வியாழன், 7 செப்டம்பர், 2017

நடிகர் முரளி நினைவு தினம் - செப்டம்பர் 8 , 2010 .


நடிகர் முரளி நினைவு தினம் - செப்டம்பர் 8 , 2010 .

முரளி ( மே 19 , 1964 - செப்டம்பர் 8 , 2010 ) தமிழ்த் திரைப்பட நடிகர் . கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 -ல் வந்த “புதுவசந்தம் ”, 1991 -ல் வந்த “இதயம்”, படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள் ” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
சொந்த வாழ்க்கை
முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர். பல படங்களைத் தயாரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.இவர் வண்ணார் சமுகத்தை சேர்ந்தவரவார். [ சான்று தேவை]
அதர்வா “பாணா காத்தாடி ” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.
திரை வாழ்க்கை
இவர் சிவாஜி கணேசன் , விஜயகாந்த் ,
பிரபு , கார்த்திக் , சத்யராஜ் , பிரபுதேவா ,
சூர்யா , பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா , சிம்ரன் ,
ரோஜா, தேவயானி , லைலா , ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்.
அரசியல் வாழ்க்கை
இவர் அ.தி.மு.கவில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டார். இக்கட்சிக்காகத் தேர்தலில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்தார்.

நடித்த திரைப்படங்கள்
எண் ஆண்டு திரைப்படம் கதா
1
1984
பிரேம பர்வா
2 பூவிலங்கு பாண்ட
3 இங்கேயும் ஒரு கங்கை காத்தம
4 புதியவன் மனோ
5
1985
பகல் நிலவு செல்வ
6 கீதாஞ்சலி ஜேம்ஸ்
7 அந்தஸ்து
8 அஜேயா
9 இளங்கன்று
10
1986
புதிர்
11 ஒரு மலரின் பயணம்
12 மண்ணுக்குள் வைரம்
13 காலமெல்லாம் உன் மடியில்
14
1987
வண்ணக்கனவுகள் மூர்த்த
15 வளையல் சத்தம்
16 துளசி சிவா
17 அவள் மெல்ல சிரித்தால்
18 மீண்டும் மகான்
19
1988
புயல் பாடும் பாட்டு
20 குடும்பம் ஒரு கோவில்
21 தப்புக்கணக்கு
22
1989
தங்கமணி ரங்கமணி ரங்கம
23 கைவீசம்மா கைவீசு
24 நினைவுச்சின்னம்
25
1990
புது வசந்தம் பாலு
26 பாலம்
27 வெற்றிமாலை
28 சிலம்பு
29 நானும் இந்த ஊருதான்
30 நாங்கள் புதியவர்கள்
31 சிறையில் சில ராகங்கள்
32 புதியக்காற்று
33 நம்ம ஊரு பூவாத்தா
34
1991
சாமி போட்ட முடிச்சு
35 இதயம் ராஜா
36 குறும்புக்காரன்
37 இரவுச்சூரியன்
38
1992
தங்க மனசுக்காரன் முருக (முரு
39 சின்ன பசங்க நாங்க முத்து
40 தங்கராசு தங்கரா
41 என்றும் அன்புடன்
42 தாலி கட்டிய ராசா
43 1993 மணிக்குயில்
44 தங்கக்கிளி மூர்த்த
45
1994
மஞ்சுவிரட்டு
46 அதர்மம்
47 என் ஆசை மச்சான் சுப்ரம
48 சத்யவான்
49 1995 ஆகாயப் பூக்கள்
50 தொண்டன்
51 1996 பூவே உனக்காக அவரா
52 பூமணி
53
1997
காலமெல்லாம் காதல் வாழ்க
54 பொற்காலம் மாணி
55 ரோஜா மலரே கண்ண
56
1998
காதலே நிம்மதி மோக
57 தினம்தோறும்
58 வீரத்தாலாட்டு
59 ரத்னா ரத்னா, முத்து
60 பூந்தோட்டம்
61 என் ஆச ராசாவே
62 உன்னுடன் சந்தோ
63 தேசியகீதம்
64
1999
கனவே கலையாதே ஆனந்த்
65 ஊட்டி பாலு
66 பூவாசம்
67 இரணியன் இரணி
68 2000
வெற்றிக் கொடி கட்டு சேகர்
69 மனுநீதி முரளி
70
2001
கண்ணுக்கு கண்ணாக தர்மா
71 சொன்னால் தான் காதலா முரளி
72 ஆனந்தம் மாதவ
73 சமுத்திரம் தங்கரா
74 அள்ளித்தந்த வானம் மாதவ
75 கடல் பூக்கள் கருத்த
76
2002
சுந்தரா டிராவல்ஸ் கோபி
77 காமராசு காமரா
78 நம்ம வீட்டு கல்யாணம் ரவி
79 2003 காதலுடன் கல்யா
80 2004 அறிவுமணி அறிவ
81 2006 பாசக்கிளிகள் செவத்
82
2009
எங்கள் ராசி நல்ல ராசி விஜய்
83 நீ உன்னை அறிந்தால் கோபா
84 2010 பாணா காத்தாடி 'இதயம்'
மறைவு
இவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு
செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.



நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி: முழு விவரம்
பதிவு செய்த நாள்: செப் 09,2010 12:58 தினமலர்.
மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக நடித்த பானா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர். முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால்... அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொருபுறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அதர்வாவும் கலந்து கொண்டு பேசியதை நினைவு கூர்ந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் முரளி அளித்த பேட்டி அவரது கடைசி பேட்டியாக அமைந்து விட்டது. அந்த பேட்டியில் முரளி மிகவும் இயல்பாக, கலகலப்பாக பேசிய விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது. கண் முன்னே சிரித்துப் பேசிய அந்த 46 வயது இளைஞர் இன்று நம்மிடையே இல்லை. முரளியின் கடைசி பேட்டி விவரம் வருமாறு:-
எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். சூட்டிங்கிற்கு போகும்போது கூட கிரிக்கெட் பேட், ‌‌டென்னிஸ் பேட்டெல்லாம் எடுத்துட்டு போயிடுவேன். வீட்டில் இருக்கும்போது என் பசங்களோட கிரிக்கெட்தான் விளையாடிட்டு இருப்பேன். சின்ன வயசுல இருந்தே விளையாட்டுல ரொம்ப ஆர்வம் இருந்துச்சி. தெருவில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவேன். எல்லோரும் சபிச்சிட்டு போவாங்க. எப்ப, எந்த வீட்டு கண்ணாடி உடையும்னு தெரியாது. ஆனா உடைஞ்ச கண்ணாடிக்கு பதிலா புது கண்ணாடி வாங்கி மாட்டி கொடுத்துடுவோம். ஆனாலும் எங்களை பார்த்தாலே திட்டுவாங்க. கதாநாயகன் ஆனதுக்கு பிறகு அதே ரோட்டில் கிரிக்கெட் விளையாடியிருக்கோம். சின்ன வயசுல எங்களை திட்டுனவங்க கூட... தம்பி நீ நல்லா நடிச்சிருக்கன்னு பாராட்டியிருக்காங்க. நீயெல்லாம் இப்படி வருவேன்னு நான் எதிர்பார்க்கலன்னுகூட ஒரு சிலர் சொல்லியிருக்காங்க. என்னை திட்டுனவங்க, மரியாதையா பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துது.

தமிழ்நாடு மக்கள் ரொம்ப நல்லவங்க. நடிகர்கள் மீது ரொம்ப மரியாதை ‌‌‌வெச்சிருக்காங்க. அவங்கக்கிட்ட நாம ஒரு நடிகரா நிற்கக்கூடாதுங்க. அவங்கக்கிட்ட நானும் மனிதன்ங்கிற மாதிரிதான் நிற்கணும். அப்படி நின்னா எந்த தொந்தரவும் இருக்காது. நான் நடிகனா ரோடுல நின்னாத்தான் தனித்துவம் ஆயிடும். நான் மக்களோடு மக்களா நிற்பேன். எங்க ஏரியா ரோடுல இருக்குற மரங்கள்ல்லாம் நான்தான் வெச்சிருக்கேன். ஞாயிற்றுக்கிழமைகள்ல மரத்தை வெட்டுவேன். களை எடுப்பேன். தோட்ட ‌வேலைகள்லயும் எனக்கு ஆர்வம் அதிகம். நான் ரொம்ப யதார்த்தமான வாழ்க்கையை விரும்புறேன். என் வீட்டில் சினிமா சம்பந்தப்பட்ட எந்த போட்டோவும் இருக்காது. சினிமா வேறு. குடும்பம் வேறு.
என்னோட அப்பா டைரக்டர். இங்கே கே.பாலசந்தர் சார் மாதிரி கன்னடத்துல என்னோட அப்பா பெரிய ‌டைரக்டர். அவரோட படங்கள்ல அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன். நான் 8ம் வகுப்பு பெயில் ஆயிட்டேன். அப்ப இருந்தே அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். எனக்கு டைரக்டர் ஆகணும்னுதான் ஆசை. அப்பா படத்துல நடிக்குற சின்னச் சின்ன கேரக்டர்களுக்கெல்லாம் நான்தான் டயலாக் சொல்லிக் கொடுப்பேன். அந்த டயலாக்கை நைட் பேசிப் பார்ப்பேன். அதை பார்த்த என் அப்பா... நீ ஏன் ஹீரோவா நடிக்கக் கூடாதுன்னு கேட்டார். தெலுங்குல வெளியான பூவிலங்கு படம் செம ஹிட் ஆச்சு. அதை பார்த்த கே.பாலசந்தர் சார், பூவிலங்கு படத்தை தமிழ்ல எடுத்து உன் மகனை ஹீரோவா போடுவோம்னு அப்பாகிட்ட கேட்டாரு. அமீர் ஜான் சார் டைரக்ஷன்ல எடுத்தாங்க. என்னோட வரப்பிரசாதமே இசைஞானி இளையராஜாதான். முதல் படத்தில் இருந்தே என்னோட எல்லா படங்களையும் பாடல்கள் சூப்பர் ஹிட்டா இருக்கும். அதுக்கு காரணம் இளையராஜா சார்தான்.
பூவிலங்கு வெற்றி பெற்றதால எனக்கு அடுத்தடுத்த படங்கள்ல நடிக்கணும்னு ஆர்வம் வந்துச்சி. அதுவும் நல்ல படங்கள்ல நடிக்கணும் ஆசைப்பட்டேன். வெறும் கமர்ஷியல் படங்கள்ல நடிக்கிறதை நான் விரும்பல. குண்டுசட்டிக்கிட்ட நாலு பைட்... நாலு சாங்னு இல்லாம ஒரு கருத்துள்ள படங்கள்ல நடிக்கணும் நினைச்சேன். அதே மாதிரி பெண்மைக்கு முதலிடம் கொடுத்துத்தான் நான் நடிச்சிருப்பேன். எந்த இடத்துலயும் டபுள் மீனிங் டயலாக்கோ, விரசமான டயலாக்கோ, ஆபாசமோ, கவர்ச்சி ஓவராவோ நான் பண்ணுனதே இல்ல. என்னோட படம் பார்த்தீங்கன்னா சேனலே மாத்தத் தேவையில்ல. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை முரளி படம்னா குடும்பத்தோட இருந்து பார்க்கலாம்.
நான் எதுவா இருந்தாலும் என் அப்பாகிட்ட கேட்க மாட்டேன். என் அம்மாதான் எனக்கு எல்லாமே. அதே மாதிரிதான் இப்ப என் பசங்க இருக்காங்க. எல்லாத்தையும் அம்மாகிட்டதான் கேட்பாங்க. நான் நடிகன் ஆனாலும் என்னோட பிரண்ட்ஸ் மாறலை. ராஜா, கந்தா, நந்தா, வினய்னு ஆறேழு பிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்க எல்லாருமே இன்னிக்கும் என்னை பார்த்தால் ஒரு ஹீரோவா பார்க்க மாட்டாங்க. அவங்கதான் ரொம்ப கமெண்ட் பண்ணுவாங்க. ஓவரா அழுகாதடா... நீ நடிச்ச படத்தை பார்க்க நாங்க ஒரு பக்கெட்டை தூக்கிட்டு வர வேண்டியிருக்குன்னு ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க.
இப்ப என் மகனும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டான். இதுல ஒரு ஆச்சர்யமான விசேஷம் என்னன்னா... 1985 சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் தயாரிப்பாளர், மணிரத்னத்தின் முதல் படம், இசைஞானி இளையராஜாவின் இசை. அது ரொம்ப ஹிட் கூட்டணியா இருந்தது. அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்கள்ல இந்த கூட்டணி தொடர்ந்தது. இப்ப என் மகன் நடிச்சிருக்குற பானா காத்தாடி படத்தை தயாரிச்சிருக்கிறதும் சத்யஜோதி பிலிம்ஸ்தான். தியாகராஜன் சாரோட வாரிசுகள்தான் செந்தில் தியாகராஜன் - அர்ஜூன்தான் தயாரிப்பாளர். இளையராஜா சாரின் வாரிசு யுவன்ஷங்கர் ராஜாதான் இசை. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கிறது.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதயம் படத்தில் இடம்பெற்ற பொட்டு வெச்ச வட்ட நிலா பாட்டுதான். அந்த பாட்டை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது. உன்மையான காதலை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை நல்லா சொல்லுற பாட்டு. டான்ஸ்னு எடுத்துக்கிட்டா அதர்வா நல்லா டான்ஸ் பண்றாரு. எனக்கு டான்ஸ் ஆடவே தெரியாது. நான் மிகப்பெரிய டான்சரும் கிடையாது. முகபாவனையை வைத்து சமாளிச்சிட்டு போயிடுவேன்.
அந்த காலத்துல எனக்கு நாலே புரொடியூசர்தான். தியாகு சார், சிவசக்தி பாண்டியன், காஜா பாய், ஆர்.பி.சவுத்ரி இவங்கதான் எனக்கு புரொடியூசர்ஸ். இன்னிக்கு இருக்குற ட்ரெண்ட் அந்த மாதிரி இல்ல. ஒரு படம் பண்ணிட்டா, அடுத்த படத்தில் அதிக சம்பளம் வாங்கணும்னு நினைக்கிறாங்க. அதனால முந்தைய பட தயாரிப்பாளரை விட்டுட்டு அடுத்த தயாரிப்பாளருக்கு ஜம்ப் பண்ணிடுறாங்க. அப்படி போகக் கூடாது. பணத்துக்காக குதிச்சி குதிச்சி போயிடுறாங்க. பணத்துக்காக காத்திருக்கணும். அது நம்மை ‌தேடி வரும்வரை காத்திருக்கணும்.
இவ்வாறு முரளி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

முரளி நடித்துள்ள படங்கள் விவரம்

பூவிலங்கு படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான நடிகர் முரளி ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்களில் நடித்து வந்த நடிகர் முரளி, காதல், காமெடி ஆக்ஷன் என அனைத்து அவதாரங்களையும் எடுத்துள்ளார். அவர் நடித்துள்ள படங்கள் விவரம் வருமாறு:-
பூவிலங்கு
பகல் நிலவு
தங்கமணி ரங்கமணி
புது வசந்தம்
பாலம்
வெற்றி மலை
சிலம்பு
கீதாஞ்சலி
நானும் இந்த ஊருதான்
நாங்கள் புதியவர்கள்
சிறையில் சில ராகங்கள்
புதிய காற்று
நம்ம ஊரு பூவாத்தா
சாமி போட்ட முடிச்சு
இதயம்
குறும்புக்காரன்
தங்க மனசுக்காரன்
சின்ன பசங்க நாங்க
தங்கராசு
என்றும் அன்புடன்
தாலி கட்டிய ராசா
மணிக்குயில்
தங்க கிளி
மஞ்சு விரட்டு
அதர்மம்
என் ஆசை மச்சான்
சத்யவான்
ஆகாய பூக்கள்
தொண்டன்
பொம்மை
காலமெல்லாம் காதல் வாழ்க
பொற்காலம்
ரோஜா மலரே
காதலே நிம்மதி
தினந்தோறும்
வீர தாலாட்டு
ரத்னா
பூந்தோட்டம்
என் ஆசை ராசாவே
உன்னுடன்
தேசிய கீதம்
பூவாசம்
கனவே கலையாதே
ஊட்டி
இரணியன்
வெற்றி ‌கொடி கட்டு
மனு நீதி
கண்ணுக்கு கண்ணாக
சொன்னால்தான் காதலா
ஆனந்தம்
சமுத்திரம்
நினைவு சின்னம்
அள்ளித்தந்த வானம்
கடல் பூக்கள்
சுந்தரா டிராவல்ஸ்
காமராசு
நம்ம வீட்டு கல்யாணம்
காதலுடன்
பூமணி
பாசக்கிளிகள்
எங்க ராசி நல்ல ராசி
நீ உன்னை அறிந்தால்
பானா காத்தாடி
1984ம் ஆண்டு முரளி நடித்த முதல் படம் வெளியானது. சமீபத்தில் அவர் நடித்த கடைசி படமான பானா காத்தாடி வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக