வெள்ளி, 6 அக்டோபர், 2017

பாடகி வைக்கம் விஜயலட்சுமி பிறந்த நாள் 7 அக்டோபர் 1981.



பாடகி வைக்கம் விஜயலட்சுமி பிறந்த நாள் 7 அக்டோபர் 1981.

வைக்கம் விஜயலட்சுமி காயத்ரிவீணை எனும் அரியதோர் இசைக்கருவி இசைப்பதில் தேர்ந்தவரும் திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார். செல்லுலாய்டு என்னும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக இவர் திரைத்துறையில் அறிமுகமானார்.
1981 ஆம் ஆண்டில் விஜயதசமி நாளன்று முரளீதரன், விமலா இணையருக்கு ஒரே மகளாய்ப் பிறந்தவர் விஜயலட்சுமி. இவர் பிறந்த இரண்டொரு நாட்களுக்குப் பிறகு இவரது பெற்றோருக்குத் தங்கள் மகள் தீர்க்கவியலாப் பார்வைக் குறைபாடு பெற்றிருப்பது தெரிய வந்தது. பின்னர் இவர்களது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. மிகச்சிறுவயதிலேயே ஒலிநாடாக்களில் வரும் பாடல்களை அப்படியே இராகம் தாளம் பிறழாமல் பாடும் விஜயலட்சுமியின் திறனைக் கண்ட அவர் தந்தை எம்.எஸ். அம்மா , ஜேசுதாஸ் ,
மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் செவ்வியல் ஒலிநாடாக்களைக் கேட்கும்படிச் செய்தார்.
சிறுவயதில் கிடைத்தவொரு வீணையில் பாட்டு வாசிக்கப் படித்தார் விஜயலட்சுமி. பின்னர் இவரது தந்தை ஒற்றைக் கம்பி வீணை ஒன்றை அமைத்தளித்தார். இதன் காரணமாக இவருக்கு ஒற்றக்கம்பி வீணை காயத்ரி என்ற பெயர் கிட்டியது.
குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே இந்த வீணைக்கு காயத்ரிவீணை என்னும் பெயரை அளித்தவர்.
ஜே. சி. டேனியல் குறித்து வெளியான மலையாளத் திரைப்படமான செல்லுலாய்டில் இவர் பாடிய காட்டே காட்டே (காற்றே காற்றே..) எனும் பாடல் இவரைப் பலரறியச் செய்தது.


பின்னணித் தகவல்கள்
பிறப்பு 7 அக்டோபர் 1981
(அகவை 36)
இசை வடிவங்கள் பின்னணிப் பாடகர், கருநாடக இசை
தொழில்(கள்) பாடகி
இசைக்கருவி(கள்) வாய்ப்பாட்டு, காயத்ரிவீணை
இசைத்துறையில் 1995 முதல் தற்போது வரை.


பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் பாடகி வைக்கம் விஜலட்சுமி. அவருக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இனிய குரலில் பாடல்கள் பாடி ரசிகர்களை அசத்தி வருகிறார்.
Singer Vaikom Vijayalakshmi gets eyesight
குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார். 
கண் பார்வைக்காக விஜயலட்சுமி தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பார்வை கிடைத்துள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜயலட்சுமிக்கு பார்வை வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
விஜயலட்சுமி தனது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறோம்.

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நிறுத்தம் !

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம் நின்று போனதாக அறிவித்துள்ளார். மாப்பிள்ளை வீட்டார் விதித்த சில கட்டுப்பாடுகள்  திருமணம் நின்று போக காரணமாக அமைந்து விட்டது. 
வைக்கம் விஜயலட்சுமி
பிரபல  பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும் கேரளத்தைச் சேர்ந்த, சந்தோஷ் என்பவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 13-ம் தேதி நிச்சயம் நடைபெற்றது. வரும் மார்ச் 29-ம் தேதி  இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. 'கண்கள் இல்லாத தனக்கு, தனது வருங்கால கணவரே கண்களாக கிடைத்துள்ளார்' என்று ஒரு முறை விஜயலட்சுமி நெகிழ்ச்சியாக கூறியிருந்தார். 

இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த வைக்கம் விஜயலட்சுமி, தனது திருமணம் நின்று போன அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''திருமணத்திற்கு பிறகு தனது இசை வாழ்க்கையை தொடர வேண்டாம் என சந்தோஷ் கூறுகிறார். பள்ளி ஒன்றில் இசை ஆசிரியராக பணி செய்யுமாறும் சொல்கிறார். முதலில் எனக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்பதாக சொன்ன அவர், இப்போது எனது லட்சியத்துக்கே தடை போடுகிறார். திருமண நிச்சயத்தின் போது, எனது வீட்டில் என்னுடன் வாழ்வதாக சொன்னார். ஆனால், இப்போது அவருடைய உறவினர்கள் வீட்டில் வாழ வேண்டும் என கூறுகிறார். அதனால், இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. திருச்சூரில் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். இந்தத் திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது. இது முற்றிலும் நான் எடுத்த முடிவு. என்னை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்..
விஜயலட்சுமியின் தந்தை முரளீதரன், “சந்தோஷ், அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார் . அது ஏற்புடையதாக இல்லை” எனக் கூறியுள்ளார்.  பிறவியிலேயே பார்வையற்ற வைக்கம் விஜயலட்சுமிக்கு ஆயுர்வேத சிகிச்சை வழியாக ஓரளவு பார்வை  வந்தது. முற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கு பொருள்களை, நிழல் உருவங்களை பார்க்க முடிந்த நிலையில்தான், திருமண நிறுத்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
முன்னதாக சந்தோஷ், ''விஜயலட்சுமியை மனைவியாக பெற தவம் செய்திருக்க வேண்டும  எனது 6 வயதில் தந்தையை இழந்தேன். எனது தாயையும் இழந்தேன். தனிமையின் வலி எனக்குத் தெரியும். கடவுள் அருள், வலி, இசை இந்த மூன்றும்தான் எங்களை இணைத்திருக்க வேண்டும். விஜயலட்சுமியை மனைவியாக பெற பாக்கியம் செய்திருக்க வேண்டும்' என கூறியது குறிப்பிடத்தக்கது. 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வைக்கம் என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறவியிலேயே பார்வையற்றவர். முரளீதரன் - விமலா தம்பதியரின் ஒரே மகள். விஜயலட்சுமிக்கு பார்வையை பறித்த கடவுள் 'குயில் ' போன்ற குரலைக் கொடுத்திருக்கிறார்.  எம்.எஸ்.வி, இளையராஜாவின் பாடல்கள்தான் விஜயலட்சுமியின் குரல் வளத்துக்கு மேலும் தீனி போட்டு வளர்த்தன.
விஜயலட்சுமியின் மானசீக குரு ஏசுதாஸ். ஆறாவது வயதிலேயே  விஜயலட்சுமி தனது குருநாதர் ஏசுதாசைச் சந்தித்தார். சிறு வயதிலேயே தேர்ந்த பாடகர்கள் பாடுவதற்கும் கடினமான தோடி, பைரவி போன்ற அதிசய ராகங்களில் விஜயலட்சுமிக்கு இருந்த ஞானத்தைக் கண்டு ஏசுதாஸ் வியப்படைந்தார்.  திரைப்படத்துறைக்குள் நுழைவதற்கு முன், சென்னையில் மட்டும் 400 சபாக்களில் விஜயலட்சுமி பாடியுள்ளார். வரும் மார்ச் 5ம் தேதி வீணை காயத்ரியுடன் 51 பாடல்களை 3 மணி நேரத்தில் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.
இத்தனை திறமையும், கலையார்வமும் மிக்க விஜயலட்சுமிக்கு தக்க துணை கிடைத்ததாய் மகிழ்ந்திருந்த நிலையில், அவரது  இந்த அறிவிப்பு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும், அவருக்கு ஆறுதலாய், பக்க பலமாய் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி விக்கிப்பீடியா.விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக