வெள்ளி, 22 செப்டம்பர், 2017

நடிகை சில்க் ஸ்மிதா நினைவு தினம் - செப்டம்பர் 23 .1996.


நடிகை சில்க் ஸ்மிதா நினைவு தினம் -  செப்டம்பர் 23 .1996.

சில்க் ஸ்மிதா ( தெலுங்கு : 'సిల్క్' స్మిత (2 திசம்பர் 1960 - 23 செப்டம்பர் 1996) என்பவர் ஒரு
இந்திய திரைப்பட நடிகை ஆவார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா தமிழ் நடிகர்
வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார். அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறப்பால் ஆந்திரமாநிலத்தை சேர்ந்தவராயினும் இவரது பூர்வீகம் தமிழ் நாட்டின் கரூர் ஆகும். இவர் வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இவரது வசீகர தோற்றத்தின் காரணமாக பலரது தொல்லைகளுக்கு ஆளானார். இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். இவரது குடும்பவாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.


திரைத்துறை வாழ்க்கை

இவர் தனது திரைத்துறை வாழ்க்கையை இரண்டாம் நிலை நடிக நடிகைகளுக்கான ஒப்பனை கலைஞராக தொடங்கினார். பின் தமிழ் நடிகரும் இயக்குனருமான
வினுச்சக்ரவர்த்தியின் மூலம்
வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் இவரை ஸ்மிதா என்கிற புது புனைப்பெயரில் அறிமுகப்படுத்தினார். வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். வண்டிச்சக்கரத்தில் நடித்தபின்பு இவரது கதாபாத்திரமான சில்க் என்கிற பெயரும் ஸ்மிதா என்கிற பெயரும் இணைந்து இவரது அடையாளம் ஆயின.
பின்னர், ஸ்மிதா "இணையே தேடி" என்கிற திரைப்படம் மூலம் 1979இல் மலையாள திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் கிடைத்த வெற்றியினால் ஸ்மிதா புகழின் உச்சத்துக்கே சென்றார். அந்த படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் தாக்கத்தின் காரணமாக அவரால் வேறு விதமான வித்தியாசமான கதாபாத்திரங்களை எளிதாகப் பெறமுடியவில்லை. பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்தார். இவரது கவர்ச்சியான தோற்றத்திற்கும்
மூன்று முகம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த துணிவான கதாபாத்திரத்தினாலும் இவர் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் , இந்தி ஆகிய துறைகளிலும் புகழ்பெற்றார். இவரது கவர்ச்சி நடனம் மட்டுமே இடம்பெற்ற
அமரன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை ஈட்டின. 1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார்.
இவர் நடிப்பில் பல பரிமாணங்கள் கடந்திருந்தாலும் இவரை நாளிதழ்களும் சில திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின. இருப்பினும், அலைகள் ஓய்வதில்லை(1981) , நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார்.
லயனம்(1989) என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது. இந்தப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
கமலஹாசன் , ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்தப் படம் இந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.

மறைவு.

1996இல், ஸ்மிதா சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த நிகழ்விற்கு முன்பு இவர் திரைப்படத் தயாரிப்பாளராக முயற்சித்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும், மேலும் காதல் தோல்வியினால் ஏற்பட்ட குடிப்பழக்கத்தினாலும், மன இறுக்கத்திற்கு ஆளானதாக நம்பப்படுகிறது. ஆனாலும் இவரது மரணத்தினைச் சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன.


நவீன கலையில்

இவரது வாழ்க்கையை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டு தி டர்டி பிக்சர் என்ற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படம் இவரது பிறந்தநாளான டிசம்பர் 2 அன்று வெளியானது.
நடித்ததில் சிறந்த படங்கள்
வருடம் படம் கதாபாத்திர
1979 இணையே தேடி
1979 வண்டி சக்கரம் சில்க்
1981 அலைகள் ஓய்வதில்லை
1981 சீதகொக சிலுக (1981 film)
1982 எமகின்கருது
1982 மூன்றாம் பிறை
தலைமையாசிர மனைவி
1982 சகல கலா வல்லவன்
1982 பட்டணத்து ராஜாக்கள்
1982 தீர்ப்பு
1982 தனிக்காட்டு ராஜா
1982 ரங்கா
1982 சிவந்த கண்கள்
1982 பார்வையின் மறுபக்கம்
1983 மூன்று முகம்
1983 பாயும் புலி
1983 துடிக்கும் கரங்கள்
1983 சத்மா சோனி
1983 தாய் வீடு
1983 பிரதிக்னா
1983 தங்க மகன்
1983 கைதி
1983 ஜீத் ஹமாரி சோனி
1983 ஜானி தோஸ்த் லைலா
1983 ஆட்டக்கலசம்
1983 ஈட்டப்புளி ராணி
1983 சில்க் சில்க் சில்க்
1983 சூரகோட்டை சிங்கக்குட்டி
1983 குடசாரி No.1
1983 ரோஷகடு
1984 சேலஞ்ச் ப்ரியம்வதா
1984 ருஸ்தும்
1984 நீங்கள் கேட்டவை
1984 வாழ்க்கை
1984 பிரசண்ட குள்ள
1985 ஒட்டயம் பாக்யலக்ஷ்மி
1985 ரிவேஞ்ச் Geetha
1985 சட்டம்தோ போராட்டம்
1985 ஸ்ரீ தத்தா தர்ஷனம்
1986 ராக்ஷசுடு
1987 ஆளப்பிறந்தவன்
1989 மிஸ் பமீலா
1989 லயனம்
1989 அன்று பெய்த மழையில்
1989 அதர்வம் பொன்னி
1989 பிக் பாக்கெட்
1989 சொந்தக்காரன் Sudha
1990 அவசர போலீஸ் 100
1990 சண்டே 7 PM
1990 பம்ம மாட்ட பங்காரு பாட்ட
1991 ஆதித்யா 369 ராஜநார்தகி நந்தினி
1991 தாலாட்டு கேட்குதம்மா
1991 சைதன்யா
1991 தம்பிக்கு ஒரு பாட்டு
1991 இதயம்
1992 நாடோடி
1992 ஹள்ளி மேஷ்ற்று
1992 அந்தம்
1993 சபாஷ் பாபு
1993 பாவ பவமரிடி
1993 மாபியா
1993 உள்ளே வெளியே
1993 அளிமைய
1993 ரக்ஷனா
1993 முட மேஸ்த்ரி
1994 ஒரு வசந்த கீதம்
1994 விஜய்பாத்
1994 பல்னடி பௌருஷம்
1994 மரோ கூட் இந்தியா
1995 ஸ்படிகம் லைலா
1995 தும்போலி கடப்புரம்
1996 லக்கி மேன்
1996 கோயம்புத்தூர் மாப்பிள்ளை.



உருகும் பொன்மேனி.. மனசெல்லாம் இவர் இன்னும் அழகு ராணி.. மறக்க முடியாத சில்க்!

சில்க் ஸ்மிதா இந்த பெயர் தமிழக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது. எழுபதுகளில் திரையுலக வாழ்க்கையை தொடங்கி 16 ஆண்டுகாலம் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட அந்த கனவுக் கன்னியின் 20ம் ஆண்டு நினைவுதினம் இன்று. பரபரப்பான இந்த சூழ்நிலையிலும் சில்க் சுமிதாவின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர்.
வாழ்க்கையை மாற்றிய வண்டிச்சக்கரம் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து சென்னைக்கு வந்த விஜயலட்சுமியை தமிழகம் அரவணைத்துக் கொண்டது. தமிழ் திரையுலகில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கினார். அவரை வினுச்சக்ரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் ஸ்மிதா என்ற பெயரில் அறிமுகம் செய்தார்.
திரைப்படத்தில் சாராயம் விற்கும் கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு சில்க் என்ற பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் அந்த பெயர்தான் திரைப்பட ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கப்போகும் பெயர் அதுவாகத்தான் இருக்கும் என்று அவருக்கு சத்தியமாக தெரிந்திருக்காது.

தமிழில் திரை வாழ்க்கையை தொடங்கினாலும், காந்த கண்களாலும், போதை தரும் உதடுகளாலும் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், படு வேகமாக 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பில் கவர்ந்த சில்க்
கவர்ச்சியில் தென்னிந்தியத் திரையுலகையே தன் பக்கம் திருப்பி வைத்திருந்த சில்க், குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளத் தவறவில்லை. கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.
கவர்ச்சி சூப்பர் ஸ்டார்
நடனத்தால் வெற்றி வாகை 1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார். எத்தனையோ திரைப்படங்கள் இவரது கவர்ச்சி நடனத்திற்காகவே வெற்றிவாகை சூடியுள்ளன. பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகபெரிய வெற்றியை பெற்றது.
அது ஒரு கனாக்காலம்
கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்த படம் ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ஏன் நடிகர்களுமே கூட காத்திருந்த காலம் அது. அவர் கடித்து வைத்த ஆப்பிளை சாப்பிட போட்டிகள் மூண்ட கனாக் காலமும் அது. அப்படி ஒரு காந்த ஈர்ப்பை தன்னிடம் வைத்திருந்தவர் சில்க்.
மரணத்தை தழுவினார்
பதினேழு ஆண்டுகாலம் தனது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த சில்க் 1996 ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் 23ம் தேதி தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரது மரணத்திற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் இன்றைக்கும் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கிறது.
வாழ்க்கை வரலாறு
தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியாவே இந்த தற்கொலை சம்பவத்தால் அதிர்ந்து போனது. '' தன்னோட தேவை என்னவென்று கடைசி வரை புரிந்து கொள்ள முடியாத அப்பாவி பெண்'' என சக நடிகைகள் கண்ணீர் விட்டனர். கடந்த 2011ம் ஆண்டு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி 'தி டர்டி பிக்சர்' என்ற பெயரில் மிலன் லூத்ரியா இயக்கத்தில் ஹிந்தி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில், சில்க் ஸ்மிதா கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். இந்த படம் சக்கைப் போடு போட்டது.
20ம் ஆண்டு நினைவு தினம்
சில்க் ஸ்மிதா இறந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் இன்றைக்கும் ரசிகர்கள் டுவிட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்கள் மூலம் அஞ்சலி செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.


‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 17 வருடங்கள் இந்திய சினிமாத் துறையில் முத்திரைப் பதித்த அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா பயணத்தை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: டிசம்பர் 02, 1960
பிறப்பிடம்: ஏலூரு, ஆந்திரபிரதேசம் மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட நடிகை
இறப்பு: செப்டம்பர் 23, 1996
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
‘விஜயலட்சுமி’ என்ற இயற்பெயர்கொண்ட அவர், 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 02 தேதி இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள “ஏலூரு” என்ற இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய பள்ளிப்படிப்பை வறுமையின் காரணமாக நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலைத்தேடினார்.
திரைப்பட வாழ்க்கை
திரைப்படத் துறையில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ‘விஜயலட்சுமி’, தமிழ் திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற தமிழ் திரைப்படத்தில் சிலுக்கு என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அவர், தமிழ் திரைப்படத்துறையில் புகழையும் தேடிக்கொண்டார். அன்று வரை ‘விஜயலட்சுமி’ எனப்பட்ட இவர், இத்திரைப்படத்திற்கு பிறகு, ‘சில்க் ஸ்மிதா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பிறகு 1979 ஆம் ஆண்டு “இணையே தேடி” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்பட உலகில் அறிமுகமானார். தன்னுடைய முதல் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக இறுதிவரை அவருக்கு ஒரே மாதிரியான காதாபாத்திரங்கள் மட்டுமே தேடிவந்தது. கவர்ச்சியானத் தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்த அவர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப்படங்களில் நடித்து, தென்னிந்தியத் திரைப்பட உலகின் ‘கனவுக்கன்னியாக’ வலம்வந்தார்.
வெற்றிப் பயணம்
‘மூன்று முகம்’, ‘அமரன்’, ‘சகலகலா வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும், கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சிப்புயலாக வலம்வந்தார். இவர் நடிப்பில் பல கதாபத்திரத்தினை ஏற்று நடித்திருந்தாலும், நாளிதழ்களும், திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின. இருப்பினும், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை’, ‘லயனம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்குக் கவர்ச்சி மட்டுமின்றி, அனைத்து விதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என்பதனை நிரூபித்தார்.


அவரின் சில குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்
‘வண்டிச்சக்கரம்’ (தமிழ் 1979), ‘இணையே தேடி’ (மலையாளம் 1979), ‘அலைகள் ஓய்வதில்லை’ (தமிழ் 1981), ‘சீதகொக சிலுக’ (தெலுங்கு 1981), ‘எமகின்கருது’ (தெலுங்கு 1982), ‘மூன்றாம் பிறை’ (தமிழ் 1982), ‘சகலகலா வல்லவன்’ (தமிழ் 1982), ‘பட்டணத்து ராஜாக்கள்’ (தமிழ் 1982), ‘தீர்ப்பு’ (தமிழ் 1982), ‘தனிக்காட்டு ராஜா’ (தமிழ் 1982), ‘ரங்கா’ (தமிழ் 1982), ‘சிவந்த கண்கள்’ (தமிழ் 1982), ‘பார்வையின் மறுபக்கம்’ (தமிழ் 1982), ‘மூன்று முகம்’ (தமிழ் 1983), ‘பாயும் புலி’ (தமிழ் 1983), ‘துடிக்கும் கரங்கள்’ (தமிழ் 1983), ‘சத்யா’ (தமிழ் 1983), ‘தாய்வீடு’ (தமிழ் 1983), ‘பிரதிக்னா’ (மலையாளம் 1983), ‘தங்கமகன்’ (தமிழ் 1983), ‘கைதி’ (தெலுங்கு 1983), ‘ஜீத் ஹமாரி’ (இந்தி 1983), ‘ஜானி தோஸ்த்’ (இந்தி 1983), ‘ஆட்டக்கலசம்’ (மலையாளம் 1983), ‘ஈட்டப்புளி’ (மலையாளம் 1983), ‘சில்க் சில்க் சில்க்’ (தமிழ் 1983), ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ (தமிழ் 1983), ‘குடசாரி நம்பர் ஒன்’ (தெலுங்கு 1983), ‘ரோஷகாடு’ (தெலுங்கு 1983), ‘சேலஞ்ச்’ (தெலுங்கு 1984), ‘ருஸ்தும்’ (தெலுங்கு 1984), ‘நீங்கள் கேட்டவை’ (தமிழ் 1984), ‘வாழ்க்கை’ (தமிழ் 1984), ‘பிரசண்ட குள்ள’ (கன்னடம் 1984), ‘ஓட்டயம்’ (மலையாளம் 1985), ‘ரிவேஞ்ச்’ (மலையாளம் 1985), ‘சட்டம்தோ போராட்டம்’ (தெலுங்கு 1985), ‘லயனம்’ (மலையாளம் 1989), ‘அதர்வம்’ (மலையாளம் 1989), ‘பிக் பாக்கெட்’ (தமிழ் 1989), ‘அவசர போலிஸ்’ 100 (தமிழ் 1990), ‘சண்டே 7PM’ (மலையாளம் 1990), ‘ஆதித்யா 369’ (தெலுங்கு 1991), ‘தாலாட்டு கேட்குதம்மா’ (தமிழ் 1991), ‘இதயம்’ (தமிழ் 1991), ‘நாடோடி’ (மலையாளம் 1992), ‘ஹள்ளி மேஷ்ற்று’ (கன்னடம் 1992), ‘அந்தம்’ (தெலுங்கு 1992), ‘சபாஷ் பாபு’ (தமிழ் 1993), ‘மாஃபியா’ (மலையாளம் 1993), ‘உள்ளே வெளியே’ (தமிழ் 1993), ‘அளிமைய’ (கன்னடம் 1993), ‘முட மேஸ்திரி’ (தெலுங்கு 1993), ‘ஒரு வசந்த கீதம்’ (தமிழ் 1994), ‘விஜய்பாத்’ (இந்தி 1994), ‘மரோ கூட் இந்தியா’ (இந்தி 1994), ‘ஸ்படிகம்’ (மலையாளம் 1995), ‘தும்போலி கடப்புரம்’ (மலையாளம் 1995), ‘லக்கி மேன்’ (தமிழ் 1996), ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ (தமிழ் 1996).
இறப்பு
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி என மேலும் பல சூழ்நிலைகள் இவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.
இவருடைய மறைவிற்குப் பிறகு “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்தகையை சிறப்புமிக்க சில்க் ஸ்மிதாவின் அபார நடனத்திறமையும், கண்களின் வசீகரமும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டுச்சென்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.



பலரும் அறியாத சில்க் ஸ்மிதா எனும் கவர்ச்சி கன்னியின் கண்ணீர் பக்கங்கள்!!

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஏலூரு என்ற பகுதியில் பிறந்தவர் விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா. இவர் பிறந்த இடம் ஆந்திராவாக இருந்தாலும். இவரது பூர்வீகம் தமிழ்நாட்டின் கரூர் தான் என்று கூறப்படுகிறது.
பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!!!
1980-களில் இருந்து தனது மறைவு வரை தென்னிந்திய ஆண்களை தனது அழகாலும், கவர்ச்சியாலும் ஆட்டிப் படைத்தவர் சில்க் ஸ்மிதா என்று மட்டும் தான் பலருக்கு தெரியும். ஆனால், தனது ஆரம்பக் காலகட்ட வாழ்க்கையில் குழந்தை பருவத்தில் இருந்து திருமணம் வரை பல இன்னல்களை சந்தித்தவர் சில்க் ஸ்மிதா என்பது பலரும் அறியாதது.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல இந்திய நடிகைகள்!!!
விஜயலட்சுமியாக இருந்த போதிலும் சரி, சில்க் ஸ்மிதாவாக இருந்த போதிலும் சரி இன்பத்தை விட இன்னல்களும், சங்கடங்களும் மட்டுமே அதிகமாய் கண்டவர் சில்க் ஸ்மிதா.....


பள்ளிப்படிப்பு

வறுமையின் காரணமாக தனது பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்போடு நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது சில்க் ஸ்மிதாவிற்கு.
பலதரப்பட்ட தொல்லைகள்
இவரது வசீகரமான தோற்றமே இவருக்கு தொல்லையாக மாறியது. ஏழ்மை எனும் காரணம் கொண்டு இவரை தீண்ட பலரும் முனைந்தனர். திரைக்கு வரும் முன் சிறு வயதிலேயே பல தொல்லைகளுக்கு ஆளானவர் விஜயலட்சுமி எனும் சில்க்.
சிறுவயதிலேயே திருமணம்
பலதரப்பட்ட தொல்லைகளின் காரணமாக இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தனர் இவரது குடும்பத்தார். ஆனால், இவரது இல்லற வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. குடும்ப வாழ்கையில் ஏற்பட்ட துன்பத்தால் சென்னைக்கு ஓடிவந்தார்.
பிழைப்பு தேடி பயணம்
தனக்கென புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள சென்னைக்கு வந்து இவரது உறவினர் இல்லத்தில் தங்கி பிழைப்பு தேடி வந்தார் சில்க் ஸ்மிதா.
இரண்டாம் நிலை நடிகை
ஆரம்பத்தில் சினிமாவில் இரண்டாம் நிலை நடிகையாகவும், ஒப்பனை கலைஞராகவும் தான் தொடங்கினார் சில்க்.

வினுசக்ரவர்த்தி
திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான வினுசக்ரவர்த்தியின் 'வண்டிச்சக்கரம்' என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
சில்க் என்ற பெயரின் காரணம்
இந்த திரைப்படத்தில் விஜயலட்சுமி நடித்த பாத்திரத்தின் பெயர் 'சில்க்'. மற்றும் இந்த படத்தில் இவரது இயற்பெயருக்கு பதிலாக ஸ்மிதா எனும் புனைப்பெயரோடு அறிமுகம் செய்யப்பட்டார். சில்க் மற்றும் ஸ்மிதா இணைந்து 'சில்க் ஸ்மிதா' எனும் பெயர் இவருடன் ஒட்டிக் கொண்டது.
வண்டிச்சக்கரம் கொடுத்த புகழ்
இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த புகழின் காரணமாக மலையாள தேசம் வரை இவரது புகழ் பரவியது. திறமை இருந்தும் இப்படத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தின் காரணமாக வேறு கதாப்பாத்திரங்களில் இவரால் நடிக்க முடியாமல் போயின.
ஆங்கிலம் மற்றும் நடனம்
வினுச்சக்கரவர்த்தியின் மனைவி சில்கிற்கு ஆங்கிலம் பயிற்றுவித்தார். அதே நேரத்தில் சில்க் வேறு ஒருவரிடம் நடனமும் கற்றுகொண்டார். இவரது கவர்ச்சியான நடனம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
சில்கின் நடனம் இல்லாத படமா?
1980-களில் இவரது நடனம் இடம்பெறாத படமே இல்லை என்பது போல தான் இருந்தது. ரஜினியில் இருந்து கடைசிக்கட்ட நடிகர் வரை அனைவரின் படங்களிலும் இவர் இடம்பெறும் ஒரு பாடலாவது இருக்கும்.

சில்க்குக்காக ஓடிய படங்கள்
இவருக்காகவும், இவர் இடம்பெறும் பாடல்களுக்காகவும் மட்டுமே ஓடிய படங்கள் ஏராளம் என திரையுலகினர் கூறுகிறார்கள்.
சில்க் ஸ்மிதாவின் பரிமாணம்
அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேக்குதம்மா போன்ற திரைப்படங்களில் இவர் ஏற்று நடித்த நல்ல கதாபத்திரங்களின் மூலம் தனக்கு கவர்ச்சி மட்டுமின்றி அனைத்துவிதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என நிரூபித்தார். 'லயனம்' என்ற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது. இப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊடகங்கள் தான் காரணம்
இவருக்கு நடிப்பில் திறமை இருப்பினும் கூட ஊடகங்கள் இவரை ஓர் கவர்ச்சி கன்னியாக மட்டுமே வெளியுலகிற்கு எடுத்துக் காட்டின. அட்டைப்படங்களில் இவரது கவர்ச்சி படங்களை வைத்து தங்களது வியாபாரங்களை வளர்த்துக் கொண்ட இவர்கள். விஜயலட்சுமியின் திறமையை குறைத்துவிட்டனர்.
மரணம்
1996-ஆம் ஆண்டு சென்னையில் இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கிடந்தார் சில்க். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக செய்திகள் பரவின. இதற்கு காரணம் தயாரிப்பாளரக முயற்சித்த போது ஏற்பட்ட கடன் மற்றும் காதல் தோல்வி என்று கூறப்பட்டன.
மரணம் காரணங்கள்
மேலும், இவருக்கு இருந்த குடிப்பழக்கம், மன இறுக்கம் போன்றவையும் இவரது தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இவருக்கு கொடுக்கப்பட்டு வந்து பாலியல் தொல்லைகள் தான் முக்கிய காரணம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவரது மரணத்தை சுற்றி நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன.

சில்க் வாழ்க்கை திரைப்படமாக
விஜயலட்சுமி எனும் சில்க்கின் வாழ்க்கையை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டு 'தி டர்டி பிக்சர்' என்ற திரைப்படம் இந்தியில் வெளியானது. இத்திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படம் இவரது பிறந்தநாளான டிசம்பர் 2 அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.




நடிகை.. நாயகி.. மனுஷி! #சில்க் ஸ்மிதா

பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி, கடும் நெருக்கடியை பிரதமர் இந்திரா காந்தி, சந்தித்துக் கொண்டிருந்த நேரம். அந்த சமயத்தில் கையில் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார். அந்த புத்தகத்தில் சில்க் ஸ்மிதா பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. புத்தகத்தில் இருந்து தலையை எடுத்த இந்திரா காந்தி “Who is this ‘Silk’!?” என பக்கத்தில் உள்ளவரிடம் குறுநகையுடன் கேட்கிறார். இந்தியாவின் மிகச்சிறந்த ஆளுமை, ஒரு நடிகையை பற்றி கேட்கிறார் என்றால் அந்த நடிகையின் தாக்கம் எப்பேர்ப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி, நான்காம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை பார்த்த நடிகர் வினுச்சக்கரவர்த்தி தனது 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகப்படுத்தினார். சினிமாவுக்காக 'சில்க் ஸ்மிதா' என பெயர் மாற்றப்பட்டது.
உதிரி உதிரியாய் வந்த கவர்ச்சி நடிகைகளுக்கு மத்தியில் சில்க் ஸ்மிதா ஒரு மின் மினி பூச்சி. கவர்ச்சி நடிகைகள் என்றால் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள், போய் விடுவார்கள் என்ற நிலையை தமிழ் சினிமாவில் மாற்றிக் காட்டியவர் சில்க் ஸ்மிதா. பாரதிராஜாவின் 'அலைகள் ஓய்வதில்லை' சில்க் ஸ்மிதாவை மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக காட்டியது. அசோக்குமாரின் 'அன்று பெய்த மழை' பன்முகத் திறமை கொண்ட நடிகையாக்கியது. சில்க் ஸ்மிதாவின் நடனத்திறமைக்கு விளக்கமேத் தேவையில்லை.
1980களில் ஸ்மிதா இடம் பெறாத படங்களே இல்லை எனலாம். ரஜினி, கமல் போன்றவர்கள் கூட படத்தில் ஸ்மிதாவுக்கு கேரக்டர் இருக்கிறதா? என்று கேட்பார்களாம். சில சமயங்களில் அவரது கால்ஷீட்டிற்கு முன்னணி கதாநாயகர்களே காத்திருந்தது உண்டு. தயாரிப்பாளர்களோ கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்யும் முன் ஸ்மிதாவிடம் கால்ஷீட் கிடைக்குமா? என்று பார்த்து விட்டுதான் தயாரிப்பு பணியையே தொடங்குவார்கள்.

புகழின் உச்சியில் இருந்த ஸ்மிதாவிடம் பணமும் குவியத் தொடங்கியது. அந்த கால கதாநாயகிகளுக்கு இணையாக ஸ்மிதா சம்பளமும் வாங்கினார். பணம் குவிந்தாலும் இயற்கையாகவே ஸ்மிதாவிடம் இருந்த இரக்க குணம் மட்டும் போகவே இல்லை.
செனனை வடபழனி குமரன் காலனியில் வசித்து வந்த சில்க் ஸ்மிதா, தெருவில் வரும் சிறுவர்களை பார்த்தால் அவர்களுக்கு சாக்லேட் கொடுப்பது, 'ஸ்கூலுக்கு போங்கடா ஒழுங்கா..!' என்றெல்லாம் அறிவுரை கூறுவாராம்.தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், சில்க் ஸ்மிதாவின் வீட்டுக்குள் பந்தை அடித்தால் கூட, உள்ளேயிருந்து அடுத்த நிமிடம் பந்து வெளியே வீசப்பட்டு விடுமாம். அதுமட்டுமல்ல, தான் சம்பாதித்த பணத்தை நல்ல காரியங்களுக்கும் சில்க் ஸ்மிதா செலவழித்து வந்துள்ளார். சில்க்கின் சினிமா முகம் தாண்டியும் அவரின் இன்னொரு முகம் அறிந்த பிரபலங்கள் அதை பற்றி, முன்பு விகடனிலும் பகிர்ந்திருந்தனர்.
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி இன்னும் பல சூழ்நிலைகள் அவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியாவே இந்த தற்கொலை சம்பவத்தால் அதிர்ந்து போனது. '' தன்னோட தேவை என்னவென்று கடைசி வரை புரிந்து கொள்ள முடியாத அப்பாவி பெண்'' என சக நடிகைகள் கண்ணீர் விட்டனர்.

கடந்த 2011ம் ஆண்டு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் மிலன் லூத்ரியா இயக்கத்தில் ஹிந்தி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில், சில்க் ஸ்மிதா கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். இந்த படம் சக்கைப் போடு போட்டது.
அபார நடனத்திறமையாலும் , கண்களின் வசீகரத்தாலும் குணச்சித்திர வேடங்களாலும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தென்னகத் திரைப்பட உலகையே சில்க் ஸ்மிதா பல ஆண்டு காலம் கட்டிப் போட்டிருந்தார்.
சில்க் ஸ்மிதா இறந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் அவரது பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் ஒட்டப்படும் போஸ்டர்கள் வழியாக அந்த வசீகர கண்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக