திங்கள், 11 செப்டம்பர், 2017

நடிகர் வடிவேலு பிறந்த நாள்: அக்டோபர் 10, 1960.



நடிகர் வடிவேலு பிறந்த நாள்: அக்டோபர் 10, 1960.

வடிவேலு (பிறப்பு: அக்டோபர் 10, 1960) தமிழ்த் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1991இல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால்
வைகைப்புயல் என்னும் பட்டப்பெயருடன் பரவலாக அறியப்படுகிறார்.

விருதுகள்

இவர் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பிற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதினை ஐந்து முறை காலம் மாறிப்போச்சு (1996),
வெற்றிக் கொடி கட்டு (2000), தவசி (2001),
இம்சை அரசன் 23ம் புலிகேசி (2006),
காத்தவராயன் (2008) திரைப்படங்களுக்காகவும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை 2005-ம் ஆண்டில் வெளியான
சந்திரமுகி திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார். ‘ மருதமலை ’, ‘ ஆதவன் ’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருதினை’ வென்றுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவரது பெற்றோர் சரோஜினி அம்மாள் மற்றும் நடராசன் ஆவார்கள். இவருக்கு கன்னிகா பரமேஸ்வரி, கார்த்திகா,கலைவாணி ஆகியமகள்களும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர்.  திரைப்படங்களில் நடித்த பின்னர் பணம், புகழுடன் வசதியாக வாழ்ந்தாலும், தனது கடந்த காலத்தில் ஏழ்மையோடு போராடியதை மறக்காத வடிவேலு தனது மகன் சுப்பிரமணிக்கு சிவகங்கை, திருப்புவனத்தில் ஒரு கூரை வீட்டில் வசிக்கும் ஏழ்மையான பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றியுள்ளார். அந்த நாடகங்களில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார். அந்தத் தருணத்தில் நடிகர்
ராஜ்கிரண் ஒருமுறை அவருடைய ஊருக்குச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வடிவேலு, ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார். ராஜ்கிரண், தான் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை முதன்முதலாக திரையில் அறிமுகப்படுத்தினார். வடிவேலு வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.


திரை வாழ்க்கை

ராஜ்கிரனுடனான நட்பு
1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.
வடிவேலுவின் முதல் படமான என் ராசாவின் மனசிலே (1991) திரைப்படத்தில், இருந்து இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படத்திற்கு முன்னர் வரை, தமிழ்த் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான கவுண்டமணி - செந்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றார்.

ரசிகர்களின் வரவேற்பு
‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.

அசாத்திய வளர்ச்சி
ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘ வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரண்ட்ஸ் ’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.
அசாத்திய திறமை
கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மழையில் நனையவைத்தார். கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது.
காதலன்(1994) திரைப்படம் வெளியான பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் இவரும் ஒரு முக்கியமான நபராக வளர்ந்தார். இவர் நடித்த திரைப்படங்களில்
பாரதி கண்ணம்மா , வெற்றிக் கொடி கட்டு ,
வின்னர் , மருதமலை , மற்றும் சந்திரமுகி போன்றவை குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். இவர் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய திரைப்படமாக அமைந்தாலும் அதன் பின்னர் வெளியான
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் (2008) திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.
நகைச்சுவை பாணி
வடிவேலு இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளவர். இவரது நகைச்சுவை காட்சிகளில் பெரும்பாலும் வீண்வம்பு இழுத்து அடிவாங்குபவராகவும், யாரேனும் தவறு செய்பவர்களை தட்டிக்கேட்டு அதன்மூலமாக அடிவாங்குபவராகவும், கைதேர்ந்த திருடனாகவும், மக்களின் அறியாமை மற்றும் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றுபவராகவும் தோன்றுவார்.
நகைச்சுவை வசனங்கள்
திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகர்கள்தான் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்சுவையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும். இவரது நகைச்சுவை வசனங்களான "ஆகா ஒரு குரூப்பாத்தான் அலையிராங்கய்யா", "வந்ததுட்டான்யா வந்ததுட்டான்யா " மற்றும்
சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற "மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு" போன்றவை மிகவும் பிரபலமானவை. இத்தகைய வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இவ்வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் பலராலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சில வசனங்கள்
கீழ்க்காண்பவை இவரது புகழ்பெற்ற நகைச்சுவை வசனங்களில் சில மற்றும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும்.
வசனங்கள் இடம்பெற்ற திரைப்படம்
‘இப்பவே கண்ண கட்டுதே’ ஏய்
‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’
வின்னர்
‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’ வின்னர்
‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’
வின்னர்
போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது
வின்னர்
‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு சந்திரமுகி
‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’
சீனாதானா 007
‘போவோம்! என்ன பண்ணிடுவாங்க' ஏய்
‘நான் அப்படியே சாக் ஆயிட்டேன் கிரி
‘க க க போ…’
இம்சை அரசன் 23ம் புலிகேசி
‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’ கிரி
‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மட்டம் வீக்கு’ தலைநகரம்
‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’
வின்னர்
‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி'
மருதமலை
‘ஒரு புறாவுக்கு போரா! பெரிய அக்கபோராகவா இருக்கு’
இம்சை அரசன் 23ம் புலிகேசி
‘சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு’ வின்னர்
‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’
போக்கிரி
‘வட போச்சே’ போக்கிரி
‘தம்பி டீ இன்னும் வரல’ போக்கிரி
'அந்த குரங்கு பொம்ம என்ன விலை' போக்கிரி
‘ஆணியே புடுங்க வேண்டாம்’ பிரண்ட்ஸ்
‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’
தலைநகரம்
பேச்சு பேச்சாதான் இருக்கணும்' வின்னர்
‘ரைட்டு விடு' வின்னர்
‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்'
வின்னர்
'வழிய விடுங்கடி பீத்த சிரிக்கியலா' திமிரு
‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா’, ‘ரொம்ப நல்லவன்டா’'
கிரி
உடல் அசைவு
நகைச்சுவை வசனங்கள் மட்டுமின்றி அந்த வசனங்களின் உச்சரிப்பு மற்றும் அவரது உடல் மொழி போன்றவை அவரை மற்ற நகைச்சுவை நடிகர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது. இத்தகைய நடிப்புத் திறமையால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். இவர் இதுவரை 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [4][5] . அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு.
இயல்பான நடிப்பு
இயல்பான நடிப்பினால் பலதரப்பட்ட மக்களும் விரும்பக்கூடிய நடிகரானார். என். எஸ் கிருஷ்ணன் , சந்திரபாபு , சுருளிராஜன் ,
டி. எஸ். பாலையா, வி. கே. ராமசாமி ,
நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி,
செந்தில் , விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.
கதாநாயகனாக
1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்றுப் பின்னணியை கதையாகக் கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.
நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்
பின்வருவன வடிவேலு நடித்துள்ள சில திரைப்படங்கள்:

ஆண்டு திரைப்படம் கதாபாத்
1990 என் தங்கை கல்யாணி
1991 என் ராசாவின் மனசிலே வடிவேலு
1992
சின்ன கவுண்டர்
இளவரசன்
சிங்கார வேலன் சபா
தெய்வ வாக்கு கருவாடு
தேவர் மகன் இசக்கி
1993
கோயில் காளை வடிவேலு
ஏழை சாதி
மகராசன்
எங்க தம்பி
அரண்மனைக் கிளி
பொன்னுமணி
கோகுலம் ராஜு
மறவன்
வள்ளி
கிழக்குச் சீமையிலே
காத்திருக்க நேரமில்லை
ரோஜாவைக் கிள்ளாதே
1994
ராஜகுமாரன் 'வீச்சருவா' வீராசாமி
சிந்துநதிப் பூ
அதர்மம்
வரவு எட்டணா செலவு பத்தணா பீட்டர்
செவத்த பொண்ணு
வாட்ச்மேன் வடிவேலு
கில்லாடி மாப்பிள்ளை
ராஜபாண்டி
காதலன் வசந்த் (கலியப்பெ
இளைஞர் அணி
மணிரத்னம்
பவித்ரா
கருத்தம்மா
பாண்டியனின் ராஜ்யத்தில்
அத்தமக ரத்தினமே
1995
நான் பெத்த மகனே
கிழக்கு மாலை
முத்துகாளை பூச்சி
சின்னமணி
ஆணழகன் மருதமலை
உதவும் கரங்கள்
எல்லாமே என் ராசாதான் வடிவேலு
என் பொண்டாட்டி நல்லவ
பசும்பொன் சோலை
நந்தவன தேரு தீக்குச்சி
செல்லக்கண்ணு
சந்தைக்கு வந்த கிளி
ராஜாவின் பார்வையிலே அறிவழகன்
ராசய்யா கிளி
ஆசை
தாய்க்குலமே தாய்க்குலமே தமிழ்பித்த
சந்திரலேகா சுந்தரம்
முத்து வளையாப
நீலக்குயில்
1996
லவ் பேர்ட்ஸ் ராஜா
வசந்த வாசல்
காலம் மாறிப்போச்சு சேகர்
செங்கோட்டை
மைனர் மாப்பிள்ளை 'குப்பைத்த கோவிந்தச
சுந்தரபுருசன்
தமிழ் செல்வன்
பிரியம்
காதல்தேசம் வில்சன்
நம்ம ஊரு ராசா
சுபாஷ்
மிஸ்டர் ரோமியோ வௌவால்
பாஞ்சாலங்குறிச்சி முருகன்
1997
சக்தி
பாரதி கண்ணம்மா ஈனமுத்து
மாப்பிள்ளைக் கவுண்டர்
விவசாயி மகன் தர்மன்
தினமும் என்னை கவனி
மை இந்தியா
ராசி
கங்கா கௌரி விச்சு
பொங்கலோ பொங்கல் வெள்ளைச்
பாசமுள்ள பாண்டியரே
காதலி
அடிமை சங்கிலி
அட்ராசக்கை அட்ராசக்கை
பெரிய மனுசன் செல்லப்பா
பொற்காலம்
ரட்சகன்
தடயம் நீதி
1998
சுந்தர பாண்டியன் பாவாடை
வேலை
காதலா காதலா 'செக்யூரி சிங்காரம்
பொன்னு விளையிற பூமி
ஜாலி
ரத்னா 'கதை' கந்தச
இனியவளே முருகன்
சந்திப்போமா
பூந்தோட்டம்
எல்லாமே என் பொண்டாட்டிதான்
புதுமைப்பித்தன் 'சூப்பர்' சு
பொன்மானைத் தேடி
கண்ணாத்தாள்
சு. பா. (சுப்பைய பாண்டியன்
தலைமுறை
சேரன் சோழன் பாண்டியன் பாண்டியன்
சிவப்பு நிலா
1999
ஹவுஸ்புல்
தொடரும் 'பியூன்' ம
மாயா
என் சுவாசக் காற்றே
மோனிசா என் மோனலிசா
நிலவே முகம் காட்டு
ராஜஸ்தான்
கும்மிப்பாட்டு
ஆனந்த பூங்காற்றே
ஒருவன்
சங்கமம்
விரலுக்கேத்த வீக்கம் கபாலி
பூவெல்லாம் கேட்டுப்பார்
மனைவிக்கு மரியாதை
நேசம் புதுசு வேலு
பொம்பளைங்க சமாச்சாரம்
சூர்யோதயம்
கண்மணி உனக்காக
முதல்வன் பாலவேசம்
இரணியன் சின்னசாம
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
திருப்பதி
உன்னருகே நான் இருந்தால்
பாட்டாளி வடிவேலு (வடிவுக்கர
2000
காக்கைச் சிறகினிலே
ராஜ காளியம்மன் கோபால்
வல்லரசு
கந்தா கடம்பா கதிர்வேலா வடிவேலன்
மகளிர்க்காக பூபதி
என்னம்மா கண்ணு
டெலக்ஸ் பாண்டியன் 'செட்டப்' செ
வெற்றிக் கொடி கட்டு சுடலை
கூடி வாழ்ந்தால் கோடிநன்மை
'பாக்சர்' கிருஷ்ண
மாயி மொக்கைச்
சின்ன சின்னக் கண்ணிலே வேலன்
கண்ணுக்கு கண்ணாக வேலு
வண்ணத் தமிழ்ப்பாட்டு வேலு
மனுநீதி செவளை
நீ எந்தன் வானம் ஓட்டை உடச
2001
பிரண்ட்ஸ் நேசமணி
லூட்டி வெள்ளைய
நாகேஷ்வரி
எங்களுக்கும் காலம் வரும் வெள்ளைய
பிரியாத வரம் வேண்டும்
என் புருசன் குழந்தை மாதிரி அங்குசாம
ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி மைனர் பா
அசத்தல் வேணுக
மிடில் கிளாஸ் மாதவன் குழந்தைவ
சொன்னால்தான் காதலா
தோஸ்த்
நரசிம்மா லாலா
நினைக்காத நாளில்லை அ. உ. டவு
மாயன்
மிட்டாமிராசு ரங்கசாமி
லவ் மேரேஜ்
மனதைத் திருடி விட்டாய்
ஸ்டீவ் வாக் வாக் மற்று அவர்களின் பெற்றோர்க
தவசி
வடுகபட்டி மாப்பிள்ளை
2002
ஷக்கலக்கபேபி
கவுண்டர் வீட்டு மாப்பிள்ளை 'வெட்டி' வ
காமராசு வேலு
ஸ்ரீ பண்ணாரி அம்மன்
ராஜ்ஜியம் செங்கல்
தமிழ் மூர்த்தி
இதயமே குருசாமி
ராஜா சப்பை
குருவம்மா
ஸ்ரீ மாறுவேச மாரிமுத்த
கார்மேகம் கஞ்சா
சூப்பர் ஆன்டி
இவன்
நைனா ஆவுடைய
சுந்தரா டிராவல்ஸ் அழகப்பன் (அ அழகா)
கிங்
என் மன வானில்
நம்ம வீட்டு கல்யாணம்
பகவதி வடிவேலு வைஃபரேச
ஸ்டைல்
2003
வசீகரா கட்டபொம்ம
அன்பு சுப்பையா
இளசு புதுசு ரவுசு
அரசு பிச்சுமணி
புன்னகை பூவே ஆறுமுகம்
இனிது இனிது காதல் இனிது கருப்பு
ஈரநிலம் சோனை
திவான் வேலு
ஆளுக்கொரு ஆசை பழனி
வின்னர் கைப்புள்ள
ஒற்றன் மாடசாமி
காதல் கிறுக்கன் கல்யாண ச
தத்தித் தாவுது மனசு வைகைவ
2004
எங்கள் அண்ணா மயில்சாமி
கோவில் 'புல்லட்' பா
கம்பீரம் பி. சி. ஊமைத்துர
காதல் டாட் காம்
நீ மட்டும் யோகராசு
அருள் தங்கம்
ஜோர் திருப்பதி
மானஸ்தன் பச்சைக்கி
சவுண்ட் பார்ட்டி
ஒரு முறை சொல்லிவிடு அரிசந்திர
மதுர பாண்டு
கிரி வீரபாகு
காதலே ஜெயம் பச்சைக்கா
சத்திரபதி
ஏய் பழனி
ஜனனம்
ஜெய்சூர்யா சூசை
2005
ஆயுதம் தங்கபாண்ட
ஐயா காரசிங்கம்
மண்ணின் மைந்தன் 'வாட்டர்' வட
லண்டன் வெடிமுத்
சந்திரமுகி முருகேச
சச்சின் அய்யா சாம
கற்க கசடற ஒண்டிப்பு
6'2 மிஸ்டர். ஒய
இங்கிலீஷ்காரன் 'தீப்பொறி' திருமுகம்
காற்றுள்ள வரை 'வாட்ச்மேன் வெங்கடே
பிப்ரவரி 14
தாஸ்
ஏபிசிடி.
அந்த நாள் ஞாபகம்
சாணக்கியா சுப்ரமணி
மழை
குண்டக்க மண்டக்க செல்லப்பா
மஜா புலிப்பா
பம்பரக்கண்ணாலே கடலைமுத்
ஆணை
ஆறு சுண்டி ம (சுமோ)
வெற்றிவேல் சக்திவேல் தண்டபாண
வீரண்ணா பழனிச்சாம
2006
பாசக் கிளிகள் காத்தவரா
தம்பி
கோவை பிரதர்ஸ் ஏகாதசி
தலைநகரம் 'நாய்' சேகர்
குஸ்தி ஆண்டிப்பட்ட வேலு
இம்சை அரசன் 23ம் புலிகேசி
புலிகேசி உக்கிர புத்
திமிரு 'வார்டன்' வ
குருச்சேத்திரம் நொண்டி ப
எம் மகன் கருப்பட்டி
சில்லுனு ஒரு காதல் வெள்ளைச்
தலைநகரம் எரிமலை
வாத்தியார் அய்யனார்
இரண்டு கிரிகாலன்
நெஞ்சில் ஜில் ஜில் வெள்ளம் (த ஆங்கிலேய
2007
போக்கிரி
'குங் பூ' வாத்தியா சோடா (சங் மங்கி மற்ற சங்கி)
முருகா 'கொரியர்'
மணிகண்டா மதயானை
கருப்பசாமி குத்தகைதாரர்
'படித்துற பாண்டி
வியாபாரி 'திகில்' பா
மாமதுரை தங்கவேலு
தொட்டால் பூ மலரும்
கபாலீசுவர (கபாலி கா
ஆர்யா 'சினேக்' ப
சீனா தானா 001 சீனிச்சாமி
பிறந்த நாள்
மருதமலை 'என்கவுண் ஏகாம்பரம்
18 வயசுப் புயலே
பிறகு சமரசம்
தவம் கீரிப்புள்ள
வேல் குழந்தைச (குரங்குச
2008
இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
இந்திரன் / எமதர்மராஜ அழகப்பன்
தீக்குச்சி குறவன்
கண்ணும் கண்ணும் உடும்பன்
காத்தவராயன் 'கந்துவட்டி' கருப்பு
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
'மணியாட்ட சாமியார்' சொரிமுத் அய்யனார்
குசேலன் 'சலூன் கட சண்முகம்
கி. மு மாடசாமி
பச்சை நிறமே
சேவல் 'தபால்' தங்க
எல்லாம் அவன் செயல் வண்டு முர
2009
வில்லு மாடசாமி
லாடம் அவராகவே
வெடிகுண்டு முருகேசன் 'அலார்ட்' ஆ
அழகர் மலை காத்தமுத்த
கந்தசாமி 'தேங்காய்க தேனப்பன்
பேராண்மை சூசை
ஜெகன்மோகினி ஜெகன்மோ
ஆதவன் பானர்ஜி (ப குப்பன்)
2010
கச்சேரி ஆரம்பம் தீபாவளி
சுறா அம்பர்லா
தில்லாலங்கடி ஜாக்சன்
நகரம் 'ஸ்டைல்' பா
2011
இளைஞன் ஐசக்
காவலன் அமாவாச
தூங்கா நகரம் அவராகவே
மம்பட்டியான் 'சில்க்' சிங்
2012 மறுபடியும் ஒரு காதல்
மருத்துவர் சிங்காரம்
2014 தெனாலிராமன்
தெனாலிர (சாதாரண மனிதன்)/
மாமன்னர் ( நகரத்தின் ம
மற்ற மொழித் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் ம
2011 லக்கி சோக்கர்ஸ் மல
வரவிருக்கும் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
எலி அறி
பாடிய பாடல்கள்
வடிவேலு நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். இது இவர் இதுவரை பாடியுள்ள பாடல்களின் தொகுப்பாகும்.
எண் பாடல் திரைப்படம் இ
1 போடா போடா புண்ணாக்கு
என் ராசாவின் மனசிலே இ
2 எட்டனா இருந்தா
எல்லாமே என் ராசாதான் இ
3 அம்மணிக்கி அடங்கி
ராஜாவின் பார்வையிலே இ
4 பாலு பாலு நேபாலு
தாய்க்குலமே தாய்க்குலமே த
5
வாடி பொட்டபுள்ள வெளியே
காலம் மாறிப் போச்சு த
6 யானை யானை சக்தி
7 ரயிலு ரயிலு பாரதி கண்ணம்மா த
8 லக் லக் தடயம் த
9
பொன்னுமணி பொன்னுமணி போராளே
பூந்தோட்டம் இ
10 அல்வா குடுக்கிறான்
மனைவிக்கு மரியாதை ச
11 ஒத்திக்கடா மச்சான் நேசம் புதுசு ப
12 சந்தன மல்லிகையில் ராஜகாளியம்மன் எ
13 தெக்கத்தி மாப்பிள்ளை மகளிர்க்காக இ
14 மதுரக்கார விவேக் லூட்டி த
15 நாலு அடி யாரு
என் புருசன் குழந்தை மாதிரி

16 மதனா மதிவதனா மாயன் த
17 விக்கலு பகவதி த
18 உன்னை நான் காதல் கிறுக்கன் த
19 காதல் பண்ண கோவில்
20 ஓரொன்னு ஒன்னு ஏய்
21 கட்டுனா அவள கட்டுவன்டா ஜெயசூர்யா த
22 அலாவுதீன் அலாமா சாணக்கியா
23
வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டாய்யா
குண்டக்க மண்டக்க ப
24 ஃப்ரீயாவிடு ஃப்ரீயாவிடு ஆறு த
25 பம்பர் குலுக்கல் பிறந்த நாள் த
26 ஆயிரம் சன்னல் வீடு வேல் ய
27 வந்தனம் வந்தனம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் ச
28 மல்லிகா செராவத்
29 தாயாரம்மா சேவல் ஜ க
30 வாடா மாப்புள வில்லு த
31 ரம்பப்பா ரம்பப்பா தெனாலிராமன் ட
அரசியல்
சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.
மீண்டும் திரைப்படங்களில்
வடிவேலு திரையுலகை விட்டு இரண்டு ஆண்டு காலம் விலகி இருந்தார்.
தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.


தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். ‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘போக்கிரி’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’, ‘வைபரேஷன் வடிவேலு’, ‘செட்டப் செல்லப்பா’, ‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘கந்துவட்டி கருப்பு’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’, ‘ஸ்டையில் பாண்டி’ போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம், எத்தனையோ படங்களில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர். தமது நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். ஒரு சில படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவர் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைகைப்புயல் வடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: அக்டோபர் 10, 1960
பிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
வைகைப் புயல் வடிவேலு அவர்கள், 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில், தந்தையார் நடராச பிள்ளைக்கும், தாயார் வைத்தீஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. ஆனால், நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன நாடகங்களை அவ்வப்பொழுது மேடையில் அரங்கேற்றுவது வழக்கம். அத்தகைய நாடகக் கதைகளிலும் சரி, மேடையிலும் சரி இவர்தான் நகைச்சுவை கதாநாயகன். ஒரு காலகட்டத்தில் இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. அந்த தருணத்தில் ராஜ்கிரண் அவர்கள், ஒருமுறை அவருடைய ஊருக்கு சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வைகைப் புயல் அவர்கள், ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார்.
தமிழ் சினிமாவில் வைகைப் புயலின் ஆரம்பம்
1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.
வெற்றிப் பயணம்
‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.
ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.
கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மலையில் நனையவைத்தார்.
கதாநாயகனாக
1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.
வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை பற்றி
கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது. குறிப்பாக கதாநாயகர்கள் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்வையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும்.
அவர் நடித்த சில திரைப்படங்கள்
‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்னகவுண்டர்’, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம்’, ‘காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘பவித்ரா’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘பசும்பொன்’, ‘செல்லக்கண்ணு’, ‘சின்னமணி’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப்புருஷன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘அட்ராசக்க அட்ராசக்க’, ‘மாயா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘ரட்சகன்’, ‘இனியவளே’, ‘ஜாலி’, ‘காதலா காதலா’, ‘நிலவே முகம் காட்டு’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘மனைவிக்கு மரியாதை’, ‘வல்லரசு’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, ‘மகளிருக்காக’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பிரண்ட்ஸ்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘மாயி’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘லூட்டி’, ‘தவசி’, ‘காமராசு’, ‘அரசு’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘பகவதி’, ‘நைனா’, ‘வசீகரா’, ‘வின்னர்’, ‘ஏய்’, ‘கிரி’, ‘தாஸ்’, ‘குண்டக்க மண்டக்க’, ‘சந்திரமுகி’, ‘சச்சின்’, ‘சாணக்கியா’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘லண்டன்’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘திமிரு’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘தலை நகரம்’, ‘ரெண்டு’, ‘ஆர்யா’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘சீனா தானா 001’, ‘மருதமலை’, ‘போக்கிரி’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘குசேலன்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வில்லு’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘அழகர் மழை’, ‘ஆதவன்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தில்லாலங்கடி’, ‘நகரம்’, ‘காவலன்’, ‘மம்முட்டியன்’, ‘மறுபடியும் ஒரு காதல்’.
அவர் பாடிய சில பாடல்கள்
‘எட்டணா இருந்தா’ (எல்லாமே என் ராசாதான்), ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ (வெற்றி கொடுக் கட்டு), ‘ஊனம் ஊனம்’ (பொற்காலம்), ‘போடா போடா புண்ணாக்கு’ (என் ராசாவின் மனசிலே), ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ (காலம் மாறிபோச்சு), ‘ஆடிவா பாடி வா’ (இம்சை அரசன் 23ஆம் புலிகேசி), ‘கட்டுனா அவளை கட்டுனும்டா’ (ஜெயசூர்யா), ‘விக்கலு விக்கலு’ (பகவதி), ‘ஏக் தோ தீனுடா’ (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை), ‘மதுரக்கார விவேக்கு’ (லூட்டி), ‘நாலு அடி ஆறு’ (என் புருஷன் குழந்தை மாதிரி).
விருதுகள்:
‘காலம் மாறிப்போச்சு’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தவசி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘காத்தவராயன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.
‘சந்திரமுகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்பேர்’ விருது.
‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.
அரசியல்
சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.
மீண்டும் சினிமாவில்
அவர் திரையுலகை விட்டு நீங்கி இருந்த இரண்டு ஆண்டு காலம், தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். வைகைப்புயல் வடிவேலு அவர்கள், மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் நகைச்சுவை வசனங்கள்
‘ஐயா! நா ஒரு காமெடி பீசுங்க’, ‘இப்பவே கண்ண கட்டுதே’, ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’, ‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’, ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’, ‘இது தெரியாம போச்சே’, ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு’, ‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’, ‘போவோம்! என்ன பண்ணிடுவாங்க’, ‘முடியல’, ‘என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலையே?’, ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!’, ‘ஆஹா ஒரு குருப்பா தான்யா அலையறாங்க’, ‘க க க போ…’, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’, ‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, ‘என்னா வில்லத்தனம்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கா பேஷ்மட்டம் வீக்கு’, ‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’, ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’, ‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’, ‘ஒரு சிறிய புறாவுக்கு போறா! பெரிய அக்கபோராகவா இருக்கு’, ‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’, ‘சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு’, ‘வட போச்சே’, ‘தம்பி டீ இன்னும் வரல’, ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே’, ‘அவ்வ்வ்வ்வ்’, ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா’, ‘ரொம்ப நல்லவன்டா’, ‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்’, ‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’, ‘ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க’, ‘ஒரு ஆணையும் புடுங்க வேணாம்’, ‘ரைட்டு விடு’, ‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’, எனப் பல நகைச்சுவை வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.
என்.எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன், டி.எஸ் பாலையா, வி. கே. ராமசாமி, நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.




சிறந்த காமெடி காம்போ இவர்கள்தான்.... 'மெர்சல்' படத்தில் விஜய்க்கு அப்பாவாக வடிவேலு?

சென்னை : அட்லீ இயக்கத்தில் 'விஜய்' இயக்கும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நடிகர், நடிகைகள், திரைப் பிரபலங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த 2011 தேர்தல் பிரசாரத்தால் சினிமாவில் சரியாக வாய்ப்புக் கிடைக்காத வடிவேலு இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்த விழாவில் வடிவேலு பெயரைச் சொன்னதும் ரசிகர்கள் பலத்த கைதட்டலோடு தங்கள் எதிர்பார்ப்பைத் தெரிவித்தனர்.

விஜய்க்கு அப்பாவா நடிக்கிறாரா..? :
'மெர்சல்' படத்தில் நடிகர் வடிவேலு விஜய்க்கு அப்பாவாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. வெளியான படத்தின் ஸ்டில் ஒன்றில் விஜய், வடிவேலுவையும், கோவை சரளாவையும் தோள் மேல் கை போட்டுக் கூட்டிவருவதாக இருக்கிறது. அந்தப் படத்தைப் பார்த்தால் வடிவேலு விஜய்யின் தந்தையாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.
இயக்குநர் அட்லீ பேசும்போது, 'வடிவேலு இந்தப் படத்தில் காமிக், எமோஷனல் கேரக்டரில் நடித்திருக்கிறார். மறைந்த நடிகர் மணிவண்ணனைப் போலான ரோலில் சிறப்பாகச் செய்திருக்கிறார்' எனக் கூறினார். வடிவேலுவின் பெயரைக் கேட்டதும் ரசிகர்கள் விசிலடித்து தங்கள் எதிர்பார்ப்பைத் தெரிவித்தனர்.
மிஸ் யூ வடிவேலு :
வடிவேலு, படங்களில் நடிப்பது குறைந்தபிறகுதான் மீம்ஸ் கலாச்சாரம் வெகுவாகப் பிரபலமானது. அவர் பேசிய வசனங்கள், அவரது ரியாக்ஷன்கள் என எல்லாம்தான் மீம் க்ரியேட்டர்களுக்கு பேஸிக் மெட்டீரியல். வடிவேலுதான் மீம்ஸ் உலகின் அரசன். எனவே, இளைய தலைமுறையினர் அவரை ரொம்பவே மிஸ் செய்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பதன் மூலம் அவர் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், விஜய் - வடிவேலு காமெடி காம்போ அசாத்திய ஹிட் அடித்தது அனைவருக்கும் தெரிந்ததே!


விஜய் - வடிவேலு கூட்டணி :
'ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய்யும் வடிவேலுவும் முதன்முதலில் இணைந்து நடித்தனர். அதற்குப் பிறகு பல படங்களில் இருவர் சேர்ந்து செய்த நிறைய காமெடிகள் அதகளம். வடிவேலுவின் பாடி லாங்குவேஜ், விஜய்யின் கவுன்டர்கள் இணைந்தால் அந்தப்படம் அல்டிமேட் சிரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும்.
சல்லிசல்லியா நொறுக்குன காமெடி :
'ப்ரெண்ட்ஸ்' படத்தின் வடிவேலு, விஜய் காமெடி காலம் கடந்தும் சிரிக்க வைக்கும். கான்ட்ராக்டர் நேசமணியாகிய வடிவேலுவை விஜய், சூர்யா, ரமேஷ்கண்ணா ஆகியோர் சேர்ந்து படுத்தும் பாடு ரணகள ரவுசு. இருவரும் இணைந்து நடித்த படங்களில் இதுதான் காமெடியின் உச்சம். 'என்ன பீலிங்கா... எனக்குத்தான்டா பீலிங்கு...' எனச் சொல்லும் வசனம் உட்பட அந்தப் படத்தின் பல காமெடி வசனங்கள் இன்றும் பலருக்கு மோஸ்ட் ஃபேவரிட்.
சின்ன பகவதி :
'பகவதி' படத்தில் விஜய்யின் சிறிய ஓட்டலில் வேலை செய்யும் டீ மாஸ்டராக நடித்திருப்பார் வடிவேலு. அவருக்கு அந்தப் படத்தில் இன்னொரு 'வைப்ரேஷன்' கேரக்டரும் உண்டு. விஜய்யிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகள், பெஞ்சமினிடம் கோர்த்துவிட்டு மல்லுக்கட்டவிடும் காட்சிகள் என எல்லாமே குபீர் சிரிப்புக்கு கியாரண்டி.
அய்யாச்சாமி
'சச்சின்' படத்தில் பல வருடங்களாக கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவராக வருவார் வடிவேலு. படம் முழுக்க ஸ்டைலாக 'ஹே... ஷாலும்மா...' என்றபடி நடந்துகொண்டே திரியும் அவரது பாடி லாங்குவேஜ் அசத்தல். விஜய்யும் அவரும் சந்திக்கும் இடங்களில் எல்லாம் இருவரும் காமெடி ரேஸ் ஆடியிருப்பார்கள்.
பாடி சோடா :
'போக்கிரி' படத்தில் தற்காப்புக்கலை மாஸ்டராக வருவார் வடிவேலு. விஜய், போலீஸ்காரர் என எல்லோரிடமும் மாட்டிக்கொண்டு அவர் படும் பாடு, அவரிடம் மாட்டிக்கொண்டு அவர்கள் படும் பாடு என சிரிப்பு மத்தாப்பு வெடிக்கும். 'சுட்டும் விழிச் சுடரே...' என அசினுடன் அவர் ஆடிய டூயட் மெர்சலுக்கெல்லாம் மெர்சல்.
பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு :
'காவலன்' படத்தில் அமாவாஸையாக நடித்த வடிவேலு செய்யும் அட்டகாசங்கள் காமெடி அட்ராசிட்டி. லேடீஸ் ஹாஸ்டலில் மாட்டிக்கொண்டு முரட்டு அடி வாங்குவது, விஜய்யிடம் அயர்ன் பாக்ஸில் சூடு வாங்குவது என செமையாக ஸ்கோர் செய்வார். 'கண்ணதாசா... யேசுதாஸா... பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு...' என கலகலக்க வைத்த காமெடி ஜோடி அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக