்
நடித்துள்ளார். எந்த வேடத்தில்
நடித்தாலும், நகைச்சுவை நடிகராகவே
இவரின் நடிப்பு பெரும்பாலும்
அமைந்திருந்தது.
வாழ்க்கைச் சுருக்கம்
இராமச்சந்திரனின் கரூர்
மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில்
விவசாயியாக இருந்த ரங்காராவ்,
ரங்கம்மாள் ஆகியோருக்கு 1917 சனவரி 9
இல் பிறந்தார். இவருக்கு இரு சகோதரர்கள்.
நான்கு வயதிலேயே தாய் இறக்கவே தந்தை
மறுமணம் செய்து
கொண்டார். இராமச்சந்திரன்
பாட்டியாரின் ஊரான குளித்தலையில்
உள்ள பள்ளிக்கூடத்தில் படித்தார்.
நாடகங்களில் நடிப்பு
இராமச்சந்திரனுக்குப் படிப்பில் ஈடுபாடு
இருக்கவில்லை. குடும்ப நண்பர்
இராகவேந்திரராவ் என்பவரின் நாடக
அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு
நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது.
தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம்
ஆண்டில் மதுரையில் ஜகந்நாத அய்யர்
நடத்தி வந்த ‘பாலமோகன ரஞ்சித சங்கீத
சபா‘ என்ற நாடகக் கம்பனி
கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது
அவர்களது நாடகங்களில் சிறிய
வேடங்களில் நடித்தார். இக்கம்பனி சில
காலத்திலேயே மூடப்பட்டதை அடுத்து உள்ளூரைச்
சேர்ந்த மணி ஐயர் என்பவர் இக்கம்பனியை
நடத்தி வந்தார். இவருடன் நாடகக்
கம்பனியில் பணியாற்றிய எஸ்.வி.வெங்கட்ராமன் (பின்னாளில்
பிரபலமான இசை அமைப்பாளர்)
புதிதாகத் தொடங்கிய நாடகக்
கம்பெனி ஒன்றில் ராமச்சந்திரனும்
அவரது குழுவினரும் சேர்ந்தனர்.
கருநாடகத்தில் கோலார் நகரில்
தங்கியிருந்து நாடகங்களை நடத்தினர்.
அங்கும் அவர்களுக்குப் பெரும் நட்டம்
ஏற்படவே, வெங்கட்ராமன் திரைப்பட
வாய்ப்புகளை எதிர்பார்த்து
பெங்களூர் சென்றார்.
திரைப்படங்களில் நடிப்பு
வெங்கட்ராமன் பெங்களூரில் ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரை
சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ்
திரைப்பட நிறுவனம் நந்தகுமார் என்ற
திரைப்படத்தை தயாரித்து வந்தது.
இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு
வெங்கட்ராமனின் நாடகக்
கம்பெனி நடிகர்கள் அனைவரும்
ஒப்பந்தம் செய்யப்பட்டனர். டி. ஆர்.
ராமச்சந்திரன் டி. ஆர். மகாலிங்கத்திற்கு
நண்பனாக நடித்தார்.1938 இல்
வெளிவந்த இப்படம் வெற்றி
பெற்றது. அதன் பின்னர்
இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும்
இல்லாமல் காலத்தைக் கழித்த
இராமச்சந்திரனுக்கு, வாயாடி
திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு
வாய்ப்புக் கிடைத்தது.  பின்னர் நவீன
மார்க்கண்டேயா, திருவள்ளுவர்,
வானரசேனை, ஆகிய படங்களில் நடித்தார்.
1941-ல், மெய்யப்ப
செட்டியாரின் தயாரிப்பில்
வெளியான சபாபதி என்ற முழு நீள
நகைச்சுவைத் திரைப்படத்தில்
கதாநாயகனாக நடித்தார். இப்படம்
பெரு வெற்றி பெற்றதை அடுத்து
டி. ஆர். இராமச்சந்திரனின் புகழும்
பரவியது. தொடர்ந்து பல
படங்களில் நடித்த இராமச்சந்திரன்,
ஏவிஎம் ஸ்டூடியோ முதன் முதலாக 1947 இல்
தயாரித்த நாம் இருவர் படத்தில் நகைச்சுவை
வேடத்தில் நடித்தார். வாழ்க்கை (1949)
என்ற வெற்றிப் படத்தில்
வைஜயந்திமாலாவுக்கு சோடியாக
நடித்தார். பி. ஆர். பந்துலு தயாரித்த
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன்
கதாநாயகனாக நடித்தார். சிவாஜி
கணேசன் இரண்டாவது
கதாநாயகனாக நடித்தார்.
படங்கள் தயாரிப்பு
ராமச்சந்திரன் 1954 ஆம் ஆண்டில்
சொந்தத்தில் படக்கம்பெனி
தொடங்கி ‘பொன் வயல்’
என்ற படத்தைத் தயாரித்தார். இதில்,
ராமச்சந்திரனின் ஜோடியாக அஞ்சலிதேவி
நடித்தார். இத்திரைப்படத்திலேயே சீர்காழி
கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக
அறிமுகமானார். எழுத்தாளர் தேவன்
எழுதிய கோமதியின் காதலன் என்ற கதையை
அதே பெயரில் திரைப்படமாகத்
தயாரித்து, சாவித்திரியுடன் சோடியாக
நடித்தார்.
சொந்த வாழ்க்கை
டி. ஆர். இராமச்சந்திரனின் திருமணம்
1948-ல் நடந்தது. ஜெயந்தி, வசந்தி
என்று 2 மகள்கள். திரைப்படத்துறையில் இருந்து
ஓய்வு பெற்ற பின்னர்,
அமெரிக்காவில் மகளுடன் வசித்து
வந்தார். அங்கு அவர் 1990 ஆம் ஆண்டில்
காலமானார். [6]
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு படம் பாத்
1938 நந்தகுமார்
1940 வாயாடி கணவன்[
1941 சபாபதி சபாபதி
1942 கண்ணகி
1943 திவான் பகதூர்
1944 பிரபாவதி
1945 மானசம்ரட்சணம்
1945 ஸ்ரீ வள்ளி
1946 அர்த்தனாரி
1946 லவங்கி
1946 சகடயோகம்
1946 வித்யாபதி
1946 விஜயலட்சுமி
1946 விகடயோகி
1947 நாம் இருவர்
1947 கடகம்
1947 குண்டலகேசி
1947 மகாத்மா
உதங்கர்
1947 ருக்மாங்கதன்
1948 கோகுலதாசி
1948 சம்சார நௌகா
1949 வாழ்க்கை
1949 கீத காந்தி
1949 நவஜீவனம்
1951 சௌதாமினி
1951 சிங்காரி
1952 மாப்பிள்ளை
1954
கல்யாணம்
பண்ணியும்
பிரம்மச்சாரி கணபதி [1
1954 பொன்வயல்
1954 ராஜி என் கண்மணி
1955 எல்லாம் இன்ப
மயம்
1955 கோமதியின் காதலன்
1955 கள்வனின் காதலி கமலபதி
1955 மேதாவிகள்
1957 மணமகன் தேவை
1957 சமய சஞ்சீவி
1957 தங்கமலை ரகசியம்
1957 யார் பையன்
1958 அன்பு எங்கே
1958 கடன் வாங்கி
கல்யாணம்
1958 நீலாவுக்கு
நெறஞ்ச மனசு
1959 நல்ல தீர்ப்பு
1959 பத்தரமாத்து தங்கம்
1959 பிரசிடெண்ட்
பஞ்சாட்சரம்
1959 ராஜ சேவை
1959 வண்ணக்கிளி
1960 பாக்தாத் திருடன் எம்ஜிஆர்
நகைச்சுவை
வேடத்தில்
1960 அடுத்த வீட்டுப்
பெண் கதாந
1960 படிக்காத மேதை துணை நடிக
1960 விடிவெள்ளி
1961 புனர் ஜென்மம்
1962 ஆலயமணி
1963 அறிவாளி
1963 நான் வணங்கும்
தெய்வம்
1966 அன்பே வா புண்ணிய
( சரோஜாதே
தந்தை)
1966 சாது மிரண்டால்
1968 தில்லானா
மோகனாம்பாள்
வரதன்,
மிருதங்கம்
வாசிப்ப
1968 திருமால் பெருமை
1982 தேவியின்
திருவிளையாடல்
பெற்ற விருதுகள்
கலைமாமணி விருது
************************************
டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோ,
சிவாஜி செகண்ட் ஹீரோ
- டி.ஆர்.ஆர் நினைவு தினக்
கட்டுரை நன்றி விக்கிபீடியா.விகடன்.

'கண்ணால பேசிப் பேசிக்
கொல்லாதே...காதால கேட்டுக்
கேட்டுச் செல்லாதே...'என்ற பாடலில்
நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல்
மொழியை ரசிக்காதவர்களே இருக்க
முடியாது. 1940-ம் ஆண்டுகளில் தமிழ்
சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில்
கோலோச்சியவர் டி.ஆர். செல்வந்தர் குடும்ப
இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான
கதாபாத்திரங்களில் வெளுத்துக்
கட்டியவர். முட்டாள்தனம்,
புத்திசாலித்தனம், குறும்புத்தனம்,
அப்பாவித்தனம், வெட்கம் கலந்த
காதல் உணர்ச்சி என கலவையான உடல்
மொழிக்குச் சொந்தக்காரர்.
ஒருவிதமான பதற்றம் கலந்த இவரது
நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக்
கட்டிப் போட்டது.
காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை
எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே
தொடங்கிவைத்தவர் டி.ஆர். இவர்
ஹீரோவாக நடித்த, 'கல்யாணம் பண்ணியும்
பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜியே
செகண்ட் ஹீரோதான். இந்தப் படத்தில்
சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்க்கு
ஜோடி ராகினி. வைஜெயந்திமாலா,
அஞ்சலிதேவி, சாவித்ரி எனப் பல முன்னணி
கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக
நடிக்கத் தயங்கவில்லை.
கரூர், திருக்காம்புலியூர் கிராமத்தில் 1917ம்
ஆண்டு பிறந்தார் டி.ஆர். ராமச்சந்திரன்.
அப்பா ரங்காராவ் விவசாயி.
சிறுவயதிலேயே அம்மாவை இழந்த டி.ஆர்.க்கு
பள்ளிப் படிப்பு சுத்தமாகவே பிடிக்கவில்லை.
திண்ணைப் பள்ளியில் படிக்கப் பிடிக்காமல்
காணாமல் போய்விடுவார். பிறகு தேடிப்
பிடித்துக் கூட்டி வருவார்கள். பிறகு
குளித்தலையில் உள்ள குருகுலப் பள்ளியில்
சேர்க்கப்பட்டார். ' எனக்கு படிப்பு வேண்டாம்.
நாடகத்தில் நடிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை
வைத்தார். காரணம். குடும்ப நண்பர்
இராகவேந்திரராவ் என்பவரின் நாடக
அனுபவங்களைக் கேட்ட இராமச்சந்திரனுக்கு
நாடகங்களில் நடிக்க விருப்பமேற்பட்டது.
பரீட்சை முடிந்து விடுமுறைக்கு
வரும்போதெல்லாம், மகனை
வாய்ப்பாட்டு கற்றுக்கொள்ள
வைத்தார் அப்பா. வாய்ப்பாட்டுடன்
ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர்
கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில்
பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது
போன்ற பாவனைகளுடன் பாடக்
கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு
நடிப்புமீது காதல் வந்துவிட்டது. பிறகு அப்பா
அனுமதியுடன் ராகவேந்திரராவுடன்
ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன்
திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக்
குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். பிறகு
மதுரையில் தங்கியபோது அங்கே நாடகக்
கம்பெனியில் சேர அனுமதி கேட்டு
அப்பாவுக்குக் கடிதம் எழுத, மகனின்
விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை.
தந்தையின் அனுமதியுடன், 1936 ஆம் ஆண்டில்
மதுரையில் ஜகந்நாத அய்யர் நடத்தி வந்த
‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா‘ என்ற
நாடகக் கம்பெனி
கொல்லத்தில் முகாமிட்டிருந்த போது,
அவர்களது நாடகங்களில் சிறிய வேடங்களில்
நடித்தார். ஜெகன்நாத ஐயர்
வாத்தியாராகவும் முதலாளியாகவும்
இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில்
ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக
நடிக்க ஆரம்பித்தார் ராமச்சந்திரன். தங்க
இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம்
3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத்
தொடங்கினார். இவரது
நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான
எஸ்.வி. வெங்கடராமன் (மீரா
படத்துக்கு இசையமைத்தவர்) பின்னாளில்
தனியாக நாடக கம்பெனி
தொடங்கியபோது 25 ரூபாய்
சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக்
கொண்டு வந்தார். அங்கும்
அவர்களுக்குப் பெரும் நட்டம் ஏற்படவே,
வெங்கட்ராமன் திரைப்பட வாய்ப்புகளை
எதிர்பார்த்து பெங்களூர்
சென்றார்.
வெங்கட்ராமன், பெங்களூரில் ஏ.
வி. மெய்யப்பச் செட்டியாரை
சந்தித்தார். அவரது பிரகதி பிக்சர்ஸ் திரைப்பட
நிறுவனம் நந்தகுமார் என்ற திரைப்படத்தைத்
தயாரித்து வந்தது. இத்திரைப்படத்தில்
நடிப்பதற்கு வெங்கட்ராமனின் நாடகக்
கம்பெனி நடிகர்கள் அனைவரும் ஒப்பந்தம்
செய்யப்பட்டனர். காரைக்குடியில்
வெங்கட்ராமன் குழு திறமையைக்
கண்டார் ஏ.வி.மெய்யப்பச்
செட்டியார். அதிலும், தனித்துத் திறமையைக்
காட்டிய ராமச்சந்திரனை
செட்டியாருக்கு ரொம்பவே
பிடித்துப் போய்விட்டது. டி.ஆர். ராமச்சந்திரன், டி.
ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக
நடித்தார். 1938 இல் வெளிவந்த
இப்படம் வெற்றி பெற்றது. அதன்
பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும்
இல்லாமல் காலத்தைக் கழித்த
இராமச்சந்திரனுக்கு, வாயாடி
திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு
வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் நவீன
மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை
ஆகிய படங்களில் நடித்தார்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள்
மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த
நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு
நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த
மெய்யப்பச் செட்டியார், பம்மல்
சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை
நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில்
படமாக்குவது என்று முடிவு செய்தார்.
ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த
ராமச்சந்திரனை நாயகனாக்கினார்
செட்டியார்.
1941-ல், மெய்யப்ப செட்டியாரின்
தயாரிப்பில் வெளியான சபாபதி
என்ற முழு நீள நகைச்சுவைத் திரைப்படத்தில்
கதாநாயகனாக நடித்தார். இப்படம்
வெற்றி பெற்றதை அடுத்து டி. ஆர்.
இராமச்சந்திரனின் புகழும் பரவியது.
தொடர்ந்து பல படங்களில் நடித்த
இராமச்சந்திரன், ஏவிஎம் ஸ்டூடியோ முதன்
முதலாக 1947 இல் தயாரித்த நாம் இருவர்
படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.
வாழ்க்கை (1949) என்ற வெற்றிப்
படத்தில் வைஜயந்திமாலாவுக்கு ஜோடியாக
நடித்தார்.
படத்தின் ஹீரோ என்றால், நல்ல
பலசாலியாக, வாள்வீச்சு
தெரிந்திருக்க வேண்டும் என்கிற
கோட்பாடுகளை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர்.
சபாபதி படத்திற்காக 140 ரூபாய் சம்பளம்
தரப்பட்டது. 100 நாட்களுக்கு மேல் திரையிடப்பட்ட
இப்படம் வெற்றிப் படமாகி பெரும்
புகழ் தந்தது. இந்தப் படத்தில் 5 பாடல்களை
சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர்.
சபாபதி படத்திற்கான மொத்த
பட்ஜெட் 32,000 ரூபாய்.
டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில்
இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல்
படமாக அமைந்தது. வாழ்க்கை (1949) படத்தில்
நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே
முதல் படமாக அமைந்தது. வானம்பாடி
(1963) படத்தில் "யாரடி வந்தார் என்னடி
சொன்னார்' என்ற பாடல்
காட்சியில் நடனமாடியதன் மூலம்
ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை
துவங்கினார். வித்யாபதி (1946)
படத்தில்தான் முதன் முதலாக
எம்.என்.நம்பியார் அறிமுகமானார்.
சகடயோகம் படமே வி.என்.ஜானகி
நாயகியாக நடித்த முதல் படம்.
பொன்வயல் படத்தில்தான்
சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில்
பாடினார். தயாரிப்பாளர்
ஏவி.மெய்யப்ப செட்டியார்
இயக்கிய முதல் படம் சபாபதி (1941)
(செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர்
ஏ.டி.கிருஷ்ணசாமி).
திரைப்படங்களிலிருந்து ஓய்வுபெற்றபின்,
அமெரிக்காவில் தன் மகள்கள்
ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து
வந்தார். 1990-ம் ஆண்டு, இதய அறுவை
சிகிச்சையின்போது காலமானார். அவர்
மறைந்தாலும் அவரது உருண்டையான
கண்களையும் வித்தியாசமான உடல்
மொழியையும் ரசிகர்களால் மறக்கவே
முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக