புதன், 4 அக்டோபர், 2017

நடிகை கல்பனா பிறந்த தினம் அக்டோபர் 5, 1965 .



நடிகை  கல்பனா பிறந்த தினம்  அக்டோபர் 5, 1965 .

கல்பனா ரஞ்சினி என்ற கல்பனா (அக்டோபர் 5, 1965 - சனவரி 25, 2016) திரைத்துறையில் அறிமுகமான நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனிச்சல்ல ஞான் என்ற படத்திற்காக 60வது தேசியத் திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார்.
இவர் எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய மஞ்சு திரைப்படத்தில் 1983இல் முதன்முதலாக நடித்தார். தமிழில் சின்ன வீடு திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்தார். 1995இல்
சதிலீலாவதி என்ற திரைப்படத்திலும்,
பம்மல் கே. சம்பந்தம் , டும் டும் டும் ஆகியத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
2016 ஜனவரி 25-ஆம் தேதி திங்கட்கிழமை காலை ஹைதராபாத்தில் மாரடைப்பால் காலமானார்.


குடும்ப வாழ்க்கை

திரைப்பட இயக்குனரான அனிலை திருமணம் செய்துகொண்டார். ஊர்வசி , கலாரஞ்சினி ஆகியோர் இவரது சகோதரிகள். இவர் ஞான் கல்பனா என்றொரு மலையாள நூலை எழுதியுள்ளார்.



திரைப்படங்கள்

திரைப்படம் ஆண்டு வ
தனிச்சல்ல ஞான் 2012 ரசியா
முல்லைச்சேரி மாதவன்குட்டி நேமம் பி.ஒ.
2012
இந்தியன் ரு 2011 மேரி
சீனியர் மாண்ட்ரெக் 2010
டுவன்டி20 2008 சுவர்ண
அஞ்சில் ஒராள் அர்ஜுனன் 2007 சாந்தா
கிருத்யம் 2005 விக்ட
அற்புதத்தீவு 2005 மல்லிக
பங்களாவில் ஔதா 2005
பைவ் பிங்கர்ஸ் 2005 மேரிக்க
இதயத் திருடன் (தமிழ்) 2005
மாம்பழக்காலம் 2004 நீலிமா
விஸ்மயத்தும்பத்து 2004 மாயா
தாளமேளம் 2004 கனகவல்
வரும் வருன்னு வன்னு 2003 வேலை
மிழி ரண்டிலும் 2003 சாரதா
மேல்விலாசம் சரியாணு 2003 சரசம்மா வர்க்கீஸ்
வெள்ளித்திரை 2003 புஷ்பம்
பம்மல் கே. சம்பந்தம் (தமிழ்) 2002
சிரிக்குடுக்க 2002 சீமந்தின
காக்கே காக்கே கூடெவிடெ 2002
கண்ணகி 2002 கனகம்ம
காசில்லாதெயும் ஜீவிக்காம் 2002
கிருஷ்ண கோபாலகிருஷ்ணா 2002 சுஜாத
ஊமைப்பெண்ணின் உரியாடாப்பய்யன் 2002 கன்யகா
இஷ்டம் 2001 மரியா தோமஸ்
டும் டும் டும் (தமிழ்) 2001
அமேரிக்கன் அம்மாயி 1999
சந்தாமாமா 1999 கொச்சம்
சார்ளி சாப்லின் 1999
சுவஸ்தம் கிருஹபரணம் 1999 சரளா
அலிபாபாவும் ஆறரைக்கள்ளன்மாரும் 1998 தங்கி
கிராம பஞ்சாயத்து 1998 பங்கஜா
ஜூனியர் மான்ட்ரேக் 1997
கல்யாண உண்ணிகள் 1997 லூசி
கோட்டப்புறத்தெ கூட்டுகுடும்பம் 1997 சந்திரி
மன்னாடியார் பெண்ணின் செங்கோட்ட்டை செக்கன்
1997
நியூஸ்பேப்பர் பாய் 1997
உல்லாசப்பூங்காற்று 1997
எஸ்க்யூஸ் மீ ஏது கோளேஜிலா 1996
காதில் ஒரு கின்னாரம் 1996 மணிக்க
களிவீடு 1996 மேரி
குடும்பக்கோடதி 1996 குண்ட பார்வத
மலையாள மாசம் சிங்கம் ஒன்னு 1996
காட்டிலெ தடி தேவருடெ ஆனை 1995 கனகா
களமசேரியில் கல்யாண யோகம் 1995 செம்பக சகுந்த
பை பிரதர்ஸ் 1995 கோமள
புன்னாரம் 1995
சதிலீலாவதி 1995 லீலாவத
திரீமென் ஆர்மி 1995 இந்திர
சி.ஐ.டி. உண்ணிக்ருஷ்ணன் பி.ஏ., பி.எட்.
1994 கிளார
குடும்பவிசேஷம் 1994 ஏலிக்க
பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு 1994 பொன்
பூச்சய்க்காரு மணி கேட்டும் 1994 கார்த்தி
பட்டர்பிளைஸ் 1993
காந்தர்வம் 1993 கொட்ட கோமள
இஞ்சக்காடன் மத்தாயி & சண்ஸ் 1993 அன்னக்க
காபூளிவாலா 1993 சந்த்ரிக
காவடியாட்டம் 1993
பொன்னுச்சாமி 1993
உப்புகண்டம் பிரதர்ஸ் 1993 ஏலம்மா
என்னோடிஷ்டம் கூடாமோ 1992 பாக்கி
இன்ஸ்பெக்டர் பல்ராம் 1991 தாட்சா
இன்னத்தெ புரோக்ராம் 1991 மினிக
பூக்காலம் வரவாயி 1991 டியூஷ
சவுஹ்ரதம் 1991 அன்னம்
டாக்டர் பசுபதி 1990 யூ டி ச குமார
கௌதுகவார்த்தைகள் 1990 கமலூ
மாலையோகம் 1990 சுபத்ரா
ஒருக்கம் 1990 ஆலீஸ்
சாந்திரம் 1990 அன்னா
ஒரு சாயாஹ்னத்தின்றெ சுவப்னம்
1989 தங்கமண
பெருவண்ணாபுறத்தெ விசேஷங்கள் 1989 மோகி
சின்னவீடு (தமிழ்) 1985
இது நல்ல தமாஷ் 1985 சுந்தரி
மஞ்ஞு 1983 ரஸ்மி.

கலகலப்பான நடிகை கல்பனாவுக்கு பின்னால் இத்தனை சோகமா

'சின்ன வீடு 'கல்பனா என்றால்தான் தமிழகத்தில் பலருக்கும் தெரியும். தனது தனித்தன்மையான நடிப்பால் மலையாளத்தில் மட்டுமல்லாமல்  தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இடம் பிடித்த கல்பனா, இன்று உயிருடன் இல்லை.  திடீரென்று மரணம் அவரைத் தழுவிக் கொண்டது. என்னதான் நடந்தது கல்பனாவுக்கு?

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு வந்த சினிமா சூட்டிங்கில் கலந்து கொள்ள நேற்று அவர் ஹைதரபாத் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இன்று மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.   உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கல்பனாவை கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்தே கிடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் கல்பனா எப்படி இறந்தார் என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்பட்டத் தகவல் கிடைக்கவில்லை. 


கடந்த சில ஆண்டுகளாக கல்பனாவுக்கு இதய வால்வு பிரச்னை இருந்து வந்துள்ளது. கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில், அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மருந்து மாத்திரைகளும் சாப்பிட்டு வந்துள்ளார். அத்துடன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டுள்ளது. 

தனக்கு உடலில் இவ்வளவு வியாதிகள், வலிகள் இருந்தாலும் அதனை சூட்டிங் ஸ்பாட்களில் கல்பனா காட்டிக் கொண்டதே இல்லையாம். படத்தில் எப்படி கலகலப்பாக வருவாரோ... அது போலவே நிஜத்திலும் பழகி வந்துள்ளார். ஒரு போதும் தனக்குள்ள பிரச்னையை அடுத்தவர்களிடம் சொன்னது கிடையாதாம். தனக்கிருந்த நோய்களை சீரியசாகவும் எடுத்துக் கொண்டது கிடையாம்.


ஒரு வேளை ஹோட்டல் அறையில் துணைக்கு யாராவது இருந்திருந்தால் கூட மாரடைப்பு ஏற்பட்டவுடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்க முடியும். பொதுவாக இதயநோய் இருப்பவர்கள் தனியா உறங்க கூடாது . எனவே, 'ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்' என்று  உறவினர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் கல்பனா அதையெல்லாம் சட்டை செய்தது கிடையாதாம். 

நாடக நடிகர் வி.பி.நாயர், விஜயலட்சுமி தம்பதியரின் மூத்த மகள்தான் கல்பனா. இயற்பெயர் கல்பனா ரஞ்சனி. இவரது தங்கைதான் நடிகை ஊர்வசி.மற்றும்கலாரஞ்சனி என்ற இளைய சகோதரியும் உண்டு.  மலையாள நடிகர் அனிலை திருமணம் செய்து கொண்ட கல்பனா, கடந்த 2012-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். இந்த தம்பதியருக்கு 16 வயதில் ஸ்ரீமாயி என்ற மகள் உண்டு. விவாகாரத்துக்கு பிறகு மகளுடன் கல்பனா வாழ்ந்து வந்தார்.


கடந்த 1983-ம் ஆண்டு  புகழ்பெற்ற மலையாள இயக்குநர் எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கிய 'மஞ்சு' என்ற படத்தில்தான் கல்பனா முதலில் அறிமுகம் ஆனார். அதற்கு இரண்டு வருடம் கழித்து தமிழில் அப்பாவி மனைவியாக அவர் நடித்த  'சின்னவீடு ' சக்கை போடு போட்டது. அதுபோல் ' சதிலீலாவதி ' படத்திலும் கல்பனாவின் நடிப்பு பேசப்பட்டது.

அதற்கு பின், தமிழகத்தில் நடிகை கல்பனா பற்றிய பேச்சு இல்லை. அவரது இறப்பு செய்திதான் இப்போது எட்டியிருக்கிறது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக