புதன், 4 அக்டோபர், 2017

நடிகை பி. கண்ணாம்பா பிறந்த தினம் அக்டோபர் 5, 1911


நடிகை பி. கண்ணாம்பா பிறந்த தினம்  அக்டோபர் 5, 1911 

பி. கண்ணாம்பா (பசுப்புலேட்டி கண்ணாம்பா, தெலுங்கு : పసుపులేటి కన్నాంబ, அக்டோபர் 5, 1911  - மே 7, 1964) பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகை. மு. கருணாநிதியின்
மனோகரா திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும் உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம் , குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன்
ஏலூருவில் வளர்ந்தார். 1927 ஆம் ஆண்டு கண்ணம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு அந்த நாடக மன்றம் மேடையேற்றிய அனுஷியா, சாவித்திரி, யசோதா போன்ற நாடகங்களில் நடித்தார். இந்நாடக நிர்வாகிகளில் ஒருவரான கே. பி. நாகபூஷணம் 1934 இல் கண்ணாம்பாவைத் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு இருவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலி என்ற புதிய நாடகக் கம்பனியை ஆரம்பித்து தென்னிந்தியாவெங்கும் நாடகங்களை நடத்தி வந்தார்கள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் ஒரு ஆண்பிள்ளையும், பெண் பிள்ளையையும் தத்தெடுத்து வளர்த்தார்கள். மகள் ராஜராஜேஸ்வரி பிரபல தெலுங்கு இயக்குனர் சி. புல்லையாவின் மகனைத் திருமணம் செய்து கொண்டார்.

திரைப்படங்களில்..

ஸ்டார் கம்பெனியைச் சேர்ந்த ஏ. ராமையா கண்ணாம்பாவை சந்திரமதி பாத்திரத்தில் ஹரிச்சந்திரா திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சரசுவதி டக்கீஸ் கம்பெனி தயாரித்த துரோமதி படத்தில் நடித்தார். 1938 இல் பி. என். ரெட்டி தயாரித்த கிரகலட்சுமி படத்தில் நடித்தார்.
கண்ணாம்பா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் (பின்னர் ஜெமினி ஸ்டூடியோவாக மாறியது) ராஜகோபாலின் கிருஷ்ணன் தூது . தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிப் பேசி நடித்தார். இது 1940 ஆண்டு வெளிவந்தது. அடுத்து அவர் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் அசோக்குமார் படத்தில் நடித்தார். 1941 இல் ஜுப்பிட்டர் பிக்சர்ஸ் தயாரித்த கண்ணகி படத்தில் நடித்தார்.
கண்ணகிக்குப் பிறகு கண்ணாம்பா தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். கலைஞர் மு. கருணாநிதி எழுதிய வசனங்களை மனோகரா திரைப்படத்தில் சிறப்பாக பேசி நடித்தார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

1. அசோக் குமார் (1941)
2. ஹரிச்சந்திரா (1944)
3. லைலா மஜ்னு (1950)
4. சுதர்ஸன் (1951)
5. உத்தம புத்திரன் (1958)
6. மருதநாட்டு வீரன் (1961)
7. நிச்சய தாம்பூலம்
8. அர்த்தனாரி
9. அவன் அமரன்
10. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
11. ஏழை உழவன்
12. கண்ணகி
13. தாய்க்குப்பின் தாரம்
14. துளசி ஜலந்தர்
15. தெய்வ நீதி
16. நிச்சய தாம்பூலம்
17. படித்தால் மட்டும் போதுமா
18. பெண்ணரசி
19. பெரிய கோவில்
20. மங்கையர்க்கரசி
21. லட்சுமி
22. வாழவைத்த தெய்வம்

விருதுகள்

கலைமாமணி விருது.

நினைவுகளின் சிறகுகள்: பசுபலேடி கண்ணாம்பா - ஆந்திரம் தந்த அற்புதம்!

புராணத்துல வர காமரூபன் சாராயம் போட்டிருக்கான்னு கதையில வருதா?’ என்று பி.யூ.சின்னப்பாவைப் பார்த்துக் கடும் கோபத்துடன் கேட்டார் கண்ணாம்பா.
சின்னப்பா என்றால் எல்லாருக்கும் சிம்ம சொப்பனம்! அவர் மது அருந்தி விட்டுப் படப்பிடிப்புக்கு வருவது சர்வ சாதாரணம். ஒட்டுமொத்த செட்டும் அதிர்ந்து நின்றது. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்கிற அச்சம் அனைவரின் முகத்திலும்.

‘என்னை மன்னிச்சுடு கண்ணாம்பா. இனிமே நம்ம ஷூட்டிங்கிலே குடிக்க மாட்டேன்.’ என்று உறுதி அளித்துக் கண் கலங்கி நின்றார் சின்னப்பா.
வேறொரு நடிகை அப்படிக் கேட்டிருந்தால் அடுத்த நொடியில் கன்னம் பழுத்திருக்கும்.
‘எனக்கென்னமோ நீங்க குடிக்கிறது பிடிக்கல. நான் அப்படி சொன்னதுக்கு மன்னிச்சுக்குங்க.’ கண்ணாம்பா பெருந்தன்மையுடன் தன் கருத்துக்கு வருத்தமும் தெரிவித்துக் கூடுதல் வலிமையும் சேர்த்தார்.
எதிர்பாராமல் மிக இளம் வயதில் அகால மரணம் அடைந்த பி.யூ.சின்னப்பாவின் இறுதி, ஊர்வலம்.
’அய்யா போயிட்டீங்களா... இனி உங்கள மாதிரி நடிக்கிறவங்கள எங்கே பார்ப்பேன்...?’ என்று மார்பில் அடித்துக்கொண்டு கதறி அழுதார் கண்ணாம்பா.
கண்ணாம்பா-பி.யூ.சின்னப்பா இருவருக்கும் இடையில் ஆத்மார்த்தமான நேசம் உண்டு. என்பது பகிரங்கமானது அன்று.
எண்பத்தைந்து ஆண்டு கால பேசும் பட வரலாற்றில் பசுபலேடி கண்ணாம்பா போன்றதொரு அற்புதமான தமிழ் உச்சரிப்பு உடைய நடிகையைக் காண்பது மிக அரிது.
மாஸ் ஹீரோக்களுடன் நடித்தபோதும் தனித்துக் கைத்தட்டல்களைப் பெற்ற நடிப்பரசி.
ஆந்திரம் தந்த அற்புதம்!
கண்ணாம்பாவுக்கு ஆந்திர மாநிலம் மேல் கோதாவரி ஜில்லா எல்லூர் சொந்த ஊர். பசுபலேடி என்பது கண்ணாம்பாவின் வம்சப் பெயர்.
1910-ல் பிறந்தவர். பதிமூன்று வயதில் ராஜராஜேஸ்வரி நாடக சபா மூலம் அறிமுகமாகி, புராணகால சாவித்ரி, அனுசுயாவாக நடிப்பில் சக்கை போடு போட்டவர்.
1935-ல் தெலுங்கில் ஸ்டார் கம்பைன்ஸின் ஹரிச்சந்திரா வெளியானது. அதில் சந்திரமதியாக கண்ணாம்பாவின் சினிமா கணக்கு தொடங்கியது.
‘கிரஹலட்சுமி ’ சித்தூர் வி.நாகையாவின் முதல் படம். நாகையா - கண்ணாம்பா ஜோடியின் நடிப்பாற்றல் கிரஹலட்சுமியைத் தென்னகம் முழுவதும் ‘பாகுபலி’யாக்கியது. தமிழ் டாக்கிகள் வசூல் குவிக்கவும் அதே ஜோடி அவசரமாகத் தேவைப்பட்டது.
வசனமும் உச்சரிப்பும்
அடுத்துப் புகழின் உச்சியில் அமர்த்தியது முருகன் டாக்கீஸாரின் ‘அசோக்குமார்’. எம்.கே. தியாகராஜ பாகவதரின் மகத்தான வெற்றிச் சித்திரம். கண்ணாம்பா அதில் மாறுபட்ட வில்லி.
வசனகர்த்தா இளங்கோவன். கண்ணாம்பாவுக்குச் செந்தமிழில் பேசி நடிக்கப் பயிற்சி அளித்தார். கண்ணாம்பா வசனங்களைத் தெலுங்கில் எழுதி வாசித்து, வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் பாகவதருக்கே சவால் விட்டார். போனஸாகப் படத்தில் அவரது பரத நாட்டியமும் உண்டு.
கண்ணாம்பாவுக்கு நடனம் தெரியாது. நேரம் ஒதுக்கி அபிநயம் பிடித்து முடிந்த வரையில் முத்திரை பதித்தார்.
அசோக்குமாரில் நடித்த அனுபவம் கண்ணாம்பாவுக்கு நன்றாகத் தமிழில் பேச வந்தது. தொடர்ந்து கண்ணாம்பா ஜூபிடரில், கண்ணகியாக வலம் வர மெனக்கெட்டு உழைத்தவர் இளங்கோவன். அவரது படைப்பாற்றலில் தமிழ் எத்தனை தித்திப்பு என்பதை கண்ணகி திகட்டத் திகட்டக் காட்டியது.
தமிழ்த் திரையில் முழுமையானதொரு உணர்ச்சிக் கொந்தளிப்பான கண்ணகி பாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்த முதல் பெண் கலைஞர் கண்ணாம்பா! எத்தனை முதல் தரமான அக்மார்க் நடிப்பு!
தமிழ் நடிகையர் வியக்கும் அளவுக்கு, ஒரு தெலுங்கு நட்சத்திரம், அனல் வீசும் தமிழ் உரையாடலைப் பேசி நடித்த ஆவேசமும் எழுச்சியும் அபாரம்!
சூப்பர் ஹிட் ஜோடி
கண்ணகியில் கோவலனாக நடிப்பின் எல்லை தொட்ட பி.யூ. சின்னப்பா சினிமாவில் தனக்கேற்ற சிறந்த இணையாகக் கண்ணாம்பாவை இனம் கண்டுகொண்டார். அவர்களது அடுத்த சூப்பர் ஹிட் மங்கையர்க்கரசி.
சுமார் அரை டஜன் படங்களில் பி.யூ. சின்னப்பா-கண்ணாம்பா ஜோடி இணைந்தது. கண்ணாம்பாவின் சொந்தத் தயாரிப்பான தமிழ் ஹரிச்சந்திராவில் நாயகன் பி.யூ. சின்னப்பா. தமிழ்த் திரையின் முதல் சூப்பர் சக்ஸஸ் ஜோடி அவர்கள்!
கதையின் மையமாக கண்ணாம்பா
கண்ணாம்பாவுடைய நடிப்பாற்றலைக் காசு பண்ண ஜூபிடர் தயாரித்த துரிதச் சித்திரம் மஹா மாயா. தமிழில் ஒரு நடிகைக்காகக் கதை எழுதப்பட்டது அதுவே முதல் முறை.
பின்னாள்களில் சாவித்ரி, கே.ஆர். விஜயாவுக்காக அநேக கதாசிரியர்கள் பேனா பிடித்ததற்குப் பிள்ளையார் சுழி கண்ணாம்பா!
கண்ணகிக்குப் பிறகு கண்ணாம்பாவை இன்று வரை மறக்க முடியாமல் செய்தவை நடிகர் திலகத்துடன் அவர் போட்டி போட்டு நடித்த மனோகரா, மக்களைப் பெற்ற மகராசி,வணங்காமுடி, உத்தமபுத்திரன், காத்தவராயன், படிக்காத மேதை, புனர் ஜென்மம், படித்தால் மட்டும் போதுமா போன்றவை.
அவற்றில் ‘மனோகரா’ மிக முக்கியமானது. மாதரசி பத்மாவதியாக கண்ணாம்பாவின் நடிப்பு மு.கருணாநிதியின் எழுத்தில் உச்சம் தொட்டது.
‘சிவாஜி கணேசனும் கண்ணாம்பாவும் தாய்- மகன் பாத்திரங்களை ஏற்று, அவற்றிலே ஊறி, படமெங்கும் தங்கள் ஒளியைப் பரவி வீசிவிட்டார்கள்.’ என்று ஆனந்தவிகடன் ‘மனோகரா’வுக்கு மகுடம் சூட்டியது.
‘பொறுத்தது போதும்! பொங்கியெழு!’ என்று கண்ணாம்பா பேசிய வசனம் தலைமுறைகளைக் கடந்தும் ஜீவனோடு வாழ்கிறது!
எம்.ஜி.ஆரின் அம்மாவாக கண்ணாம்பா நடித்த தேவர் பிலிம்ஸ் படங்களும் சூப்பர் ஹிட் ஆயின. அவை புரட்சி நடிகருக்கு பொற்காலத்தை உருவாக்கின.
கடைசி நாட்கள்
கண்ணாம்பா ராஜராஜேஸ்வரி அம்மனின் பக்தை. அதே தெய்வத்தின் பெயரில் சொந்த சினிமா கம்பெனி தொடங்கினார். அவரது கணவர் நாகபூஷணம் டைரக்டர்.
கண்ணாம்பாவின் தயாரிப்புகளுக்குப் போட்டியாக அதே கதையம்சத்துடன் ஏவி.எம்.மின் படங்கள் வெளி வந்தன. தொடர்ந்து நிறைய நஷ்டம் வரவே எல்லாரையும் போல எம்.ஜி.ஆரை நாடிச் சென்றார்.
கண்ணாம்பா தயாரித்த ‘தாலி பாக்கியம்’ எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி நடித்த பிரபல தோல்விப் படம். தேவர் பிலிம்ஸ் பொறுப்பில் குறுகிய காலத்தில் உருவாகி வந்தது. எதிர்பாராமல் கண்ணாம்பாவைப் புற்றுநோய் தின்னத் தொடங்கியது. அவர் காலமான பின்பு வெளி வந்தது.
ரா.கி. ரங்கராஜன் குமுதத்தில் எழுதிய ‘இது சத்தியம்’ கண்ணாம்பாவின் நடிப்பாற்றலுக்கான கடைசி அத்தியாயம். சரவணா ஃபிலிம்ஸ் தயாரிப்பு. கே. சங்கர் இயக்கியது.
‘சர்வாதிகாரிப் பாட்டியின் குணத்தைச் செவ்வனே புரிந்துகொண்டு, தண்ணீருக்கு வெளியே வாழும் எட்டு கை ஆக்டோபஸாகக் கம்பீரத்துடன் கண்ணாம்பா நடித்திருக்கிறார்’ என்று குமுதம் தன் விமர்சனத்தில் குதூகலித்திருந்தது.


பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை. மு. கருணாநிதியின் 'மனோகரா' திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும் உள்ளார். கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன் ஏலூருவில் வளர்ந்தார். 1927-ம் ஆண்டு கண்ணாம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்து

பிரபலமான நடிகை ப. கண்ணாம்பா இறந்த தினம்: மே 7- 1964

பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை. மு. கருணாநிதியின் 'மனோகரா' திரைப்படம் மூலம் வசனத்தை திறம்பட பேசி எல்லோராலும் பாராட்டை பெற்றவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 25 படங்களை தயாரித்தும் உள்ளார்.

கண்ணாம்பா தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர். ஆந்திரப் பிரதேசம், குட்டப்பா என்ற ஊரில் எம். வெங்கணராசையா, லோகாம்பா ஆகியோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார். தாயின் பெற்றோருடன் ஏலூருவில் வளர்ந்தார். 1927-ம் ஆண்டு கண்ணாம்பா 16 வயதில் நாரலா நாடகி சமாஜன் நாடக மன்றத்தில் சேர்ந்து அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாக நடித்து பெயர் பெற்றார். அதன் பிறகு அந்த நாடக மன்றம் மேடையேற்றிய அனுஷியா, சாவித்திரி, யசோதா போன்ற நாடகங்களில் நடித்தார்.

இந்நாடக நிர்வாகிகளில் ஒருவரான கே. பி. நாகபூஷணம் 1934-ல் கண்ணாம்பாவைத் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு இருவரும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலி என்ற புதிய நாடகக் கம்பனியை ஆரம்பித்து தென்னிந்தியாவெங்கும் நாடகங்களை நடத்தி வந்தார்கள்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் ஒரு ஆண்பிள்ளையும், பெண் பிள்ளையையும் தத்தெடுத்து வளர்த்தார்கள். மகள் ராஜராஜேஸ்வரி பிரபல தெலுங்கு இயக்குனர் சி. புல்லையாவின் மகனைத் திருமணம் செய்து கொண்டார். ஸ்டார் கம்பெனியைச் சேர்ந்த ஏ. ராமையா கண்ணாம்பாவை சந்திரமதி பாத்திரத்தில் ஹரிச்சந்திரா திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு சரசுவதி டக்கீஸ் கம்பெனி தயாரித்த துரோமதி படத்தில் நடித்தார்.

1938-ல் பி. என். ரெட்டி தயாரித்த கிரலட்சுமி படத்தில் நடித்தார். கண்ணாம்பா நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் (பின்னர் ஜெமினி ஸ்டூடியோவாக மாறியது) ராஜகோபாலின் கிருஷ்ணன் தூது. தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிப் பேசி நடித்தார். இது 1940 ஆண்டு வெளிவந்தது.

அடுத்து அவர் எம்.கே. தியாகராஜ பாகவதருடன் அசோக்குமார் படத்தில் நடித்தார். 1941 இல் ஜுப்பிட்டர் பிக்சர்ஸ் தயாரித்த கண்ணகி படத்தில் நடித்தார். கண்ணகிக்குப் பிறகு கண்ணாம்பா தமிழ்நாட்டில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். கலைஞர் மு. கருணாநிதி எழுதிய வசனங்களை மனோகரா திரைப்படத்தில் சிறப்பாக பேசி நடித்தார்.

இவர் 1964-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி காலமானார்.



பிளாஷ்பேக்: சொந்தப் படம் எடுத்து கண்ணீர் சிந்திய கண்ணாம்பா

பழம்பெரும் நடிகை கண்ணாம்பா,
தியாகராஜ பாகவதருக்கு
ஜோடியாகவும், சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு
அம்மாவாகவும் நடித்து
புகழ்பெற்றார். சினிமா உலகில்
அந்தக் காலத்திலேயே லட்சக் கணக்கில்
சம்பாதித்தவர் அவர். ஆனால்
சொந்தப் படம் எடுத்து, சம்பாதித்த
அனைத்தையும் இழந்து கண்ணீர் கடலிலும்,
கடன் கடலிலும் மூழ்கிய முதல் நடிகை அவர்
தான்.
ஸ்ரீராஜ ராஜேஸ்வரி பிலிம்ஸ் என்ற
தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய
கண்ணாம்பா பி.யூ.சின்னப்பா நடிப்பில்
ஹரிச்சந்திரா என்ற படத்தை பிரமாண்ட
பொருட் செலவில்
தயாரித்தார். அந்த நேரத்தில்
கன்னடத்தில் தயாரான ஹரிச்சந்திர
படம் தமிழில் டப் செய்யப்பட்டு
கண்ணாம்பாவின் ஹரிச்சந்திராவுக்கு
முன்னமே வெளியானதால் படுதோல்வி
அடைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.
அதன்பிறகு நாகபஞ்சமி என்ற புராண
படத்தை தயாரித்தார். இதில் அஞ்சலிதேவி,
எஸ்.வரலட்சுமி, தங்கவேலு நடித்தனர். இதே
கதை மோகனராவ், ஜமுனா, ஜானகி
நடிப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில்
தயாரானது. இந்தப் படம்
கண்ணாம்பாவின் நாகபஞ்சமிக்கு
முன்பே நாகதேவதை என்ற பெயரில் டப்
செய்யப்பட்டு வெளியிடப்பட்டு
பெரும் வெற்றி பெற்றது.
கண்ணாம்பாவின் ஒரிஜினல்
நாகபஞ்சமி பெரும் தோல்வி அடைந்தது.
இதிலும் பெரும் நஷ்டம் அடைந்தார்.
அதன் பிறகும் அவர் தயாரித்த
நவஜீவனம், ஏழை உழவன் படங்களும் தோல்வி
அடையவே பெரும்
பொருளாதார சிக்கல்களை
உருவாக்கி பெரும்
கடனாளியானார். அவரின் தயாரிப்பு
நிறுவனமான ராஜ ராஜேஷ்வரி பிலிம்ஸ்
சீர்குலைந்து போனது. நடிப்பில் ரசிகர்களை
அழவைத்த கண்ணாம்பா, தன் இறுதி
காலத்தை கண்ணீருடேனேயே கழித்தார்.
அன்று கண்ணாம்பாவிற்கு ஏற்பட்ட
இழப்புதான். இன்றுவரை நடிகைகளை
சொந்தப் படம் எடுக்க யோசிக்க
வைக்கிறதோ என்னவோ...?

நன்றி விக்கிப்பீடியா .தினமலர்.மாலை மலர்.தி இந்து தமிழ்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக