வெள்ளி, 24 நவம்பர், 2017

புகைப்பட கலைஞர்கள் நேஷனல் செல்லையா நவம்பர் 25, 2016.



 புகைப்பட கலைஞர்கள் நேஷனல் செல்லையா நவம்பர் 25, 2016.

நேஷனல் செல்லையா (சூலை 31, 1936 - நவம்பர் 25, 2016) ஒரு பிரபல ஒளிப்படக் கலைஞர் ஆவார். தென்னிந்திய திரைப்பட புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் சிவகங்கை மாவட்டம் ,
காரைக்குடியில் பிறந்தவர். அவருக்கு இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் மாயழகன் எனும் மாயா பிரபல ஒளிப்பதிவாளர் ஆவார், இளைய மகன் அன்பழகன் தந்தையாரைப் பின் தொடர்ந்து புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார்.
ஒளிப்பட பணிகள்
துவக்கத்தில் அவர் பி.கே.நாகராஜன் எனும் ஒளிப்படக் கலைஞரிடம் உதவியாளராக இணைந்து “சோரி சோரி” எனும் இந்திப் படத்தில் நடிகர் ராஜ்கபூரை முதன் முதலில் படம் எடுக்கத் தொடங்கி ரஜினியின் பாட்ஷா வரை 400 படங்களுக்கு மேல் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார். பெரியார் ,
காமராஜர் , அண்ணாதுரை, கருணாநிதி ,
எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா என அனைத்து தலைவர்களையும் புகைப்படம் எடுத்தவர் மற்றும் சிவாஜி கணேசன் , ரஜினி , கமல் போன்ற நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் நீ நடந்தால் நடையழகு எனும் பாடலில் போக்குவரத்து காவலர் வேடத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். [1]
கலைமாமணி விருது
இவரின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக தமிழக அரசின் கலைமாமணி விருது 2007 ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.


ரஜினி, கமல் படங்களின் புகைப்படக் கலைஞர் நேஷனல் செல்லையா .

பிரபல சினிமா போட்டோகிராபர் கலைமாமணி நேஷனல் செல்லையா
எம் ஜி ஆர், சிவாஜி ஜெமினி, ஜெய்சங்கர், ரஜினி, கமல் முதல் இளைய தலைமுறை நடிகர்கள் வரை இவர் கேமராவில் சிக்காதவர்களே இல்லை.
சுமார் 1200 திரைப்படங்களில் பணியாற்றிய இவர் கடைசியாக பணியாற்றிய படம் 'பாட்ஷா'. அந்தப் படத்தில் ஒரு காட்சியிலும் (நீ நடந்தால் நடையழகு பாடலில், கான்ஸ்டபிள் வேடம்) நடிக்க வைத்திருந்தார் ரஜினி.
நேஷனல் செல்லையா காரைக்குடியைச் சேர்ந்தவர். 1950-ல் ஏவிஎம்மில் உதவி புகைப்படக் கலைஞராக பணியைத் தொடங்கினார். இவர் முதல் முறையாக நிழற்படக் கலைஞராகப் பணியாற்றிய படம் மிஸ்ஸியம்மா. தொடர்ந்து ஏவிஎம் படங்கள், எஸ் பி முத்துராமன், கே பாலச்சந்தர், ராம நாராயணன், விசு, துரை போன்றவர்களின் படங்களில் ஆஸ்தான ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றினார்.
குறிப்பாக பாட்ஷா வரை ரஜினியின் பல படங்களுக்கு இவர்தான் புகைப்படக் கலைஞர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக