புதன், 27 செப்டம்பர், 2017

நடிகர் நாகேஷ் பிறந்த நாள் செப்டம்பர் 27 , 1933


நடிகர் நாகேஷ் பிறந்த நாள் செப்டம்பர் 27 , 1933

நாகேஷ் ( செப்டம்பர் 27 , 1933 - ஜனவரி 31 ,2009 ) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு , தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார் .
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை
பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தான் அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார். புதுவசந்தம் , சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த
ஆனந்த்பாபு இவர்தம் மகனாவர்.


நாகேஷ் நடித்த திரைப்படங்கள்...

நாகேஷ் , ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். குறிப்பாக, தனது முகபாவங்கள், நடன அசைவுகள், தருணத்திற்கேற்ப பேசும் வார்த்தைகள் கொண்டு அமைத்த நகைச்சுவைக் காட்சிகள் அந்நாளைய திரைப்படங்களில் புகழ்பெற்றது. நாகேஷ் நகைச்சுவைக் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாகவும், வில்லனாகவும் பல்வேறு வேடங்களில் 200 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சர்வர் சுந்தரம் , எதிர் நீச்சல் முதலிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் இவர் கதை சொல்லும் காட்சியும் மிகவும் பிரசித்தி பெற்றது. நாகேஷ் மகளிர் மட்டும் என்னும் படத்தில் உயிரற்ற சடலமாக நடித்துள்ளார்.
நாகேஷ் நடித்த தமிழ் திரைப்படங்கள் வரிசை பின்வருமாறு: ( இது முழுமையான பட்டியல் அல்ல. )
வருடம் திரைப்படம் கதாபா
1958 மனமுள்ள மறுதாரம்
1961 கொங்கு நாட்டு தங்கம்
1961 மல்லியம் மங்களம்
1961 பனித்திரை
1961 தாயில்லா பிள்ளை
1962 அழகு நிலா
1962 மாடப்புறா
1962 செங்கமலத் தீவு
1962 நெஞ்சில் ஓர் ஆலயம் வார்டுபா
1963 அன்னை இல்லம்
1963 ரத்த திலகம்
1963 ஏழை பங்காளன்
1963 இதயத்தில் நீ
1963 பெரிய இடத்துப் பெண்
1963 வானம்பாடி
1964 பச்சை விளக்கு
1964 சர்வர் சுந்தரம் சுந்தரம்
1964 நவராத்திரி பூசாரி
1964 காதலிக்க நேரமில்லை செல்லப்பா
1964 ஆயிரம் ரூபாய்
1964 தேவதை
1964 தெய்வத் திருமகள்
1964 நல்வரவு
1964 படகோட்டி
1964 வேட்டைக்காரன்
1965 குழந்தையும் தெய்வமும்
1965 எங்க வீட்டுப் பிள்ளை
1965 நீர்க்குமிழி
1965 திருவிளையாடல் தருமி
1965 ஆயிரத்தில் ஒருவன்
1965 அன்புக்கரங்கள்
1965 என்னதான் முடிவு
1965 என்னைப் போல் ஒருவன்
1965 இதய கமலம்
1965 இரவும் பகலும்
1965 கலங்கரை விளக்கம்
1965 நீ
1965 பஞ்சவர்ணக்கிளி
1965 பூஜைக்கு வந்த மலர்
1965 உன்னைப்போல் ஒருவன்
1966 நாடோடி
1966 மோட்டார் சுந்தரம் பிள்ளை சாம்பு
1966 அன்பே வா ராமையா
1966 சித்தி கைம்பெ மகன்
1966 சரஸ்வதி சபதம்
1966 மேஜர் சந்திரகாந்த் மோகன்
1966 யாருக்காக அழுதான் ஜோசப்
1966 சின்னஞ்சிறு உலகம்
1966 காதல் படுத்தும் பாடு
1966 கொடிமலர்
1966 குமரிப் பெண்
1966 மெட்ராஸ் டு பாண்டிச்சேரி
1966 சாது மிரண்டால்
1966 தாலி பாக்கியம்
1966 தனிப் பிறவி
1967 ஆலயம்
1967 அனுபவி ராஜா அனுபவி
1967 அதே கண்கள்
1967 பாமா விஜயம்
மருந்து விற்பனை பிரதிநித கிருஷ்ண
1967 பவானி
1967 எங்களுக்கும் காலம் வரும்
1967 இரு மலர்கள்
1967 பட்டணத்தில் பூதம் சீனு
1967 காதலித்தால் போதுமா
1967 கண் கண்ட தெய்வம்
1967 காவல்காரன்
1967 மகராசி
1967 முகூர்த்த நாள்
1967 நான் துப்பறிய நிபுணர்
1967 நான் யார் தெரியுமா
1967 பெண் என்றால் பெண்
1967 சபாஷ் தம்பி
1967 சுந்தரமூர்த்தி நாயனார்
1967 வாலிப விருந்து
1968 அன்பு வழி
1968 தெய்வீக உறவு
1968 எதிர் நீச்சல் மாடிப்படி
1968 எங்க ஊர் ராஜா
1968 கலாட்டா கல்யாணம்
1968 ஜீவனாம்சம்
1968 மூன்றெழுத்து
1968 முத்துச் சிப்பி ஓட்டல் மே சத்யம்
1968 நீலகிரி எக்ஸ்பிரஸ்
1968 நிமிர்ந்து நில்
1968 பணக்கார பிள்ளை
1968 பணமா பாசமா
1968 சோப்பு சீப்பு கண்ணாடி
1968 தில்லானா மோகனாம்பாள் வைத்தி
1968 உயிரா மானமா
1968 ரகசிய போலீஸ் 115
1968 தாமரை நெஞ்சம்
1969 அஞ்சல் பெட்டி 520
1969 அன்னையும் பிதாவும்
1969 அத்தை மகள்
1969 ஆயிரம் பொய்
1969 செல்லப் பெண்
1969 கண்ணே பாப்பா
1969 நில் கவனி காதலி
1969 ஓடும் நதி
1969 சாந்தி நிலையம்
1969 துணைவன்
1969 உலகம் இவ்வளவு தான்
1969 அடிமைப்பெண்
1969 பூவா தலையா
குதிரை வண்டிக்க நாகேஷ்
1970 வியட்நாம் வீடு
1970 எங்க மாமா
1970 என் மகன்
1970 காலம் வெல்லும்
1970 கல்யாண ஊர்வலம்
1970 கண்ணன் வருவான்
1970 கஸ்தூரி திலகம்
1970 நம்ம வீட்டு தெய்வம்
1970 நவக்கிரகம்
1970 நிலவே நீ சாட்சி
1970 பத்தாம் பசலி
1970 சங்கமம்
1970 வீட்டுக்கு வீடு
1971 இருளும் ஒளியும்
1971 கெட்டிக்காரன்
1971 பாட்டொன்று கேட்டேன்
1971 புதிய வாழ்க்கை
1971 சுடரும் சூறாவளியும்
1971 சூதாட்டம்
1971 தங்க கோபுரம்
1971 தேன் கிண்ணம்
1971 உத்தரவின்றி உள்ளே வா
1971 வீட்டுக்கொரு பிள்ளை
1971 நூற்றுக்கு நூறு
1971 நான்கு சுவர்கள் சிங்காரம்
1972 வசந்த மாளிகை
1972 அன்னை அபிராமி
1972 அப்பா டாட்டா
1972 ஆசீர்வாதம்
1972 அவசர கல்யாணம்
1972 பதிலுக்கு பதில்
1972 தெய்வ சங்கல்பம்
1972 தெய்வம்
1972 டெல்லி டு மெட்ராஸ்
1972 கங்கா
1972 ஹலோ பார்ட்னர்
1972 கண்ணா நலமா
1972 கண்ணம்மா
1972 காதலிக்க வாங்க
1972 மாப்பிள்ளை அழைப்பு
1972 ராணி யார் குழந்தை
1972 வரவேற்பு
1973 பாக்தாத் பேரழகி
1973 தெய்வாம்சம்
1973 எங்கள் தாயே
1973 கட்டிலா தொட்டிலா
1973 கோமாதா என் குலமாதா
1973 மல்லிகைப்பூ
1973 மறுபிறவி
1973 நியாயம் கேட்கிறோம்
1973 பிரார்த்தனை
1973 ராதா
1973 சொந்தம்
1973 தலைப்பிரசவம்
1973 வீட்டுக்கு வந்த மருமகள்
1974 அத்தையா மாமியா
1974 அவளுக்கு நிகர் அவளே
1974 தேவி ஸ்ரீ கருமாரியம்மன்
1974 தீர்க்க சுமங்கலி
1974 டாக்டரம்மா
1974 எங்கம்மா சபதம்
1974 கை நிறைய காசு
1974 மாணிக்கத் தொட்டில்
1974 பருவகாலம்
1974 பிராயசித்தம்
1974 புதிய மனிதன்
1974 ரோஷக்காரி
1974 சொர்க்கத்தில் திருமணம்
1974 திருமாங்கல்யம்
1975 எங்களுக்கும் காதல் வரும்
1975 மன்னவன் வந்தானடி
1975 பணம் பத்தும் செய்யும்
1975 பட்டாம்பூச்சி
1975 அபூர்வ ராகங்கள்
1976 வாங்க சம்பந்தி வாங்க
1976 உத்தமன்
1976 உழைக்கும் கரங்கள்
1976 உனக்காக நான்
1976 தாயில்லாக் குழந்தை
1976 கணவன் மனைவி
1976 வாயில்லா பூச்சி
1976 மகராசி வாழ்க
1976 பயணம்
1976 சத்தியம்
1977 சில நேரங்களில் சில மனிதர்கள்
1977 ஆட்டுக்கார அலமேலு
1977 அன்று சிந்திய ரத்தம்
1977 தீபம்
1977 நந்தா என் நிலா
1977 நீ வாழ வேண்டும்
1977 பாலாபிஷேகம்
1977 ரௌடி ராக்கம்மா
1977 ஸ்ரீ கிருஷ்ணலீலா குசேலன்
1977 சொர்க்கம் நரகம்
1977 சில நேரங்களில் சில மனிதர்கள்
1977 மீனவ நண்பன்
1977 எல்லாம் அவளே
1977 ஆசை மனைவி
1977 இந்திரதனுசு
1978 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
1978 திரிபுரசுந்தரி
1978 ருத்ரதாண்டவம்
1978 தாயகம்
1978 வருவான் வடிவேலன்
1978 ராதைக்கேற்ற கண்ணன்
1978 தியாகம்
1978 அதிர்ஷ்டக்காரன்
1978 புண்ணிய பூமி
1979 வாழ நினைத்தால் வாழலாம்
1979 ஞானக்குழந்தை
1979 அன்னை ஓர் ஆலயம்
1979 மங்களவாத்தியம்
1979 நல்லதொரு குடும்பம்
1979 நீலமலர்கள்
1979 தாயில்லாமல் நானில்லை
1979 வெள்ளி ரதம்
1979 வீட்டுக்கு வீடு வாசப்படி
1979 தைரியலட்சுமி
1980 நட்சத்திரம்
1980 சுஜாதா
1980 எங்க வாத்தியார்
1980 அதிர்ஷ்டக்காரன்
1980 பாமா ருக்மணி
1980 இவர்கள் வித்தியாசமானவர்கள்
1980 காதல் கிளிகள்
1980 எங்கே தங்கராஜ்
1981 தில்லு முல்லு நடிகர் நாக
1981 அரும்புகள்
1981 கடல் மீன்கள்
1981 தில்லு முல்லு
1981 சாதிக்கொரு நீதி
1981 அமரகாவியம்
1981 கல்தூண்
1981 மோகனப் புன்னகை
1981 ரத்தத்தின் ரத்தமே
1982 ஜஸ்டிஸ் சௌத்ரி
1982 அக்னிசாட்சி
1982 அம்மா
1982 வா கண்ணா வா
1982 தூக்குமேடை
1983 ஆயிரம் நிலவே
1984 ப்ரியமுடன் பிரபு
1984 தேன்கூடு
1984 மகுடி
1984 சாகாநாதம்
1985 படிக்காதவன்
1985 பாடும் வானம்பாடி
1985 பார்த்த ஞாபகம் இல்லையோ
1986 மாவீரன்
1987 கூலிக்காரன்
1987 இவர்கள் வருங்கால தூண்கள்
1987 மக்களே என் பக்கம்
1989 நீ வந்தால் வசந்தம்
1989 அபூர்வ சகோதரர்கள் தர்மராஜ்
1989 இந்திரன் சந்திரன்
1989 ராஜா ராஜாதான்
1990 மௌனம் சம்மதம் பரமசிவம்
1990 அதிசய பிறவி
1990 ராஜா கைய வச்சா
1990 எங்கள் சாமி ஐயப்பன்
1990 புது புது ராகங்கள்
1991 மைக்கேல் மதன காமராஜன் அவினாச
1991 தளபதி
1991 கோபுர வாசலிலே
1991 புத்தம் புது பயணம்
1991 நண்பர்கள்
1991 சேரன் பாண்டியன்
1992 புருஷன் எனக்கு அரசன்
1992 தம்பி பொண்டாட்டி
1992 ரிக்க்ஷாமாமா
1992 பிருந்தாவனம்
1993 மேடம்
1993 கட்டபொம்மன்
1993 அம்மா பொண்ணு
1993 கடல் புறா
1994 நம்மவர் பேராசிரி ராவ்
1994 மகளிர் மட்டும் சடலம்
1995 புள்ளகுட்டிக்காரன்
1995 மருமகன்
1995 கிழக்கு மலை
1996 அவ்வை சண்முகி ஜோசப்
1996 ஆயுத பூஜை
1996 பூவே உனக்காக
1996 மீண்டும் சாவித்திரி
1997 பகைவன்
1997 பூச்சூடவா
1997 ராசி
1997 தடயம்
1998 தேசிய கீதம்
1998 காதலா காதலா சொக்கலி
1999 ஆனந்த மழை
2000 ரிதம் கார்த்திக தந்தை
2001 மின்னலே சுப்பிரம சுப்புணி
2001 பூவெல்லாம் உன் வாசம்
சின்னாவ தாத்தா
2002 பஞ்சதந்திரம் பார்த்தசார
2002 பாலா
2003 இன்று முதல்
2003 காதல் கொண்டேன் கிறித்தவ பாதிரிய
2004 வசூல் ராஜா எம். பி. பி. எஸ்.
ஸ்ரீமான் வெங்கட்ரா
2006 சரவணா சரவணனி தாத்தா
2006 இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மொக்கை
2007 பொறி ஜீவாவின்
2008 தசாவதாரம் ஷேக் அப்ப



நடிப்புத் துறையில்
சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.
1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர்
மனோரமா ஆவார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன் ,
எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
கதாநாயகனாக
நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம் , நவக்கிரகம் ,
எதிர் நீச்சல் , நீர்க்குமிழி , யாருக்காக அழுதான் , அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கமல்ஹாசன் உடனான நட்பு
கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல
கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார்.
மைக்கேல் மதன காமராஜன் , மகளிர் மட்டும் ,
அவ்வை சண்முகி , பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம்
தசாவதாரம் ஆகும், இதுவும் கமலஹாசன் படமாகும்.
புதுவசந்தம், சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆனந்த்பாபு இவர்தம் மகனாவர்.



ஈடுஇணையில்லாத ஒரு கலைஞன் - நடிகர் நாகேஷ்

குணச்சித்திர நடிப்பு, நகைச்சுவை, நடனம், எதார்த்த நடிப்பு என மக்களின் மனதில் இப்போதும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் குண்டுராவ் என்கிற நாகேஷ்.
கன்னட பிராமண குடும்பத்தில் 1933ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பிறந்தார். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த இவர், ஆரம்ப கட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement
ரெயில்வேயில் பணியாற்றிய போது இவருக்கு ஒரு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, அதில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்து, எம்ஜிஆரின் பாராட்டுக்களை பெற்றார்.
இதன்பின் பல போராட்டங்களுக்கு பிறகு சாதனை நாயகனாக வலம் வந்த இவர் வாழ்க்கையில் சில துயரங்களையும் சந்தித்துள்ளார். தற்போது அவரை பற்றி சின்ன ரீகேப்.
கிழவன் ரெடியா என்று எம்.ஜி.ஆரை கேலி செய்து தப்பி வந்த ஒரே நடிகர் நாகேஷ்.
மகன் ஆனந்தபாபு தன்னைவிடபெரிய குடிகாரனானதை தாங்கிச் சிரித்தவர். கிறித்தவ பெண்ணை மணந்த காரணத்தால் குடும்பத்தால் ஒதுக்கப்பட்ட பிராமணர்.
திரையுலகில் உழைத்த பணத்தை நாசமாக்கிய நடிகர் வரிசையில் இடம் பெற்றவர் நாகேஷ்.
இலங்கைத் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
நாகேஷ் சார்லி சாப்ளின் போல உடலினாலும், வசனத்தாலும் நடித்து சரித்திரம் படைத்தவர்.
நடிகர் சந்திரபாபுவின் நடனத்திற்கு பிறகு, நாகேஷின் கடினமான நடன அசைவுகளை அவருடன் நடித்த மற்றைய நடிகர்களால் நெருங்கவே முடியாமல் இருந்த காரணத்தால் தனியாக இவருடைய நடனங்களை படம் பிடித்தார்கள்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல், ரஜினி, தனுஷ் என பல தலைமுறை நடிகர்களோடு நடித்து 1000 திரைப்படங்களை தொட்டவர் நாகேஷ்.
அழகான முகமே திரைப்படத்துக்கு அழகு என்று கருதப்பட்ட காலத்தில் குன்றும் குழியுமாக இருந்த தனது முகத்தினால் சரித்திரம் படைக்க முடியும் என்று நிரூபித்த கலைஞன் நடிகர் நாகேஷ்.

நாகேஷையே அதட்டிய என்.டி.ஆர்- சுவாரசிய சம்பவம்..

தமிழ் திரையுலகின் ஈடு இணையில்லா நடிகர் நாகேஷ். இவரின் காமெடி காட்சிகளுக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர்.
இவர் ஆரம்பக்கட்டத்தில் ஒரு சில தெலுங்குப்படத்திலும் நடித்துள்ளார், அப்போது ஐதராபாத்தில் ஷுட்டிங் இருந்த போது, நாகேஷ் சென்னையில் அதிகாலை 6 மணிக்கு விமானத்தில் ஏறவேண்டுமாம்.
ஆனால், இவர் கொஞ்சம் தாமதமாக வர, விமானம் நாகேஷ் வருகிறார் என்பதால் சில நேரம் காத்திருக்க, நாகேஷ் அடித்து, பிடித்து விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
எப்படியோ ஒரு வழியாக விமானத்தில் அவர் ஏற, முதல் சீட்டிலேயே தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர் கிருஷ்ணர் மேக்கப்பில் அமர்ந்துள்ளார்.
நாகேஷை அருகில் அழைத்து படப்பிடிப்பு என்றால் சீக்கிரமாக கிளம்ப வேண்டும் என்று தெரியாதா? என அதட்டியுள்ளாராம்.

நடிகர் நாகேஷ் பற்றிய 25 விடயங்கள்

* பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!
* பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!
* பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!
* இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்ட
ு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!
* முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரதுநடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!
* கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!
* ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!
* இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!
* முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!
* 'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!
* முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!
* எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!
* 'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!
* நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!
* 'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!
* இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!
* டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!
* பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!
* 'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!
* 'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!
* 'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'
* 'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'
* தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!
* இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!
* 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு 'நம்மவர்' படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது!


நகைச்சுவை நடிப்பின் நாயகன் நாகேஷ்!

நடிகர் நாகேஷ் மிகவும் ஆசாரமான, கன்னடம் பேசும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். பூர்வீகம் மைசூரு. கர்நாடக மாநிலம் அரிசிக்கரே என்ற ஊரில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியில் இருந்தவர் நாகேஷின் தந்தை. குடும்பம் தாராபுரத்தில் இருந்தது. நாகேஷை வளர்த்தது எல்லாம் அவருடைய அக்கா கெங்குபாய்.
எம்.ஜி.ஆரின் புகழாரம்:
தொடக்க காலத்தில் நாகேஷ் ரயில்வே துறையின் சிற்றுண்டியகத்தில் பணியாற்றி வந்தார். நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில் அவர், ம.ரா. என்பவரைத் சந்தித்து வாய்ப்புக் கேட்டார். ம.ரா. எழுதி இயக்கிய நாடகத்தில் நாகேஷ் ஒரு சிறிய பாத்திரத்தில் வயிற்று வலியால் அவதிப்படும் நோயாளியாக நடித்தார். சிறிய வேடமே என்றாலும், கிடைத்த வாய்ப்பை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்; நாடகத்தின் பதினேழாவது காட்சியில் ஒன்றரை மணித்துளிகளே வந்தாலும், அதில் தனித்திறமையைக் காட்டினார்.“ஒன்றரை நிமிடங்களுக்கு விதம் விதமான ஏற்ற இறக்கங்களைக் குரலில் கொண்டு வந்து அம்மா என்று அலறி துடித்துக் கதறி...யாரடா இவன்! திடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே! என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்! கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது” என முதல் நாடக மேடை அனுபவம் குறித்துச் சிரித்து வாழ வேண்டும் என்னும் நுாலில் நினைவு கூர்ந்துள்ளார் நாகேஷ்.அன்று நாடகத்திற்குத் தலைமை விருந்தினராக வந்து, முதல் வரிசையில் அமர்ந்து நாகேஷின் நடிப்பைக் கைதட்டி மிகவும் ரசித்தவர் யார் தெரியுமா? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான். “ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்துவிட்டார் ஒருவர்! தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்றுவலிக்காரராக வந்தாரே, அவரைத்தான் சொல்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குனரிடம் “அவர் பெயர் என்ன?” என்று கேட்டுத் தெரிந்து கொண்டு. “நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசைக் கொடுக்கிறேன்!” என்று கூறி நாகேஷுக்கு எம்.ஜி.ஆர்., பரிசு வழங்கினார். பிற்காலத்தில் நாகேஷ் என்கிற அற்புதமான நகைச்சுவை நடிகர் உருவாவதற்குப் பிள்ளையார் சுழி போட்ட அரிய நிகழ்ச்சி இது!
செதுக்கிய பாலசந்தர்:
நாடகக் குழுக்களில் நடித்து வந்த நாகேஷ், கதாநாயகனாக நடித்த முதல் படம் சர்வர் சுந்தரம். அந்தப் படத்தைத் தயாரித்தது புகழ் பெற்ற ஏவி.எம்.நிறுவனம்; இயக்கியது இரட்டையர்களான கிருஷ்ணனும் பஞ்சுவும்; படத்திற்குக் கதை--வசனம் எழுதியது கே.பாலசந்தர். நாகேஷ் என்னும் நடிகரின் ஆளுமையைச் செதுக்கிப் பட்டை தீட்டியதில், -அபாரமான திறமைகளை வெளிப்படுத்தியதில் கே.பாலசந்தருக்குப் பெரும் பங்கு உண்டு.கே.பாலசந்தரின் கை வண்ணத்தில் உருவான எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம் முதலான திரைப்படங்கள் நாகேஷ் என்னும் நடிகரின் பன்முக ஆற்றலை என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருப்பவை. 1965-ல் கே.பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் நீர்க்குமிழி. அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சேது என்னும் பாத்திரத்தினை ஏற்று நாகேஷ் மிகச் சிறப்பாக நடித்தார். அதிலும் குறிப்பாக,ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா”என்னும் சுரதாவின் அற்புதமான தத்துவப் பாடலுக்கு நாகேஷ் நடித்திருக்கும் நடிப்பு, இன்றளவும் காண்போர் உள்ளத்தை உருக்கும். வி.குமாரின் இசையில், சீர்காழி கோவிந்தராஜன் அப்பாடலை அருமையாகப் பாடியிருப்பார்.
சிகரம் தொட்ட திரைப்படங்கள்:
நகைச்சுவை நடிப்பில் நாகேஷ் சிகரம் தொட்ட திரைப்படங்கள் பல. எம்.ஜி.ஆர்.,- சிவாஜியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவையின் பரிமாணங்களை நயமாகவும் நுட்பமாகவும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் அவர் ஏற்ற வைத்தி வேடமும், திருவிளையாடல் படத்தில் ஏழை தருமி பாத்திரமும் சாகா வரம் பெற்றவை. நகைச்சுவை நடிகர்கள் வேறு எவரிடமும் காணப்பெறாத - நாகேஷிடம் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு - நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் நாகேஷ் முக பாவனையில் காட்டி இருக்கும் எதிர்வினை ஆகும். சிவாஜிக்கு இணையாக, ஜாடிக்கு ஏற்ற மூடியாக நடிப்பில் சோபித்தார் நாகேஷ்.சந்திரோதயம் படத்தில் மனைவி மனோரமாவுடன் ஊடல் கொண்டு காசி யாத்திரைக்குப் புறப்படுவார் நாகேஷ். எம்.ஜி.ஆர். அவரைத் தடுத்தாட் கொண்டு சமாதானப்படுத்தும் வகையில்,காசிக்குப் போகும் சந்நியாசி! - உன்குடும்பம் என்னாகும்? நீ யோசி!”எனப் பாடுவதையும், அதற்கு நாகேஷ்,பட்டது போதும் பெண்ணாலே - இதைப்பட்டினத்தாரும் சொன்னாரே!”என்று சரிக்குச் சரியாகப் பதிலளித்துப் பாடுவதையும் இன்று பார்த்தாலும் சிரிப்பு பொங்கும்! அன்பே வா!வில் எம்.ஜி.ஆருக்கு ஏற்ற அற்புதமான நகைச்சுவை நடிகர், நாகேஷ் என்பதை நிலைநாட்டி இருப்பார்!
கதை சொல்லும் காட்சி :
நாகேஷ் என்றதும் நம் நினைவுக்கு முதன்முதலில் வருவது ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு அவர் கதை சொல்லும் காட்சி. சபாஷ்! சரியான போட்டி! என்று பாராட்டத்தக்க வகையில் டி.எஸ்.பாலையாவும் நாகேஷூம் அக்காட்சியில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.அனுபவி ராஜா அனுபவி படத்தில் மனோரமாவுடன் இணைந்து துாத்துக்குடி மொழியில்,முத்துக் குளிக்க வாரீகளா?மூச்சை அடக்க வாரீகளா?”என்று பாடியிருக்கும் டூயட் பாடலும் புகழ்பெற்றது.ரஜினி, -கமல் படங்களில் நடிக்கும் போதும் இன்றைய சூழ்நிலைகளுக்கு இசைவான கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியவர். கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படங்கள் எக்காலத்துக்கும் ஏற்ற நடிகர் நாகேஷ் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்பவை.கமல்ஹாசனின் தயாரிப்பான மகளிர் மட்டும் படத்தில் இதுவரை எவரும் ஏற்றிராத - ஏற்கவும் துணியாத - ஒரு பிணத்தின் பாத்திரத்தில் நடித்துத் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். இந்த ஒரு வேடத்திற்காகவே நாகேஷூக்கு ஆஸ்கார் விருது என்ன, அதற்கும் மேலான விருதுகள் இருந்தாலும் கொடுக்கலாம்!ரஜினியின் தளபதியில் மம்முட்டியின் உதவியாளர்களுள் ஒருவராக மூன்றே மூன்று காட்சிகளில் மட்டும் வருவார்; என்றாலும் அவரது நடிப்பு இயல்பாக அமைந்திருக்கும்.
ஆடல்- பாடல் காட்சிகளில் :
ஆடல் காட்சியிலும் தனித்திறமையை நயமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தியவர் நாகேஷ். அவளுக்கென்ன? அழகிய முகம்! (சர்வர் சுந்தரம்), தாமரைக் கன்னங்கள்! (எதிர் நீச்சல்) இரு பாடல்கள் போதும், நாகேஷின் ஆடல் திறனைப் பறைசாற்ற!வாழும் காலத்தில் நாகேஷூக்குத் திரைப்பட உலகின் எந்த உயரிய விருதும் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை (ஒருவேளை, வாழும் காலத்தில் மகத்தான கலைஞர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் தமிழனின் தனிக்குணம் போலும்!) ஆனாலும், மக்களின் மனங்கள் என்னும் சிம்மாசனத்தில் தனிப்பெரும் நகைச்சுவை நாயகனாக நாகேஷ் என்றென்றும் வீற்றிருப்பார்.-பேராசிரியர் இரா.மோகன்,



நகைச்சுவை நாயகன் நாகேஷ் : சிறப்பு கட்டுரை

தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.
நான் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மனோ சாமியோ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.
ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, பிசியாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. நம்மவர் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார். இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.
நகைச்சுவை நாயகன் நாகேஷ்!: தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ். கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.
இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை கம்ப ராமாயணம் நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது வயிற்று வலி நோயாளி வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். டாக்டர்... என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன் என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.மேக்அப் போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.
தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. தாமரைக்குளம் இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.திருவிளையாடல் படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, சியர்ஸ் சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல் என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன காமராஜன் மகளிர் மட்டும் ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான தசாவதாரம் வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் பிணமாக வாழ்ந்த நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே... எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது? என்றார்.சிரித்தபடியே நாகேஷ், உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா... அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா... மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் அம்மை என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. சிரித்து வாழ வேண்டும் என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.
ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் என்றென்றும் நாகேஷ் பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.
- தினமலர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக